31 டிசம்பர், 2009

30.12.2009 தாயகக்குரல் 32


இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் புரிந்து கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என புலம் பெயர் தமிழர்களிடமும்; இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனச்சாட்சிக்கு வாக்களிக்காமல் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்கும்படியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சிமாற்றம் பற்றியே பேசிவருகின்றனர். இவர்கள் கருதும் ஆட்சி மாற்றம் என்பது ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது மட்டும்தானா?.

ஆட்சி மாற்றம் ஏற்படுவதானால் பொது தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். இறக்கியபின்னர் அடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. இந்த ஆட்சி மாற்றம் சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என்பதுதான் மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

பிரித்தானியர் பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் இலங்கை ஆட்சியை ஒப்படைத்து சென்றபின்னர் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சி ஆட்சியிலுமே இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிய எண்ணை ஊற்றப்பட்டது குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மக்கள் பலதடவை வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலதடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்காணும் முயற்சியில் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் அவை அப்போதுள்ள எதிர்கட்சிகளினால் முறியடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இன்றுள்ள முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்.

அரசியல் மாற்றத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? இதுதான் தமிழ் மக்கள் முன்நிற்கும் கேள்வியாகும். அதேவேளை ஆட்சிமாற்றத்தைக் கோரும் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இன்று ஆராயவேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ள எதிர்கட்சிகளில் பிரதான கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டுமேயாகும். இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சியாகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா என்பதை சரத் பொன்சேகா தெளிவு படுத்தவேண்டும். சரத் பொன்சேகாவை இயக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய இருகட்சிகளும் மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்குவதிலேயே ஒத்த கருத்துடையவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபிடத்தில் அமர்த்துவது ஜே.வி;பி;யின் நோக்கமாக இருக்காது.

சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசை உருவாக்கவேண்டும் என்றும் அதில் ரணிலைப் பிரதமராக்கவேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் சரத் பொன்சேகா அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.யின் நிர்ப்பந்தத்தால் அந்த நிபந்தனையை கைவிடவேண்டிய நிலைக்கு சரத்பொன்சேகா வந்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஆதரித்து கொழும்பில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்திருந்த பேணியில் பேசிய சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபின்னர் அமையும் தற்காலிக அரசு பிரதமர் இல்லாத தற்காலிக அரசாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் ஆட்சிமாற்றம் பற்றி பேசுகின்றரே அன்றி ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படும் அரசு எப்படி அமையப்போகிறது என்பது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக கூறும் சரத் பொன்சேகா ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக ஏற்படும் புதிய அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதுபற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசமைப்பை உருவாக்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் தெரிவிக்கிறார்.

அப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதே அதிகாரங்களை பிரதமருக்கு கொடுப்பதினால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது.? இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கு மனோகணேசனிடம் இருந்து மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்சங்கம் ஆர்ப்பாட்டம்-

அரச தாதியர் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையானது நண்பகல் 12மணிமுதல் 1மணிவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரே நேரத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 06ம் திகதி மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும், எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் பிறிதொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாதியர் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை, முதலாவது தரப்பிற்கான பதவியுயர்வை 14வருட சேவைக்காலத்தில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை மீனவர்களுக்கு மீன்பிடித்தடை நீக்கம், யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கம்-
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடித் தடையானது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் காலையில் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தவகையில் திருமலையில் சகல பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் நாளை நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென யாழ்ப்பாணம் செல்கின்றனர் வேட்பாளர்கள்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளனர். இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன 2010, ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். அதுபோல் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனவரி 02ம் திகதியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18இலும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
முன்னாள் கடற்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் நட்டஈடு கோருகிறார்-

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட மருதானை ஐ.தே.கட்சி அமைப்பாளர் கைது-

ஐக்கிய தேசியக் கட்சியின் சுதுவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்சிறி ராஜபக்ஷ இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடாட்ந்து மருதானைப் பொலீசிலும் கட்சியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானைப் பகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் அவரை கைதுசெய்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுதுவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் கித்சிறி ராஜபக்ஷவிற்கு தொடர்பிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். முகத்தை மூடிய குழுவொன்று கித்சிறி ராஜபக்ஷவை கடத்திச் சென்றதாக அவரது பாரியாரும் ஆதரவாளர்களும் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

30 டிசம்பர், 2009

பதிவுச்சான்று கோரவேண்டாமென
பொலிசாருக்கு கண்டிப்பான உத்தரவு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு
அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர், ஒருமாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதியவேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய, அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன்பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதியவேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால், சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மாஅதிபர் மெதிவக தெரிவித்தார்.



2012 முதல் கொழும்பில் இருந்து பளை வரையிலான
ரயில் சேவைகள் மீள ஆரம்பிப்பு
இந்திய

அரசாங்கத்தின்

கத்தின் 140 மில்லியன் ரூபா கடனுதவியுடனும் ஓமந்தையில் இருந்து பளை ரையான 96 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். இந்தியக் கம்பனியொன்றினூடாக ரயில் பாதைகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதுதொடர்பான ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் 30 மாதங்களில் ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகள் முழுமையாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளை சீன அரசின் உதவியுடன் முன்னெடுப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் எனவும் பொது முகாமையாளர் கூறினார்.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஓமந்தை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரை 28 ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணிகளுடன் இணைந்ததாக ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொது முகாமையாளர் கூறினார். ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புகளை அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதவிர வடக்கின் தோழன் திட்டத்தினூடாகவும் நிதி திரட்டப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 4 ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, யாழ்தேவி, உத்தரதேவி ஆகிய பயணிகள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, ஒரு எரிபொருள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரயில்களை இந்தியாவில் இருந்து தருவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.

பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முழுமையாக நாசமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வட பகுதிக்கான ரயில் சேவைகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் விலைகள் குறைப்பு

அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைத்ததையடுத்து யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

பாண் விலைகள் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (30) முதல் பெற்றோல் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடபகுதிக்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த காலங்களில் யாழ்குடாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தென்பகுதியiவிட அதிக விலைக்கே விற்கப்பட்டன. ஏ-9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்குடாவிலுள்ள மக்களுக்கு தென்பகுதி விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாகவும் அரச அதிபர் கூறினார்.

யாழ்குடாவில் ஒரு இறாத்தல் பாண் 43 ரூபாவுக்கு விற்கப்பட்டதோடு தற்பொழுது 36 ரூபாவுக்கு பாண் விற்கப்படுகிறது. இதுதவிர பாண் சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் சகல பொருட்களும் தட்டுப்பாடின்றிக் காணப்படுவதாகவும் வடபகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் தென்பகுதிக்குத் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டதையடுத்து வடபகுதிக்கான போக்குவரத்துச் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதோடு யாழ் பகுதி மக்கள் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ-9 வீதி திறக்கப்பட்டதையடுத்து பெருமளவிலான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக அரச அதிபர் குறிப்பிட்டார். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம் : உதய நாணயக்கார
Wind Mill

யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்..

