30 மார்ச், 2011

அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரின் எண்ணிக்கை குறைவு: ஐ.நா. அகதிகளுக்கான நிறுவனம்

இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.

இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் வீட்டின்மீது டைனமைட் தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேச ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது டைனமைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீட்டின் ஓடுகள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் நடைபெறவுள்ள உள்ராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள இவ்வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கான காரணங்கள் பற்றி புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் மரணம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றுக்காலை யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

கொழும்பு15 முகத்துவாரத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு பரிதாப மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இவர் யாழ். கோண்டாவில் கிழக்கு, கோட்டைக் காட்டு ஒழுங்கையிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது கடந்த சனிக்கிழமை கொள்ளைக் கும்பலொன்றினால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரது உறவினர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் கும்பல் அங்கிருந்த குறித்தநபரை பலமாகத்தாக்கி விட்டு அவர் வசம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

அதன் பின் அவர் மருத்துவசிகிச்சைக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒத்திவைத்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை மே மாதத்தில் நடத்த ஆலோசனை

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற 335 உள்ளூராட்சி மன்றங்களில் ஒத்திவைக்கப்பட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட 23 மன்றங்களுக்கான தேர்தலையே அரசாங்கம் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

10 ஆவது உலக கிண்ணப்போட்டிகள் நடைபெற்ற விளையாட்டரங்கள்கள் இருக்கின்ற பிரதேசங்களை அண்மித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில் 17 மாநகர சபைகள், ஒரு நகர சபை மற்றும் ஐந்து பிரதேச சபைகளும் அடங்குகின்றன. அரசாங்கம் மொத்தமாக 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்திருந்த போதிலும் மே மாதத்தில் 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு தேர்தல்கள் திணைக்களத்தினால் இவ்வாராத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் அறிவித்தல் விடுக்கப்படுமாயின் தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மன்றங்களை தவிர்த்து ஏனைய 234 உள்ளூராட்சிகளுக்கான வாக்களிப்பு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை தம்வசப்படுத்தி அமோக வெற்றியீட்டிக்கொண்டதுடன் ஐக்கிய தேர கட்சி 9 மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி மன்றங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் மலையக மக்கள் முன்னணி ஒரு சபையையும் கைப்பற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை மே மாதத்திற்கு ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சுகவீனம் காரணமாக அவருக்கெதிரான ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் ஹைகோர்ப் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா சுகவீனமுற்றிருப்பதால் அவரை ஆஜர் செய்ய முடியவில்லை என்று தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், சிறைச்சாலை மருத்துவரின் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஹைகோர்ப் மோசடி தொடர்பான வழக்கை மே மாதம் 4 ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. அத்துடன் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டது.

ஹைகோர்ப் மோசடி வழக்கில் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவும் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்ய தற்போது சர்வதேச பொலிஸான இன்டர்போலின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தனது மருமகன் தனுன திலகரட்ணவுக்குச் சொந்தமான ஹைகோர்ப் கம்பனியிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்த போது கேள்வி பத்திர விதிமுறைகளை மீறி, இராணுவத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா மீது குற்றஞ் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்த தலைவர் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருகின்ற ரத்கம பிரதேச சபையின் புதிய தலைவர் நீதிமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ரத்கம பிரதேச சபைக்கு போட்டியிட்டு 14 ஆயிரத்து 790 விருப்பு வாக்குகளை பெற்ற மனோஜ் மென்டிஸ் பிரதேச சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் வெற்றியீட்டிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவ்வாறான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் மென்டிஸ் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டார்.

நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ரத்கம பிரதேச சபையின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட மனோஜ் மென்டிஸ் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது காலி பெரலிய பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் மனோஜ் மென்டிஸ் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ள தென் கொரியா

இலங்கையர் உள்ளிட்ட தெற்காசிய வலய நாட்டவர்களுக்கான விசா விதிகளை தென் கொரியா தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் தென் கொரியாவுக்கு விசா பெற குறைந்தபட்ச ஆவணங்களையே சமர்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் குறைவான நிதி வளத்தை மட்டும் காண்பித்தாலும் போதுமாக இருக்கும்.

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே தென் கொரியா தனது விசா நடைமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தியிருந்ததாக தற்போது அறிவித்துள்ளது.

தளர்த்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின் மூலம் இலங்கையர்கள் தென் கொரியாவின் சுற்றுலாத் துறைக்குப் பங்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

29 மார்ச், 2011

ஆபாச வீடியோக்களை விற்பனை செய்த நபர் கைது



மொனராகலை தேசிய பாடசாலைக்கு அன்மையில் மாணவர்களை மையப்படுத்தி ஆபாச வீடியோ நாடாக்களை விற்பனை செய்து வந்த நபரொருவரை மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது நீண்ட காலமாகவே குறிப்பிட்ட தேசிய பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இது போன்ற ஆபாச வீடியோ நாடாக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல்

லிபியத் தலைவர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால் கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களையெல்லாம் கடாபி கைப்பற்றினார். தற்போது நேட்டோ உதவியுடன் அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள்.

அந்த வரிசையில், தற்போதிருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதையடுத்து பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் திரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள் கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.-35 ரக ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் பிரிட்டன் போர் விமானங்கள் மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள் அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தின்படி லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நேற்று முன்தினம் முதல் நேட்டோ ஏற்றுக் கொண்டது. அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழு வேகத்துடன் தலைநகர் திரிபோலியை நோக்கி புயலாக வீசத்தொடங்கியிருக்கின்றன.

சிர்ட் நகரம் கடாபியின் கையை விட்டுப் போய்விட்டால் எதிர்ப்புப் படைகள் தடையின்றி திரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே கடாபியின் இறுதிக் கட்டப் போராக ஆகிவிடும் என்பதால் சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்றுக் கவனித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது: ஜனாதிபதி

எவருமே அப்பாவி பொதுமக்களு க்கு கேடுவிளைவிக்கக் கூடாது, பொ துமக்களைக் கொல்வதையோ தேசத் தின் இறையாண்மை மீறப்படுவ தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றுக்காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு செய்தி நிறு வனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது லிபியா மீதான மேற்குலகின் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

லிபிய பிரச்சினை தொடர்பாக மேலும் ஜனாதிபதி கருத்துவெளியிடுகையில், மக்களே என்றும் சரியானவர்கள் என்பதில் தான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். மக்கள் தவறிழைக்கமாட்டார்கள். ஆனால் எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது பொதுமக்களைக் கொல்வதையோ தேசத்தின் இறையாண்மை மீறப்படுவதையோ ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரேனும் மக்களைக் கொல்லுமிடத்து நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.

இந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சில சந்தர்ப்பங்களில் கூட்டுப்படைகள் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் பிரகாரமான ஆணையையும் மீறியிப்பதாகவும் தோன்றுகின்றதென சுட்டிக்காட்டினார்.

சுமார் இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் லிபியப் பிரச்சினைவரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த ஆசிரியர் சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியுள்ளார். அந்த மதுமான நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கும் இவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை குறித்த நண்பரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆசிரியர் சக்தி தரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் கும்புளானைச் சேர்ந்த ஒருவர் அதிக மதுபோதையில் ஆசிரியர் இருந்தமையினால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் எனக் கூறி மறித்துள்ளார். அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய ஆசிரியரை மறித்த சிலர் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த ஆசிரியர் ஆரியகுளம் சந்திப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது சீருடை தரித்தவர்களே தாக்குதல் நடத்தியதாக இணைய தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை படைத்தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடாதிருக்க நடவடிக்கை

டை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இது தொடர்பில் பெற்றோரை அறிவுறுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் தொலைத்தொடர்பு இணையத்தள சேவை வழங்குநர்களினூடாக பெற்றோரை அறிவுறுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது.

ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவதற்கு வேறு வழிகளை கண்டறியக்கூடும். சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பதில் நாம் செய்யக்கூடிது அதிகமில்லை. எனவே, தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்கள் பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.

இச் சந்திப்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக



இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக அமுனுகம
இலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக கருணாதிலக அமுனுகம ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளார்.

இவர் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருணாதிலக அமுனுகம இதற்கு முன்னர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்தார்.

வெளிவிவகாரச் செயலராக இதுவரை பணியாற்றிய றொமேஸ் ஜெயசிங்கவுக்கு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் பதவி வழக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து பிரதமர்

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதி போட்டியை காண வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயி நிராகரித்துள்ளார்.

