30 மே, 2010

மன்னாரில் மத்தியஸ்த சபைகள் : சமூக ஆர்வலர் வேண்டுகோள்

மன்னார் மாவட்டத்தில் இவ்வளவு காலமும் மத்தியஸ்த சபைகள் இயங்காத நிலையிலும் யுத்தத்தைக் காரணம் காட்டி இச்சபைகளின் நியமனங்கள் பல முறையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மன்னாரில் பல்வேறு பிணக்குகள் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றன.

எனவே இனியும் காலதாமதமின்றி மேற்படி சபைகளை உடன் அமைக்க நடவடிககை எடுக்குமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலரும் , சிரேஷ்ட ஊடகவியலாளருமான மக்கள் காதர் நீதி அமைச்சரைக் கேட்டுள்ளார்.

மன்னார் நகரம், நானாட்டான், முசலி மாந்தை , மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவு என 5 வலயங்களிலும் மன்னார் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சினைகள் தினமும் ஏற்படுகின்றன.

எனவே தற்போதைய புதிய அமைச்சர்கள் இனிமேலும் காலதாமதம் செய்யாது, மத்தியஸ்த சபைக்குத் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று மாவட்டத்தில் சீரான நீதி நிர்வாகம் நடைபெற வழியேற்படுத்த வேண்டும் என தனது வேண்டுகோளில் இவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக