22 பிப்ரவரி, 2010





ஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம், நித்தெனிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வானையே பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வானின் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 18ம் திகதி முந்தல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் இந்த வானில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்பு

இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இஸ்ரேலில் இருந்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

இஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்புகள் விவசாய துறையிலேயே இருப்பதாகவும் அத்துறையில் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கூறுகிறது.


மாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்



இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசை தாசனின் பெயரும் இடம்பெற்று ள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங் கள் தெரிவித்தன.


வடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்

வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமை ச்சர் மேலும் கூறினார்.


.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில்



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக ஐ.ம.சு. முன்ன ணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

ஐ. ம. சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.

மத அனுஷ்டானங்களின் பின்னர் கூட்டம் நடைபெறும்.


. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன் னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.

தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.




தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்




தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.




.உச்சநீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் உருத்திரகுமாரன் நாளை வாதம்






விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் இலங்கைத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்வதற்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவுவதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.

யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்றியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாடவுள்ளார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி, ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தான் வரலாற்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்றவுள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


கனேடிய 'உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்



கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.


தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்..

இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை மி கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா கொழும்பில் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் விரைவில்...



சிறுவர் குற்றச்செயல்களை விசாரிக்கப் புதிய நீதிமன்றம்




சிறுவர் குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்க நீதிமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறுவர்களின் குற்றச் செயல்கள் குறித்து இதுவரை பொதுவான நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன். 16வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றச் செயல்கள் இனிமேல் புதிய நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறார் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறுவர்களை தடுத்து வைத்தல் சம்பந்தமாகவும் ஆராயவென அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தப் புதிய நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது




சமரச பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்
ஆப்கானிஸ்தான் அதிபரின் அழைப்பை தலீபான்கள் ஏற்க மறுப்பு



ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ராணுவத்தை எதிர்த்து போராடி வரும் தலீபான்களை சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர்.

ராணுவ நடவடிக்கை

ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்டு மாநிலத்தில் தான் தலீபான்கள் வலுவாக இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள மர்ஜா என்ற பகுதியில் அமெரிக்கா தலைமையிலான ராணுவ வீரர்கள் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மர்ஜாவில் உள்ள தலீபான்களின் தலைமையகத்தை அமெரிக்கா தலைமையிலான ராணுவம் கைப்பற்றியது. அங்கிருந்த ஆயுதங்களையும், தலீபான்களின் அடையாள அட்டைகளையும் ராணுவம் கைப்பற்றியது.

அழைப்பு

அதோடு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தலீபான் இயக்கத்தின் நம்பர்2 தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் பிடிபட்டார். இப்படி தலீபான் இயக்கம் சரிவை சந்தித்து வரும் நிலையில், அந்த இயக்கத்தினரை அமைதி பாதைக்கு திரும்பும்படியும், பேச்சுவார்த்தை நடத்த வரும்படியும் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேட்டுக்கொண்டார்.

அவர் இந்த அழைப்பை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பேசியபோது விடுத்தார். அவரது அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர். வெளிநாட்டு ராணுவம் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறட்டும் என்று குறிப்பிட்டனர்.

பொம்மை

தலீபான் செய்தி தொடர்பாளர் கோரி முகமது ïசுப் கூறுகையில், கர்சாய் ஒரு பொம்மை. அவரால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து பேசமுடியாது. அவர் ஊழலில் மூழ்கி விட்டார். அவரை சுற்றிலும் இருப்பவர்கள் போரை காரணம் காட்டி பணம் சம்பாதித்த பணக்காரர்கள் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கா தலைமையிலான 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர் விமானங்கள் ஆதரவுடன் மர்ஜா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்களது போராளிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். எங்கள் எதிர்ப்பு இரவு பகல் என்று 24 மணி நேரமும் தளர்வு இல்லாமல் தொடர்ந்து வருகிறது என்று ïசுப் தெரிவித்தார்.

இதற்கிடையில் மர்ஜா பகுதியில் ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் ராணுவ தளபதி கூறுகையில், இன்னும் 30 நாட்களில் இந்த பகுதியில் இருந்து தலீபான்களை விரட்டி அடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.



ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட 3 சீக்கியர்கள் தலை துண்டித்து கொலை
பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அட்டூழியம்



ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட சீக்கியர்களில் 3 பேரை தலீபான் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த அட்டூழியத்தை செய்த அவர்கள், மேலும் சில சீக்கியர்களை இன்னமும் பணய கைதிகளாக வைத்து சித்ரவதை செய்து வருகிறார்கள்.

