28 மே, 2010

அடுத்த அதிமுக ஆட்சி, பழைய செயலகத்தில்'





ஜெயலலிதா
அதிமுக ஆட்சி புனித ஜார்ஜ் கோட்டையில்தான் -- ஜெயலலிதா
அதிமுக மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், அரசு, பழைய தலைமைச் செயலகத்தில்தான் இயங்கும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் அதன் அரசு அமையாது என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
'பழைய கோட்டையில்தான் ஆட்சி'

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா, இதைத் தெரிவித்தார்.

இதன் மூலம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்தாது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியிலிருந்து மூத்த பிரமுகர்கள் சிலர் திமுகவில் சேர்வது பற்றி அவர் பேசும்போது, கட்சியை விட்டுப் போன தலைவர்ளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தொண்டர்களை மையமாகக் கொண்ட கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக