5 மார்ச், 2010

இடம்பெயர்ந்த வாக்காளர்களுள் கூடுதலானோர் வாக்களிக்க விண்ணப்பம்





இடம்பெயர்ந்த வாக்காளர்கள், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கென கூடுதலானோர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட பொதுத் தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை இரு மடங்காகுமென்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி பிதினகரனுபீக்குத் தெரிவித்தார்.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம் முதலான பிரதேசங்களில் வாழும் மக்களே இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 26 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பொதுத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை அமைப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் மாவட்டமொன்றில் ஒரு மத்திய அலுவலகத்தையும் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஓர் அலுவலகம் வீதமும் அமைத்துச் செயற்பட முடியும். எனினும், இந்த அலுவலகங்களை தேர்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் எட்டாந் திகதி நள்ளிரவு வரையே நடத்த முடியும். அதன்பின் மூடிவிட வேண்டும். கிளை அலுவலகங்கள் ஆறாந் திகதி நள்ளிரவு வரையே நடத்தப்பட முடியும். எனினும், வேட்பாளர் தனது இல்லத்தில் ஓர் அலுவலகத்தை ஆறாந் திகதி நள்ளிரவுக்கும் எட்டாந் திகதி நள்ளிரவுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் எந்தவொரு தேர்தல் பிரசார அலுவலகத்தையும் அமைக்கக் கூடாது என்பது சட்டமாகும்.

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கிய தற்காலிக அடையாள அட்டைகள் யாவும்செல்லுபடியாகும்





பொதுத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை விநியோகத்தைத் துரிதப்படுத்தியுள்ளதுடன் இவ்வருடத்தில் பத்து இலட்சம் அடையாள அட்டைகளை
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இசை மேதை ரவிசங்கர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு




இலங்கைக்கு விஜயத்தை மேற் கொண்டுள்ள உலகப் பிரசித்திபெற்ற இந்திய இசை மேதை ரவி
மேலும் இங்கே தொடர்க...

பெட்டக விவகாரத்தில் புதிய திருப்பம் திலகரட்னவுக்கு பணம் வழங்கிய வர்த்தகருக்கு பகிரங்க பிடியாணை



இன்டர்போலின் உதவியை நாடுமாறு நீதிமன்றம் உத்தரவு

சரத் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன தனியார் வங்கிப் பெட்டகங்களில் வைத்திருந்த பெருந்தொகைப் பணத்தை
மேலும் இங்கே தொடர்க...
கட்சி தாவும் பணியில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் முன்னாள் தலைவரும்,



முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி கடந்த இரண்டு நாட்களாக கட்சி தாவும் பணியில் முன்முரமாக ஈடுப்பட்டு வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் மர்ம மனிதன் சரமாரி துப்பாக்கிசூடு:
.

2 பேர் படுகாயம்அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தலைநகரம் வாஷிங்டனை ஒட்டி உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான ராணுவ அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...
கடற்கொள்ளையரிடமிருந்து இலங்கையரை மீட்க நடவடிக்கை : சர்வதேச செய்தி நிறுவனம்



சோமாலியக் கடற்கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டின் பேரில் தடுத்து







சட்ட
விரோத ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டின் பேரில் தடுத்து



வைக்கப்பட்டுள்ள ஹைகோர்ப் நிறுவனத்தின் பணிப்பாளர் வெல்லிங்டன் டியோட்டுக்கு பிணை மறுக்கப்பட்டு அவர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹைகோர்ப் நிறுவன பணிப்பாளரை ரகசிய பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பொது மக்கள் சொத்து சட்டத்தின் கீழேயே சந்தேக நபரை ரகசிய பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

எனவே அவரை பிணையில் விடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறிய மேலதிக மாவட்ட நீதவான் லங்கா ஜயரட்ன சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி மறுத்தார்.

விசாரணைகளை துரிதப்படுத்த ரகசிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதுடன் அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை வங்கி முகாமையாளர்கள் இருவரும் விசாரணை நடத்துவோரிடம் வழங்கவேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். _
மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. குறித்து பேசத் தயார்: பேர்னாட் சாவேஜ்

பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. குறித்து பேசத் தயார்: பேர்னாட் சாவேஜ்


ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாகவும், ஏனைய -->விடயங்கள் குறித்தும் பேசத் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்களை இலங்கை பின்பற்றினால் இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த சாவேஜ், எந்த நாட்டையும் சிரமத்திற்குள்ளாக்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தம் அடுத்த ஓகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் இதற்கு முன்னர் இந்தப் பிரச்சினையைச் சாதகமாகத் தீர்க்கலாம் எனத் தான் நம்புவதாகவும் சாவேஜ் மேலும் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் பதுங்கியிருப்பதாகக்கூறி

: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் பதுங்கியிருப்பதாகக்கூறி




இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டில் போலீஸôர் சோதனை நடத்தினர்.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும்அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னே. ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் முறைகேடு செய்ததாக தனுனா மீது அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

தமது உறவினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹசன் திலகரத்னே வீட்டில் தனுனா பதுங்கியிருக்கலாம் என போலீஸôருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கொழும்பு மாவட்டம் பில்லியான்டலா பகுதியில் உள்ள ஹசன் திலகரத்னே வீட்டில் செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி. போலீஸôர் சோதனை நடத்தினர். இத்தகவலை சி.ஐ.டி.இயக்குனர் விஜய அமரசிங்கே தெரிவித்ததாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சோதனை நடந்ததை ஹசன் திலகரத்னே வீட்டில் உள்ளவர்களும் உறுதி செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுனாவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன் பேரில் விசாரணைக்காக கைது செய்யவே இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் திலகரத்னே 2003-ம் ஆண்டில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடியவர். தற்போது மேற்கு மாகாண கவுன்சிலராக உள்ளார். இலங்கையில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொன்சேகா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார்.

சோதனை நடைபெற்ற நேரத்தில் ஹசன் திலகரத்னே வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகாவுக்கு மாஜி நீதிபதி வக்காலத்து



கொழும்பு: "சரத் பொன்சேகாவை தொடர்ந்து காவலில் வைத்துள்ளது, சட்ட விரோதமானது' என, இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறை



1978ஆம்ஆண்டின்இரண்டாம்குடியரசுயாப்பின்கீழ்பாராளுமன்றபொதுத்
தேர்தலானது விகிதாசாரபட்டியல்முறையின்
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியா செல்ல முயற்சி:
சிலாபம், உடப்பு இளைஞர்கள் 21 பேர் மட்டக்களப்பில் கைது



சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு எத்தணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாபம்,
மேலும் இங்கே தொடர்க...