22 டிசம்பர், 2009

ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-




எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நாட்டுக்கு வந்து ஒருமாதம் தங்கியிருப்போர்க்கு பொலீஸ் பதிவு தேவையில்லையென அறிவிப்பு





கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்களைப் பார்ப்பதற்கு நாட்டிற்கு வருகைதந்து ஒருமாத காலம் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பொலீஸ் நிலையங்களில் தம்மைப் பதிவுசெய்து கொள்வது அவசியமில்லையென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரியவினால் சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலீஸ் மாஅதிபரினால் விடுக்கப்பட்டுள்ள இவ்வுத்தரவு நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளவர்கள் நேற்றுமுதல் ஒருமாத காலத்திற்குமேல் நாட்டில் தங்கியிருப்பார்களானால் மாத்திரமே பதிவு செய்துகொள்ள வேண்டுமென பொலீஸ் மாஅதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலீஸ் மாஅதிபரினால் நேற்று சகல சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள், பிரதிப் பொலீஸ் மாஅதிபர்கள் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலீஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட ஏனைய சகல பொலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெனரல் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு-


No Image
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு பயமுறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாட்டை சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் இன்று தெரிவித்துள்ளார் குறித்த பாதுகாப்பு அதிகாரி இளைப்பாறிய இராணுவ அதிகாரி என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகா கடந்தவார இறுதியில் அம்பலாங்கொடையில் சில மணித்தியாலங்களாக தங்கியிருந்த வீடு ஒன்றை விசேட பொலிஸ் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இன்றுகாலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நீதிமன்ற கட்டளையின்றியே இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவு-









ஜனாதிபதித் தேர்தலின்போது எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இடம்பெற்ற கலந்தாலோசனை இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாகவும், இந்நிலையில் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலான முடிவு எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது குறித்து இறுதி முடிவெடுக்கும் கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பணியாளர்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-

இலங்கைப் பணியாளர்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கைப் பணியாளர் ஒருவர் தொழில் வாய்ப்புக்காக அபிவிருத்தியடைந்த நாட்டுக்கு செல்வது இலகுவான விடயமல்ல என பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்த வருடம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.



இந்தியத்
தூதுவர் அசோக் கே.காந்தா உள்ளிட்ட தூதுக்குழுவினர் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும்
பங்கேற்பு-
plotesiddarthan
India assures it is with Sri Lanka 2-12-09



இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா இன்று வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்தியத் தூதுவருடன், பிரதித் தூதுவர் சிறீ விக்ரம் மிர்ஷி, தூதரக அரசியல்செயலர் சியாம் மற்றும் தூதரகத்தின் இராணுவஅதிகாரி ஆகியோhரும் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர். மேற்படி தூதுக்குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களைப் பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையிருடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் ஆலய பரிபாலன சபை சார்பில் அதன் தலைவர் நமசிவாயம், செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த ஆலயத்தில் இராஜகோபுரம் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பரிபாலன சபையினர் முன்வைத்தனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் சிறப்பு தொடர்பிலும், அதனை மிகவும் சிறப்புற புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு விளக்கியதுடன், இராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு உதவும்படியும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இதன்போது கருத்துரைத்த இந்தியத் தூதுவர், இவ்விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும், இந்தியாவுடன் தொடர்புகொண்டு அங்கிருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மிகத் துரிதமாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியத் தூதுக்குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கச்சேரியில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசஅதிபர் திரு.நீக்கிளாப்பிள்ளை தலைமை வகித்தார். இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், பிரஜைகள் குழுவினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் மற்றும் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்தின்போது இந்தியத் தூதுவரிடம் இதில் கலந்து கொண்டிருந்தவர்கள் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்வுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கேள்விகளையும் கேட்டனர். இதற்கு பதிலளித்த இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, தாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்கின்ற உதவிகள் தொடர்பில் விரிவாக எடுத்துக் கூறியதுடன், இந்திய, இலங்கை மீனவர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறான தீர்வினைக் காண்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் சுட்டிக்காட்டி, இந்தியாவினுடைய உதவிகளுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சரியான நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதையும், இதற்கு இந்தியா தனது முழுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...
24ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கலாம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள 20 ஆயிரம் வாக்காளர்களும் புத்தளம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள 25 ஆயிரம் முஸ்லிம்களும் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோரின் முகாம்களில் உள்ள கிராம சேவையாளர்கள் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தயார் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த சேவைகள் நிவாரணம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல முகாம்களில் உள்ள அனைவரும் மீள்குடியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார்

