19 ஜனவரி, 2010

ஆசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு வருகை-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வெளிநாட்டுக் கண்காணிப்புக்குழு இன்றுகாலை இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி ஆசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல்களைக் கண்காணிக்கும் குழு ஆகியனவே இவ்வாறு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வருகை தந்துள்ள தேர்தல் கண்காணிப்புக் குழுவில் 50பேர் அடங்குவதாகவும் தேர்தல்கள் செயலக ஆலோசகர் பந்துல குலதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொலீஸ் உத்தியோகத்தரும் மனைவியும் பொலநறுவைப் பிரதேசத்தில் வைத்து கடத்தல்-

பொலன்நறுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அவரது மனைவியும் கடந்த 17ம் திகதி இரவு இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கதுருவெல பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.பி திஸாநாயக்க என்ற 38 வயதான பொலீஸ் கான்ஸ்டபிளும் அவரது மனைவியுமே கடத்தப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலீசார் தெரிவித்துள்ளனர். கதுருவெல, பெரகும் பிளேசிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் மூன்று முச்சக்கர வண்டிகளில் சென்ற 10பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவினர் இவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்திற்குப் பின்னர் வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லையெனத் தெரிவித்துள்ள பொலீசார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் விசேட பாதுகாப்பு-


வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வழிநடத்தலின் பேரிலேயே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வருகை தருகின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் அனுமதியற்ற நிலையில் வாடகை வாகன சாரதிகளாக, விமானநிலையத்திற்கு அருகாமையில் தொழிலாற்றுவதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தவிர மாதாந்தம் சுமார் 6ஆயிரம் வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு இலங்கை வருவதற்கான உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பொலீசாரும் விமானநிலைய பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து பாதுகாப்புத் தொடர்பான புதிய வியூகமொன்றினை ஏற்படுத்தியுள்ளனர்.

ஓசியானிக் வைகிங் கப்பலில் இருந்தவர்களில் எஞ்சிய 13பேரையும் மீள்குடியமர்த்த நியூசிலாந்து இணக்கம்-

அவுஸ்திரேலிய ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்த 78இலங்கைத் தமிழர்களில் எஞ்சியிருந்த 13பேரையும் மீள்குடியேறலுக்காக ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டின் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியக் கப்பலான ஓஷியானிக் வைக்கிங் கப்பல்மூலம் இந்த குடியேறிகள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில், குறித்த 78பேரில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்டோர் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும், குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியிருந்த 13பேருக்கே நியூசிலாந்து குடியேற்ற அனுமதியை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியா பிரதமருக்கும் நியூஸிலாந்து பிரதமருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணக்கத்தை நியூஸிலாந்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பிரஜையின் கடனட்டை இலகத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தவர் கைது-

புறக்கோட்டையில் வைத்து கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். இவரை நேற்றையதினம் கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அமெரிக்கப் பிரஜையொருவரின் கடனட்டையைப் பயன்படுத்தி 2லட்சத்துக்கும் அதிகமான பண மோசடியில் ஈடுபட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலீசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி 1லட்சத்து 97ஆயிரத்து 500ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்றையும் இவர் கொள்வனவு செய்துள்ளதுடன், இரவு ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக சந்தேகநபர் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாவை செலவிட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. வணிக வங்கியொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையயே சந்தேகநபர் கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.


பாங்கோக் ஐ.டீ.சி சிறையில் இலங்கை அகதிகளின் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதம்-


தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு பகுதியிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் கடந்த 03வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டமிட்டபடி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் அனைவரும் நீர்ஆகாரம் ஏதுமின்றி இன்று 02வது நாளாகவும் தொடர்கின்றனர். தாய்லாந்து பாங்கொக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவுசெய்து 3வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களால் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்பட்ட 06கோரிக்கைகளுக்கு ஜ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூனிடமிருந்தோ, யூ.என்.எச்.சீ.ஆர் தலைமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவிலிருந்தோ, தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகத்திலிருந்தோ பதில் கிடைக்காத நிலையில் எந்தவொரு மனிதஉரிமை மனிதநேய அமைப்புக்களோ இவர்களை சென்று பார்வையிடவில்லையென்றும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுவினருடன் இன்று கலந்துரையாடல்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கென வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்புக் குழுவினருக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகள் குறித்து தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் விளக்கிக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது முதல் இன்றுவரை இடம்பெற்ற வன்முறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

No Image
தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் திட்டமிட்டபடி நேற்று திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆண்கள்இ பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் அனைவரும் நீர் ஆகாரம் எதுவும் இன்றி இரண்டாவது நாளாக தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து பாங்கொக் யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தில் பதிவு செய்து தற்போது 3 வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகளினால் ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட ஆறு கோரிக்கைகளுக்குஇ

ஜ.நா வின் பொது செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்களிடம் இருந்தோஇ யூ.என்.எச்.சீ.ஆர் தலைமை அலுவலகம் சுவிஸ் ஜெனீவாவில் இருந்தோஇ தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் பிராந்திய அலுவலகத்தில் இருந்தோஇ எந்தவிதமான மனித உரிமை மனித நேய அமைப்புக்களோ இது வரையில் இவர்களை சென்று பார்வையிடாத காரணத்தினால் இவர்களுடைய கடுமையான உண்ணாவிரதப் போரட்டம் நீர் ஆகாரம் எதுவுமற்ற நிலையில் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.

