28 ஜனவரி, 2011

சுவிற்சர்லாந்தில் மரணமடைந்தவரின் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள்

சுவிற்சர்லாந்தில் அண்மையில் மரணமடைந்த சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவரின் உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை நாடுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுவிற்சர்லாந்தை வதிவிடமாகக் கொண்ட இலங்கையரான சண்முகராஜா குறிஞ்சிக்குமரன் என்பவர் சுவிற்சர்லாந்து சூரிச்சிலுள்ள அவரது வசிப்பிடத்தில் 08.12.2010 அன்று இறந்த நிலையில் காணப்பட்டார் என சூரிச் பொலிஸ் ஜெனீவாவிலுள்ள எமது தூதராலயத்துக்கு அறிவித்துள்ளது.

இறந்தவர் பிறந்த திகதி: 20.07.1968 என்றும் கடவுச்சீட்டு இலக்கம்: ஆ 2176054 எனவும் மனைவியின் பெயர்: சத்தியசோதி குறிஞ்சிக்குமரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை முகவரி: கைதடி மேற்கு, கைதடி, யாழ்ப்பாணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் பற்றிய விபரங்களை அறிய வெளிநாட்டு அமைச்சின் கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு பெருமுயற்சி எடுத்துவருகின்றது. இன்றுவரைக்கும் இறந்தவரது உறவினர்கள் எவரும் அவரது பூதவுடலைக் கோரி வரவில்லை என்பதுடன் எம்முடன் தொடர்புகொள்ளவும் இல்லை.

இறந்த குறிஞ்சிக்குமரனின் பூதவுடலை அடையாளம் காண்பதற்காக, அவரது உறவினர்களை கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு மக்களின் உதவியை நாடுகின்றது. இறந்தவரின் உறவினர் பற்றிய விபரங்களை தெரிந்தவர்கள் எங்களுடன் தொலைபேசியூடாக உடனடியாகத் தொடர்புகொண்டு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கொன்ஸியூலர் விவகாரப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல.14, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக அல்லது 0112437635 மற்றும் 0114718972 ஆகிய தொலை பேசி இலக்கங்கள் ஊடாகவோ அறிவிக்குமாறு கோருகின்றோம். மேலும் 0112473899 தொலைநகல் இலக்கம் ஊடாகவும் அறிவிக்கலாம்.
மேலும் இங்கே தொடர்க...

301 உள்ஃராட்சி சபைகளுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தல்


வேட்புமனுக்கள் ஏற்பு நேற்றுடன் நிறைவு; ஐ.தே.க, ஐ.ம.சு.மு., தமிழரசுக்கட்சி, மு.கா, ஜே.வி.பி உட்பட முக்கிய கட்சிகளின் மனுக்கள் நிராகரிப்பு


301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று அறிவித்தார். 4 மாநகர சபைகள், 39 நகர சபைகள் மற்றும் 258 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலின் மூலம் 3931 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20ம் திகதி ஆரம்பமாகி நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. உட்பட பிரதான கட்சிகள் பலவற்றின் கூடுதலான வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வேட்புமனு தொடர்பான இறுதிப் பட்டியல் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை. உத்தியோகபூர்வ இறுதி வேட்புமனுப்பட்டியல் இன்று வெளியாகுமென தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

பிரதான கட்சிகள் மற்றும் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் நேற்றே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தன. வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாவட்ட செயலகங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த 16 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இது தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காலி மாவட்டத்தில் அக்மீமன பிரதேச சபை, இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபை, மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை மற்றும் சியம்பலதுவ பிரதேச சபைகள் குருநாகலை மாவட்டத்தில் பொல்கஹவல பிரதேச சபை, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் பல்லேபொல பிரதேச சபைகள் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச, சபை நுவரெலிய மாவட்டத்தில் லிந்துல- தலவாக்கலை நகர சபை, நுவரெலிய பிரதேச சபைகள் என்பவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.

ஐ.தே.க.வின் மனுக்களும் கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகமவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகர சபையிலும் ஐ.தே.க. வின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காலி மாவட்டத்தில் பத்தேகம பிரதேச சபை, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல பிரதேச சபை, மட் டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபை என்பவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள தாக அறிய வருகிறது.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹா மாவட்டத்தில் அத்தன கல்ல பிரதேச சபைக்கும் மினுவாங் கொடை நகர சபைக்கும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பிரதேச சபைக்கும் கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபைக்கும் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள். நிராக ரிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டா ரங்கள் கூறின.

ஜே.வி.பி. மாத்தளை மாவட்டத் தில் வில்கமுவ பிரதேச சபை, புத்த ளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய பிரதேச சபை என்பவற்றிற்கு தாக் கல் செய்த வேட்பு மனுக்களும் தமிழ ரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட த்தில் பூநகரி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட் டுள்ளதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின.

பிரஜைகள் முன்னணி, துணுக்காய் பிரதேச சபைக்குத் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள் ளதாக மாவட்ட செயலக வட்டாரங் கள் கூறின.

இது தவிர நவசமசமாஜ கட்சி, ஜனசெத்த முன்னணி உட்பட மேலும் சில கட்சிகளினதும் பெரும் பாலான சுயேச்சைக் குழுக்களினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப் பட்டதாக தேர்தல் செயலக வட் டாரங்கள் கூறின. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேமித்து வழக்குத் தொடரப் போவதாக பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன.

இம்முறை தேர்தலில் 14, 315,417 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி சபைகளுக்காக 7 அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சை க்குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு அரசியல் கட்சியினதும் ஒரு சுயேச்சைக்குழுவினதும் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு பிர ஜைகள் முன்னணி தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு முஸ்தபா ஜெஸ்லி தலைமையில் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் நிராக ரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட ஐ. ம. சு. மு., ஐ. தே. க., ஜே. வி. பி. உட்பட 10 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐ. ம. சு. முன்னணியின் வேட்புமனுக் களை ஐ. ம. சு. மு. செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோர் தாக்கல் செய்தனர்.

பதுளை பதுளை தினகரன் விசேட நிருபர்

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் அங்கீகரிக்கப்பட்ட இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

லங்கா சம சமாஜக்கட்சி மற்றும் ஜனசெத்த பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளும் பன்னிரெண்டு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டவைக ளாகும்.

எட்டு அரசியல் கட்சிகளினதும் 24 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட னவாகும்.

வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்ட தில் ஏற்பட்ட குளறுபடிகள், அபேட் சகர்களின் வயது, வேட்பு மனுவில் கையெழுத்திடாமை, முறையாக தயாரிக்கப்படாமை ஆகிய தவறுகளி னாலேயே மேற்படி வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை அம்பாறை மத்திய குறூப்

அம்பாறை மாவட்டத்தில் அரசி யல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 164 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 5 கட்சிகளினதும் 43 சுயேச் சைக் குழுக்களினதும் வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சி சம்மாந்துறை பிரதேச சபைக்குத் தாக்கல் செய்தி ருந்த வேட்புமனுவும் ஈழவர் ஜனநாயகக் கட்சியின் மூன்று வேட்புமனுக்களும் ஜனசெத முன்ன ணியின் ஒரு வேட்புமனுவும் நிராகரி க்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட் டத்தில் ஐ. ம. சு. மு, ஐ. தே. க., ஜே. வி. பி., மு. கா., தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

திருகோணமலை

திருணேமலை மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர் தல் நடைபெறுகிறது. இங்கு ஐ. ம. சு. மு. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், நவச மசமாஜக் கட்சி, ஐ. தே. கட்சி, ஜே. வி. பி. அடங்கலான கட்சிக ளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டி யிடுகின்றன.

குச்சவெளி பிரதேச சபைக்கு ஐ. ம. சு. மு., மு. கா. இணைந்து முன்னாள் ஐ. தே. க. பிரதேச சபைத் தலைவர் ஆதம்பாவா தெளபீக் தலைமையில் போட்டியி டுகிறது. ஐ. தே. கட்சி தமிழரசுக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவும் களம் இறங்கியுள்ளது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு 12 பேர் கொண்ட பெண்கள் அணியினரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். லிபரல் கட்சி கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, பட்டணமும் சூழல் பிரதேச சபையில் போட்டியிடுவதாக அக்கட்சியின் கி. மா. அமைப்பாளர் ஜே. காசிம் தெரிவித்தார்.

ஐ. தே. கட்சி, ஜே. வி. பி., ஐ. ம. சு. மு. அனைத்துப் பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி கந்தளாய், ஹோமரங்கடவல தவிர ஏனைய பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. குணவர்த்தனா (பா. உ) எம். எஸ். தெளபீக், ஜே. வி. பி. சார்பாக கி. மா. சபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ, ஐ. தே. க. சார்பாக திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் டொக்டர் அனுர சிரிசேன ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள இரண்டு நகர சபைக ளுக்கும் ஒரு பிரதேச சபைக்குமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 27 உறுப்பினர்களை தெரிவு செய்வதற் காக 564 உறுப்பினர்கள் போட்டியிடு கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து அரசியல் கட்சிக ளும் 42 சுயேச்சைக் குழுக்களும் களம் இறங்கியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐ. தே. க. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடு தலை முன்னணி, எல்லோரும் பிர ஜைகள் எல்லோரும் மன்னர்கள் ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றது.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய் வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் அமை ச்சர் எம். எஸ். அமீரலி, பிரதி அமை ச்சர் மகளிர் விவகார எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர், மாகாண சபை உறுப்பினர் களான பூ. பிரஷாந்தன், பீரதீப் மாஸ்டர் ஆகியோர்கள் வருகை தந்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் படுர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பி னர் யூ. எல். எம். முபீன் உள்ளி ட்டோரும் வருகை தந்திருந்தனர்.

நிராகரிப்பு புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வேட்புமனு பத்திரம் உட்பட 8 வேட்பு மனுப் பத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, நகர சபை, மற்றும் ஏறாவூர் நகர சபை ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குமாக 49 வேட்பு மனுப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றில் 8 வேட்பு மனுப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏறாவூர் நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுப்பத்திரம், மற்றும் ஐந்து சுயேட்சைக் குழுக்களின் வேட்பு மனுப்பத்திரங்கள் காத்தான்குடி நகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள் கட்சியினதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வவுனியா வவுனியா விசேட நிருபர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் மூன்று சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல் அலுவலகம் தெரிவிக்கின்றது. வவுனியாவில் ஐந்து அரசியல் கட்சிகளும் மூன்று சுயேச்சைக் குழுவுமே போட்டியிடவுள்ளன. இதனை வவுனியா தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஏ. எஸ். கருணாநிதி உறுதிப்படுத்தினார்.

உரிய வகையில் வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாததினால் மூன்று சுயேச்சைக் குழுவினது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எட்டு அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், லிபரல் கட்சி, பூமிபுத்ர கட்சி, ஜனவிமுக்தி கட்சி, எக்ஸத் ஸமாஜவாத் கட்சி ஆகிய கட்சிகள் போடியிடுகின்றன.

மாத்தறை மாவட்டத்தில் 22 சுயேச்சை குழுக்கள் போட்டிக்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் 10 சுயேச்சைக் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கம்பஹா நீர்கொழும்பு தினகரன் நிருபர்

எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்ட அத்தனகல்லப் பிரதேச சபை மற்றும் மினுவாங்கொடப் பட்டின சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (28) கம்பஹா மாவட்ட தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தது.

மேற்படி உள்ளூராட்சி மன்றங்க ளினதும் வேட்பு மனுக்கள் கம்பஹா மாவட்ட தேர்தல் செயலாகத்தினால் நிராரிக்கப்பட்டதென மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் தெரிவித்தார்.

