19 ஏப்ரல், 2010

மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்து அகதிகள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த 120 இலங்கை அகதிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் செல்ல முற்பட்ட சமயம் கரையோர கண்காணிப்பாளர்களால் இவர்கள் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கான தமது அகதி அந்தஸ்து வழங்கப்படும் வரை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கப்பலில் இருந்து இறங்க மறுத்த இவர்கள் தற்போது கப்பலில் இருந்து இறங்க இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று திங்கட்கிழமை 120 இலங்கை அகதிகள் கப்பலில் இருந்து இறங்கி பஸ்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

"நான் எங்கு கொண்டு செல்லப்படுகின்றேன் என எனக்குத் தெரியாது.ஆனால் இவ்விடத்தை விட்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என கப்பலில் இருந்து இறங்கிய ராஜூ(வயது 26) ஏ.எப்.பி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருவோரின் தொகை அதிகரித்ததால் தற்காலிகமாக அகதி அந்தஸ்து வழங்கும் பணிகளை நிறுத்துவதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.

தனக்கு தற்போதும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல விருப்பம் எனினும் அது சாத்தியமில்லை என லத்தீப் (வயது 21) தெரிவித்துள்ளார்.

"கடந்த ஆறு மாதங்களாக கப்பலில் இருந்துள்ளேன்.எனக்கு இனிமேல் அங்கிருக்க விருப்பமில்லை.இங்கு வாழ்க்கை மிகவும் கடினமானது.மக்கள் சுகவீனம் அடைகின்றனர்.எனக்கு அவுஸ்திரேலியா செல்ல விருப்பம்.எனினும் எனக்குத் தெரியது அது சாத்தியம் இல்லை என.அமெரிக்கா அல்லது நியுசிலாந்துக்கு செல்ல எனக்கு விருப்பம்.இந்தோனேஷியாவில் இருக்க விருப்பமில்லை.இங்கு வேலை தேடுவது மிகக் கடினம்.அத்துடன் இலங்கைக்கு திரும்பிச் செல்லவும் எனக்கு விருப்பமில்லை.அங்கு எனக்கு ஒன்றும் இல்லை.வீடு கூட இல்லை"என லத்தீப் தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து இறக்கப்பட்ட இவ் இலங்கையர்கள் சிங்கப்பூரிற்கு அருகிலுள்ள பிண்டான் தீவிலுள்ள அவுஸ்திரேலியா நிதியுதவியளிக்கும் ரன்யுங் பினாங் தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.அங்கு ஐ.நா அகதிகளுக்கான முகவர்கள் இவர்களுக்கான அகதி அந்தஸ்து குறித்து மதிப்பீட்டு செய்வர் என ஏ.எப்.பி தெரிவித்துள்ளது.

"கப்பலில் இருந்த அகதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மிகக் கடினமாக இருந்தது எனினும் எமது மனிதாபிமான அணுகு முறையால் அவர்கள் இறுதியில் சம்மதித்தனர்.இவர்களுக்கு உதவ முன்வரும் நாடுகள் விரைவில் முன்வந்து உதவ வேண்டும்" என வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சுஜாட்மிகோ ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத் மீதான இரண்டாவது விசாரணை நாளை தொடரும்



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் மீண்டும் நாளை தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை கடந்த 6 ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் இன்று வரை அதன் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதன் போது இன்றைய தினத்திற்கான விசாரணைகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் அவருக்கெதிராக 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றம் செல்ல அனுமதி?

ஏழாவது நாடாளுமன்ற அமர்வின் போது ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றம் செல்ல ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்கப்படுவது சந்தேகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கக் கோரும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் விண்ணப்பம் இதுவரை இராணுவத்திற்குக் கிடைக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ ஊடகப்பேச்சாளர் வழங்கிய பதிலின் அடிப்படையில், கருத்துரைத்த நாடாளுமன்ற பதில் செயலாளர் தம்மிக்க கிதுல்கொட, சரத்பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு வருகை தருவது குறித்து நாடாளுமன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய தாம் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சரத் பொன்சேகா பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக தேசிய முன்னணியினரிடம் இருந்து இதுவரை தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும்; கிடைக்கவில்லை என பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

தாம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும், இராணுவத் தளபதி ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தடைக்கு மத்தியில் ரோம் சென்று திரும்பியது இலங்கை விமானம்



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற 563 ரக விமானம், அங்கு செல்ல முடியாது, பாதி வழியில், முற்பகல் 11.55 மணியளவில் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஐரோப்பாவின் சில நாடுகளுக்குச் செல்லவிருந்த 6 விமான சேவைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்திலுள்ள இஜப்ஜல்லாஜோகுல் எரிமலை கடந்த ஐந்து தினங்களாக குமுறிக் கொண்டிருப்பதால் ஐரோப்பா கண்டத்தின் வான்பகுதி முற்றாக புகைமண்டலம் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் ஐரோப்பாவுக்கான விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் மற்றும் பிராங்போர்ட்டுக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை 3.35 மணிக்கு 563 ரக விமானம் ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்று , முற்பகல் 11.55 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

விமானங்கள் புறப்படும் நேரம், தாமதம், உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள 019 7335500 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ரணில் - ஜனாதிபதி இன்று சந்திப்பு



எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது முக்கியமாக புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு வீரகேசரி இணையத்தளத்துக்குத்
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி. செல்லும் இலங்கை அகதிகளுக்கு கிறிஸ்மஸ் தீவில் முகாம்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்காகக் கிறிஸ்மஸ் தீவில் முகாம் ஒன்றை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில், முன்னர் இருந்த இராணுவத்தளத்தையே, இலங்கையிலிருந்து செல்லும் அதிகளைத் தடுத்து வைப்பதற்கு உபயோகிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பழைய இராணுவத்தளமானது 2002ஆம் ஆண்டில் மூடப்பட்டது எனவும் கிறிஸ்மஸ் தீவில் ஏ ற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக இந்த முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவத் தளத்தில் அகதிகளாக வரும் ஆண்களை மாத்திரமே தங்க வைக்கவுள்ளதாகவும், .பெண்களுக்கு மாற்று முகாம் ஒன்று திறக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

நாட்டு மக்களுக்கு கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது:ஜனாதிபதி



நாட்டு மக்களுக்கு கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த 7 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ம.சு.மு வில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

"மக்கள் நாட்டுக்காக தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த பயணத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருத்தியாகும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

இந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அபிவிருத்தி அபிலாஷைகளை செயற்படுத்துவதே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி உல்லாசமாகவும் குடிகாரனாகவும் பொழுதைக் கழிக்காமல் தமது சுய மரியாதையை பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டு மக்கள் தமது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மாறாக செயற்பட எந்த உரிமையும் இல்லை. சிரேஷ்ட அமைச்சரொருவரின் வழிநடத்தலில் தாம் பிறந்த நாட்டுக்காக சேவையாற்ற நீங்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்.

நான்கு வருடங்களின் பின் நாம் தேர்தலுக்கு முகம் கொடுத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நிறைவேற்றியதன் காரணமாகவே மக்கள் எமக்கு மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

நாம் இந்த நாட்டை ஒன்றிணைத்தோம். அவ்வாறு ஒற்றிணைக்கப்பட்ட நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிராமத்துக்கு எடுத்துச் சென்றோம். அபிவிருத்தியை நகரத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமோ நாம் கட்டுப்படுத்தவில்லை.

இதனைக் செயற்படுத்தும் போது நாம் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எனினும் நாம் அவற்றை வெற்றி கொண்டோம். நாம் ஒரு நாளாவது மின்சார வெட்டை மேற்கொள்ளவில்லை.

எனவே அபிவிருத்தி யுகம் தான் எமது அடுத்த இலக்கு. இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கான பொருளாதார திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த தகவல் உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் முன்னே செல்லலாம். இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியிருப்பது மிகப் பாரிய பொறுப்பாகும். இதனை நிறைவேற்றும் கடமை உங்களுக்கு இருக்கிறது.

அன்று நாம் 7 வருடங்கள் பின் வரிசை உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது நாம் அரசியல் பற்றிப் படித்தோம். அதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் எமக்கு உதவினர். இதுதான் அன்று இருந்த நிலை. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.

உங்களுக்கு எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் எந்தவொரு நேரத்திலும் என்னிடம் வரலாம். அத்துடன் எமது சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளனர். பிரச்சினைகளைப் பற்றிப் பயமின்றி பேசலாம்.

இந்த நாட்டு மக்களுக்காக உங்கள் சேவையை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்ற நீங்கள் தயாராவீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும்" என்றார்.

இந்நிகழ்வில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிலை வடிவிலான கேக்கொன்றை வெட்டி பரிமாறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சபையில் பொன்சேகாவுக்கு முன்வரிசையில் ஆசனம்




ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சியின் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

கட்சித்தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமையான நிகழ்வாகும். ஏனையோர் சேவை மூப்பு அடிப்படையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை நாடாளுமன்றில் குறைந்தபட்சம் 27 ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் அமர நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் கட்சிகளுக்காக நாடாளுமன்றில் தலா 116 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுமார் 143 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்கவிலிருந்து ரோம் நகருக்கு நேற்று விமான சேவை




ஐரோ. நாடுகளுக்கான சேவைகள் தொடர்ந்தும் பாதிப்பு: பயணிகள் அவதி


ஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் ரோம் நகருக்க நேற்று அதிகாலை விமான சேவை நடாத்தப்பட்டதாக விமான நிலைய விமான சேவைகள் நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய தெரிவித்தார்.

ஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக்குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வான்பரப்பில் புகையும், சாம்பல் துகள்களும் பரவியுள்ளன. இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகருக்கு விமான சேவை நடாத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 3.10 மணிக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் விமானம் ரோம் நகர நேரமான பிற் பகல் 2.45 மணிக்குத் தரை இறங்கி யுள்ளது.

இருந்த போதிலும் ஐரோப்பா வின் ஏனைய நகர்களுக்கான விமான சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டதாகவே இருக்கும் என விமான நிலை யத்தின் விசேட கரும பீட அதிகாரி யொருவர் கூறினார்.

அதேநேரம் ரோம் நகருக்கு தொடர்ந்தும் விமான சேவை நடாத் துவது குறித்தும் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் கடந்த வெள்ளி க்கிழமை முதல் இடை நிறுத்தப் பட்டதால் அந்நாடுகளுக்குப் பய ணம் செய்ய முடியாத பயணிகள் நீர்கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலுள்ள ஹோட்டல்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

இந் நிலைமை தொடருமாயின் அப்பிரதேசத்தில் ஹோட்டல்க ளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று உல்லாச பயணத்துறை அதி காரிகள் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று





முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

கடற்படைத் 19.4.2010 இன்று காலை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமைவகிப்பார்.

மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுலகம, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுரு சிங்க ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றத்தின் ஏனைய அங்கத்தவர்களாக கலந்து கொள்ளவுள்ளதுடன் நீதவான் அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோ செயற்படவுள்ளார்.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச் சாட்டுகள் தொடர்பில் இன்றைய நீதிமன்ற விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிதாக மீண்டும் நியமிக்கப்பட்ட இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடிய போது அடுத்த விசாரணையை இன்று (19) திகதி நடத்துவது என அறிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்




கைத்தொழில்துறையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை - யாழ். தளபதி
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பனை, வலை பின்னல், படகு கட்டும் தொழிற் சாலை, கடல்சார் உணவு மற்றும் கைத் தொழில் பேட்டை என்பனவே ஆரம்பிக் கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை, சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியைப் போன்று வடபகுதிக்கும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதுடன் அதனை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. யாழ். மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை பாரிய அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்








இந்திய
விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது.

இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரி வித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள வும், அவற்றைக் கையளிக்கவும் முடியும்.

இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. ம. சு. மு. புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ






மக்கள் நாட்டுக்காக தமது கடமையை நிறைவேற்றியுள்ளனர். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த பயணத்தின் ஒரே இலக்கு நாட்டின் அபிவிருத்தியாகும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. ம. சு. மு. சார்பாக 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு கூறினார்.

ஐ. ம. சு. மு. சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 7 ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். அச் சமயம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்துள்ள அபிவிருத்தி அபிலாஷைகளை செயற்படுத்துவதே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி உல்லாசமாகவும் குடிகாரனாகவும் பொழுதைக் கழிக்காமல் தமது சுய மரியாதையை பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டு மக்கள் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கைக்கு மாறாக செயற்பட எந்த உரிமையும் இல்லை. சிரேஷ்ட அமைச்சரொருவரின் வழிநடத்தலில் தாம் பிறந்த நாட்டுக்காக சேவையாற்ற நீங்கள் அனைவரும் அணி திரள வேண்டும் என்று ஜனாதிபதி புதிய உறுப்பினர்களுக்கு கூறினார்.

நான்கு வருடங்களின் பின் நாம் தேர்தலுக்கு முகம் கொடுத்த போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நிறைவேற்றியதன் காரணமாகவே மக்கள் எமக்கு மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளனர். நாம் இந்த நாட்டை ஒன்றிணைத்தோம். அவ்வாறு ஒற்றிணைக்கப்பட்ட நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அபிவிருத்தியின் பெறுபேறுகளை கிராமத்துக்கு எடுத்துச் சென்றோம். அபிவிருத்தியை நகரத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமோ நாம் கட்டுப்படுத்தவில்லை.

இதனைக் செயற்படுத்தும் போது நாம் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. எனினும் நாம் அவற்றை வெற்றி கொண்டோம். நாம் ஒரு நாளாவது மின்சார வெட்டை மேற்கொள்ளவில்லை.

எனவே அபிவிருத்தி யுகம்தான் எமது அடுத்த இலக்கு. இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். அதற்கான பொருளாதார திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த தகவல் உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் முன்னே செல்லலாம். இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியிருப்பது மிகப் பாரிய பொறுப்பாகும்.

இதனை நிறைவேற்றும் கடமை உங்களுக்கு இருக்கிறது.

அன்று நாம் 7 வருடங்கள் பின் வரிசை உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது நாம் அரசியல் பற்றிப் படித்தோம். அதற்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் எமக்கு உதவினர். இதுதான் அன்று இருந்த நிலை. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது.

உங்களுக்கு எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் எந்தவொரு நேரத்திலும் என்னிடம் வரலாம். அத்துடன் எமது சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளனர். பிரச்சினைகளைப் பற்றிப் பயமின்றி பேசலாம்.

இந்த நாட்டு மக்களுக்காக உங்கள் சேவையை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்ற நீங்கள் தயாராவீர்கள் என்பது எமது நம்பிக்கையாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...