30 மே, 2010

சோமாவதி, அக்போபுர விகாரைகளில் ஜனாதிபதி நேற்று வழிபாடு

கந்தளாய் அக்போபுர ரஜமஹா விகாரைக்கும் பொலன்னறுவை சோமாவதி விகாரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று விஜயம் செய்தார்.

கந்தளாய் அக்போபுர விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பெருமானின் வணக்கஸ்தலத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அக்போபுர விகாரைக்கு வருகை தந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இதனையடுத்து பொலன்னறுவை சோமாவதி விஹாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். சோமாவதி சைத்தியவுக்கு வருகை தந்திருந்த அடியார்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஜானாதிபதியுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர்களான சந்திரசிறி சூரியாரச்சி, சிறிபால கம்லத், ரொஷான் ரணசிங்க எம்.பி., ஜனாதிபதியின் செயலணியின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக