2 ஜனவரி, 2010

ஆலமரம் போன்ற பெருவிருட்சம் இ.தொ.கா. விலகிச்செல்வோரால் முறிந்துவிடப்போவதில்லை - ஆறுமுகம் தொண்டமான்

மலையக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போவதாகச் சரத் பொன்சேகா கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்பணிகளை கடந்த 4 வருடங்களாக முன்னெடுத்து வருகிறார். அதுவே ஜனாதிபதிக்குப் பலமாகவுள்ளதென இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு 05, வஜிரா வீதியிலுள்ள அவ் அமைச்சின் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள சிலர் எமது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் அவை திருப்திகரமானதாகவில்லை. அவர்கள் கூறும் காரணங்களின் படி அவர்கள் தேர்தல் அறிவிப்பின் முன்னரோ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கட்சியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பின் பின் அவர்கள் வெளியேறியமை அவர்களின் சுயநலப் போக்கையே வெளிக்காட்டுகின்றது.

அதைத் தவிரவும், எமது கட்சி எமது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் ஒரே கொள்கையில் உறுதியாகவுள்ளது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.அத்துடன் எமது கட்சி உறுப்பினர்கள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தவும் எம்மால் முடியாது. அவர்கள் வெளியேறியமைக்கான சரியான காரணமும் தெரியாது. அந்தக் காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும் அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெறுவார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 4 வருடங்களில் அத்தகைய பெறுமதி மிக்க அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் மேற்கொண்டுள்ளாரெனக் கூறினார்.தொடர்ந்து, மேலும் சில உறுப்பினர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோது அவ்வாறு யாரும் வெளியேற மாட்டார்கள் என நம்புவதாகவும் விலகிப் போனாலும் தன்னால் தடுக்க இயலாதெனவும் ஆனால் அவ்வாறு விலகுபவர்களால் ஆலமரம் போன்ற கட்சிக்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில்



தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவரும் ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை ஏற் படுத்துவதே தமது திட்டம் என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பவை வருமாறு, பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங் கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப் பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வுத்திட்டம் பெற்றுக்கொடுக் கப்பட வேண்டும்.

அ) சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப் பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக் கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.


ஆ) சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையைப் பேணிப்பாது காத்தலும் மதத்தைப் பின்பற்றுதல், மொழியைப் பேணிப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்து, தம் தனித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.


இ) சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.


ஈ) தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கரும மொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.


உ)சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்


* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.


* ஓர் இனத்தை அல்லது மதத்தைவிடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.


* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.

ஊ) புதிய நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்புச் சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புச் சட்டத்தை அமுல்படுத்தல்.


எ) மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்குப் பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும் மத்திய,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.


ஏ) பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள,தமிழ்,முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டுநடத்துவதற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுக்கு புளொட் அஞ்சலி-

கொழும்பில் இன்றுஅதிகாலை காலமான மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 52வயதான அமைச்சர் பெ.சந்திரசேகரன் இன்றையதினம் அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் காலமானார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக செயலாற்றிவந்த சந்திரசேகரன் அவர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். இந்நிலையில் மலையக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1989ம் ஆண்டு முற்பகுதியில் இ.தொ.காவின் தலவாக்கலை அமைப்பாளராக செயற்பட்டு வந்த அவர், இ.தொ.காவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார். 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது எமது புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

அதேயாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் தலைவராக செயலாற்றி வந்த சந்திரசேகரன் அவர்கள். 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இக்காலத்தில் பிரதமராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு இவரது ஒரு ஆசனமே உதவியாக அமைந்தது.

2001ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானதுடன், சமூக அபிவிருத்தியமைச்சராக 2006ம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சராக இறுதிவரை பதவி வகித்து வந்தார்.

இதேவேளை மலையகத்தில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாக திகழ்ந்த சந்திரசேகரன் அவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டுகாலப் பகுதியில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றமை அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.

தமிழ்மக்களின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டுவந்த சந்திரசேகரன் அவர்கள், மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் மாத்திரமன்றி வடகிழக்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளிலும் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்ததுடன், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சார்பாகவும் குரல்கொடுத்து வந்தார். அத்துடன் உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்பிலான பல்வேறு மாநாடுகளில் பங்குபற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் எடுத்துக் கூறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து தமிழ்மக்களுக்கான தீர்வினை வலியுறுத்துவதில் பெரும் பங்காற்றினார்.

இந்நிலையில் சந்திரசேகரன் அவர்கள், இறுதியாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது, மலையக மக்களுக்கு தனியான பல்கலைக் கழகம் அமைத்தல், அதிகரித்த உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவரது பிரதான கோரிக்கைகளாக அமைந்திருந்தன. இத்தகைய ஒரு சமூக அக்கறை கொண்ட அன்னாருடைய இழப்பானது இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பாரிய இழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு புளொட் அமைப்பினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்.

மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் தலைவர் பிரபாகரனால் தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்ட 28வது ஆண்டு நினைவுநாள்!!!


புலிகள் இயக்கத்தின் சகோதரபடுகொலை விஸ்வரூபமெடுத்த நாள் இன்றைய நாளாகும். யாழ் சித்திரா அச்சகத்தில் தோழர் சுந்தரம் என்ற புதியபாதை ஆசிரியர் சதாசிவம் சண்முகமூர்த்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகளாகின்றன.

விடுதலை போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும், பத்திரிகை ஊடாகவும் மக்களை விழிப்படைய செய்து புதிய போராட்ட பாதையை முன்னெடுத்த தோழர் சுந்தரம் பிரபாகரனின் அதிகாரவெறிக்கு பலியெடுக்கப்பட்ட முதல் பத்திரிகையாளராகவும் தோழர் சுந்தரம் விளங்குகின்றார்.

பத்திரிகை அச்சக பணிகளை பார்வையிடுவதற்காக தோழர் சுந்தரம் அச்சகத்திற்கு சென்றிருந்த சமயம் அங்கே மறைந்திருந்த பிரபாகரனும் அவனது கூட்டத்தினரும் மேற்கொண்ட வெறித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் தோழர் சுந்தரம் எம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டார். தோழ் சுந்தரம் வடக்கு, கிழக்கு, மலையகம் என அவனது பாதங்கள் பதியாத ப+மியே கிடையாது. பிராஜாவுரிமை மறுக்கப்பட்ட மக்களை டக்கு கிழக்கிலே குடிNயுற்றி அவ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஏதிலிகளாக்கப்பட்ட மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதிலும் அயராது உழைத்த ஒர் உண்மையான மக்கள் தலைவன்.

காந்தீயம் அமைப்பு ஊடாக தனது அறப்பணிகளை மேற்கொண்டுவந்த தோழர் சுந்தரம் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் ஒருவனாக இணைந்து கொண்டு ஒர் மக்கள் புரட்சியாளனாகவும் மாற்றிக்கொண்ட ஒர் உன்னதமான புரட்சிகரவாதியாவன். செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனுடன் இணைந்து அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒர் ஆயுதமேந்திரய போராட்ட வழிமுறையுடாகவே வென்றெடுக்க முடியும் என்று கருதி மக்கள் போராட்டத்திற்கு தயார்படுத்தி வந்தவேளையில்தான் அதிகார வெறிகொண்டு அலைந்த பிரபாகரன், தோழர் சுந்தரத்தின் உயிரைபறித்தான். சுந்தரத்தில் ஆரம்பித்த இந்த கோரம் ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

பகுத்தறிவு கொண்ட தோழர் சுந்தரத்தில் ஆரம்பித்த படுகொலை, கல்விமான்கள், அரசியல்;வாதிகள், புத்திஜீவிகன், சமூக ஆர்வலர்கள், மதகுருமார், ஆண், பெண், சிறுவர், சிறுமி என்று தொடர்ந்து இறுதியில் தானும் தனது குடும்பமும் பலியாக்கப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விடுதலை போராட்டத்தை மாற்றியமைத்துள்ளது.

அது மட்டுமல்ல அர்த்த புஷ்ரியற்ற பிரபாகரனின் செயற்பாடு எத்தனை ஆயிரம் விதவைகள்,, இளைஞர், யுவதிகளை அங்கவீனர்களாக்கியுள்ளதுடன், சொத்துக்களை இழந்து அரசிடமும், தொண்டர் நிறுவனங்களிடமும் கையேந்தும் நிலைக்கு இட்டு சென்றுள்ளதுடன், மக்களை முகாம்களுக்குள் முடக்கும் நிலைக்கும் வித்திட்டுள்ளது.

அன்று தோழர் சுந்தரம் போன்ற தோழர்கள் முன்னெடுத்த பணியை புரிந்து செயலாற்றியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. மாறாக எமது இனம் இன்று ஒர் கௌரவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

ஆகவே சுந்தரம் போன்ற தோழர்கள் எமக்கு அன்று ஊட்டிய நற்கருத்துக்கள், போதனைகளை இனியாவது உணர்ந்து மக்கள் குறித்து அவர் கொண்டிருந்த செயற்திறனை நாம் அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுப்பதே தோழர் சுந்தரம் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாக இருக்க முடியும். அவரது கருத்துக்களை முழுமையாக எம்மால் முன்னெடுக்க முடியாவிட்டாலும் அவர் விட்டு சென்ற அடிசுவடுகளையாவது பின் தொடர்ந்து செல்வோம்.

-புலம்பெயர் தோழர்கள்

மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா தமது உத்தேச திட்டத்தை இன்று யாழ்.நகரில் அறிவிப்பார்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், உடனடியாக அவசரகால ஒழுங்கு விதிகளை நீக்கி, உரிய சாட்சியங்கள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்த தனது திட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் அறிவிக்கவுள்ளார் என அறியவருகின்றது.

மேலும் ஆயுதக் குழுக்கள் அனைத்தையும் கலைத்து அவற்றிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது குறித்தும் அவர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வைத்து அறிவிப்பார் எனத் தெரியவந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சி களின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இங்கு வைத்து இந்த அறிவிப்புகளை விடுப்பார் எனத் தெரிகின்றது.

சரத் பொன்சேகாவுடன் இன்று யாழ்ப்பாணம் வரும் எதிர்க் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணே சன், ரவூப் ஹக்கீம், டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா ஆகியோர் மதத் தலைவர்கள், அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான தமது விஜ யத்தை இன்று காலை 9 மணிக்கு நல்லூர் விஜயத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா ஆரம்பிக்கவுள்ளார். பின்னர் காலை 10.00 மணிக்கு யாழ். ஆயரைச் சந்திக்கவுள்ள அவர்கள் அதன் பின் னர் யாழ். அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

பிற்பகல் 2.00 மணிக்கு மானிப்பாய் வீதியில் உள்ள எதிர்க்கட்சிகளின் அலுவல கத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்வர்.

பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றவுள்ள எதிரணித்தலைவர்கள் மாலை 6.00 மணியளவில் பத்திரிகையாளர் களைச் சந்திக்கவுள்ளனர். யாழ். விஜயத்தின்போது யுத்தத்தி னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது உடனடி நிவாரணத் திட்டங்கள் குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. மக்களை மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துவது, தமது வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்றுத் தங்குமிடங்களை வழங்குவது, நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற தமது யோசனை களையும் சரத் பொன்சேகா அங்கு வெளி யிடுவார் எனத்தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத் தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டும் நிறுத்தி ஏனைய இடங்களிலிருந்து அவர்களைப் படிப்படியாகக் குறைப்பது ஆகியவை பற்றிய தமது யோசனைத் திட்டங்களை யும் அவர் முன்வைப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...