20 பிப்ரவரி, 2010

அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி





அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி
திரைப்படம் திரைப்படம்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வடக்கு வரிசிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தலிபான் தலைவர்களின் ஒருவரான ஜமாலுதீன் ஹக்கானி குருப்பை சேர்ந்த வர்கள் பாஸ்டன் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் அங்கு 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தலிபான்களின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் முகமத் ஹக்கானியும் ஒருவன் என்று தெரியவந்துள்ளது.

இவன் அல்- கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்து இருக்கிறான். இவன் தலிபான் தீவிரவாத இயக்கத்தில் 2-வது கட்ட தலைவராக செயல்பட்டு வந்தான்.

தனது அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியின் தலைமையின் கீழ் கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தான். தலிபான்களின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் 2 முக்கிய தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் கொன்றுள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முகமது ஹக்கானியின் அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியையும் கொல்ல அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.



சரத் கைது : கிரிபாவ பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள குருணாகல் கிரிபாவ பிரதேசசபையில், ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கிரிபாவ பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி. குணரட்ண தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து இந்தப் பிரேரணையை எவ்வித விவாதங்களும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றின.



நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் : அனோமா பொன்சேகா





ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டைக் கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது விடுதலைக்காக சட்டத்துடன் போராடும் அதேசமயம், ஆலயங்களை நாடி பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வேறு வழி கிடையாது. ஏனென்றால் இன்று இலங்கையில் மிக மோசமான குடும்ப ஆட்சி மேலோங்கியுள்ளது" என்றார்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் கூறுகையில்,

"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் வன்முறைச் சூழலில் பாதுகாப்புகள் பறிக்கப்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆனால், அரசாங்க வேட்பாளர்களுக்குச் சகல பாதுகாப்புகளும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான நிலையாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் ஜனநாயக முறையில் நடைபெறாது. எதிர்க்கட்சிகள் மிக மோசமான வன்முறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு எதிரொலிஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
தூதரை நேரில் அழைத்து ஆட்சேபனை
தலாய்லாமாவை ஒபாமா சந்தித்தது தொடர்பாக, அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஒபாமா சந்திப்பு திபெத் பகுதியை 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனா ஆக்கிரமித்து வருகிறது. திபெத்துக்கு சுயாட்சி கோரி, திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார். ஆனால் அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று உலகத் தலைவர்களை சீனா மிரட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க தலாய்லாமா திட்டமிட்டார். ஆனால் தலாய்லாமாவை சந்தித்தால், அமெரிக்க-சீன நட்புறவு பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி, நேற்று முன்தினம் தலாய்லாமாவை ஒபாமா அழைத்துப் பேசினார். அப்போது, திபெத் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பால், சீனா கடும் கோபம் அடைந்துள்ளது. சீனாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேனை சீன துணை வெளியுறவு மந்திரி குய் தியாங்கை நேரில் வரவழைத்து, தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். கடும் கண்டனம் மேலும், அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மா ஜாவோசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தலாய்லாமாவை ஒபாமா சந்தித்ததற்கு சீனா தனது கடும் அதிருப்தியையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது. இது, சர்வதேச உறவுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயல். அமெரிக்க-சீன கூட்டு அறிக்கையையும் மீறிய செயல். திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதாகவும், திபெத் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அமெரிக்கா பலதடவை உறுதி அளித்துள்ளது. இந்த சந்திப்பு, அதற்கு எதிராக அமைந்துள்ளது. தலையிடாதீர் சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது. சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது. அமெரிக்க-சீன உறவுகளில் ஆரோக்கியமான, சீரான வளர்ச்சி ஏற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும். இச்சந்திப்பால் ஏற்படும் கெட்ட விளைவுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விளக்கம் இதற்கிடையே, ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஏற்கிறது. அதே சமயத்தில், திபெத் பகுதியின் மனித உரிமைகள் குறித்து கவலைகொள்கிறது. அப்பகுதியின் கலாசார உரிமைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு வந்தார்:
விமானத்தால் மோதியவரின் அடையாளம் தெரிந்தது
3 பேர் பலி



அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள உள்நாட்டு வருவாய் சேவை அலுவலக 7 மாடி கட்டிடம் மீது நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டி விமானம் மோதியது. இதையடுத்து கட்டிடம் தீப்பிடித்துக் கொண்டது. இதில், விமானத்தில் வந்து மோதியவர் உள்பட 3 பேர் பலியானார்கள். 13 பேர் காயம் அடைந்தனர். இது முதலில் தீவிரவாத தாக்குதல் என்று கருதப்பட்டது.

ஆனால், ஜோசப் ஆன்ட்ரூ ஸ்டேக் (வயது 53) என்ற கம்ப்ïட்டர் என்ஜினீயர், வருவாய் சேவைப்பிரிவு மீதான கோபத்தில், இந்தச் செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் ஒரு இணையதளத்தில் எழுதி இருந்த தற்கொலைக் குறிப்பு சிக்கி உள்ளது. அவர் ஆஸ்டினில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு, ஜார்ஜ்டவுன் நகரில் இருந்து விமானத்தை கிளப்பி வந்து மோதியதாக தெரிய வந்துள்ளது.



சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு



அமெரிக்காவின் மூலப்பொருட்களை கொண்டுஇந்தியா, ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்துவிடும்பாகிஸ்தான்அலறல்சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் ஜமீர் அக்ரம் பேசுகையில், ஆக்கப்பூர்வ பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்து பெறும் அணு மூலப்பொருட்களை இந்தியா அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், அது ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்து விடும் என்றும் கூறினார்.

அதற்கு இந்திய தூதர் ஹமீது அலி ராவ் மறுப்பு தெரிவித்தார். தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, ஐ.நா. முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...