29 மே, 2010

குப்பைத்தொட்டியிலிருந்து சிசு மீட்பு; பிரசவித்து வீசிய தாயும் கைது





மஸ்கெலியா - லக்கம் கடை வீதியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து நேற்றுக் காலை சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

காலை 5.45 அளவில் கடைவீதியில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சிசுவை மீட்டெடுத்தனர். சிசு எறியப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பிறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குப்பைத் தொட்டியில் சிசுவின் அழுகைச் சத்தத்தைக் கேட்டவர் ஏனையவர் களுக்கும் கூறியுள்ளார். எனினும், உயிருடன் கிடந்த சிசுவை காலை 6.45 அளவில் பொலிஸார் வந்து மீட்டு மஸ் கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிசு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல ப்பட்டது. சிசு தேகாரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தச் சிசுவைப் பிரச வித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்த தாயை நேற்றுக் காலை 9 மணியளவில் பொலிஸார் கண்டு பிடித்தனர். குப்பைத் தொட்டியிலிருந்து குறித்த ஒரு வீடுவரை உதிரச் சொட்டுகள் காணப் பட்டதை அடிப்படையாக வைத்து அந்த இளம் தாய் கண்டறிப்பட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக