8 ஏப்ரல், 2010

அக்கறைப்பற்றில் சற்றுமுன்னர் மோதல் சம்பவம்

அக்கறைப்பற்று ஆளையடிவேம்பு பகுதியில் சற்றுமுன்னர் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தேர்தலின் பின்னரான வன்முறைகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக கண்காணிப்பாளர்கள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, நாவலப்பிட்டியவில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான வாக்கெடுப்பு நிலையங்களில் கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் அதனால் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகளை இரத்துச் செய்யுமாறும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 15 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சுமுகமான நிலையில் மன்னாரில் வாக்களிப்பு

_

வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பகல் 1.00 வரை 27 வீதமானோரே வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

இம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 2,66,975 பேர் தகுதி பெற்றுள்ளனர். 209 தேர்தல் தொகுதிகளில் 68 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன.

அதேவேளை, மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம்

காலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.

எனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர் மீது தாக்குதல்

புத்தளம் 4ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள றஹ்மத் நகர் வாக்களிப்பு நியைத்தில், வாக்களித்து விட்டு திரும்பிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளரான அப்துல் கபூர் முஹம்மத் நசீம் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று வாகனங்களில் வந்த ஐக்கியத் தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நூர்தீன் மசூர் தலைமையிலான குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர
மேலும் இங்கே தொடர்க...

வவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை : சிஎம்ஈவி தெரிவிப்பு

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.

ஒட்டுசுட்டான், நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சுமார் 100 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வவுனியா தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர். தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா உடல்நிலை தொடர்பில் பரிசோதனை




இராணுவ தடுப்பகாவலில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை தொடர்பில் பரிசோதனை ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று வைத்தியர் ஒருவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப் பரிசோதனையின் பிறகு பொன்சேகா தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக குறித்த வைத்தியர் தெரிவித்தாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 பேர் விடுதலை




யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 இளைஞர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 106 பேரில் 41 பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு


மாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித் ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரி வித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிர காரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.

அவர் நேற்று இந்தியா பயண மாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளை யாடி வருகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

நுவரெலியா மாவட்டத்தில் இராணுவம் சேவைக்கு அழைப்பு; குழப்பம் விளைவித்தால் வாக்களிப்பு ரத்து - அரச அதிபர்


நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படு த்தும் வகையில் பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டபிள்யூ. பீ. ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கென சுமார் இரண்டாயிரம் பொலிஸாரும் 150 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏதாவதொரு வாக்குச்சாவடியிலோ அல்லது ஓர் இடத்திலோ தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுக் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் என்று தெரிவித்த அரச அதிபர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படு மென்றும் கூறினார்.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் பொலிஸாரையும் படையினரையும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களை நேரகாலத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் குழப்பகரமான நிலை தோன்றுவதற்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவத்தாட்சி அதிகாரி குமாரசிறி கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்ட பாதுகாப்பு கடமையில் பொலிஸ்மட்டும் அரச அதிபர்


யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்கென பொலிஸார் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்களென்றும் இராணுவத்தினர் அழைக்கப்படமாட் டார்களென்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான கே. கணேஷ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தேவையின் நிமித்தம் இராணுவத்தினர் அழைக்கப்பட்டாலும் அவர்கள் வாக்குச்சாவ டியில் இருந்து 500 மீற்றர் தொலைவிலேயே நிறுத்தப்படுவார்களென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

22,000க்கும் அதிக கண்காணிப்பாளர்கள்; வடக்கு, கிழக்கில் கூடுதலானோர் பணியில்



பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் நாடு முழுவதிலுமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது பொதுத் தேர்தலாகையால் இத் தேர்தலைக் கண்காணிக்கவென அதிகளவிலான பிரதிநிதிகளை வடக்கு, கிழக்கில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரதிநிதிகளில் 12 ஆயிரத்து 700 பேர் வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி இத்தேர்தலை கண்காணிப்பர் என்றும் அவர்கள் கூறினர்.

தேர்தல்களை வாக்குச்சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிப்பதற்காக பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதேநேரம் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாவட்ட நிலையங்களைக் கண்காணிப்பதற்கும் தேர்தல் ஆணையாளர் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இம்முறை அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்விரு அமைப்புக்களும் மாவட்டத்திற்கு ஒருவர் படி 44 பேரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் அமைப்பு ஐந்து விஷேட குழுக்களைக் கொழும்பிலிருந்து அனுப்பி வைத்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார். இத்தேர்தலை கண்காணிக்கும் பணிக்கென பெப்ரல் அமைப்பு 16 வெளிநாட்டு பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் நால்வரையும் வரவழைத்துள்ளது.

இவர்களிலும் அதிகமானோர் வடக்கு, கிழக்கு மாவட்டங்களிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கூறினர். பெப்ரல் அமைப்பு 10697 பிரதிநிதிகளையும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் 4192 பேரையும் கபே நிறுவனம் 6000 பேரையும் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையிலிருந்து கூடுதல் தேயிலையை கொள்வனவு செய்ய ஈரான் முடிவு




இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யும் தேயிலையின் அளவை இருபது (20) மில்லியன் கிலோ கிராம்களால் அதிகரிப்பதற்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு முடிவு செய்துள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி. எம். ஜயரட்னவுக்கும், ஈரானின் இலங்கைக்கான தூதுவர் ரஹீமி ஹோஜிக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஈரானின் மேற்படி தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வருடா வருடம் ஈரான், இலங்கையிலிருந்து 30 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை கொள்வனவு செய்து வருவது தெரிந்ததே.

