
ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர்.
தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும்.
தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு.
கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.

ற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
ள்ள பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தில் தடம் பதித்திருக்கும் முக்கேஷ் அம்பானி இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்படன் சுற்றுவட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
க்களுக்கு எதிராக இஸ்ரேல் உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியுள்ளார்.