இவர்களுடன் பாகிஸ்தான்இ நேபாளம் யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகளும் இவ் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியசுவாமி சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும்இ மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். கினிகத்தேனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார். சுப்பிரமணியசுவாமி போன்றவர்களின் பேச்சை கேட்டு நடக்குமளவுக்கு இலங்கைத் தமிழர்கள் அரசியல் ஞானமற்றவர்கள் அல்லர்.

கடந்த காலங்களில் சுப்பிரமணியசுவாமி இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் நீந்தி குளித்து அரசியல் கொண்டாட்டம் போட்டவர். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மகிந்தவிற்கு வாக்களிக்க வேண்டுமென தற்போது பயமுறுத்துகிறார். இந்தியா இலங்கைக்குக் கடந்த வருடம் செய்த மறக்கமுடியாத உதவியினாலேயே தற்போது தமிழர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிட இலங்கையின் அரசியல் மேடைகளில் இந்தியாவை பற்றியோஇஇந்தியஇதமிழ்நாட்டு தலைவர்களைப் பற்றியோ விமர்சிக்க கூடாதென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவோஇ அந்தநாட்டு அரசாங்க கட்சி தலைவர்களோ நடந்துமுடிந்த மனிதபேரவலத்திற்கு துணைபோகாமல் இருந்திருந்தால் அவர்களைப்பற்றி விமர்சிக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது.

கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசு உதவிசெய்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருக்கிறார். அந்த நன்றின்கடனை மனதில் கொண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதியுபகாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்த இந்தியா முயற்சிக்கின்றது.

இந்தியா சொல்வதை செவிமடுக்க இலங்கைத் தமிழர்கள் தயாராக இல்லை என்ற செய்தியை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கு தெளிவாக சொல்லும். இன்று மக்கள் ஆதரவை பெற்ற சகல சிறுபான்மை கட்சிகளும் ஒரே அணியில் நின்று செயற்படுகின்றன. இந்த ஒற்றுமை சரத்பொன்சேகாவை வெற்றிபெறசெய்வதுடன் முடிந்துவிடக் கூடாது.

எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும். இந்த நாட்டின் தமிழ்இமுஸ்லீம்இ மலையக மக்களின் அடிப்படைஇ அரசியல் பிரச்சினைகளைத் தமிழ்இ முஸ்லிம் கட்சிகள் உள்வாங்கி ஒரே நிழ்ச்சி நிரலின் கீழ்ச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இதையே தமிழ் பேசும் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மலையகத்தில் தற்போது மிகப்பெரிய அரசியல் மாற்றம் தென்பட தொடங்கிவிட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் மிகப்பெரிய சமூக பொருளாதார வாழ்வியல் மாற்றத்தை மலையகத்தில் ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்பதை தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சரத் பொன்சேகாவிற்கு மலையக மக்கள் தெளிவுபடுத்துவார்கள்.

மலையக மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும் என்பதற்காக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இ ஐக்கிய தேசிய முன்னணியோடும்இ எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறது.

இவற்றையெல்லாம் செயல்வடிவமாக்குவதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மலையக மக்கள் முழுமையாக சரத்பொன்சேசாவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.



அமைச்சர்களாக இருந்தோர் மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய சே வையாற்றவில்லை : பி.திகாம்பரம்

No Image
அரசாங்கத்துடன்

இணைந்து யற்படுகின்ற மலையகத்தமிழ் தலைமைத்துவங்கள் மக்கள் நலன் கருதி செயற்படாத காரணத்தினாலேயே மலையகப்பெருந்தோட்டச் சமூகம் மிகமோசமான நிலையில் பின்தங்கியுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்தியமாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் கூறியதாவதுஇ

"இந்த நாட்டில் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களில் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்ற மலையகத் தலைமைகள் இந்த மக்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்யாமல் வெறுமனே காலத்தைச் செலவழித்துக்கொண்டு சுயநலப்போக்குடன் செயற்படுவதால் தான் இன்று மலையகத்தமிழ் சமூகம் பின்தங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமாகயிருந்தால் என்ன பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமாகவிருந்தாலென்ன தற்போதைய அரசாங்கமாகவிருந்தாலென்ன ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக செயற்பட்டு இந்த மக்களுக்கு உருப்டியான சேவைகளைச் செய்யவில்லை.

