10 மார்ச், 2010

ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்




சர்வதேச அரங்கிற்கு உண்மை நிலையை விளக்க நடவடிக்கை

பாங் கீ மூனின் நடவடிக்கை ஐ.நா கொள்கைக்கு முரண்


சர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது.

இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது.

இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேரா சிரியர் பீரிஸ் தெரி வித்தார்.

வெளிநாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வ தற்காக இலங்கையின் நலன் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாததென்று கூறிய அமைச்சர் பீரிஸ் இதற்கான நிலையானதும், பலமானதுமான ஓர் அரசாங்கம் இருக்க வேண்டுமென்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் அமைப்பின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பாண்ட் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதலாவது : எமது இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, இரண்டாவது : இலங்கை உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது, மூன்றாவது : சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது.

போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாடு கடந்த எல். ரி. ரி. ஈ. அரசாங்கத்தை அமைப்பதற்கு கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராயவென மூவர்கொண்ட நிபுணர்களை நியமிக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது எந்த வகையிலும் நியாயமானதல்லபீ என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூன் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையானது முற்றிலும் ஐ. நா. சபையின் கொள்கைகளை மீறும் செயலாகுமென்று சுட்டிக்காட்டினார்.பீ சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடு, ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் இலங்கைக்குச் சார்பாக பல நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

அவ்வாறு இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்த நாடுகள் கூட தலையிட முடியாதவாறு செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்துடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் முயற்சிப்பது ஐ. நா. சாசனத்திற்கு விரோதமானதாகும். சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுவதற்குத் தயார்.

ஒரு சவாலை வென்றுள்ள நாட்டுக்கு, பொருளாதார சவாலையும் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். அதேநேரம், அந்த நாடுகளின் அரசியல் இலாபத்திற்காக எமது நாட்டின் நலன் பாதிக்க இடமளிக்க முடியாது. வாக்குகளைப் பெறவும் தேர்தலுக்கு நிதியைப் பெற் றுக்கொள்ள நமது நாட்டைப் பலிகொடுக்க முடியாது. இதனைக் கருதிற்கொண்டுதான் ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் பேச்சு நடித்த அரசாங்கம் தீர்மானித்ததென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தகவல் வழங்கிய அமைச்சர், பிஎதிர்க் கட்சி தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தெரிவித்த கருத்துகள் இன்று நிரூபணமாகியுள்ளன. எதிர்க் கட்சிக் கூட்டு இன்று மூன்று பிரிவுகளாகியுள்ளது.

அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெல்லும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சி வெல்லும் நோக்கத்திலோ, அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கத்திலோ தேர்தலில் போட்டியிடவில்லை. அர சாங்கத்திற்கு மூன்றில் இரண்டு கிடைப் பதைத் தடுக்கவே முயற்சிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்திற்குப் பூரண ஆத ரவை வழங்கி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்றுக் கொடுப்பதென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக் கப்பட்டாலும் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டார்கள்பீ என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரூ. 31.5 மில். பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின




தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களும் கண்டுபிடிப்பு

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 31.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் வகைகளை சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள் ளனர்.

மத்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பொதிகள் போன்று வெவ்வேறு விலாசங்கள் ஒட்டப்பட்ட 12 பலகைப் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக சுங்கத் திணைக்களத்தில் வைக்கப்பட்டி ருந்தன.


படம்: சுமணச்சந்திர ஆரியவன்ச

உரிமைகோராத நிலையில் கிடந்த பெட்டிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்ட பெயர், விலாசங்கள் குறித்து ஆராய்ந்த போது அவை போலியானவை என கண்டு பிடிக்கப்பட்டன.

சுங்கத் திணைக்களத்தினர் பெட்டிகளை திறந்தபோது அவற்றில் 4.2 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தமை கண்டுபிடித்துள்ளனர். இலங்கை நாணயப் படி அவற்றின் பெறுமதி சுமார் 31.5 மில்லியன் ரூபா என்றும், இவை இலங்கைக்குள் சட்ட விரோதமாக கொண்டுவருவதன் ஊடாக 95.5 மில்லியன் ரூபா அரசுக்கு கிடைக்காமல் போகிறது என்றும் சுங்கத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று இலங்கைக்குள் பயன் படுத்துவது தடைசெய்யப்பட்ட 650 சீ. சீ. 400 சீசீ மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப் பட்டுள்ளன.

முப்படையினருக்கு மட்டுமே பயன்படுத் துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வகையான மோட்டார் சைக்கிள்களும் துண்டு துண்டாக உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்ப ட்டிருந்தன. இவை இரண்டும் சுங்கத் திணைக்களத்தினரால் மீண்டும் பொருத்தப்ப ட்டுள்ளன.

இவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களு டன் உரிமை கோரப்படாத நிலையில் மேலும் சில மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. அவை சுங்கத் திணைக்களத்தின ரால் டெண்டர் மூலம் விற்பனைக்கு விடப்படவுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 4.2 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களும் அவற்றின் பெறுமதியும் வருமாறு,

யமஹா - 650 சீ. சீ. மி 5,00,000/-

ஹொண்டா சீபி மி 400 சீ. சீ. மி 5,25,000/-

ஹொண்டா - 50 சீ. சீ. மி 1,25,000/-

ஹொண்டா - 50 சீ. சீ. மி 1,25,000/-

யமஹா - டிடீஆர் - 250 சீ. சீ மி 1,40,000/-

சுசூகி - 50 மி சீ. சீ. மி 35,000/-

யமஹா - 100 சீ. சீ. மி 75,000/-

பீச் பைக் 50 சீ. சீ. மி 65,000/-

பசொல் டீ மி 17,000/-

பசொல் டீ - 17,000/-

சுங்கத் திணைக்களத்தில் உதவி சுங்கப் பணிப்பாளர் ஜயந்த பொன்னம்பெரும, சுங்கத் அதிகாரிகளான ஆர். பி ஹேவாகம, எல். என். ஜயசேக்கர, பீ. எஸ். மானவடு, கே. ஏ. ஏ. பி. கஹந்தவ, எஸ். பி. ஆர். சேனாரட்ண, என். பள்ளியகுரு உட்பட சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கொழும்பு, புளூமெண்டால் வீதியிலுள்ள சுங்கத் திணைக்களத்தின் இறங்கு துறையில் நேற்று ஊடகங்களுக்கு மேற்படி சட்டவிரோத சிகரெட், மோட்டார் சைக்கிள் என்பவற்றை காண்பித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் மோதலின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் பலரால்




 
வன்னியில் மோதலின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் பலரால் அபகரிக்கப்பட்டு வன்னியை விட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக மிக அண்மையில் கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கான நடவடிக்கையை கிளிநொச்சி அரசஅதிபர் மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். வன்னியில் நடந்த மோதலின்போது தமது உடமைகளை தாம் இடம்பெயரும்போது தம்முடன் புதுமாத்தளன்வரை எடுத்துச்சென்று பின்னர் அங்கு கைவிட்டுச் சென்றதாகவும், அவ்வாறான வாகனங்கள் மோட்டார் பொருட்கள் என்பன பலரால் அங்கிருந்து அகற்றப்பட்டு மறைவான இடங்களில் வைத்து முக்கியமான பாகங்கள் களவாடப்பட்டு வன்னியைவிட்டு வெளியிடங்களுக்கு அனுப்ப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வசித்த பெருமளவிலான வாகனச் சொந்தக்காருக்குரிய பதிவு ஆவணங்கள் இல்லை. இந்நிலையில் துணிந்து சென்று வாகனங்களை கோரமுடியாத நிலமையும் நிலவுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

  வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விவாக, பிறப்பு, இறப்பு




 

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விவாக, பிறப்பு, இறப்பு சான்றுகள் கணினி மூலம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா, மன்னார். கிளிநொச்சி, காணி மாவட்ட பதிவகங்களில் அவ்வப் பிரதேசத்திற்குரிய சான்றுகள் கணினி மூலம் வழங்கப்படவுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய சான்றுகள் வவுனியா கல்வி மாவட்ட பதிவக அலுவலகத்தில் தற்காலிகமாக வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1941ம்ஆண்டுக்குப் பின்னரான சான்றுகளே கணனி மயப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மத்திய பதிவேட்டில் பெறக்கூடியதாக இருந்த இணைப்பிரதிகள் மூலமே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சிறுசிறு குறைபாடுகள் உள்ளபோதும் காலக்கிரமத்தில் இவை நிவர்த்தி செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தகாலத்தில்


ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தகாலத்தில் அவர் தமக்கு கீழ் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகளையும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இத்தகவலை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் லக்ஸ்மன் உலுகொல்ல வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா இராணுவ அதிகாரியாக இருந்தகாலத்தில் அவரது காரியாலயத்தில் வைத்தே இராணுவ அதிகாரிகளை துன்புறுத்தியிருக்கிறார். சிலரை இருட்டறையில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதுபற்றி முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. என்றும் லக்ஸ்மன் உலுகொல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இங்கே தொடர்க...

'ரா' மீதான குற்றச்சாட்டுக்கு நிருபமா மறுப்பு



இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தில், இலங்கை அமைச்சர் நந்தன குணதிலக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கடந்த வாரம் இலங்கை சென்று திரும்பிய நிருபமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

"உளவுத்துறைக்கு என்று சில வரம்புகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை உளவுத்துறை அதிகாரிகள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள்.

அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும், இந்த வரம்புகளை மீறிச் செயல்பட மாட்டார்கள். இதை நான் சமீபத்தில் இலங்கை சென்றபோது, அதிபர் ராஜபக்ஷவிடமும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் தெளிவுபடுத்தி இருக்கிறேன்" என்றார்.

அமெரிக்கா பயணம்

இந்நிலையில் இருதரப்பு உயர் தொழில்நுட்ப வர்த்தகம், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த நிருபமா ராவ், அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வாஷிங்டன் செல்லும் நிருபமா அமெரிக்க வர்த்தகத்துறை துணைச் செயலாளர் டென்னிஸ் ஹைடவருடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பீற்றர் றிக்கெட்ஸ் - ரோஹித போகொல்லாகம சந்திப்பு



உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் , மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும், மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தொண்டு நிறுவனங்களை அனுமத்தித்தமைக்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பீற்றர் றிக்கெட்ஸ் இதன்போது பாராட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் முக்கிய அரசியல் முயற்சி என ரோஹித போகொல்லாகமவிடம் தெரிவித்த பீற்றர் றிக்கெட்ஸ், இத்தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடைபெற பிரித்தானியா உதவும் என உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டமை குறித்தும் பீற்றர் றிக்கெட்ஸ் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும்பேச்சுவார்த்தைகளை நடத்த


ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் வாரத்தில் இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கம் 16 மாவட்டங்களில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மேலும் இரண்டு இல்லது மூன்று மாவட்டங்களில் வெற்றிபெறக் கூடிய சாத்தியம் உள்ளது.

அதன்படி மூன்றில் இரண்டு அதிகப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் பெருமளவில் அரசாங்கத்துக்கு உள்ளது.

புலிகள் இயக்கம் ஓய்ந்த போதும் புலிகளுக்கு சாதகமான குரல்களும் அந்த நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் இன்னும் ஓயவில்லை என்பது மக்கள் மனங்களுக்கு நன்கு தெரியும்.

எனவே உறுதியான சக்திமிக்க ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதிக்கு ஏற்படுத்திக் கொடுக்க மக்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின்



சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின் முக்கிய பிரமுகரிடம் தஞ்சம்; சென்னையில் ரகசிய இடத்தில் சிறைவைப்பு?

சதி கும்பல் தூண்டுதலால் சாமியாரை படம் பிடித்த ஆசிரம சீடர் லெனின் முக்கிய பிரமுகரிடம் தஞ்சம்; சென்னையில் ரகசிய இடத்தில் சிறைவைப்பு?
திரைப்படம் திரைப்படம்
சென்னை மார்ச். 10-

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்த லெனின் ரகசியமாக படுக்கை அறை காட்சிகளை படம் பிடித்தது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து லெனின் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். பின்னர் நித்யானந்தா மீது பரபரப்பான புகார் ஒன்றையும் தெரிவித்தார். இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்யானந்தாவின் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் காமிராவை பொருத்தி ஆபாச படம் எடுத்த லெனின் சட்டப்படி குற்றவாளி என்று ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் காந்தப்படுக்கை மோசடியிலும் லெனினுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக லெனின் கலக்க மடைந்துள்ளார். ஏதாவது ஒரு ரூபத்தில் தன் மீது வழக்கு பாய்ந்து விடுமோ என்ற அச்சம் லெனினுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் இருந்து தப்புவதற்காக சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டில் லெனின் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய பிரமுர்கள்தான் லெனினை ஆட்டுவித்துக் கொண்டிருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி அறையில் யார் கண்ணிலும் படாத அளவுக்கு லெனின் முக்கிய பிரமுகர் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நித்யானந்தாவை ஆபாசமாக படம் எடுத்த பின்னர் அதனை காட்டி லெனின் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக தெரிகிறது. ஆனால் பெங்களூர் ஆசிரம நிர்வாகிகள் இதற்கு ஒத்துப்போகவில்லை. இதன் பிறகே ஆபாச சிடி.க்களுடன் லெனின் சென்னைக்கு புறப்பட்டு வந்து முக்கிய பிரமுகரை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

அப்போது சி.டி.யை யார்-யாருக்கு முதலில் கொடுக்க வேண்டும் அதை வைத்து அடுத்தடுத்து எப்படி காய்களை நகர்த்த வேண்டும் என்று அப்போது சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் நித்யானந்தருக்கு எதிரான இத்தனை சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. என்கிறார் ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர்.

இது தொடர்பாக அவர் கூறும் போது லெனினை ஒரு கும்பல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இதனால் தான் சாமியாருக்கு எதிராக லெனின் செயல்பட்டு வருகிறார்.

இதற்கெல்லாம் ஒரு நாள் லெனின் பதில் சொல்லியே தீர வேண்டும். இன்னும் சில நாட்களில் நித்யானந்தா நேரில் வந்து குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் விளக்கம் அளிப்பார் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது



தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்க நிலையங்கள் இன்று முற்றுகை:பந்துல


அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக்கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

"முன்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்களுக்கு தாராளமாக அரிசி கிடைக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது. இக்கால கட்டத்தில் எவ்வித விலை அதிகரிப்பும் ஏற்பட வழியில்லை.

அரிசியைப் பதுக்குவோர் மற்றும் அதிக விலையில் விற்போர் ஆகியோரைக் கண்டு பிடிக்க நாளை முதல் விசேட நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எவ்வித அரசியல் பாகுபாடுகளும் காட்டப்படமாட்டாது" என்றும் அவர் கூறினார். _
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிக்கவேண்டும்: ஜனாதிபதி



சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வலஸ்முல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெலிஅத்த தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

"ஒருமைப்பாட்டைக் கொண்ட மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாடு ஒன்றையே கடந்த 2005 ஆம் ஆண்டு என்னிடம் எதிர்பார்த்தீர்கள். அந்த வகையில் 30 வருட பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முறியடிக்க எம்மால் முடிந்தது.

உலகின் பிரபல நாடுகளில் நிலவும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் அதிகாரமிக்க அந்த நாடுகள் இன்னும் போரிட்டு வருகின்றன. சில நாடுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் காரணமாக இன்றும்கூட பிறக்கும் குழந்தைகள் விகாரமாக பிறக்கின்றன.

எனினும் நாங்கள் சிவிலியன்களை பாதுகாத்த வண்ணமே இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால் இன்று எமக்கு சர்வதேச மட்டத்தில் பிரச்சினை வந்துள்ளது. இவற்றுக்கு எதிர்வரும் தேர்தலின்போது நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் யுத்தத்தை செய்கின்ற நிலையிலேயே அபிவிருத்திக்கான பின்னணியை உருவாக்கினோம். சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய 500 இலட்சங்களுக்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

நாங்கள் தேர்தல் குறித்து சிந்திக்காமல் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுத்தோம். எனவே எமது நேர்மையான தீர்மானங்கள் காரணமாக மக்கள் எம்முடன் இணைந்துகொண்டனர்.

எமது இந்த முயற்சிகளின்போது பலர் காலைவாரினர். ஆனால் நாங்கள் சவால்களை வெற்றிகொண்டோம். இன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. கொழும்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்." எனத்தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கை விஜயம்




பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமைகள் விவகாரம்: ராஜபக்ஷே மீது மூன் புகார்








ஐ.நா: இலங்கையில் வல்லுனர் குழுவை அமைத்து மனித உரிமை மீறல் நடந்ததா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே அரசு சொல்வதை நம்பமுடியும் என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கண்டிப்புடன் கூறினார்.


இலங்கையில் கடந்த ஆண்டு புலிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. புலித் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் பலர் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இச்சண்டையின் போது சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை இலங்கை படையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. புலிகளுடன் சண்டை முடிந்த பின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள லட்சக்கணக்கில் வாழும் தமிழர்களின் நிலையை ஆராய்வதற்காக ஐ.நா., பொதுச் செயலர் கொழும்பு வந்தார். தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். சர்வதேச மனித உரிமை அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றும் படி அதிபர் ராஜபக்ஷேவை, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் அப்போது கேட்டு கொண்டார். இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்வதாக செய்திகள் வெளியாயின. எனவே, இது குறித்து ஒரு குழுவை அமைத்து விசாரிக்கும் படி பான்-கி-மூன் கேட்டு கொண்டார். இதற்கு, ராஜபக்ஷே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


"கடந்த மே மாதம் இலங்கையில் சண்டை முடிந்த பிறகு ராஜபக்ஷே, என்னுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் பல உறுதி மொழிகளை அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழியில் பாதிக்கும் விஷயங்கள் குறித்து இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. "முக்கிய வல்லுனர்களை கொண்ட குழுவை அமைத்து மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தால் தான் ராஜபக்ஷே சொல்வது போல மனித உரிமை மீறல் ஏதும் நடக்கவில்லை என்பதை, நாங்கள் நம்ப முடியும். "எனவே, இந்த குழுவை அமைப்பது குறித்து ராஜபக்ஷேவுடன் பேச்சு நடத்துவதற்காக ஐ.நா., அரசியல் விவகாரத்துறை செயலர் லியான் பொஸ்கோவை விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்' என, பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.

இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ். தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடனேயே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மகா சிவராத்திரி தினம்; ஒலிபெருக்கியை பாவிக்க பொலிஸாரிடம் அனுமதி பெறலாம்




மகா சிவராத்திரி தினத்தன்று இரவில் ஒலிபெருக்கியைப் பாவிப்பதற்குப் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள முடியுமென்று அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

சகல இந்து ஆலயங்களும், அமைப்புகளும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு விண்ணப்பித்து, ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே இவ்வருட மஹா சிவராத்திரி தினமான 13 ம் திகதி சனிக்கிழமையன்று சகல இந்து ஆலயங்களிலும் இரவு முழுவதும் ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளையடுத்து, மாமன்றம் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்ட போது, இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக் கும் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

எனவே, சகல இந்து ஆலயங்களும் தங்கள் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு, உரிய வகையில் விண்ணப்பம் செய்து இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந் தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

69 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்







அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 69 மேலதிக வாக்குக ளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்கு களும் கிடைத்தன.

பிரதி பாதுகாப்பு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்புகள் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நடை பெற்றது.

நேற்று சபையிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. க்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

இவர்களுடன் ஜே. வி. பி. உறுப் பினர்களும், ஐ. தே. கவினரும் எதிர் த்தே வாக்களித்தனர்.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதர வாக தொடர்ந்தும் ஆதரவளி த்து வாக்களித்து வந்த ஜே. வி. பி.யினர் முதல்முறையாக எதிர்த்து வாக்களி த்தனர். சபைக்குள் மனோ கணே சனுடன் ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிஎந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல


பிஎந்தவொரு வெளிநாட்டிற்கும் நாம் அடிமை அல்ல

மக்களை வாட்டி வதைக்க எந்தச் சட்டத்தையும் அரசு அமுல்படுத்துவதில்லை



எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலி கட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது.

