28 ஆகஸ்ட், 2009


இலங்கை அகதி முகாம்களில் அனாதையாக சுற்றும் 1064 சிறுவர்- சிறுமிகள்: தாய்- தந்தை கதி தெரியவில்லை
Colombo வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27,



இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் வன்னி பகுதியில் பல்வேறு அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

போர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

தினமும் சிங்கள ராணுவத்தினர் முகாமுக்குள் புகுந்து அங்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் விடுதலைப்புலிகள் என்று கூறி அழைத்து செல்கின்றனர். அவர்கள் அதன் பிறகு திரும்பியதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்று தெரியவில்லை. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த முகாம்களில் 1064 சிறுவர்- சிறுமிகள் அனாதையாக சுற்றித்திரிகிறார்கள். அவர்களுடைய தாய்- தந்தை உறவினர்கள் கதி என்ன ஆனது என்று தெரிய வில்லை. பெற்றோர்களை தேடி பரிதாபமாக அலைகிறார்கள்.

இவர்களுடைய பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது ஏதாவது முகாம்களில் இருக்கலாம் என கருதப்படுகிறது. அகதி முகாம்களுக்குள் இதுவரை சர்வதேச குழுக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது
மேலும் இங்கே தொடர்க...