5 அக்டோபர், 2009



மனிக்பாம் ஸோன் 3 முகாமில் சுமார் 2000 பேர் விசேட தேவைக்கு உட்பட்டோர் எனத் தகவல்
அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது





இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும்இன்று மாலை விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக் குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கத



மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் ஸோன் 3 முகாமில் மாத்திரம் 2000 பேர் விசேட தேவைக்குட்பட்டோராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இது அறிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தச் சூழ்நிலையில் காயமடைந்து அங்கங்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், வாய்பேச முடியாமலும், காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும் இயற்கையிலேயே வலது குறைந்தவர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிகின்றது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தது மட்டுமன்றி, நேரடி தாக்கங்களுக்கு உள்ளாகி உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளுக்காகவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
மட்டு.வந்த 50 இடம்பெயர் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


இடைத்தங்கல் முகாம்களிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் மட்டக்களப்புக்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அங்குள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்று 50 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கு என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் 127 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இக் குடும்பங்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் சிங்கள மகா வித்தியாலயம் இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அழைத்து வரப்பட்ட ஆரம்ப நாட்களில் பாதுகாப்பு தரப்பினர் இவர்களது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் 2 - 3 நாட்களின் பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 23ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி இன்று சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிலிருந்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலிருந்து17, குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரும் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு பாதுகாப்புடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட 127 குடும்பங்களைக் கொண்ட 367 பேரில் இதுவரை சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேரில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம் முகாமில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குருக்கள்மடம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி 21 குடும்பங்களைக் கொண்ட 45 பேர் தொடர்ந்தும் அந்த இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது
மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்ரேலியாவில் இரு இலங்கையர்கள் பலவந்தாம அனுப்பி வைப்பு

முகம்களிலுள்ள புலிகளை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பிய மூவர் சந்தேகத்தில் கைது




வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பொது மக்களையும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அவர்கள், வாய்க்கலிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார




அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அகதி அந்தஸத்து கோரிய இரு இலங்கையர்கள் பலவந்தமாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செனட்டர் இவான்ஸ் கூறுகையில் ,"பிரதமர் ரூட்டின் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது.எமது சர்வதேச விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியாவிற்குள் வருவோரிற்கு நாம் போதுமான பாதுகாப்பை வழங்குவோம்.சட்டவிரோதமாக நுழைவோரிற்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம்.அவ்வாறு வருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவர்" எனத்தெரிவித்தார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்த 9 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்திருந்தார்.

இவர்களுள் நால்வர் தமது சுயவிருப்பில் நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பியதையடுத்து சென்றுள்ளனர்.இருவர் தாம் நாட்டிற்கு திரும்பச்சென்றால் உயிராபத்து உள்ளதாக தெரிவித்துள்ளர்,இன்னுமொருவர் நாடுசெல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து பேர்த்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...