பிரதி பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார். பிரதமர் தொடர்ந்தும் பேசும் போது :-

அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்தளவு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். பெரும் சுமையிலிருந்து விடுபட்டதைப் போன்று உணர்கிறார்கள். இவ்வாறான ஒரு சுமையை மீண்டும் மக்களின் தலையில் சுமத்த நாம் விரும்பவில்லை.

நாட்டையும், சமுதாயத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த புலிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளின் பிஉறுமல்கள்பீ ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சற்று மாறுதலாக புலிகளின் புள்ளிகளின் நிறம் மட்டும் இன்று மாறியிருக்கிறது.

மனித உரிமைகள் பேணப்படுவது குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்பதன் ஊடாக எமது சுதந்திரத்தில் தலையீடு செய்கிறார்கள்.

நாம் எந்தவொரு நாட்டினதும் அடிமையல்ல. எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ நாடும் அல்ல. நிலைமை இவ்வாறு இல்லாவிடினும் சிலர் இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.

நாட்டின் நன்மைக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் பொது இணக்கப்பாடு இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளவர்கள் என நீங்கள் நினைப்பீர்களா னால் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக இருப்பீர்களா? என்பதை கேட்க விரும்புகிறேன்.

இந்த நாட்டின் துரதிஷ்டம் என்னவெனில், கட்சி, நிறம், கொள்கை என்பவற்றால் நாட்டிற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு பொது உடன்பாடு காண முடிவதில்லை.

இவ்வாறான குறுகிய நோக்கங்களால் எமது நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகள் பலமடைந்து வருகின்றன. எனினும், நாம் இன்னும் பிரிந்து நிற்கி றோம். இவைதான் நாம் முகம் கொடுத்து வரும் துரதிஷ்டவசமான நடவடிக்கைகள், எனினும், எமது புலனாய்வுப் பிரிவு இன்னும் தனது கடமையை செய்து வருகிறது.

மக்களை வாட்டி வதைப்பதற்காக அரசு எந்த சட்டத்தையும் நடைமுறைப்ப டுத்தவில்லை. ஊடக அடக்குமுறை, தொழிற்சங்க உரிமைகளை அடக்குவதற்காக அவசரகாலச் சட்டத்தை நாம் பயன்படுத்தியதில்லை. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன்.

நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்திற்கும் எம்மால் அனுமதி வழங்க முடியாது. பொறுப்புள்ள ஒரு அரசு என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது.

அரச விரோத சக்திகளுக்குத் தேவையான விதத்தில் தகவல்களை வழங்கும் ஒரு சாராரும் இருக்கிறார்கள்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில பலம்வாய்ந்த நாடுகளும் அமைப்புகளும் இன்று எமது நாட்டுக்கு எதிராக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளில் புலிகளை பலமடையச் செய்வதற்காக சில குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஜேர்மனியில் இவ்வாறான சிலர் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிவீர்கள்.

வருடக் கணக்காக பின்தள்ளப்பட்டுப் போன எமது நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கையை அரசு செய்து வருகிறது.

இவ்வாறான அபிவிருத்திகளுக்கு பலன் கிடைக்கப் போவது எதிர்காலத்திலேயே. வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அவர்களது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை




கட்டளைத் தளபதியிடம் பதிவு செய்ய வேண்டுகோள்

* இயல்பு வாழ்வு ஏற்படுத்த அரசுடன் இணைந்த செயற்பாடு

* வன்னியில் தனியான பல்கலைக்கழகம்

* மீள்குடியேறுவோருக்கு 3 1/2 இலட்சம் வீட்டுத் திட்டம்


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள ரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா கக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண் டுள்ளார்.

விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.

வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல்.

அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம்

மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும்.

அதுபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.

வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிஸழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...