மகனை காப்பாற்ற போதை மருந்தை தின்று உயிர் விட்ட பெண்




பிரேசில் நாட்டில் உள்ள அலாகஸ் மாகாணத்தில் உள்ள மக்கியோ நகரை சேர்ந்தவர் ஜோசெலிடா டி மொரேஷ் (வயது 60). இவரது 16 வயது மகன்இ “கொகைன்” போதை மருந்து கடத்தல் தொழில் செய்து வந்தான்.

இதை அறிந்த போலீசார் அவனை தேடிவந்தனர். அவன் போதை மருந்துகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அவனது தாயார் ஜோசெலிடாவிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே தனது வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்த ஜோசெலிடா தனது மகன் பதுக்கி வைத்திருந்த கொகைன் போதை மருந்தை அழிக்க நினைத்தார்.

அதற்காக அவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார். அளவுக்கு அதிகமாக மருந்தை தின்ற அவர் போலீசாரின் விசாரணையின்போதே மயங்கி விழுந்தார்.

உடனேஇ ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகனை காப்பாற்றுவதற்காக தாய் தனது இன்னூயிரை மாய்த்துக் கொண்டார்.



இஸ்ரேலில் ஏசு வாழ்ந்த காலத்து வீடு கண்டுபிடிப்பு





ஏசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லேமில் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ள நாசரேத் நகரில் குடியேறியது. சிறு வயதில் ஏசு அங்குதான் வசித்து வந்தார்.

தற்போது நாசரேத் 65 ஆயிரம் மக்கள் வசிக்கும் பெரிய நகரமாக திகழ்கிறது.

ஏசு காலத்தில் இந்த நகரம் எப்படி இருந்தது? என்பதை குறிப்பிடும் வகையில் உள்ள பழங்கால கட்டிடங்கள் இல்லை. அந்த காலத்தில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் அழிந்து விட்டன.

இந்த நிலையில் நாசரேத் நகருக்கு வெளியே இஸ்ரேல் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ஒரு இடத்தில் 50 வீடுகள் புதைந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அவை புதைந்து கிடந்தன. இந்த வீடுகள் ஏசு காலத்து வீடுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர் யார்தனா அலக்சான்டிரா தெரிவித்தார்.

இந்த வீடுகள் சிறிய அளவில் இருக்கின்றன. சுண்ணாம்பு கற்கள் மற்றும் களி மண்ணை பயன்படுத்தி வீடுகளை கட்டி உள்ளனர். உணவு மற்றும் தண்ணீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்களும் அங்கு கிடந்தன.

கி.மு. 100-ம் ஆண்டில் இருந்து கிபி. 100-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

நாசரேத் பிற்காலத்தில் ரோம் மன்னர்களின் பிடியில் வந்தது. அப்போது இந்த நகரம் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
பக்கிங்ஹாம் மாளிகையைப் பார்வையிட முடியாது : மகாராணி அறிவிப்பு
No Image




இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளது. இங்கு அரச குடும்பத்தினர் தங்கி யுள்ளனர். பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு அரண்மனையை மூட மகாராணி எலிசபெத் முடிவு செய்துள் ளார். அரண்மனையில் உள்ள கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள வேலைப்பாடு மிகுந்த கற்கள் விழுவதாகவும். அதில் சிக்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே போன்று, இளவரசி ஆன்னி சென்ற கார் மீது கட்டிடத்தின் கற்கள் விழ இருந்து பின் தப்பித்தது. வேகமாக கார் சென்று விட்டதால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. மேலும், தரையில் கீறல்கள் இருப்பதால் நடப்பதற்கு கூட அரண் மனை ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் பார்வைக்குத் திறப்பதில்லை என மகாராணி எலிசபெத் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் அரண்மனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் அரண்மனை மராமத்து பணிக்காக ரூ.320 கோடி ஒதுக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




கொழும்பு வரும் மலையகத்தவர் இனி பொலிஸில் பதிவு செய்யத் தேவையில்லை : பசில்

No Image


தலைநகர் கொழும்புக்குச் செல்லும் தமிழர்கள் தங்களைக் காவல்நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மலையகத்திலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

வெளியிடங்களிலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென இதுவரை காலமும் இருந்த நடைமுறை தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இலங்கைக்கு இந்திய அரசாங்கம் 425 மில்லியன் டொலர் உதவி


No Image



இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிதியானது ஒமந்தையிலிருந்து பளை , மடு- தலைமன்னார் வரையான ரயில் பாதை அமைப்பதற்கும், மற்றும் வஎடக்கிற்கான விநியோக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.



ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 12,13 ஆம் திகதிகளில்

No Image


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி மாதம் 12,13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டு 30 ஆம் திகதி அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.



ஜெனரல் பொன்சேகாவின் வெற்றி ஜீ.எஸ்.பி சலுகைக்கு வழிவகுக்கும்-ரணில்


No Image

எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் ஜனநாயக உரிமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பாதுகாக்காவிடின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை எமது நாட்டுக்குக் கிடைக்காது போய் விடும். எனவே, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ள ஜெனரல் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதன் மூலம், வரிச்சலுகையினை பெற வழி பிறக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மக்கள் கருத்துக் கணிப்பாகும்.

ஏனென்றால் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியே இன்று முன்னெடுக்கப்படுகிறது. அதற்காகவே ஜெனரல் பொன்சேகா போட்டியிடுகின்றார்.

ஜிஎஸ்பி வரிச் சலுகையை வழங்கவேண்டுமென்றால் நாட்டில் சிவில் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

2010 ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் இந்த விடயங்களில் முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆடைத் தொழிற்றுறைக்கான ஜீ.எஸ்.பி.பிளஸ் வரியை வழங்க மாட்டோமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் இவையனைத்தையும் நிøவேற்றப் போவதில்லை. சர்வாதிகார ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கிறது. எனவே மேற்கண்டவாறு ஜனநாயக முறைமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக பத்து அம்சதிட்டங்களை முன்வைத்து பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உட்பட பொருளாதார அபிவிருத்திக்காக வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதைவிடுத்து மியன்மாரைப் போன்று இலங்கையை மாற்ற முனைபவர்களின் கைகளில் ஆட்சியை வழங்கினால் என்ன நடக்கும்? ஆடைத் தொழிற்றுறை சார்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேலõனோர் தொழிலை இழப்பார்கள். எனவே மக்கள் சிந்திக்கவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச வர்த்தக அமைப்பில் முறையிடப் போவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது நடைமுறை சாத்தியமற்ற நடவடிக்கையாகும்.இவ்வாறான முறைப்பாட்டை விசாரித்து முடிப்பதற்கு மூன்று வருடங்களாகும்.

அதுவரையில் இந்த வரிச் சலுகையை இழந்து நாம் எவ்வாறு ஆடைத் தொழிற்றுறையை பாதுகாக்கப் போகிறோம்? அதிக விலை கொடுத்து எமது ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு எந்தவொரு நாடும் முன்வரப் போவதில்லை. இவ்வாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே 2011 ஆம் ஆண்டு வரை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாவதன் மூலமே இது சாத்தியமாகும் என்றார்.



வாக்குகளை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது-ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு

No Image


தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகளையும் மீறி அரசாங்கம் வன்முறைகளிலும் தேர்தல் சட்டங்களை மதிக்காமலும் செயற்படுகிறது. இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று ஐ.தே.க.வின் பிரதித் தலைவரும் அமைச்சருமான கரு ஜெயசூரிய தெரிவித்தார். இடைத்தங்கல் முகாம்களுக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் செல்வதை தடுத்து வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,கட்அவுட் போஸ்டர்களை அகற்ற வேண்டும், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தப்படலாகாது.

அரச வளங்கள் பாவிப்பதை கைவிட வேண்டும். அரச ஊடகங்களில் எதிர்க் கட்சிக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு கிராம சேவகர் ஊடாக தேர்தல்கள் ஆணையாளரின் உறுதிப்படுத்தலுடனேயே தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்..

மேற்கண்டவாறு தேர்தல்கள் ஆணையாளர் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அரசாங்கமோ இவையனைத்தையும் கண்டுகொள்வதில்லை. மாறாக அனைத்து தேர்தல் சட்டங்களையும் மீறிச் செயற்படுகிறது..

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரோடு சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். அது மட்டுமல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம். வட பகுதியில் 8000 பேருக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணையாளருடன் பேசவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சியினரால் முடியாதுள்ளது. எமக்கு அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கரு ஜயசூரிய எம்.பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்கள் இனிமேல் பொலிஸில் பதிவு செய்ய வேண்டியதில்லை

தமிழர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். பொலிஸ் மா அதிபர் இது பற்றி உத்தி யோகபூர்வமாக அறிவிப்பார் என்று ஜனா திபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரனின் தலைமையில் நேற்று முன்தினம் ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் விசேட விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து கொண்ட சந்திரசேகரன் மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும், மலையக மக்களின் இனத்துவ, தனித்துவத்தை நிலைநாட்டுவதிலும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

அமைச்சரவையில் இருந்து கொண்டு சந்திரசேகரனும், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் அவசரகால சட்டத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இவர்களை விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

இப்படி ஒரு சங்கடமான நிலைமை எமக்கு ஏற்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக சந்திரசேகரனுடன் பேசினார். அமைச்சர் தனது நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விளக்கமளித்தார். மனசாட்சியின்படி நடக்க இடமளித்து மஹிந்த சிந்தனையில் மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி உங்கள் தலைவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டார்.

அரசில் பங்குவகித்து அமைச்சராக இருந்தாலும் தமது நிலைப்பாட்டில் நின்று மனசாட்சியின்படி நடப்பதையிட்டு பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார். உங்கள் தலைவர் மலையக மக்களின் மேம்பாடு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்தும் உரத்து குரல் எழுப்புபவர்.

கடந்த காலங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டு அரசாங்கம் என்றவகையில் உங்கள் கோரிக்கைகளை ஏற்று செயற்பட்டுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்குவதைப் பற்றி வேண்டுகோளை முன்வைத்துள்Zர்கள். இதுபற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து சட்டப்படியான தீர்மானங்களை எடுக்க செயற்பட்டு வருகின்றது.

மிழர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை ரத்துச் செய்யப்படும். இனி பொலிஸ் பதிவினை தமிழர்கள் செய்யத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த பேச்சு முடிந்த பின்னர் உத்தியோகபூர்வமாக உங்களுக்கு இதனை அறிவிப்பார். 1988, 1989 கால கட்டத்தில் சிங்கள மக்களுக்கும் இந்த தொல்லை இருந்தது.

சிங்கள மக்களும் வெகுவாக சிரமப்பட்டார்கள். அப்போது மறித்து சோதனை செய்யும் போது கிளிநொச்சி அடையாள அட்டை அல்லது தமிழர்கள் என்றால் எவ்வித தடங்கலோ சோதனையோ இன்றி பயணித்தார்கள். பின்னர் இந்நிலைமை மாறி அன்று சிங்கள மக்கள் அனுபவித்த சங்கடங்களை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. அம்பாந்தோட்டை அடையாள அட்டை என்றால் இன்முகத்துடனான புன்சிரிப்பும் மேலதிகமாகவே கிடைத்தன.

ஒரு சிலர் ஜனாதிபதியின் ஊரா, உறவினரா? என்று ஒரு மரியாதையும் செலுத்தினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பட்டியல் கிடைத்தவுடன் நீதியான விசாரணை இடம்பெற்று விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். மலையக மக்கள் முன்னணி விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் மலையக மக்களின் மேம்பாட்டிற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு போதும் பின்னிற்காது.



வெளிநாட்டு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட புலிகளின் பாரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

தேசிய புலனாய்வு துறையினரின் தகவலுக்கமைய வெளிநாட்டு கடற் பரப்பில் இலங்கை கடற்படையின ரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான ‘பிரின்ஸஸ் கிரிஸான்டா’ என்ற பாரிய கப்பல் நேற்று கொழு ம்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப் பட்டது.

கடற்படை கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் கொழு ம்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப் பட்ட இந்தக் கப்பலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண் டனர்.

ஆயிரக் கணக்கான கடல் மைல் களுக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட இந்தக் கப்பல் மனிதாபிமான நட வடிக்கையின் இறுதிக் கட்டத் தின் போது பிரபாகரன் உட்பட புலிக ளின் முக்கிய ஸ்தர்கள் பலர் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்து ள்ளதாக கடற்படைத் தளபதி தெரி வித்தார்.

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு வெளிநாடு களிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆயுத ங்களை கடத்துவதற்கும் பயன்படுத் தப்பட்ட இந்தக் கப்பல் இலகுரக விமானம் இறங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

90 மீட்டர் நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்ப லில் 5000 மெற்றிக் தொன் எடை யுள்ள பொருட்கள் கொண்டுசெல்ல முடியும்.

புலிகளிடமிருந்த பல கப்பல்கள், கடற்படையினரால் முற்றாக தாக்கி யழிக்கப்பட்டன. புலிகளிடமிருந்த மிகப் பெரிய கப்பல் இது என்று கடற்படைத் தளபதி சுட்டிக் காட்டி னார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அண் மித்த ஆழ்கடலில் தரித்து நின்ற கப் பலை பார்வையிடுவதற்கென கொழு ம்பு துறைகத்திலிருந்து இரண்டு டோராக்களில் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி தலைமையில் ஊடகவியலாளர் குழுவினர் கப் பலை சென்று பார்வையிட்டனர்.

வெற்றிகரமாக கப்பலை துறைமு கத்திற்கு கொண்டு வந்ததை பாராட் டும் வகையில் கப்டன் தஸநாயக்க விடம் கடற்படைத் தளபதி நற் சான்று பத்திரத்தை சமர்ப்பித்தார்.

இந்தக் கப்பல் ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுக ளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை புலனாய்வு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமைத்துவத்தின் மூலமும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா பய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் மூலம் கடற்படையினர் வெற்றிகர மாக தமது நடவடிக்கைகளை முன் னெடுக்க முடிந்ததுடன் புலிகளின் கப்பல்களை இதுபோன்று கொழும் புக்கு கொண்டுவரவும் முடிந்தது என்று கடற்படைத் தளபதி குறிப்பிட்டார்.

இலங்கை கடற்படையினரின் பாவ னைக்கு இந்த கப்பல் பயன்படுத்தப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோருகிறது ஐ.நா


விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த பா.நடேசன்



முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த 13ஆம் திகதி ‘சன்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை களை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித் துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதி விசார ணைக்குப் புறம்பான உடனடி மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் மரண தண்டனை விவகாரங்களுக்கு பொறு ப்பான விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிடமொன்றை அனுப்பி யுள்ளார்.

சரணடைந்தவர்களை சுடுமாறு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்குமாறு அக்கடிதத்தில் அவர் கேட்டிருக்கிறார்.

பாலசிங்கம் நடேசன், சீவரட்னம் புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று புலி இயக்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2009 மே 17 ம் 18ஆம் திகதி இரவு மரணமுற்ற சூழ்நிலை தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்கிறது.

தனக்கு கிடைத்துள்ள தகவல் மேற் குறிப்பிட்ட பேட்டியில் சரத் பொன்சேகா விடுத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்ப டையிலேயே அமைந்துள்ளதாக தனது கடிதத்தில் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட் டுள்ளார். அத்துடன் நடேசன், புலித்தேவன், ரமேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்த சூழ்நிலை தொடர்பாக விடுக் கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிலவற்றை 58 ஆவது படைப்பிரிவுடன் அப்போது இருந்து வந்த ஊடகவியலாளர்களின் கூற்றுக்கள் உறுதி செய்வதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அனைத்து ஆயுத மோதல்களுக்கும் பொருத்தமான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் குறிப்பாக 1949 இன் ஜெனீவா ஒப்பந்தத்தின் 5 ஆவது ஷரத்தை சுட்டிக்காட்டும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது கடிதத்தில் குற்றச்சாட்டுகளின் சரியான தன்மை பற்றி கேட்டுள்ளதுடன் அக்குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என்று கூறுமிடத்து அது பற்றிய தகவல் மற்றும் ஆவண சான்றுகளையும் கேட்டுள்ளார்.

அத்துடன் நடேசன், புலித்தேவன், மற்றும் ரமேஷின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான தகவல்களும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் கடிதத்துக்கு உத்தியோகபூர்வ பதில் அனுப்புவது மற்றும் தேவையான நடவடிக்கை எடுப் பது தொடர்பாக தீர்மானிக்கும் முன்னர் அக்கடிதம் தொடர்பாக அரசாங்கம் கவனமாக பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலும் இங்கே தொடர்க...