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு


Sri Lanka Navy (SLN) vessels

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும்இ அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்" என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
முல்லை. மறுவாழ்வுப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி

No Image
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அச்செய்தியில்இ

"மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

அதேவேளைஇ போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் சுமார் பதினைந்து மாதங்களின் பின்னர் அதன் சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணியின் முன்னேற்றத்திலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் வேகமும் தங்கியிருப்பதாக அவர் கூறுகின்றார்" என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து . பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு


காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்ய
ப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல காவல்துறை உயரதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பு சுற்று நிருபம் மூலம் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்தோனேசியாவில் தங்கியிருந்த 47பேர் ரோமேனியா மற்றும் ஆஸியில் மீள்குடியமர்வு-

இந்தோனேஷியாவின் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 47இலங்கை அகதிகள் சென்றுள்ளதாக இந்தோனேஷியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ருமேனியா 16 அகதிகளுக்கும், அவுஸ்திரேலியா 31 அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கனடாவும் அவுஸ்திரேலியாவும் 15 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது-கபே-


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 88 வன்முறைச் சம்பவங்கள் தம்மிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது. இவற்றுள் 12 பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது 06 வன்முறைச் சம்பவங்கள் இறுதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த தேர்தலின்போதான வன்முறைச் சம்பவங்களை விட இம்முறை வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 105முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட பிக்கு தம்பர அமிலதேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில்


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தம்பர அமிலதேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடி சந்தியில் பிக்குமாரினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது. பிக்கு தம்பர அமிலதேரர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என ஜே.வி..பி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பஸ்சேவை ஆரம்பம்-

சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இலங்கைப் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ்சேவையை நடத்தி வருகின்றன. ஏற்கனவே திருமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...

29 டிசம்பர், 2009



வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்
மேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை
- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை

வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




கிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்
சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு


கிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.

கிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.

போர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.




வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள்
விரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்
சட்ட மாஅதிபர் தெரிவிப்பு


வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...



முதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;









நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.

இவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.

அவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

டெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.

அப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டி ருப்பதாவது:-

அமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.

எங்களது முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

28 டிசம்பர், 2009


அமைச்சர் முரளிதரனுடன் இணைந்தே செயற்படுகிறேன்”
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்பதே ஒரே இலக்கு– கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென்பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார். இருவரும் வௌ;வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


யாழ்தேவி ரயில் சேவை எப்ரல் மாதத்திலிருந்து
ஓமந்தைவரை நீடிக்கும்




யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தைவரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தைவரை பயணிக்க உள்ளதாகவும் பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார்.

மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியாவரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்வரை ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம்வரை மீண்டும் ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதோடு இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.



சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 தமிழ்க் கைதிகள் இந்த வாரம் விடுவிப்பு சட்ட மாஅதிபர் தெரிவிப்பு




இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்தபோது விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேரும் இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார். சீஐடி யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டவர்கள் எவ்விதமான குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்;வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார். தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்க உறுப்பினர்கன் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிரவும் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர். இவர்களை மீளக்குடியமர்த்த அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு
பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க
முதலமைச்சர் சந்திரகாந்தன் பணிப்புரை




கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழைபெய்து வருவதால் வெள்ளப்பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிக்கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைசச்ர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரையில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

மேலும், உலக உணவுத்திட்டத்தின் உதவியுடன் தாழ்ந்த பிரதேசங்களில் வடிகான்களைச் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 10 ஆந் திகதியிலிருந்து வெள்ளப் பாதிப்பு இடைக்கிடை ஏற்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் சுமார் 35 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...


புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் - 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


புதியபாதை சுந்தரம்
-



’புதியபாதை’ பத்திரிகை தானாக முளைக்கவில்லைபதியம்வைத்து நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியினில்சுட்டும் செழிப்பான சுழிபுரக் கிராமத்தில்...சதாசிவம் ஆசிரியரின் சாந்தமான மகனாய்...உதாரணம் காட்டும் முன்மாதிரி மாணவனாய்....விக்ரோறியா’ கல்லூரிப் படிப்பின் பின்னர்தக்கதான வழிசொன்ன சிவசண்முக மூர்த்தியிவன்.ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபத்து ஒன்பதிலேஆயிரக் கணக்கில் அரசாங்க ஊழியர்கள்பாதிக்கப் பட்டார்கள் சிங்கள மொழியறிவுசோதனையில் தேறினால் தான்வேலை நிரந்தரமென்று....அரசாங்கக் கட்டளைக்குக் கட்டுப் பட்டபலர்அரசாங்கக் கடமையில் ஓய்வுபெற்ற டாக்டர்திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்த ஆசான்திருவாளர் தம்பையா இல்லத்திலே நடாத்தும்சிங்களமொழி வகுப்பில் நானும்போய்ச் சேர்ந்திட்டேன்.அங்குவந்த மாணவருள் சண்முகமும் தம்பியானார்.சகலரையும் மதிக்கும் சந்ததியார் தன்னுடனேகுகபூசணிஇ பவானிஇ குருக்கள்பிறை சூடிக்குருஅப்படிப் பலபேர் அவ்விடத்தில் படித்தார்கள்.அக்கா”வென அழைத்து எனக்குற்ற துணையானார்கள்.புத்தரின் போதனைகள் ஏற்கெனவே திருக்குறளில்பத்திரமாக இருப்பதைப் பயன்படுத்தி வாழுங்கள்”என்றெமக்குக் குருவானவர் எடுத்தியம்பிக் கூறியவைநிற்கிறதே மானிட நெஞ்சத்தில் பசுமையாக.அந்தாண்டு


‘மே’தின ஊர்வலத்தைத் தடைசெய்தகுண்டாந் தடியடிகள் கோரமாகத் தாக்கியதால்என்துணைவர் உட்பட எண்ணரிய தோழர்கள்துன்புறுத்தப் பட்டுக்கண் துடைப்பாக வைத்தியசாலையில் சேர்த்துப் பாதுகாப்புக் கொடுத்தனரே!வேலையை வைத்தியர்கள் விசுவாசமாய்ச் செய்தார்கள்.உறவுகளின் துணையற்று உருக்குலைந்த எந்தனுக்குமறவாத தோழர்கள்போல் என்வகுப்புச் சோதரரும்தாமாகமுன் வந்தென் மதலைகட்கு உதவினரே!ஆமாம்! சண்முகனின் அன்பினை என்னென்பேன்!வருடங்கள் பத்துக் கழிந்து ஓடியபின்.....பெருமைபெறு ‘சுந்தரம்’ என்துணைவர் மணியத்தாரமதிக்கின்ற பொதுவுடமைத் தத்துவத்தின் பூரணத்தால்புதியபாதை’ பத்திரிகை-- புத்தாக்கச் சிந்தனையில்அடிமைப் பட்டதமிழ் மக்கள் விழிக்கவேண்டிமுடிவான உறுதியுடன் அச்சகத் தொடர்புகொண்டார்.சித்திரம் வரைவதிலே சிறந்த சுந்தரத்தார்அத்தனை திறமைகளும் ”தாய்மாமன் இராசரத்தினதின் வாரிசு” என்று மகிழ்ந்திட்டார்.தன்னடக்கத் தலைவனாய் இருந்ததெல்லாம்பறைசாற்ற விரும்பவில்லை விளம்பரமும் தேடவில்லை.குறைகூறல் விரும்பாது செயல்வீரனாய் வாழ்ந்திருந்தான்.


