21 மார்ச், 2010

வவுனியா அரச அதிபருக்கு பெரும் பாராட்டு




வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸினது அளப்பரிய சேவைக்கு பொது நிர்வாக உள்நாட் டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திஸா நாயக்க பாராட்டுத் தெரிவித்து ள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தில் (ஸ்லீடா) கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசாங்க அதிபர்களுக்கான மாநாட் டில் வைத்தே அமைச்சின் செயலா ளர் வவுனியா அரசாங்க அதிபருக்கு இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.

மோதல் இடம்பெற்ற வேளை தமது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்த சுமார் மூன்று இலட்சத்து க்கும் அதிகமான மக்களை சரியான முறையில் பராமரித்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை திருமதி சார்ள்ஸ் சரிவர செய்து வந்தார். பல சந்தர்ப்பங்களில் நானே அதனை நேரில் சென்று பார்த்துள்ளேன்.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியும் இடம்பெறவில்லை





83’ யுகம் மீண்டும் உருவாகாது என்கிறார் புத்திரசிகாமணி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு எத்தகைய அநீதியும் இடம்பெறவில்லை. 1983 யுகம் மீண்டும் உருவாகாது என்பது உறுதியென பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

மலையகத் தலைவர்களாகிய நாம் இருட்டில் செய்த தவறை வெளிச்சத்தில் ஒரு போதும் செய்யப் போவதில்லையென தெரிவித்த பிரதியமைச்சர், ஐ. நா. வில் தமிழில் உரையாற்றி தமிழினத்துக்கே கெளரவம் சேர்த்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நுவரெலியா குதிரைப் பந்தயத்திடலில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:-

நான் பிரதி மேயராக பதவி வகித்த போதே 83 கலவரம் வெடித்தது. நுவரெலியா நகரம் தீப்பற்றியெரிந்தது. எனது செயலாளர் உட்பட பலர் அதற்குப் பலியாகினர். தற்போது நாட்டில் அத்தகைய அச்சம் இல்லை. ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளார்.

நான் ஒரு தமிழனாக அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதியாகவே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



எஸ். அருள்சாமி:

(வேட்பாளர் ஐ. ம. சு. மு)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே மலையக மக்களின் விடிவுக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது பிரதான இலக்கு அதற்கு அனைத்து மக்களினதும் பூரண ஆதரவு தேவைப்படுகிறது.

இந்த நாடு மீண்டும் பிளவு பட இடமளிக்க முடியாது. அதே போன்று நாட்டைப் பிளவுபடுத்தி நாட்டைக் காட்டிக் கொடுக்க முனையும் ஐக்கிய தேசியக் கட்சியை இம் மாவட்டத்திலிருந்தே துரத்த நுவரெலிய மாவட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிப்பதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் தயாராக இருக்கவில்லை. நான் முன் வந்து ஜனாதிபதியை ஆதரித்ததன் பின்பே ஏனையோர் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டனர் என்பது மறந்து விட முடியாது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் இந் நாட்டில் சகல மக்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவர் கூடிய சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அதனால்தான் இம் முறை நானும், புத்திரசிகாமணி போன்றோரும் ஜனாதிபதியை ஆதரிக்க முன்வந்துள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

தபால் அலுவலகங்கள், தபால்காரர்களுக்கு விசேட பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த தெரிவத்தாட்சி அலுவலர்களினால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 28ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக உள்ள போதிலும் வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக பிரகடனம் செய்யப்பட்டு ள்ளது.

வாக்காளர் அட்டை விநியோகத்தின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் போது வீதிகளில் விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள துடன் தபால் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, தபால் வாக்களிப்புக்கான தபால் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூல வாக்களிப்புக்காகத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் யாப்பை மாற்றியமைக்க 2/3 பெரும்பான்மையை தாருங்கள்




திருமலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர்
வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று திருமலையில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சமத்துவத்திற்கும், துரித அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் அரசியல் யாப்பை மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம் என்றும் பிரதமர் கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று திருமலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற் றும் போதே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா தொடந்தும் உரையாற்று கையில்,

அதனால் இப்படியான அரச சார் பற்ற நிறுவனங்களின் செயற்பா டுகளைக் கட்டுப்படுத்துவது அவசி யம் இதற்காக சட்டத்தில் ஏற் பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் கிராமங்களின் அபிவிருத்தியைக் கிராமத்தவர்களின் யோசனைபடி மேற்கொள்ளுவ தற்காக மக்கள் சபை (ஜனசபா) முறையை அறிமுகப்படுத்தவிருக்கின் றோம்.

அத்தோடு கிராம மன்ற முறையும் (கண்சபா) மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும்.

சிறு கட்சிகளின் தயவில் தங்கி நிற்கும் அரசு எமக்கு அவசிய மற்றது. அது எமது துரித அபிவி ருத்தி பயணத்தைத் தாமதப்படுத்த முடியும். நிபந்தனைகளின் கீழ் செயற்பட நேரிடும். இதனை மக்கள் உணர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எமது துரித அபிவிருத்தியை மேற்கு நாடுகளைப் போன்று இயந் திரப்படுத்த நாம் விரும்பவில்லை. மாறாக ஒழுக்கத்தை மதித்து நடக்கும் நற்பண்புகள் நிறைந்த சமு தாயத்தை கட்டியெழுப்பும் வகை யில் அதனை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்திருக்கின்றோம்.

