7 ஜூன், 2011

முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வாழ்த்து



தமிழக முதல்வர் ஜெயலலிதா, சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பொது மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை வகுத்துகொண்டிருந்தாலும், சினிமா நடிகர்கள் என்னவோ ஒவ்வொரு நாளும் தங்களது குடும்பத்துடன் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் மே 4ஆம் தேதி கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் முதல்வரை சந்தித்தார்கள். நடிகர் கமல்ஹாசன் முதல்வரை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கௌதமி, மகள் சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர். இதே போல நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள்.

நடிகர் பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினர், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சுகுமாரி, சச்சு, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோரும் முதல்வரை சந்தித்தார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

"திரைத்துறையினூடாக ஈழத்தமிழருக்கு சேவைகள் செய்யத் தயங்கமாட்டேன்" - பாடலாசிரியர் பா.விஜய் (சிறப்பு நேர்காணல்)

“திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன் என பாடலாசிரியரும் நடிகருமான பா.விஜய் தெரிவித்தார்.

கொழும்புப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பதற்காக இலங்கை வந்திருக்கும் அவரை கொழும்பில் நாம் சந்தித்தோம். ஆடம்பரமில்லாத தோற்றத்துடன் அடக்கமாக எம்மை வரவேற்ற பா.விஜய், பல்வேறு தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழு விபரத்தை இங்கே தருகிறோம்.

கேள்வி: நீங்கள் பெற்ற தேசிய விருதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்:

பதில்: தேசிய விருது என்பது இந்திய தேசத்தினுடைய பெருமிதமான ஒரு விருது. ஆட்டோகிரேப் திரைப்படத்தின் 'ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக இவ்விருது எனக்கு கிடைக்கப்பெற்றது.

தன்னம்பிக்கையை இளைய சமூகத்தினர் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதே எனது பாரிய கனவு. அதை நான் இத்திரைப்படப் பாடலின் வாயிலாக நிறைய விதைத்தேன்.

மிகப்பெரிய இளைய சமூகம் இவ்வளவு கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் உள்ள ஒரு நாட்டில் பின்னோக்கி செல்கின்றார்கள் என்பது விசித்திரமானது.

இந்த இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் உணர்வு எனக்கு உள்ளதுடன் எனக்கு தன்னம்பிக்கை உணர்வுகள் பற்றிய கருத்துக்கள் மீது இருந்த அபரிதம் காரணமாகவும் இப் பாடல் இயற்றப்பட்டது.

கேள்வி: நீங்கள் நடித்த திரைப்படமான இளைஞன் திரைப்படத்தைப்பற்றி...

பதில்: கலைஞரால் வடிவமைக்கப்பட்ட இத்திரைப்படமானது சிறிய பட்ஜெட் உடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் பட்ஜெட் ரீதியிலும் கதையிலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கதைக்களமாக மாறியது.

இத்திரைப்படத்தில் குஷ்பு, மீராஜெஸ்மின், நமீதா, வடிவேலு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கலைஞரின் வசனத்தில் உருவாகிய இத் திரைப்படத்தில் எனக்கு நடிக்கக் கிடைத்தது பெரிய பாக்கியம் என்றே கூற வேண்டும்.

இவ்வாறு ஒரு பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படம் மீண்டும் உருவாகும் என்பது சந்தகம்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: நான் நிறைய தமிழர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவர் மத்தியிலும் நிறைய கருத்துக்கள் உள்ளன அவை அனைத்தும் ஒருமித்த கருத்துக்களாக மாற வேண்டும்.

இப்போது நிலவும் அமைதி எப்போதும் நிலவ வேண்டும். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என யாரும் கிடையாது. ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு சகஜ வாழ்க்கையை முன்னெடுப்பது என்பது எல்லோர் மத்தியிலும் உள்ள ஒரு வினா.

வெளிநாடுகளில் உள்ள சொந்தங்கள் தமக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகளும் இவர்கள் மத்தியில் உண்டு.

இதற்கு எல்லோரும் சொல்வதைப்போல நானும் தமிழ் நாட்டில் இருந்து உதவி பெற்று தருகிறேன் என சொல்வதற்கு நான் ஒன்றும் பெரிய அரசியல்வாதியோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும் பெரிய சக்தியோ கிடையாது.

திரைத்துறையைச் சார்ந்த கவிஞன், நடிகன் என்ற வகையில் இந்தத் துறையினூடாக ஈழத் தமிழருக்கு எவ்வாறான சேவைகள் செய்ய முடியுமோ, அதனைச் செய்யத் தயங்கமாட்டேன்.

கேள்வி: நீங்கள் இலங்கைக்கு வந்ததன் காரணம் என்ன?

பதில்: நான் இலங்கைக்கு வந்தது இதுவே முதன் முறை என்பதுடன், கொழும்புப் பல்கலைகழகத்தின் மாணவர்கள் நடாத்தும் அழகிய கவியரங்கத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கிறேன். அத்துடன் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ள எனது அடுத்த திரைப்படமான 'சமர்" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான இடங்களைப் பார்வையிடவுள்ளேன்.

கேள்வி: வீரகேசரி இணையத்தள வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: பத்திரிகைத்துறையென்றாலே பொதுவாக ஒரு பழைய பழமொழி உண்டு ஒரு பெரிய செல்வந்தன் தனது செல்வத்தை அழிக்க வேண்டும் என்றால் ஒன்று சினிமாத்துறையை தெரிவுசெய்ய வேண்டும் அல்லது பத்திரிகைத்துறையை தெரிவுசெய்ய வேண்டும்.

இப்படியான ஒரு நிலையிலிருந்து பத்திரிகைத்துறை முன்னேற்றம் கண்டுள்ளதன் காரணம் ஈழத்தமிழர்களின் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளமையே ஆகும்.

ஈழம் போன்ற பின்தங்கிய தேசத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலும் உரிமை மறுக்கப்படும் நிலையிலும் வீரகேசரி பத்திரிகை 80 வருடங்களைப்பிடித்து பல ஆவணங்களை மக்கள் மத்தியில் கொண்டுவருகின்றது.

நடப்பதை நிஜமாக வெளிப்படுத்தக்கூடிய தைரியமுள்ள அலுவலர்களை உள்ளடக்கிய வீரகேசரி நூற்றாண்டு விழாவை கொண்டாட எனது வாழ்த்துக்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக தியாகி பொன். சிவகுமாரனின் 37ம் வருட நினைவு தினம்...!!!‏




தமீழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் உந்துதலாக அமைந்த தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராக யாழ் மாணவர்களால் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு... தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் செயற்பட்டு... 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவர் பொன். சிவகுமாரன் அவர்களின் 37ம் வருட நினைவுதினம் இன்றாகும்.

பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்த வேளை இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாற்றினையும் இவர் படைத்தார்.
பொன்.சிவகுமாரானின் வரலாற்றை எடுத்துக் கொண்டால்... உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.


இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து அமரத்துவம் அடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆரம்பித்து வைத்த அரசியல் கொலைகளுக்கு முன்பாக 1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் தமிழ் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் பொன்.சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்த நிலையில்... மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறி... அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். ஆனால் சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.



இதே நேரம் பொன்.சிவகுமாரன் பிறந்த ஊரான உரும்பிராயை சேர்ந்த 'உரும்பிராய்' நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடாத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார்.

ஆனால் கோப்பாயில் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது 24 வயதில்... 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் பொன். சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலக் கட்டத்தில் பொன். சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் யாழ் எங்கும் பொன். சிவகுமாரனின் படங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அந்நேரம் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் புத்தகங்களில் சட்டைப் பைகளில் பொன். சிவகுமாரனின் படம் இருந்தது மட்டுமல்லாமல் சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் சென்ற நிகழ்வாக அந்நிகழ்வு அமைந்தது.