எண்பத்து ஈராமாண்டு ஜனவரி இரண்டாம்நாள்கண்மறைவாய் உன்கருத்தை வெல்ல முடியாதோர் சுட்டானராம்”என்றசெய்தி வந்தபின்தான் அறிந்தோமே உன் திறமையெல்லம்....கன்றிழந்த பசுப்போலப் பசுந்தரம் அம்மா புலம்பியதும்தோழொடிந்த தோழர்கள் அவசரத்தில் பழிவாங்கத்துடித்ததுவும்வாலொடிந்த பல்லிக்கு மீண்டும் முளைப்பதுபோல் உன்
எண்ணத்தை நிறைவேற்ற மக்கள்யுத்தம்வேண்டி கழகத்தின் பின்னாலேவண்ணத்துப் பூச்சிகள்போல் வாலிபர்கள் பறந்ததுவும் கண்கூடு.

வள்ளியம்மை சுப்பிரமணியம்



மேலும் இங்கே தொடர்க...



தமிழர் பகுதிகளில் பிரசாரம்: பொன்சேகா திட்டம்


கொழும்புஇ டிச.27: இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகாஇ தமிழர்களுடைய பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்தும் பொதுக்கூட்டங்களில் பேசியும் அவர்களுடைய ஆதரவைப் பெற முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஜனவரி 2 முதல் அவர் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கிறது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் ஓய்ந்த பிறகு முழு அளவில் சகஜ நிலைமை திரும்பவில்லை.

பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் தங்களுடைய நலன்களைக்காக்க முன்வரமாட்டார்கள் என்ற அவநம்பிக்கை தமிழர்களிடம் வேரூன்றியிருக்கிறது.

ராணுவத்துடனான போருக்குப் பிறகு தமிழர்கள் தங்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள அகதிகள் முகாம்களில் ஏராளமானோர் இன்னமும் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில் சுமார் 15இ000 பேர் மட்டும் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை வாங்கி முறைப்படி நிரப்பித்தந்துள்ளனர். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு பணபலம்இ அதிகார பலம் இருப்பதால் தமிழர்களின் ஆதரவைத் தான் பெறுவதுதான் வெற்றியை உறுதி செய்யும் என்று பொன்சேகா கருதுகிறார்.

தமிழர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் முயற்சியாக ஜனவரி 2-ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகே தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்குகிறார்.

பிறகு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்இ மாணவர்கள் ஆகியோருடன் விவாதம் நடத்துகிறார்.

தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களிடமே கேட்டறிவார். தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்க்க தான் வைத்திருக்கும் திட்டங்களை அப்போது அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்சேகா பேசும் பொதுக்கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட இலங்கை அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழர் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மன்னார்இ வவுனியா நகரம் ஆகிய இடங்களில் பொன்சேகா பேசுகிறார்.

ஜனவரி 4-ம் தேதி கிளிநொச்சிஇ முல்லைத் தீவு ஆகிய ஊர்களிலும் ஜனவரி 5-ம் தேதி மட்டக்களப்புஇ அம்பாறை ஆகிய ஊர்களிலும்இ ஜனவரி 6-ம் தேதி முத்தூர்இ திரிகோணமலை ஆகிய ஊர்களிலும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் நிலைமைதான் பரிதாபமானது. ஒரு புறம் அவர்களைக் கொல்ல படைகளை ஏவிய அதிபர் மகிந்த ராஜபட்ச மீண்டும் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார். எதிர்த்து நிற்பவரோ அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கியவர்.

தமிழர்கள் ஆதரிக்க வலுவானஇ தமிழ் வேட்பாளர் எவரும் இல்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படும்இ அவர்கள் சம உரிமையுள்ள இலங்கைக் குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை
மேலும் இங்கே தொடர்க...

27 டிசம்பர், 2009

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையை உலகின் அதி சிறந்த நாடாக மாற்றுவேன்
மினுவாங்கொடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ





பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங் கையை உலகின் அதிசிறந்த நாடாக்குவதே தமது ஒரே நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (27) மினுவாங்கொடை நகர சபை கூட்டத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய போது கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

தெளிவான மற்றும் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ள தம்மீது சேறு பூசும் பிரசாரங்களை செய்ய எந்த நியாயமும் இல்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் பிரசாரக் கூட்டத்தொடரில் இது இரண்டாவது கூட்டமாகும்.

ஜனாதிபதி தேர்தலை அரசியல் சேறு பூசும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர். அவர்கள் அரசியல் தரிசனம்இ கொள்கைஇ பொருளாதார அல்லது அபிவிருத்தி நோக்கு ஆகிய வற்றைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசுவதில்லை.

மஹிந்த சிந்தனையில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ள தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்பதைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ஆனால் மஹிந்த சிந்தனையை நிறைவேற்ற மக்கள் ஆணை வழங்கிய ஆறு வருடங்களில் இன்னும் இரண்டு வருடங்கள் மிகுதியாக உள்ளதை அவர்கள் மறந்துவிடக்கூடாது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள மக்கள் முன் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

இதனை செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தனக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மட்டுமன்றி பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தமக்கு பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாற்பது வருட கால அரசியல் அனுபவம் உள்ள நாம் நாற்பது நாட்கள் அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ள அறியாக் குழந்தையுடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனினும் அரசியல் அனுபவத்தின் இடைவெளிக்கு சமமான அதிகப்படி வாக்குகளால் தான் வெற்றி பெறப்போவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியினரின் அரசியல் நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான பழி வாங்கும் நோக்கமே யாகும்.

ஆனால் பொய்க்கு ஆயுள்குறைவுஇ இன்று இங்கு கூடியிருக்கும் இல ட்சக்கணக்கான மக்கள் பொய்க்கும் சேறு பூசுவதற்கும் குறைந்த ஆயுளே உள்ளது என்பதை நிரூபித்துக்காட் டப் போகிறார்கள் என்று குறிப்பிட் டார்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பேசும்போதுஇ

ஊழலையும் விரயத்தையும் ஒழிக்கப்போவதாக கூறும் பொன்சேகா யுத்தம் முடிவுற்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரியாமலே ஆயுதங்களை கொண்டு வருவதற்கு முயற்சித்ததாக கூறினார்.

அந்த ஆயுதக் கப்பலை கொண்டுவந்தவர் சரத் பொன்சேகா. ஆனால் அதனை கோதாபய ராஜபக்ஷவின் பேரில் போடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேநு பூசும் பிரசாரங்களை மேற்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேனஇ தினேஷ் குணவர்தனஇ பாட்டலி சம்பிக்க ரணவகஇ மேர்வின் சில்வா ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.



புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம்
முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது - பசில்


அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனு டன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வட க்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கை களை மேற் கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்
மேலும் இங்கே தொடர்க...



இராணுவ ஆட்சியை நிறுவ முயலும் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைகளாகவே நடாத்துவார்





அ. இ. மு. கா வன்னி மாவட்ட மாநாட்டில் ரிஷாட்

நான்கு வருட நல்லாட்சி மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பினை உணர்ந்து செயற்பட்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரை மீண்டும் ஜனாதியாக்க முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவினை வழங்குவது உறுதியென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தமது சுய நலத்துக்காக தேர்தலுக்காக முஸ்லிம்களை வழிநடத்த முயலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து அமைச்சராக இருந்தும் முஸ்லிம் சமூகத்துக்காக ஒரு பாடசாலையையோ அல்லது ஒரு மலசல கூடத்தைத் தானும் அமைத்துக் கொடுத்த தில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ ஆட்சியொன்றை அமைத்து நாட்டைக் குட்டிசுவராக்க முயலும் சரத் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைச் சூழலிலேயே வழிநடத்துவார். அதற்கு எவரும் துணைபோகக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வட மாகாணத்திற்கான வருடாந்த மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்இ ரவூப் ஹக்கீம்இ மனோ கணேசன்இ மங்கள சமரவீர போன்றோர் தற்போது பொன்சேகாவிடம் சோரம் போயுள்ளனர்.

தமது பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காகப் போராடிய சரத் பொன்சேகா ஆறு மாதத்தில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுப்பதென்று கூறுவது எத்தகைய பொய். அவருக்குப் போய் ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவது விந்தையிலும் விந்தை


அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும்?












அமெரிக்க
பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.

நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும்இ சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.

மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக் கின்றனர்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும்இ சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர்.

சரத் பொன்சேகா சன்டே லீடர் பத் திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.

வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும்இ அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்



தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் இன்று நாடு திரும்பினார்-


இந்தியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றுகாலையில் நாடு திரும்பியுள்ளார். கடந்த ஒருவாரகாலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று டுபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து இன்றுகாலை அவர் கொழும்பை வந்தடைந்துள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுதல் இடம்பெறுகின்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்கவே அவர் நேற்று திருச்சி சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் -

-மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க- யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன் முகாமில் தங்கியுள்ள சகல மக்களையும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 180நாள் காலக் கெடுவிற்குள் மக்களை மீள்குடியேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தற்போது 80ஆயிரம் மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்திற்குள் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுதந்திர இடம்நகர்விற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் குறுகிய காலத்திற்குள் முகாம்களுக்கு திரும்புவதன் மூலம் முகாம்களின் நிலைமை சிறந்த வகையில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கு ஏற்பாடு-

தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கான வசதியினை ஏற்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. உத்தேசத் திட்டம் அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடருந்துச் சேவைகள் வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடருந்துகளில் செல்லும் பயணிகள் சில வேளைகளில் தமது பயண முடிவுவரை தொடருந்திலேயே செல்லமுடியாத நிலை ஏற்படும்போது இந்த திட்டத்தின்மூலம் அவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். தொடருந்து தடம்புரண்டாலோ அல்லது விபத்துகள் இடம்பெற்றாலோ பயணிகள் தமது தொடருந்து பருவச் சீட்டைக் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் செல்வதற்கு ஏதுவாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பேருந்து பருவச்சீட்டுக்களைப் பயன்படுத்தி தொடருந்துகளில் பயணிப்பதற்கான திட்டமொன்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் விஜே சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கையர்களில் ஒருவர் கடத்தல்-

இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று குறித்தநபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30வயதுடைய ஜீ.சரவணன் என்ற இளைஞனே கடத்தப்பட்டுள்ளார். குறித்த கப்பலில் தங்கியிருந்த அகதியொருவர் கடந்த 23ம்திகதி கடுமையான சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்தவரே கடத்தப்பட்டுள்ளார். மேலும் நேற்று வைத்தியசாலையில் இந்தோனேசிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவரை நேற்றிரவு 8மணியளவில் கப்பலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை கப்பலுக்கு அவர் அழைத்துவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சுனாமியின்போது மாத்தறை சிறையில் இருந்து காணா நிலையில் வேறு பெயரில் இருந்தவர் கைது

- 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காணாமற் போனதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவரை தற்போது பொலீசார் கைதுசெய்துள்ளனர். குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் யோகா ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்த நிலையிலேயே அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியான பெயர்கொண்டு போலியான அடையாள அட்டையுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் வாகனக் கொள்ளையொன்றில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பட்டியலில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.



மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்காவில் அல் காய்தா பயங்கரவாதி கைது: வெடிமருந்து மூலம் நடுவானில் விமானத்தை தகர்க்க சதி




வெடி பொருள் கொண்டு தகர்க்க முயன்ற அமெரிக்க விமானம். டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அதை சோதனையிட செல்லும் போலீஸôர்.
வாஷிங்டன், டிச. 26: அமெரிக்க விமானத்தை வெடிபொருள் வைத்து நடுவானில் தகர்க்க முயன்ற அல் காய்தா பயங்கரவாதியை பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.

இந்த விமானம் சனிக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரிலிருந்து 278 பயணிகளுடன் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிர்ஷ்டவசமாக பயங்கரவாதி மடக்கிப் பிடிக்கப்பட்டான் என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

பிடிபட்ட அல் காய்தா பயங்கரவாதி உமர் பாரூக் அப்துல் முதாலாப் நைஜீரியாவைச் சேர்ந்தவர். லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஆமஸ்டர்டம் நகரிலிருந்து அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்குப் புறப்பட்டது. விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்குவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு இருக்கையில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்துடன் புகை வந்தது. அருகில் இருந்த பயணிகள் பீதி அடைந்து விமான பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த இருக்கையில் இருந்த இளைஞர், தான் வைத்திருந்த வெடி மருந்துக்கு நெருப்புவைக்க முயன்றது தெரியவந்தது. அருகில் இருந்த பயணிகளும் விமானப் பயணியாளர்களும் அவரை மடக்கிப் பிடித்து நெருப்பை அணைத்தனர்.

வெடி மருந்தை வெடிக்க வைப்பதற்காக அவன் வைத்திருந்த கருவி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வேலை செய்யாததால் பெரும் நாசம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நெருப்பு காரணமாக அந்த பயங்கரவாத இளைஞனும் அருகில் இருந்த 2 பயணிகளுக்கும் சிறிது காயம் ஏற்பட்டது.

விமான ஓட்டி அந்த நபரைப் பிடித்து விமானத்தின் முன்பகுதிக்கு கொண்டு சென்றார். பின்னர் விமானம் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கிய உடன் தனியாக நிறுத்தப்பட்டது. விமானத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்தனர். அந்த பயங்கரவாத இளைஞன் கைது செய்யப்பட்டான்.÷

அவன் வைத்திருந்த வெடிமருந்து திரவமாகவும் திடப் பொருளும் கலந்ததாக இருந்தது. அதை வெடிக்க வைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பலர் உயிர் தப்பினர் என்று அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இளைஞன் தனது காலில் வெடி மருந்தை மறைத்து வைத்திருந்தான். ஒரு ஊசி மூலம் அதை ரசாயனத்துடன் கலந்து வெடிக்க வைக்க முயன்றுள்ளான்.

பிடிபட்ட பயங்கரவாதிக்கு ஏற்பட்ட தீ காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விமானம் நைஜீரியாவிலிருந்து ஆம்ஸ்டர்டம் நகரில் தரையிறங்கி பின்னர் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டதாக தெரிகிறது.

அல் காய்தா பயங்கரவாதி அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 வரிசைக்கு முன்பு அமர்ந்திருந்த சையத் ஜாப்ரி இதுகுறித்து கூறும்போது, பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் வந்தது. நெருப்பு புகை வந்து திரும்பியபோது அவனை பலர் மடக்கி பிடித்துக் கொண்டிருந்தனர் என்றார்.

இதற்கிடையே பிடிபட்ட பயங்கரவாதி லண்டனில் பொறியியல் படிப்பு படித்து வருவதாக தெரிய வந்துள்ளதால் லண்டன் போலீஸôர் அது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் சர்வதேச வர்த்தக மையம் மீது விமானத்தை மோதி அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர

தாக்குதலுக்குப் பின் அந்த நாட்டில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் எல்லா விமானங்களிலும் பலத்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் நைஜீரியா இளைஞர் வெடி மருந்து எடுத்துச் சென்றதை கண்டுபிடிக்க முடியவில்லை
மேலும் இங்கே தொடர்க...
சேதமடைந்த வட பகுதி வைத்தியசாலைகள்
சகல வசதிகளுடனும் மீளத் திறப்பு










புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்கலான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழங்காவில் ஆதார வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதோடு இங்கு 03 மருத்துவர்கள் உட்பட பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

முல்லைத்தவு வைத்தியசாலையும் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளதோடு வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 04 அம்பிய+லன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பணிகளுடன் இணைந்ததாக சேதமாக்கப்பட்ட வைத்தியசாவைகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு மக்கள் நலனுக்காக திறக்கப்பட்டு வருகின்றது. மோதல்கள் இடம்பெற்றபோது புலிகள் பல வைத்தியசாலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருந்தது தெரிந்ததே.


நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

மலையகத்தின் நீண்டகால பிரச்சினையாக உள்ள குடிநீர் திட்டம் இதுவரை சீராக நடைபெறாமல் இருந்தது. இதற்குத் தீர்வாக 2003 ஆம் ஆண்டு முன்னைநாள் வீடமைப்பு, நிர்மாணத்தறை அமைச்சராக இருந்த சௌயமியமூர்த்தி தொண்டமான அவர்களால் அப்போது 03 குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் மூலம் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தித் திட்டங்கள் இப்பொழுது அமுலாக்கப்படுகின்றது. குறிப்பாக மலையகத்திலுள்ள கினிகத்தேனை, ஹட்டன், மற்றும் மஸ்கெலியா ஆகிய நகரம் மற்றும் சுற்றுப் பிரதேச மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களினூடாக ஹட்டன் நகர சபையும் சேர்ந்து இன்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அத்தாவுல்லா அவர்களால் மேற்குறிப்பிட்ட 03 அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் இளைஞர் வலுவ+ட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், ஜெகதீசன் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபைத் தலைவர் நந்தகுமார், பிரதேச சபையின் செயலாளர் நகுலேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள். ஹட்டன் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்திற்கு குடிநீர் வழங்காததையடுத்து நீர் விநியோகம் செய்யவும், கினிகத்தேனை நகரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நலன்கருதி லொனொக்கில் இருந்து நீரை விநியோகம் செய்யவும் மஸ்கெலியாவிற்கு புரொன்ஸ்விக் இலிருந்து நீரை விநியோகம் செய்யவும் அபிவிருத்தித் திட்டமாக அமைகின்றது.

நீண்ட நாட்களாக மலையத்தில் நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சினை இந்த மஹிந்த சிந்தனை அபிவிருத்தித் திட்டம் மூலம் தீர்வு அடைய சாத்தியமாயிற்று
மேலும் இங்கே தொடர்க...
மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதைகருணா உணர்ந்து கொண்டார்''





அலி சாஹிர் மெளலானா

பிரத்தியேக பேட்டி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு தன் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வரும் அவரை சந்தித்த போது, அவர் கொழும்புக்கு வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, அவரைச் சந்திக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களை சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி தினகரன் வாசகர்களுக்காக கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அலி சாஹிர்.

உங்கள் அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?

நான் 1987களிலிருந்து ஆரம்பிக்கிறேன். எனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு (கம்பியூட்டர் சயன்ஸ்) அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தேன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 13ஆவது திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸாவும் எதிர்க்கட்சியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.

திருமதி பண்டாரநாயக்க என்னை மட்டு. மாவட்ட ஸ்ரீல. சு. க. அமைப்பாளராக நியமித்தார். அத்துடன் திருமதி பண்டாரநாயக்காவின் மாவட்ட முகவராகவும் நியமிக்கப்பட்டேன்.

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையில், எந்த வகையிலும் முஸ்லிம் மக்களின் ஆலோசனை பெறப்படவில்லை என்பதை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சுட்டிக்காட்டினார். இச்சந்தர்ப்பத்தில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானார். இதன்பின்னர் புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமாகின. இந்தியப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். புலிகள் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதலையும் நடத்தினர். காத்தான்குடி படுகொலை, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நான் அகதிகள் நிவாரண அமைப்பு (ஞிஞிலி) என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஊடக சுயாதீனமாக செயற்பட்டேன்.

1994 ஆம் ஆண்டு கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஏறாவூர் பிரதேச சபைத் தலைவராக தெரிவானேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ. தே. க. போன்ற கட்சிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது.