ஐ.தே.க.வின் திருமலை மாவட்ட முன்னாள் எம். பி.யும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். ஏ. எம். மஃரூப் (சின்ன மஃரூப்) இக்கூட்டத்தில் நன்றியு ரையாற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டைகள்

தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு
சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணை யாளர் டபிள்யு. பி. சுமணசிரி தெரிவித்தார். தேர்தலில் 7696 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

இவர்களுக்கு அந்தந்த பிரதேச மாவட்ட செயலகங்களினூடாக விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதோடு, சகல வேட்பாளர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்களுக்கு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வசதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் (20) தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

உலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் மக்களையும் உயர்த்துவதே எமது நோக்கம்




நுவரெலியாவில் ஜனாதிபதி உரை
மலையக மறுமலர்ச்சிக்கென விசேட கருத்திட்டம்பெருந்தோட்ட தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க முடிவுஉலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான பலமான பாராளுமன்ற பலத்தைப் பெற்றுத்தர சகலரும் ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன, மத, குல, மாகாண பேதமின்றி ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி என்ற ரீதியில் ஆட்சி செலுத்துவதே தமது நோக்கமெனவும் தெரிவித்த ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கப்பால் சகலருக்கும் சம உரிமை சம அந்தஸ்து வழங்குவதே தமது கொள்கையெனவும் தெரிவித்தார்.

மலையக மக்கள் ஏனைய பகுதி மக்களைப் போன்றே சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டியவர்கள். அதனை நிறைவேற்றுவது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நுவரெலியா குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், சீ. பி. ரத்நாயக்க, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் வீ. புத்திரசிகாமணி, அருள்சாமி, ராதாகிருஷ்ணன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பினை நாம் நம் நாட்டு விவசாயிகளிடம் வழங்கினோம். எரிபொருள் விலையேற்றம், உணவு நெருக்கடி, பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தின் போதும் நாம் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தினோம். தற்போது துறைமுகங்கள் விமான நிலையம், மின்சார உற்பத்தி நிலையங்கள் என பாரிய அபிவிருத்தியினை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு உணவு வழங்குவதற்காகவே வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றனர். நாம் அவ்வா றில்லை. அபிவிருத்திக்காக, கல்விக்காக, சுகாதாரத்திற்காகவே கடன்களைப் பெற்றுள்ளோம். உலக முன்னேற்றத்திற்கேற்ப எமது மக்களையும் நாட்டையும் முன்னேற்றுவதே எமது முக்கிய நோக்கம். எதிர்காலத்தில் இதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பலமான பாராளுமன்றம் அவசியம். பெரும்பான்மை பலத்துடன் அதனை நாம் பெற்றுக் கொள்ள பொதுத் தேர்தலில் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்குவது அவசியம். வெற்றிலைக்கு வாக்களித்து ஏனைய மூன்று வாக்குகளையும் தவறாது மக்கள் தமது விருப்பமான பிரதிநிதிகளுக்கு வழங்கலாம். நுவரெலியா மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் எமது சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வழங்கும் வாக்குகள் எமக்கு வழங்கும் வாக்குகள் என்பதை மக்கள் மறந்து விடகக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்முறையில் ஈடுபட்ட 65 பேர் கைது ; பொலிஸ் நிலையங்கள் உஷார்






கட்அவுட்டுக்களை அகற்றும் பணி 80% பூர்த்தி
150 பேரை தேடி வலைவிரிப்பு
தேர்தல் காலத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதனால், தேர்தல் வன்முறைகள் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுக்க பொதுமக்கள் தயங்க வேண்டாமென தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண வேண்டுகோள் விடுத்தார்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர், ஈடுபட முயற்சிப்போர் ஒத்துழைப்பு வழங்குவோர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதம், பாரபட்சம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவரென பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கிடைத்துள்ள 143 முறைபாடுகளும் விசாரணைக்குட்படுத்தப் பட்டு வரும் அதே நேரம் அவற்றுடன் தொடர்புடையவர் களென சந்தேகிக்கப்படும் 65 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கமைய மேலும் 150 பேர் கைது செய்யப்பட விருப்பதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வலை விரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில வன்முறைச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று மாலை வரை 80 சதவீதமான சுவரொட்டிகள் கட்அவுட்கள் மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் எஞ்சியவற்றை துரிதகதியில் அகற்றுவதற்கு பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் தபால் மூல வாக்களிப்புக்கு ஏற்ற வகையில் வாக்களிப்பு நடத்தப்படும் அரச நிறுவனங்களில் பொலிஸ் பாதுகா ப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருப்பதுடன் அன்றைய இரு தினங்களும் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் நடத்தப்படு மென்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்கள் பொதுமக்கள் சந்திப்பு-





நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), பிரான்சிஸ் ரஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்), துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு),

வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் இன்றுமுற்பகல் மன்னார் குஞ்சுக்குளம் மற்றும் பெரியமுறிப்பு பகுதிகளுக்கு விஜயம்செய்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருந்தனர். இதன்போது கட்சி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள், எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களுக்கு எடுத்துக் கூறினர். இக்கூட்டங்களில் பெருமளவு பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து முருங்கன் புளொட் காரியாலயத்தில் முன்னாள் கழக அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பகுதியின் ஊர்மிளா கூட்டத்தில் புளொட் வேட்பாளர்கள் பொதுக்கூட்டமொன்றினையும், வெளிக்குளத்தில் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றையும் நடத்தினர். இக்கூட்டங்களில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்),


புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சி தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இன்றுமாலை வவுனியா, இறம்பைக்குளத்தில் பட்டதாரிகளுடனான சந்திப்பொன்றிலும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் பங்குகொண்டிருந்தனர். இது இவ்விதமிருக்க புளொட் வேட்பாளர்கள் நேற்றையதினம் வவுனியா, புதியசின்னக்குளம் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்



கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.

கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.

வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது.

கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது.

அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது.

இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

தங்கராஜ் ஜீவராஜ்
மேலும் இங்கே தொடர்க...