வேட்பு மனுக் கள் நிராகரிக்கப்பட்டதற்கான கார ணங்கள் பற்றி தேர்தல் செயலக அதிகாரிகளிடம் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் வினவிய போது தேர்தல் ஆணை யாளர் எழுத்து மூலம் இதுபற்றி அறிவிப்பார் என கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் தெரி வித்தார்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்ன த்தில் கம்பஹா மாவட்ட பியகம பிரதேச சபைக்கான வேட்புமனுக் கள் மாவட்ட தேர்தல் செயகலத் தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி






மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணிகளாகவும், சுயேச்சைகளாகவும் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுகின்றது. ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் இந்தக் கட்சி இணைந்து போட்டியிடுவதாக அதன் தலைவர்களுள் ஒருவரான பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் தனித்தும், ஏறாவூர் நகர சபையில் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் அரசாங்க கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வவு னியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுவை வவுனியா தேர்தல் காரியா லயத்தில் தாக்கல் செய்தது.

ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவை நேற்றுக் காலை கையளித்துள்ளது.

முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளதினால் அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் சனநாயகக் கட்சி, ஈரோஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய பிரதிநிதிகள் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்ட பாறூக் எம்.பி. இன ஐக்கியமும் ஜனநாயகமும் கட்டியெழுப்ப முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு இந்த அரசாங்கத்தின் மீது மக் கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என் பதினை தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக் காட்டும் எனவும் சொன்னார். அதேநேரத்தில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியா தமிழ் பிரதேச சபைகளுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுலை முன்னணி ஆகியனவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் வே. இராதாகிருஷ்ணன் எம்.பீ. தொழிலாளர் தேசிய முன்னணியின் பீ. திகாம்பரம் எம்.பீ, முன்னாள் எம்.பீக்கள் வீ. புத்திர சிகாமணி, எஸ். அருள்சாமி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு அம்பகமுவ, கொத் மலை பிரதேச சபைகளுக்கு மயில் சின் னத்திலும், ஏனையவற்றுக்கு மண்வெட்டிச் சின்னத்திலும் போட்டி யிடுகின்றது.

இது இவ்வாறிருக்க நுவரெலியா, லிந்துலை, தலவாக்கலை பிரதேச சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வேட்பாளர்களை நிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸணுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் மாத்திரம் தனித்துப் போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. உடன் இணைந்து போட்டியிடுகின்றது. தனித்துவத்தை காக்கும் வகையில் தமது கட்சி இரு உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு யாழ். கோப்பாய் பகுதியில் 9 சந்தேக நபர்கள் கைது





யாழ். நகரில் வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே ஏனைய எட்டுப் பேரும் யாழ்.

குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவத் தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் இவர்களிடமிருந்து 100 பவுண் நகைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். நகரில் ஆங்காங்கே நடைபெற்ற வீடுடைப்பு, வழிப்பறி, சங்கிலி அறுப்பு போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சுமார் 500 க்கும் மேற்ப ட்ட பவுண் தங்கநகைகளை மீட்க முடியும் எனவும் பொலிஸார் தெரி விக்கின்றனர்.

இந்த ஒன்பது பேருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக யாழ். நகரில் கொள்ளை, வழிப்பறி, வீடுடைத்தல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரு க்கின்றனர்.

பொலிஸாரும் தீவிர கண்கா ணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வீதிச் சோதனைகள் ரோந்து நடவ டிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள் ளனர்.

யாழ்.குடா நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் தலைமையில் நடைபெற்ற மாநாடொன்றின்போது கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையும், இராணுவத்தினரின் திடீர் வீதிச் சோதனைகள், ரோந்து நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அதிகாரமளிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு எவரேனும் ஆயுதங்கள் வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நீதி, நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்




நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்திற்கு இடமளித்து வன்முறை, ஊழல் மோசடியற்ற தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் பிரதமர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமோக வெற்றியீட்டுவது உறுதி எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்ட போதும் அரசாங்கத்துக்கு எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்ட அவர், கண்டியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் பிரதியமைச்சர் அப்துல் காதர் போன்றோரின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைப்பது நிச்சயம். குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் எந்த குறையும் இருக்காது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்., கிளிநொச்சி மாவட்டம் பிரதான கட்சிகளின் கூடுதல் மனுக்கள் நிராகரிப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியி டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தன. பத்தொன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதும் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஜே. பி. வி. நான்கு உள்ளூராட்சி சபைக ளுக்கு வேட்புமனுவை முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலை மையில் தாக்கல் செய்தது.நவசமசமாஜக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்த வேட்புமனு ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜாவும் எம். சுமந்திரனும் தாக்கல் செய்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சமர்ப்பித்திருந்தனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சமர்ப்பித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 16 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன, கட்சியின் பெயரில் “முன்னணி" என்பதற்கு பதிலாக “கூட்டமைப்பு" என எழுதப்பட்டிருந்தமையால் இங்கு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஐ. தே. க. ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.



இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 உள்ளூராட்சி சபைகளுக்காக 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐ.ம.சு. முன்னணியின் 3 வேட்பு மனுக்களும் ஐ.தே.க.வின் ஒரு வேட்பு மனுவும் தமிழரசுக் கட்சியின் இரு வேட்பு மனுக்களும் நவசம சமாஜக் கட்சியின் ஒரு வேட்பு மனுவுமாக 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., தமிழரசுக் கட்சி, நவசமசமாஜ கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

குச்சவெளி நீர்க்கசிவுகள் பூகம்பத்தின் அறிகுறியல்ல பூகற்பவியலாளர்கள் அறிவிப்பு






குச்சவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட பூகம்பமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பூகற்பவியலாளர்கள் நேற்று அறிவித்தனர்.

நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக உருவான அமுக்கத்தின் விளைவாகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்ட பிரதேசத்தின் 50 முதல் 100 மீற்றர்கள் வரையான பகுதிக்கு தற்காலிகமாக செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட் பட்ட சலப்பை ஆற்றுக்கு அண்மையிலுள்ள சேற்று நிலத்தில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் திடீரென சாம்பல் நிற மண்ணுடன் சுமார் 18 நீர்க்கசிவுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பீடம் என்பவற்றின் பேராசிரியர்களும், பூகற்பவியலாளர்களும் ஸ்தலத்திற்கு சென்று ஆய்வுகளையும், அவதானிப்புக்களையும் மேற்கொண்டனர்.

புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியலாளர்கள் இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக விரிவான அடிப் படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பணியகத்தின் சிரேஷ்ட பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தலைமையில் பூகற்பவியலாளர் மஹிந்த செனவிரட்ன, பிராந்திய சுரங்க பொறியியலாளர் வசந்த விமலரட்ண, தொழில்நுட்ப உத்தியோகத்தர் பத்மசிறி ஆகியோர் பிரதேசவாசிகளின் ஒத்து ழைப்புடன் மேற்கொண்ட இந்த ஆய் வுக்கு தேவையான கருவிகளும் கொழு ம்பிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக மூன்று நாட்கள் தொடராக மேற்கொண்ட ஆய்வுகளை நேற்று நிறைவு செய்த இப்பூகற்பவியலாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இந்நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், இந்நீர்க்கசிவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக ஐந்து இடங்களில் வெவ்வேறு மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம். நிலத்தின் மேல் மட்டத்திலிருந்து இருபது அடிகள் ஆழம் வரையும் வெவ்வேறு மட்டங்களில் இருந்து மணல், களி போன்றவற்றை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

இவ்வாய்வின் படி இந்த நீர்க்கசிவுக்கு பூகம்பமோ, நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல. மாறாக இப்பகுதி ஊடாக ஓடுகின்ற நிலத்தடி நீரின் நீர்மட்டம் உயர்ந்ததன் விளைவாகவே இக்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது இப்பகுதியில் சுமார் நான்கு, ஐந்து மீற்றர்களுக்குக் கீழாக நிலத்தடி நீரோட்டம் உள்ளது. இதில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அழுத்தம் உரு வாகியுள்ளது. இதனால் இந்நீரோட்டத்திற்கு மேலாக உள்ள இலகு மண் படை அமுக்கத்திற்கு உள்ளாகி வண்டல் படி வம் ஊடாக நீர்க்கசிவுகள் ஏற்பட்டி ருக்கின்றன.

இப்பகுதி ஊடான நிலத்தடி நீரோட் டத்திற்கு மேலாகக் காணப்படுகின்ற இலகு மண் படை கடந்த 3000 - 4000 வருட காலப்பகுதியில் படிந்திருக்க வேண் டும். இவ்வாறான இலகு மண்படை சிலாபம், மாதம்பை பகுதியிலும் உள்ளது. இருப்பினும் அங்கு நிலத்தடி நீரோட்டம் இல்லாததால் பிரச்சினை இல்லாதுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2050 உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?





உலகில் அதிகரித்துவரும் சனத்தொகையை ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டுமாயின் உலக நாடுகள் உலக உணவு உற்பத்தி குறித்து அடிப்ப டை மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இல்லையெனில், 2050 ம் ஆண்டில் பசியும், பட்டினியும் தழைத்தோங்கும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் அரசாங் கங்கள் மக்களின் உணவு உட்கொள்ளும் பழக்கத் தில் மாற்றம் செய்ய வேண்டு மென்றும், உணவு விரயமாவதை தடுக்கவும், உணவுக்காக வழங்கும் மானியத்தை குறைக்க வேண்டும் என்றும், குறைந்த அளவில் கூடுதலான போஷாக் குடைய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடையே பிரபல்யப்படுத்த வேண்டும் எனவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விஞ்ஞான விவகார ஆலோசகரான பேராசிரியர் ஜோன் பெடிங்டன் தலைமையிலான குழு தனது, அதிகரித்து வரும் உலக சனத்தொகை பற்றிய தீர்க்க தரிசனம் கூறும் ஆய்வறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் உலகின் சனத்தொகை 9 பில்லியனாக அதிகரிக்குமென்றும் இப்பொழுது இருந்தே இவர்களுக்கு உணவை பெற்றுக்கொடுப்பதற்கான நெறியான திட்டங்களை தயாரிக்க தவறினால், உணவு பஞ்சத்தால் உலக நாடுகளில் மக்களிடையே கலவரங்களும், இரத்த கலரியும் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

உலகின் சத்தொகை பெருக்கத்திற்கு ஈடுசெய்யும் முகமாக அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய உணவுத் தானியங்களை விஞ்ஞானிகள் ஆய்வுகளை செய்து தயாரிக்க வேண்டுமென்றும், காலநிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்றும் மேலும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

குரங்கிற்கும் கைத்தொலைபேசி ஆசை






குரங்கு கையடக்கத் தொலைபேசி மீதான ஆசையினால் ஆசிரியர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை பறிகொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நோட்டனில் இடம்பெற்றுள்ளது. நோட்டன் கணபதி வித்தியாலய ஆசிரியவர் ஒருவரே தனது கைத்தொலைபேசியை குரங்கிடம் பறிகொடுத்துள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் வனப் பகுதிகளில் வாழும் குரங்குகளின் அதிகரிப்பினால் கணபதி பாடசாலை பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதும் இக்குரங்குகள் பாடசாலை மாணவர்களின் மதிய போசனம், பாட புத்தகங்கள் என்பனவற்றை வகுப்பறைக்குள் புகுந்து நாசம் செய்வதாக தெரிய வருகிறது. அத்தோடு, அண்மையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியையும் குரங்கு எடுத்து சென்றுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏதும் விபரீதம் ஏற்படுமோ என பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...