சிரேஷ்ட அமைச்சர்களான எம். எச். மொஹமட், அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ. சீ. எஸ். ஹமீத் போன்றோரின் அழைப்பையேற்று ஐ. தே. கவில் இணைந்து கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி டி. பி விஜேதுங்க பாராளுமன்றத்தைக் கலைத்ததன் காரணமாக பொதுத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேன். 1977களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரேனும் எம்.பி.யாக அதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. 1987களில் தேவநாயகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் பாதகச் செயல் செய்வதாகவே முத்திரை குத்தப்பட்டார்கள்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் 45,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். நான் 115,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினேன்.

கருணா அம்மான் விவகாரம் வரையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தேன்.

கருணா அம்மானுடனான உறவை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். நான் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்றேன். முரளிதரன் என்னைவிட வயதில் இளையவர். நான் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். என் மீது அவருக்கு எப்பவும் மரியாதையுண்டு.

1977இல் க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்றேன். அங்கு எனது முதலாவது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கலிபோர்னியா சென்றேன். 1987களில் மீண்டும் நாடு திரும்பினேன். நான் வரும் போது முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.

1977 - 83 போன்ற காலகட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு அதிகமாயிற்று. இளைஞர், யுவதிகள் கூட்டம் கூட்டமாக சென்று இணைந்து கொண்டனர். க. பொ. த. உயர்தரத்தில் பயின்றுக் கொண்டிருந்த கருணா அம்மானும் இதில் ஒருவராக இணைந்துக் கொண்டார். இனி எமக்கு இலங்கையில் எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்தியா சென்று பயிற்சிகளையும் பெற்றார்.

1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார்.

இவரது செயல் என்னை வெகுவாக கவர்ந்தது. எப்போதும் அன்பாக அவர்களில் ஒருவனாக என்னை ‘அண்ணன்’ என அன்புடன் அழைப்பார்.

சமாதானப் பேச்சு பலனளிக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், பிரேமதாசவும் கொல்லப்பட்டார். 1994இல் சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்த சமாதானப் பேச்சும் தோல்வியடைந்தது.

2002 ஐ. தே. க. கட்சி வந்ததும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். கருணா மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரிவு பொறுப்பாளராக வந்தார். நான் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக செயற்பட்டேன். இந்தக் காலக்கட்டத்தில் கருணாவை மீண்டும் சந்திக்க முடிந்தது.

அண்ணன் சில அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். என்றாலும் நான் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என கருணா கூறினார். சிறுசிறு சம்பவங்கள் தொடர்பாக கருணாவின் கவனத்திற்கு கொண்டு வந்த போதெல்லாம் கருணா உடனுக்குடன் தீர்வு வழங்கினார். இதனூடாக எமது நட்பு மேலும் வளர்ந்தது.

களமுனைகளில் கருணா என்பவர் மிகவும் முரட்டுத் தனமாவர் முர்க்கத்தனமானவர் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு மரியாதை செய்வதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நான் அவரை அம்மான் என்றே அழைப்பேன். இவரிடம் விஷயமிருக்கிறது. மக்களை மதிக்கத் தெரிந்தவர் என்பதை உணர்ந்தேன்.

இந்த வேளையில்தான் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. ஒஸ்லோ, தாய்லாந்து, ஜேர்மன் எனப் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றன. 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடைபெற்றது. அரசாங்கம் சமஷ்டி முறையை முன்வைத்தது.

சமஷ்டி முறை தொடர்பாக ஆராய்வதற்கு புலிகள் இயக்கம் ஆயத்தமாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்ச்செல்வன், அன்டன் பாலசிங்கம், கருணா அம்மான் ஆகியோர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்ததுடன் அதற்கு அடையாளமாக கையெழுத்தையும் இட்டனர்.

இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக பிரபாகரனின் காதில் இந்த விடயம் போடப்பட்டு விட்டது. நியூயோர்க்கிலிருந்து வந்திருந்த உருத்திர குமாரன் பிரபாகரனிடம் இதனை கூறிவிட்டார். அரசாங்கம் முன்வைக்கும் ஆலோசனைக்கு கருணா இணக்கம் தெரிவிக்கிறார். தனது அதிகாரத்தையும் மீறி செயற்படுகிறார் எனப் பிரபாகரனிடம் தெரிவித்து விட்டார். அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரபாகரன் காரசாரமாக பேசியதால் அன்டன் பாலசிங்கம் இலங்கை வராமலேயே லண்டன் சென்று விட்டார். அதன் பின்னர் அவர் பிரபாகரனுடன் பேசவே இல்லை.

கருணா கிளிநொச்சி திரும்பியதும் பிரபாகரன் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன், ‘மாத்தயா’ போன்று நீயும் எனக்கு துரோகம் செய்ய எண்ணுகிறாயா? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

‘மாத்தயா’ என்ற பெயர் கேட்ட உடனேயே கருணா அம்மான் தன்னை சுதாகரித்துக் கொண்டார். இது ஒருவகையாக சமிக்ஞை என்பதும் தெளிவானது.

பிரபாகரனின் தலைமையில் 20 தலைவர்கள் இருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒருவர் என்றபடி இருந்தனர். கல்வி, பொலிஸ், நீதி, விளையாட்டு, வருவாய் என்ற 20 பேர் இருந்தனர். இது தான் பிரபாகரனின் அமைச்சரவை இந்த 20 பேர்களுள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவரேனும் இருக்கவில்லை. சிலர் எந்த ஆயுத போராட்டத்திலும் ஈடுபடாதவர்களாக இருந்தனர். அவர்களும் பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டு கருணாவுக்கு நிந்தனை செய்தார்கள். கருணா மிகவும் புண்பட்டுப் போனார். எனினும் கருணா லாவகமாக பிரபாகரனிடம் சமாளித்துவிட்டு வெளியேறினார். உடனடியாக சர்வதேச கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு செல்வதற்கு தனக்கு ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து தருமாறு கூறினார். எனினும் ஹெலிகொப்டர் கிளிநொச்சிக்கு வரமுடியாது என்றும் ஓமந்தைக்கு வரமுடியும் என்பதால் அங்கு வரும்படி கூறினார்கள்.

கிளிநொச்சியில் ஹெலி தரையிறங்கும் இடம் புலிகளின் தலைவரின் இடத்துக்கும் மிக அருகே அமைந்திருந்தது. ஹெலி வருவதும் கருணா அதில் புறப்படுவதும் தெரிந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே பிரபாகரனுடனான இறுதி சந்திப்பாக இருந்தது.

இரவோடு இரவாக கருணா அம்மான் ஓமந்தை வந்து அங்கிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தார்.

மட்டக்களப்புக்கு வந்த கருணா அம்மான் என்னோடு தொடர்பு கொண்டார். அண்ணன் நான் உங்களுடன் உடனடியாக பேச வேண்டும் என்றார்.