கிளி.,முல்லை மாவட்டங்களில் மீட்கப்பட்ட வாகனங்கள் மீள ஒப்படைக்க நடவடிக்கை:வடமாகாண ஆளுநர்




யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவ ணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான்றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமை தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ்,லொறிகள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது:

"இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையளிப்பதே எமது நோக்கம் "எனத் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிடுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழுவை நியமிப்பதற்கு பான் கீ மூனுக்கு அதிகாரம் உண்டு-பிரிட்டன் கூறுகிறது



இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு விசேட நிபுணர் குழுவை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இல்லை என்ற அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்துடன் தமக்கு உடன்பாடு இல்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கான பிரிட்டனின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் லியால் கிறாண்ட் இதைத் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே லியால் கிராண்ட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதார்.

ஐ.நா. சாசனத்தின்படி மனித உரிமைகளையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் நிலைநிறுத்துவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆணை உள்ளது. எனவே இலங்கை தொடர்பாக கடந்த மாதங்களில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கரிசனைகள் தொடர்பாக தனக்கு ஆலோ சனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை அமைப்பதில் அவருக்கு முழுமையான உரிமை உள்ளது. அவர் தனக்குள்ள அதிகாரத்தை மீறிச் செயற்படுகிறார் என்ற அணி சேரா நாடுகளின் வாதத்துடன் பிரிட்டனுக்கு உடன்பாடு இல்லை என மார்க் லியால் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது..

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:.

பிரிட்டனும் ஐ.நாவும் இலங்கை தொடர்பாக குறைந்தபட்சம் வெளிப்படையாக பேசி வரும் நிலையில் இவ்விடயத்தில் என்ன நடைபெற வேண்டும் என பிரிட்டன் கருதுகிறது என தூதுவர் லியால் கிராண்டிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. .

தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பளிப்ப தற்கு முடிவு காணப்பட வேண்டும் என பிரிட் டன் விரும்புகிறது. போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித உரிமை துஷ்பிர யோகங்கள் போன்ற குற்றச்சாட்டுகள் முழுமை யாக விசாரிக்கப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம் என அவர் பதிலளித்தார். அணி சேரா நாடுகள் அமைப்பின் வாதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர் களா என ஐ.நா. பொதுச்சபையின் இவ்வருடத் தலைவரின் பேச்சாளரான லிபியாவின் அலி தெரேக்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் மார்ச் 19 ஆம் திகதி கேள்வி எழுப்பியது. அதை நீங்கள் பொதுச்செயலாளரிடமே கேட்க வேண்டும் என பதிலளிக்கப்பட்டது. ஆனால் அணி சேரா நாடுகளின் கடிதத்தின் பிரதியொன்றைக்கூட ஊடகங்களுக்கு வழங்க ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் மறுத் துள்ளது. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என ஐ.நா. தீர்மானித்தமைக்கு காரணம் என்னவென்று ஐ.நாவின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் இன்னர் சிற்றி பிரஸ் வினவியது. .

ஐ.நா.பொதுச்சபையின் வாக்களிப்பு அல்லது ஆணை இல்லாமல் ஐ.நா. செயற்பட முடியாது என ஐ.நா. பேச்சாளர்கள் வெளிப்படையாக கூறுகின்ற போதிலும், ஐ.நா. இலங்கைக்கு 510 அதிகாரிகளை அனுப்ப ஐ.நா முன்வந் தாகவும் ஆனால் அதை இலங்கை நிராகரித்த தாகவும் மேற்படி ஐ.நா. அதிகாரி தெரிவித்தார். .

அதேவேளை சர்வதேச நாணயத்தின் இலங்கைக்கான கடனின் மூன்றாம் கட்டக் கொடுப்பனவு தொடர்பாக நாணய நிதியத் திடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பி யது. அவ்வமைப்பின் பேச்சாளர் யொஷிகோ கமாட்டா இதற்கு பதிலளிக்கையில் " ""நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து அமைச்சரவை அமைக்கப்பட்டவுடன் சர்வ தேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும் புக்கு விஜயம் செய்து வரவு செலவுத் திட்ட மொன்று குறித்து அரசாங்கத்துடன் கலந்துரை யாடுவர்'' எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசிய படகில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க ஒபாமா தலையிட வேண்டும்-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம்



இந்தோனேசியா மராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினால் இது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று, பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன..

5 மாதங்களாக படகில் நிர்க்கதியான நிலையில் உள்ள இவர்களை, விடுவித்து, அவுஸ்திரேலியா செல்வதற்கு இந்தோனேசியா அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்தோனேசியாவுக்கு வலியுறுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒபாமா தமது சிறு பராயத்தில் சில காலங்கள் இந்தோனேசியாவில் வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் இன்னும் சில நாட்களில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொள்ளும் தீர்மானத்திலும் உள்ளார். இந்த நிலையில், பல மாதங்களாக படகில் உள்ள தமிழ் அகதிகளின் நிலைவரம் குறித்து அவர் சிந்திக்க வேண்டும் என அந்த கடிதத் தில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு முறையான தீர்வு வழங்குவது குறித்தும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்களுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத் தில் கோரப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க வெற்றிபெற்றால் விரைவில் மீள்குடியேற்றம் அமுல்ப்படுத்தப்படும்:ரணில்



பொதுத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், போரினால் இடம்பெயர்ந்து அவலப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அவர்களது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாக வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

போர் நடைபெற்ற இடங்களில் கண்ணிவெடிகளற்ற பிரதேசங்களிலும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களிலும் உடனடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போர் நடைபெற்ற பிரதேசங்களில் அழிவடைந்துள்ள சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்றும் ரணில் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளில் சாட்சியமுள்ளவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். ஏனையவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நட்டஈடு வழங்குதல், அரச ஊழியருக்கு 10000 ரூபா ஊதிய உயர்வு , 500 ரூபாவில் யூரியா உரம் தரப்படும், சமுர்த்திக்கொடுப்பனவு கூட்டப்படும், போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டிருந்தன
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல்கள் வந்து போனாலும் எமது பிரச்சனைகள் தொடர்கின்றன:வவுனியா முகாம் மக்கள்




இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றத்தை எதிர்நோக்கி செட்டிகுளம் மனிக்பாம் முகாம்களில் எஞ்சியிருப்பவர்கள் தமக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகக் தெரிவிப்பதாக பிபிசி தமிழோசை செய்திவெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின்போது வன்னிப்பிரதேசத்தில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்து மனிக்பாம் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவர்கள் அனைவரையும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள் என அரசு ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.

எனினும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடையாத காரணத்தினால் மிள்குடியேற்ற நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், எனினும் இவர்களில் கணிசமான தொகையினரை மீளக்குடியர்த்திவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, வடபகுதியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன நடந்து முடிந்துவிட்டன. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென அவர்கள் கூறுவதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்:ஐரோப்பிய ஒன்றியம்



இலங்கை அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைறைப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளதாக அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருவதாக நேற்று வெளியான வாராந்த சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இலங்கை அரசின் சார்பில் சென்ற இலங்கை குழுவினர் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அல்படுத்தி அரசியல் அமைப்புச் சபையை நிறுவுதல், சுயாதீன தேர்தல் ஆணைக் குழுவை நியமித்தல், அரச சேவை ஆணைக் குழுவை உருவாக்குதல் உட்பட அனைத்து விடயங்களையும் அமுல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கைக் தூதுக் குழுவினரைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும்- பாலித கொஹன




இலங்கை தனது உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நிர்வாகத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இலங்கை மீதான கடுமையான நடைமுறை தவிர்க்கப்படல் வேண்டும் என்பதே இலங்கையின் புலப்பாடாகும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புள்ள விவகாரம் என்ற அடிப்படையில் தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தேசம் கொண்டிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. பயங்கரவாத அமைப்பு எனப் பரவலாக கருதப்பட்ட பிரிவினை வாதக் குழுவொன் றுக்கு எதிராக நடைபெற்ற யுத்தம் ஒன்றின் முடிவின் பின்னரே இந்த விவகாரம் தலை தூக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் என்ற வகையில் இத்தகைய தன்மை தொடர்பாக எனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க அதிகாரம் உள்ளது என நான் கருதுகிறேன் என்று பான் கீ மூன் இந்த வார முற்பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நடைமுறை எவ்விதத்திலும் இலங்கை யின் இறையாண்மைக்கு விரோதமானதாக அமையாது எனவும் அவர் சுட்டிக் காட்டி யிருந்தார். ஆனால் 118 உறுப்பு நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பின் ஆதரவுடன் இந்த வாதத்தை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.

அணி சேரா அமைப்பு இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள் ளதுடன் அவர் மீது இரண்டு குற்றச்சாட் டுகளையும் சுமத்தி இருந்தது. ஒன்று ஐக்கிய நாடுகளின் சாசனத்தை மீற எத்தனித்தல் மற்றது உறுப்பு நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங் களில் தலையீடு செய்ய முயல்வது என்ப தாகும்.

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைப் பிரிவின் முன்னாள் தலைவரான டாக்டர் பாலித கொஹன இது குறித்து கூறுகையில், சம்பந்தப் பட்ட சகல தரப்பினரும் எதிர்பார்ப்பின்படி செயலாளர் நாயகம் ஏற்ற வகையில் நடந்து கொள்வார் என இலங்கை நம்புவதாக தெரி வித்தார். ஐ.பி.எஸ். செய்திச் சேவையின் ஐ.நா. பணியக அதிகாரி தாலிப்டீன் டாக்டர் பாலித கொஹனவைப் பேட்டி கண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் விவரம் வருமாறு, கேள்வி: இலங்கைக்கு எதிரான வளைந்து கொடுக்காப் போக்கை கடைப்பிடிக்குமாறு சில மேற்கு நாடுகள் செயலாளர் நாயகத் திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்று ஊர்ஜிதமற்ற வதந்திகள் நிலவுகின்றன. இந்த வதந்தி தொடர்பில் உண்மை எதுவும் உண்டா? பதில்: எனக்குத் தெரியாது. எவ்வாறாயினும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை தனித்து நின்று போராடி இல்லாதொழித்த ஒரு சிறிய அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கு தண்டனை வழங்க செயலாளர் நாயகத்திற்கு உரிமை கொடுக்க ஒரு நாடு உட் படுமானால் உண்மையில் அது புதுமையா னதாகும். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் அரசாங்கத்திற்கு தேர்தல்கள் மூலம் கிடைத்து வரும் வெற்றி, நாட்டு மக்களின் பூரண ஆதரவைப் பிரதிபலிக்கின்றது.

கேள்வி: ஐக்கிய நாடுகளுக்கும் இலங் கைக்குமான உறவுகள் சீர்கேடடைந் துள்ளதால் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நாயகம் லின்பெஸிகோவின் உத்தேசிக்கப் பட்டுள்ள இலங்கை விஜயத்திற்கு அரசாங் கம் அனுமதி வழங்குமா?இல்லையெனில் ஏன்? பதில்: ஐ.நா.வுடனான உறவு பாதிக்கப்பட் டுள்ளது என்பதை நான் நம்பமாட்டேன். முறைப்படியான பேச்சுவார்த்தைகள் அந்த அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இது போன்ற சிக்கலான விடயங்களால் நாம் சம்பந்தப்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. இறையாண்மை மிக்கதும் அமைப் பின் சமத்துவம் கொண்டதுமான இலங்கை தனது நியாயப்படியான பங்கினை தொடர்ந்து வகிக்கும். ஜனாதிபதியின் அழைப்பைத் தொடர்ந்து துணைச் செயலாளர் நாயகம் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்பதை நாம் அறிந்துள்ளோம். கேள்வி: சீனாவின் எதிர்ப்பினால் ஆரம் பத்தில் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கையை உட்படுத்தும் நிகழ்ச்சியில் மேற்குலக சக்திகள் தோல்வியுற்றன. ஆனால் ஈரான் மீதான தடையை அமுல் செய்யும்படி பாதுகாப்புச் சபை மேற் கொண்ட மூன்று தீர்மானங்களை செயற் படுத்த மேற்படி நாடுகள் பீஜிங்கிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இலங்கையை விட பலம் வாய்ந்த அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ உறவுகளை சீனாவுடன் ஈரான் கொண்டுள்ளது. காலக்கிரமத்தில் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்டு சீனாவும் மாறும் ஒரு சூழ்நிலை தோன்றுமா என நீங்கள் ஊகிக்கிறீர்களா? இப்போது இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் பின்னர்?

