முல்லைத்தீவு
மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..


ல் பருவப் பெயர்ச்சி, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம் என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி சின்னையா வசந்தகுமார் தெரிவித்தார்.



