1 பிப்ரவரி, 2010

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் கொலை: இலங்கை ராணுவத்தை சர்வதேச நாடுகள் புறக்கணித்தன; போர் பயிற்சிக்கு அழைக்கவில்லை




இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலி அரசியல் தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன் மற்றும் முக்கிய தளபதிகள் பலர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இலங்கை ராணுவ தளபதிகளிடம் தகவல் கொடுத்து விட்டே வெள்ளை கொடி பிடித்தபடி வந்து சரண் அடைந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

சர்வதேச விதிப்படி சரண் அடைந்தவர்களை கொல்லக்கூடாது. இதை இலங்கை ராணுவம் மீறியதால் சர்ச்சை எழுந்தது.

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் ராணுவம் சுட்டுக் கொன்றதை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதியும் ஒத்துக்கொண்டார்.

ராஜபக்சே தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவால்தான் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அவர் வெளிப்படையாக கூறினார்.

ராணுவ தளபதியே இது உண்மை என ஒத்துக்கொண்டதால் இலங்கை ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பல வெளிநாடுகள் இலங்கை ராணுவத்தை தங்களுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட அழைப்பது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தால் இந்த ஆண்டு இலங்கை ராணுவத்தை யாரும் போர் பயிற்சிக்கு அழைக்க வில்லை.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறும்போது, முன்னாள் ராணுவ தளபதியே குற்றச்சாட்டை கூறியதால் இலங்கை ராணுவத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கை ராணுவத்தை போர் பயிற்சிக்கு அழைக்கும். பொன்சேகா கூறிய குற்றச்சாட்டால் இந்த வருடம் யாரும் பயிற்சிக்கு அழைக்கவில்லை என்றார்.




அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள்.



அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கமரீ.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உலகம் குழந்தைகளை கடத்திய 10 அமெரிக்கர்கள் கைது



போர்ட் ஆப் பிரின்ஸ் : பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹைதி தீவிலிருந்து 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றதாக 10 அமெரிக்கர்களை ஹைதி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ஹைதி மக்கள் தொடர்பு அதிகாரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
சில்ஸ்பி லாரா லாவோன் என்ற அமெரிக்கப் பெண்ணின் தலைமையில் அமெரிக்கர்கள் 33 குழந்தைகளைக் கூட்டிச் சென்ற போது மால்பாசோ என்ற எல்லையோர நகரில் பிடிபட்டனர் என ஹைதி போலீசார் கூறினர்.
அவர்கள் பணம் கொடுத்து ஹைதி குழந்தைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதைத் தவிர ஹைதி அரசின் அனுமதி இல்லாமல் மைனர்களான குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவும் சட்டமீறலாகும் என ஹைதி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் புகார்களை லாரா லாவோன் மறுத்தார். இங்கு அனாதைக்குழந்தைகளுக்காக ஆதரவு இல்லம் அமைப்பது எங்கள் திட்டம். அதற்காக நிலம் கூட வாங்கிவிட்டோம். விரைவில் அங்கு கட்டடம் அமைக்கப்படும். அது வரை காபார்த்தி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழந்தைகளை தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த அநாதைக் குழந்தைகளின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்பவே அவர்களை அழைத்துச் சென்றோம் என லாரா லாவோன் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் எல்லாம் போர்ட் ஆப் பிரின்ஸ் நகருக்கு வெளியே உள்ள அரசு அனாதைகள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹைதியிலிருந்து இளங்குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்ல நடக்கும் முயற்சிக்குஹைதி பிரதமர் ஜீன் மாக்ஸ் பெல்லாரிவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதி (யுனிச்செப்) அதிகாரிகளும் கண்டனம் செய்துள்ளனர். தரை வழி எல்லைகள், விமான நிலையங்களில் எங்கள் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள் என யுனிச்செப் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின்
கப்பல்கள்: ஈரானைக் கட்டுப்படுத்த முயற்சி



















நான்கு அரபு நாடுகளுக்கு ஏவுகணைகளும் அனுப்பி வைப்பு



வளைகுடாவைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலிருந்து வளை குடா நாடுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் ஏவுகணைகளையும், யுத்தக்கப்பல்களையும் அங்கு விரைவில் அனுப்பவுள்ளது.

ஈரானின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தல், அரபு நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பற்றல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஏவுகணைகளும், யுத்தக் கப்பல்களும், அனுப்பப்படவுள்ளன. ஓமானும் இவ்வாறான உதவிகளை வழங்குமாறு அமெரிக்காவைக் கேட்டுள்ளது. யுரேனியம் செறிவூட்டல் விடயங்களை ஈரான் நிறுத்தாவிட்டால் இராணுவ நடவடிக்கையில் இறங்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்தது.

இராணுவ வல்லமையால் மத்திய கிழக்கை ஈரான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அரபு நாடுகள் குற்றம் சாட்டியதுடன் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் தாங்களும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க வேண்டுமென அரபு நாடுகள் வேண்டுகோள் விடுத்தன.

அமெரிக்கா இந் நாடுகளைப் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் தற்போது உரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி மேல் அரபு நாடுகள் ஈரானைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய பாதுகாப்பு ஆயுதங்களை அங்கு அனுப்பவுள்ளோம் என அண்மையில் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

இதற்கிணங்க இது வரை மூன்று ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள் வளைகுடாவை நோக்கி அனுப்பப்பட்டுள் ளன. அமெரிக்காவின் இந்நடவடிக்கை ஈரானை அமைதி வழிக்குக் கொண்டு வரும் முயற்சியைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.

ஈரானின் அபாயகரமான நடவடிக்கைகளை சீனா புரிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுள்ள அமெரிக்கா ஐ. நா. வின் யோசனைக்கு இணங்கி சீனா செயற்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

எட்டு பற்றியட் ஏவுகணைகளை வளைகுடாவுக்கு அனுப்பும் எண்ணம் அமெரிக்காவுக்குள்ள தாக வளைகுடாவுக்குப் பொறுப்பான அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார். யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை ஈரானின் புரட்சிகரப் படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது.
மேலும் இங்கே தொடர்க...
இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல்



இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்திய மீன்பிடிப்படகுகள் அதிக அளவில் இலங்கை கடல் எல்லையை கடந்து வருகின்ற போதும், அவற்றை கைப்பற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் 116 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில், அறிவித்திருந்தது.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்படுவதாக மத்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு நிகராக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியிலும் நுழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள், மிகப்பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில், எமது செய்திப்பிரிவு வினவியபோது அமைச்சர் நியோமல் பெரேரா இதனை தெரிவித்தார்.


இலங்கைத் தமிழர் குறித்து சிவ்சங்கர் தமிழக முதல்வருடன் ஆலோசனை


No Image
தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் நேற்று முதல்வர் கருணாநிதியை சென்னையில் சந்தித்து, இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றதையடுத்து நேற்று சென்னை வந்த அவர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக, முதலமைச்சர் கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்தத் தாக்குதல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக விரிவாகப் பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் " என்றார்.

மகிந்த ராஜபக்ஷ 2 ஆவது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார். எனினும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாகத் தெரிகிறது.

இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...