29 ஜனவரி, 2010

இரகசிய இடங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் - ஐ.நா .மனித உரிமை விசாரணையாளர்கள்
No Image

இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஆகியன உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து மக்களை இரகசியமாக தடுத்து வைக்கும் நடைமுறைகள் பற்றி ஐக்கியநாடுகள் விரிவான முறையில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்கள் மேற்படி 221 பக்க அறிக்கையில் அடங்கியுள்ளன.

இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் காரணமாக இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக, இலங்கை இராணுவ அதிகாரிகள், இராணுவ சீருடையில் அல்லது சிவில் உடையில் தமிழ் இனத்தவர்களை கைது செய்து வாரக்கணக்கில் அவர்களை இரகசிய இடங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தடுத்து வைத்து சித்திரவதை செய்து விசாரணைக்கு உட்படுத்தும் இரகசிய இடங்களில் ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதிக்கருகிலுள்ள ஒரு இராணுவ முகாமாகும்.

தடுத்து வைக்கப்படுவோர் அநேகமாக சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

1992ஆம் ஆண்டில், இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியதுடன் இரகசிய தடுப்புக்காவல் முகாம்களை நடத்துவதற்கும் அனுமதி அளித்து புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தது.

1993ஆம் ஆண்டு ஜுன் மாதம் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தில் இரகசிய தடுப்பு முகாம்கள் சட்டவிரோதமானவை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்தும் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸாராலும் இராணுவத்தினராலும் ஆட்கள் கடத்தப்படுவது, இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவது, ஆட்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் அமைப்புகளும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் பேரவையின் ஆட்கள் காணாமல் போவது தொடர்பான செயலாற்றுக்குழு 2008ஆம் ஆண்டு பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போவது அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தது.

மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அதன் இறுதி அவதானிப்புகளில், ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள் ஆகியன் தொடர்பாக இருந்துவரும் சிறப்புரிமைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஆட்கடத்தல், சட்டவிரோத தடுப்பக் காவல், சிதிரவதை சம்பவங்கள் ஆஈகியன தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அநேகமான வழக்கு விசாரணைகள் திருப்திகரமான சாட்சியம், சாட்சிகள் இல்லாமை போன்ற காரணங்களுக்காக முடிவற்ற நிலையில் உள்ளன.

இத்தகைய பெருமளவிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இவற்றக்கு பொறுப்பான மிகக் குறைந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளே குற்றவாளிகளாக காணப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதால் அவர்கள் இது சம்பந்தமான முறைப்பாடுகளை தெரிவிக்க அஞ்சுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய நாடுகள் மத்தியில் எதேச்சாதிகார ஆட்சியை நீண்டகாலமாக நடத்திவந்த அமெரிக்கா மற்றும் சோவித் தலைவர் ஜோசேப் ஸ்டாலின், சிலி யின் சக்திவாய்ந்த தலைவர் ஒகொஸ்டோ பினோசெற் போன்ற தலைவர்கள் இரகசிய சிறைக்கூடங்களை நடத்தி வந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
27.01.2010 தாயகக்குரல்

உலகமே உன்னிப்பாக உற்று நோக்கிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தல் குறித்து செய்தி ஊடகங்கள் பல பலவிதமான ஊகங்களை தெரிவித்து வந்தன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அதனால் சரத் பொன்சேகாவே வெற்றிபெறுவார் எனவும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.


யார் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதானாலும் 51 வீதத்துக்கு குறைவான வாக்குகளையே பெறுவர் என்ற கருத்துக்களும் பரவலாக தெரிவிக்கப்பட்டன. எவருக்கும் 50 வீதம் வாக்குகள் கிடைக்காமல் இரண்டாவது விருப்பு வாக்குகளிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும் எனவும் சிலர் தெரிவித்திருந்தனர்.


இவர்களுடைய ஊகங்கள் எல்லாவற்றையும் பொய்யாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 57.88 வீதமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாகவும் ஜனாதியாக தெரிவாகியுள்ளார். பொதுவாக சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் கடுமையான போட்டி நிலவுவதாக அபிப்பிராயம் நிலவியபோதிலும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்மூலம் மகிந்தாவின் வெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 ஆக இருந்தால் தனது வெற்றி உறுதியானது என சரத் பொன்சேகா நம்பிக்கை தெரிவித்திருந்தார். கடந்த காலங்களைவிட இந்த தேர்தலில் 70 விதமான மக்கள் வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது, அதே வேளை எதிர்பார்த்தளவுக்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெறவில்லை. வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.


2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளை (50.29மூ) பெற்று வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ 2010 ஜனாதிபதி தேர்தலில் 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் (57.88மூ) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா 47லட்சத்து 06ஆயிரத்து 366 வாக்குகளை( (48.43
மூ) பெற்றிருந்தார். 2010 தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத்பொன்சேகா 41லட்சத்து 73ஆயிரத்து 185 வாக்குகளையே (40.15மூ) பெற்றுள்ளார்.


ஆட்சி மாற்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் குடும்ப ஆட்சியை ஒழித்தல், நாட்டில் ஜனநாயகத்தை கொண்டுவருதல் என்ற கோஷங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் இவையனைத்தையும் சிங்கள மக்கள் பெரும்பான்மையால் நிராகரித்துவிட்டனர்.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் பிரதானமானதாக கருதப்படுகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது, நாட்டின் அபிவிருத்தி என்பன தொடர்பாக மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே சரத் பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.


இந்த தேர்தல் யுத்தம் முடிந்த பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதுடன் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலாகும். இருந்தும் வடக்கில் 15
மூ மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
தமிழ் தலைவர்கள் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை கொள்ளவில்லை என்றால் அது தமிழ்; தலைவர்களின் கட்டுப்பாட்டில் மக்கள் இல்லை என்பதுதான் அர்த்தமாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த எச்சரிக்கையை தமிழ் தலைவர்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் கவனத்தில் கோள்ளவேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...
புதியதொரு தமிழ்த் தலைமை தவிர்க்க முடியாத தேவை

தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற அமோக வெற்றி அவரது வேலைத் திட்ட த்துக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

பய ங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வெற்றிகரமாக முடிவு க்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தியும் சமாதான மும் என்ற கோஷத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த வேலைத் திட்டத்துக்கு இப்போது கிடைத்திருக்கின்றது.

தேர்தல் முடிவின் பின்னணியில் தமிழ் பேசும் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிரு க்கின்றது. இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கின் றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நீண்டகாலம் அபி விருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு இனப் பிரச்சினை தீர்வின்றியிருப்பது பிரதான காரணம்.

ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி இனப்பிரச்சி னையின் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்று வித்திருப்பதைக் கவனத்தில் எடுத்துச் சரியான முடிவு க்குத் தமிழ் பேசும் மக்கள் வரவேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர் பாக எடுத்த பிழையான முடிவினால் தமிழ் மக்கள் தவ றாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள கட்சிகளுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்தது.

இது வொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிதானமாக ஆராய்ந்து பார் த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டதற்குத் தமிழ்த் தலைவர்க ளின் பிழையான முடிவுகளே பிரதான காரணம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் இதுவரை கால மும் தங்களைத் தவறாக வழிநடத்திய தலைமையை நிராகரித்துப் புதிய வழியில் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்புத் தலைவர்க ளின் தவறான வழிநடத்தல்களால் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டது மாத்திரமன்றி, தமிழ் மக் கள் தாங்க முடியாத இழப்புகளுக்கும் அழிவுகளு க்கும் உள்ளாகினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால் ஜனாதிபதி விரைவில் பாராளுமன் றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடு வார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகிவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. இது இனப்பிரச்சினை யின் தீர்வுக்குச் சாதகமான ஒரு நிலை. இச்சாதக சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்துவதிலேயே தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஜனாதி பதியின் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணிச் சமகால யதார்த்தத்துக்கு அமை வான தீர்வொன்றை நடைமுறைக்குக் கொண்டு வரு வதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுப்பதற்கும் பொரு த்தமான ஒரு தலைமை இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் பழைய தலைமை தோற்றுப் போய்விட்டது. மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமை உருவாக வேண்டும். இது தவிர்க்க முடியாத தேவை.

தமிழர்களுக்கு விரைவில் அரசியல் உரிமை-மகிந்த ராஜபக்ஷ!



தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க வகை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபட்ச தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரின்போது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால சட்ட அதிகாரங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று தமிழர் தலைவர்களும் இந்தியாவும் வலியுறுத்திவந்தன. இது பற்றி அதிபர் தேர்தலுக்குப்பிறகு பரிசீலிக்கப்படும் என்று மகிந்த ராஜபட்ச கூறியிருந்தார்.

தொலைக்காட்சிகளுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களின் விருப்பங்கள் நியாயமானது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதற்கான திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதற்காக தமிழர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இலங்கை அரசமைப்பு சட்ட அமைப்புக்குட்பட்டு வழி காணப்படும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்ததாக தெரியவில்லையே என்று கேட்டதற்குஇ இதில் தவறு இல்லை. பல ஆண்டுகளாக வாக்குரிமை தடுக்கப்பட்டவர்கள் இப்படி செய்தது நல்லதுதான் என்றார்.

எது எப்படி இருந்தாலும் எனது தரப்பிலிருந்து தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. அதன்படி நான் செயல்படுவேன். இதற்கு இந்தியாவும் ஆதரவு தரும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை பிரச்னையை முழுமையாக

தெரிந்து வைத்துள்ள நாடு இந்தியா. இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மரியாதை தரும் நாடு இந்தியா.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தமே இந்தியாவின் யோசனைதான். இந்த திருத்தம் அரசமைப்பு சட்டத்தில் உள்ளது. இதில் தரப்பட்டுள்ள உரிமைகளுக்கும் மேலாக சலுகைகளை கோருகின்றனர். இலங்கையின் பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளக்கூடிய தீர்வுதான் நடைமுறைக்கு வரக்கூடியாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இதற்கு மாறான ஏற்பாட்டால் பயன் விளையாது என்பதை மறந்துவிடக்கூடாது என்று இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் ராஜ பட்ச தெரிவித்தார்


பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

எதிர்க்கட்சி பெற்ற 40 வீத வாக்குகளையும் வெற்றி கொள்ள முயற்சி

- அமைச்சர் மைத்திரி



பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.

மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.

எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.

மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




ஊர்வலம், கூட்டம் ஒரு வாரத்துக்கு தடை; ன்முறைகளை தடுக்க பொலிஸார்உஷார் நிலையில்




தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தில் இருந்து ஒருவாரத்துக்கு ஊர்வலங்கள் செல்வது, கூட்டங்கள் நடத்துவது, வரவேற்பு நிகழச்சிகள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைதியான நிலை காணப் படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் தொடர்ந்து அமைதி நிலையை பேண சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரினார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடு க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


அரசியல் அமைப்பில் திருத்தம்: நாட்டில் நல்லாட்சி:
எதிர்க்கட்சியினருக்கு அரசு அழைப்பு ; கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பு



அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

வரலாற்றில் முன்னெப்போதுமில் லாதவாறு 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். இது நன்றியுணர்வுள்ள நாட்டு மக்கள் அவருக்கு வழங்கிய கெளரவ மாகும். இவ்வெற்றியையடுத்து நாட்டை சமாதானத்திலும் அபிவிருத்தியிலும் முன்னெடுப்பதே எதிர்கால நோக்கமாகும். நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெ ழுப்புவதில் எதிர்க்கட்சி எம்முடன் ஒத்துழைக்க முடியும். அரசியல மைப்பில் திருத்தம் கொண்டு வருவதில் அவர்கள் எமக்கு உதவ முடியும்.

எவ்வாறெனினும் பாராளுமன்றத் தேர்தலில் எமக்கு நாட்டு மக்கள் மூன்றி லிரண்டு பெரும்பான் மையைப் பெற்றுத்தருவர் என்பது உறுதி. நாட்டின் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை நாம் மக்களிடம் கோருவோம். மக்கள் அதற்கு பூரண ஆதரவு தருவது உறுதி.

சகல மக்களுக்கும் பொருத்த மானதான நிர்வாகத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியின் நோக்கம். எதிர்வரும் நவம்பர் மாதம் வரையிலான அவரது முதலாவது பதவிக் காலத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அடுத்து வரும் ஆறு வருடங்களில் நாட்டில் நல்லாட்சியை அவர் ஏற்படுத்துவார்.

இதேவேளை, இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யானையா - அன்னமா என்ற பிரச்சினையும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் இன்னும் ஐந்து தேர்தல்களில் கூட ஐ. தே. க. வால் வெல்ல முடியாமற் போகும்.

இம்முறை தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதிக்கு ஓரளவு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த காலங்களை நோக்குகையில் சிறுபான்மையினர் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ பெருமளவு ஆதரவு வழங்கியதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவு வழங்கினர். இம்முறை எம்முடனிருந்த தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தமே திசை திருப்பியது.

வாக்களிப்பை நோக்குகையில் புலிகளின் தமிஸழ எல்லைக்குள் வாழும். மக்களே எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளமை தெரிகிறது.

அரசாங்கம் தற்போதுதான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்கவே டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களை அரசாங்கம் நியமித்து செயற்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (
மேலும் இங்கே தொடர்க...