பதில்: மேற்சொன்னது இந்த விவகாரத்திற்கு ஒத்துவராதது.

கேள்வி: இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஒரு நிலையில் உத்தேச நிபுணர்கள் குழு அமைப்பது தொடர்பில் செயலாளர் நாயகத்தை அணி சேரா அமைப்பு நாடுகள் முழு மனதாக குற்றம் சுமத்துவதாக அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. தேசிய ஐக்கியத்தையும் நல் லிணக்கத்தையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இலங்கையின் முயற்சிகளுக்கு நல்லதைச் செய்வதற்கு மாறாக தீங்கையே இது ஏற்படுத்தும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான காரியத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா?

பதில்: இலங்கை செயலாளர் நாயகத்தின் மீது எப்போதும் பெருமதிப்பு கொண்டுள்ளது. அமைப்பின் கடினமான பணியொன்றை அவர் மேற்கொண்டு சேவையாற்றுகின்றார் என்பதை யும் நன்கு உணர்ந்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ஒரு சூழ்நிலையில் அரசியல் உணர்வுகளை தூண்டி விடாத வகையில் அவர் நடந்துகொள்வார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி: ஐக்கிய நாடுகளுக்கான இலங் கையின் மாற்று எதிர் நடவடிக்கை என்ன? குழு நியமன உத்தேசமா? அவ்வாறு அனும திக்கப்பட்டால் செயலாளர் நாயகத் தின் தீர்மானம் இது போன்ற நடவடிக்கையை எல்லா நாடுகளுக்கும் மேற்கொள்ள முன் மாதிரி யானதொன்றாக அமையுமா? பதில்: செயலாளர் நாயகத்தினதும் அவரது பேச்சாளரதும் விளக்கங்களுக்கு இலங்கை யில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நாட்டு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் துரதிஷ்டமானது முற்றிலும் எதிர்மா றானது என்பது கோடிட்டுக் காட்டப்பட் டுள்ளது. மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஒருவரை நாம் கொண்டுள்ளோம். முன்னர் சம்பவிக்காத அங்கீகாரத்தை அவர் வகிக்கிறார். சகல கட்சிகளும் அரசியல் முக்கியத்து வத்தை உணர்ந்து தற்போதைய விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். இலங்கையில் உள்விவகாரத்தை வெளிநாட்டுத் தலையீடின்றி நாமே தீர்த்துக் கொள்ள வகை செய்ய வேண்டும். இது உலக அளவில் ஒரு முன் உதாரணமாகக் கொள்ளப்படக்கூடியதாக அமையும். மனித உரிமைகள் சபையின் முன்னிலையில் பொறுப்பான செயல் முறை குறித்து (இலங்கை) சட்ட மா அதிபரால் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம்: அமெரிக்கா, ரஷியா கையெழுத்து



:

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் கையெழுத்திட உள்ளன. இரு நாடுகளிடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இத்தகவலை ரஷியாவிலிருந்து வெளியாகும் நாளிதழ் "கோமர்சன்ட்' தெரிவித்துள்ளது.

செக்கோஸ்லோவோகியா தலைநகர் பிராகில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் கையெழுத்திட உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்வது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஜெனீவாவில் பேச்சு நடத்தியுள்ளனர்.

அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே 1991-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் காலாவதியானது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ்ஆகியோர் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இரு நாடுகளிடமும் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,500 முதல் 1,675 ஆகக் குறையும்.

அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் அணுசக்தி மாநாட்டை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு கீவ் தீவு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது பிராக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்த உள்ள மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளார். இதனாலேயே அணு விபத்து மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

நிதித்துறை சீர்திருத்தம் உடனடித் தேவை: ஒபாமா



:
இப்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மூல காரணமான நிதித்துறை சீர்குலைவைத் தடுக்க அத்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது உடனடித் தேவை என்றார் அதிபர் பராக் ஒபாமா.

நாட்டு மக்களுக்கு வானொலியில் ஆற்றிய உரையில் இதை அவர் வலியுறுத்தினார். அமெரிக்கப் பொருளாதாரம் என்றாலே தடையற்ற முதலாளித்துவம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அத்தகைய கடிவாளம் இல்லாத முதலாளித்துவக் கொள்கையால் நாட்டு நலனுக்கே பெருத்த ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை உணர்ந்திருப்பதால் நிதித்துறையில் கட்டுப்பாடுகளை விதிக்க முற்பட்டிருக்கிறார் ஒபாமா. அவருடைய பேச்சில் இதை பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.

ஒபாமா பேசியதன் சுருக்கம் வருமாறு:

"நிதித்துறையில் சீர்திருத்தம் அவசியம். நுகர்வோரைப் பாதுகாக்கும் முகமையை ஏற்படுத்தவேண்டும். அது நிதித்துறை அளிக்கும் சேவைகளையும் இதர திட்டங்களையும் பரிசீலித்து நன்மை, தீமைகள் குறித்து நுகர்வோருக்கு தகுந்த ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் அளிக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அனைவரும் முன்கூட்டியே உணர முடியும்.

இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் வேண்டாம், இத்தனை ஆண்டுகளாக இருந்த அதே நிலைமை நீடிக்கட்டும் என்று ஆதிக்க சக்திகள் நெருக்குதல் தரும், அவற்றையெல்லாம் அமெரிக்க செனட் (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும்.

நம்முடைய நிதிச் சந்தைகளும் பங்குச் சந்தைகளும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் எளிமையான, வெளிப்படையான நடைமுறை விதிகளை உருவாக்குவது அவசியம்.

நிதித்துறையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நமக்குப் பொருளாதார நெருக்கடியே ஏற்பட்டது.

பணம் திரும்ப கிடைக்குமா? என்பதை அறியாமல், அதைப்பற்றிக் கவலைப் படாமல் பல வங்கிகள் கேட்டவர்களுக்கெல்லாம் கடன்களை அள்ளி வழங்கின. கடனைத் திருப்பித்தரும் சக்தி அவர்களுக்கு இல்லை, தொழில், வர்த்தகத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டது என்றதும் வங்கித்துறையில் பெருத்த சரிவு ஏற்பட்டது. பல வங்கிகள் திவாலாயின.

பல நிறுவனங்கள் தங்களுடைய திட்டங்கள் என்ன, கடன்களுக்கான நிபந்தனைகள் என்ன என்பதையெல்லாம் வெளிப்படையாக அறிவிக்காமலேயே கடன்களைத் தாராளமாக வழங்கின.

மிகக் குறுகிய காலத்திலேயே தங்களுடைய திட்டங்களில் நிறையப் பேர் சேர வேண்டும்,தங்களுக்குக் குறுகிய காலத்தில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல நிதி நிறுவனங்கள் திட்டங்களைச் சகட்டுமேனிக்கு அறிவித்து நுகர்வோர்களைச் சிக்கலில் தள்ளிவிட்டன. கடன் வாங்கியவர்கள் வேலை இழந்து, வருவாய் குறைந்து அவதிப்பட்டதால் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இல்லை.

இதனால் வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய வட்டியும் அசலும் கிடைக்காமல் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதிலிருந்து மீளும் வழி இல்லாததால் திவால் ஆனது. தடைகளற்ற சுதந்திரமான சந்தை அவசியம் என்பதை நான் எப்போதுமே ஆதரித்து வந்துள்ளேன். சுதந்திரமான சந்தை என்பதற்கும் கட்டுப்பாடுகளற்ற சந்தை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழில் முனைவோர்கள், விற்பனையாளர்கள்,வியாபாரிகள் ஆகியோரின் நலன்களைப் போலவே நுகர்வோர்களின் நலன்களும் முக்கியம். எனவே நிதித்துறை வலுவாகவும் துடிப்பாகவும் ஆபத்துகளில் சிக்காமலும் இருப்பது அவசியம்.

பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் நலன்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட துணை நிறுவனங்களின் முதலீட்டைக்கூட சிறிதும் முன் யோசனையின்றி சந்தையில் செலவிட்டிருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

இனி இப்படியொரு நிலைமை ஏற்படாதிருக்க தகுந்த வழிமுறைகளை செனட்டர் கிறிஸ் டோட் தலைமையிலான குழு உருவாக்கி வருகிறது. இது சீர்திருத்த மசோதாவில் இடம் பெறும். எந்தவித முன் யோசனையும் இல்லாமல் பங்குச்சந்தை, நிதித்துறை போன்றவற்றில் ஊக பேரம் நடைபெறுவதை இந்த மசோதா தடுக்கும்.

நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பெற வேண்டிய ஊதியம், போனஸ் ஆகியவற்றை பங்குதாரர்களே நிர்ணயிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். நிறுவனங்களின் நிதியைத் தவறாகப்பயன்படுத்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நுகர்வோர் தங்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், சலுகைகள் ஆகியவற்றின் பின்னணியில் இருப்பவை என்ன என்பதை மூன்றாவது தரப்பாக நிதி பாதுகாப்பு முகமையிடமிருந்து அறிந்து கொள்ள இந்த மசோதா வழி வகுக்கும்.

வங்கித்துறை, நிதித்துறை சீர்திருத்தம் என்பது அவற்றின் சுதந்திரமான நடவடிக்கைகளில் தலையிடுவதாக இருக்காது, அதே சமயம் குறுகிய கால லாபத்துக்காக ஆபத்தான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும்' என்றார் ஒபாமா.
மேலும் இங்கே தொடர்க...

கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் என்னை விசாரிக்க முடியாது: சரத் பொன்சேகா




:

கொழும்பு, மார்ச் 20: ராணுவத்தில் நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் உயர் பதவி வகித்த என்னிடம் கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. என்னைவிட பதவி குறைந்த அதிகாரிகள் மூலம் என்னிடம் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்துள்ளார்.

ராணுவப் பதவியில் இருந்து நான் ஓய்வு பெற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் என்னிடம் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. ராணுவ நீதிமன்றத்தில் என்னிடம் விசாரிக்கும் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொன்சேகா தனது மனுவில் கோரியுள்ளார்.

அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எதிராக கொலை சதித் தீட்டம் தீட்டினார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்தது. அவர் முன்னாள் ராணுவ உயர் அதிகாரி என்பதால் அவரை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிடம் அவரைவிட பதவி குறைந்த கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா அந்தஸ்துக்கு நிகரான அதிகாரியோ அல்லது அவரது பதவியைவிட உயர்ந்த அதிகாரியோ இலங்கை ராணுவத்தில் இல்லை. இதனால் கீழ்நிலை அதிகாரிகளே அவரிடம் விசாரணை நடத்துவர். இதற்கு ராணுவ சட்டமும் அனுமதிக்கிறது என்று இலங்கை அரசு கூறியது.

ஆனால் இலங்கை அரசின் இந்த முடிவால் சரத் பொன்சேகா கோபம் அடைந்துள்ளார். தன்னைவிட பதவி குறைந்த அதிகாரி தன்னிடம் விசாரிக்க முடியாது என்று கூறி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் சரத் பொன்சேகாவின் மனுவை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு நீதிபதி சொந்தக் காரணத்தால் விசாரணைக் குழுவில் இருந்து விலகினார். இதனால் பொன்சேகாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

நம்பகத் தன்மையற்றோரின் போலி வாக்குறுதிகள்


தேர்தல் பிரசார மேடைகளில் அளவுகணக்கின்றி வாக்குறுதி கள் வழங்கப்படுகின்றன. வேட்பாளர்களால் பணம் எவ் விதம் அள்ளிவீசப்படுகின்றதோ அதே போல வாக்குறுதிக ளும் ‘பார்த்துப் பாராமல்’ வழங்கப்படுகின்றன.

பிரதான கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்குகளில் கூடுதலான அக் கறை செலுத்துவதால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர் பாக வாக்குறுதி வழங்குவதில் எல்லோரும் தாராளமாக இருக்கி ன்றார்கள். சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவர்ச் சியான வாக்குறுதிகளை அளிப்பவர்களை இரண்டு வகைகளுள் அடக்கலாம்.

ஆட்சியதிகாரத்துக்கு அண்மையிலும் வர முடியாது என்பதை தெரிந்துகொண்டு வாக்குறுதி வழங்குபவர்கள் ஒரு வகை யினர். தமிழ் மக்கள் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையை வழங்குவோம் என்பது போன்ற வாக்குறுதிகள் இந்த வகையின.

நிறை வேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்காது என்பதைத் தெரிந்துகொண்டு வாக்குகளுக்காக அளிக்கப்படும் வாக்குறுதிகள் இவை.

ஆட்சியதிகாரத்தை இலக்குவைத்துப் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாக் குறுதிகளை வழங்குகின்றன. முதலில் வாக்குகளைப் பெற்றுவிட்டுப் பின்னர் மக்களை ஏமாற்றுவது இவர்களின் நோக்கம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தமிழ் மக் கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகப் பல வாக்குறு திகளை யாழ்ப்பாணத்தில் வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வாக்குக் கேட்போரை விரட்டியடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

காட்டிக்கொடுப்போர் என்று இவர் கூறுவது துரோகமிழைப்பவர்களை எனக் கொள்ளலாம். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சிதான் தமிழ் மக்களுக்கு மிகக் கூடுதலாகத் துரோகமிழைத்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் இனப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு. இந்தத் தீர்வுத்திட் டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் பேசும் மக்கள் முகங் கொடுக்கும் ஏராளம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும்.

ஏகப்பட்ட உயிரிழப்புகளையும் வேறு அழிவுகளையும் தவிர்க்க முடி ந்திருக்கும். இத்தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வர முடியாமற் போன தற்கு ரணில் விக்கிரமசிங்ஹவும் அவரது கட்சியுமே காரணம்.

ஐக் கிய தேசியக்கட்சி அன்று இத் தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவு அளித் திருந்தால் பிந்திய காலத்தில் தமிழ் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்க நேர்த்திருக்காது.

இனப் பிரச்சினையின் தீர்வுக்கான முதலாவது ஏற்பாடு பண்டா- செல்வா ஒப்பந்தம். அது நடைமுறைக்கு வர முடியாத நிலையைத் தோற்றுவித்ததும் ஐக்கிய தேசியக் கட்சியே.

மாவட்ட சபைகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்துத் தமிழரசுக் கட் சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட சபை வழங்க முடியாது என்று சில காலத்தின் பின் பச்சை யாகவே கூறியது.

எல்லாவற்றுக்கும் மேலாக கறுப்பு யூலையை மக்கள் மறக்க முடியாது. தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் உலைவைத்த அந்த இனசங்காரம் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமிட்ட செயல்.

அப்போது தமிழ்க் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டதை நியாயப் படுத்தும் வகையில் கருத்துக் கூறியவர்தான் ஐக்கிய தேசியக் கட்சி யின் இன்றைய தலைவர்.

இவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பவர்கள் சிறுபான்மையினரு க்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று அளிக்கும் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பது தவறாக வழிநடத்தப்படுவதாக அமைந்துவிடும்.

தேர்தல் வழமையாக வந்துபோகும் திருவிழாவல்ல. தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளிலேயே அவர்களின் எதிர் காலம் தங்கியுள்ளது.

வாக்குறுதி வழங்குபவர்களின் நம்பகத்தன்மை யையும் வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியத்தையும் சீர்தூக்கிப் பார்த்தே மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

அத். பொருட்கள் சிலவற்றின் வரி நீக்கம்; விலைகளும் குறைப்பு


அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான வரிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் சில பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறையுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் இது பற்றி அமைச்சர் விளக்கினார்.

இதன்படி, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீதான வரிகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டரிசி-45 ரூபா வாக குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அரிசி 56 ரூபாவிலிருந்து 52.50 சதமாகக் குறைக்கப்பட்டுள் ளது.

வாசுமதி அரிசி 69.50 சதத்தி லிருந்து 65 ரூபாவாகக் குறைக்கப் பட்டுள்ளது. உருளைக்கிழங்கு 58 ரூபாவிலிருந்து 52 ரூபாவாக குறை க்கப்பட்டிருக்கிறது. மீன்ரின் விலை 149 இல் இருந்து 130 ரூபாவாகவும், கடலை 139 ரூபாவிலிருந்து 137 ரூபாவாகவும் நெத்தலிக்கருவாடு 270 ரூபாவிலிருந்து 250 ரூபாவா கவும் குறைக்கப்பட்டுள்ளதாக அமை ச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித் தார்.

இந்த நிர்ணயிக்கப்பட்ட விலைக ளில் சதொச மற்றும் கோப்சிட்டி களில் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்த அமைச்சர், ஐ.தே.க. கூறிவரும் பொய்ப் பிரசாரங்களை நம்பவேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார்.

முற்றிலும் தவறான பிரசாரத்தை ஐ.தே.கட்சி செய்து வருகின்றது. அவ்வாறு இல்லை. யுத்தத்தின்போது பாதுகாப்புச் செலவினங்களுக்கு பாரிய நிதி செலவு செய்யப்பட்டது. இப் பொழுது இப்பணம் செலவிடத் தேவையில்லை.

அதன் பயனாகவே அத்தியாவ சியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு வருகின்றன
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க சீரான முறையில் வாக்குச் சாவடிகள்

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதத்தில் ஒழுங்கான முறையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வதியும் பகுதிகளிலேயே வாக்களிக்க தகுதியுள்ளவர்களின் பட்டியலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் நடைமுறையில் கடந்த வாக்கெடுப்பின் போது குளறுபடிகள் நடந்ததாக தேர்தல் ஆணையாளரிடம் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்த லின் போது இடம்பெயர்ந்தவர்களு க்கென அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகள், வாக்களித்த முறை பற்றி தான் திருப்திய டைவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

லைன்பீ வரிசை வீட்டு முறையை ஒழிக்கும் திட்டம்: 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை





மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிலைன்பீ வரிசை வீட்டு முறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப் புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட் டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள் ளதாகவும் தேச நிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செய லாளர் திருமதி சந்திரா விக்கிரம சிங்க தெரிவித்தார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவி ருத்திப் பணிகளை அரசாங்கம் முன் னெடுப்பதாகவும் ஆனால்,

ஊடகங்களில் பெரிதாகத் தகவல் கள் வெளிவருவதில்லை எனத் தெரி வித்தார்.

குடிநீர், சுகாதாரம், மலசல கூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வள ங்களைப் பெற்றுக் கொடுத்து வருவ தாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்ட காலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்த நிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றுக் கூறினார்.

தோட்ட வீதிகளைச் செப்பனிடு வதற்கென 828 மில்லியன் செலவி டப்பட்டுள்ளது. 139 மில்லியன் செலவில் 700 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

87 நீர்விநியோகத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு 235 கோயில்களை அபிவிருத்தி செய்ய வும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேச நிர்மாண அமைச்சின் மூலம் மலை யகத்தில் 4614 செயற்றி ட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்
மேலும் இங்கே தொடர்க...

தேசநிர்மாண அமைச்சு மூலம் 1036 இணையக் கிராமங்கள்!

தேச நிர்மாண அமைச்சின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1036 இணைய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

இந்தக் கிராமங்களுக்குத் தனித்தனியான இணையத் தளங்கள் உருவாக்கப்பட் டுள்ளதுடன் அனைத்துக் கிராமங்களையும் ஒரே இணையத் தளத்தில் அறிந்து கொள்ளவும், கிராமத்துக்குக் கிராமம் தொடர் புகளை ஏற்படுத்தி அவர்களின் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கும் வழி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார். ஞுஞுஞு.கீஹஙுஹஙூக்கீஞிஙுஹ.ஙீஙி என்ற இணை யத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களும் பதிவு செய்யப்பட்டு ள்ளன.

அதேபோன்று 1168 கிராமங்களு க்கு இணையத் தளங்களை உருவா க்கும் திட்டத்தில் இதுவரை 1036 கிராமங்கள் பூர்த்தி
மேலும் இங்கே தொடர்க...

நல்லொழுக்கத்தை மதிக்கும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் ஜனாதிபதி






ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நல்லொழு க்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கண்டியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் மேலதிக வாக்குகளை நாட்டு மக்கள் எனக்கு அளித்து என்னை இரண்டாவது தடவை யாகவும் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளார்கள். ஒழுக்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இந்நாட்டைக் கட்டியெழுப்புமாறு கோரியே மக்கள் எனக்கு ஆணை வழங் கியுள்ளார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

ஒழுக்கம் இல்லாவிட்டால் கட்சி யொன்றை நடாத்த முடியாது. அதேநேரம் ஒழுக்கம் இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் முடியாது. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.

2005ம் ஆண்டில் நாட்டு மக்கள் எனக்கு அளித்த ஆணைப்படி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளேன். நான் அன்று ஜனாதிபதியாக பதவியேற்ற போது பாராளுமன்றத்தில் சபாநாயகரைக் கூட எம்மால் தெரிவு செய்ய முடியாதிரு ந்தது.

அப்படியிருந்தும் வெவ்வேறு அபிப்பிரா யங்களைக் கொண்டிருந்தவர்களை ஒன்றுபடுத்திக் கொண்டு நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ளேன்.

மூன்று விருப்பு வாக்குகளை அளிக்க முடியும். முதலில், முதல் தெரிவாக வெற்றிலைச் சின்னத்திற்கு புள்ளடியிடுங்கள். மூன்று வாக்குகளையும் நீங்கள் விரும்பிய மூவருக்கு அளியுங்கள் என்றார்.

ஐ. ம. சு. மு. னின் கண்டி மாவட்ட அபேட்சகர்கள் இக் கூட்டத்தில் உரையாற்றி னர்.

அமைச்சர் டி. எம். ஜயரட்ன, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க முன்னாள் அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச்.எம். அஸ்வர், ஜெக்ஸன் அன்டனி, தென் மாகாண சபை உறுப்பினர் அனார்கலி ஆகர்சா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு



யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக் கிள்கள், டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவ ணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான் றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமம் தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ், லொறிகள் போன்றவற் றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது:

இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையயிப்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...