சீக்கியர்களை கடத்திய தீவிரவாதிகள்

பாகிஸ்தான் நாட்டில், மலைவாசிகள் வசிக்கும் கிபெர் என்ற பகுதியைச் சேர்ந்த பாரா என்ற இடத்தில் இருந்து சில சீக்கியர்களை தலீபான் தீவிரவாதிகள் 35 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் சீக்கியர்கள் சிறுபான்மையினர் ஆவர். இந்தப் பகுதி பாகிஸ்தான் அரசின் கடுப்பாட்டில் இல்லை. முழுக்க, முழுக்க தலீபான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

6 சீக்கியர்கள் கடத்தப்பட்டதாக ஒரு தகவலும், 4 பேர் கடத்தப்பட்டதாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.

ரூ.3 கோடி வேண்டும்

எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பதில் குழப்பம் இருந்தாலும், கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமானால் ரூ.3 கோடி பணய தொகை கொடுக்க வேண்டும் என்று தலீபான்கள் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். அதற்காக காலக் கெடுவும் விதித்து இருந்தனர்.

நேற்றுடன் இந்த காலக்கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 3 சீக்கியர்களை அவர்கள் பிடித்து வைத்து இருந்த, படி என்ற இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கடத்தினார்கள்.

3 பேர் கொலை

அவர்களை கொடூரமான முறையில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்களின் தலைகளை பெஷாவரில் உள்ள குருத்வாராவில் போட்டு விட்டுச் சென்றனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பெயர் ஜஸ்பால் சிங். இன்னொருவர் பெயர் மகல் சிங். மூன்றாவது சீக்கியரின் பெயர் தெரிய வில்லை.

மீதி சீக்கியர்களை அவர்கள் தொடர்ந்து பணய கைதிகளை வைத்து சித்ரவதை செய்து வருவதாக கூறப்படுகிறது.




இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் எவ்வளவு? சர்வதேச போலீஸ் உதவியுடன் இலங்கை அரசு விசாரிக்கிறது





இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று சர்வதேச போலீஸ் உதவியுடன், இலங்கை அரசு விசாரணை நடத்துகிறது.

பொன்சேகாவின் மருமகன்

இலங்கை ராணுவ தளபதியாக இருந்து விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வெற்றி கண்டவர், பொன்சேகா. ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிய அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். பின்னர் அவர் மீது அதிபர் ராஜபக்சே, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கைது செய்தார். தற்போது பொன்சேகா, ராணுவ கோர்ட்டு விசாரணையை எதிர்நோக்கி ஜெயிலில் இருக்கிறார்.

பொன்சேகாவின் மருமகன் தனுனா திலக ரத்னே. இவர் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறார். இலங்கை ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், மற்றும் போர் கருவிகளை சப்ளை செய்வதற்காக இலங்கை அரசு டெண்டர் கோரிய போது, அதிக பட்ச தொகைக்கு தனுனா திலக ரத்னே கேட்டார்.

ஊழல்?

என்றாலும் அவருக்குதான் அந்த டெண்டர் வழங்கப்பட்டது. இந்த டெண்டர் பல கோடி மதிப்பு உள்ளது. இதில் பொன்சேகா ஊழல் செய்திருப்பதாக, அதிபர் ராஜபக்சே இப்போது குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, பொன்சேகாவின் மருமகனை, இலங்கை அரசு தேடி வருகிறது. அவரை கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அவரது வெளிநாட்டு வங்கி கணக்குகள் பற்றிய விவரத்தை அறியவும், இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சர்வதேச போலீசின் உதவியை இலங்கை அரசு நாடி இருக்கிறது.

தாயார் கைது

இந்த நிலையில், தனுனா திலக ரத்னேயின் தாயார் அசோகா திலகரத்னே, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். அவரிடம் இருந்து, ஏராளமான வெளிநாட்டு பணத்தை, சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வங்கி கணக்கு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்



எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தீர்மானித்துள்ளன.

இவர்களுர் சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த இந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.பெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.வேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பிற்கான மத்திய நிலையம் 4500 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 25 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

கபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கபே இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.



வாக்குகள் எண்ணும் நிலையங்களில் பணியில் ஈடுபட கண்காணிப்பாளர்கள்




வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணையாளருடனான பேச்சின்படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.

அரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.



அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் விஜயம் வீரகேசரி இணையம்






மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,முல்லிக்குளம்,கொக்குப் படையான் கிராமங்களுக்கு மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு விஜயம் செய்த அமைச்சர்,1990 ஆண்டு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் வசித்த பிரதேசங்களை பார்வையிட்டதுடன்,மீண்டும் அம்மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இம்மக்களது மீள்குடியேற்றத்ததை துரிதப்படுத்த,காடழிப்பு,கிணறுகளை துப்பரவு செய்தல்,விவசாய,கடற்றொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்தல்,கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை சேதமடைந்துள்ள பள்ளிவாசல்களை மீள் புனரமைப்பு செய்துதருமாறு கிராம மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வேண்டுகோளையும்விடுத்தனர். அதனையடுத்து அமைச்சர் முல்லிக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தினையும் பார்வையிட்டதுடன்,அங்கு மதக் கடமைகளை பக்தர்கள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கடறபடையின் வடமேல் பிராந்திய கட்டளை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் கொக்குப்படையான் கிராமத்துக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அம்மக்களது பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடன் அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப்,கடற்றொழில் இணைப்புச் செயலாளர் எஸ்.யஹ்யான் உட்பட முக்கிய அதிகாரிகளும் இங்கு வருகைத்தந்திருந்தனர்


ஐ.தே.மு வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நாளையுடன் முடிவு:பாலித




எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் இறுதி பணிகள் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடும் என்று புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட குழுத் தலைவருமான பாலித ரங்கே பண்டார கூறினார்.

சில மாவாட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,கையொப்பம் இடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் தெரிவு குறித்தும்,இட ஒதுக்கீடுகள் குறித்தும் தொடர்ந்து பேச்சக்கள் இடம்பெற்று வருவதாகவும் குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார கூறினார்.

அதேவேளை ஜெனரல் சரத் பொன்செகா தலைமையிலான புதிய ஜனநாக முன்னணியும் சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாக ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் முஹம்மத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதேநிலையில் தற்பொது இலங்கை அரசயலில் மிகவும் பிரபலங்களாக பேசப்பட்டுவரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்று மாலைக்குள் தமது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

கிழக்கில் தமது அணி வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம் பெறுவதாக தெரிவித்த அவர் எவ்வாறாயினும் திங்கட்கிழமை மாலை பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும் என்றும் 25 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னால் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் இம்முறை,புத்தளம் மாவட்டத்தில் அல்லது வன்னி மாவட்டத்தில் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிவுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது _
மேலும் இங்கே தொடர்க...
மரண அறிவித்தல்




1960. 05.20.............. 2010.2 .19

தோற்றம் ............. .....மறைவு




திருமதி. தேவிகா தயாபரன் (யசோஃதயா)நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர்அபிவிருத்திநிறுவனம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாமங்கத்தை வதிப்பிடமாகவும் கொண்டதிருமதி தேவிகா தயாபரன் கடந்த வெள்ளிக்கிழமை (19.02;.2010) அன்று காலமானார். அன்னார் தயாபரனின் அன்பு மனைவியும்,அழகைய்யா அன்னெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மருமகளும், அருண் பிரதிஸீன் (பிரான்ஸ்) பாசமிகு தயாரும், சிவபாலன் (லண்டன்), பவானி(லண் டன்)பால பாஸ்கரன், சியாமளா, சகுந்தலாதேவி(கனடா),காலஞ்சென்ற மங்களேஸ் வரி, கேதீ ஸ்வரன்(லண்டன் )
ஆகியோரின் அன்பு சகோதரியும்,கமலாவதி, சுந்தரலிங்கம், மனோகரன்(பெற்றோலிய கூட்டுத்தாபனம்), சி.ஞானமலர், மகேந்தரின்(ஜக்கிய
நாடுகள் நிறுவனம்), ரஞ்சினி(லண்டன்), தட்சணாமூர்த்தி(லண்டன்). சுவேதினி, விக்கினேஸ்வரன்,விமலராஜன்(கனடா), புவனா(லண்டன், குமரன்,கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,சறோஜாதேவி, விக்கினேஸ்வரி, பொன்னரசுமலர், மகாதேவன், காலஞ்சென்ற சிவநடராஜா ஆகியோரின்
உடன்பிறவா சகோதரியும்,சியாம், சுந்தர், கோபிசுந்தர், லக்ஸ்மன்சுந்தர், பானுசுந்தர், அஜித் சுந்தர், அம்றிதா, ஜனுக்ஷ்ன், லக் ஷிதா,கிரிஜன், அபிதா, விதுஷா, விதுஷன், வினுதன், வாதுஷன், டிவிசன் ஆகியோரின் பெரியதாயும், சிந்துஜா,விதுஷன், குகேந்துஜா, தனுஷன் ஆகியோரின் சிறியதாயும், ரிஷிகன், ஜெனார்த்தன், ஜானுஷா, பவிஷா,டிவிஷா, பவிஷா, வசந்தகுமாரி, சந்திரகுமாரி, கோகிலகுமாரி, கிருஷ்ணகுமாரி, துலக்ஷிகுமாரி,மோசேதயான், ஜெயாசிறிதரன், நந்தகிஷோ, சசிந்தகிஷோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.அன்னராது +தவுடல் எதிர்வரும் திங் கள்கிழமை (22.02.2010) திங்கள் கிழமை பிற்பகல் 4:00 மணிக்குகள்ளியங்காடு இந்து மயானத்திற்கு தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலைஉற்றார், உறவினா, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர்
065-2224678 (கணவர்-இலங்கை)
044-7529719072 (சிவபாலன்-லண்டன்)
044-1522696826 (பவாணி-லண்டன்)
077-6328073 (பால பாஸ்கரன்-இலங்கை)
077-63280739 (சியாமளா-இலங்கை)
514-3365338 (சகுந்தலாதேவி-சசி கனடா.
0044 2087955394 .ஜெயபாலன்(லண்டன் )
மேலும் இங்கே தொடர்க...

வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி?


வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கடந்த ஜனாதிபதித் தேரதல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணையாளருடனான பேச்சின் படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.

பாராளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.

அரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.


கெரவலப்பிட்டிய அனல்மின் நிலைய இறுதிக்கட்ட பணி பூர்த்தி

25ம் திகதி ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டு ள்ளது.

முள்ளிக்குளம் பகுதியில் சி 4 ரக வெடிமருந்து மீட்பு


மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த வெடிமருந்து 37 மூடை களில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப் பதாகவும் அவர் கூறினார். அண்மை க்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.


அநுராதபுரம் வடக்கு:

60 குளங்களை புனரமைக்க ஜனாதிபதி ரூ.10 கோடி ஒதுக்கீடு



அநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த முப்பது வருட காலமாக புனரநிக்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.


ரூபவாஹினி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா


தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.


இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட 98 வகை மருந்துப் பொருட்கள்

இவ்வாரம் கொழும்பு வந்து சேரும்




அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 98 வகையான மருந்துப் பொருட்களும் இவ்வாரம் கொழும்புக்கு வந்துசேரும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

ஆறு மாத காலத்திற்குத் தேவையான இந்த மருந்துப் பொருட்கள் 12 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மேற்படி 98 வகையான மருந்துப் பொருட்களும் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாத காலத்திற்குத் தேவையான அளவு தான் கையிருப்பில் உள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனால் இம்மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை உடனடியாக அங்கீகாரம் வழங்கியது. இதனடிப்படையில் இம் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யவென திறைசேரி மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள், அடங்கிய குழு கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றன.

மருந்துப் பொருட்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்ததும் அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி கூறினார்.

.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி

மட்டு. முதன்மை வேட்பாளர் அமீர் அலி


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


20 ஆயிரம் பேர் தேர்தல் கண்காணிப்புப் பணியில்

75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் கடமையில்




பாராளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புக் கடமையில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழு க்கள் தீர்மானித்துள்ளன.

இது தவிர சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை இந்த நிறுவ னங்கள் ஈடுபடுத்த தீர்மானித்துள் ளன.

பெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள் நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர் களையும் ஈடுபடுத்த முடிவு செய்து ள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர் களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.

வேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பிற்கான மத் திய நிலையம் 4500 உள்நாட்டு கண் காணிப்பாளர்களையும் 25 வெளி நாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

கெபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கெபே இணைப்பாளர் கீர்த்தி தென் னகோன் கூறினார்.



நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம்


கொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை


‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமா னால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.

நகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...