இலங்கையின் தேயிலையைக் கொள் வனவு செய்வதில் ரஷ்யா முதலிடத்தைப் பெற்றுள்ள போதிலும் ஈரான் நான்காவது இடத்தில் உள்ளது. அமைச்சருக்கும், ஈரான் தூதுவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது, ஈரானுடனான பொருளாதார உறவை மேம்படுத்திக்கொள் வதற்கான இலங்கையின் நடவடிக்கைகளை ஈரான் தூதுவர் பெரிதும் பாராட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் சட்ட விதிகளை மீறினால் பொலிஸார் கடும் நடவடிக்கை

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்களென பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

நீதியானதும், அமைதியானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திட்டமிட்டபடி உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தலை குழப்ப முடியாத வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும், அவர்களுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்று சுட்டிக்காட்டினார்.

எந்தவித அச்சமுமின்றி பொது மக்கள் நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பொலிஸ் மா அதிபர், தேர்தலின்போதும் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் சமாளிக்கும் வகையில் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 58 ஆயிரத்து 877 பொலிஸாரும், 19 ஆயிரத்து 800 முப்படையினரும், 2000 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நேற்று அதிகாலை தொடக்கம் தமக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களில் கடமைகளை பொறுப்பேற்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

இதேவேளை, தீவிர கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 2, 584 விசேட நடமாடும் பிரிவினரும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர் என்றார்.

தேர்தல் சட்ட விதிமுறைகள் எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இன்று முதல் ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

தேர்தலைத் தொடர்ந்து தமிழ்- சிங்கள புத்தாண்டை பொது மக்கள் கொண்டாடுவதற்குத் தயாராக உள்ளதால் அதனைக் குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 500 மீற்றருக்குட்பட்ட பிரதேசங்களில் இன்றைய தினம் கூடி நிற்பது, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகுமென்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நேரகாலத்தோடு வாக்களியுங்கள்



நேரகாலத்துடன் வாக்குச்சாவடிக ளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இறுதிநேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும் அமைதியான தேர்தலை உறுதி செய்யவும் வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று ஆணையாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

வாக்காளர்கள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையையும் ஆளடையாள த்தை நிரூபிக்கும் அடையாள அட்டையையும் தம்முடன் வாக் குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல வேண் டும். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

குளறுபடிகள், குழப்பங்கள் ஏற்பட்டதாக புகார் கிடைக்கும் பட்சத் தில் குறித்த வாக்குச்சாவடியில் மேற்கொண்ட வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்படுமென்றும் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல்




ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 196 உறுப்பினர்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக போட்டியிடுகின்றனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 22 மாவட்டங்களிலும் அமைதியான சூழ்நிலையில் ஒரே நேரத்தில் நடைபெறுகின்ற பொதுத் தேர்தல் இதுவாகும்.

இதன்படி, நாடுபூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.

இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒரு கோடி 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்காக சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முன்னெடுத்து ள்ளன. தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்று (7) பூர்த்தி செய்யப்பட்டிருந்ததோடு தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (7) கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

மாவட்ட செயலகங்களுக்கு சமுகமளித்திருந்த வாக்களிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள், உதவியாளர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருக்கு தேர்தல் தொடர்பாக அறிவூட்டும் கூட்டங்கள் நேற்று (7) காலை நடைபெற்றன. அதன் பின்னர் கச்சேரிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்களிப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த சகல உத்தியோகத்தர்களும் நேற்று (7) தமக்கு ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அரசாங்க ஊழியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வாக்காளர்களுக்காக 28 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு அவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் கூறினார்.

வாக்களிப்பு 4.00 மணிக்கு நிறைவடைந்த பின்னர் சகல வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கு தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்காக தனியான வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,387 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.

வெள்ளம் அல்லது அனர்த்தங்கள் ஏற்பட்டால் வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்காக படகுகளை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களை வந்தடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இரவு 10.00 மணிக்குப் பின் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. நள்ளிரவுக்குப் பின்னர் தொகுதி மட்டத்திலான முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தொகுதி மட்டத்திலான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் வெற்றிபெற்ற கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். நாளை பிற்பகலாகும் போது விருப்பு வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கும் அடையாளத்தை உறுதி செய்து வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதி வாக்கெடுப்பு நிலையப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் தேவையின்றி நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏதும் வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்களிப்புகள் இடைநிறுத்தப்படும் என தேர்தல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இங்கு மோசடிகள், அச்சுறுத்தல்கள் என்பன நடந்திருப்பது உறுதியானால் அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டிற்கு முன் புதிய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாராளுமன்றம் 22ம் திகதி கூட உள்ளது.




மேலும் இங்கே தொடர்க...