30 மார்ச், 2011

அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரின் எண்ணிக்கை குறைவு: ஐ.நா. அகதிகளுக்கான நிறுவனம்

இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.

இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் வீட்டின்மீது டைனமைட் தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேச ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது டைனமைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீட்டின் ஓடுகள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் நடைபெறவுள்ள உள்ராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள இவ்வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கான காரணங்கள் பற்றி புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் மரணம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றுக்காலை யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

கொழும்பு15 முகத்துவாரத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு பரிதாப மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இவர் யாழ். கோண்டாவில் கிழக்கு, கோட்டைக் காட்டு ஒழுங்கையிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது கடந்த சனிக்கிழமை கொள்ளைக் கும்பலொன்றினால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரது உறவினர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் கும்பல் அங்கிருந்த குறித்தநபரை பலமாகத்தாக்கி விட்டு அவர் வசம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

அதன் பின் அவர் மருத்துவசிகிச்சைக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒத்திவைத்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை மே மாதத்தில் நடத்த ஆலோசனை

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற 335 உள்ளூராட்சி மன்றங்களில் ஒத்திவைக்கப்பட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட 23 மன்றங்களுக்கான தேர்தலையே அரசாங்கம் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

10 ஆவது உலக கிண்ணப்போட்டிகள் நடைபெற்ற விளையாட்டரங்கள்கள் இருக்கின்ற பிரதேசங்களை அண்மித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில் 17 மாநகர சபைகள், ஒரு நகர சபை மற்றும் ஐந்து பிரதேச சபைகளும் அடங்குகின்றன. அரசாங்கம் மொத்தமாக 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்திருந்த போதிலும் மே மாதத்தில் 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு தேர்தல்கள் திணைக்களத்தினால் இவ்வாராத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் அறிவித்தல் விடுக்கப்படுமாயின் தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மன்றங்களை தவிர்த்து ஏனைய 234 உள்ளூராட்சிகளுக்கான வாக்களிப்பு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை தம்வசப்படுத்தி அமோக வெற்றியீட்டிக்கொண்டதுடன் ஐக்கிய தேர கட்சி 9 மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி மன்றங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் மலையக மக்கள் முன்னணி ஒரு சபையையும் கைப்பற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சுகவீனம் காரணமாக அவருக்கெதிரான ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் ஹைகோர்ப் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா சுகவீனமுற்றிருப்பதால் அவரை ஆஜர் செய்ய முடியவில்லை என்று தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை மருத்துவரின் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கை மே மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. அத்துடன் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டது.

ஹைகோர்ப் மோசடி வழக்கில் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்ய தற்போது சர்வதேச பொலிஸான இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தனது மருமகன் தனுன திலகரட்ணவுக்குச் சொந்தமான ஹைகோர்ப் கம்பனியிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்த போது கேள்வி பத்திர விதிமுறைகளை மீறி, இராணுவத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா மீது குற்றஞ் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்த தலைவர் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருகின்ற ரத்கம பிரதேச சபையின் புதிய தலைவர் நீதிமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரத்கம பிரதேச சபைக்கு போட்டியிட்டு 14 ஆயிரத்து 790 விருப்பு வாக்குகளை பெற்ற மனோஜ் மென்டிஸ் பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவ்வாறான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் மென்டிஸ் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டார்.

நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ரத்கம பிரதேச சபையின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட மனோஜ் மென்டிஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காலி பெரலிய பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் மனோஜ் மென்டிஸ் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ள தென் கொரியா

இலங்கையர் உள்ளிட்ட தெற்காசிய வலய நாட்டவர்களுக்கான விசா விதிகளை தென் கொரியா தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு விசா பெற குறைந்தபட்ச ஆவணங்களையே சமர்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் குறைவான நிதி வளத்தை மட்டும் காண்பித்தாலும் போதுமாக இருக்கும்.

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தென் கொரியா தனது விசா நடைமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தியிருந்ததாக தற்போது அறிவித்துள்ளது.

தளர்த்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின் மூலம் இலங்கையர்கள் தென் கொரியாவின் சுற்றுலாத் துறைக்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...