26 மார்ச், 2010

காசைக் 'கரி'யாக்கும் தேர்தல் ' வேட்டு'க்கள்!



தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வருகின்றது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில், தாம் தான் வெல்லப் போகின்றோம் என்று ஒவ்வொரு வேட்பாளரும் தமது பிரசாரக் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. அதுவும் சாதாரண முழக்கம் அல்ல... செவிடு அதிரும்படியான முழக்கம்...

தேர்தல் வேட்பாளர்களின் அதிர்வேட்டு பிரசார முழக்கங்கள் தான் மக்களின் செவியை அதிர வைக்கின்றதென்றால், அவர்களை வரவேற்கும் ஆதரவாளர்கள் கொளுத்தும் பட்டாசுகளின் பேரிரைச்சலோ சொல்லி மாளாதது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஆரவாரமாகக் கலந்து கொள்கின்றார்களோ இல்லையோ அவ்வப்பகுதியை அதிர வைக்கும் வேட்டுக்களுக்கு மட்டும் குறையே இருப்பதில்லை.

நேற்று கொழும்பு நகரின் பிரதான வீதி ஒன்றில், இரு பிரதான கட்சிகளினதும் கூட்டங்கள் நடைபெற்றன. அச்சமயம் கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் சத்தத்தால் அப்பகுதியே அதிர்ந்தது... நடுநடுங்கியது....

அந்தத் தெருவே புகைமூட்டத்தில் மூழ்கியது. பட்டாசுகளின் துகள்கள் தெருவையே நிறைத்தன. எத்தனையோ அடி நீளத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கிடையே முக்கோண வெடிகள் வேறு.... அதிர்வுக்குக் கேட்கவா வேண்டும்?

இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், ஒரு தரப்பு வெடிக்கும் பட்டாசுகளை விட மற்றத் தரப்பு போட்டிப் போட்டுக் கொண்டு வெடிக்க வைப்பதுதான். ஆளும் கட்சிக்காரர் ஒரு கட்டு வெடி என்றால், 'உனக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்லன்' என்பதைப் போன்று எதிர்தரப்பு அதை விட மேலாக பட்டாசுகளை வெடிக்க வைப்பதுதான்....

காசைக் கரியாக்கி இப்படிப் போட்டிப் போட்டுக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தத்தான் வேண்டுமா? இதனால் யாருக்கு, என்ன லாபம்?

பட்டாசுகளுக்குச் செலவழிக்கும் லட்சக்கணக்கான பணத்தை ஏழை எளிய மக்களின் வாழ்வுக்காக, ஏன் வசதியற்ற பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்தலாமே...?

இத்தகைய வேட்டுக்கள், "இப்படிக் காசைக் கரியாக்குகிறார்களே" என்ற ஆதங்கத்தைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்துமே தவிர, போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கப் போவதில்லை... இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால், செவிடுபடும் மக்களின் காதுகளுக்காவது விடுதலை கிடைக்குமல்லவா?
மேலும் இங்கே தொடர்க...

மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் ஆகாரம் நஞ்சுத் தன்மையால் 112 மாணவர்கள் வைத்தியசாலையில்

மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 06 வயதிற்கும் 12 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தற்போதைய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கப்பலுடன் கடத்தப்பட்ட 20 இலங்கையரையும் விடுவிக்க நடவடிக்கை


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலில் உள்ள 20 இலங்கை சிப்பந்திகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பிரிட்டன், கென்யா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களினூடாக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்தது.

எகிப்தில் இருந்து ஈரான் நோக்கிச் சென்று கொண்டிருந்த பிரிட்டனுக்கு சொந்தமான மேற்படி கப்பல் நேற்று முன்தினம் ஓமான் கடலில் வைத்துக் கடத்தப்பட்டது.

கடத்தப்பட்டபோது கப்பலில் இருந்த சிப்பந்தி ஒருவர் இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பிரச்சினையின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர்களை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டமைச்சு மேலும் கூறியது.

மேலும் இங்கே தொடர்க...

ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி



தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன்

ஏகப் பிரதிநிதியென்பது ஜனநாயகத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகமென்றும், தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, இணக்கப்பாட்டு அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் பிஒஃபர்பீ தன்னார்வ அமைப்பின் ஸ்தாபகரும், தந்தை செல்வாவின் புதல்வருமான சட்டத்தரணி எஸ்.ஸி.சந்திரஹாசன் தெரிவி த்தார். உண்மையின் யதார்த் தத்தின் அடிப்படையில் செயற்பட்டால் தமிழ் மக்கள் சாதிக்க முடியு மென்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டார்.

பிதமிழ் மக்களின் எதிர்காலமும் காலத்துக்கு ஏற்ற அணுகுமுறையும்பீ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பிரமடா ஹோட்ட லில்பீ நடந்த கலந்துரையாடலில் சந்திரஹாசன் கருத்துரை வழங்கினார்.

தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் இணக்கப்பாட்டு அணுகுமுறையில் செயற்பட்டதால் பல முக்கிய விடயங்களைச் சாதித்திருக்கிறோம். குறிப்பாக, இந்தியாவில் அகதிகளாக உள்ள சுமார் 29 ஆயிரம் பேருக்கு இலங்கைப் பிரஜாவு ரிமையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.

அதேபோன்று, அகதி முகாம்களில் வாழும் மாணவர்களுக்கு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டதுபூ என்று சுட்டிக்காட்டிய சந்திரஹாசன், புநான் 26 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்துள்ளேன். தெல்லிப்பழையில் உள்ள என் வாழ்விடத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏனைய கிராமங்களில் மக்களின் வாழ்க்கை நிலையையும் அவதானித்தேன்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஜப்பானும், ஜேர்மனியும் மீண்டெழுந்ததைப் போல், நாமும் மீள முடியாதாபீ என்று சிந்தித்தேன். அப்போதுதான் புமக்களை முன்னேற்ற ஏதாவது செய்ய முடியாதா?பூ என்று ஷான் சண்முகநாதன் கேட்டார். இப்போது அவருடன் இணைந்து அதனை நிறைவேற்ற முன்வந்துள்ளேன்பூ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஷான் சண்முகநாதன் வரவேற்புரை நிகழ்த்துகையில், புதமிழர்கள் புதிய அணுகுமுறையைக் கைக் கொண்டு புதிய பாதை வகுத்துச் செயற்பட வேண்டும். எமது தேவைகளையும் சிந்தனைகளையும் நாம் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை இணங்காண வேண்டும். ஒரே மனநிலையில் ஒன்றுபட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளும் போது இணக்கமுடன் செயற்பட வேண்டும்பூ என்று குறிப்பிட்டார்.

பராசிரியர் சோ. சந்திரசேகரன், இலண்டனிலிருந்து வந்திருந்த சொலிசிட்டர் ஆரிய ஸ்ரீஹரன், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ஆகியோரும் கருத்துரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த பெருந்திரளான புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் தமிழ் மக்களின் கரிசனைகள், எதிர்காலவியல் நோக்கு தொடர்பில் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்வாறான கலந்துரையாடலைத் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு ள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர் ஷான் சண்முகநாதன் தனது நன்றி உரையில் குறிப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜோன்ஸ்டன், இந்திக பாராளுமன்றம் வர முடியும்





கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக மீண்டும் கூட்டப்படும் போது, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க முடியும் என்பது அரசின் நிலைப்பாடு. வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்ற த்தை மீண்டும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்துக்கு மட்டுமே கூட்ட முடியும் எனினும் கலைக்கப்பட்டுள்ள பாராளும ன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் 225 பேரைக் கொண்ட உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

இதேவேளை, அரசியல மைப்பின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் ஏற்பட மாட்டாது என அமைச்சரவைக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அறிவித்துள்ளது என்றும் அவர் தெரி வித்தார்.

அவ்வாறெனின் எதிர்வரும் 6ம் திகதி அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காக சபை கூடும் போது மேற்படி அமைச்சர்கள் வரமுடியுமா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது முடியும் என அவர் பதி லளித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

செயல்திறன் மிக்கவர்களுக்கே ஐ. ம. சு. மு. அரசில் உரிய இடம்




விருப்பு வாக்குகளுக்காக எவரும் முண்டியடிக்க தேவையில்லை - ஜனாதிபதி
விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவை இல்லை. அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு வந்தாலும் குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி அரசாங்க த்தில் செயல் திறன் மிக்கவ ர்களுக்கே உரிய இடம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெலிமடையில் தெரிவித்தார்.

விருப்பு வாக்கு பட்டி யலில் குறை வான வாக்குக ளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவர் செயல் திறன்மிக்கவராயின் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கப் பின்நிற்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐ. ம. சு. மு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாவட்ட மட்டத்தில் நடத்தும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் வெலிமடை, கெப்பிட்டிபொல மகாவித்தியாலய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகை யில் :- பதுளை மாவட்ட ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் மத்தியில் விருப்பு வாக்குக்கான முண்டியடிப்பு இல்லை என நான் அறிகின்றேன். இதனையிட்டு நான் சந்தோஷப்படுகின்றேன்.

விருப்பு வாக்குக்காக எவரும் முண்டியடிக்கத் தேவையில்லை. ஒருவருக்கு நான்கு வாக்குகள் உள்ளன. முதல் வாக்கை வெற்றிலைச் சின்னத்திற்கு முன்பாக புள்ளியிட்டு அளியுங்கள். இதர மூன்று விருப்பு வாக்குகளையும் பாவித்து உங்களது பாராளுமன்ற பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள்.

விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் முண்டியடித்து, முரண்பட்டுக்கொள்ளாதீர்கள். விருப்பு வாக்குப் பட்டியலில் அதிகப்படியான விருப்பு வாக்கைப் பெற்று முதலாமிடத்தில் வந்தாலும், குறைவான விருப்பு வாக்குகளைப் பெற்றாலும் ஐ. ம. சு. மு. அரசாங்கத்தில் செயல்திறன் மிக்கவர்க ளுக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படும். இதனை ஐ. ம. சு. மு. அபேட்சகர்கள் சகலருக்கும் சொல்லி வைக்க விரும்பு கின்றேன். நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படவிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் கதைத்து, கதைத்து காலம் கடத்தும் பாராளுமன்ற அதிகாரம் எமக்குத் தேவை யற்றது. மாறாக வேலை செய்யக்கூடிய வலுவான பாராளுமன்றமே அமைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதிலும் வலுப்பெறுவதிலும் தான் எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் தங்கியுள்ளது. அப்போதுதான் இப்போதைய விடவும் நாளைய மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதனை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

இதேவேளை, பண்டாரவளைப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிவரும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். இதற்கென எட்டு (8) பில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

நான் ஜனாதிபதி பதவியை ஏற்ற நான்கு வருட காலப் பகுதியில் பய ங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்தினேன். அத்தோடு துரித அபிவிருத்திக்கான ஒளியையும் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். 2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக முதலில் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தினேன். தென்பகுதி மக்களை ஓரணியில் திரட்டியிராவிட்டால் வட பகுதியை ஐக்கியப்படுத்தி இருக்க முடியாது.

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது எம்மை நல்ல மனிதராகப் பார்த்த சிலர் பின்னர் எம்மை சகோதரர்கள் கம்பனி என விமர்சிக்க தொடங்கினார்கள். என்னைப் பொறுத்தவரை குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் குடும்பமே அழிந்துவிடும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளை நானறிவேன். அதற்கான பதில் மஹிந்த சிந்தனையின் முன்னோக்கு கொள்கை பிரகடனத்தின் 63ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இச்சமயம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கட்சிபேதமின்றி சகலரும் பங்கேற்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம்




ஏப். 22ம் திகதி கூடும் புதிய பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும் முன்னுரிமை
தேர்தலின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினுள் எதிர்க் கட்சியினரை வேறுபடுத்தி வைக்காமல் நாட்டின் நன்மைக்காக, அபிவிருத்திக்காக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கும் அவர்களது பங்களிப்பை நேரடியாக பெற்றுக் கொள்ளவும், அவர்கள் தாமாகவே முன்வந்து பங்களிப்பை செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்.

குறிப்பாக இவ்வாறான நடவடிக்கைக்கு அரசியலமைப்பில் தடைகள் உள்ளதா என்பது பற்றி ஆராயவும், அவற்றை களையவும் முன்னுரிமை வழங்கப்படும்.

நடைபெறவுள்ள தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டுக்கு அதிக வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல் பலம்மிக்க பாராளுமன்றத்தையும் உருவாக்குவது உறுதியாகியுள்ளது.

நாட்டின் நலனுக்காகவும் பொது நோக்கத்திற்காகவும் அனைத்து தரப்பினரையும் நேரடியாக பங்களிப்பு செய்ய வைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த நடைமுறை டொனமூர் ஆட்சி முறையின் கீழ் இருந்தது. அத்துடன் நாட்டின் நலனுக்காக தன்னோடு இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

எவரையும் ஒதுக்கி வைப்பது அவரது நோக்கமல்ல. அதற்கான தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கென அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் அடித்தளமொன்றை அமைத்துள்ளது.

தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக கட்சிகளுக்கிடையே முறுகல்கள், மோதல்கள் ஏற்படுவதற்கு பதிலாக கட்சிக்குள்ளேயே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

அதேவேளை ஊழல் இடம்பெறுவதற்கும் இந்த விகிதாசார தேர்தல் முறையே அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைக்கவும், பலமற்றோர் பாதிக்கப்படுவதற்கும் இந்த தேர்தல் முறை வழிவகுக்குகின்றது.

சில தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமலும், சில தொகுதிகளுக்கு இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதையும் விகிதாசார தேர்தல் முறையில் காணலாம். இவை நீக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் உள்ளனர். இதனை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை யுடன் கூடிய பலம் மிக்க அரசு தேவைப்படுகிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...