28 ஜூன், 2010

நளினி புழல் சிறைக்கு மாற்றம்





நளினி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வந்த நளினி இப்போது சென்னையை அடுத்த புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

உணவில் விஷத்தைக் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாகவும், தன்னை சிறை அலுவலர்கள் பல வழிகளிலும் துன்புறுத்துவதாகவும் புகார் கூறி தன்னை வேலூரிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு நளினி வேண்டிக்கொண்டிருந்தார்.

அவரது புகார்கள் குறித்து விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழு அண்மையில்தான் தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

சில தினங்களுக்கு முன் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் சிறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருப்பதாகவும், எனவே புழலுக்கு மாற்றம் தேவையில்லை என்று நளினி கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திங்களன்று புழலுக்கு நளினி மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேள்வி
நாங்கள் கோரி வந்தபோது மாற்றாமல் இப்போது மாற்ற முன்வருவானேன்?

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி

"இப்போது புழலுக்கு மாற்றியிருப்பதால் சில வசதிகள் உள்ளன என்றாலும், வேலூரில் இருந்தபோது அதே சிறையில் இருந்த தனது கணவர் முருகனை நளினியால் அடிக்கடி சந்திக்க முடிந்தது, இனி அத்தகைய சந்திப்புகள் நிகழ்வது கடினமாகும்" என புகழேந்தி குறிப்பிட்டார்.

19 ஆண்டுகளை நளினி சிறையில் கழித்துவிட்ட நிலையிலும் நாட்டின் பாதுகாப்பு காரணம் கருதி அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற சிறை ஆலோசனைக் குழுவின் முடிவினை எதிர்த்து நளினி தொடுத்திருக்கும் ஒரு வழக்கு வரும் வாரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: சிறுமியை கடத்தி கொன்ற காவலாளி

கொரட்டூர்வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்:    சிறுமியை கடத்தி    கொன்ற காவலாளி சேது பாஸ்கரா நகர் மாதனால் குப்பத்தில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திண்டிவனத்தை சேர்ந்த எத்திராஜ் (40) காவ லாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் மனைவி செல்வி, மகள் கவுரி (6) ஆகியோருடன் கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடிசை வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்தோடு தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென அவரது மகள் கவுரியை காணவில்லை. இதுகுறித்து எத்திராஜ் கொரட்டூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரட்டூர் ஏரிக்கரையில் கவுரி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கவுரி கழுத்து நெரிக்கப்பட்டும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதற்கு முன்பு காவலாளியாக வேலை பார்த்த ஜெயராமன் (40) என்பவர் சிறுமி கவுரியை கொலை செய்தது தெரிய வந்தது.

கொரட்டூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். ஜெயராமன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் காப்பக கட்டிடத்தில் இதற்கு முன்பு நான்தான் காவலாளியாக வேலை பார்த்தேன். தினமும் குடித்து விட்டு வந்து மேஸ்திரி அண்ணாத்துரையிடம் சண்டை போடுவேன். ஒழுங் காக வேலையும் பார்க்க மாட்டேன்.

இதுபற்றி அண்ணாத்துரை கட்டிட என்ஜினீயர் மோகனிடம் புகார் கூறினார். இதனால் அவர் என்னை வேலையில் இருந்து நீக்கினார். பிறகு அண்ணாத்துரை உறவினர் எத்திராஜை வேலைக்கு சேர்த்தார்.

இதனால் அண்ணாத் துரை மீது ஆத்திரம் ஏற்பட்டது. பழி வாங்கதிட்டம் தீட்டினேன். அதனால் 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கவுரியின் வாயை பொத்தி தூக்கி வந்தேன்.

அவளை பலாத் காரம் செய்தேன். பின்னர் கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் பிணத்தை வீசி விட்டு ஓடிவிட்டேன். கவுரியை கொலை செய்யும் போது அதிகமாக மது குடித்தேன்.

என் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக எத்திராஜ் வீடு அருகில் உள்ள எனது 2-வது மனைவி வீட்டில் தங்கினேன். கவுரி பிணம் கிடைத்ததும் தலை மறைவானேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தர இராணுவ கட்டமைப்புக்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும்


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அப் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ கட்டமைப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த முப்பதாண்டு கால பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாடு விடுதலையடைந்து தற்போது ஒரு வருட காலம் கடந்துள்ளது. இந்த நிலையில் நாடு அடைந்த விடுதலையை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி முகாம்கள் படை வீரர்களின் உதவிகளுடனேயே அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் இப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். மீண்டும் ஒரு பயங்கரவாதப் போரை இலங்கையில் உருவாக இடமளிக்கக் கூடாது எனக் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

கொல்கத்தா துறைமுகத்தில் பிடிபட்ட கப்பலில் 40 டன் ஆயுதங்கள்






வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஏசியான் குளோரி என்ற கப்பல் புறப்பட்டுச் சென்றது. லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பல் கொல்கத்தா துறைமுகத்துக்கு வந்தது. நேபாள ராணுவத்துக்கான சில வாகனங்களை அங்கு இறக்கியது.

அந்த கப்பலுக்குள் இருந்த பெரிய கண்டெய்னர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கப்பலை சோதனையிட்டனர். அப்போது கப்பலில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கப்பல் கேப்டனை போலீசார் கைது செய்தனர். கப்பலும் சிறைபிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் உள்ள நவீன, பயங்கர ஆயுதங்களுக்கு முறைப்படி எந்த ஆவணமும் இல்லாதது தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நவீன ஆயுதங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சந்தேகம் வலுத்ததால் கப்பலுக்குள் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆயுதங்கள் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை. அவற்றின் மொத்த எடை 40 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. 152 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 19 .பேர் இருந்தனர் அவர்களிடம் தனி தனியாக விசாரணை நடை பெற்று வருகிறது
மேலும் இங்கே தொடர்க...

விலைவீழ்ச்சி- விவசாயிகள் கவலை






நெல் விவசாயி
இலங்கையில் அண்மைக் காலங்களில் நெல்லின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்பின்றி சிரமப்படுவதாக விவசாயிகள் பரவலாக புகார் தெரிவிக்கின்றார்கள்.

ஒரு கிலோ நெல்லின் அரச நிர்ணய விலை 28 ரூபாய் 30 சதம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தனியார் துறையினரால் 20 முதல் 22 ரூபாய்க்கே நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அநேகமான விவசாயிகள் தமது அறுவடையை சந்தைப்படுத்த இயலாதநிலை மட்டுமன்றி களஞ்சிய வசதிகள் கூட இன்றி சிரமப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும் போகத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் 40 முதல் 45 சத வீதமே இது வரை சந்தைப் படுத்தப்பட்டுள்ளதாக வவுணதீவு பிரதேச கமநல சேவைகள் குழுவின் செயலாளரான கே.ரத்னசிங்கம் கூறுகின்றார்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர் நோக்கும் இந்தப் பிரச்சினை குறித்து தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறுகின்றார்.

எதிர் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது விவசாயிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதற்கிடையில் இப்பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு


மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் புதிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார். முந்தைய பிரதமர் கெவின் ருத்தின் குடியேற்ற விதிமுறைகளில் இவர் மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜூலியா குறிப்பிடுகையில், " ஆஸ்திரேலியாவில் தற்போதைய ஜனத்தொகை 2 கோடியே 20 லட்சம். வரும் 2050ம் ஆண்டுக்குள் மூன்றரை அல்லது நான்கு கோடி அளவுக்கு ஜனத்தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடியேற்ற விதிகளை தளர்த்தி வெளிநாட்டினரை குடியேறச் செய்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை அதிகரிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் குடியேற்ற நடைமுறை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

குறிப்பாக தொழில் திறன் பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடை ஏதும் இல்லை. மெல்போர்ன் நகரில் ஏற்கனவே 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். சிட்னியில் ஜனத்தொகை 75 லட்சத்தை தாண்டி விட்டது. போதிய வசதியில்லாமல் குடியேற்ற விதிமுறையை தளர்த்துவது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது'என்றார்.கடந்த ஆண்டு இந்தியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த 3 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு



ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்றம் சரத்துக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுவதாகவும் தனிப்பட்ட வாகனத்தில் அவர் அழைத்து வரப்படுவதில்லை என்றும் சட்டத்தரணி இன்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

அத்துடன் சரத்தின் உடல்நலன் கருதி, அவரது குடும்பத்தினரே உணவு கொண்டுவந்து தர அனுமதிக்குமாறும் சிறைச்சாலை உணவை வழங்க வேண்டாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபரான ஜெனரல் பொன்சேகாவை, எதிர்வரும் 12ஆம் திகதிவரை இராணுவ விளக்கமறியலில் வைக்குமாறும் கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவரை வைக்குமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்ன தெரிவித்துள்ளார். .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுமென கோட்டை நீதவான் நீதிமன்றில் தலைமைச் சட்ட அதிகாரி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இன்று நியூயோர்க்கில் ஐநா நிபுணர் குழுவின் முதலாவது அமர்வு



ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தச் செய்தியில்,

"இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது.

குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி, பிரதமர், இந்திய கடற்படை தளபதி இன்று சந்திப்பு




ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி தலைமையிலான உயர் மட்டக்குழுவினருக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்திய கடற்படைத் தளபதியின் வருகையை முன்னிட்டு இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.டெல்ஹி என்ற கப்பலும் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினதும், கடற்படைத் தளபதியினதும் விசேட அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென ரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை இந்திய கடற்படைத் தளபதி இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் அடுத்த மாதம் அமைச்சரவைக் கூட்டம்; மாவட்ட அபிவிருத்தி மக்கள் நலன் அடங்கிய அறிக்கை அமைச்சர்களிடம் கையளிப்பு


அரசாங்கம் கிளிநொச்சியில் நட த்தவுள்ள அமைச்சரவைக் கூட்டத் தின் போது மாவட்டத்தின் மேம் பாடு, மக்கள் நலன் குறித்த முக்கிய விடயங்களடங்கிய அறிக்கையினை அமைச்சர்களுக்குக் கையளிக்கத் தீர் மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசா ங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வரிய சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், அமைச்சரவையி லும் மாவட்டத்தை முன்னிலைப் படுத்திய விவகாரங்களுக்கு முக்கி யத்துவமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.

பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா தமிழக துணை முதல் வர் மு.க. ஸ்டாலின் போன்றோருக்கு மாநாட்டு மேடையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேற்றைய பொது அரங்க நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர் சிவகுமார் தலைமையில் கருத்தரங்கம் இடம்பெற்றது. “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் பேராசிரியர் வீரபாண் டியன் தொடக்கவுரையாற்றியதுடன் பீட்டர் அல்போன்ஸ், அருட்தந்தை மா. ஜெகத்கஸ்பர், பேராசிரியர் பர்வீன் சுல் தானா, வழக்கறிஞர்கள் ராமலிங்கம், அருள்மொழி கம்பம் பெ.செல்வேந்திரன் உட்பட பலர் உரையாற்றினர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த புதன்கிழமை காலை கோலா கலமாக ஆரம்பமாகியது. மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடக்கிவைத்தார். முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்ததுடன் முதல் நாளன்று மாலை நடைபெற்ற பிர மாண்ட பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

2வது நாள் நிகழ்வாக ஆய்வரங்கம் தொடக்கிவைக்கப்பட்டதுடன் இதில் வெளிநாட்டு தமிழறிஞர்கள் கா.சிவத்தம்பி (இலங்கை), ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), அஸ்கோ பர்ப்போலா (பின்லாந்து), அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா), உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி) உட்பட 1000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

3ம் நாள் நடைபெற்ற “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்னும் கருத்தரங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா இல.கணேசன், தொல். திருமாவளவன் கி.வீரமணி, இராம. வீரப்பன், காதர்மொகிதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நேற்றைய நிகழ்ச்சிகளில் காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அதனை தொடக்கி வைத்கிறார்.

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மத் திய தகவல் தொழில்நுட்பத்துறை அமை ச்சர் ஆ.ராசா, செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கி யவர்களுக்கு கணியன் பூங்குன்றனார் விருதுகளை வழங்கியதுடன் முதல்வர் கருணாநிதி நிறைவுரையை நிகழ்த்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க - போபால் நேரடி விமான சேவையினால் சாஞ்சி புனித தலத்துக்கு இலகுவில் செல்ல வாய்ப்பு



ஜனாதிபதி மஹிந்த - இந்திய மத்திய பிரதேச முதல்வர் சந்திப்பில் தீர்மானம்


இந்தியாவின் போபால் பிராந்திய விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இலங்கையர்கள் நேரடியாக போபால் சென்றடைய முடியுமென இங்கு வந்திருக்கும் இந்தியாவின் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.

தமது இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரிதும் வரவேற்றதுடன் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த இந்திய மத்திய பிரதேஷ் முதலமைச்சர் நேற்றுக் காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு பெளத்த மதத்தை எடுத்துவந்த சங்கமித்தை பிக்குனி மற்றும் மஹிந்த தேரர் ஆகியோரின் பிறப்பிடமான சாஞ்சியை பெளத்தர்களின் வணக்கஸ்தலமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உறவை மேலும் பலப்படுத்த முடிவதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியுமென நம்புவதாகவும் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

போபால் பிராந்திய விமான நிலை யத்திலிருந்து சுமார் 30 தொடக்கம் 40 நிமிடங்களுக்குள் தரை மார்க்கமாக சாஞ்சியை சென்றடைய முடியுமெனவும் அவர் கூறினார்.

இதனைத் தவிர, நீர் வழங்கல் வடி காலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வருடம் மத்திய பிரதேஷ் மாநி லத்திற்கு விஜயம் செய்தபோது கேட் டுக்கொண்டதற்கமைய அங்கு சர்வதேச பெளத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறு வுவதற்கு இணங்கியிருப்பதுடன் அதற்கென 65 ஏக்கர் காணியையும் 25 மில்லியன் இலங்கை ரூபாவினையும் மத்திய பிர தேஷ் மாநிலம் வழங்க முன்வந்துள்ள தெனவும் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

மேலும் இலங்கை - இந்திய உறவை பலப்படுத்தும் வகையில் 2600வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் இவ்வருட இறுதியில் மூன்று நாள் கலை நிகழ்வுகள் நடத்துவதற்கு தீர் மானித்துள்ளோம்.

ஒக்டோபர் 22ஆம் 23ஆம் திகதிகளில் கஜுராவோவில் வர்த்தகர் களுக்கான மாநாடு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக குழுவொன்றும் இல ங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எனக் கூறிய முதலமைச்சர் இரு நாடுகளும் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி காண வேண்டுமென்பதே எமது விஜயத்தின் நோக்கமெனவும் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, மத்திய பிரதேஷ் முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீ அனுராக் ஜெயின், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சந்தன் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

செம்மொழி மாநாடு நேற்று நிறைவு முதல்வர் கருணாநிதி முடிவுரை; நினைவு முத்திரை வெளியீடு





தமிழகத்தின் கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்ப மாயின.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமான இறுதிநாள் நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்றைய இறுதிநாள் மாநாட்டு நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதுடன் மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுவைத்ததுடன் முதலாவது முத்திரையை முதலமைச்சர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். முதல்வர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட் டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இது மாவட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங் களிப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளமையை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

இது குறித்து கிளிநொச்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னோடி நட வடிக்கைகள் சம்பந்தமாகக் கேட்டபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரி விக்கையில், கடந்த சுமார் மூன்று தசா ப்த காலமாக யுத்த சூழலினால் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது. இம்மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், குடிநீர், மின் சாரம், பாதைகள் புனரமைப்பு தொழில் முயற்சிகளை மீள ஆரம்பித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளன.

இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு இவற்றை நடைமுறைப்படுத்து வது சம்பந்தமாக வேண்டுகோள் விடுக் கப்படும்.

அத்துடன் இந்த விடயங்களை உள்ள டக்கிய அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மீளக்குடியேறுவோரில் இருப்பிடம் அற்றோருக்கு அரசாங்கத்தினால் காணிகள்



மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் காணிகள் அற்றவர்களுக்கு அரச காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பெரும்போக நெற்செய்கையினை மேற்கொள்ளும் பொருட்டு 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சுத்திகரித்து தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி க்குழுக் கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

நீண்ட காலங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது இம்மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் காடுகளாக காணப்படுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், இராணுவத்தின் ஒத்து ழைப்புடன் துரிதமாக சுத்திகரித்து மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகளை செய்து கொடுக்கவும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிய குளங்களை விவ சாய நடவடிக்கைகளுக்காக புனரமைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மடு கல்வி வலயத்தில் மீளக்குடியேறியுள்ள பிள்ளைகளின் கல் வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து இருவார காலத்திற்குள் அமைச்சருக்கும், ஆளுநருக்கும் சமர்ப்பிக்கும் வகையில் விசேட குழுவொன்றும் இந் தக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாந்தை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 21 கிராமங்களிலும் முன் னெடுத்து வரும் மீள் எழுச்சி மற்றும் கமநெகும திட்டங்களை 3 மாதகாலத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்குதல், புனர மைத்தல் போன்றவை தொடர்பாகவும், இந்திய அரசு வடக்கில் நிர்மாணிக்கவுள்ள 51 ஆயிரம் வீடுகளை வடமாகாண மக் களுக்கு பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.

சுகாதார, கல்வி, மேம்பாட்டுத் திட்டங் கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதாக ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார். நானாட்டான், விடத்தல் தீவு வைத்திய சாலைகளுக்கு வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டதை அடுத்து செட்டிக்குளத்திலிருந்து ஆறு வைத்தியர்களை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், செல் வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோனோதராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...