6 பிப்ரவரி, 2010

பழைய கதை இன்றும் தொடர்கிறது



ஒன்றுபட்ட போராட்டத்துக்கென வெளிக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவுபட்டு நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட முடிவின் விளைவே இது.

பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவுக்குக் கூட்டமைப்பைத் தள்ளியவர்கள் இரண்டு முன்னாள் பிரமுகர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. இவர்களில் ஒருவர் பல்கலைக் கழகத்துடனும் மற்றவர் நீதித் துறையுடனும் சம்பந்தப்பட்டவர்கள். வெற்றிக் காற்று மற்றப் பக்கம் வீசுகின்றது என்று கூட்டமைப்புத் தலைமையை இவர்கள் நம்ப வைத்திருக்கின்றார்கள்.

இந்த முடிவினால் கூட்டமைப்பு மூன்றாகப் பிளவுபட்டுவிட்டது. இந்தப் பிளவு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனக் கூற முடியாது.

முன்னாள் பிரமுகர்கள் பிழையாக வழிநடத்தும் அளவுக்குக் கூட்டமைப்புத் தலைமை தடுமாற்றத்தில் இருந்ததா எனச் சிலர் கேட்கலாம். ஏமாற்றம் தடுமாற்றத்துக்கு வழிவகுப்பது வழமை. இவர்கள் புலிகளை முழுக்க முழுக்க நம்பினார்கள். புலிகள் தனிநாடு பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் சங்கமம் ஆகினார்கள். அதில் பலத்த ஏமாற்றம்.

அந்த ஏமாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தில் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தங்கள் கொள்கை என்ன என்பதை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை. கொள்கைத் திட்டம் தயாராகின்றது என்பதையே இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு இருண்ட காலம் எனக் கூறலாம். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கையில் கூடுதலானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இதனால் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அவர்கள் உரிமை கோருகின்றார்கள். முன்பெல்லாம் தமிழ் மக்களுக்குத் தலைமை வகித்தவர்கள் சரியாகவோ பிழையாகவோ இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒரு கொள்கையை முன்வைத்தார்கள். இப்போது தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கூட்டமைப்பிடம் கொள்கை இல்லை. கொள்கை இல்லாத தலைமையின் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லலாம் தானே.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸரூடன் கூட்டுச் சேர்வது பற்றி இப்போது சம்பந்தன் பேசுகின்றார். முஸ்லிம் காங்கிரஸிடமும் இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை இல்லை.

இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்வதால் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இந்தக் கூட்டினால் ஆகப் போவது எதுவுமில்லை. கொள்கை இல்லாத கூட்டினால் எதைச் சாதிக்க முடியும்?

கூட்டமைப்புத் தலைவர்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற ஆசனங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானவை. இனப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாத்திருக்கின்றார்கள். பிரச்சினையின் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை.

இப்போதும் அதே கதை தான்.



தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது தலைமைப்
பண்பாகாது



தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை முக்கிய இடம் வகிக்கின்றது. காலங்காலமாகத் தமிழ் மக்கள் கூட்டாக முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது தேசிய இனப் பிரச்சினையே. தமிழ் மக்களின் அரசியல் சிந்தனை இனப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாக இருப்பதால், இப்பிரச்சினை பற்றிப் பேசும் அரசியல் தலைவர்களே தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர். இவ்வாறு நிலைத்து நிற்பவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்கு இனப் பிரச்சினை அத்தியாவசியமானது எனக் கருதுவதனாலோ என்னவோ, பிரச்சினையின் தீர்வுக்காக ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. இத் தலைவர்களின் தவறுகளே பிரச்சினை தீர்க்கப்படாதிருப்பதற்குப் பிரதான காரணம் எனக் கூறினால் அது தவறாகாது.

இனப் பிரச்சினையின் தீர்வை முன்னெடுப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ்த் தலைவர்கள் பயன்படுத்தத் தவறியமை பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளில் விலாவாரியாகச் சொல்லப்பட்டிருப்பதால் மீண்டும் அவற்றை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திக் கூற வேண்டிய அவசியமில்லை. ஒரு விடயத்தை வலியுறுத்திச் சொல்லலாம். தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தமிழ்த் தலைவர்கள் நிரந்தரமான ஒரு கொள்கையைக் கொண்டிருக்காததையும் தீர்வுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை ஏதேனுமொரு காரணம் கூறி நிராகரித்ததையும் போல வேறெந்த நாட்டிலும் எந்தவொரு பிரச்சினைக்கும் நடந்திருக்காது.

தமிழ்த் தலைமை முதலில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் செயற்படவில்லை. சமஷ்டித் தீர்வைப் பெறுவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமானது. கட்சிக்குத் தமிழரசுக் கட்சி என்று பெயர் வைத்தார்கள். இது சமஷ்டிக் கோரிக்கை பற்றிய சந்தேகத்தை ஆரம்பத்திலேயே சிங்கள மக்களிடம் தோற்றுவித்தது. பின்னர் சத்தியாக்கிரகத்தின் போது தனியான தபால் சேவை ஆரம்பித்து முத்திரையும் வெளியிட்டார்கள். அதுபோதாதென்று காணிக் கச்சேரியும் நடத்தினார்கள். சமஷ்டிக் கோரிக்கைக்குப் பின்னால் தனிநாட்டுச் சிந்தனை இருக்கின்றதென்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே தோன்றிய சந்தேகம் இச் செயல்களால் மேலும் வலுவடைந்தது.

சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தவர்களே அதை வென்றெடுப்பதற்குச் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும் வகையில் செயற்பட்டதைப் பார்க்கும் போது, கருத்தீடுபாடு இல்லாமல் ஏனோதானோவென்று அக் கோரிக்கையை முன்வைத்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காட்சி.

அதன் பின் தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றியே வந்திருக்கின்றார்கள். தனிநாடு, மாவட்ட சபை, பிராந்திய சுயாட்சி, மீண்டும் தனிநாடு என்று காலத்துக்குக் காலம் அவர்களின் நிலைப்பாடு மாறியது.

புலிகளுடன் சேர்ந்து தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இப்போது அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே அலகாக இணைக்கப்பட வேண்டும் என்பதும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்பதும் அரசியல் தீர்வுக்கு இவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள். இத்தலைவர்கள் அரசியல் தீர்வுக்குத் தயாராக இல்லை என்பதையே இந்த நிபந்தனைகள் புலப்படுத்துகின்றன.

ஒவ்வொரு கட்டத்திலும் முன்வைக்கப்பட்ட தீர்வு ஆலோசனைகளைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தார்கள். அந்த ஆலோசனைகளிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்தியே அவற்றை நிராகரித்தார்கள். அன்றைய யதார்த்தத்தின் படி எது சாத்தியமில்லையோ அதைப் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தி ஆலோசனைகளை நிராகரித்த நடைமுறை மேலோட்டமான பார்வைக்கு இனப் பற்றின் வெளிப்பாடாகத் தோன்றினாலும் உண்மையில் தீர்வைத் தவிர்ப்பதற்கான தந்திரோபாயமே. படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்கு முயற்சிப்பது என்ற அடிப்படையில் அவ்வாலோசனைகளை ஏற்றிருந்தால் தமிழ் மக்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட பல பாதிப்புகளைத் தவிர்க்க முடிந்திருக்கும். கூடுதலான அதிகாரங்களைப் பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலையும் உருவாகியிருக்கும். பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளையும் உதாரணமாகக் கூறலாம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வும் உடனடியாக நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த நிலை உருவாகியதற்குத் தமிழ்த் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். இவர்களின் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுகள் தமிழர் தரப்புக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையைத் தோற்றுவித்தன.

வடக்கு, கிழக்கின் இணைப்பை வலியுறுத்தும் தலைவர்கள் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதில் தங்களுக்குள்ள பொறுப்பை மறைக்கப் பார்க்கின்றனர். இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு சட்டரீதியாகத் தற்காலிகமானது. வருடா வருடம் விசேட பிரகடனத்தின் மூலம் நீடிக்கப்பட வேண்டியது. இந்த இணைப்பு மாகாண சபையுடன் தொடர்புபட்டது. மாகாண சபை இல்லாத நிலையில் இணைப்புக்கு எதிரான சிந்தனை வளர்வதற்கு இடமுண்டு என்பதைத் தமிழ்த் தலைவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த வகையில், இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டதில் தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பும் உண்டு.

பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்க முடியாது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி யதார்த்தபூர்வமாகப் பார்ப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. ஆதரித்தார்கள். இத் தலைவர்கள் மீண்டும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு இந்த ஒப்பந்தமே வழிவகுத்தது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமும் அதன் கீழான மாகாண சபை முறையும் இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கங்கள்.

இந்திய - இலங்கை ஒப்பந்தமோ பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமோ இலங்கையின் இனப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வல்ல. எனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையிலேயே தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தத்தை வரவேற்றார்கள். மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று இதே காரணத்துக்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்த் தலைவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதற்கும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்கும் எது காரணமாக அமைந்ததோ அதே காரணத்துக்காகப் பதின்மூன்றாவது திருத்தத்தை இப்போது ஏற்கலாம். அதாவது இனப்பிரச்சினைக்குப் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான தீர்வல்லவெனினும் அரசியல் தீர்வுக்குக் காத்திரமான ஆரம்பம் என்ற வகையில் ஏற்கலாம்.

பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கும் தமிழ்த் தலைவர்கள் அதனிலும் மேலானதாகத் தாங்கள் முன்வைக்கும் தீர்வையும் அதை வென்றெடுப்பதற்கான வழிவகைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இப்போது தீர்வுத் திட்டம் எதுவும் இல்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்காக அரசாங்கத்துடனோ தென்னிலங்கையிலுள்ள முற்போக்கு சக்திகளுடனோ இணைந்து செயற்படும் நோக்கமும் இல்லை. இந்த நிலையில், பதின்மூன்றாவது திருத்தம் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உதவும் நிலைப்பாடல்ல.

தென்னிலங்கையின் சமகால யதார்த்தம் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குச் சாதகமானதாக இல்லை என்பதை மேலே கூறினோம். எனவே, பதின் மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது எவ்வித தீர்வுமற்ற இன்றைய நிலை தொடர்வதற்கே வழிவகுக்கும். தீர்வை நோக்கிச் செல்லாமல் தீர்வற்ற சூன்ய நிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது சிறந்த தலைமைப் பண்பாகாது.

உடனடித் தீர்வாகப் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதால் தமிழ் மக்கள் பல விதத்தில் நன்மை அடைவர். மக்களின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்கள் மாகாண சபைக்குக் கிடைக்கும். இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இட ங்களில் குடியேற முடியும். கொழு ம்பை எதிர்பார்த்திராமல் மாகாண மட்டத்திலேயே பல கருமங்களை நிறைவேற்றலாம்.

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்டு முழுமையான தீர்வை நோக்கி முன்னேறிச் செல்லலாம். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்திருக்கின்றார். அதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் அக்கறையுடன் தமிழ்த் தலைவர்கள் செயற்படுவார்களேயானால் முழுமையான தீர்வை அடைவது சிரமமானதாக இருக்காது.





தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி





பல்லின நாடொன்றில் சிறுபான்மையினரின் இருப்பை உறுதிப்படுத்தும் காரணிகளுள் அபிவிருத்தியும் பிர தான இடம் வகிக்கின்றது. சிறுபான்மையினரின் மொழி க்கான அங்கீகாரம், வாழ்புல உத்தரவாதம் போன்ற வேறு காரணிகளும் உள்ளன. சிறுபான்மையினர் சார்பில் இனத் துவ அரசியலை மேற்கொண்டிருப்பவர்கள் என்றாலென்ன, இன ஐக்கியத்தில் விசுவாசமான பற்றுறுதியுடன் தேசிய அர சியலில் ஈடுபடுபவர்களாக இருந்தாலென்ன இவ்விடயங்க ளில் அக்கறை செலுத்தாதிருக்க முடியாது. விசேடமாக சிறு பான்மையினக் கட்சிகளுக்கு இதில் விசேட பொறுப்பு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தனித்துவமான பிரதிநிதி என உரிமை கோருகின்றது. ஆனால் மேலே குறி ப்பிட்ட விடயங்களில் செயலீடுபாட்டுடன் இதுவரை எது வும் செய்ததாக இல்லை. இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இது வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை. தீர்வுக்கான சந் தர்ப்பங்களைச் சாட்டுகள் கூறித் தட்டிக் கழித்திருக்கின்றார் கள் என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின் றோம். தமிழ் மக்களின் வாழ்புல உத்தரவாதம் இனப் பிரச்சி னையின் தீர்விலேயே தங்கியுள்ளது.

தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் தமிழ்த் தலைவர் கள் அக்கறை செலுத்துவதில்லை. நாடு சுதந்திரமடைந்த கால த்திலிருந்து தமிழ்ப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத் திய தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக் கறை செலுத்தவில்லை. ஜீ. ஜி. பொன்னம்பலம் கைத் தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் காங்கே சன் சிமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந் தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கிழக்கில் வாழைச் சேனை காகித ஆலை என்பன அமைந்ததன் பின் தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. இத் தொழிற்சாலைகள் அவ்வப் பிரதேசத்தில் ஏராளம் குடும்பங் களின் வாழ்வாதாரமாக இருந்ததைப் பார்க்கையில் அபிவி ருத்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

அபிவிருத்தியும் சமாதானமும் என்ற தொனிப் பொருளுடன் இன்றைய அரசாங்கம் செயற்படுகின்றது. கிழக்கு மாகாணத் தில் கணிசமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அம் மாகாணத்தில் வளர்முக மாற்றத்தை உணர முடிகின்றது. அரசாங்கம் இப்போது வட மாகாணத்தில் அபி விருத்தியை ஆரம்பித்திருக்கின்றது. புலிகளின் தோல்விக் குப் பின் வடக்கில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குத் தடை எதுவும் இல்லை. வட மாகாணத்தில் தங்களுக்குக் கூடுதலான ஆதரவு இருப்பதாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவ டிக்கைகளுக்குக் கைகொடுக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை மேற்கொண்ட முடிவுகளும் நடத்திய போராட்டங்களும் இனப் பிரச்சினை வளர்வதற்கு மாத்திரமன்றித் தமிழ்ப் பிர தேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைவு காண்பதற்கும் கார ணமாக இருந்துள்ளன. இந்த நிலை இனியும் தொடரக்கூ டாது. தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழ்த் தலை வர்கள் அதை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட வேண் டும். தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியும் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததென்பதை இத் தலைவர்கள் விளங்கிக்கொள் வார்கள் என நம்புகின்றோம்.





இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

பிரி. உதயா பிரதம களப்பொறியியலாளர்



பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்க ப்பட்டுள்ளார்.

நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள் ளார்.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இரா ணுவத்தின் பிரதம களப் பொறியி யலாளராக (இகுகூக்கி ஊகூக்ஙீக்ஷ உஙூகீகூஙூக்க்சு) நியமிக்கப்பட்டுள்ளதுடன் திங்கட் கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசக ராக நியமிக்கப்பட்டிருந்தார். லண் டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிட த்திற்கே பிரிகேடியர் உதய நாணய க்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமி க்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார்.

தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு;
இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து



ரஷ்ய நட்புறவு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கெளரவம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். மொஸ்கோ வினுகோஆ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு பெரு வரவேற்பளி க்கப்பட்டது. ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாடொ ன்றின் தலைவர் ரஷ்யாவுக்குச் செல்வது முதற் தடவை என்பதால், ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. ரஷ்ய குடியரசுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மொஸ்கோவிலுள்ள வினுகோஆ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூச்செண்டு கொடுத்து வரவேற்கப்படுகிறார். முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, ஜீ. எல். பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச எம். பி. மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்; சுதத் சில்வா) ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷ வுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள். இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார். நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற் றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனா திபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.



காங்கேயன் வீதி புனரமைப்பு : அழிவுறும் ஆலயங்கள் குறித்து ஆளுநரிடம் கோரிக்கை


.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியைக் கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்


மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.

பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன



அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் உணர்த்திவிட்டனர் : அரியநேத்திரன்





சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும்.

இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார்.

ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர்.

இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம்.

தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது.

எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.




எதிரணியை அடக்கவே அவசரகாலச் சட்டம் : லக்ஷ்மன் செனவிரத்ன


பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.

அவசர காலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஏ9 பாதை திறக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் முடிந்து விட்டது. பாதுகாப்பு செயலாளர் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று உறுதியுடன் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன், எதற்கு அவசர காலச் சட்டம் தேவைப்படுகிறது? ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் லங்கா பத்திரிகை தடை செய்யப்பட்டது.

எதிரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவையெல்லாம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் எமது ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். உண்மையை எழுத முடியாது தடுக்கப்படுகிறது. அரசாங்கத்தைச் சார்ந்தோர் பகிரங்கமாக எமது ஆதரவாளர்களை தாக்குகின்றனர். துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களை ஏன் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய முடியாது?

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத் தரப்பில் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவசர காலச் சட்டம் தேவையென பிரதமர் சொல்கிறார்.

அப்படியானால் வடபகுதிக்கு மட்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தலாமே? ஏன் நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்?

நாட்டில் சட்டம் செத்துவிட்டது. ஐ.தே.கட்சியை சார்ந்த பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது. தேர்தல் வெற்றியால் மஹியங்கனை நகரில் எதிர்க் கட்சியினர் மீது அடக்கு முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே ஐ.தே.கட்சி அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவினை வழங்காது. பொலிசாருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஹெல உறுமய பௌத்த குருமார் இன்றைய வன்முறைகள் தொடர்பாக என்ன சொல்கின்றனர்?

ஏன் தர்மத்திற்கு மாறுபட்ட வன்முறைகளுக்கு இடமளிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.




ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்



வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்பி சலுகையைஞ்கு தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.

உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.

இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.

அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை" என்று கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பஐ தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல்: .தே.மு





தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவத்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினர்.

இவ்விடயம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். உரிய முறையில் தகவல்களை திரட்டி, ஆதாரத்துடன் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துவருகிறார்கள். இன்னும் சில தினங்களில் வழக்கு தொடரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதேவேளை, இரத்தினபுரியில் வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்றுள்ளதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கடற்படை தாக்குதல்:நாகை மாவட்ட மீனவர்கள் அச்சம்


நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, பொருட்களை சூறையாடிய சம்பவம், நாகை மாவட்ட மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஓய்ந்திருந்தது. தேர்தல் முடிந்து ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை மீண்டும் துவக்கியுள்ளது.


இலங்கையில் தேர்தல் முடிந்ததில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 2ம் தேதி 250 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 3ம் தேதி நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, நாகை மீனவர்களை ரப்பர் தடியால் சரமாரியாக தாக்கினர். மீனவர் படகுகளில் இருந்த ஐஸ் கட்டிகளை கடலில் தூக்கியெறிந்த, இலங்கை கடற்படையினர் 50க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை வெட்டி கடலில் வீசினர்.


படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால், மீன்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.மீனவர்கள் கூறுகையில்,"இலங்கையில் நடந்த தேர்தலால் தாக்குதலை நிறுத்தியிருந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் மீனவர்களை குறிவைத்து தாக்குகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகும் போது, பாதிக்கப்பட்ட மீனவர்கள் அரசிடம் முறையிட்டு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், இனிமேல் புகார் தெரிவிப்பதில் பலனில்லை என்று இருந்து விட்டோம்' என்றனர்.


இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டு




கொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.

​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.



வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் : வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இலங்கை அழைப்பு



கொழும்பு,பிப்.5: விடுதலைப்​ புலி​களுடனான போரினால் சீர்குலைந்த வடக்குப் பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வாருங்கள் என்று வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

​ அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகித பொகலகாம வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார்.

மேலும் அவர் கூறியது:​ 30 ஆண்டுகாலம் புலிகளுடன் தொடர்ந்து நடந்த போரினால் நாட்டின் வடக்குப் பகுதி ​ முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.​ அப்பகுதிக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.​ இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முடங்கியுள்ளது.

​ தற்போது அப்பகுதி புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வளர்ச்சிப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.​ சுற்றுலா,​​ மீன்பிடித் தொழில்,​​ வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளை மேம்படுத்த அரசு அடையாளம் கண்டுள்ளது.

​ யாழ்ப்பாணத்தில் மொத்தம் 6 லட்சம் பேர் வசிக்கின்றனர்.​ இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

​ வடக்குப் பகுதியின் வளர்ச்சிப் பணியில் பங்கேற்க வெளிநாடு வாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.​

இதை அரசு அறியும்.​ முதலீடுகளை செய்து வளர்ச்சிப் பணியில் பங்கேற்க விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு வரவேற்கிறது.

​ வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்களிடம் இருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிடம் இருந்தும் அரசு முதலீடுகளை வரவேற்கிறது.​

முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.​ யாழ்ப்பாணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்படும்.​ அங்கு

துணைத் துதரகத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார் ரோகித பொகலகாம.


படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்



படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலம் நல்ல பயனை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக்கமைய இதுவரை 1462பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்கள் தற்போது தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முன்னர் கடமையாற்றிய படையணிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடர்ந்தும் சரணடையாமல் இருப்போரை இராணுவ காவல்துறையினர் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக இராணுவ சட்டங்கள் பிரயோகிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்..


இலங்கையில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென

 

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பரக்ஒபாமா இதனைத் தெரிவித்துள்ளார். வளமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தமது பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் மலர்ந்துள்ள சமாதான சூழ்நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும்போது  

மன்னார் மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும்போது நடைமுறையில் இருந்துவந்த பாஸ் முறையினை முழுஐமயான நீக்கியுள்ளதாக வன்னி மாவ்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மீள்குடியேற்ற அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் இந்த பாஸ் நடைமுறையினை நீக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் இதனையடுத்து அந்நடைமுறை உடனடியாக அகற்றப்பட்டதுடன், மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாஸ் நடைமுறையினை ஆரம்பித்துள்ளதாக மன்னார் மீனவர் சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஜனாதிபதியிடம் இதுபற்றி தெரிவித்து அந்நடைமுறையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது மன்னார் மீனவர்கள் முன்னர்போல் எந்தநேரமும் தொழிலில் ஈடுபட முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எச்எஸ்பிசி வங்கியின் கிளையொன்று அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்  


எச்எஸ்பிசி வங்கியின் கிளையொன்று அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து வடக்கில் பெருமளவு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் மேமாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வடக்கில் இலங்கை வங்கிகள் புதிய கிளைகளை அமைக்க ஆரம்பித்துள்ளன. வடக்கில் 73 புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியிருந்தது. இதனடிப்படையில் இலங்கை வங்கி வடக்கில் கிளைகளைத் திறந்து வந்தன. இந்நிலையில் அடுத்தவாரம் வெளிநாட்டு வங்கியான எச்.எஸ்.பி.சி தனது கிளையை அங்கு திறக்கவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
யாழ். கோட்டை பகுதி:
தேசிய மரபுரிமை மையமாக புனரமைக்க பாரிய திட்டம்



1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் மீள்கட்டுமானம் செய்யப்பட்ட யாழ். கோட்டை 104.5 மில்லியன் ரூபா செலவில் புதுப் பொலிவு பெறவுள்ளது.

நெதர்லாந்து அரசின் உதவியுடன் 62.1 மில்லியன் ரூபாவும், தேசிய மட்டத்தில் 42.4 மில்லியன் ரூபாவும் இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

யாழ். கோட்டையின் சரித்திர முக்கியத்து வம் கருதியும், சுற்றுலாத்துறையாக யாழ். கோட்டை பகுதியை புனரமைக்கவும் என கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன அமைச்சரவைக்கு ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

4 வருடத்துக்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமிக்க நாடாக இலங்கையை உருவாக்க முடிந்துள்ளது

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

(பள்ளேகலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், எம். ஏ. அமீனுல்லா)

நான்கு வருட குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை உலகுக்குக் காட்ட முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு சவால்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வருடத்திற்கு வருடம் நாடு அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து வருவதுடன் பல வெற்றிகளையும் உரித்தாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

கண்டி பள்ளேகலயில் புதெயட்ட கிருளபூ தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, சுசில் பிரேம ஜயந்த, ரஞ்சித் சியம்பலா பிட்டிய, ராஜித சேனாரத்ன உட்பட பெருமளவு அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி முதற் தடவையாக நடாத்தப்பட்டபோது தற்போது நடைபெறும் அபிவிருத்திகள் வெறும் திட்டங்களாக மட்டுமே இருந்தன. எதிர்கால அபிவிருத்தி பற்றி அதன் மூலம் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், மேல் கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது இயங்கிவரும் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் என்பன ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

மூன்று வருட காலங்களில் நாம் வடக்கு கிழக்கையும் மீட்டு தற்போது நான்காவது வருடத்தில் ஒன்றிணைந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பியுள்ளோம்.

