31 மார்ச், 2010

வடக்கின் மீள் கட்டுமானப் பணிகள்: 4 இலட்சம் சீமெந்து மூடைகள் இந்தியாவினால் கையளிப்பு






வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கென இந்திய அரசு 200 மில் லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சம் சீமெந்து மூடைகளை நேற்று கையளித்தது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த், தேச நிர்மான, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செய லாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறியிடம் சீமெந்து மூடைகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு பேலியாகொடையிலுள்ள அல்ரா டெக் சிமென்ட் லங்கா நிறுவனத்தில் இக் கையளிப்பு நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வீடு வாசல்களை இழந்தவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீளக் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 சீமெந்து மூடை கள் வீதம் வழங்க தேச நிர்மான அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசு ஏற்கனவே 2600 மெற்றிக் தொன் கூரைத் தகடுகளை வழங்கியிருந்தது. அதற்கு மேலதிகமாகவே 20,000 மெற்றிக் தொன் கொண்ட நான்கு இலட்சம் சீமெந்து மூடைகளை வழங்க முன் வந்துள்ளது.

மீளக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு அந்தந்த பகுதி யிலுள்ள பிரதேச செயலாளரின் சிபாரி சுகளுக்கு அமைய சீமெந்து மூடைகள் வழங் கப்படும். இந்திய அரசு இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் சமைய லறை பாத்திரங்கள் என இலங்கை நாணயப்படி 610 மில்லியன் ரூபா பெறுமதி யான பொருட்களையும் முன்பே கையளித் திருந்தது.

மீளக் குடியமர்த்தவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்தும் உதவிகளை செய்யும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

16,800 மெற்றிக் தொன் நெல் ஒரு மாதத்தில் அரசு கொள்வனவு




நாளாந்தம் 50 மெ.தொ. கொள்வனவுக்கும் திட்டம்
இம்முறை பெரும் போகத்தின்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் அனைத்து நெல் உற்பத்தியையும் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது வரை 16, 800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு தற்பொழுது நாளாந்தம் 50 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது என விவசாய அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

காவலி நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கோ விவசாயத்துறையை மேம்படுத்தவோ அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஐ.தே.க வும் ஜே.வி.பி யும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் எமது அரசாங்கமே விவசாயிகளுக்கு அதிக நிவாரணங்கள் வழங்கி விவசாயத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு போகத்திற்காக விவசாயி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்காக 205 கிலோ கிராம் பசளையை அரசாங்கம் வழங்குகிறது. இதற்காக ஒரு விவசாயி 1435 ரூபாவே வழங்குவதோடு அரசாங்கம் 27, 500 ரூபா வழங்குகிறது. 97 வீத பசளை மானியமாக வழங்கப்படுகிறது.

இதன்படி, கடந்த 4 வருடத்தில் 8 போகங் களுக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட் சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை பசளை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 ஆம் வருடத்தில் மாத்திரம் உரம் கொள்வனவு செய்ய அரசாங்கம் 6500 கோடி செலவிட்டது. ஆனால் ஐ.தே.க ஆட்சியில் உரமானியம் நிறுத்தப்பட்டதோடு விவசாயத்துறை அழிக்கப்பட்டது.

ஆனால் இன்று விவசாயத்துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் 5 ஆயிரம் நெற் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, உணவுத் திணைக்கள களஞ்சியங்கள், உரக் களஞ்சியங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நெற் களஞ்சியங்களுக்கு கொண்டு வந்து தரப்படும் நெல்லுக்காக நாட்டரிசிக்கு 29.50 சதம் வழங்கப்படுவதோடு சம்பா அரிசிக்கு ரூபா 31.50 வழங்கப்படுகிறது. போக்குவரத்து செலவாக ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா 50 சதம் வழங்கி வருகிறோம். நெற் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே. க ஆட்சிக் காலத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் இன்று விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகுவிற்குப் பின்னர் தமது ஆட்சியிலே (2002-2004) நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்ததாக ரணில் கூறி வருகிறார். தனது ஆட்சியில் நெல் சந்தைப்படுத்தும் சபைகளை மூடியதோடு உரமானியத்தை நிறுத்தியதை அவர் மறந்துவிட்டார்.

இம்முறை பல வருடங்களின் பின்னர் வடக்கிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இம்முறை கூடுதல் நெல் உற்பத்தி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

31.03.2010 தாயகக்குரல்



இலங்கையின் தலைவிதியையும் தமிழ்மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கப்போகும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் யதார்த்தத்திற்கு அப்பால் நின்று வாக்குறுதிகளை அள்ளி விசுகின்றன.

இலங்கை அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கின. இந்த இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணப்போவதாக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு இனங்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் வாக்குறுதி அளித்து பாராளுமன்றத்தை பிரதிநித்துவப் படுத்தி வந்தனர். ஆனால் இவர்களின் காலத்தில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகள் வளர்ந்ததே அன்றி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

நடைபெறவிருக்கும் இந்த தேர்தல்மூலம் அமையப்போகும் புதிய ஆட்சியை தாங்கள்; பிடித்தால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்ச்ஙீனைக்கு தீர்வு காணுவோம் என ஒவ்வொரு கட்சியினரும் வாக்குறுதியளிக்கின்றனர்.
தமது வெற்றியை உறுதி செய்துகொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைப்பை மாற்றி தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காகத்தான் போராடுகிறோம் என தெரிவிக்கிறது.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்து நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை வளம் மிக்க நாடாக மாற்றுவோம் எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும் எனவும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு என்ற விடயத்தில் அரசிடம் தீர்க்கமானதொரு நிலைப்பாடு இல்லை. எனவே அனைத்து சமூகத்தினையும், அனைத்துக் கட்சிகளையும் பிரதிநித்துவப் படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதன்மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சுலபமாகிவிடும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கிறது.

தமிழ் மக்களின் இருப்பை நிலைநிறுத்தி பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்கள் வரக்கூடிய வகையில் தேர்தல் அமையப்போகிறது. எனவே பேரம் பேசும் சக்தியாக எம்மை அனுப்புங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
ஏனைய பெரும்பாலான கட்சிகள் யதார்த்தமான அரசியல் நடவடிக்கைகளுடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் எனத் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை முதலிடத்தை வகித்தாலும் உடனடித்தீர்வாக எதிர்பார்ப்பது அகதி வாழ்க்கையிலிருந்து மீண்டு தாம் தமது சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதேயாகும்.
தமிழ் பேசும் மக்கள் பேரம் பேசும் சக்தியாக இருக்கும் நிலை இனி வராது என்பதை கடந்த ஜனாதிபதி தேர்தல் உணர்த்திவிட்டது. எனவே இனி பேரம் பேசும் சக்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 60 வருடங்களில் தமிழ் தலைவர்கள் பேரம் பேசும் சக்தியாக இருந்து பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைத்தும் இவர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் தலைவர்களின் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகப் பெரிய அனர்த்தனத்துக்கு உள்ளாக்கின.
இனப்பிரச்சினையில் ஒஸ்லோ உடன்படிக்கையை பின்பற்ற வேண்டிய கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை என்று ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ள கருத்துக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியுள்ள கேள்வி வேடிக்கையாக உள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளமை இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு நிலைப்பாடு இருந்தது என்று இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சான்றிதழ் வழங்குவதாகும்.

எந்தக் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. ஒஸ்லோ உடன்படிக்கையை புலிகள் மறுத்த பின்னர் சமஷ்டி தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எந்தக்காலத்திலும் சமஷடியை ஏற்றுக்கொண்டதில்லை என ரணில் தெரிவித்திருந்தார்..

இராணுவ பலம் இழந்துவிட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் தேவை என்பதால் தமக்கு வாக்களிக்கவேண்டும் என மாவை சேனாதிராசா தெரிவிக்கிறார். 30 ஆண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் இவர்களுக்கு அளித்த அரசியல் பலத்தை இவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதால் இவர்கள்மேல் நம்பிக்கை இழந்தபின்னரே இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று இவர்கள் மீண்டும் அரசியல் பலம் வேண்டி நிற்கின்றனர்.

இன்று தந்தை செல்வாவின் 112வது பிறந்த தினமாகும். செல்வாவின் பிறந்த தினம் இன்று பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. கடந்த 30 வருடங்களாக தந்தை செல்வாவை மறந்திருந்தவர்கள் இன்றாவது அவரை நினைவுகூருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தந்தை செல்வா தனக்குபின் தமிழசுக் கட்சியை வழிநடத்துபவர்கள் தமிழ் மக்களை காப்பார்கள் எனக் கூறவில்லை. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் எனக் கூறிச்சென்றார். அவருடைய தீர்க்கதரிசனத்திற்கு தலைவணங்குவோம்.

மேலும் இங்கே தொடர்க...

தமிழ் பிரதிநிதித்துவம் குறையலாம்'


செய்தி ஆய்வாளர் நிராஜ் டேவிட்


இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவும், வருகின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் பல சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் இறக்கப்பட்டிருப்பதும், அங்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்கிறார் செய்தி ஆய்வாளரான நிராஜ் டேவிட்.

இதனால், இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பேரம் பேசும் திறன் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆயுத ரீதியாக மிகவும் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் கரம், ஆயுதங்களை மௌனிக்க வைத்தன் காரணமாக இன்று அடங்கிப் போயிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களிடம் இருக்கும் அரசியல் பலம் கூட மழுங்கடிக்கப்படக்கூடிய நிலை இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நிராஜ் கூறுகிறார்.

உண்மையில், ஒரு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மிகவும் ஒற்றுமையாக அரசியலைச் சந்ததிந்திருக்க வேண்டிய தமிழ் சமூகம் பிளவுபட்ட நிலையில் தேர்தலை சந்திப்பது அவர்களுக்கு இந்த தேர்தலில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


வடக்கை விட கிழக்கு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்படலாம்


வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் தமிழ் கட்சிகளுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும், அங்கு இருக்கும் மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஏனைய கட்சிகளில் இருக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கே போகும் வாய்ப்பு உள்ளது; ஆனால் கிழக்கு மாகாணத்தில் அத்தகைய நிலை வரும் போது அந்த பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கு சென்று விடும் என்று நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டாலும், அப்போது ஆயுத ரீதியில் பலமாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு ஒரு கட்சிக்கு தெளிவாக வழங்கப்பட்டிருந்தது; அதனால் அந்தக் கட்சி அந்த தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெற முடிந்தது. என்று அவர் கூறுகின்றார். ஆனால் இன்று அந்த நிலை கிடையாது என்றும், தமிழ் வாக்காளர்கள் கூட அண்மைய போர் மற்றும் ஏனைய நிலைமைகள் காரணமாக குழப்பிப் போய் இருப்பதாகவும் நிராஜ் டேவிட் கூறுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவில் 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட 3 தமிழர்கள் இன்று விடுதலை






விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் இம்மூவரும் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேமவுண்ட் தெற்கைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன்(வயது 39)இ மவுண்ட் வவெர்லியச் சேர்ந்த அரூரன் விநாயகமூர்த்தி(வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன்(வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தலா 1மில்லியன் டொலர்களை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இவர்களுள் விநாயகமூர்த்தி என்பவர் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும்இ செயலிழகச் செய்வதற்குமான இலத்திரனியல் உதிரிப்பாகங்களை விடுதலை புலிகளுக்கு செய்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி போல் கோங்லன் இன்று இம்மூவரையும் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007 ஆம் ஆண்டு இம்மூவரும் பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு



பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு
பதுளை தொடக்கம் பிபிலை – வெள்ளவாயா ஊடாக கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மெதகெட்டியவில் தெரிவித்தார்.

பதுளையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை மாத்தறையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் ரயில் பாதையுடன் இணைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்ல, மெதகெட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். _
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீலசுக பிரசாரக் கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழு விபத்தில் சிக்கி மூவர்




ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இசைக் கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை, கிரிபத்கும்புர பகுதியில் சிவப்பு சமிக்ஞையையும் தாண்டிச் செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரஸ்தாப வாகனம் ரயிலில் மோதுண்டு சுமார் 500 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம்


யாழ். - பூநகரி இடையே படகுச் சேவை அடுத்த மாதம் ஆரம்பம் : வ.மா. ஆளுநர்
யாழ்ப்பாணத்துக்கும் பூநகரிக்குமிடையில் படகுச் சேவை ஒன்று அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச ஊழியர்கள் சிரமமின்றி யாழ்ப்பாணம் சென்று வர முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தரை மார்க்கமாக பூநகரிக்கு வந்து சேர குறைந்தது இரண்டரை மணி நேரம் செல்கின்றது. இப்பயணத்தில் ஆனையிரவு, பரந்தன், ஜயபுரம் ஆகிய இடங்களைத் தாண்டி வருவதலேயே இந்தக் காலதாமதம் ஏற்படுகிறது.

எனினும் யாழ். பூநகரி படகுச் சேவை மூலம் நேரத்தை மீதப்படுத்த முடிவதோடு, வீண் சிரமங்களையும் குறைக்க முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள், மாகாண சபை அதிகாரிகள், போன்றோர் இந்தப் படகுச் சேவை மூலம் நன்மையடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மற்றும் பூநகரி மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்புடன் படகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்




எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செயலகம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அச்சிடப்பட்ட 22 மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகளும் தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணி கடந்த 4 ஆம் திகதி அரசாங்க அச்சகத்தில் ஆரம்பமாகின. 29 ஆம் திகதி அச்சிடும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் சற்று நெருக்கடி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாளை மன்னாரில் தந்தை செல்வா நினைவு தின நிகழ்வுகள்



தமிழ் இனத்தின் தலைவரும் ஈழத்து காந்தி என அழைக்கப்படுபவருமான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 112 ஆவது வருட ஞாபகார்த்த தின நிகழ்வு நாளை மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.எம்.அந்தோனி மார்க் தலைமையில் மன்னார் பஸார் பகுதியில் இடம்பெறவுள்ளது.

பஸார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சொற்பொழிவுகளை ஆற்ற பலர் வருகை தர இருக்கின்றனர்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் நாளை புதன் கிழமை தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் இடம் பெற இருக்கின்றன. வவுனியா காளி வேப்பங்குள்ம் அந்தோனியார் ஆலயம், வேப்பங்குளம் சூசையப்பர் ஆலயம் ஆகிய திருத்தலங்களில் தந்தை செல்வாவுக்காக இரங்கல் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். _
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அழைப்பு





இன, மத, குல, அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்குக் கைகோர்க்க முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பலன்தோட்டையில் நேற்று 30ம் திகதி நடைபெற்ற, மக்கள் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் எழுந்து நிற்க வேண்டும். அதற்காகப் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னேறுவது மிகவும் அவசியம்.

இதுவே உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் வளமானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். இதனை சகலரும் உணர்ந்துகொண்டு பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் கைகோர்ப்பது அவசியம்.

நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் சுதந்திரமடைந்த காலம் முதல் இந்நாட்டினரின் தலா வருமானம் சுமார் ஆயிரம் அமெரிக்க டொலராகவே இருந்தது. இதனை நான் பதவிக்கு வந்த பின்னரான கடந்த நான்கு வருடங்களில் 2300 அமெரிக்க டொலர் வரையும் அதிகரித்துள்ளேன்.

என்றாலும் இந்நாட்டினரின் தலா வருமானத்தை நாலாயிரம் அமெரிக்க டொலர் வரையும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும். இதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதார வசதியும் மேம்பாடு அடையும்.

மேலும் நாம் எமது எதிர்கால சந்ததியினரை உலகுடன் தொடர்புகொள்ளக் கூடிய சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு விரும்புகின்றோம். அதற்காக அவர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழி அறிவு இன்றியமையாதது. இது எமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்குப் பெரிதும் உதவும். நாம் பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.

இனி எஞ்சி இருப்பது உங்களதும், உங்களது குழந்தைகளதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் பணி இது. எமது பொறுப்பாகும் இதற்கான அடித்தளத்தை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போதே இட்டோம்.

அந்த வகையில் மின்னுற்பத்தி திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக போக்குவரத்துக்கான காலம் குறைந்துள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக துறைமுகம், விமான நிலையம், சர்வதேச தரத்திலான கேட்போர் கூடம், விளையாட்டு மைதானம் என்பன அமைக்கப்படுகின்றன.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் புதிய வேலை வாய்ப்புக்களும், தொழிற்சாலைகளும் உருவாகின்றன. அதன் பயனாக வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். எமது பொருளாதாரமும் மேம்பாடு அடையும்.

ஆகவே தான் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து வலுவான பாராளுமன்றத்தை அமைப்பதற்காகக் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

30 மார்ச், 2010

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம்




ஜனாதிபதி


வட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில்,

எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப் தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ் வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது. இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக் கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்





களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.

நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.

இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.

ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்




* 58,700 பொலிஸ்

*19,500 முப்படைகள் + அதிரடிப்படை

* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு

* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு



பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.

வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.

நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

17 இந்தியருக்கு தூக்கு





துபாய் : பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சார்ஜாவில் அல்&ஜாஜா என்ற பகுதியில் பல்வேறு நாட்டினர் தங்கும் தொழிலாளர் முகாம் ஒன்று உள்ளது. இங்கு சட்டத்திற்கு மாறாக மதுபானம் விற்பனை செய்ததில் இந்தியர்களுக்கும் & பாகிஸ்தானியர்களுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில் இந்தியாவை சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேரை சுற்றிவளைத்து தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பயங்கர காயங்களுடன் மயங்கி விழுந்து இறந்துள்ளார். மற்ற மூவரும் காயங்களுடன் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 17 முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் போதுமான ஆதரங்கள் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபற்றிய வழக்கு சார்ஜாவின் ஷரியா நீதிமன்றத்தில் நீதிபதி யூசும் அல் ஹமாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். பின்னர் கொலை குற்றவாளிகளான 17 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் துபாயில் ஒரு கொலைக்காக 17 பேர் தூக்குத் தண்டனை பெறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புறநானூற்றில் மனித நேயக் கொள்கைகள்...... தயவு செய்து ஒரு தடவை படியுங்கள் இப்படி நடப்பதற்கு முயற்சியாவது செய்யுங்கள்



முனைவர் துரை மணிகண்டன்

உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத் தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் ‘நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லை’ என்று கூறுகிறார். அத்தகைய சிறப்புப் பொருந்திய இப்புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம்பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.

