27 மே, 2010

சரத் பொன்சேகாவிற்கெதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் ஆரம்பம்



இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே இந்த மூன்றாவது நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இம் மாதம் 24 ஆம் திகதியன்று இடம்பெற்ற போது இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மனுதாக்கல் செய்திருந்தார். எனவே இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக