30 ஆகஸ்ட், 2009

மேனிபாம் முகாம்
மேனிக்பாம் முகாம்

இடைத்தங்கல் முகாமில் இருந்து வெளியே செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்


இலங்கையின் வடக்கே வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒரு முகாமில் இருந்து அடுத்த முகாமுக்குச் செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புக்கு மத்தியிலும் அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சம்பவம் ஞாயிற்றுகிழமை காலையில் இராமநாதன் இடைத்தங்கல் முகாமில் நடைபெற்றிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தான் நேரில் கண்டதாகவும், தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் தண்ணீருக்குப் பெரும் கஷ்டமான நிலை காணப்படுவதாகவும், கழிப்பறை வசதிகள் கூட போதிய அளவில் இல்லை என்று அந்த முகாமைச் சேர்ந்த ஒரு பெண்மணி தெரிவித்தார்.

இதற்கிடையில் முகாம் வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும், அங்குள்ள கூடாரங்களில் அளவுக்கு அதிகமானவர்களைத் தங்க வைக்கப்பட்டிருப்பதனால் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக மற்றுமொருவர்

கூறினார்

மேலும் இங்கே தொடர்க...
வீடியோ காட்சிகள் தொடர்பில் இலங்கைமீது விசாரணை : எரிக் சொல்ஹெய்ம் -
அரசு மறுப்பு
லண்டனில்
இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வேக்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

"இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.

இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் இந்தக் காணொளி போன்ற ஆதாரங்கள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன.

இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளை வேன் கடத்தலுக்கு அதிகம் ஆளாகின்றனர்" என்றார்.

அரசாங்கம் கடும் எதிர்ப்பு

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை இராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி சுட்டுப் படுகொலை செய்யும் வீடியோ காட்சிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

நட்புறவு ரீதியான நோர்வே அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வேதனையளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சொல்ஹெய்ம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சொல்ஹெய்ம் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சனல்-4 அலைவரிசை வெளியிட்ட சில காட்சிகள் தொடர்பில் நோர்வே வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல எனவும், உறுதிப்படுத்தப்படாத ஒரு வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை!


தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபரும் முன்னைநாள் எதிர்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவு பேருரை பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவ+ப் ஹக்கீம் அவர்கள் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். இதில் அனைத்து ஜனநாயக விரும்பிகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை கோரியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
இளைஞர், யுவதிகளுக்கு வர்த்தக சித்திர வடிவமைப்புப் பயிற்சி : வ.மா. கிராம அபி. திணைக்களம் ஏற்பாடு
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் வவுனியாவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 18 லட்ச ரூபா செலவில் வர்த்தக சித்திரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பயிற்சியளித்து வருகின்றது.

அரச திணைக்களத்தினால் இலங்கையில் முதன்முறையாக இந்தப் பயிற்சி நெறி வவுனியாவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி நெறிக்கு 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கணினி அறிவு, வர்ணமிடல் முறைகள், அலங்காரப் பொருள் ஆக்கம், ஸ்கிரீன் பிரிண்டிங், றப்பர் சீல் தயாரித்தல், விளம்பரப் பலகைகள், பதாதைகள் செய்தல், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் செய்தல், மெடல்கள், கேடயங்கள் செய்தல், என்கிறேவிங், எச்சிங், எம்போசிங், முலாமிடல், மக் பிரிண்ட், பொயிலிங் மற்றும் தச்சுவேலை, வெல்டிங், வயரிங், எம்புறோடிங், டிஜிட்டல் போன்ற விடயங்களில் அடிப்படை அறிவுக்கான பயிற்சி என்பன இதில் பாடங்களாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக இதன் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.ஜசோதரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சி நெறி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என்றும், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் பெலிசியன் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றியதாக விசேட முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி ஆறுமாதங்களுக்கு முழுநேர வகுப்பாக நடத்தப்படும் என்றும், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட துறைசார்ந்த சுயதொழில் வாய்ப்புகளுக்கான திறமையையும், அறிவையும் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அதிகாரியான அ.அருற்வேள்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் கருத்துரை வழங்கினார்.

அவர், "இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னெற முடியும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வீ.குமாரசிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...
தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு






அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யோகநாதன் சுரேஸ்குமார்(31வயது) என்ற இந்நபர் தனது வீட்டிலிருந்த வேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ, இதற்கானபின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர் :





ஆய்வில் மதிப்பீடு
வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன." இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளது-

ஜனாதிபதியிடம் லியம்
பொக்ஸ் தெரிவிப்பு
-

தமிழ் மக்களின் அபிலாஷைகள்



நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்து பேசிய போதே லியம் பொக்ஸ் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட்டு அவர்களது உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் துரிதமாக மீள் குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் பிரிட்டிஷ் அரசின் மூலம் செய்து தர தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் தமது கன்சவேட்டி கட்சி எப்போதும் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமென கூறினார். தமிழ் மக்களின் இன்றைய அச்சம் தொடர்பாகவும் வவுனியா அகதி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரா. சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா அரச அதிபர் இந்தியா, சீனா பயணம்




வவுனியா அரசாங்கஅதிபர்பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் இந் தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார்.

புதுடில்லியில் நடைபெ றவுள்ள பயிற்சிப் பட்ட றையில்கலந்துகொள்வத ற்காக வவுனியா அரச அதிபர் திருமதிபீ. எம்.எஸ். சார்ள்ஸ்இன்று புதுடில்லி செல்கிறார்.

தெற்காசிய பிராந்திய தரத்திலான அனர்த்த நிவாரண முகாமைத்துவம் பற்றியபயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே அவர் புதுடில்லி செல்கிறார்.

புதுடில்லி சென்று திரும்பும் அவர், 6ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரைசீனாவில் நடைபெறவுள்ள மாநா டொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். சீனமகளிர் அமை ப்பு ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டிற்காகவே அவர் சீனாசெல்லவுள்ளார்

மேலும் இங்கே தொடர்க...
தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச்சம்பவம்-

தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச் சம்பவம் நேற்றுமாலையில் அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாறாமைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தவகையில் நேற்றுமாலை 6.45மணியளவில் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜே.வி.பியின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை திஸ்ஸமகாறாமைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தென் மாகாணசபைத் தேர்தலுக்காக கடந்த 21ம் ஆரம்பிக்கப்பட்ட வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இன்றுநண்பகல் 12மணியுடன் நிறைவடைந்துள்ளன. இத்தேர்தலுக்காக 18அரசியல் கட்சிகள் மற்றும் 13சுயேட்சைக்குழுக்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மேலும் இங்கே தொடர்க...
இந்தியாவுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை இலங்கை மேற்கொள்ளுமென புதிய உயர்ஸ்தானிகர்
தெரிவித்துள்ளார்



இந்திய அரசுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப்பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது துரிதகதியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்குமிடையில் முன்பு இருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடையக் கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
அங்குலானைப் பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த கிளைமோர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது


கொழும்பு புறநகரான இரத்மலானையின் அங்குலானைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அதி சக்திவாய்ந்த இரு கிளைமோர் குண்டுகள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளன. கிளைமோர்களை விசேட புலனாய்வுப் பிரிவினரே மீட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...