மனித நேயம்

மனித நேயம் என்பது பிறர் துயர்கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.

‘மனித நேயம்’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். ‘நேயம்’ என்று சொல் ‘நேசம்’ என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு அன்பு என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது.

‘அன்பு’ என்பதற்கு ‘ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு’ என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

இரா. சக்குபாய் ‘உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்’ என விளக்கம் தருகிறார்.

மனித நேயக் கொள்கைகள்

உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்க அமைப்பு உண்டு. இதனை நிறுவியவர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இது.

இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும் பூகம்பமாக இருந்தாலும் ஆழிப் பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது.

இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணி தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளார். இவர் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம். பாரதப் போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் குருஷேத்திரம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவி நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’

உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையில் இச்செயலாகப் பார்க்க முடிகின்றது.

போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புறும் மனித நேயமே என்று கொள்ளலாம்.

ஒன்றுமைக் கொள்கைகள்

உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ பழந்தமிழ்ப் புலவன், உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் பூங்குன்றன்,

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா’ (புறம் – 192)

என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனித நேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ‘ஓர் உலகம்’ எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அறக்கொள்கைகள்

ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் பலர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ. நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலக மக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரொ என்ற வினா எழும்புகிறது.

வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறார். அவர் குடும்பச் சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.

நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாடி நின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும் இன்னோர்க் கென்னது என்னேடுஞ் சூடியது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் கொடுமதி மனைகிழ

வோயே...’ (புறம், 173)

என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார், உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும், கொடுமையான கொடும் பசி தீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லப்பட்டவையாக அமைந்துள்ளது.

மன்னர்களும் பிறருக்குக் கொடுத்த உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக்கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே

(புறம் 182-1- 3)

என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது.

பிற உயிர்களைப் பேணும் கொள்கைகள்

மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறறிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள். கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒரு சிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன், பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துணுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடி படர்வதற்கு விட்டுவிட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனித நேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக் காட்டு இல்லை. மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வை தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி, பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனித நேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும். இல்லை அழிந்து போகும்.

இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழவேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதன நூலான, திராவிட இலக்கியமான புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி: இந்தியா கவலை





புதுதில்லி, மார்ச்.30: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்குவது கவலைக்குரிய விவகாரம் என இந்திய விமானப்படைத் தளபதி பி.வி.நாயக் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை அளிப்பது கவலைக்குரியது என்பதை இந்தியா அறிந்துவைத்திருப்பதாகவும், இந்தியாவின் கவலையை ஒபாமா நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நாயக் தெரிவித்தார்.

தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக பாகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான எஃப்ட்16 போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட போர்க் கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

அமெரிக்கா வழங்கும் இத்தகைய போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அறிவிப்பின்றி நீர் விநியோகம் நிறுத்தம் : மன்னார் மக்கள் சிரமம்




மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் விநியோகம், எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்படுகிறது.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பணத்தைச் செலவிட்டு வீடுகளுக்கு இணைப்புப் பெற்றிருக்கின்றனர். எனினும் கடந்த 03 தினங்களாக, நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மன்னார் வாழ் மக்கள், நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் குடி நீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

21 குழந்தைகளின் உடல்கள் மீட்பு : கிழக்குச் சீனாவில் சம்பவம்




கிழக்குச் சீனாவின் ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து 21குழந்தைகளின் உடல்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்டெடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகளின் உடல்கள் பைகளுக்குள் போடப்பட்டுக் கட்டப்பட்டிருந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் ஷென்டொங் மாகாண வைத்தியசாலையிலுள்ள எட்டு குழந்தைகளின் உடல்கள் அந்தப் பையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியசாலை உயர் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அங்குள்ள செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

ஆற்றங்கரையை அண்டிய கிராமப்பகுதி மக்களிடம் சீனத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்தி வருகின்றன.

தனியார் வைத்தியசாலை ஒன்றைச் சேர்ந்த குழந்தைகளே இவ்வாறு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டுள்ளன என்று பிரத்தியேகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் பயணம்




எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக எதிரிவரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்ல உள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். எனவே யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்றும் ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.மு. வாகனங்கள் மீது இனந்தெரியாதோரினால் தாக்குதல்




நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான திகாம்பரம், உதயகுமார் மற்றும் எஸ். சதாசிவம் ஆகியோர் பயணித்த வாகனங்கள் மீது கொத்மலை பகுதியில் வைத்து இனந்தெரியாதோரினால் நேற்று திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொத்மலை எல்பொடை கீழ்ப் பிரிவில் வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நளினி விடுதலை மனு: அரசு ஏற்கவில்லை பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக







இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பாக தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்வது உகந்ததல்ல என்ற சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காரணங்கள்

பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

* நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
* நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
*
* நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
* தன்னுடைய குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கைய ஏற்க முடியாது.
* 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
* இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.
* அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாக கூறவில்லை.

பொதுவாக 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நன்னடைத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர் விடுதலை செய்யப்படலாம்.

தன்னை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னர் நிராகரித்த ஆலோசனைக் குழு சரிவர உருவாக்கப்படவில்லை என்ற நளினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த மார்ச் 11ஆம் நாள் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான அரசின் முடிவுதான் தற்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த 2006ஆம் ஆண்டில் திமுக நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதே தன்னையும் விடுதலை செய்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாதது தவறு" என்று கூறி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள்

நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

ஆனால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றோர் பொதுமன்னிப்பிற்கு தகுதி உடையவர அல்ல என்று தமிழக அரசு கூறியது.