நான் ஒருவரை ஒருவர் கொல்வதும், மறைந்து திரிவதும் எத்தனைக் காலத்துக்கு? இது தான் சரியான சந்தர்ப்பம். இதனை தவற விடக்கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

இவர்கள் இன்னமும் யுத்தம் என்ற மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள். எனக்கு விளங்கவில்லை. ஆட்சேர்ப்பு செய்யும்படி கூறுகிறார்கள். ஆயுதம் வந்த வண்ணம் இருக்கிறது என்றார்.

இவர் செல்லும் பாதை வேறு என்பதை உணர்ந்தேன். அவர் எதனை விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். அவர் தலைமையுடன் முரண்படுகிறார் என்பதைக் கண்டேன். அவரது முடிவு சரியானதாக தென்பட்டது.

2004 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்தார். மே 3ம் திகதி தேர்தல் தினம். கருணா என்னை தொலைபேசியில் அழைத்தார். இவர்களுடன் தொடர்ந்தும் செயலாற்ற முடியவில்லை.

பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பிரச்சினைகளை வளர்க்கின்றனர் என்று கூறினார்.

எதற்காக இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தோமோ அது இன்று நடைபெறவில்லை. கிழக்கு மக்களை அவர்கள் வாட்டி வதைக்கிறார்கள்.

கிழக்கிலிருந்து களமுனைக்கு கொண்டு சென்ற இளைஞர், யுவதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை பல முறை பிரபாகரனின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக் கிறேன். அவை பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமலேயே கிழித்து குப்பையில் போடப்பட்டன.

அண்ணன் நான் உங்களுடன் இணைந்து வேலை செய்யப் போகிறேன். எனக்கு ஆலோசனை வழங்குவதுடன் என்னை வழிநடத்துங்கள் எனக் கூறினார். எதனையும் நம்ப முடியாத நிலை.

தனக்கு தனது ஆதங்கங்களை வெளியில் சொல்லவும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எவ்வாறு கொண்டு வருவதும் நம்பகத்தன்மையான ஒருவர் வேண்டும் என்று நினைத்த கருணாவுக்கு நான் நம்பிக்கையுள்ள நண்பனாகத் தென்பட்டேன். இன்று வரை எந்த ரகசியத்தையும் நான் வெளியே சொன்னதில்லை. இப்போதுதான் நான் வெளியே கூறுகிறேன்.

ஏனெனில் கருணா இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர். நான் ஒருபோதும் அவரை வீழ்த்த விரும்பவில்லை. அவருக்காக ஐ. தே. க.விலிருந்து விலகிச் செல்வதற்கும் நான் வகித்த சகல பதவிகளையும் தியாகம் செய்யவும் நேர்ந்தது.

இதனை எண்ணி வருந்துகிஹர்களா?

இல்லை. ஒருபோதும் இல்லை. நான் நிறைய தியாகங்கள் செய்துள்ளேன். அவை அனைத்தும் நாட்டுக்காக என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அது இன்று நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்திருக்கிறது. சமாதான உடன்படிக்கையின் படி புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம் என்ற சரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதம் எதுவுமின்றி அவர் வந்து போகலாம். ஆனால் வன்னி புலிகள் ஆயுதங்களுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வந்தது மட்டுமல்ல பொது மக்களையும் தாக்கினர். கண்காணிப்புக்குழு இந்த விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது.

காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்காகச் சென்ற அம்பியூலன்ஸ் சாரதியையும் சுட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கருணா எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தார். தனது ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தார். தானும் பதிலுக்கு தாக்குதல் நடத்துவதா? எனக் கேட்டார். இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மெளனமாக பின்வாங்கிச் செல்வது நல்லது. இல்லையேல் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் எனக் கூறி பாரிய அழிவை தடுத்து நிறுத்தினேன்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எமது மக்கள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள் என்பதற்காகவே நாம் இந்த போராட்டத்தில் இறங்கினோம். இன்று எமது ஆட்களே எமது மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே என வருத்தப்பட்டார்.

அண்ணன் நான் கொழும்புக்கு செல்ல வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். வெளி உலகுக்கு நான் இவற்றைக் கூற வேண்டும். கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது எனக் கூறியதுடன் என் மீது நம்பிக்கையும் வைத்தார்.

கருணா என்னுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார் என்பதற்காக நான் புலிகளினால் அச்சுறுத்தப்பட்டேன். எனக்குத் தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்தனர். நான் செல்லும் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

எனது மைத்துனர் இரண்டு முறை கடத்தப்பட்டார். எனது குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது கூட புலிகள் அவர்கள் பின் தொடர்ந்தனர். கருணாவை நான் எனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறேன் எனச் சந்தேகப்பட்டனர். பொட்டு அம்மானின் சகாக்கள் ஊடுருவி ஐ. தே. க. வேட்பாளராக இருந்த சுந்தரம் பிள்ளை என்பவரை சுட்டுக் கொன்றனர். பொட்டு அம்மானின் சகாவான ரமணன் என்பவர் தான் அவரை சுட்டுக் கொன்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு கருணா அம்மான் ஊடாக நியமிக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியும் கொல்லப்பட்டார். இவர் வேறுயாருமல்ல, மட்டக்களப்பு மேயராக இருக்கும் சிவகீதா பிரபாகரனின் தந்தையார் தான் இவர். இவரது படுகொலையுடன் கருணாவை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

1999 ஏப்ரல் 2 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ. தே. க. வேட்பாளராக நான் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையை ரவூப் ஹக்கீம் ஐ. தே. க விடம் முன்வைத்தார். நான் போட்டியிடுவதாயின் ஸ்ரீல. மு. கா. விலேயே போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தார். நான் என்றுமே இன ரீதியான, பிரதேச ரீதியான கட்சிகளை விரும்புவதில்லை. அவற்றில் இணைந்து போட்டியிட விரும்பியதுமில்லை.

வன்னிப் புலிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து கருணா தனது சகாக்களுடன் தொப்பிகல பகுதிக்கு பின்வாங்கினார். தனி ஒரு மனிதராக கருணா அம்மான் மட்டும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவில்லை. 6000 போராளிகளுடன் அவர் பிரிந்தார். அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பது தான் அவரது நோக்கம். இயக்கத்திலிருந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடமே ஒப்படைத்தார். யுனிசெப் ஊடாக இவர்கள் கையளிக்கப்பட்டனர். தான் கொழும்பு செல்ல வேண்டும் என்று கூறியதுடன் சாரதி ஒருவருடன் வாகனமொன்று ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

கருணா உங்களுடன் எப்படி தொடர்பு கொண்டார்?

என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுப்பார். வேறுபட்ட தொலைபேசிகளினூடாக என்னோடு பேசுவார். எனது கையடக்க தொலைபேசி அன்று முதல் இன்று இப்போது வரையிலும் எந்நேரமும் எவரும் பேசக் கூடிய நிலையில் தான் இருக்கும்.

2004 ஏப்ரல் 12 ஆம் திகதி தொப்பிகலவுக்கு அண்மித்த பகுதிக்கு சாரதியுடனும் மற்றுமொரு நபருடனும் நான் சென்றேன். சமிக்ஞைக்காக இன்னுமொரு வாகனத்தை பின் தொடர்ந்து கருணா அனுப்பியிருந்தார். இந்தப் பகுதியை அண்மித்த போது கருணா ஒரு வயல் வெளி போன்ற திறந்த வெளிப் பகுதியில் புஷ்ஷேர்ட் ஒன்றை அணிந்தவாறு கையில் பிரிவ்கேஸ் ஒன்றுடனும் நின்றிருந்தார்.

கருணா புலிகளால் மிகவும் தேடப்பட்டு வந்த நபர். அவரது தலைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை வழங்கவும் புலிகள் ஆயத்தமாக இருந்தனர்.

உயிரோடோ, பிணமாகவோ, கருணாவை பிடிக்க வேண்டும் என்றே புலிகள் நினைத்தனர். இதனால் எவரையும் நம்பத் தயாராகாத நிலையிலேயே நானே நேரடியாகச் சென்றேன். கருணாவுடன் 4 பெண்களும் இருந்தனர்.

அவர்கள் நால்வரும் பெண்கள் பிரிவில் போராளிகளாக இருக்கலாம். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் எக்காரணம் கொண்டும் தங்களுடன் எதுவித ஆயுதங்களும் எடுத்து வரக் கூடாது என்பதை கூறினேன். கருணா உட்பட ஏனையோர் தங்களது பயணப் பொதிகளை திறந்து ஒவ்வொன்றாக காட்டினர்.

கருணா தனது பெட்டியை திறந்து காட்டினார். அதில் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. “அண்ணன் ஒரு போதும் உங்களை பிரச்சினைக்குட்படுத்த மாட்டேன்” எனக் கூறினார்.

கருணாவை கொழும்புக்கு அழைத்து வரும் டிரான்போர்ட் வேலை மட்டும் தான் செய்தேன் என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கு பின்னணியில் நடந்த உரையாடல்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்ன என்பது எவருக்கும் தெரியாது. உயிரை பணயம் வைத்து இந்தக் காரியத்தை செய்தேன்.

அதன் பலனை இன்று அனைவரும் அனுபவிக்கின்றனர். வடக்கில் இறுதி யுத்தத்தில் எவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டன. புலித் தலைவர்களின் கதி என்னவாயிற்று. இதே நிலை கிழக்கிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தான் கருணாவும் நினைத்தார். நானும் நினைத்தேன்.

2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிளவு ஏற்பட்டதன் பின்னர் கருணா அம்மான் என்னுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்றதிற்காக எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் இருந்தது. 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்திவிட்டது. இதனாலேயே நான் நாட்டை விட்டும் வெளியேறினேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனமடையச் செய்தது தனது கட்சி தான் என ஐ. தே. கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்களே?

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த விடயத்தில் என்னை தொடர்பு படுத்திக் கூறியிருப்பதும் எனக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அமைச்சர் முரளிதரன் அன்று பிரிந்திருந்தார். இந்தப் பிரிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. மோதல் தவிர்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டோமே தவிர புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே.

இங்கிருந்து சென்றதன் பின்னர் அங்கு என்ன செய்தீர்கள்?

2007 ஆம் ஆண்டு ஐ. நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்த போது என்னைச் சந்தித்து மீண்டும் நாடு திரும்புமாறும் அரசியலில் ஈடுபடுமாறும் பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் இலங்கைத் தூதரகத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கினார்.

இப்போது நாடு திரும்பியதன் நோக்கம் என்ன? அரசியலில் ஈடுபடுவீர்களா? ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவீர்களா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவர் எனது நல்ல நண்பர். அதே நேரம் மக்களின் ஜனாதிபதியாக பார்க்கிறேன். அவரை 1970 களில் இளம் அரசியல்வாதியாக சந்தித்திருக்கிறேன். எனது மாமனாரான அலவி மெளலானாவுடன் பல தடவைகள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். என்னாலான சிறு உதவிகளை அந்தக் காலத்தில் நான் செய்திருக்கிறேன்.

எளிதில் மறந்துவிட முடியாத நபர் அவர். கருணா அம்மானுடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றபோது ஜனாதிபதி கடந்த காலங்களில் நான் செய்த சிறு உதவியையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். “அண்ணன் நீங்கள் எனக்கு மட்டும் உதவியதாகவே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என கருணா என்னிடம் வேடிக்கையாக கேட்டார்.

என்னை யாரும் இங்கு அழைக்கவில்லை. நானாகத்தான் வந்தேன். நான் வகித்த பதவி இரண்டு வருடங்களுக்கானது. விமான நிலையத்தில் எனது நண்பர் கருணா என்னை வரவேற்றார்.

இன்று தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மட்டக்களப்பு மட்டுமல்ல, நாட்டில் எந்தப் பாகத்துக்கும் சென்று வரலாம்.

நான் என்றுமே பிரதேச ரீதியான, கட்சிகளை விரும்பியதில்லை. இணைந்து செயற்பட எண்ணியதும் இல்லை. இது என்னுடைய சுபாவம். என் மக்களுக்கு நன்றாக தெரியும்.

மட்டக்களப்பில் 1,15,000 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாக கூறினீர்கள். அந்த ஆதரவு இன்றும் இருக்கிறது என நினைக்கிஹர்களா?

இருக்கிறது மட்டுமல்ல. இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் கேட்பதை விட என் மக்களிடம் இதைக் கேட்கலாம்.

அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஏதாவது நிபந்தனைகளை வைக்கிஹர்களா?

ஒரு போதும் இல்லை. அது என் வழக்கமும் அல்ல.

அடுத்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவீர்களா?

ஆம். நிச்சயமாக அரசுடன் இணைந்து செயற்படுவேன். அது தான் சிறந்தது என நினைக்கிறேன். அப்போது தான் மக்களுக்கு ஏதேனும் செய்ய முடியும்.

ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டு பற்றி கூறுவதாயின்?

ஐக்கிய தேசியக் கட்சிக்கென்று சில தனிப்பட்ட நல்ல கொள்கைகள் உண்டு. ஜே.வி. பி.யுடன் இணையும் என்று நான் நினைக்கவே இல்லை.

ஜே. வி. பி யினரின் அரசியல் ஒரு குளறுபடியானது. எந்நேரமும் எதிர்மறை சிந்தனையாளர்கள்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி. அவர் ஒரு அரசியல்வாதியல்ல. இப்போது அரசியல் பேசுகிறார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் என்றும் அவர்கள் பெரும்பான்மையிடம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது, எமது மக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.

இவர் ஒரு நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தால் நிச்சயமாக சிறுபான்மையினர் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்றும் அலி சாஹிர் மெளலானா தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...