15 டிசம்பர், 2010

கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து













கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம்.

இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.

அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 30 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படகில் இருந்தவர்களில் அநேகமானோர் ஈராக் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ் நாட்டின் ஹென்றி ஐய மன்னரின் தலை 400 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு




பிரான்ஸ் நாட்டில் 1610 ஆண்டு கொலை செய்யப்பட்ட ஹென்றி ஐய மன்னரின் தலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தத் தலை இதுவரை காலமும் பதனிட்டு வைக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 9 மாதகால ஆராய்ச்சியின் பின்னர் இத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

400 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதற்கென மரபணு சோதனை, அங்க அடையாளங்கள் மற்றும் மானிடவியல், தடவியல், கதிர்த்தாக்கம் உட்பட நோய்கள் தொடர்பான ஆய்வு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக மூக்கில் காணப்பட்ட ஓர் அடையாளம் மற்றும் காதில் தோடு அணியப்பட்டமைக்கான அடையாளம், கொலை முயற்சி ஒன்றின் போது முகத்தில் ஏற்பட்ட காயம் ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.



இத்தலையின் தற்போதைய பதப்படுத்தப்பட்ட தோற்றம்.



ஹென்றி ஐஏ மன்னர் அக்காலத்தில் மிகவும் புகழ்பூத்த நல்லாட்சி புரிந்த மன்னர்களில் ஒருவராவார். இவரது கம்பீர தோற்றம் காரணமாகவும் பெண்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் 1610 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பாரிஸில் வைத்து பிரன்கொயிஸ் ரவ்யிலக் என்பவரால் கொலைசெய்யப்பட்டார்.

இவரது தலை மாத்திரம் 1793 ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது காணமல் போனபோதும் புரட்சியின் போது போராட்டக்காரர்களால் இவரது தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்தத் தலை பலரிடம் கைமாறியதாகக் கூறப்பட்டது.

எனினும் 400 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் 5ஆயிரம் ரூபா நாணயக்குற்றி அறிமுகம்



இலங்கை மத்திய வங்கியின் வைரவிழாவை முன்னிட்டு ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயக் குற்றியொன்றை வெளியிட மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல வர்ணங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டுள்ள இந்த நாணயக் குற்றியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் மரம் உன்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அதன் பெறுமதி குறிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட் அளவில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளதால் ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த நாணயக் குற்றி ஏழாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் - உயர் பொலிஸ் அதிகாரிகள் பயிற்சி செயலமர்வு





முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொலிஸ் பொதுமக்கள் உறவுப்பாலம் எனும் கருப்பொருளிலான ஒரு நாள் பெயலமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருனாரட்ன தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், தொடர்பாடல் பொலிஸ் பணிப்பாளர் நாயகம் நந்தன குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு விளக்கமளித்தார்.

மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்








மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசரக்கூட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அடம்பன் மகா வித்தியாலயத்தில் இரானுவத்தின் 542 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது இரானுவத்தின் 542வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விக்கும் லியனகே, சிவில் பாதுகாப்புப்பிரிவு அதிகாரி நலிந்த விதாரனே, அரச அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள்,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை பூர்த்தி செய்து தரப்படவில்லை என்றும் குறிப்பாக விவசாயம்,குடிநீர்,மலசல கூட வசதியின்மை,வாழ்வாதார உதவிகள் இல்லாமை தொடர்பாகவும் வருகை தந்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய கீதத்தை இதுவரை தமிழில் பாடியமை சட்டத்தை மீறிய செயல்:ஹெல உறுமய




அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநக்ஷிகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதற்கமைய எமது நாட்டில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும். தமிழில் இசைப்பதை அனுமதிக்க முடியாது.

அவ்வாறெனில் எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட வேண்டுமென கேட்பார்கள். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களது தேசிய மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படும் போது தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலமும் தமிழில் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமாகும். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாம் இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

""17,677 பேர் மாத்திரமே நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர்''

வவுனியா நலன்புரி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 17 ஆயிரத்து 677 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு தீர்வுகண்டதும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை முடியுமானவரை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:

என்மீது பாரிய நம்பிக்கை வைத்து ஜனாதிபதி இந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளார். சர்வதேச மட்டத்திலும் அடிக்கடி பேசப்படுகின்ற அமைச்சாக இது உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல் போன்ற வேலைத்திட்டங்களை எமது அமைச்சு மேற்கொண்டுவருகின்றது.

நான் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் செயற்பட்டு வந்துள்ளேன். 30 வருடங்களக்ஷிக ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக நேர்ந்த சேதங்களை புனரமைப்பது என்பது இலகுவான விடயமல்ல. எனினும் நாங்கள் செய்து வருகின்றோம். வவுனியா நலன்புரி முகாம்களில் தற்போதைய நிலைமையில் 17 ஆயிரத்து 677 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு தீர்வு கண்டதும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை முடியுமானவரை விரைவில் மீள்குடியேற்ற முயற்சிப்போம்.

ஆரம்பத்தல் சுமார் 3 இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் இருந்தமை உங்களுக்கு தெரியும். புலிகளிடம் மனித கேடயமாக இருந்த மக்களை இராக்ஷிணுவத்தினர் மீட்டனர். தமிழ்ச் செல்வனின் மனைவி என தெரிந்திருந்தும் அவரை மீட்டனர். அந்த வகையில் விரைவான முறையில் அதிகமான மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஈராக் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவைகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறப்பாக செய்துள்ளது. மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதில் நிலக்கண்ணிவெடிகளே தடையான விடயமாகவுள்ளது. அவற்றை முடியுமானவரை விரைவாக அகற்றி வருகின்றோம். நிலக்கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சான்றிதழ் கிடைத்ததும் மக்களை மீள்குடியேற்றுவோம்.

மீள்குடியேறும் மக்கள் தொடர்பில் காணிப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்த்துவைக்க அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதற்காக நடமாடும் சேவைகளும் இடம்பெறுகின்றன. 30 வருட யுத்தகாலத்தின்போது மக்களினால் காணி உறுதிகளை பேணுவது கடினமான விடயமாகும். எனவே இவற்றுக்கும் தீர்வுகாணப்படவேண்டும்.

ஒன்றிணைந்து செயற்பட தயார்:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. க்களும் விஜயகலா மகேஷ்வரன் எம்.பி.யும் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசி வருகின்றனர். எனவே அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படவே நான் எதிர்பார்க்கின்றேன். ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் முன்னோக்கி செல்ல முடியும்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம் மக்கள் விரும்பினால் அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற தயக்ஷிராக இருக்கின்றோம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் மீள்குடியேற விரும்பவில்லை என்றே தெரிகின்றது. புத்தளத்தில் அம்மக்களுக்கு 6000 வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் தொழில் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன. வர்த்தகங்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல விரும்பவில்லை என்றே தெரிகின்றது. ஆனால் விரும்பினால் நாங்கள் மீள்குடியேற்றுவோம்.

மேலும் இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் ஒரு இலட்சம் இலங்கை அகதி மக்கள் மீண்டும் இலங்கை வருவதானது இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு இராஜதந்திர கலந்துரையாடல்களில் உள்ள விடயமாகும். ஆனால் தற்போது மக்கள் அங்கிருந்து வர ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் இங்கு வருவது ஆரம்பித்துவிட்டது என்று கூறலாம்.
மேலும் இங்கே தொடர்க...

வடமத்திய மாகாணத்தில் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் தாவரம்: ஆய்வில் தகவல்

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றின்மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ளவர்களை அதிகமாகப் பாதித்து வரும் சிறுநீரக வியாதிக்கான காரணங்களில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் வளர்கின்ற அல்கா எனப்படும் தாவரத்தினால் (புலூகிறீன் அல்கா) உற்பத்தி செய்யப்படும் ஒருவகை நச்சுப் பொருளே சிறுநீரக பாதிப்பிற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

நீரோடு இந்த நச்சுப்பொருள் கலப்பதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவினர் ஒருவருட காலத்திற்கு மேலாக மேற்கொண்ட ஆய்வுகளின் படியே அத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் ஆறு சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் ஆறு சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் யாழ். திருநெல்வேலியில் 6 சிறுவர் தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சிறுவர் நன்னடத்தைப் பிரிவு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய கீதம் தொடர்பான தீர்மானத்தை கட்சிகளுடன் பேச்சு நடத்தியே எடுக்கவேண்டும்:எம்.பி கயந்த

ஐக்கிய தேசியக் கட்சியே இந்நாட்டுக்கான தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது. எனவே, அது தொடர்பான தீர்மானங்களை கட்சிகளுடன் பேச்சு நடத்தி பாராளுமன்றத்திலேயே எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, தேசிய கீதமானது சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சிதான் அந்த வகையில் அதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் பேச்சுக்களை நடத்தி பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்டோரியா நீர்த்தேக்கம் மக்கள் பார்வைக்கு அனுமதி


இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றான விக்டோரியா நீர்த்தேக்கம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள விக்டோரியா மின் உற்பத்தி நிலையம் 1977 ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் பிரித்தானியா அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. இது 1988 ம் ஆண்டு திறக்கப்பட்டது.

நாட்டின் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் பார்வையிட முடியாமல் மூடப்பட்டிருந்தது.

விக்டோரியா நீர்மின் உற்பத்தி நிலையத்துடன் சமனலவௌ, திஸ்ஸ விமலசுரேந்திர மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மக்களைப் பாதிக்காத விதத்தில் ஜனவரியில் மின் கட்டண மாற்றம்


பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலே ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று கூறினார்.

பொதுமக்களின் கருத்தை பெற்றே மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக கூறிய அவர் இது தொடர்பாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னிலையில் இன்று (15ம் திகதி) தமது கருத்துக்களை முன்வைக்க அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

மின்சார சபை ஈட்டி வரும் பாரிய நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வரவு செலவுத் திட்டத்தினூடாக யோசனை முன்வைக்கப்பட்டது. 90 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பாவிக்கும் பாவனையாளர்களுக்கே மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. 45 இலட்சம் மின் பாவனையாளர்களில் 78 வீதமானவர்கள் 90 அலகுகளுக்கு குறைவாகவே மின்சாரம் பாவிக்கின்றனர்.

எனவே, சாதாரண மக்கள் மின் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட மாட்டார்கள். குளிரூட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்ற சொகுசு சாதனங்கள் பாவிப்போருக்கான கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மத ஸ்தலங்கள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் என்பவற்றுக்கான கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தப்படி 91 – 120 அலகு வரை ஒரு அலகுக்கு 16 ரூபாவில் இருந்து 23.50 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. நிலையான கட்டணம்180 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 121 – 150 அலகு வரையான கட்டணம் 28.60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு அலகு மின்சாரம் உற்பத்தி செய்ய 17.51 ரூபா செலவாகின்ற போதும் 13.10 ரூபாவிற்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என சிலர் கூறுகின்றனர்.

நாளாந்தம் 10 ஆயிரம் மில்லியன் கிலோ வோர்ட் மின்சாரம் தேவைப்படுகிறது- ஆனால் நீர் மின் மூலம் 45 வீதம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மொத்த தேவையில் 55 வீதம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது. சில இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு 46 ரூபா வரை செலவாகிறது.

மின்சார சபை கடந்த 9 வருடத்தில் 15 பில்லியன் ரூபா நஷ்டம் ஈட்டியுள்ளது. இந்த நிலையிலே சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

புதிய விதிமுறைகளின் படி பாவனையாளரிடமிருந்து சாதாரண கட்டணமே அறவிட முடியும். மின்சார சபை செலவை மக்கள் மீது சுமத்த முடியாது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று கொழும்பு மன்றக் கல்லூரியில் நடத்தும் கூட்டத்தில் மக்களுக்கு தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம். இதனையும் கருத்திற்கொண்டு கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஜுலை மாதத்தில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும். மின்சார சபை இலாபமீட்டினால் அதன் பலன் பாவனையாளருக்கே வழங்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை, கிளிநொச்சியில் இரண்டு ஏக்கரில் நெற்களஞ்சியங்கள்


வடக்கில் பெரும் போக விளைச்சலில் கிடைக்கவிருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்தும் பொருட்டு இரண்டு நெற்களஞ்சியங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய இரு களஞ்சியசாலைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.

இரு களஞ்சியசாலைகளையும் துரிதமாக அமைக்கவென வட மாகாண சபை, வடக்கின் அவசர மீள் எழுச்சித் திட்டம் என்பவற்றின் ஊடா 80 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் அவசர மீள் எழுச்சி திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய மற்றும் துரித அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யும் விசேட கூட்டம் கொழும்பிலுள்ள ஜனகலா கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.

ரங்கராஜா, வட மாகாண பிரதம செயலாளர் ஏ.சிவகாசுவாமி, வட மாகாண அமைச்சுக்களின் செயலா ளர்கள், வடக்கு அவசர மீள் எழுச்த் திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ். சிவகுமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே ஆளுநர் மேற்படி பணிப்பை விடுத்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் களஞ்சியசாலை அமைப்பதற்கான பணிகள் ஆரம் பிக்கப்பட்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் பல தசாப்தங்களுக்கு பின்னர் இம் முறை ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்ப ரப்பில் பயிர்ச்செய்கை நடவடிக்கை களை மேற்கொள்ள அரசாங்கம் தீர் மானித்து அதற்கு தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களை யும் வழங்கி யுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய அரசினால் கிடைக் கப்பெற்ற நான்கு சக்கர உழவு இய ந்திரங்களும் வட பகுதி விவசாயிகளு க்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியினாலேயே உறுதியான தீர்வை முன்வைக்க முடியும்


பெரும்பான்மை இன மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்று நாட்டின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை உறுதியாக முன்வைக்க முடியும். இது தொடர்பாக ஜனாதிபதி மீது சிறுபான்மை இன மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்;

கடந்த காலங்களில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலிலும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. அதுமாத்திரமன்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது தனிக்கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்ந்து வருகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு நடுநிலைப் போக்கைக் கையாண்டு வருகின்றது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல அரசியல் வெளிப்படுத்துகையைக் காட்டுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அரசியல் தீர்வுக்காகவும், வடக்கு கிழக்கு மாகாண புனர்வாழ்வுக்காகவும் அமைக்கவுள்ள குழுக்களில் முஸ்லிம் காங்கிரஸணும் இணைக்கப்பட வேண்டும் என்று தமது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையின் போது முஸ்லிம் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸணும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட்டு ஒரு பக்குவப்பட்ட அரசியல் போக்கினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறு செயற்படும் போதுதான் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கான அபிவிருத்தி உட்பட ஏனைய தன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது சொந்த ஊரான ஏறாவூருக்கு வருகை தந்த பிரதி அமைச்சருக்கு ஏறாவூர் நகர பிரதேச சபைக்கு முன்னால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பட்டாசு வேட்டுக்களுடன் ஊர்வலமாக முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வரை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜம்இய்யத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் மர்ஹணூம் நூர்தீன் மசூரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்தனை இடம்பெற்றது. ஏறாவூர் ஜய்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி ஏ. சி. ஏ. மஜீத் தலைமையில் இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் எம். எல். அப்துல் லத்தீப், மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வரிச் சலுகை அடிப்படையில் அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி

அரச சேவையில் அரச தொழில் முயற்சிகளில் தொழில்புரியும் நிறைவேற்று தரம், நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் தொழில்சார் பதவி நிலைகளை வகிக்கும் உத்தியோகத்தர்களுக்கு சலுகை நிபந்தனையடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், புதிய உதிரிப்பாகங்களை பயன்படுத்தி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

25,000 டாலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 50 முதல் 70 வீத வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் நிதி அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாணசபை பிரதம செயலாளருக்கும் சுற்றிக்கை மூலம் அறிவித்துள்ளது.

1000 சீ.சீ. புதிய வாகன இறக்குமதிக்கு 50 வீத வரியும், 1600 சீ. சீ. வாகனத்துக்கு 55 வீத வரியும். 2000 சீ. சீ. வாகனத்துக்கு 60 வீத வரியும், 2600 சீ. சீ. வாகனத்துக்கு 70 வீத வரியும் அறவிடப்படும்.அரச சேவையிலுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்கள் அரச சேவையில் தொடர்ந்து ஆறு வருடங்கள் சேவையில் ஈடுபட்டுவருபவர்களாக இருத்தல் வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் கல்விசார் பதவி நிலை உத்தியோகத்தர்களும், அரச தொழில் முயற்சி சேவையில் ஈடுபட்டுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களும் 12 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அரச வங்கி உத்தியோகத்தர்கள் இதில் சேர்க்கப்பட வில்லை
மேலும் இங்கே தொடர்க...

மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு ஜனாதிபதியினால் கெளரவம்



புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்குப் பதக்கம் அணிவித்து கெளரவித்தார்.

புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளில் 4,80,606 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 1,72,891 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர்.

இதற்கான நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் ஆயிரம் படையினருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது.

பிரதமர் டி. எம். ஜயரத்ன, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்நிகழ்வின் போது பதக்கங்களை அணிவித்தனர்.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி திசர சமரசிங்க, விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

அதனையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மனிதாபிமான நடவடிக்கைகளுக்குத் தலைமைத்துவம் வழங்கி வழிநடத்திய மேஜர் ஜெனரல்கள் ஆர். எம். டி. ரத்நாயக்க, சி. பி. கால்லகே, ஜி. டி. குணரத்ன, கேர்ணல் ஏ. டி. குணவர்தன, பிரிகேடியர் எஸ். டி. டி. லியனகே உட்பட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கங்களை அணிவித்துக் கெளரவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் டி. எம். ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்குப் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தனர்.

கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையில் 1,97,796 படை வீரர்கள் ஈடுபட்டனர். இவர்களில் 42,000 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர்.

அதேபோன்று வடக்கில் 2,82, 830 படை வீரர்கள் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களில் 1,30,891 பேர் களமுனையில் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டவர்களாவர். இவர்கள் அனைவருக்குமே பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. கவின் நீண்டகால பிளவு சர்வதேச மட்டத்தில் நிரூபணம்


ஐக்கிய தேசிய கட்சிக்குள் மிக நீண்டகாலமாக இருந்து வந்த இரகசிய பிளவுகள் அக்கட்சியின் சம்மேளனத்தின் பின் சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்த ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஐ. தே. க.வின் சம்மேளனத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடாத்திய பத்திரிகை மாநாடு மற்றும் அதே தினத்தில் ஐ. தே. க. வினது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு இக்கட்சியின் பிளவுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆகவே, ஐ. தே. க. இனி ஒருபோதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. கட்சியின் பிளவை எவராலும் ஒற்றுமைப்படுத்தவும் முடியாது.

மேலும் சம்மேளனத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் பலர் பல அபிப்பிராயங்களை முன்வைத்துள்ளமை மிகவும் வெட்கக் கேடான செயலாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...