பின்னாளில் தரப்படுத்தலின் பின் தமது கல்வியை தொடர தமிழ் நாட்டிற்கு சென்ற பள்ளிப் பருவங்களில் பொன். சிவகுமாரனின் போராட்டங்களில் ஈர்ப்புக் கொண்ட மாணவர்களினால் 80 களின் ஆரம்பத்தில் மறைந்த கிழக்கிலங்கை போராளி இராஜ்மோகனின் வழி நடத்தலில் 'தமிழீழ மாணவர் பேரவை' ... 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தமிழகம் சென்ற அகதி மாணவர்களுக்கு பள்ளிகள்... கல்லூரிகளில் அனுமதிகள் எடுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல்... அகதி முகாம்களில் இருந்த அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியாக இருந்து அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு முதன் முதலில் வித்திட்ட பொன். சிவகுமாரனின் வழியில்... அக்கொலையை அமிர்தலிங்கம் கோஷ்டியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வலையில் சிக்கி பொன்னாலை கிருஷ்ணன் கோவிலில் வைத்து கொலை செய்த அமரத்துவம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொன். சிவகுமாரனும் ஒரே திகதியான 26 ஆம் திகதி பிறந்திருந்தாலும்... சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்க்கும் வரலாற்றை உருவாக்கிய பொன் . சிவகுமாரனின் வழியில் தமிழீழ விடுதலைப் புலிகளின்... 'தமிழீழ விடுதலைக்கான போராட்டம்' என்று கூறி தமிழ் இனத்தையே அழித்த... முள்ளி வாய்க்காலில் முடிவுற்ற... போராட்டத்தில் இணைந்த உறுப்பினர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்து அவர்களின்

உயிரிழப்பில் தம் குறுநில ஆட்சியை நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அமரத்துவம் அடைந்தது சயனைட் குப்பியை கடித்து அல்ல என்பது வரலாறு.

இந்நிலையில் வீர வரலாறு படைத்த நாளாக... ஜூன் 6 ஆம் நாள் பொன். சிவகுமாரன் நினைவாக 'தமிழீழ மாணவர் எழுச்சி நாள்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நாளில் தமிழீழ மாணவர் பேரவையினரும் ( பொன். சிவகுமாரன் நினைவாக 'தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக நினைவு கூறுமிடத்து... தற்போது தமிழருக்கான போராட்டம் என்று தொடக்கி பல அழிவுகளின் பின் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தும்... ஊனமுற்றும்... பொருளாதார வசதியற்றும் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கும் பொது, புலம்பெயர் தேசங்களில் வசதியாக உள்ளவர்கள் (முக்கியமாக அக்காலக் கட்டத்தில் இலங்கையில் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் தமிழகத்தில் தமிழீழ மாணவர் பேரவை (Tamil Eelam Students Organaization - TESO) மூலம் கல்லூரிகளில் அனுமதி எடுத்து தமது கல்வியை தொடர்ந்து தமது வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள்) இவ்மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் எடுத்து அவர்களின் கல்வியை தொடர தம்மாலான உதவிகளை அவர்களை சென்றடையும்படி எவ் வழியிலோ... சரியான வழியில் (திரும்பவும் ஓர் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடாமல்)செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

(சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது)
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு உள்நாட்டு பிரச்சினையாகும் அந்நிய தலையீட்டை அனுமதிக்க முடியாது: ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்நாட்டுப் பிரச்சினையாகும். இதில் அந்நிய நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிந்தும் நாம் புலிகள் கேட்டதை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. மாறாக இனங்களின் உள்ளங்களை இணைக்கக்கூடிய வகையான தீர்வை வழங்க அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துவருகின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாடுகளின் உதவியுடன் புலிகள் நவீன பொருட்களை பெற்று இந்த நாட்டில் இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையை சீர்குலைத்தனர். ஆனால் இன்று இந்த பன்நோக்கு தொலைத் தொடர்பு கோபுரத்தின் ஊடாக மீண்டும் வடக்கு தெற்கு மக்களை இணைக்க முடிந்துள்ளது. இந்த கோபுரத்தைப் போன்று தமிழர்களின் உரிமைகளும் அபிவிருத்திகளும் விரைவில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொக்காவில் பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரத்தை நேற்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில் கடந்த வருடம் கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினோம். இதன்போது அனைத்து அரச அதிகாரிகளையும் சந்தித்து வடக்கின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக பேசினோம். இன்று இப்பகுதிக்கு வரும்போது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. மக்களின் குறைகள் மிகவும் வேகமாக தீர்த்து வைக்கப்பட்டுவருகின்றன.

முழு நாடும் ஒரே அளவில் சீரான அபிவிருத்தியை அடையவேண்டும். ஒரே நாடு என்பதே அரசின் நோக்கமாகும். நாட்டில் என்ன நடக்கின்றது? உலகத்தில் என்ன நடக்கின்றது? என்று இலங்கை வாழ் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் இலங்கை ஓர் ஜனநாயக நாடு. அந்த வகையில் கொக்காவில் பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரம் வடக்கு மக்களின் தகவல் உரிமையை உறுதிபடுத்தியுள்ளது.

வடக்கு தெற்கு இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த பன்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரம் பங்களிப்பை செய்யும்“. புலிகள் இந்தக் கோபுரத்தை அழித்தது இரு இனங்கள் இடையே உள்ள புரிந்துணர்வை இல்லாதொழிப்பதற்காகும். இதற்காக வெளிநாடுகளும் உதவிகளை செய்தன. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் சிங்கள மக்களிடையே இனவெறி காணப்பட்டது. சந்தேகங்கள் தோன்றின. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகின. இந்த நிலை இனித் தொடர அனுமதிக்க முடியாது. இலங்கையில் பயங்கரவாதம் இனி இருக்க முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது. மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். விமர்சிக்க முடியும். கருத்துக்களை தெரிவிக்க முடியும். இவற்றை பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அனைவரதும் கடமையாகும்.

வடக்கு கிழக்கு குழந்தைகளுக்கு கல்வி சுகாதாரம் உட்பட அனைத்தையும் கொடுப்பதே எமது அவாவாகும். வடக்கு மக்களுக்கு போதும் போதும் என்கின்ற வகையில் அனைத்தும் வழங்கப்படும். அரசியல் தீர்வை பொறுத்தவரையில் அது உள்நாட்டு விடயமாகும். அரசியல் உட்பட அனைத்து விவகாரங்களும் பேச்சுக்கள் மூலமே தீர்க்கப்படமுடியும். இதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதேவேளை உள்நாட்டு விவகாரத்தில் அந்நிய நாடுகளின் தலையீட்டையோ அழுத்தங்களையோ அனுமதிக்க முடியாது. எந்த அழுத்தத்துக்கும் அடிபணிந்து புலிகள் கேட்டதை நாம் வழங்கப்போவதில்லை. பலாத்காரமாக இதனை வழங்குமாறும் எமக்கும் எவரும் கூற முடியாது.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கக்கூடிய அரசியல் தீர்வை வழங்க முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன. சில அரசியல்வாதிகள் புலிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்கின்றனர். இவர்களின் வீடுகள் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்தாலும் இவர்கள் அங்கு இருப்பதில்லை. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் வீடுகளை வாங்கிக்கொண்டு அங்கு தமது பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கின்றனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி இயக்கத்தினரால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி முஹமட் உவைஸ் தெரிவித்தார்.

இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்கவின் உத்தரவின்பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.குலதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்கப்பட்டுள்ளன.

40 மில்லிமீற்றர் ரக மோட்டார் ரவைகள் 02, கிறனைட்டுகள் 02, ரி56 ரக ரவைகள் 08 என்பனவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிய கைதி கைது

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறையிலிருந்து நான்கு மாதங்களின் முன்னர் தப்பிச் சென்ற குறித்த கைதி தம்புள்ள பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற கைதி தனது பெயரை மாற்றி திருகோணமலை பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் பெண் பொலிஸாரின் ஊடாகவே கைதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சவூதியில் இலங்கையருக்கு 5 வருட சிறையும் சவுக்கடியும்



சவூதி அரேபியாவில் குடித்துவிட்டு மதுபான விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 430 சவுக்கடியும் வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் தெற்கு நகரான டைப் பகுதியில் இவர் மதுபான விற்பனையில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும், குடிபோதையில் இருந்தமையால் 80 சவுக்கடிகளும் மதுபான விற்பனையில் ஈடுபட்டதால் 70 சவுக்கடிகள் 5 முறையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு தண்டனை முடிந்தவுடன் அவரை நாடு கடத்துமாறும் அவரது பெயரை கருப்பு பெயர் பட்டியலில் இணைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா வழங்கிவரும் ஆதரவு பாராட்டத்தக்கது: பிரதமர்

இலங்கைக்கு சீனா அளித்துவரும் உதவிகளுக்கு பிரதமர் டி.எம். ஜயரட்ண நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு, இறையாண்மை என்பவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவினையும் அவர் வரவேற்றுள்ளார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று முன்தினம் சீன மன்றத்தின் தலைவர் டாய் பின்ங்கோவை சந்தித்து பேச்சுவக்ஷிர்த்தை நடத்தியுள்ளார். சீனாவின் தென் மேற்கு பகுதியின் தலைநகரமான குயின் மிங்க் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் நடைமுறையிலான சிறந்த ஒத்துழைப்பு காணப்படுவதாக சீன மன்றத் தலைவர் டாய் பின்ங்கோ பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குயின் மிங்க் பகுதியில் இடம்பெற்ற 19ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூரில் பேச்சு

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் நடைபெற்ற 10 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆயுத பாதுகாப்பு சவால்கள் எனும் தலைப்பில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றியிருந்தார்.

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ. ஏ.எஸ். திசாநாயக்கவும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ரஷ்யாவின் பிரதி பிரதமர் சேர்ஜி இவனவ்வுடனும் இருதரப்பு பேச்சு நடத்தியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் கடற்படைத்தளங்களை அமைப்பதற்கு சீனா முயற்சிக்கவில்லை: லியாங்

இந்தியாவுக்கு அண்மையாகவுள்ள நாடுகளில் சீனா கடற்படை தளங்களை அமைக்க முயற்சிக்கின்றது என்ற கருத்தை சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவான்கிலி மறுத்தார்.

10 ஆவது ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டின் ஒரு கூட்டத்தில் பாகிஸ்தானில் குவாடர் என்னும் இடத்திலும் இலங்கையின் ஒரு துறைமுகத்திலும் கடற்படைத் தளங்களை அமைக்க முயல்கின்றது என்ற அபிப்பிராயத்தை அவர் மறுத்தார்.

தென்னாசிய பிராந்தியத்திலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் முக்கிய கவனம் எதிலுள்ளது எனக் கூறுமாறு இந்திய அரசியல்வாதியொருவர் கேட்டபோது அது சீனாவின் இறைமை, ஸ்திரத்தன்மை, அரசாங்க முறைமை என்பவை தொடர்பானவை எனக் கூறினார்.

சீனா இப்போது சோஷலிஸ் முறையை பின்பற்றுகின்றது. இந்தப்பாதையில் தலையிடும் எதுவும் சீனாவின் நலனை பாதிப்பதாகும். சீனாவின் எந்தவொரு பகுதியையும் சீனாவிடமிருந்து பிரிக்கும் முயற்சிக்கும் ஆதரவளிப்பதும் சீனாவின் நலனை பாதிப்பதாகும். சீனாவின் பொருளாதார சமூக அபிவிருத்தியில் தலையிடும் எதுவும் சீனாவில் நலனில் தலையிடுவதாகும் என அவர் கூறினார்.

நாம் பொருளாதார வளர்ச்சியில் பிரதான கவனம் செலுத்துகின்றோம். இராணுவத்தை முன்னேற்றுவதற்கு எமது வளங்களில் சிறிதளவை பயன்படுத்துகின்றோம் என சீன பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச பாராளுமன்றத்தின் பிரதிநிதி மார்க் டியூரினேல் என்பவரேவெள்ளைக்கொடி வழக்கை அவதானிப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதி அவதானித்தார். பாராளுமன்ற ஒன்றியத்திலிருந்து வருகைதந்துள்ள மார்க் டியூரினேல் என்பவரே மேற்படிவழக்கை நேற்று திங்கட்கிழமை முதல் அவதானித்து வருகின்றார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் டியரல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படிவழக்கின் பிரதிவாதியாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா குறிப்பிடப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை அவதானிப்பதற்காக நேற்றையதினம் அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்கவினால் மன்றுக்கு அழைத்துவரப்பட்டார். மன்றில் ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் அவருக்கென தனியான கதிரைமேசையும் போடப்பட்டுள்ளது.

மன்றுக்குள் வருகைதந்தவுடன் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டியை அறிமுகம்செய்துவைத்தார். அதனை தொடர்ந்தே சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி அந்த பிரதிநிதிக்கு வழக்கின் பிரதிவாதியான சரத்பொன்சேகாவை அறிமுகம்செய்துவைத்தார்.

சரத்பொன்சேகாவும் அந்த பிரதிநிதியும் ஐந்தாறு நிமிடங்கள் ஏதோகதைத்துக்கொண்டிருந்ததுடன் வழக்கு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கின் வாதப்பிரதிவாதங்களை அவதானித்த அவர் ஏதே குறிப்பெடுத்துகொண்டக்ஷிர். இந்த வழக்கின் நேற்றைய விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் மன்றுக்குள் குழுமியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் பாலித்த ரங்கேபண்டாரவுடன் ஏதோ கதைத்துவிட்டு மன்றின் பின்வாசல் வழியாகவே அவர் வெளியேறிவிட்டார்.

இதேவேளை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் பிரதிவாதி தரப்பின் இருசாட்சிகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியளித்ததன் பின்னர்வழக்கின் 11 ஆம், 12 ஆம் சாட்சிகளுக்கு அழைப்பாøண விடுக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிநின்றார்.

இந்த வழக்கின் 11 ஆவது சாட்சியாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜயசிங்கவும் 12 ஆவது சாட்சியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முற்பகல் 11 மணிக்கு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமல் போனோரை கண்டறிந்து தருமாறு கோரியும் காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்காமையைக் கண்டித்தும் நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் முற்பகல் 11 மணிக்கு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமற் போனோரை தேடியறியும் குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் இன்றுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான பதில் எதனையும் முன் வைக்காத நிலையில் இருந்து வருகின்றது. இதனால் காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் தமது உறவுகளைத் தேடி கவலையுடனும் கண்ணீருடனும் வாழ்ந்து வருகின்றனர்.

பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காணாமற் போனோரை தேடியறியும் குழு எதிர்வரும் 2011.06.08 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு லிப்டன் சுற்று வட்டத்தில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இத்தகைய போராட்டத்தின் மூலமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து அரசாங்கத்தை பணிய வைக்க முடியும். நீண்ட காலமாக துயரத்தில் வாழ்ந்து வரும் இந்த குடும்பங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு அனைவரையும் அணி திரளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய வடிவில் தனியார் ஓய்வூதியத் திட்ட சட்டம் கொண்டுவரப்படும்: காமினி லொக்குகே

விரைவில் புதிய வடிவில் தனியார் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

தற்போது தனியார் ஓய்வூதிய சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள போதிலும் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கு அமையவும் தொழில் ஆலோசனைச் சபையின் இணக்கப்பாட்டிற்கமையவும் புதிய வடிவில் தனியார் ஓய்வூதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...