இந்த அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்து விட்டதாக அவரது செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதியின் அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியக் காண நியூசிலாந்து பிரதமரின் பிரதிநிதியாக புதுடெல்லிக்கான நியூசிலாந்து தூதுவர் கொழும்பு வரவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

28 மார்ச், 2011

நிபந்தனையற்ற அடிப்படை சம்பளம் ரூ 500, ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ 250, மொத்த நாட்சம்பளம் ரூ 750

ஏன் தரமுடியாது என முதலாளிமார் விளக்கவேண்டும் என்கிறார் மனோ கணேசன்

நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக ரூபா ஐநூறுடன், மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட்சம்பளமாக ரூபா 750ஃ- தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் ந~;ட கணக்கு காட்ட தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலே இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப்போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_ம், ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பள தொகை தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றோம். சம்பள பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளாத அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.

பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் தோட்ட முதலாளிமார் சம்மேளம் தேசிய ஊடகங்களில் ந~;ட கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் என்ற தகைமையையும் மீறிச்சென்று, தோட்டத் தொழிலாளர்களின் சமூக பொருளாதார வாழ்க்கையை பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே வறுமை குறைந்துள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் வளமை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. பெருந் தோட்டத் துறையில் வறுமை விகிதம் அதிகரித்து செல்வது நாடறிந்த சங்கதியாகும். கடந்த 20 வருடங்களில் தேசிய ரீதியாக வறுமை விகிதம் சரிபாதியாக குறைந்துவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரம் அது அதிகரித்து செல்கின்றது. சில தேசிய ஊடகங்கள் மூலமாக முதலாளிமார் சம்மேளம் முன்னெடுக்கும் இத்தகைய உண்மையற்ற பரப்புரையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மேலும் கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்ட நலவுரிமை சேவைகள் எதுவும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் சமூக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு தோட்ட கம்பனிகள் சட்டப்படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதில்லை. அத்துடன் தோட்ட கம்பனிகள் தனியார் உடைமையாக்கப்பட்ட பொழுது தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பங்குகளின் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தோட்ட நிறுவனங்கள் உற்பத்திக்கு ஒரு நிறுவனத்தையும், ஏற்றுமதிக்கு வேறு நிறுவனத்தையும் நடத்திவரும் தந்திரம் எங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்துவிட்டு மிகக்குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் இந்த தேயிலை பெரும் இலாபத்துடன் ஏற்றுமதி நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கணக்குகளையே சம்பள பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் பயன்படுத்துகின்றது. அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் கையெப்பமிடும் தொழிற்சங்கங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் 6 மாதங்களுக்கு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின்றார்கள். பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 6 மாதங்களுக்கான நிலுவை சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த நிலுவை சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படுவதில்லை. கடந்த முறை இத்தகைய கொடுப்பனவாக சுமார் 25 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இது இந்நாட்டு தொழிற்சட்டங்களை மீறும் அத்துமீறிய சட்ட விரோத செயலாகும். இதற்கு கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணைபோகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து கோணத்திலும் தங்களுக்கு அதிகப்பட்ச இலாபத்தை பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச சம்பளத்தையும் வழங்க மறுப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு நாம் இடந்தர முடியாது. எனவே நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக ரூபா ஐநூறுடன், மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா இருநூற்றம்பதையும் சேர்த்து மொத்த நாட்சம்பளமாக ரூபா 750ஃ- தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க, தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும். இதற்கு உடன்பாடு காணப்பட முடியாவிட்டால், அதற்கான காரணங்களை முதலாளிமார் சம்மேளம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பிலான அனைத்து விவகாரங்களையும் அவர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கப்போவதில்லை.
மேலும் இங்கே தொடர்க...

18 மார்ச், 2011

புகுஷிமா அனர்த்தத்தின் எதிரொலி: அணுஉலை நிர்மாணத்தை இடைநிறுத்தியது சீனா

ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது.