புதெயட கிருளபூ கண்காட்சி மூலம் அரசாங்கத்தின் எதிர்கால திட்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறோம். இக் கண்காட்சியானது எமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைந்து வருகிறது.

கொழும்பு நகருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புதெயட்ட கிருளபூ கண்காட்சி தற்போது கண்டியில் நடாத்தப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஏனைய முக்கிய நகரங்களிலும் இக் கண்காட்சி நடத்தப்படுமென நம்புகிறேன்.

பல்வேறு சவால்கள், அழுத்தங்கள், தடைகளுக்கு மத்தியில் நாம் பொருளாதார அபிவிருத்தியில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் அகப்பட்ட போதும் நாம் பாதிப்பின்றி தொடர்ந்தும் தலைதூக்கி பயணிக்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய;

இம்முறை வெற்றியுணர்வுடன் கூடியதாக புதெயட்ட கிருளபூ நடைபெறுகிறது. மூன்று தசாப்த காலம் நாட்டைப் பீடித்திருந்த அந்தகாரம் விலகி ஒளிபிறந்துள்ளது. 2008ம் ஆண்டு கொழும்பில் நடாத்தப்பட்ட கண்காட்சியில் எமது புதிய நிர்மாணிப்புகள் பல வெளிப்பட்டன. இம்முறை அதனை விட மேலானதாக கண்டியில் இக் கண்காட்சி நடாத்தப்படுகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதெயட்ட கிருளபூ கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அமைச்சர்க ளுடன் முக்கியமான கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலையும் இரவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்காட்சியைக் கண்டு களிக்க வருகை தந்தனர். இக் கண்காட்சியை எதிர்வரும் 10ம் திகதி வரை மக்கள் பார்வையிட முடியும்




அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

சபை அமர்வு பெப். 23க்கு ஒத்திவைப்பு


அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பிரேரணை நேற்று (05) பாராளுமன்றத்தில் 87 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், ஜே. வி. பி. சபையில் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன், செல்லச்சாமி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். ஐ. தே. க. அவசரகாலச் சட்டத்தை எதிர்ப்பதாக ஜோசப் மைக்கல் பெரேரா எம். பி. சபையில் அறிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்றுக் காலை விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும் ஆரம்பமான விவாதம் மாலை நான்கு 45 வரை நீடித்தது. சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விவாதத்தை நிறைவு செய்துவைத்து உரையாற்றினார்.

அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் வெற்றியை மலினப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் குளறுபடி நடந்திருக்குமானால் தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறையிட்டுக்கொள்ளட்டும்.

ஜனாதிபதியின் தேர்தல் வெற்றி மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் போன்றோருக்குக் கன்ன த்தில் அறைந்துள்ளதுபீ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இராணுவச் சட்டதிட்டங்களை மீறி சதிசெய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்து விட்டு ஜனாதிபதி வேட்பாளரெனக் கூறித் தப்பிக்கொள்ள முடியாது.

எப்படியும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் கள் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். வாக்களிப்பின் போது ஜே.வி.பி மற்றும் மு.கா. உறுப்பினர்கள் சபை யில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

தமிழ்க் கூட்டமைப்புடன் சேர்ந்து மனோ கணேசன் எம்.எஸ். செல்லச்சாமி ஆகியோரும் எதிராக வாக்களித்தனர். சபை அமர்வு இம் மாதம் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப் படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.


சகல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்

அத்தியாவசிய சேவையை கருத்திற் கொண்டு அரசாங்கம் முடிவு


தேர்தல்களின் போது சுகாதாரத்துறை யிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களி ப்பதற்கு சந்தர்ப்பம்வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர் ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச் சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் 1989 ஆம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262 ஆம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடை யோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க மற்றும் மாகாண ரீதியில் இருக்கும் சுமார் 1,50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.

சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. வாக்களிப்பதற்காக 4 மணி நேரம் சந்தர் ப்பம் வழங்கப்பட்டாலும், நோயாளிகளை பராமரிக்கும் சேவையிலுள்ளவர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை. பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கும்.

இந்த விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார்.

மத்திய அரசின் கீழுள்ள, மாகாண அரசுகளின் கீழுள்ள, நிரந்தர, சமயா சமய, பதில் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், டாக்டர்கள், தாதியர்கள் உட்பட சகல தரத்திலான சுகாதாரத்துறை ஊழியர்களும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...