25 மார்ச், 2010

ஆபரேஷன் மூலம் மார்பில் வெடிகுண்டை வைத்து விமானத்தை தகர்க்க சதி; அல்கொய்தா திட்டம் அம்பலம்





ஆபரேஷன் மூலம் மார்பில் வெடி குண்டை புதைத்து வைத்து விமானங்களை தகர்க்க அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் இப்போது ஏராளமான மனித குண்டுகளை பயன்படுத்த ஏராளமான பெண்களையும் தேர்வு செய்துள்ளனர்.

அவர்களை பல்வேறு வகையான தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதில் உடலில் வெடி குண்டை புதைத்து வைத்து தகர்க்கும் திட்டமும் ஒன்று.

பெண் தீவிரவாதிகள் மார்பில் பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் மூலம் குண்டுகளை புதைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்த செய்வது அவர்களது முக்கிய திட்டமாகும்.

அல்கொய்தா இயக்கத்தில் பல டாக்டர்களும் இருக்கின்றனர். பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் கிராமங்களில் உள்ள அல்கொய்தா முகாமில் இருக்கும் இந்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் மார்பில் குண்டுகளை புதைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

மார்பு அல்லது பின்பு சதை பகுதியில் 5 அவுன்சு உள்ள வெடி மருந்தை பிளாஸ்டிக் குப்பியில் அடைத்து புதைத்து வைத்து விடலாம். இதை ஸ்கேனர் கருவிகளால் கண்டு பிடிக்க முடியாது.

விமானத்தில் செல்லும் போது இந்த குண்டை வெடிக்க செய்தால் விமானத்தில் ஓட்டை விழும் அளவுக்கு தாக்கும் சக்தி இருக்கும். ஓட்டை விழுந்தால் மேற்கொண்டு விமானம் பறக்க முடியாமல் கீழே விழுந்துவிடும் இந்த முறையில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

எனவே இதுபோன்ற தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பது குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் கலாநிதி பாலித கொஹன சந்திப்பு-

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி பாலித கொஹனவுக்கும் ஐ.நா.சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனின் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியாருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்தே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். குறித்த நிபுணர்குழுவை அமைப்பது தொடர்பிலான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பான்கீ மூன் கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியன் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை அரசுடன் இந்த நிபுணர்குழு தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பான்கீ மூன், இந்த நிபுணர் குழுவிற்கு உறுப்பினர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ் தூதுவர் யாழ் குடாநாட்டிற்கு விஜயம், நிபுணர் குழு அமைப்பது தொடர்பில் ஐ.நாவின் அழைப்பை ஜப்பான் நிராகரித்தது-


பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிக்கோ இன்று யாழ். குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அவர் இன்றுபிற்பகல் 3.30அளவில் யாழ். குடாநாட்டைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் யாழ். மாவட்ட அரசஅதிபர் கே.கணேஷ் மற்றும் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுவிக்கப்பட்ட அழைப்பினை ஜப்பான் நிராகரித்துள்ளது. ஜப்பான் நாட்டு உயரதிகாரி யசூசி அகாசிக்கு விடுக்கப்பட்ட அழைப்பையே அவர் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு மீட்பு-



அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் 94அகதிகளுடன் மற்றுமொரு படகு அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் இலங்கையர்களும் இருக்கலாமென்று தகவல்கள் தெரிவிக்கின்றதுடன், இப்படகு தற்போது கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ்தீவில் அதிக நெருக்கடி நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கெவின்ரூட் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்தப்படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் அதிகளவில் அவுஸ்திரேலியா நோக்கி வந்த சேர்ந்த படகு அகதிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே இவ்வருடத்தின் அவுஸ்திரேலியாவின் சவாலாக இருக்குமென்று வெளிவிவகார அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு வெற்றிகரமாக இல்லையென எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.


இலங்கையின் யுத்தகால நிலைமையே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி வருவதற்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை-


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் 45பேரை விடுவிக்க வேண்டுமென மலேசிய மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தல் கடிதங்களை அனுப்பிவைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசிய மனித உரிமைகள் குழுவின் தலைவர் கே.ஆறுமுகம் இதுபற்றி கருத்துரைக்கையில், குறித்த 45இலங்கை அகதிகளும் மலேசியாவின் லங்காப் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐ.நா சபையின் அகதிகள் ஆணையத்தின் அங்கீகாரத்துடனான அகதிகள் விசாக்களை கொண்டிருந்தபோதும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது அவர்களின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அகதிகள் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான அகதிகள் விசா இருக்கின்றமையே இதற்கான காரணமாகும். அவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்)






பூம்புகார் பகுதிக்கு விஜயம்- வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் நேற்று வவுனியா பூம்புகார் பகுதிக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது பூம்புகார் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்விலும் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) ஆகியோர், இந்த பூம்புகார் பகுதியைப் பொறுத்தமட்டில் 70களின் இறுதிப்பகுதியில் காந்தீயம் அமைப்பினால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதி மக்களாகிய உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்புகள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நீண்டகாலமாக அறுந்திருந்தபோதிலும் இனி நமக்கிடையிலான நல்லுறவைத் தொடர்ந்து பேணவேண்டும். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் முன்னெடுத்துவரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு நீங்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்படி பூஜை வழிபாடுகளிலும் பொதுக் கூட்டத்திலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க வேண்டுமென்றும், முன்னர் புரிந்த உதவிகள் மறக்க முடியாதவை என்றும் பொதுமக்கள் இதன்போது தெரிவித்ததுடன், தமது அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும் புளொட் வேட்பாளர்களிடம் எடுத்துக் கூறினர். இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றம் க.சிவநேசன் (பவன்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கின் 500 இளைஞர்களுக்கு அமெ. தொழில்நுட்பப் புலமைப் பரிசில்




வடக்கின் 500 இளைஞர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் தகவல் தொழில் நுட்பத்தில் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கும் இதுபோன்ற புலமைப் பரிசிலை அமெரிக்கத் தூதரகத்தின் மநஅஐஈ நிறுவனம் அண்மையில் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிப்பதற்கு ஏற்றவாறு இவர்களது தொழில்சார் திறனை விருத்தி செய்வதே இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுவதன் நோக்கமாகும்.

விவசாயம், ஆடைக் கைத்தொழில், ஊடகத்துறை மற்றும் சுற்றுலாப் பயணத்துறைகளில் ஏற்பட்டிருக்கும் வேலை வாய்ப்புக்கான தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மஙூஙீகூஙுகூஞ்க்க்ஷ டச்ஞ்க்ஙூஞ்கூஹஙீ டஹசுஞ்ஙூக்சுசூகுகூசி ளமடடன திட்டத்துடன் இணைந்து அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் இந்தத் தகவல் தொழில் நுட்பப் புலமைப் பரிசில் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகிறது.

"இலங்கையிலுள்ள மொத்த தொழில் வாய்ப்புக்களில் 39 சதவீதமானவை மேற்குறிப்பிட்ட இந்த நான்கு துறைகளிலுமே உள்ளன. அத்துடன் இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறவேண்டுமெனில் தகவல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதொன்று" என மநஅஐஈ இன் இலங்கைக்கான பணிப்பாளர் றொபேக்கா கோன் தெரிவிக்கிறார்.

இந்த இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதோடு நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் அவர்கள் பங்கெடுப்பதற்கும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் புலமைப் பரிசில் வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தனது துணை அமைப்புக்களுடன் இணைந்து ஐஙூகிச்சூகுஹசுக் என்ற தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறியினை வழங்கும் நிறுவனம் புலமைப் பரிசிலைப் பெற்ற இளைஞர்களுக்கான பயிற்சிகளை வழங்கவிருக்கிறது.

இது தவிர, கிழக்கு மாகாணத்தில் வாழும் 10,000 இளைஞர்களுக்குப் பல்வேறுபட்ட தொழில் பயிற்சிகளை வழங்கும் பிறிதொரு செயல்திட்டத்தினையும் மநஅஐஈ நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

நாட்டில் போர் முடிவடைந்த நிலையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான முனைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்தப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான மடட இன் திட்ட முகாமையார் ஹர்சி ஹிவகி குறிப்பிடுகிறார்.

மநஅஐஈ நிறுவனமானது கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளைக் உலகளாவிய ரீதியில் வழங்கி வருகிறது. 1956ம் ஆண்டு முதல் சிறிலங்கா மக்களின் நன்மைகருதி 2 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினை முதலிட்டிருக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவே கண்டியில் போட்டி : நேர்காணலில் மனோ கணேசன்




கண்டி மாவட்ட தமிழ் மக்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதிகளில் தங்களுக்கென ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த காலங்களில் அப்பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்திய காரணிகள் மற்றும் பின்னடைவுகளை வெற்றி கொண்டு எவ்வாறு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்பது தொடர்பாக ஆராய்வது மிகவும் பொருத்தமானதாகும்.

இவ்வினாக்களுக்கான விடைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனுடனான நேர்காணலின் போது வினவினோம். இதன்போது, எமது இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்தவை :

கேள்வி: இம்முறைப் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடாது ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணம் யாது?

"ஜனநாயக மக்கள் முன்னணி, வரலாற்று ரீதியாக ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு அவ்வடிப்படையிலேயே போட்டியிடுகின்றது. மேலும் இன்று நிலவும் தேர்தல் திட்டங்களை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பெரும்பான்மை கட்சி ஒன்றுடன் இணைந்து போட்டியிட வேண்டிய கட்டாயம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

தனித்துப் போட்டியிடல் என்பது சிறந்ததொரு கருத்து. எனினும் விரிவாக நோக்கினால், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவு. மறுபுறத்தில் பெரும்பான்மை கட்சியுடன் இணைந்திருந்தாலும் எவ்விதத்திலும் தமிழர்களின் தனித்தவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். இனவாதத்தை வெளிப்படுத்தும் எந்த செயற்பாடுகளுக்கும் எதிர்த்தே குரல் கொடுப்போம்."

கேள்வி: கடந்தமுறை நீங்கள் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தும் கூட, இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?

"கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் நான் எதுவித பிரசாரமும் இன்றி ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பேன். ஆனால் இம்முறை கடமை அழைத்ததன் காரணத்தினால் கண்டி மாவட்டத்துக்கு வந்துள்ளேன். கண்டி எனது தந்தை வழி பூர்வீக மாவட்டம். மேலும் வடக்கு கிழக்குக்கு வெளியே நுவரெலியா, பதுளை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் உறுப்புரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கண்டியில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின் எமது உறுப்புரிமையை உறுதி செய்ய முடியாதுள்ளது. இங்கு தெரிவு செய்யப்படும் 12 உறுப்பினர்களில் 9 பேர் சிங்களவர், மூவர் முஸ்லிம்கள். எந்தத் தமிழரும் இல்லை. இழக்கப்பட்ட, காணாமற் போயுள்ள தமிழ் உறுப்புரிமையை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே கண்டி வந்துள்ளேன்."

கேள்வி: நீண்ட காலமாக கண்டி மாவட்டத் தமிழ் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தமக்குத் தெரிவு செய்ய முடியாமைக்கான காரணம் யாது?

"மூன்று காரணிகள் உள்ளன. ஒன்று, தமிழ் மக்களில் குறிப்பிட்ட சில வீதத்தினர் தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமை. இரண்டு, நாவலப்பிட்டி, புசல்லாவை, பன்வில போன்ற பிரதேச மக்கள் தேர்தல் தினத்தன்று பயமுறுத்தி தாக்கப்படுகின்றமை;. தமிழ் வேட்பாளர்கள் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்யவிடாது சில பேரினவாத சக்திகளால் தடுக்கப்படுகின்றமை.

மூன்றாவது, கடந்த காலங்களில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளின் போது தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிலைக்கு அப்பால் பெரும்பான்மை உறுப்பினருக்காகவே பிரசாரம் செய்தமை.

இவற்றினாலேயே எம்மால் வெற்றி பெற முடியாமல் போனது."

கேள்வி : தற்சமயம் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

"மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியான உடனேயே மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தீர்மானித்து விட்டனர். தோட்ட, கிராம, நகர்ப்புறங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் எனது மக்கள் என்னைப் பலமாக ஆதரிக்கின்றனர். இந்நிலையானது, இம்முறை எப்படியாவது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே தீருவோம் என்ற மக்களின் எழுச்சியை வெளிப்படுத்துகின்றது."

கேள்வி : குறிப்பிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு காட்டியிருந்தனரே... அது தொடர்பாக...?

"எனக்கெதிராக ஜாதிக ஹெல உறுமய என்ற இனவாதக்கட்சி கண்டி மத்திய சந்தையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அக்கட்சியின் தலைவரிடம் நான் தொலைபேசியூடாக, "தயவு செய்து இவ்வார்ப்பாட்டங்களைக் கண்டி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளுங்கள். அது எனக்கு இலவச விளம்பரத்தைப் பெற்றுத்தரும்" எனக் கேட்டுக் கொண்டேன். அவர்களது போராட்டங்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒழியும் கோழைத் தமிழன் அல்லன் இந்த மனோ கணேசன் என்பதை அவர்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்."

கேள்வி : அவசர காலச் சட்ட நீடிப்புக்கான வாக்கெடுப்புத் தினத்தன்று நீங்கள் நாடாளுமன்றத்துக்குள் தனித்துப் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தீர்கள்... அதன் உண்மை நிலையை விளக்க முடியுமா?

"அமைச்சர் ஒருவரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே சபை நடுவே பதாதை ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தினேன். அத்துடன் எனது நாடாளுமன்ற உரையின் போதும் அது தொடர்பாக குறிப்பிட்டேன்.

அதாவது சில தினங்களுக்கு முன் எனது பிரசார வாகனத்தைச் சேதப்படுத்தியதுடன் எனது ஆதரவாளர்கள் மூவரையும் தாக்கியுள்ளனர். அச்செயற்பாட்டை சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இது எனது வெற்றியை மேலும் பலப்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு பணிந்து செல்லாது அதற்கெதிராக, ஜனநாயக ரீதியில் போராட நாம் தீர்மானித்துள்ளோம்."

கேள்வி : ஆளும் தரப்பில், மக்களைக் கவரும் விதத்தில் செயற்படும் வேட்பாளர்கள் ஒரு பக்கம், வாக்கு சிதறடிப்பதற்கான உத்திமுறைகள் மறுபக்கம் - இவற்றுக்கு மத்தியில் தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?

"இவ்வாறு சிதறடிக்கும் வகையில் செயற்படுபவர்களை மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர். பெரும்பான்மை மக்களின் மாயாஜால வார்த்தைகளில் மதிமயங்கி வாக்களிக்கும் காலம் மலையேறி விட்டது. இன்று தமிழ் மக்கள் தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் மிகத்தெளிவாகவே உள்ளனர்.

அரசாங்கம், எதிர்க்கட்சி என்று கூறமுடியாது. நாம் விழிப்பாக இல்லாவிட்டால் இரண்டுமே எதிர்க்கட்சிகள் தான். எமது நாட்டின் தமிழ் மக்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆக முடியாது.

இந்தியா போன்று திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நாடுகளில் தான் அது சாத்தியம். இனவாத தன்மையுடைய எமது நாட்டில் அது சாத்தியமில்லை. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஜனநாயக மக்கள் முன்னணியின் நோக்கம்."

கேள்வி : ஆளும் தரப்பினர் தேர்தல் வெற்றி என்ற நிலைக்கு அப்பால் சென்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான தேர்தல் என்றே பிரசாரம் செய்கின்றனர். அது தொடர்பாக உங்களது கருத்து யாது?

"பெரும்பான்மைப் பெறல் என்பது ஒரு கனவு. இன்றைய தேர்தல் முறையின் பிரகாரம் தலைகீழாக நின்றாலும் அது நடக்காது. பெரும்பான்மையைப் பெற்று அதன் மூலமாக அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தமிழ், முஸ்லிம் மக்களை இல்லாது ஒழித்து எமது நாட்டை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றிவிடலாம் என அரசு கனவு காண்கின்றது.

தமிழ், முஸ்லிம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களும் அதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டுமென்றால் தமிழ், முஸ்லிம் மக்ககளின் ஆதரவு தேவை. அதுவன்றி எதுவும் செய்ய முடியாது. இந்நிலையில் தமிழ் மக்கள் மிகவும் ஆழமாகவும் மிகத்தெளிவாகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். பேரினவாதிகளுக்குத் துணை போகக்கூடிய அநியாயக்காரர்களையும் கொள்ளையர்களையும் தமிழ் மக்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து விடக்கூடாது."

கேள்வி : ஐக்கியத் தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இம்முறை ஆட்சி அமைப்பதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றனவா?

"இந்நாட்டில் ஐ.தே.க. மற்றும் சு.க தலைமையிலான கூட்டணிகள் மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. இவ்விரு கட்சிகள் மட்டுமே ஆட்சியமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன. இம்முறைத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை உறுதியாகியுள்ளது."

கேள்வி : ஐக்கியத் தேசியக் கட்சியினர் எதிர்காலத்தில் எவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மனித்துள்ளனர்? "அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ற வகையில் ஐக்கியத் தேசியக் கட்சி தெளிவாகவுள்ளது. பொருளாதார அபிவிருத்தியில் ஐ.தே.கட்சி பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. ஐ.தே.கட்சியின் பொருளாதார திட்டமிடல்களை மையமாகக் கொண்டே இன்றைய அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது."

கேள்வி : கண்டி மாவட்டத்தில், தேசிய ரீதியாக வாழும் தமிழ் மக்களுக்காக என்ன செய்தியை வெளியிட விரும்புகின்றீர்கள்?

"உங்களை நம்பி கண்டிக்கு வந்துள்ளேன். மனோ கணேசனின் வெற்றி ஒட்டு மொத்த கண்டி மாவட்ட தமிழ் மக்களின் வெற்றியாகும். நான் போட்டியிடும் முன்னர், கொழும்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. மாறாக ஏதோ ஒரு காரணத்தினால் உறுப்பினர் ஒருவரின் வெற்றிடமாகும் பட்சத்தில் மட்டுமே தமிழர் நியமிக்கப்பட்டனர். மக்களின் ஆணையைப் பெற்று நாங்கள் அந்நிலையை மாற்றியமைத்தோம்.

கொழும்பின் முன்னைய நிலையே தற்சமயம் கண்டியில் காணப்படுகின்றது. எனவே கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஒருமுகமாக இணைந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது இனவாதமல்ல, இன உரிமை. இவ்விதம் வாக்களித்து என்னை வெற்றியடையச் செய்வது தனிப்பட்ட மனோ கணேசனின் வெற்றியல்ல. தமிழ் மக்களின் மகத்தான வெற்றியாகும்.

மேலும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டு நான்கு மாகாணங்களிலும் போட்டியிடும் கட்சி என்ற வகையில், தமிழ் மக்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் மிகத் தெளிவாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்."
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா,​​ பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையிடாது:​ சிறப்புப் பிரதிநிதி

:​ காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியா,​​ பாகிஸ்தான் இடையே இடைத்தரகராக அமெரிக்கா செயல்படாது என்று பாகிஸ்தான்,​​ ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் ஹால்புரூக் தெரிவித்தார்.

வாஷிங்டனில் இதுகுறித்து நிருபர்களுக்கு ஹோல்புரூக் அளித்த பேட்டி:

இந்தியாவும், ​​ பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.​ ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையிடாது.

இரு நாடுகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் தலையிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும்.

காஷ்மீர் உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் இரு நாடுகளும் பேசித் தீர்க்கவேண்டும்.​ இரு நாடுகளுக்கு இடையே கேபினட் அமைச்சர்கள் நிலையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்றார் அவர்.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை துவங்க ​ உதவவேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.​ இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் சல்மான் பஷீர் அமெரிக்கா சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இந்தியா,​​ பாகிஸ்தான் பேச்சுவார்த்தை விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று அமெரிக்கா இப்போது திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பாகிஸ்தான் தூதரகத்தில் விழா:​​ இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய விழா நடைபெற்றது.​ விழாவில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்துகொண்டு பேசியதாவது:​ அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது.​ இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.

பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.​ எங்கள் தியாகங்களை உலக நாடுகளும் புரிந்துகொண்டுள்ளன.​ மற்ற நாடுகளுடன் இழந்த நல்லுறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ்,​​ பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் அன்னி பேட்டர்சன்,​​ பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது முக்தர்,​​ அமெரிக்க பொது விவகாரத்துறை துணை அமைச்சர் பி.ஜே.​ கிராவ்லி,​​ வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

எரிசக்தி உள்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு உதவி: அமெரிக்கா அறிவிப்பு


எரிசக்தி உள்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா -​ பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சு வாஷிங்டனில் புதன்கிழமை தொடங்கியது.​ இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தலைமையிலான குழுவினர்,​​ ஹிலாரி தலைமையிலான அமெரிக்க குழுவினருடம் பேச்சு நடத்தினர்.

அப்போது இந்தியாவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் போல,​​ பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.​ இந்தியா -​ பாகிஸ்தான் அமைதி பேச்சைத் தொடங்க உதவ வேண்டும்.​ ​

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க உதவ வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பாகிஸ்தான் தரப்பில் முக்கியமாக கூறப்பட்டன.

"அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி துறை உள்பட அனைத்து விஷயங்களிலும் ஒத்துழைப்பு கிடைக்கும்.​ அதன் மூலம் பாகிஸ்தானில் தொழில் துறை வளர்ச்சியடையும்,​​ பொருளாதார முன்னேறம் ஏற்படும்' என்று ஷா முகமது குரேஷி நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து ஹிலாரி கிளிண்டன் கூறுகையில்,​​ "எரிசக்தி உள்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவும்.​

இந்தியாவுடன் பலமுறை பேச்சு நடத்திய பின்புதான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.​ எனவே இந்த விஷயத்தில் அவசரம் காட்ட மாட்டோம்.​ ​

பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.​ இந்தியா-​ பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

திசைநாயகத்துக்கு பிரிட்டிஷ் விருது





விருது பெறும் திசைநாயகம்
சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது
இலங்கையில் ஜாமீனில் இருக்கும் திசைநாயகத்திற்கு பிரிட்டிஷ் விருது

பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இந்த ஆண்டுக்குகான சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது இலங்கையின் தமிழ் ஊடகவியலாளரான ஜே எஸ் திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

திசைநாயகம் நடத்திவந்த பத்திரிகையில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கட்டுரைகளை எழுதி வந்தார் எனக் கூறி 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வன்முறையை தான் ஆதரித்ததாக கூறப்படுவதை திசைநாயகம் மறுத்துள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் தைரியமாகவும் தார்மீக முறையிலும் தனது பத்திரிகையாளர் பணியைச் செய்துவந்ததாக கூறி பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு திசைநாயகத்துக்கு விருது வழங்கியது.

இலங்கையில் ஊடகப்பணி ஆபத்தானது


பன்னாட்டு ஊடகவியலாளர்கள்
"பிரிட்டிஷ் ஊடகத்துறையை ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கையில் ஊடகத்துறையினர் மிகவும் கஷ்டமான சூழலில் பணியாற்றுகிறார்கள்" என்று
பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆசிரியர்கள் குழுவின் இயக்குநரான பாப் டாட்ச்வெல் கூறுகிறார்.

இலங்கை போன்ற நாடுகளில் "தங்களது பணிக்காக செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் சில வேளைகளில் அதைவிடவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள்" என்றும் கூறும் பாப் டாட்ச்வெல், அதை மனதில் வைத்துதான் உலகம் முழுதும் உள்ள பத்திரிகையாளர்களிடையே இந்த விருதுக்கு பொருத்தமானவர் யார் என்பதை தேர்தெடுக்கிறோம் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.


"பிரிட்டிஷ் ஊடகத்துறையை ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கையில் ஊடகத்துறையினர் மிகவும் கஷ்டமான சூழலில் பணியாற்றுகிறார்கள்



இலங்கையிலும் உலகின் வேறு பல பகுதிகளிலும் இருக்கும் ஊடகவியலாளர்கள் குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாகவும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அப்படியான ஒரு நிலையில் இருக்கும் ஒரு பத்திரிகையாளருக்கு விருது வழங்குவது மூலம், அந்தந்த நாடுகள் மீது, சிறைபடுத்தப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்களை விடுவிக்க ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த சங்கம் கூறுகிறது.

இலங்கை ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு ஒரு ஆபத்தான இடம் என்று ஊடக உரிமைகளுக்கான அமைப்புகள் கூறுகின்றன.

அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அவை இலங்கை அரசின் மீது குற்றஞ்சாட்டுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 25 பேருக்கு மேல் தாக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது அல்லது தாக்கப்படுவது போன்றவற்றில் தமக்கு ஏதும் பங்கில்லை என இலங்கை அரசு கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் உத்தரவை மீறி ஓடிய ஆட்டோ மீது சூடு; ஒருவர் பலி; 2 காயம்







அம்பாறை மத்திய முகாம் வீரகொட பாலத்தடியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் நேற்று முன்தினம் (23) இரவு 08.45 மணியளவில் பாதையால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்திய போது அம்முச்சக்கர வண்டி நிறுத்தா மல் பிரயாணத்தை தொடர்ந்ததால் பொலிஸார் அதன் மீது துப்பாக் கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ள துடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மரணித்தவர் மகேஸ் சம்பத் (23 வயதுடையவர்), வீர கொட ஊர்காவற்படை வீரராவார். மற்றையவர் துவான் சம்பத் குமார (24 வயதுடை யவர்) பொரளையில் கடமையாற் றும் இராணுவ வீரராவார். மூன்றாவது நபர் றொசான் (19 வயது) இவர் சீ. வி. எப் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

'மீளக்குடியமர்த்தும் பணிகளில் எவ்வித தாமதமும் கிடையாது'





கிளிநொச்சியில் மேலும் 1500 குடும்பங்கள் 29ம் திகதி குடியமர்வு; பூநகரியில் பணிகள் யாவும் பூர்த்தி


இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளில் எந்த விதமான தாமதமும் கிடையாதென் றும் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர் வரும் 29 ஆம் திகதிக்குள் மேலும் 1500 குடும்பங்களை மீளக்குடியமர் த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கத் தெரிவித்த அரச அதிபர், தேர்த லுக்குப் பின்னர் மீண்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென் றும் கூறினார்.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத் தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 11,817 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப்பணிகள் நிறைவு செய் யப்பட்டுள்ளன.

எக்காரணத்திற்கா கவும் மீள்குடியேற்றம் தாமதமாகவி ல்லை என்று தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன், கண்ணி வெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு தொடர்ச்சியாக மக்களை மீளக்குடி யமர்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்து மீள்குடியேற காத் திருக்கும் மக்கள் எதிர்வரும் ஏப்ரல் எட்டாந் திகதி நடைபெறவுள்ள பாரா ளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்க ளிக்க விண்ணப்பித்துள்ளார்கள். அத னால், அவர்கள் தங்கியிருக்கும் நலன் புரி நிலையங்களில் வாக்களிப்பத ற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. அவ்வாறானவர் களை சொந்த இடங்களுக்குக் கொண்டு சென்றால், வாக்களிப்பதில் சிக் கலை எதிர்கொள்ளலாம்.

ஆகவே, எதிர்வரும் 29ஆம் திகதியுடன் மீள்குடியேற்றத்தை இடைநிறுத்த எண்ணியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படுமென்றும் அரச அதிபர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குறானின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் (தினகரனில் அல்ல) திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்ப ட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்து ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், புஅல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்பூ என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உல மாக்களும், பொதுமக்களும் எம் கவன த்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.

முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம் பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறை யில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு ள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார் களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க அரசு தீர்மானம்




23,700 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் திட்டம்

சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகக் குறைந்த கொடுப்பனவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப் பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு வழி செய்யப்படும் என்று தகவற்றுறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23,700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். மனிதாபிமான செயற் பாடுகளின் முடிவில் சேமிக்கப்பட்ட நிதியின் மூலமே இவ்வாறான நலன்புரி நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு கிடைத்த தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். அத்துடன் சமுர்த்தி அதிகார சபை அவர்களுக்கு இலகு கடன், சுய வேலை வாய்ப்பு மற்றும் சிறு முதலீட்டு திட்டங்களுக்கு உதவி வருகிறது.

சமுர்த்தி நிவாரண உதவித் தொகையை அதிகரித்தல், சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துதல், மற்றும் சிறிய முதலீட்டு திட்டங்களுக்கு உதவுதல் ஆகியவை மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரப்பிரசாதங்களாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊ.சே. நிதிய உறுப்பினர் நிலுவைகளுக்கு 13.75 வீதமாக வட்டி அதிகரிப்பு




*30% வீத வீடமைப்பு உதவித் தொகை

*இணையம் மூலம் தொடர்புகொள்ள திட்டம்

*தேசிய அடையாள அட்டை இலக்கங்களையே பயன்படுத்த ஆலோசனை

*சுயதொழிலில் ஈடுபடுவோரையும் சேர்க்க தீர்மானம்

ஊழியர் சேமஇலாப நிதியம் 2009இல் அதன் உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.75 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக வாழ்க்கைத் தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன நேற்று தெரிவித்தார்.

இது, அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.55 சதவீத அதிகரிப்பாகு மெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் ஊழியர் சேமஇலாப நிதிய நிலுவைகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வட்டி வீதத்தினை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் அமைச்ச ருடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சின் செயலாளர், ஊ. சே. நி. ஆணையாளர், ஊ. சே. நி. சுப்ரின்டன்ட், மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த 50 வருட காலமாக இயங்கி வரும் ஊழியர் சேமஇலாப நிதியத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் சிறப்பாக இதன் நிர்வாகம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. தமது சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் பிரஜைகள் பெறுமதியடைய வேண்டும் என்ற நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டிலுள்ள நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அன்று 12 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் சேமஇலாப நிதியத்தில் தற்போது 769 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நிதியத்தில் 2.3 மில்லியன் உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பது அதன் மீதான நம்பிக்கையினை அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கை யில் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஊழியர் சேமஇலாப நிதியத்தில் வைப்பி லிடப்படும் நிதியானது பரந்தளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகரித்திருப் பதாலும், நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவீனம் குறைந்திருப்பதாலும் முன் னொருபோதும் இல்லாத வகையில் அதி உயர் வட்டி வீதத்தை வழங்கக்கூடிய தாகவிருக்குமென்றும் தெரிவித்தார்.

மேலும் 2009 ஆம் ஆண்டின் நிலுவைக் கான வட்டி வீதமான 13.75 சதவீதத்தை அவ்வருடத்துக்கான 3.4 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது, அதன் உறுப்பினர்கள் பெறும் வட்டியின் அவ் வருடத்துக்கான உண்மைப் பெறுமதி 10.01 சதவீதமாகுமெனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னெடுக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

ஊழியர் சேமஇலாப நிதியத்திலுள்ள தனது கணக்கிருப்பை ஒருவர் கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் சேவை யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஊழியர் சேமஇலாப நிதியத்தின் காரியாலயத்துக்கு வரும் ஒருவருக்கு கூடிய விரைவில் அவருக்கு தேவையான வசதிகள் மற்றும் அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகிறது. ஒரு வரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கை விரல் அடையாளம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது.

இதேவேளை, எதிர்காலத்தில் ஒருவர் தனது வீட்டிலிருந்த வண்ணம் நேரடி இணையத்தள சேவையின் மூலம் தனது தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

சுய தொழிலில் ஈடுபடுவோரை ஊக்கு விக்கும் வகையில் விசேட சேமஇலாப நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஓய்வுபெற்றவர்கள் ஊழியர் சேமஇலாப நிதியப் பணத்தை கோல்டன் கீ போன்ற ஏமாற்றும் நோக்கமுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதனை தவிர்ப்பதற்காக அதே நிதியத்தில் மீள் வைப்பிடும் முறைமையை ஆரம்பிக்க தீர்மானித் துள்ளோம். இதற்கு 10 சதவீத வட்டி வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, எதிர்காலத்தில் குளறுபடி களையும் கால தாமதத்தையும் தவிர்ப்பதற்காக ஊ. சே. நி. இலக்கமாக அவரவரின் தேசிய அடையாள அட்டை இலக்கமே நடை முறைக்கு கொண்டுவரவிருப்பதனையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் வெளிநாடுகளில் தற்போது 20 இலட்சம் இலங்கையர்கள் வசித்து வருவதனால், அவர்களையும் ஊ. சே. நிதியத்தில் பணத்தை வைப்பிலிடச் செய்யும் வகையில் இலங்கை மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதன் ஆளுநர் கப்ரால் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...