இது ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கமல்ல என்று நளினியின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

பின்னர் ஒரு நாள் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி கொலைச் சதிக்கு உதவினார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

பிரதேச, நகர சபைகளை இணைத்து மாநகர சபையாக தரமுயர்த்த திட்டம்


களனி பிரதேச சபையையும், பேலியாகொடை நகர சபையையும் இணைத்து மாநகர சபையாக அமை க்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டு ள்ளது.

இவ்விடயமாக பரிசீலனை செய்து மேற்பார்வையை முன்மொழிவதற் காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச். பீ. ஹேரத் குழுவொன்றை அமைத்துள்ளார்.

மாநகர சபையின் எல்லை விபரம், அதற்கு உட்படும் கிராம சேவகர் பிரிவுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவையும் முன் மொழியப்படும்.

இவ்விடயமாக பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பிரஸ்தாப குழு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இது பற்றிய கருத்துக்களையும் ஆலோச னைகளையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சங்கங்கள், நிறுவனங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மழையினால் டெங்கு மீண்டும் தீவிரமடையுமென அச்சம்




டெங்கு நோயினால் இறப்போர் தொகை கடந்த 6 வார காலத்தில் பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது. மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக டெங்கு நோய் தடுப்பு செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

டெங்கு நோய் காரணமாக கடந்த 3 மாதத்தில் 63 பேர் இறந்ததோடு 10999 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. முதல் நான்கு வாரத்தில் டெங்கு நோயினால் 48 பேர் இறந்ததோடு கடைசி 6 வாரத்தில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து டெங்கு நோயினால் இறப்போர் தொகை பெரிதும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் டெங்கு நோயை தடுப்ப தற்காக சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமை ச்சு, சுற்றாடல் அமைச்சு, ஊடக அமைச்சு அடங்கலாக பல அமை ச்சுக்கள் உள்ளடங்கிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக டெங்கு நோய் பரவு வதை தடுப்பது குறித்து பாடசாலை மாணவர்கள் உட்பட சகல மக்க ளையும் அறிவூட்டவும் டெங்கு பரவும் இடங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

டெங்கு அபாயம் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் அடையாளங் காணப் பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு தமது சுற்றுச் சூழலில் டெங்கு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்கள் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற்றம்






யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன.

நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.
மேலும் இங்கே தொடர்க...

29 மார்ச், 2010

பொன்சேகா மருமகனை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு இலங்கை அரசு அறிவிப்பு







இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அளிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ராணுவ தளவாடங்களில் ஊழல்

இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும், அவருடைய மருமகன் தனுனா திலக ரத்னே மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.

திலக ரத்னேவுக்கு சொந்தமான நிறுவனம் மூலமாக ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி..டி. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, தலைமறைவாக இருக்கும் திலக ரத்னேவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், மீண்டும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.4 கோடி பறிமுதல்

மேலும், சர்வதேச போலீசின் உதவியையும் இலங்கை அரசு கேட்டுள்ளது. வெளிநாடுகளில் திலக ரத்னே பெயரில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தனுனா திலக ரத்னேயின் தயார் அசோகா திலக ரத்னே, இலங்கையில் இரண்டு வங்கிகளில் வைத்திருந்த பணத்தை சி..டி. போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரு வங்கியில் இருந்து ரூ.21/2 கோடியும் மற்றொரு வங்கியில் இருந்து ரூ.11/2 கோடியும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், கொழும்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலக ரத்னேவுக்கு எதிரான ராணுவ பேர ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ரூ.10 லட்சம் பரிசு

அப்போது, `திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும்' என சி..டி. தரப்பு சார்பாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சி..டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `இலங்கையில் தான் திலக ரத்னே இருக்கிறார். ரோமிங் செல்போனை பயன் படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். எனவே, இலங்கை முழுவதும் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மேலும், அவரை பிடித்து கொடுத்தாலோ அல்லது அவருடைய இருப்பிடம் குறித்து தகவல் அளித்தாலோ ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திலக ரத்னே பற்றி தகவல் கிடைத்தால் சி..டி. துறைக்கு தெரிவிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம்


தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் அந்நாட்டின் மிகவும் வயதான மணமகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
தெற்கு தைவானின் டைனன் பகுதியில் உள்ள டாவோயிஸ்ட் கோயிலில் அர்ச்சகராக உள்ளார் லின் சுங். இவர் அண்மையில் சீனாவின் ஹுனன் மாநிலம் மெயின்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தைபேயிலிருந்து வெளிவரும் ஆப்பிள் டெய்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், நாடெங்கும் இப்போது இவரைப் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. லின் இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனிமையாக வசித்து வந்தாலும், இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார்.
இதுகுறித்து லின் கூறுகையில், ள்ள்உன்னுடைய வாழ்க்கைத் துணை ஹுனன் பகுதியில் உள்ளார். அவரை தேடிப் போய் மணந்து கொள் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் என்னிடம் கூறினார். அதன்படி அவளை மணந்து கொண்டேன். இதுவரை நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. வயதான காலத்தில் எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, இப்போது திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறு?ளிளி என்றார் லின்.
லின்னின் தத்துப் பிள்ளைகளில் ஒருவர், தனது அப்பாவின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. சீனாவில் உள்ள மனைவியை தைவானுக்கு அழைத்து வர முயற்சியில் லின் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதியைச் சேர்ந்தபெண்களை 13 ஆயிரம் தைவானியர்கள் மணந்து கொண்டனர். இது கடந்த ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தைவானியர்களில் 60 சதவீதம் ஆகும்.
மேலும் இங்கே தொடர்க...

சிறார்களின் பாதுகாப்பில் பெற்றோரின் அக்கறை பிரதானம்




பணத்துக்காக அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக குழந்தைகளைக் கடத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்கள் உண்மையிலேயே மிகக் கொடூரமானவையா கும். காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென்றும் இதனைக் கூறலாம்.

இத்தகைய கொடூர சம்பவமொன்று யாழ்ப்பாணம், சாவகச் சேரியில் இடம்பெற்றிருக்கிறது. சாவகச்சேரி இந்துக் கல்லூ ரியில் பயின்ற திருச்செல்வம் கபில்நாத் என்ற பதினேழு வயது மாணவன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கப்பம் பெறுபவதற்காகக் கடத்தப்பட்டுள்ளான். இறுதியில் அம் மாணவன் கொலை செய்யப்பட்டு சடலமாகி மீட்கப்பட் டுள்ளான்.

அம்மாணவன் கடத்தப்பட்டதற்கான நோக்கம் பெரும் பணத்தைக் கப்பமாகப் பெறுவதற்காகவென்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. வர்த்தகரான தந்தையிடம் மூன்று கோடி ரூபா பணம் பெறுவதற்காகவே அம்மாணவன் கடத் தப்பட்டுள்ளான். கடத்தல்காரரின் நோக்கம் நிறைவேறாமல் போனதால் அம்மாணவன் பரிதாபமாகக் கொலை செய்யப் பட்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி படுகொலைச் சம்பவம் தொடர்பான துப்பு விரைவில் துலங்கிவிடுமென நம்பப்படுகிறது.

இது போன்ற கொடூர சம்பவம் குறித்து மக்கள் விழிப் புணர்வுடன் இருப்பது அவசியம். பணத்துக்காக எந்த வொரு கொடிய காரியத்திலும் ஈடுபடும் காட்டுமிராண் டித்தனமான சுபாவம் சிலருக்குள்ளே இயற்கையாகக் காணப்படுகிறது. இதுபோன்ற வன்முறை குணாம்சம் கொண்டோர் யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி எங்குமே இருக்கக் கூடும். இத்தகைய கொடிய குணம் எந்தவொரு இனத்துக்குமோ மதத்துக்குமோ உரியதல்ல.... இவர்கள் இனத்துக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கூற வேண்டும். இக்கொடியவர்களி டமிருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் பெற்றோர் மத்தியில் அவதானம் தேவை.

பணத்துக்காக சின்னஞ்சிறார்களைக் கடத்திய சம்பவங்கள் நாட்டில் முன்னரும் பரவலாக இடம்பெற்றுள்ளன. இவ் விதம் கடத்தப்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபங்களும் நிகழ்ந்துள்ளன. அதேசமயம் மேற்படி படுபாதகர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல் லப்பட்ட சம்பவங்களையும் நாமறிவோம்.

பச்சிளம் பாலகர்களின் உயிரில் விளையாடும் இத்தகைய கயவர்கள் விடயத்தில் முதலில் அவதானமாக இருக்க வேண்டியவர்கள் பெற்றோராவர். பாடசாலை, ரியூஷன் போன்ற இடங்களுக்கு சிறார்களைத் தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. நம்பிக்கையான நபர் ஒருவரின் துணையுடன் அனுப்புவதே சிறந்ததாகும். கொடியவர்களிட மிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இதுவே உகந்த வழி. பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் உரிய கவனம் செலுத்தாமையே இதுபோன்ற விபரீத சம்பவங்களுக்குக் காரணமாக அமைகிறது.

எமது நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பாக உரிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. சிறுவர் பாது காப்பு தொடர்பில் பொலிஸாரின் கடந்த காலப் பணிகள் மெச்சத்தக்கவை. கடத்தல்காரர்கள் பலர் கடந்த காலத்தில் பொலிஸாரால் கைதாகியமை ஞாபகமிருக்கலாம். இவ்விட யத்தில் பொலிஸார் விசேட கவனமெடுத்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

எனினும் பெற்றோர் முன்னேற்பாட்டுடன் நடந்துகொள்வதே இங்கு முக்கியம்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கமில்லை, பல்வேறு வகையான திருத்தங்களை மேற்கொள்வோம்-அரசு



எமது அடுத்த அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படமாட்டாது. ஆனால் தற்போதைய அரசியல் யாப்பில் பல்வேறு வகையிலான மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள 17 ஆவது திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரப்போவதாகவும் வெளிநாடுகளின் தேவைக்கு ஏற்ப அது அமைக்கப்பட்டுவருவதாகவும் சில தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு விடயத்தை இங்கு தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதாவது புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதனை பாராளுமன்றத்திடம் நாங்கள் விட்டுவிடுகின்றோம். ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு வகையான திருத்தங்களை நாங்கள் மேற்கொள்வோம். எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூறும் ஒரு பதவியாக மாற்றியமைத்தல், குறிப்பாக ஜனாதிபதி பதவியை பொறுப்புக்கூறும் பதவியாக மாற்றியமைத்தல், மேலும் பிரதேச மற்றும் தொகுதி முறைமை ஆகியவற்றைக்கொண்ட கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தல், அமைச்சு ஆலோசனைக் குழுக்களை மேலும் பலப்படுத்தல், பாராளுமன்றத்துக்கு இருக்கின்ற நிதி தொடர்பான அதிகாரங்களை மேலும் பலப்படுத்தல், அரச நிறுவனங்களை பலப்படுத்தல், அத்துடன் பிரதேச சபைகளுக்கான அதிகாரங்களை விஸ்தரித்தல், கிராம சபைகளை உருவாக்குதல் போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்திலும் அது உருவாக்கப்பட்ட விதத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக அரசியலமைப்பு பேரவை நிறுவப்படும் முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் நோக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. பாரபட்சமற்ற முறையில் செயற்படும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவது சிறந்தது. ஆனால் 17 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. அதாவது ஏனைய நாடுகளில் எவ்வாறு இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன மற்றும் நிறுவப்படுகின்றன என்பது தொடர்பில் ஆராய்ந்துபார்க்கவேண்டும். ஒற்றையாட்சி முறையின் கீழ் அரசியலமைப்பில் மாற்றங்களுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றையதினம் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்களிலும் புளொட் தலைவர் பங்கேற்று உரையாற்றினார். இது தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.


12


மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா தொடர்பான விசாரணைகளுக்கு புதிய குழு நியமனம்





இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் எனவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டு வழக்குகளுக்கும் ஒரு குழு நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு விரோதமானது எனச் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இந்த புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. _
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவிப்பு




இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைப்பெற்ற ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அனோமா பொன்சேகா இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் சரத்பொன்சேகா தற்போது இருமல் மூலம் பாதிக்கபட்டுள்ளதாகவும், இவ்வாறான நோய்கள் வரக்கூடாது எனவும், இந் நோயினால் தனது கனவர் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். _
மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பிரதேச மக்களுடன் சந்திப்பு





மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன்(பவன்) மற்றும் புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா பகுதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்கள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை வரவேற்றுப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் தி.த.சித்தார்த்தன் அவர்கள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு இப்பகுதிகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் விளக்கிக் கூறினார். அத்துடன் தொடர்ந்தும் நாம் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதுவே எமது முக்கிய நோக்கமாகும். எனவே மக்கள் அனைவரும் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராசேந்திரன்குளம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். அங்கு அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது, அப்பகுதியில் கடந்தகாலங்களில் புளொட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது என்றும், இதற்கு பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்தியதுடன், புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புளொட் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவுவழங்க வேண்டுமென்றும், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதன் மூலமே கடந்த 10வருட காலமாக மேற்கொள்ளப்படாதிருந்த வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை, சம்பூர் தவிர அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லையென அரசு முடிவு






நுரைச்சோலை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையங்கள் தவிர வேறு அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூரிய, காற்று, உயிரியல்வாயு போன்று மாற்று முறைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, அனல் மின் நிலையங்களினால் சூழல்மாசு ஏற்படுவதனாலே இனிமேல் அனல் மின் நிலையங்கள் அமைக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச காபன் கோட்டாவின் பிரகாரம் தனி நபருக்கான சேதனக்கழிவு அளவு 2100 ஆகும்.

இலங்கை தனி நபர் ஒருவரின் சேதனக் கழிவு அளவு 600 ஆகும். இரு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் சேதனைக்கழிவு அளவு 400 ஆல் அதிகரிக்கும். மரங்களும் காபனை உறிஞ்சுவதால் இந்தத் தொகை மேலும் குறைவடையும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

28 மார்ச், 2010

அரசியல் யாப்பை அரசு முழுமையாக திருத்தாது மஹிந்தயில் சிந்தனை உள்ளவை மட்டுமே திருத்தப்படும் - சம்பிக்க






அரசியல் யாப்பை அரசாங்கம் முழுமையாக திருத்தம் செய்யாது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மட்டுமே திருத்தப்படும். வெளிநாட்டு அழுத்தம் காரணமாக அரசாங்கம் யாப்பை முழுமையாக திருத்தப்போவதாக வும் இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டை முழுயாக நிராகரிப்பதாக அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (28) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப் பெற்று இந்த அரசியல் யாப்பை திருத்த அரசாங்கம் தீர்மானத்துள்ளது. அரசியல் யாப்பில் எந்தெந்த பகுதிகள் திருத்தப்படும் என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. யாப்பில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் அந்தப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும்.

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய பதவியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்துள்ளோம். அமைச்சுக்களின் ஆலோசனை சபை முறையை மாற்றவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தவும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களை பலப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை எவ்வாறு மாற்றப்படும் என விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதேச சபைகளின் எல்லைகளை மாற்றி கூடுதல் அதிகாரம் வழங்கவும் சகல கிராம சேவகர் பிரிவிலும் ஜனசபாக்களை அமைக்கவும் தொகுதிவாரி முறையையும் விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தவும் உள்ளோம்.

17 வது திருத்தத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்தி ஒழுங்கான முறையாக மாற்றப்படும்.

யாப்பிலுள்ள சில பகுதிகளை சிறிய பெரும்பான்மை பலத்துடன் மாற்றலாம். சில பகுதிகளை 2/3 பலத்துடனும் சர்வஜன வாக்குடனும் மாற்ற வேண்டும். யாப்பை முழுமையாக திருத்தும் தேவை அரசுக்கு இல்லை. 1978 ஆம் ஆண்டில் போன்று யாராலும் முழுமையாக யாப்பை திருத்த முடியாது.

பிரதான கட்சிகள் யாவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. அவை வெறும் தேவதைக் கதைகளாகவே உள்ளன.

உலக நாடுகளில் லிபரல் பொருளாதார கொள்கைகள் அழிந்து விட்டன. ஜப்பான் முதல் அமெரிக்காவரை இன்று மஹிந்த சிந்தனையில் உள்ளவாறு உள்நாட்டு பொருளாதார முறைகளை பின்பற்றுகின்றன. உலக நாடுகள் கைவிட்ட லிபலர் பொருளாதார முறையை ரணில் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

மின்சாரத்துறையை அழித்த ரணில் சகலருக்கும் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று 88 வீதமான மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட் டுள்ளது. 3 வருடத்திற்குள் சகலருக்கும் மின்சாரம் வழங்கப்படும். கையடக்கத் தொலைபேசி பாவனை செய்வோர் தொகை 3 மில்லியனில் இருந்து 14 மில்லியனாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அறிவு 30 ஆக அதிகரித்துள்ளதோடு 6 வருடத்தில் 60 வீதமாக உயர்த்தப்படும்.

1983 கலவரத்தை தூண்டி நாட்டை சீரழித்தது ஐ.தே.க. அரசாங்கமே. ஆனால் இன்று அந்தப் பொறுப்பை சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும் என்று ரணில் கூறியுள்ளார். ஐ.தே.க. வின் தவறினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்பல்ல.

யுத்தக் குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்க ளுக்கு எதிராக அரசாங்கம் அமுலில் உள்ள சட்டங்களின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.தே.க. ஆட்சிகளைப் போன்று வதை முகாம்களை அமைத்து எமது அரசு தண்டனை வழங்காது. புதிய பாராளுமன்றத்தில் தெரிவாகும் ஐ.தே.க. எம்.பிகளில் படித்தவர்கள் அரசியல் யாப்பை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர் நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை






குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர் கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் நோய்வாய்பட்டிருப்போருக்கு விசேட சிகிச்சையளிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 66 பணிப்பெண்களும் 04 ஆண்களுமே இன்று நாடு திரும்புகின்றனர்.

இவர்களுள் ஒருவர் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டவ ரெனவும் இவரை வைத்தியசாலை யில் அனுமதித்து சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பணியகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் நலனுக்காக எந்தவொரு அழுத்தத்தையும் எதிர்நோக்கத் தயார் - ஜனாதிபதி






நாட்டுக்கு எதிரான சர்வதேச சக்திகளை நன்கறிந்துள்ள நான் இந்நாட்டு மக்களுக்காக எந்த அழுத்தத்திற்கும் முகம் கொடுப்பதற்கும் தயாராக உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பண்டாரகமவில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு எனது வாழ்நாளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் கருத்தில் கொள்ளாது செயற்பட்டேனேயன்றி தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் பண்டாரகம பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், எனக்கு எதிராக பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை நாட்டு மக்கள் நிரகரித்து விட்டார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நான் முகம் கொடுத்த அச்சுறுத்தல்களிலிருந்து என்னை மீட்டெடுத்தது இந்நாட்டு மக்கள்தான். எனக்கு இந்த நாட்டை விடவும் பெறுமதி யானது எதுவுமே இல்லை. அதனால் விடுவிக்கப்பட்டி ருக்கும் நாட்டைப் பாதுகாப் பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் நாட்டு மக்கள் தான் வலு சேர்க்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வலுவாகவும், துரிதமாகவும் முன்னெடுக்க வேண்டிய வேலைகள்தான்.

நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பாராளுமன்ற ஆட்சி அதிகாரமே ஐ.ம.சு. முன்னணிக்கு இருந்தது. என்றாலும் அண்மையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது 47 மேலதிக ஆசனங்களைக் கொண்டதாக அரசாங்கம் இருந்தது. அதனால் சகலரும் ஒற்றுமையாக செயற்படுங்கள்.

2005 ஆம் ஆண்டில் நான் மஹிந்த சிந்தனையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அச்சமயம் நாடு பிளவுபட்டிருந்தது. கடல் பரப்பில் மூன்றிலிரண்டு பகுதியும், சிங்கப்பூரைப் போன்ற 23 பங்கு நிலப்பரப்பும் பயங்கரவாதிகளிடம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவர்கள் தனியான பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தார்கள். அவர்களை அச்சமயம் ஏதாவது ஒரு நாடு ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.

அதனால் பதவிக்கு வந்ததும் தாயகத்தின் மீது அன்பு கொண்ட சக்திகளை இணைத்துக் கொண்டு நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை மக்களின் வேண்டுகோள்படி மேற்கொண்டேன். அந்தவேளையில் சபாநாயகர் ஒருவரை எம்மால் தெரிவு செய்ய முடியாத பாராளுமன்றம் இருந்த போதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்து நான் தேர்தல் நடத்தவில்லை. மாறாக நிலைமையை உணர்ந்து துரிதமாகச் செயற்பட்டேன்.

மக்களின் வேண்டுகோள்படி நாட்டைக் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து ஐக்கியப்படுத்தி யுள்ளேன்.

அத்தோடு நின்றுவிடாமல் அரச துறையை வலுப்படுத்தவும், நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுத்தேன். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாயகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதனடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீதிகள், துறைமுகங்கள், நீர்ப்பாசனத்துறை மின்னுற்பத்தி, மின்வழங்கல் உட்பட சகல துறைகளும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

நாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகத்தான் கடன் பெறுகின்றோம். மாறாக கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று உண்பதற்காக அல்ல. அந்த ஆட்சிக் காலங்களில் கோதுமை மாவுக்கென மில்லியன் கணக்கில் கடன் பெறப்பட்டிருக்கின்றது. அந்தக் கடன்களை இன்றும் நாம் வட்டியுடன் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பை எமது விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு நாம் உரமானியம் வழங்குகின்றோம். மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம்.

இதுதான் எமது கொள்கை. நாட்டில் பிரச்சினை இருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை. அதனால் எமக்கு துரித அபிவிருத்தி மிகவும் அவசியம். இதற்கு வலுவான பாராளுமன்றம் இன்றியமையாதது. கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு என்றார்.

இக்கூட்டத்தில் ஐ.ம.சு.மு.யின் களுத்துறை மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்கள் குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, டாக்டர் ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுண வர்தன, நிர்மல கொத்தளாவல மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் டியூடர் தயாரட்ன, ஜயந்த ஜயவீர, அப்துல் காதர் மசூர் மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...



சிகாகோ: ஒசாமா பின்லேடன் ஆரோக்கியமாக இருப்பதாக அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த வன் கூறி இருக்கிறான். அமெரிக்காவின் எப்.பி.ஐ. போலீசார் சிகாகோ நகரில் அல்&கய்தா இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜா லக்ரா சிப் கான் என்ற டாக்சி டிரைவரை கைது செய்தனர். அவர், அல்&கய்தா இயக்கத்துக்காக செயல்படும் காஷ்மீரி என்பவருடன் தொடர்பு வைத்து இருந்தார். அவர்கள 2 பேரும் பேசிய பேச்சை அமெரிக்க போலீசார் ரகசியமாக டேப் செய்துள்ளனர்.
அதில், “பின்லேடன் உயிரோடு இருக்கிறாரா? என்று கான் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த காஷ்மீரி, “பின்லேடன் ஆரோக்கியமாக இருக்கிறார். தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார்’’ என்று கூறி உள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தூதரகம்மீதான தாக்குதல் சந்தேநபர்களுக்கு எதிராக நோர்வே வழக்குத்தாக்கல்





நோர்வே ஓஸ்லோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்திய எட்டுப் பேருக்கு எதிராக நோர்வே அரசாங்கத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுள் ஏழுபேர் இலங்கையிலிருந்து நோர்வே சென்று குடியுரிமை பெற்றவர்கள் என்றும், எட்டாமவர் இலங்கையிலிருந்து சென்ற சட்டவிரோத குடியேறியெனவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் ஏனையோர் 25வயதுக்கு உட்பட்டவர்களாவர். தூதுவராலய உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...