31 டிசம்பர், 2010

புது வருட வாழ்த்துக்கள்

அனைத்து உள்ளங்களுக்கும் புதிய பாதையின் புது வருட வாழ்த்துக்கள் அனைவரும் கல்வி
செல்வம் வீரம் அனைத்தும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டி எமது இனிய புது வருட வாழ்த்துக்கள்
மேலும் இங்கே தொடர்க...

ஏர்போர்ட் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் தொட்டியில் வீசி கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு


துபாய் விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். துபாய் விமான நிலையத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய ஊழியர் ஒருவர் உள்ளே சென்றார். அங்கு இருந்த குப்பைத் தொட்டி அருகே ரத்தம் சிதறிக்கிடந்தது. குப்பைத் தொட்டி மீது, நிறைய காகிதங்கள் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த ஊழியர் அந்த காகிதங்களை அகற்றி பார்த்தபோது, அதில், அப்போது தான் பிறந்த குழந்தை தொப்புள்கொடி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அக்குழந்தையின் முகம் நீலம் பாரித்து, மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்தது. அந்த ஊழியர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விமான நிலைய கண்காணிப்பு கேமரா மூலம், அக்குழந்தையின் தாய் பற்றிய தகவல் கிடைத்தது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த அந்த பெண், விமானத்தில் புறப்பட்டு சென்றுவிட்டார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், திருமணம் ஆகாமலேயே தவறான உறவு மூலம், கர்ப்பமானதும், துபாய்க்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக கழிவறையில் அவருக்கு பிரசவம் நடந்ததும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அவர் கழுத்தை திருகி, கொல்ல முயன்று பின்னர், அதனை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளின் சட்டப்படி, தவறான உறவு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது கிரிமினல் குற்றமாகும். எனவே, அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஒழுக்காற்று விசாரணை செலவினத்தை சம்பளத்திலிருந்து அறவிடத் திட்டம்


அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுங்காற்று விசாரணைகளுக்கு ஏற்படும் செலவீனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது அதற்கு ஏற்படும் செலவீனங்களை இதுவரை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் அரசாங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று அதில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவரின் சம்பளத்திலிருந்து 25 வீதத்தை அல்லது 30,000 ரூபாவை அறிவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நிர்வாகக் கட்டமைப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உபகுழுவின் பரிந்துரைக்கு அமையவே இத்திட்டம் அமுல்படுத் தப்படவுள்ளது. 30 ஆயிரம் ரூபா அல்லது 25 வீதத்தில் எது குறைவானதோ அத்தொகை 24ற்கு மேற்படாத தவணைகளில் அறவிடப்படவுள்ளது. அது மாத்திரமன்றி இழைத்த குற்றத்துக்கான தண்டனையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கு அமைய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து 600 ரூபா மாதாந்தம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படவிருக்கின்றது.

இதேவேளை ஓய்வூதியம் பெறுபவர்களு க்கு மாதாந்தம் 300 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

10 விமானங்களுடன் ஆரம்பித்து 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கை விமானப்படையிடம் 110 விமானங்கள்


பத்து விமானங்களுடன் தனது சேவையை ஆரம்பித்த இலங்கை விமானப்படை 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் 110 விமானங்கள், ஹெலிகொப்டர்களுடன் வீரநடை போடுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மொத்தமாகவே 1200 இராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகாரிகள் மாத்திரம் 1400 பேர் உள்ளதாக மேலும் தெரித்தார்.

இலங்கை விமானப் படையின் 60 வது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்பட வுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் நேற்று இடம் பெற்றது.

மானப் படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,

விமானப்படை கடந்த 60 ஆண்டு காலம் தாய்நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் பாரிய சேவைகளை வழங்கியுள்ளது. எந்த ஒரு நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் எல்லா நிலைமைகளிலும் தயாராகவே விமானப்படை செயற்பட்டு வந்தது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் விமானப்படை கடந்த காலங்களில் பாரிய ஒத்துழைப்பையும், சேவைகளையும் வழங்கியுள்ளது. எமது இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் மிக முக்கிய மானது. இதற் காக சகல ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்தியா உட்பட வெளிநாடுகளின் விமானப் படைகளும் 60 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கு கொள்ளவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம ளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார்.

அரசாகத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

அணிசேராக் கொள்கையென்ற இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள்

குறித்து விசாரிப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கம் பான்கீ மூனால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

இறைமையுள்ள நாடென்ற வகை யில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது.

இதன் அடிப்படையிலேயே ஐ.நா. நிபுணர்கள் குழு இலங் கைக்கு வந்து விசாரணைகளை நடத்த முடியாது என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழு தனது விரு ப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் முன்னி லையில் யாரும் சாட்சியமளிக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இலங் கைக்கு வந்து ஆணைக்குழு முன் சாட்சி யமளிக்க விரும்பினால் அதற்கு அரசாங்கம் வீசா அனுமதி வழங்கும். உத்தியோகபூர்வமாக அனுமதி கோர ப்பட்டால் அதற்கு நிபுணர்கள் குழு வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னி லையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் சாட்சியமளித்து ள்ளனர். அரசாங்கம் ஜனநாயகத் துக்கு வழிவகுத்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்களும் சாட்சியமளிக்க முடியும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதேநேரம், உள்ளூராட்சி சபை கள் சிலவற்றில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டங்கள் எதிர்க் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமை ச்சர், நாட்டில் ஜனநாயகம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தியை கட்சியின் தலைமைப் பீடம் கவனத்தில் எடுக்கும் என்றும் கூறினார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 22 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிக ளின் பிரதிநிதிகள் கூறும் கருத்துக்கள் கட்சிகளுக்கிடையில் தீர்த்துக்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்: அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி


உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு (னிலீசிசூச்ஙுகூடுடூகி ஜீச்ஙு ஞிடுகிகீசிஙூ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்தவொரு சுற்றுநிருபமும் எந்தவொரு அரசாங்க அதிகார மையத்தினாலும் விடுக்கப்படவில்லை. எனவே அவ்வாறான சுற்று நிருபத்தை உயிரிழந்தவர் விமர்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது.

குறிப்பிட்ட அமைப்பின் அறிக்கையின்படி மேற்படி கொலை சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றதாக தமிழ் இணைய தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதும் இவ்வமைப்பு கூறுவது போல் பிறக்குற்றச்சாட்டுகள் இடம்பெற்றில்லை. இதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோவிலின் பிரதான குருக்கள் நித்தியானந்த சர்மா கடந்த 15ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குறித்த வலையமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதுவும் அடிப்படையற்றது. இதனையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோயிலின் பிரதான குருக்க ளின் கொலை தொடர்பாக பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேற்படி இரு கொலை சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகவே இந்த வலையமைப்பின் அறிக்கை தென்படுகிறது. மேற்படி துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு தேவயற்ற அரசியல் சாயம் பூசும் வகையிலும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் அந்த முயற்சி அமைகிறது.

மேற்படி அமைப்பின் செயற்பாட்டு குழுவில் ஊடகவியலாளர் உள்ளிட்ட பல இலங்கையர்கள் உள்ளனர்.

இவர்கள் தற்போது சுயமான விருப்பத்தின் பேரில் மேற்கத்திய நாடுகளில் தாய்நாட்டை விட்டு வெளியேறியோர் என்று தம்மை கூறிக் கொண்டு வருபவர்களாவர். இலங்கையின் ஊடக மற்றும் மனித உரிமைக்காக வெளியில் இருந்து செயற்படும் வலையமைப்பு என்று இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர். மேற்படி அமைப்பு விடுக்கும் தவறான தகவல் மூலம் இலங்கையில் ஊடக மற்றும் மனித உரிமைகளுக்கான காரணங்களை கொச்சைப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஜனாதிபதி

விரைவில் அபிவிருத்தி அடைய வேண்டிய துறைகள் அல்லது அவ்வாறான இடங்களை சரியாக இனங்கண்டு அந்த செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது கட்டாயமானது எனவும், அவற்றிற்குத் தேவையான போதிய நிதி ஏற்பாடுகளை உரிய காலத்திலே பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை புதிய நகரத்திட்டம் தொடர்பாக நேற்று (30) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

மாத்தறை நகரை அண்டிய சகல துறைகளினதும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இதன்போது நீண்டநேரம் ஆராயப்பட்டது.

இதன் பிரகாரம் மாத்தறை புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதியின் நிர்மாணம், வீதிகளை விஸ்தரித்தல் மற்றும் புனரமைத்தல், நகர அலங்காரம், கழிவகற்றல் முறைமை என்பன தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் புதிய கடற்கரை பூங்கா, சிறுவர்பூங்கா என்பன அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; புராதன பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பெறுமதிகளையும் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியுமென சுட்டிக்காட்டினார்.

மகா சங்கத்தினர், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டலஸ் அலஹப்பெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரச நிறுவனங்களின் பெயர் மாற்றம்; ‘சிலோன்’ என்பதற்கு பதிலாக இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என்ற பதம்

‘சிலோன்’ எனப் பெயர் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்கத் திணைக்களத்தின் பெயர்களையும் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் ‘சிலோன்’ என அழைக்கப்பட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றப்படவிருப்பதுடன், இதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

உதாரணமாக இத்திட்டத்துக்கு அமைய ‘பாங்க் ஒவ் சிலோன்’ ‘பாங்க் ஒவ் ஸ்ரீலங்கா’, ‘சிலோன் எலக்ட்டிசிட்டி போர்ட்’ ‘சிறிலங்கா எலக்ட்டிசிட்டி போர்ட்’ என்றும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நகரப் பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கான வரி நீக்கம்

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமானப் பணிக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையால் அறவிடப்பட்டுவந்த ஒரு வீத வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை 40 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு ஏதுவாக வீடுகள் நீங்கலாக ஏனைய கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு வீத வரி நீக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத் துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு

அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்: வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்

கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் 12 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35847 ஆகும். இவர்கள் 81068 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த பாதிப்புத்தொகை நேற்று மாலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இருபதுக்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1704 குடும்பங்களைச் சேர்ந்த 6408 பேர் நலன்புரி நிலையங்களிலும், 10829 குடும்பங்களைச் சேர்ந்த 41702 பேர் நண்பர்கள், உறவினர் கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மட் டக்களப்பு மாவட்டத்தின் அனைத் துக் குளங்களும் நிரம்பி வழிவதால் குளங்களை அண்டிய பிரதேசங்கள் வாவிக்கரையோரங்களை அண்மித்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அபாயகர மாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அக் கிராமங்க ளுக்கான போக்குவரத்தை நடத்த கடற் படையினரின் உத வியை நாடியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியு ள்ளவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன் சகல பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டு வருவதாகவும், அரச சார்பற்ற நிறுவ னங்களும், இவர்களுக்கு உதவி வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிர தான நீர்ப்பாசனக் குளங்களான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், நவகிரி, உறுகாமம், வாக னேரி போன்ற குளங்களின் வான் கதவுகளும், நேற்றுக்காலை திறந்து விடப்பட்டதாக பிராந்திய நீர்ப் பாசன பணிப்பாளர் எஸ். மோகன் ராஜ் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 145.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவ ட்டத்தில் பெய்துள்ளதாக மட்டக்க ளப்பு வானிலை அவதான நிலை யம் தெரிவித்தது.

இதேவேளை அம்பாறை மாவட் டத்தில் மழை சற்றுத் தணித்திருந்த போதிலும் நேற்று முன்தினம் முதல் அடைமழை பொழிகிறது. இம் மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தாழ் நிலப் பிரதேச மக்கள் மேட்டு நிலப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவ துடன் தமது உறவினர்களில் வீடுக ளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கல்முனை தமிழ் பிரிவு சாய்ந் தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவு கள் அடைமழை காரணமாக வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளும் மழை வெள்ளத் தினால் சூழப்பட்டுள்ளன. தொடர்ச் சியாக மழை பெய்யுமானால் திங்கட்கிழமை முதலாம் தவணை நடவடிக்கைகளுக்காக பாடசாலை களை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அதிபர்கள் தெரிவிக் கின்றனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சொறிக்கல் முனை கிராமத்தைச் சேர்ந்த மயான வீதியில் உள்ள இரு வீடுகள் இடி ந்து விழுந்துள்ளன. எனினும் உயி ரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

வயல் நிலங்கள் யாவும் வெள்ள க்காடாக காட்சியளிக்கின்றன. குட லைப் பருவத்தில் உள்ள வயல் நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமலையில் போக்குவரத்து துண்டிப்பு

அடைமழை காரணமாக திருகோ ணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திற்கான கிண்ணியா ஊடான போக்குவரத்தும், திருகோணமலை ஊடான கடற் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலை யில் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சி முனை, கல்லடி போன்ற பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறி பாடசாலைகளிலும் பள்ளிவாயல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ் கிக் கிடக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இன் னும் சில வாரங்களில் அறுவடை க்காக காத்திருந்த பல்லாயிரக்கணக் கான ஏக்கரில் செய்கை பண்ணப் பட்ட வேளாண்மைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய் ந்தமருது, கல்முனைக்குடி, கல் முனை, மருதமுனை நற்பிட்டி முனை, உகனை போன்ற பிரதேசங் களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

பிரதான வீதிகள் மற்றும் கிராம ப்புற வீதிகள் பல நீரில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்துக்கள் ஸ்தம் பிதம் அடைந்துள்ளன.

தொழிலாளர்கள் வருமானம் இழப்பு

மீனவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -கிஞ்ஞி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உலருணவு அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடி யாக வழங்க மீள்குடியேற்ற அமை ச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளப் பிரதேசங்களுக்குச் சென்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி பெண் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு ஒரு பெண் பலியாகி உள்ளதுடன் பலர் காயத்துக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பெருந்துறையைச் சேர்ந்த திருமதி நேசத்துறை வயது 50 என்ற பெண்மணியே பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, சிகரம், நாவற்குடா, கல்லடி, பூநொச்சிமுனை, முகத்து வாரம், செங்கலடி, களுவாஞ்சிகுடி, குருக்கள் மடம், வாழைச்சேனை, ஏறாவூர், சித்தாண்டி ஆகிய பகுதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதா கவும் சுமார் ஐயாயிரத்திற்கு மேற் பட்டோர் இடம்பெயர்ந்து ள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

போக்குவரத்துச் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

வாகரை, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர் நகர் காத்தான்குடி மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நூற்றுக்கண க்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கம்பளை வீதிகளின் அபிவிருத்திக்காக 225 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


கண்டி மாவட்டத்தின் கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யவென 225 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் டி. எம். ஜயரட்னவும், சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதரும் இணைந்து கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளின் நிலைமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதனையடுத்தே இந்நிதியொதுக்கீடு மேற்கொள் ளப்பட்டுள்ளது.

இந்நிதியொதுக்கீடு தொடர்பாக பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் கூறுகையில், கம்பளைத் தொகுதியிலுள்ள கண்டி வீதியையும், அம்பகமுவ வீதியையும் அபிவிருத்தி செய்யவென 150 மில்லியன் ரூபாவும், கம்பளைத் தொகுதியிலுள்ள உள் வீதிகளை அபிவிருத்தி செய்யவென 75 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பளைத் தொகுதியிலுள்ள வீதிகள் நீண்ட காலமாக புனரமைப்பு செய் யப்படவில்லை. இதனால் மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்னவும், தாமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்தி ற்குக் கொண்டு சென்றோம். அதனைய டுத்தே ஜனாதிபதி அவர்கள் இந்நிதியொது க்கீட்டை மேற்கொண்டார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

30 டிசம்பர், 2010

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

* 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.

* ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

* அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.



நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களும் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் கலைக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யவென எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப் படும் எனவும் அமைச்சர் கூறினார்.

உத்தேச வட்டார முறைப்படி தேர்தலை நடாத்துவதற்குக் காலம் போதாதிருப்பதால் தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறைப்படியே தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவங்களை கட்சியின் தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை உத்தேச வட்டார முறைப்படி நடாத்துவதாயின் அதற்கு எல்லைகளை நிர்ணயிக்கவென குறைந்தது இரு வருடங்களாவது காலம் எடுக்கும். ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் கடந்த வருடம் முடிவுற்ற போதிலும் ஒரு வருட காலம் நீடிக்கப்பட்டது. அதனால் மேலும் காலத்தை நீடிக்காது தேர்தலை நடாத்துவதற்கே திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் 18 மாநகர சபைகள், 42 நகர சபைகள், 270 பிரதேச சபைகள் உள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை நகர சபையும், தம்புள்ள மற்றும் கடுவெல பிரதேச சபைகளும் மாநகர சபைகளாக தர முயர்த்தப்பட்டிருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க வருடாந்தம் ரூ. 50 பில்லியன் அரசு மானியம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு







மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபா மானியம் வழங்குகிறது. இதனாலே 19.14 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் 14.95 ரூபாவுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது.

மின் கட்டண உயர்வு 90 அலகுகளில் இருந்து 120 அலகுகளாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட 400 மில்லியன் நஷ்டத்தையும் திறைசேரியே வழங்குவதாகவும் மேற்படி ஆணைக்குழு கூறியது. மின் கட்டண உயர்வு குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த போதே இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உயரதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர். இது குறித்து ஆணைக்குழுத் தலைவர் ஜெயதிஸ்ஸ கொஸ்தா கூறியதாவது:-

2008 முதல் மின்கட்டணத்தில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்பொழுது கூட 120 அலகுகள் வரை கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே போன்று சிறு, மத்திய கைத்தொழிலாளர்களின் மின் கட்டணங்களும் திருத்தப்படவில்லை.

பெரிய கைத்தொழிலாளர்கள், ஹோட்டல்கள் என்பவற்றின் கட்டணம் 8 வீதத்தினாலே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் ஹோட்டல்களுக்கு கூடதலான கட்டண உயர்வு மேற்கொள்ள சிபார்சு செய்யப்பட்டது.

கடந்த காலங்களின் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே மக்களின் கருத்து பெறப்படும். ஆனால் இம்முறை மக்களின் கருத்தைப் பெற்றே கட்டணத் திருத்தம் செய்யப்பட்டு ள்ளது. மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு முன்வைத்தோம்.

அதன்படி அரசாங்கம் கட்டண உயர்வு தொடர்பில் முடிவு செய்துள்ளது. பெரும்பாலான மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே 120 அலகுகளுக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 85 வீதமான மக்களின் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது.

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கட்டண உயர்வுக்காக நியமிக்கப்பட்டதல்ல. கட்டணங்களை சீர்திருத்தவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் தமிக குமாரசிங்க கூறியதாவது:- தமது மின் கட்டண பட்டியல் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என ஒவ்வொரு பாவனையாளரும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாவனையாளர்களிடம் இருந்து நியாயமான கட்டணம் அறவிடப்படுவதை உறுதி செய்யவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6 மாதங்களுக்கே கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

அடுத்த 6 மாத காலத்தில் புதிதாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படல், எரிபொருள் விலை குறைவு, நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு என்பன இடம் பெற்றால் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆஸ்பத்திரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

2015 இல் மின்சார சபை நஷ்டமின்றி இயங்கும் நிலை ஏற்படுத்துவது எமது நோக்கமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு


இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்கள் கடற் படையினரால் காப்பாற்றப்பட்டுள் ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் செயலிழந்துள் ளது.

உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடற்படையினர் இந்திய மீனவர்க ளைக் காப்பாற்றிக் கரைக்கு அழை த்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாதகல் மேற்கை அண்மித்த ஆழ்கடல் பகுதியிலேயே இவ் இந்திய மீனவர்கள் மீட்கப் பட்டதாக கடற்படையினர் அறிவித் துள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தட வைகள் நடுக்கடலில் தத்தளித்த இந் திய மீனவர்களைக் காப்பாற்றியிரு ப்பதாகத் தெரிவித்திருக்கும் கடற் படையினர், நவம்பர் 2 ஆம் திகதி யும் 11 இந்திய மீனவர்களைக் காப் பாற்றியிருப்பதாகவும் கூறினர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியிருப்பதுடன் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பிய னுப்ப நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும், அவர்களின் படகு திருத்தப் பட்டிருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு


உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவ ர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைதீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். மழை காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமாகியுள்ள தாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடி யேற்றப் பணிகள் பெருமளவு நிறைவடை ந்துள்ளதோடு, மேலும் 28 கிராம சேவகர் பிரிவுகளிலே மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப்பற்றில் 13 கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பில் 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒட்டுச்சுட்டானில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்டல்

கொழும்பில் ஏழு நட்சத்திர ஹோட்ட லொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட சங்கிரிலா நிறுவனக் குழுமம் கைச்சாத்திட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் அனுமதியுடன் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது. காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள அரசாங்கக் காணியில் நட்சத்திர விடுதியை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கப் பிரதி நிதிகளும், சங்கரி-லா நிறுவனப் பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.

இத்திட்டத்துக்கு 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதுவரை 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சங்கிரி-லா நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்த ஹோட்டல் 500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சங்கிரி-லா ஹோட்டல் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து சென்றிருந்தார்.

1971ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன் முதலில் சங்கிரி-லா உல்லாச நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, நேபால், ஓமான், தாய்வான், மலேசியா, மாலைதீவுகள் உட்பட பல நாடுகளில் 66 ஹோட்டல்களை சங்கிரி-லா நிறுவனம் அமைத்துள்ளது. ஆசியாவில் சங்கிரி-லா நிறுவனம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்டதொரு நிறுவனமாகக் காணப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை யிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கைதியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என கோரி கைதிகளில் ஒரு தொகையினர் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய கைதிகள் உணவு பரிமாறுவ தினை உண்ணாவிரதிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறைச்சாலையில் 86 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்ட பாதிரியார் மீது தாக்குதலை நடத்தியமைக்காக குறித்த கைதி அனுராதபுரம் விளக்கமறியல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அனர்த்தங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு


மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில்

இடம்பெறும் நிர்மாணப்பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பில்



மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் யாவும் அவ்வப்பகுதி உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தேசிய சபை அலரி மாளிகையில் கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் மக்களுக்கு அறிவூட்டுவதற்கென ஒழுங்கு முறையான வேலைத்திட்டமொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

“காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக வானிலை அவதான நிலையம் மிகவும் விழிப்பாக செயற்படுவது அவசியம்" எனவும் ஜனாதிபதி அவர்கள் இக்கூட்டத்தின் போது வலியுறுத்தினார்.

அனர்த்தங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவது தொடர்பாகவும், திடீர் அனர்த்தங்களின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கும், வாகன சாரதிகளுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அறிவூட்டும் வேலைத்திட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ். மரினா முஹம்மத் இக்கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் என்பவற்றின் பாடவிதானங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்கையை ஒரு அம்சமாக சேர்த்துக்கொள்ளுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு ஆறு பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக இக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன உட்பட பல அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி ஆரம்பித்து வைப்பு



சகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி. சி. ரி. வி) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாகக் கண்காணிக்கும் பணிகள் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புறக்கோட்டை யிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத் தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள சி. சி. ரி. வி. கட்டுப்பாட்டு அறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த பாதுகாப்புச் செயலாளர்:

கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட கெமராக்களின் ஊடாக பிடிக்கப்படும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரைகள் ஊடாக சுமார் ஒரு மணித்தி யாலமாக இருந்து பாதுகாப்புச் செயலாளர் அவதானித்தார்.

பல்வேறு கேணங்களில் துல்லியமாக படம்பிடித்த காட்சிகளை திரைகளின் ஊடாக பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர், அவற்றை தானே இயக்கி பார்வையிட்ட துடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண, பொலிஸ் தகவல் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெர்னாண்டோ ஆகியோர் சி. சி. ரி. வி. கெமராக்களின் செயற்பாடுகள் மற்றும் கண்காணிக்கும் விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

23 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் இந்த சி. சி. ரி. வி கெமரா பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு ள்ளது.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2007ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது 228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு நகரிலுள்ள பிரதான இடங்களில் சுமார் 108 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றை 28 திரைகள் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநேரமும் பொலிஸ் சி. சி. ரி. வி. கண்காணிப்பு பிரிவினர் அவதானித்து வருகின்றனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் என்றார்.

ஜனாதிபதி அவர்களினது ஆலோசனைக் கமைய, பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இந்தத் திட்டம் பொது மக்களுக்கு பாரிய நன்மைகளை அளிக்கும்.

புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல் போன்றவற்றையும் இதன்மூலம் மேற்கொள்ள முடியும் என்றார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை கொழும்பு நகரில் உருவாக்குவதற்காக, மெட்ரோ பொலிடன் நிறுவனமும் மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு


5000 கோடி ரூபா அரசுக்கு மேலதிக செலவு

தொழில் அதிகாரி - ரூ. 4000 வரை

வைத்திய அதிகாரி - ரூ. 5600 வரை

பல்கலை விரிவுரையாளர் - ரூ. 21000 வரை

அலுவலக உதவியாளர் - ரூ. 2500 வரை

கிராம உத்தியோகத்தர் - ரூ. 3000 வரை

முகாமைத்துவ உதவியாளர் - ரூ. 3050 வரை

வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வின்படி அலுவலக உதவியாளர் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் வரையில் 2,500 முதல் 21,000 ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. இதற்கென 5,000 கோடி ரூபாவை அரசாங்கம் மேலதிகமாக செலவிடவுள்ளது என சம்பள மற்றும் ஊழியர் ஆணைக்குழு வின் இணைத் தலைவர் எம். என். ஜுனைத் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் ஊடாக 13 இலட்சம் அரச ஊழியர்கள் நன்மையடையவுள்ளனர். சுமார் 4 1/2 இலட்சம் ஓய்வூதியக்காரர் களுக்கும் நன்மை கிடைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்புகள் ஜனவரி மாதம் முதல் அமுலாகிறது. 6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு ஜுலை மாதம் முதல் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளரின் அடிப்படை சம்பள படி வரிசையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 1,300 ரூபாவினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும். அந்த சம்பள படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ள ஊழியரின் சம்பளம் 3050 ரூபாவினால் அதிகரிக்கும்.

தொழில் அதிகாரி முதல் சம்பள படி வரிசையில் உள்ளவரின் சம்பளம் 1450 ரூபாவினாலும் உச்ச மட்டத்தில் இருப்பவரின் சம்பளம் 4000 ரூபாவினாலும் அதிகரிக்கும்.

அரசாங்க சேவை அதியுயர் தரத்தின் ஆரம்ப சம்பள படி வரிசையில் உள்ள ஒருவரின் சம்பளம் 1620 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ளவரின் சம்பளம் 4,700 ரூபாவினால் அதிகரிக்கும்.

அரசாங்க சேவையில் தொழில் சார் பிரிவின் கடமைகளின் சிறப்பம்சங்களை முறையாக நடத்திச் செல்லப்படுவதை ஊக்குவிப்பது அத்தியாவசியமானது என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் ஆய்வு நிறுவனங்களிலும் உள்ள உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நீதி மற்றும் விசேடத்துவ முகாமைத்துவ துறைகளில் உள்ளவர்களின் சம்பள அதிகரிப்பு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதை ஜுனைத் சுட்டிக்காட்டுகிறார்.

அரசாங்க சேவையில் நாடு முழுவதும் பணியாற்றும் ஒருவரின் சம்பளம் 1,750 ரூபாவினால் அதிகரிக்கும். அந்த தரத்தில் உச்ச சம்பள படி வரிசையில் இருப்பரின் சம்பளம் 3,300 ரூபாவினால் அதிகரிக்கும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் சம்பளம் 12,720 ரூபாவில் இருந்து 21,000 ரூபா என்ற ரீதியில் அதிகரிக்கும். இவ்வாறு எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்துக்கு 5,000 கோடி ரூபாவை மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளது.

13 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் நன்மையடைவார்கள்.

தற்போது 5,250 ரூபா என்ற மட்டத்தில் உள்ள உத்தியோக ரீதியில் இல்லாத அசாங்க மற்றும் பாதுகாப்பு படைகளில் சேவையாற்றுவோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் 600 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 5,850 ரூபாவுடனான கொடுப்பனவை அவர்கள் பெறலாம். இதேவேளை நிறைவேற்று தரத்துக்குரிய ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வருடம் ஜுலை மாதம் முதல் வழங்கப்படும்.

இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 300 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. அதற்கேற்ப 2,375 ரூபாவாக உள்ள கொடுப்பனவு 2,675 ரூபாவாக அதிகரிக்கும்.

ஓய்வூதிய சம்பளத்தில் இடம்பெறும் முரண்பாடுகளை நீக்குவதற்காக 2003க்கு முன்னர் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு மாதாந்தம் 750 ரூபாவினாலும் 2003 க்கும் 2006ம் இடையே ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய கொடுப்பனவு 250 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் யோசனையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பின் மூலம் ஓய்வூதியம் பெறும் நான்கரை லட்சம் பேர் நன்மையடைவர்.
மேலும் இங்கே தொடர்க...

29 டிசம்பர், 2010

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களை இழந்தவர்கள்

முல்லைundefinedத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் ஆயிரத்து 100 பேர் காணப்படுவதாக தேசிய பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இம் மாவட்டங்களில் உள்ள இப் பிள்ளைகளின் நன்மை கருதி விசேட நிகழ்ச்சி திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் ஆரம்பகட்டமாக இப் பிள்ளைகளுக்கு உதவ விரும்புவோர், நேரடியாக உதவலாம் எனவும், அல்லது 24 மணிதியாலம் சேவையில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சென்ற பெண்ணிடம் கொள்ளையிடப்பட்ட நகை மதவாச்சி பொலிஸாரினால் மீட்பு


undefined

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெண்ணொருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 20 பவுன் தங்க நகை இன்று முற்பகல் மதவாச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் கொழும்பு பஸ் வண்டி ஒன்று நேற்றிரவு உணவு இடைவேளைக்காக மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த பெண்ணிடம் இருந்து தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தங்க நகையை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஹான் அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் இன்று மாலை முதல் இயங்கும்

undefined

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் இன்று மாலை முதல் இயங்க உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரஷாந்த் ஜயக்கொடி தெரிவித்தார்.

நரரில் இடம்பெறும் குற்றச் செயல்கள், போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுதல் போன்ற பல விடயங்களை கண்காணிக்க இந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பாதிரியார் விவகாரம்: வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது

undefined


மன்னார் சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமியர் இருவரை பாலியல் குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைக்கு அழைத்துவரப்பட்ட பாதிரியாரை கைதிகள் கடுமையாகத் தாக்கியதையடுத்து தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதனால் மன்னார், வவுனியா, அநுராதபுரம் ஆகிய நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச்செல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



சிறுமி மீது பாலியல் குற்றம்: பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் தாக்குதல்

(இணைப்பு 01)

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் பதற்றம் நிலவியது. அதன்பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது கைதிகள் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

கோத்தபாயவை இந்தியாவுக்கு வருமாறு பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் அழைப்பு


undefined

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.

வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிப்பது எனவும் இங்கு இணக்கம் காணப்பட்டது. அதுமட்டுமன்றி கடல் பாதுகாப்பு பந்தோபஸ்து தொடர்பில் இருதரப்பும் மதித்து நடப்பதெனவும் இவ்விவகாரம் தொடர்பில் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

கடற்படை, தரைப்படை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதெனவும் இரு நாடுகளும் இணைந்து கடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இதனை புதுவருடத்தில் ஆரம்பிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.

இருநாடுகளுக்கும் இடையில் பாரம்பரிய உயர்மட்ட பரிமாற்றங்களை தொடர்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்திய விமானப் படையின் பாதுகாப்பு பிரதானி ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து தளமாக மீள ஆரம்பிப்பதுடன் காங்கேசன் துறைமுகத்தை உள்ளூர் வர்த்தக மற்றும் வாணிபத் துறைமுகமான பயன்படுத்துவது தொடர்பிலான பாரிய திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

தெங்கு பயிர்ச் செய்கைக்கு உர மானியம் வழங்க திட்டம்


அடுத்த வருடம் முதல் தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச் செய்கை சபை கூறியது. 50 கிலோ கிராம் தெங்கு உரம் தற்பொழுது 3000 ரூபாவுக்கு விற்கப்படுவதோடு, அதனை ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தலைவர் சரத் கீர்த்திரத்ன நேற்று கூறினார்.

தெங்கு உற்பத்தி குறைவடைந்து தேங்காய் விலைகள் அதிகரித்துள்ளதை யடுத்தே தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன் போதே தென்னைக்காக உர மானியம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் உரமானிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தென்னைக்கு உர மானியம் வழங்குவது தொடர்பில் நேற்று திறைசேரி அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெங்கு பயிர்செய்கை சபை தலைவர் கூறினார்.

ஏற்கனவே தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு உர மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் 80 வீதமான தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் ஒரு தென்னை மரத்திற்கு உரம் இடுவதற்கு வருடாந்தம் 150 ரூபா மட்டுமே செலவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படாததால், தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. உர மாணியம் வழங்குவதன் மூலம் தெங்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களாக 110 பேருக்கு நிரந்தர நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார துறை ஊழியர்கள் 110 பேருக்கு இன்று (29ம் திகதி) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றன.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று காலை 10.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கவுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றையும் நாமல் ராஜபக்ஷ எம்.பி இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.

வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆறு மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தொண்டர் அமைப்பில் ஊழியராக கடமையாற்றிய 110 பேருக்கே இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை காலமும் தொண்டர் அடிப்படையில் சேவை செய்தவர்களுக்கு மாதாந்தம் சுமார் எட்டாயிரம் ரூபாவை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட் டத்திலுள்ள கிளிநொச்சி, முழங்காவில், அக்கராயன், உருத்திரபுரம், பூநகரி, பளை, தர்மபுரம் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்பது வைத்திய சாலைகள் தற்பொழுது முழுமையாக இயங்கி வருகின்றதாக குறிப்பிட்ட ஆளுநர், கிளிநொச்சி, கந்தாவளை, பூநகரி, பளை ஆகிய பகுதிகளில் ஆறு மருத்துவ நிறுவனங்களும், சுமார் 52ற்கும் மேற்பட்ட கிளினிக்களும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

வட பகுதி மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை மேலும் மேம் படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் எம்.பி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாகாண சுகாதார மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தென் கிழக்கு பல்கலைக்கழகம்: பகிடிவதையை ஒழிக்க விசேட புலனாய்வுக்குழு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளும், வெளி இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பகிடிவதையை ஒழிப்பதற்கு விசேட புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பொலிஸாரின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.

புதிய கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு வெளியே, பல்வேறு இடங்களில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பகிடிவதை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மாணவர்களை வரவேற் பதாகக் கூறி அவர்களை பாடசாலைகள், பொதுஇடங்கள், விழா மண்டபங்கள் போன்ற இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விடங்களிலும் மற்றும் பஸ்தரிப்பு நிலையங்கள், பஸ் வண்டிகள் போன்ற இடங்களிலும் பகிடிவதையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளியிடங்களில் எங்காவது பகிடிவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிந்தால் பல்கலைக்கழக சமூகமும், பெற்றோரும், சமூக நலன் விரும்பிகளும் உடன் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட் டுள்ளனர்.

இதேவேளை, ஒருசில தினங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்தில் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாருடன் பல்கலைக்கழக கண்காணிப்புக் குழுவினர் சென்றதன் பயனாக தடுக்கப்பட்டதாக உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.

பகிடிவதையில் ஈடுபடுவதாக நிரூபிக்கப் பட்டால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கமைய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதோடு, மாணவ அங்கத்துவமும் பறிக்கப்படலாம். பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி செயற்படுத்தவுமே பகிடிவதை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக உபவேந்தர் இஸ்மாயில் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு: 20 மில்லியன் ரூபா அவசர ஒதுக்கீடு; சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு மட்டு. மாவட்டத்தில் கடும் பாதிப்பு; வெள்ளம் வடிகிறது



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கூறினார்.

மட்டக்களப்பிற்கு 20 இலட்சமும் திருகோணமலை மற்றும் பொலன்னறு வைக்கு தலா 5 இலட்சமும் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.

இது வரை 56,643 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1100 குடும்பங்களைச் சேர்ந்த 4141 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

முகாம்களில் உள்ள மக்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அரச அதிபர்களுக்கு நிதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். தேவையான அளவு நிதி கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பாக உடனுக்குடன் அறிவிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் தொடர்பாக 0652223151 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 57.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று குறைவடைந்துள்ளதையடுத்து வெள்ளம் வடிந்து வருகிறது. மக்கள் தங்கியிருந்த 3 முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதில் ஓட்டமாவடிப் பிரதேச சபை தவிசாளர் எம். கே. சாகுல் ஹமீட் தலைமையில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

இதன் பிரகாரம் ஓட்டமாவடி 1ம், 2ம், 3ம் வட்டாரங்களில் வெள்ளநீர் தேங்கி நின்ற இடங்களிலிருந்தும் நீரை வெளியேற்ற பெகோ ரக வாகனத்தின் மூலம் வடிகான்களை வெட்டும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புன்னக்குடா மற்றும் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்து அகலமாக்குமாறும், இந்நடவடிக்கைகளுக்கு உடனடியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

அத்துடன், மழை வெள்ளம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீர்செய்ய அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிட்டங்கி தாம்போதியின் மேலாக பால நிர்மாணிப்புக்கென வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போடப்பட்ட தற்காலிக வீதி உடைப்பெடுத்துள்ளதுடன், மூன்று அடிக்கு மேல் வெள்ளமும் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக கல்முனை நகரையும், நாவிதன்வெளி கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி வீதியூடான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

வவுனியா

வவுனியா மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமாகவுள்ள பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

பத்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் குளம் நிரம்பியுள்ளது. நீர் கொள்ளளவு 19 அடி 6 அங்குலமாக உயர்ந்துள்ளது. மேலும், நீர் மட்டம் உயர்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வந்து சேரும் மேலதிக நீரை வெளியேற்ற நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன என பாவற்குளத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக அனுராதபுர மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான ?!டூசியாதீவுக் குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வடைந்ததால், இரண்டாவது தடவையாகவும் மீண்டும் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் இக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மூடப்பட்ட பின் இம்மாதம் இரண்டாவது தடவையாகவும் இது திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இது தவிர துவரலை, எட்டுமதகு, பெரியஅலை, சின்ன அலை போன்றவைகளின் ஊடாகவும் இக்குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் நேற்று முழு நாளும் நல்ல மழை பெய்துள்ளது. நேற்றுக் காலை முதல் முப்பத்தைந்து மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வழமையான மழை வீழ்ச்சி எனவும், மழை தொடர்ந்து பெய்யுமெனவும் எதிர்வு கூறியுள்ளார்.

இவ்வருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி வரை 1480 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக காணப்படுவதாகவும் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி என். புஷ்பநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முதல் அடை மழை பெய்தமையால் நகரின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து வர்த்தக நடவடிக்கைகள் மோசமாக பாதிப்படைந்திருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பாதுகாப்பு செயலர் சந்திப்பு:



இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு

1400 படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுப் படைகளையும் உள்ளடக்கி யதாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைய 2011 ஆம் ஆண்டு இலங்கை - இந்தியக் கடற்படையினர் கலந்து கொள்ளும் கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகையை இலங்கையில் நடத்துவது தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் 1400 பேருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நட்புறவை வரவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்வந்திருப்பதை இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமாருடனான சந்திப்பில் வரவேற்றார்.

அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் இலங்கை விமானப் படையின் வைர விழாவில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய விமானப் படையின் சார்பில் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

நேற்றைய சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே. காந்தா, இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

120 மின் அலகுக்குள் கட்டண மாற்றமில்லை 90 அலகு மின்கட்டண முடிவை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மின்சார சபைக்கு பணிப்பு 90 வீதமானோருக்கு பாதிப்பில்லை

undefined

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சக்தி அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 120 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாது 120 அலகுக்கு மேற்படும் அலகுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, அமைச்சின் செயலாளர் சீ. பெர்டினன்டஸ், திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்ஸ கொஸ்தா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை 8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக் குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட றிந்தது. இதனடிப்படையிலேயே மின் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது.

நாட்டில் 46 இலட்சம் மின் பாவனை யாளர்கள் உள்ளனர். மின் கட்டணத்தை 120 அலகிற்கு மேல் உயர்த்துவதால் 4 இலட்சம் பேர் மட்டுமே கட்டண அதிகரி ப்புக்கு உள்ளாவர். இவர்கள் மொத்த பாவனையாளர்களில் 8 வீதமானவர்களாகும் என மின்சக்தி அமைச்சு கூறியது. புதிய திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அடங்கலாக 90 வீதமானவர்களின் மின் கட்டணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படாது.

இது தவிர 2011 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அரச ஆஸ்பத்திரிகள், மத ஸ்தலங்கள், பாடசாலைகளின் மின் கட்டணத்தை 25 வீதத்தினால் குறைக்கும் திட்டமும் அதேபோல அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு கூறியது.

தற்பொழுது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 6 வீதமாக குறைந்துள்ளது. முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த நிலைமைகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயர்வு நாட்டின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளுக்கு உகந்ததல்ல என மேற்படி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதால் குறிப்பிட்ட அளவினால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளபோதும் அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு தெரி விக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

2010ல் வீதி ஒழுங்குகளை மீறியதற்காக 119 பில். ரூபா அறவீடு

வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2010ஆம் ஆண்டில் 119 பில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை 2011 ஜனவரி முதல் வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் தகவல் தருகையில்:

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், அது ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

28 டிசம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை

undefined


யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடகொரியாவின் அணு ஆயுதம் தொடர்பாக தகவல் அறிய முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரி சீனரினால் கைது




சீன இராணுவ அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்து வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணை தயாரிப்பு ஆகியன தொடர்பான தகவல்களை பெற முயன்ற தென் கொரிய இராணுவ அதிகாரியை சீனா கைது செய்து சிறையில் வைத்துள்ளது.

வட கொரிய அரசின் அதிகாரபூர்வ நாளிதழான யானோப் செய்தி நிறுவனமும், தென் கொரியாவின் ஜூங் ஆங் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

தென் கொரிய இராணுவத்தின் இடை நிலை தளபதியாக பணியாற்றிவரும் சோ என்பவர், சீன நாட்டின் ஷெங்கியாங் நகருக்கு வந்திருந்தபோது, சீன இராணுவ அதிகாரி ஒருவரிடம் வட கொரியாவின் அணு ஆயுதம், ஏவுகணைகள் தொடர்பான இரகசியங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் தர முற்பட்டபோது, அவரை கண்காணித்து வந்த சீன உளவுப் பிரிவினர் கைது செய்ததாக அச்செய்திகள் கூறுகின்றன. வட கொரியாவின் ஆயுத அமைப்புகள் குறித்து தென் கொரியா உளவறிய முற்படுவதை தடுப்பதில் சீனா மிக அதிகமான கவனம் செலுத்தி வருகிறது என்பதையே இந்நடவடிக்கை உறுதி செய்கிறது என்றும், வட கொரியா தொடர்பாக உளவில் ஈடுபட்ட மேலும் ஒரு தென் கொரிய உளவாளி சீனாவின் பிடியில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோ என்கிற அந்த தென் கொரிய இராணுவ மேஜர் கடந்த 14 மாதங்களாக சீன சிறையில் உள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் வட கொரியாவின் அணு ஆயுத நிலைகளை அறிந்துகொள்வதில் தென் கொரிய அதீத கவனம் செலுத்தி வருவது, அந்த இலக்குகளை துல்லியமான தாக்குதல் நடத்தி அழிக்கும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கே என்றும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இவ்வருடம் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

undefined
இவ்வருடம் இரண்டு இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவிக்கின்றது.

மொத்தம் 2 இலட்சத்து 3 ஆயிரத்து 488 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 140 பேர் ஆண்களும், 89ஆயிரத்து 409 பேர் பெண்களும் ஆவர்.

90 ஆயிரம் பேர் சவூதி அரேபியாவில் வேலை பெற்றுள்ளதாகவும் தற்போது சவூதி அரேபியாவில் 56 ஆயிரத்து 100 இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து சென்றுள்ள ஏனையவர்கள் பஹ்ரைன், ஓமான்,கட்டார், குவைத், இஸ்ரவேல், சிங்கப்பூர், மலேசியா, ஜோர்தான்,சைபிரஸ், மாலைத்தீவு, தென்கொரியா போன்ற நாடுகளில் பணி புரிகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம் - தனிமையில் இருந்த பெண்ணிடம் கைவரிசை

undefined
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

வீடியோ இறுவட்டுக்கள் விற்கும் வீட்டுக்கு வாடிக்கையாளர்கள் போல வந்த கொள்ளையர்கள் தங்க நகைகளையும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளதுடன் அப் பெண்ணை கடுமையாகத் தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதீப் குமார் அஞ்சலி




பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் சற்றுமுன் அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி அறிவிப்பு

2010 ஆகஸ்undefinedட் மாதம் நடைபெற்ற 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தமிழ் மொழியில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை 2011 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் பிரபல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது. இப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். இவ்வாறு தகைமை பெற்றவர்களில் 15 ஆயிரம் மாணவர்கள் குடும்ப வருமானம் அடிப்படையில் புலமைப்பரிசில் நிதியினைப் பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளதுடன் பிரபல பாடசாலைகளில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்பதற்கு தகைமை பெற்றுள்ளனர்.

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களில் 5 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழியில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர். வெளியிடப்பட்டுள்ள பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகளில் ஒரு சில பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி சென்ற வருடத்திலும் பார்க்க கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளின் விபரம் வருமாறு:

ஆண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு றோயல் கல்லூரி 177

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 167

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 149

கல்முனை ஸாஹிறா கல்லூரி 146

திருகோணமலை ஆர்.கே.எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து மத்திய வித்தியாலயம் 144

கொழும்பு இந்துக் கல்லூரி 141



பெண்கள் பாடசாலைக்கான வெட்டுப்புள்ளி

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி 164

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 157

கண்டி பதியூதீன் மகளிர் கல்லூரி 156

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 154

கொழும்பு புனித கிளாரி கல்லூரி 151

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை 151

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி 147



கலவன் பாடசாலைக்கான வெட்டுப் புள்ளிகள்

ஹற்றன் ஹைலன்ட்ஸ் மத்திய மகா வித்தியாலயம் 157

மாவனெல்லை ஸாஹிரா கல்லூரி 152

ஹபுகஸ்தலாவ அல் மின்ஹாஜ் மத்திய மகா வித்தியாலயம் 150

மடவளை பஸார் மதீனா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 149

மாவனெல்லை பதுரியா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 148

கெடுண கொல்வா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் 147

கொக்குவில் இந்து வித்தியாலயம் 146

நுவரெலியா புனித ரைனிட்டி தமிழ் மகா வித்தியாலயம் 145

கொடகல கேம்பிரிஜ் தமிழ் வித்தியாலயம் 140
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2,12,211 பேர் பாதிப்பு; 2951 பேர் இடம்பெயர்வு

கிழக்கு undefinedமாகாணத்தில் பெய்துவரும், வடகீழ் பருவமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 55 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 12 ஆயிரத்து 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம். ஹஸீர் தெரிவித்தார்.

744 குடும்பங்களைச் சேர்ந்த 2957 பேர் இடம்பெயர்ந்து ஏறாவூர்ப்பற்று செங்கலடி, கிரான், வாகரை, ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள் பத்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

வாகனேரி உறுகாமம் உன்னிச்சை ஆகிய குளங்கள் திறந்து விடப்பட்டதன் காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் 99 வீடுகள் களிமண் குடிசைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

பகுதியளவில் 433 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. வெருகல் துறை ஊடான பாதை தடைசெய்யப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலை வாகரை ஊடான போக்குவரத்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.கொம்மாந்துறை தீவு, ஈரளக்குளம்,கிரான் மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று செங்கலடி பட்டிப்பளை வாகரை ஆரையம்பதி ஆகிய இடங்களில் வீடுகள் குடிசைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அரசு மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் பாவனைப்பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்படுகின்றது.

இதேவேளை ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபைக்குட்பட்ட சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை,பலாச்சோலை, ஐயங்கேணி போன்ற இடங்களில் வெள்ள நீர் வடிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளை பிரதேசசபைத் தவிசாளர் எஸ். ஜீவரங்கன் முன்னெடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டில் தொடரும் கொலை,கொள்ளை சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு:த.தே.கூ

undefined


இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணத்தில் துணிகரமாக இடம்பெற்று வருகின்ற தொடர் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலை கொள் ளைச் சம்பவங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ள கூட்டமைப்பு, இவ்விடயத்தை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற தொடர் அசம்பாவிதங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இராணுவ அல்லது பொலிஸ் மயமாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வகையில் கொள்ளைச் சம்பவங்களும் படுகொலைகளும் இடம்பெறுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.

இங்கு சட்டவிரோதமான குழுக்கள் செயற்படுவதாக இருப்பின் அவ்வாறு நடைபெறுகின்ற படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், ஆயுதமுனை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் இராணுவ உயரதிகாரிகளும் மற்றும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற இந்த படுகொலைகளுக்கு காரணங்களே இல்லாதிருக்கின்றன. குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரும் இராணுவமும் அறியாது இந்த அசம்பாவிதங்களும் அருவருப்பான செயற்பாடுகளும் நடந்தேறுவதற்கு இடமில்லை. எனவே இத்தகைய சம்பவங்களுக்கு பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும். அண்மையில் சங்கானையில் குருக்கள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்ற காரணத்தைக்கூட பொலிஸார் தமக்கு அறிவிக்கவில்லையென அவரது குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவாஜிலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் எமக்கு கவலையையும் அதிர்ச்சியையுமே தருகின்றன. அரசாங்கம் என்னதான் கூறினாலும் எமது மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், ஆட்கொலைகள், அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் ஜனவரி நான்காம் திகதிய பாராளுமன்ற அமர்வின்போது வடக்கில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

எது எப்படி இருப்பினும் இந்த காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை ஏற்க முடியாது அரசாங்கத்தினாலேயே இதனை தடுத்து நிறுத்த முடியாதிருப்பதுதான் வேடிக்கையானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வலிகாமம் பிரதி கல்வி பணிப்பாளர் சுட்டுக் கொலை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் சுட்டுவிட்டு தப்பியோட்டம்


வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் 11.30 மணியளவில் உரும்பிராய் மேற்கு பகுதியில் நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

வீட்டுக்கு கொள்ளையிட வந்த ஆயுதக் குழுவே இவரை கொலை செய்து விட்டுத் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட வந்துள்ளது. வீட்டிலுள்ளவர்களின் நகைகளை தருமாறு ஆயுத முனையில் அச்சுறுத்திய கும்பல் நகைகளை கொள்ளையிட்டுள்ளது.

பிரதிக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்ற சந்தேக நபர்கள், அவருடன் தவறாக நடக்க முயன்றதாக அறிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து இதனை தடுக்க முயன்ற போது சந்தேக நபர்கள் அவரைச் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். சுடப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்கண்டு சிவலிங்கம் (52) யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்ததாக பொலிஸார் கூறினர்.

இறந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் இருந்து 9 மி.மி. வெற்று ரவையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவவின் பணிப்புரையின் பேரில் கோப்பாய் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இருவர் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட் டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேமாதிரியான சம்பவம் ஒன்று இரண்டு வாரத்துக்கு முன்பு சங்காணையில் இடம்பெற்றது. இதன் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆலயக் குருக்களுக்கு சிகிச்சைபலனளிக்காமல், நான்கு தினங்களில் மரணமானார். இவ்விரு சம்பவங்களும் யாழப்பாண மக்களிடம் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங் களை உடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரு மாறு யாழ். மாவட்ட பாதுகாப்பு அதி காரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் அவசர பணிப்புரைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு 12 பிரதேச செயலர்கள் நியமனம் நேர்முகப் பரீட்சைகள் நேற்று பூர்த்தி; ஜனவரி முதலாம் திகதி நியமனம்

வட மாகாணத்தி லுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு புதிதாக 12 பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ள தாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்படவுள்ள பிரதேச செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். நகரிலுள்ள வட மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நேர்முகப் பரீட்சையை மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர், எஸ். ரங்கராஜா மற்றும் மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.

விஜயலட்சுமி ஆகியோர் நடத்தினர். இந்த நேர்முகப் பரீட்சையின் மூலம் 12 பேர் புதிதாக பிரதேச செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ரீதியில் நியமிக்கப்படவுள்ளனர்.

கல்வித் தகைமை, தரம் என்பவற்றுடன் இளம் வயதுடையவர்களே இம்முறை புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த ஆளுநர், 2011 ஜனவரி மாதம் 1ம் திகதி கொழும்பில் இவர்களுக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என்றார்.

தற்பொழுது வட மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர்களில் 60 வயதை தாண்டிய பலர் இருப்பதாகவும் இவர்களது சேவை க்காலம் முடிவுற இருக்கும் நிலையிலேயே இளம் பிரதேச செயலாளர்களை புதிதாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் தற்பொழுது பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் துரித மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மேலும் துரிதமாக அமுல்படுத்து வதற்கு இளம் பிரதேச செயலாளர்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு தொடக்கம் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக திட்ட மிடப்பட்ட சீரான சேவையை உரிய முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள் ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மாவட்டச் செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மை சட்டம் குறித்த சர்வதேச கருத்தரங்கை இலங்கையில் நடத்த திட்டம்

உலகில் சிறுபான்மை சம்பந்தமான சட்ட விதிமுறைகள் மற்றும் அதற்கான உரிய தீர்வுகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் அவை தொடர்பான சர்வதேச மட்டத்திலான கருத்தரங்கொன்றை இலங்கையில் நடாத்த தீர்மானித்திருப்பதாக நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதி அமைச்சின் அனுசர ணையுடன் மேற்கொள்ளப்படும் இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு இந்த நூற்றாண்டில் மிகவும் தலைசிறந்த திறமையான மார்க்க சட்ட வல்லுநர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

மடவளை பஸார் வை. எம். எம். ஏ. ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வை. எம். எம். ஏ. யின் தலைவர் ஜே. எம். சித்தீக் தலைமையில் மடவளை மதீனா தேசிய கல்லூரி அஷ்ரஃப் நினைவு மண்டபத்தில் நேற்று முன்தினம் (26) இடம்பெற்றது.

இஸ்லாமிய புதுவருடத்தில் (1432) நினைவு தினம், அஹதியா, அறநெறி பாடசாலையின் 10வது சேவை நிறைவு விழா மற்றும் வை.எம்.எம்.ஏ. வினது 26 வருட சேவை பாராட்டு விழா ஆகிய மூன்று விழாக்களும் ஒரே மேடையில் இடம்பெற்றன. இதில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் என்ற எண்ணம் எமது மனதில் இருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களையும் ஏனைய மாற்று மதத்தினரதும் மனம் புண்படாதவாறு எமது மத அனுட்டானங்களுக்கான வழி முறைகளை எமது அடிப்படை உரிமை களுக்கு மாற்றமல்லாத வழியில் வீழ்வது எப்படி? இருந்த போதிலும் இவ்வாறான வாழ்க்கை வழிமுறைகளில் சில இடங் களில், சில சந்தர்ப்பங்களில் தாம் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவைகள் ஏற்படு கின்றன. ஆனால் எல்லா விடயங்களிலும் விட்டுக்கொடுக்கவும் முடியாது. ஆனால் இவைகளை எவ்வாறு எல்லா தரப்பு களுக்கும் புரிந்துணர்வோடு தெளிவுபடுத்து வது என்பது மிக முக்கியமான விடய மொன்றாகும்.

மேலும், முஸ்லிம் சமூகம் சார்ந்த சில ஒழுக்க விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைக்கேற்ப நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றோம். எமது அடிப்படை நிபந்தனைகளுக்கு மாற்றமில்லாத வாழ்க்கை நடவடிக்கை களுக்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

மேலும், யுத்தம் முடிந்த பிறகு இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகம் சிறு பான்மை சமூகத்தோடு ஒரு இரக்கத் தீர்வு டனான புதிய வழிமுறைகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் திட்டமிட்டு ஒரு நல்ல அறிவிப்பை செய்துள்ளார். அதாவது இந்த நாட்டிலே இனியாரும் சிறுபான்மை சமூகம் என்று பேச முடியாத நிலையில் அனைவரும் சமமானவர்கள் என்ற அனுகுமுறையை கையாண்டுள்ளனர்.

அடுத்ததாக நாடு பூராகவும் நிலவுகின்ற அஹதிய்யா பாடசாலைகள் எதுவித கொடுப்பனவுமின்றி வார இறுதி நாட்க ளில் பகுதிநேர வகுப்பாக இயங்குவது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரிய சேவையாக அமைந்துள்ளதை நாம் பெருமையாக பேசவேண்டும்.

எந்த கட்சி தேர்தலுக்கு வந்தாலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து விடுக்கப்படுகின்ற மிக முக்கியமான கோரிக்கையொன்றுதான் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான குறைபாட்டை தீர்த்துத் தரவேண்டும் என்பது. இந்த கோரிக்கைக்கு இந்த அரசாங்கம் இதுவரை நூறு மெளலவி ஆசிரியர்கள் நியமித்துள்ளது.

இனிவரும் காலங்களில் முந்நூறாவது மெளலவி ஆசிரியர்கள் நியமித்தால்தான் ஓரளவாவது திருப்தியான சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு முன்வைக் கின்ற குறைபாடுகளை தீர்த்து வைக்க திரைசேரியில் நிதி ஒதுக்கீட்டில் பிரச்சினை இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி எம்.எச்.எம். புர்ஹான் உள்ளிட்ட பலர் இங்கு உரையாற்றினர். நினைவுப் படிவம், பரிசில்கள், சான்றதழ்கள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

தென்னை அபிவிருத்தி செயற்பாடுகளில் படை வீரர்கள்


தென்னை செய்கை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

பராமரிப்பு அற்ற நிலையில் காணப்படும் தெங்கு செய்கை நிலங்களை அமைச்சு எமது பொறுப்பில் தரும்பட்சத்தில் அவற்றை சிறந்த முறையில் மேம்படுத்திக்கொடுப்பதுடன் தெங்கு செய்கையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கான நடவடிக்கையை ஜனவரி முதல் ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, தெங்கு அபிவிருத்தி சபையின் பாதுகாப்புக்கு சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளன ரென்றும் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை நேற்று முதல் சந்தையில் * கோழி இறைச்சி 350 ரூபா * முட்டை 12 ரூபா


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை என்பன நேற்று முதல் சந்தையில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு கூறியது.

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து 500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 2 மில்லியன் கோழி முட்டைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில் கோழி இறைச்சி முட்டை என்பவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ 350 ரூபாவுக்கும் முட்டை 11 முதல் 12 ரூபாவிற்கும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சு கூறியது.

இதேவேளை, 16 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற் பொழுது 14 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் முட்டை குறைந்த விலைக்கு விற்கப் படுவதோடு சந்தையில் முட்டை விலை மேலும் குறையும் எனவும் அமைச்சு தெரிவித்தது. சதொச ஊடாக மட்டுமன்றி தனியார் துறையினூடாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன விற்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய பாதுகாப்பு செயலர் நேற்று இலங்கை வருகை


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் இரு நாட்டுக்கும் இடையி லான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுவார்த் தைகளில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவிருக்கும் அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு நேரடியாக விஜயம் செய்து மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவைச் சந்திக்கவிருப்பதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிசையும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் வகுப்புக்களால் மாணவருக்கு ஏற்படும் பாதிப்பை ஆராய குழு தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை


தனியார் வகுப்புகளின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை செய்து ள்ளது.

தேசிய கல்வி ஆணைக்குழு 15 மாவட்டங்களில் முன்னெடுத்த ஆய்வுகளையடுத்தே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய குழுவில் மாகாண கல்வி அலுவலகம், தேசிய கல்வி நிறுவனம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை என்பன உள்ளடக்கப்படவேண்டும் எனவும் தேசிய கல்வி ஆணைக்குழு குறிப்பிட்டு ள்ளது.

10ஆம் ஆண்டு மாணவர்களில் 91.84 வீதமானவர்களும் 12ம் ஆண்டு மாணவர்களில் 98 வீதமானவர்களும் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நூறு வீதமானவர்களும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10ஆம் ஆண்டில் கற்கும் மாணவர்களிடையே பாடசாலை பற்றிய நம்பிக்கை இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறைபெறுவது, பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமை என்பனவே மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதற்கு பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த உயர்தர வகுப்புகளுக்கு முகம்கொடுப்பதற்கு மேலதிக வகுப்புகளினூடாக வெற்றிகரமாக தயார்படுத்துவதோடு சிறப்பாக கற்பிப்பதாக சாதகமான விடயமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10,000 ரூபா முதல் 20,000 ரூபா வருமானம் பெறும் குடும்பங்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களு க்காகவே கூடுதலாக செலவிடுகின்றனர். 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை வகுப்புகளுக்காகவும் அதிகம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடத்திட்டத்தில் விடயதானம் அதிகமாக உள்ளதால் மேலதிக வகுப்புகளுக்கு செல்வது கட்டாயம் எனவும் மேலதிக வகுப்பு மூலம் பிரதான பரீட்சைகளில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைவதாகவும் மேலதிக வகுப்புகளின் மூலம் அழுத்தம் வழங்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பில் மாற்றுக் கொள்கைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இன்று பரீட்சைத் திணைக்களத்தில் மாநாடொன்று நடத்தப்பட உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

27 டிசம்பர், 2010

சிங்களவர்களுடன் எவ்வாறு வாழ்வது? சிறுபான்மையினருக்கு விரைவில் கருத்தரங்கு - நீதியமைச்சர்

சிறுபான்மை ,இனத்தவர்கள் பெரும்பான்மை ,இனத்தவருடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றி விளக்குவதற்காக விரைவில் கருத்தரங்கொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மடவளை மதீனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.

இந்நாட்டில் சிறுபான்மை என்ற ,இனபேதம் ,இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

,இருப்பினும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை சார்ந்து வாழும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உண்டு' என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மஹரகமவில் கொள்ளையர் மீது பொலிஸ் சூடு: ஒருவர் பலி அடகுக்கடையை கொள்ளையிட முயன்றபோது சம்பவம்




மஹரகமவில் ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கும்பல் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மஹரகம, ஹைலெவல் வீதியிலுள்ள நகை அடகு வைக்கும் இடமொன்றைக் கொள்ளையிடவென நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கிய மூன்று கொள்ளையர் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு உடனடியாக விரைந்த பொலிஸார் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

தப்பிச் சென்ற கொள்ளையரை கைது செய்யும் பொருட்டு மஹரகம மற்றும் நுகேகொட பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

‘தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தேவைகளை முன்வைக்க வேண்டும்’


தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

அமரத்துவம் அடைந்த இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களை நினைவு கூரும் நோக்கில் நேற்று முன்தினம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர்.

இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர் களிடம் கையளிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடி யும்.

மாகாண மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் மக்கள் சபை உரு வாக்கப்பட்டு அவற்றுக்குரிய நிர் வாகம், அதிகாரம், நிதி வசதிகள் போன்றவை வழங்கப்படும். இதற் குரிய திட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படு த்தப்படும் என்றார்.

இந்நிகழ்வை, கலைஞான கேசரி எஸ்.கே. தங்க வடிவேல் ஒருங்கி ணைத்திருந்தார்.

வழக்கறிஞர் கே. பத்மநாதன் தலைமை தாங்கியிருந்ததுடன், பிர தம விருந்தினராக கிழக்கு மாகாண மக்கள் வங்கியின் முன்னாள் உதவிப் பொது முகாமையாளர் ரகு துரை சிங்கமும், கெளரவ விருந்தினராக கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதனும் சிறப்பு விருந்தினராக வானொலி நாடகத் தந்தை அமரர் சானாவின் புதல்வி திருமதி சுமதி பாலஸ்ரீதரனம் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் செல்வி துலக்ஷிகாவின் பக்திப் பாடல்களும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் பட்டிமன்றமும் நடைபெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெளத்த கொடிக்குக் கொடுக்கும் கெளரவம் ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

பெளத்த கொடிக்கு நாட்டில் கொடுக்கப்படும் அதே அந்தஸ்தையும் கெளரவத்தையும் ஏனைய மதங்களின் கொடிகளுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமியரின் பிறைக்கொடி, கத்தோலிக்கர்களின் புனித பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி ஆகியவற்றிற்கும் பெளத்த கொடிக்கு கிடைத்திருக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து சகல மதக் கொடிகளையும் ஜனரஞ்சனப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இன்று பத்து பன்னிரண்டு வயதைக் கொண்ட எங்கள் நாட்டின் பிள்ளைச் செல்வங்கள் 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பான பிரஜைகளாகி விடுவார்கள். அவர்களுக்கு நீஇப்போது இருந்தே பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற வேண்டும் என்ற நற்பண்பை கற்றுக் கொடுப்பது என்னுடைய நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதேவேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் வேதனை வடுக்கள் இந்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும், இப்போது நிலைத்து இருக்கின்றது என்ற உண்மையை தாம் மறக்கத் தயார் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வேதனை வடுக்கள் இப்போது உள்ள வயது வந்தவர்களின் மனதிலிருந்து முற்றாக அகன்று விடுவதற்கு நிச்சயம் சில காலம் எடுக்கும் என்று கூறினார்.

எனவே, நாம் நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், பல்வேறு மதங்களிடையே உண்மையான புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் எமது சிறுவர்கள் மத்தியில் இப்போது இருந்தே வளர்ப்பது அவசியம் என்றும், அதன் மூலம் இன்னும் 9, 10 வருடங்களில் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள்.

எங்கள் அனைவருக்கும் சம உரிமையும், சமவாய்ப்பும், சகல துறைகளிலும் இருக்கின்றது என்ற உணர்வு இந்த பிள்ளைகளின் அடிமனதில் நிரந்தரமாக குடிகொண்டுவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

ஒருவர் தன்னை இந்தியன் என்று கூறுவதைப் போல் நாமும் இனி இலங்கையர் என்று மார்பைத்தட்டி அறிமுகம் செய்யும் நாள் வரை நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை மக்களும், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு பதில், நான் ஒரு இலங்கையன் என்று பெருமையோடு தன்னை அறிமுகம் செய்யும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலட்சியக்கனவாகும். அந்தக் கனவு நிச்சயம் நனவாகிவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள கற்றறிந்த பெரியோர்கள் இந்த நற்பண்புகளை எமது பிள்ளைச் செல்வங்களின் மனதில் பதியச் செய்ய வேண்டும். இறைவனின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள். எல்லாம்வல்ல இறைவன் ஒருவரின் இனத்தையோ, மதத்தையோ பார்த்து மக்களை நேசித்து, அவர்களுக்கு தன்னுடைய அருளாசியை தெரிவிப்பது இல்லை.

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்வதிலேயே, இறைவன் தனது அவதானத்தை செலுத்துகிறார் என்ற உண்மையை பிள்ளைச் செல்வங்களின் மனதில் இந்த பெரியவர்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய வகையில், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இவ்விதம் மற்ற இனங்களையும், மதங்களையும் மதித்து அவற்றிற்கு மரியாதை செலுத்தும் இளம் சந்ததியினர் 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் உருவாகினால், இலங்கையில் வன்முறைகளோ, கிளர்ச்சிகளோ, உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்காது. இனக்கலவரங்கள் வளருவதற்கும் எவ்வித அடித்தளமும் அமைந்திருக்காது.

அதனால், அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இளம் சந்ததியினருக்கு நாட்டை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைச் செய்து தெற்காசியாவில் தேனும், பாலும் ஊற்றெடுக்கும் பொன் விளையும் ஒரு சொர்க்கப் பூமியாக மாற்றிவிட முடியும் என்று நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

இயற்கை அழிவுகளில் மக்களைப் பாதுகாக்க அரசு திடமான திட்டம் யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு


சுனாமி போன்ற அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அழிவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (26) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

நாட்டுக்குக் கிடைத்த சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகவே, நாட்டை இலகுவில் மீளக் கட்டியெழுப்ப முடிந்ததென்றும் பிரதமர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் இழப்புகளை மீளக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளின் பாண்ட் வாத்தியம் மற்றும் கலாசார நடன நிகழ்வுகளுடன் பிரதமர் தி.மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டது.

காலை 9.15 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் யாழ் முற்றவெளியில் வந்திறங்கிய பிரதமர் தி.மு. ஜயரத்னவை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ்.

அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்து க்கு அழைத்து வந்தனர். 9.20 மணியளவில் வீரசிங்கம் மண்டப வாயிலை வந்தடைந்த பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவினரை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, பிரதியமைச்சர் டுலிப் விஜேசேகர ஆகியோர் வரவேற்று உடனடியாகவே 9.25க்கு சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், மாணவர்களின் கோலாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், தீப்பந்தம், பொய்க்கால் குதிரையாட்டம், நடனம் என்பனவும் கடற்படை, இராணுவம், விமானப்படை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசையும் அமைந்திருந்தன.

அலங்கார ஊர்திகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி பண்ணை வீதியூடாக இடம்பெற்றது. இவ் அலங்காரப் பேரணி இடம்பெற்றபோது ஆயிரக்க ணக்கான மக்கள் இவ் ஊர்திகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இவ் அலங்கார ஊர்தி பவனியை பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் மகிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்கள் டிலிப் விஜயசேகர, சுஜித் விஜயசுந்தர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், உட்பட பலரும் கண்டு களித்தனர்.

தேசிய பாதுகாப்பு தினத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மிக இனிமையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் பாடினர். வரவேற்புக் கீதத்தை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவர்கள் இசைத்தனர்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசளிப்பும் இடம்பெற்றது.

ஞாபகார்த்த மலர், வழிகாட்டி நூல் என்பனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 2004ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தங்களில் 35000 மக்கள் தமது இன்னுயிரை இழந்தனர். பல கோடி ரூபா சொத்துக்கள் இழக்கப்பட்டன. இந்த கோர அனர்த்தம் நாட்டின் பதின்மூன்று மாவட்டங்களில் இடம்பெற்றன. அரசாங்கம் உயிரிழந்தவர்களைவிட சகல இழப்புகளுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்கு ஜனாதிபதி அவர்களின் தீர்க்கதரிசனமிக்க தலைமைத்துவமும் சிறந்த வழிகாட்டலும் இப்பணியை நிறைவேற்ற உதவியிருந்தது.

நிகழ்வில் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதியமைச்சர் டுலிப் விஜயசேகர பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் அஸ்வர், திருமதி விஜயகலா மகேஸ்வரன், மு. சந்திரகுமார், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்க, பிரதியமைச்சர் அப்துல் காதர், யாழ்.

மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த துறுசிங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஜயரத்ன சில நிமிட நேரம் தமிழிலும் உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்த மக்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்தவித பாரபட்சமுமின்றி நிவாரணப் பணிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டமையால் பணிகள் துரிதமாக இடம்பெற்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதல் அடைந்தனர். இதன் காரணமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப முடிந்தது. உலகத்தில் அதுவும் ஆசிய மக்கள் மத்தியில் சுனாமி நிவாரணப் பணிகளை இலங்கைதான் சிறப்பாகச் செய்துள்ளது என்ற உலகத்தின் பாராட்டுக் கிடைத்தது.

இன்றைக்கு நாட்டில் சமாதானம் உருவாகியுள்ளது. இந்த நாடு பல்லின மக்கள் வாழும் நாடாகும். அவர்கள் வெவ்வேறு மதங்கள், கலாசாரம், பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஐக்கியப்பட்டு தாம் வாழும் நாட்டை சுபிட்சமிக்க நாடாக மாற்ற ஒற்றுமைப்பட்டு உழைத்து வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் கூட சகல மக்களையும் தன் பிள்ளைகளாக சிந்தித்து அபிவிருத்தியில் சமவாய்ப்பு வழங்கி வருகிறார்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட மற்றைய மாவட்டங்களைவிட வடக்குக் கிழக்குக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பொருளாதார சுபிட்சமிக்க பூமியாக மாறும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் வடக்குக் கிழக்கு உட்பட 200 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் மதிநுட்பமான தலைமைத்துவத்தால் கொடிய பயங்கரவாதம் அழிக்கப்பட்டதால் நாட்டில் வாழும் +(யிஙுஜி மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஜனாதிபதி அவரஙகளஙஏற்படுத்தித் தந்துள்ளார். இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சவால் ஆசியாவில் இலங்கையை பொருளாதார சுபிட்சமிக்க நாடாக கட்டியெழுப்புவதுதான்.

அதற்கு நாம் அனைவரும் எமது நாடு என்ற சிந்தனையில் ஒற்றுமைப்பட்டு எல்லோரும் எல்லா நலன்களும் பெற்றவர்களாக வாழ்வதுதான். அதற்கான கால்கோளை ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

26 டிசம்பர், 2010

மஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டதில் ஒருவர் பலி

மஹாரகம பகுதியில் வைத்து நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த ஆபணர விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த இனந்தெரியாத மூவர் தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரை நோக்கி குறித்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு பொலிசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...