இதே பொன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமலிருந்தால் தான் எமது சமூகத்திற்கு விமோசனம் ஏற்படும்.வெற்றிப்பெற்ற அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மலையகத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றவர்களுக்கு இனிமேல் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்.

இவ்விடயத்தில் மலையக இளைஞர்கள் உட்பட தொழிலாளர்களும் ஏனையவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை.எமக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறுதான் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

கடந்த நான்கு வருடகாலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தமக்கான மாளிகைகளைக் கட்டுவதிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்வதிலுமே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ள போதும் இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.எனவே மலையகத்தமிழ் மக்களின் வளமாக வாழ்க்கையைக்கருத்திற்கோண்டே நாம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்துள்ளோம்.நாம் பணத்திற்காக விலை போக மாட்டோம்.எமது மக்களையும் விற்க மாட்டோம்." எனத் தெரிவித்தார்



தாய்வானிலிருந்து கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை



No Image
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென தாய்வான் நாட்டிலிருந்து. மூவர் அடங்கிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 8.15 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை
500 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து விரும்பும் துறையில் தொழிற்பயிற்சி



புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அனைவரையும் அவர்கள் முன்னெடுக்க விரும்பும் துறைகளின் அடிப்படையில் 500 பேர்களாகப் பிரித்துஇ அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அருகில் புனர்வாழ்வு வழங்க தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவத ற்காக யாழ்ப்பாணத்தில் 4 இடங்களும்இ வவுனியாவில் 5 இடங்களும்இ வெலிக்கந்தையில் 3 இடங்களும்இ திருகோணமலையில் 3 இடங்களும்இ மட்டக்களப்பில் 4 இடங்களுமாக 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மெனிக்பாமில் உள்ள நலன்புரி முகாம்களில் 4 புனர்வாழ்வு நிலையங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடுவில் ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைவரும் 500 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் துறைஇ விவசாயத் துறைஇ கணனிசார் துறைஇ மிருகவளர்ப்புஇ தையல் துறை என பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுஇ இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் மீன்பிடித் துறைஇ விவசாயத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டவர்களாவர்.

சிறுவயதில் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டதால் கற்க முடியாமல் போனவர்களில் தொடர்ந்து படிக்க விரும்புவோருக்கு கற்பிப்பதற்கும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர இவர்களுக்கு ஆங்கிலமொழி கற்பிக்கப்ப டுவதோடு இசைஇ நடனம் ஆகிய துறைகளிலும் ஈடுபட வசதிகள் அளிக்கப்படுவதாக ஆணையாளர் கூறினார். புனர்வாழ்வு பெறும் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ளதோடுஇ சிலருக்கு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்தபின் இவர்களுக்கு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று தாம் பயிற்சி பெற்ற துறையில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள்இ எதிர்காலம் பற்றி நம்பிக்கையுடனும் சிறந்த மன நிலையுடனும் உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு செயற்பாடு முடிந்த பின்னர் ஒவ்வொரு நபரினதும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்ட பின் ஜனாதிபதி நியமிக்கும் நீதிபதிகள் குழுவின் சிபார்சின்படி விடுவிக்கப்பட உள்ளனர்.

தற்பொழுது 10இ 832 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்களில் 2இ500க்கும் அதிகமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். 2இ500க்கும் அதிகமானவர்கள் கிளிநொச்சியையும்இ 2இ000க்கும் அதிகமான வர்கள் முல்லைத்தீவையும்இ சுமார் 1இ000 பேர் வவுனியாவையும்இ சுமார் 500 பேர் மட்டக்களப்பையும்இ 500க்கும் அதிகமானவ ர்கள் மன்னாரையும்இ சுமார் 500 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



விசாரனைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் உடனடியாக விடுவிப்பு





வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டியவர்களை பிணையில் விடுவிக்கவும் ஏற்பாடு

பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் கைதிகளின் கோவைகளைத் துரிதமாக ஆராய்ந்துஇ அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி 83 மலையக இளைஞர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியிடம் .தொ.கா. விடுத்த வேண்டுகோளின் பேரில்இ இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியு ள்ளார்.

கொட்டகலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான முக்கியஸ்தர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில்இ சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்க ளின் பெற்றோரும் சமுகந்தந்துஇ தமது பிள்ளைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந் தனர்.

கைதிகளின் விபரங்களை அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை பாரிய குற்றச்சாட்டுகளைப் புரிந்தவர்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களைப் பிணையில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம்இ அவசர காலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் அறுநூறு இளைஞர்கள் வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இம்மாத இறுதிக்குள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் திணைக் களம் மேலும் தெரிவித்தது.

ஏற்கனவே 390 கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிப்பது உறுதி

அமைச்சர் டளஸ்



வடக்குஇ கிழக்குஇ மலையகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது உறுதி என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் சமாதானத்தையும்இ அமைதியை யும் விரும்பும் சகல இன மக்களும் ஜனாதிபதியை மீண்டும் தெரிவு செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை மகாவலி கேந்திர நிலையத்தில் நடை பெற்றது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்இ

வடக்குஇ கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் பயங்கரவாதம் அற்ற சூழல் தற்போது நிலவுகின்றது. எனவே தமிழ் மக்கள் இம்முறை எந்தவித தயக்கமும் இன்றி ஜனாதிபதிக்கு வாக்களிப்பது உறுதி.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்இ முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்இ மலையகத்தைப் பிரதிநிதித்துவம்படுத்தும் அமைச்சர் தொண்டமான்இ பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் போன்றோர் இன்று ஜனாதிபதியின் வெற்றிக்காக முழு பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று ஸ்ரீல. சு. கவின் வரலாற்றில் அரசியல் அதி உயர் பீடம் தொடக்கம் சாதாரண மட்டம் வரையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

எனவேஇ தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு கிடைப்பது உறுதியாகும்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. உள்ளூரிலும்இ சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும்இ ஆய்வு மதிப்பீடுகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பாளர்கள் மாறுபட்ட விஞ்ஞாபனங்களைஇ வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம். மற்றைய வேட்பாளரைப் போல் இல்லாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தொடர்ச்சியானதாக மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு என்ற அடிப்படையில் வழங்கியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில் இரு பிரதான வேட்பாளர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் பாரிய மாற்றம் உள்ளது. 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக ஜனாதிபதியும் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக சரத் பொன்சேகாவும் கூறியுள்ளனர்.

எனினும் அரசியலில் அனுபவமுள்ள ஜனாதிபதி வழங்கக் கூடிய அளவிலான சம்பள உயர்வையே கொடுப்பதாக கூறியுள்ளார்.

பொன்சேகா வழங்க முடியாத அதிகரிப்பையே வழங்குவதாக கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வழங்குவதில்லை.

இந்த நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னைய வேட்பாளர்கள் போன்று இம்முறை சரத் பொன்சேகா இல்லை. சரத்பொன்சேகாவின் செயற்பாடுகள் மூர்க்கத்தனத்துடன் கூடியதான வைராக்கியம்இ கோபம்இ குரோதம்இ மோசமான வார்த்தைப் பிரயோகம் போன்றவற்றை வெளிப்படையாகக் கொண்டது.

அதிகாரத்தை கேட்கும் போதே இது போன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவர் அதிகாரத்துக்கு வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வாறு இருப்பார். எனவே மக்கள் ஒரு போதும் இவரை அனுமதிக்கப் போவதில்லை.

பொலிஸ் உயர் அதிகாரிகளின் சீருடையை களைவேன்இ முள்ளுகளை சாப்பிட வைப்பேன்இ பொருளாதார நிபுணர்களை துரத்தியடிப்பேன் என்னும் மோசமான வார்த்தைகளையும் சரத் பொன்சேகா மேடைகளில் பாவித்து வருகின்றார். இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் சரிவராது.

சேறு பூசும் அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்தவர்கள் எதிர்க்கட்சியினர். அவர்கள் இதனை நிறுத்த வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் தற்பொழுது தான் தேசியக் கொடியை தூக்கியுள்ளனர்.

பச்சைஇ நீலம்இ சிவப்பு என்று பல்வேறு வர்ணங்களைக் கொண்ட கட்சிக் கொடிகளை தூக்கியவர்கள் அதனை எறிய வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. சகலரும் ஒன்றிணைந்து 26 ம் திகதி தேசியக் கொடியை தூக்குமாறு கோருகின்றோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கனகரட்ணம் எம்.பி ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு

பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்பார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம்இ ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக மல்லாவிஇ யோகபுரம்இ துணுக்காய்இ ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர்இ வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் பல அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியுமென கூறியுள்ளார்.

மல்லாவியிலும் யோகபுரத்திலும் மீளக்குடியேறிய மக்களுக்கு இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் 50இ தையல் மெசின்கள் 50 வழங்கும் வைபவத்திலும் கனகரட்ணம் எம்.பி கலந்து கொண்டார்.

மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனகரட்ணம் எம்.பியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்ப டுகின்றது. கடந்த புதன்கிழமை மாலை இவர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

வட பகுதியில் இணக்கச் சபைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன



வட பகுதியில் இணக்கச் சபைகளை ஆரம்பிக்க நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு இணக்க சபையை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய மன்றத்தின் ஆணையாளர் அலு வலகம் அனுசரணை வழங்கியுள்ளது.

வட பகுதியில் இதுவரை காலம் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக அங்கு இணக்க சபைகளை ஆரம்பிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் இங்கே தொடர்க...