6 ஜூன், 2010

. இலங்கை முகாமில் உள்ள தமிழர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்; பிரதமருக்கு கருணாநிதி கடிதம்


பிரதமர் மஇலங்கை முகாமில் உள்ள தமிழர்களை குடியமர்த்த    நடவடிக்கை எடுங்கள்;    பிரதமருக்கு கருணாநிதி கடிதம்ன்மோகன் சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு டிசம்பருக்குள் மறு வாழ்வு அளிக்கப்பட்டு மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி இப்போதும் 80 ஆயிரம் தமிழர்கள் இடம் பெயர்வு முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரசின் மறு வாழ்வு நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் மறுவாழ்வு பணிகள் மூலம் மறு குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், நீதியின் அடைப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வுகள் அவசிய மாகிறது.

நீங்கள் இலங்கை அதிபரோடு நடத்த உள்ள சந்திப்பின் போது இந்த 2 பிரச்சினைகளையும் முக்கிய விஷயமாக எடுத்து வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முகாம்களில் இருக்கும் தமிழர்கள் விரைவில் மறு குடியமர்த்தப்பட வேண்டியதின் அவசியம் பற்றியும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான மறு நிர்மான பணிகளை செய்வது குறித்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிறிஸ்மஸ் தீவிலுள்ள 700 அகதிகளை ஆஸி. பிரதான நிலப்பரப்புக்குக் கொண்டு செல்லத் தீர்மானம்


அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்கள் நிரம்பி வழிவதால் அங்கிருந்து 150 இலங்கைத் தமிழர்கள் உட்பட 700 படகு அகதிகள் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 600 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும், 150 இலங்கைத் தமிழர்களையும் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரொன்றுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். 700 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து கேட்டின் விமானத் தளத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளனர். இந்த நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

மேற்கு அவுஸ்தி“ரேலியாவின் பின்தங்கிய பகுதியாகிய கேட்டினில் ஆரம்பக் கட்டத்தில் 200 தொடக்கம் 300 வரையான அகதிகள் தங்கவைக்கப்படவுள்ளனர். தற்போது கிறிஸ்மஸ்தீவில் 2436 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஆகக் கூடுதலாக 2500 பேர் தங்குவதற்கான வசதிகளே உள்ளன. இந்த நிலையிலேயே ஒரு தொகுதி அகதிகளை அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்றினால் அங்குள்ள தடுப்பு முகாம்கள் நிரம்பி விடும். இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மூன்று மாதங்களுக்கும், ஆப்கானிஸ்தான் அகதிகளின் விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்கும் பரிசீலிப்பதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக நிதியுதவி


ஆண்டிப்பட்டி அருகே லாரி விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி, டி. பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் ஊர் திரும்பும் வழியில் கரிசல்பட்டி விளக்கு என்ற இடத்தினருகே எதிரே வந்த லாரி மோதியதில், 11 பேர் மரணமடைந்ததையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டதோடு, அதிமுக சார்பில் அக்குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்றும், இந்தக் கோர விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 17 பேர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், அவர்களது மருத்துவ சிகிச்சைக்குத் தலா 5,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பாக, கட்சிப் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (6.6.2010 - ஞாயிற்றுக் கிழமை), மரணமடைந்த 11 பேர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறியதோடு, மரணமடைந்த 11 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000/- ரூபாயை வழங்கினார்.

அதே போல், மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் 17 பேர்களுக்கும் ஆறுதல் கூறியதோடு, அறிவித்தபடி காயமடைந்த 17 பேருக்கும் தலா 5,000/- ரூபாயை வழங்கினார்.

இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கருணை மனுக்களுக்கு கால அளவு உண்டா? புதிய தகவல்

புதுடில்லி : "குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எந்த சட்ட விதிகளும் சொல்லவில்லை. கருணை மனுக்களை விரைவுபடுத்த எந்த சட்டமும் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின், கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.இந்நிலையில், அப்சல் குரு, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், அறிவு ஆகியோரின் கருணை மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் கோரியிருந்தார்.

இதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் விவரம்:

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் முருகன், சாந்தன், அறிவு மற்றும் பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு உள்ளிட்ட 29 மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், 26 பேரின் மனுக்கள் ஜனாதிபதியின் பரிசீலனையிலும், மூன்று பேரின் மனுக்கள் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையிலும் உள்ளன.அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, தன் பதவிக்காலத்தில், இரண்டு கருணை மனுக்கள் மீது மட்டும் முடிவு தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி வகித்த கே.ஆர்.நாராயணன் தன் பதவிக்காலத்தில், ஒரு மனு மீது கூட முடிவெடுக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2009 நவம்பரில், ஒரு கருணை மனு மீது முடிவெடுத்தார். அதில், கோவிந்தசாமி என்பவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகளான முருகன், சாந்தன், அறிவு ஆகியோரின் கருணை மனுக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் உள்ளன. பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு, 2006ம் ஆண்டு முதல், நிலுவையில் உள்ளது.

கர்நாடக போலீசார் 22 பேரை, கண்ணிவெடி மூலம் கொன்ற ஞானபிரகாஷ், சீமோன், மாடியா, பிலவேந்திரன் என்ற நான்கு பேரின் கருணை மனுக்கள், 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன.கருணை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என, எந்தச் சட்ட விதிகளும் சொல்லவில்லை. கருணை மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்தவும் சட்டமில்லை.இவ்வாறு அரசு பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் முதலீடு செய்வதற்கு இலங்கை பொருத்தமான நாடு உலக வர்த்தக சமூகத்தினர்




உலகில் முதலீடு செய்வதற்கு இலங்கையை மிகவும் பொருத்தமான நாடாகக் கருதுவதாக உலக வர்த்தக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

வேகமாக வளரும் பொருளாதாரம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பாதுகாப்பான சூழல் காரணமாக உலக வர்த்தகர்கள் மேலும் மேலும் இலங்கையின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

‘ஐஃபா’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற உலக வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றிலேயே அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு, நாட்டின் தற்போதைய சூழல் நிலை தொடர்பாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு எடுத்து ரைத்தார். இலங்கையில் முத லீடுகளைச் செய்வதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயத்துறை, கைத்தொழில்துறை உள்ளி ட்ட பல்வேறு துறைகள் காணப்படுவதாக உலக வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி, உணவுத் தட்டுப்பாடு இவை அனைத் தையும் எதிர் கொண்டு புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொண்டு எழுந்து நிற்க முடிந்துள்ள தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் வாழ்வில் 40 ஆண்டுகள்


ஜனாதிபதியின் அரசியல் வாழ்க் கைக்கு 40 வருடங் கள் நிறைவடை வதை முன்னிட்டு நாளை 7ஆம் திகதி நாடு முழுவதும் மத வைபவங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

1970 மே 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப் பட்டார்.

இவர் ஜூன் 7ஆம் திகதி எம்.பியாக பதவி ஏற்றார். கடந்த 40 வருட காலத்தில் அவர் பாராளு மன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக, பிரதம ராக பதவி வகித்துள்ள அவர் 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்




பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு
ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இரு குழுவினருக் குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிஸழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இம்மாதம் யசூசி அகாஸி இலங்கை வருகை



ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஸி இம்மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அகாஸி ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகாஸி, இலங்கையின் முக்கிய ராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யசூசி அகாசி கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் பிரச்சினைகளை விவாதிப்போம்-ஆர்.சம்பந்தன்

தமிழ் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சி னைகள் பற்றியும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பு இதுவாகும்.

வன்னிப் பிரதேசத்தில் தாம் மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின்போது கண்டறிந்த விடயங்கள் தொடர்பான அறிக்கையையும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் என்றும் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது.

ஆனால் இந்த இரு விடயங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் சம்பந்தன், ஜனாதிபதியுடன் பேசத் தயார் என்று தேர்தல் முடிந்த பிறகு நடந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின்போதே தாம் தெரிவித்திருந்தாகக் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...