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமியால் அந்நாட்டின் அணு உலைகள் வெடித்து, கதிர் வீச்சு பரவி வருகிறது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த ஆபத்து உலகின் பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணு உலைகள் வைத்திருக்கும் அனை த்து நாடுகளுமே, தங்களது அணு உலை களின் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நில நடுக்கத்திற்கு முன்னதாக சீனாவில் புதிய அணு உலைகளை நிறுவ அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் தற்போது அந்த அனுமதியை பிரதமர் வென் ஜியாபோ தற்போது இரத்துச் செய்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தெற்காசிய சுகாதார பராமரிப்பு உச்சி மாநாடு கொழும்பில்


தெற்காசிய சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடு அடுத்த மாதம் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இப்பிரதேசத்தின் சில நாடுகள் மிகக் குறைந்தளவு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக நேபாளத்தில் 31 சதவீதமும் இந்தியாவில் 31 சதவீதமுமான நிலையில் இலங்கையின் வசதிகள் அதி உச்சமான 91 சதவீதத்தை எட்டியுள்ளன.

இந்நாடுகளில் தீர்மானம் மேற் கொள்பவர்கள், கொழும்பிலுள்ள சினமன் கிறாண்ட் ஹோட்டலில் ஏப்பிரல் 4 தொடக்கம் 7 ஆம் திகதிவரை இந்த மாநாட்டில் ஒன்று கூடி அடிப்படை சுகாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளுவார்கள்.

இச் சந்திப்பில் பங்கேற்கும் நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இப்பிரதேசத்தில் சுகாதார பராமரிப்புக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்கள், ஏப்பிரல் மாதம் 6ஆம் திகதி, அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மகாநாடொன்றில் கலந்துகொள்வார்கள். இம்மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

முதலாவது சுகாதாரப் பராமரிப்பு சம்பந்தமான தெற்காசிய மாநாடு 2003 ஆம் ஆண்டில் பங்களாதேஷிலும் இரண்டாவது மாநாடு 2006 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலும் மூன்றாவது மாநாடு 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் நடைபெற்றன. இம் மாநாடு வெவ்வேறு கருத்துடையவர்களுக்கிடையே நிகழும் சொல்லாடலுக்கான தனது மேடையாகும். அத்துடன், ஐக்கிய நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்ட புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான இப்பிராந்தியத்தின் சுகாதாரப் பராமரிப்புக் குறிக்கோள்களை எய்துவதற்கான சுகாதார மேம்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி மாவட்டத்தில் 60 வீதம் வாக்களிப்பு

கண்டி மாவட்டத்தில் 55 முதல் 60 சத வீதம் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் 16 சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் நேற்று (17) நடைபெற்றது.

நேற்று பகல் வரையும் 25% சதவீதம் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்த போதிலும் பிற்பகல் 4.00 மணிவரையும் சராசரியாக 55%- 60% சதவீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்ததாக தெரியவருவதாகக் கூறினார்.

மேலும் கண்டி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த வித தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. மிகவும் சுமுகமான நிலையில் மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் பாதுகாப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்கள் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்ததை காண முடிந்தன.

மலும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகளையும் கடமையில் இருந்த அதிகாரிகளையும் எடுத்துச் செல்ல விசேட போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனவாகவும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குருநாகல் மாவட்டத்தில் 60 வீத வாக்கு பதிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் 60 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. எதுவித அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியான முறையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.

மாவட்டத்திலுள்ள 225 வாக்குச் சாவடிகளில் 4120 பேர் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று நண்பகல் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிக்கச் சென்றதை காண முடிந்தது.

நேற்று பி. ப. 4 மணிக்கு வாக்குகளிப்பு முடிவடைந்து வாக்குப் பெட்டிகள் குருநாகல் நகரில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, குளியாப்பிட்டி பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இம் மாவட்டத்தில் இடம்பெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை பின்போடப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் அணு உலை குறைபாடுகள்: பாதிப்புகள் பற்றி எச்சரித்தும் ஜப்பான் உதாசீனம்




ஜப்பானில் புகுஷிமாவில் அமைக்கப்பட்ட அணு உலையில் இருந்த குறை பாடுகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு ஏற்கனவே ஜப் பானை எச்சரித்திருந்த தாகவும் அந்த எச்சரிக்கையை ஜப்பான் உதாசீனம் செய்தமையே ஜப்பானில் தற்போது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி ரெலிகிராஃப்ட் என்ற பத்திரிகை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சர்வதேச அணுசக்தி முகாமை நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டி ருந்தது.

ஜப்பான் அணு மின் நிலை யம் ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என சர்வதேச அணுசக்தி முகாமை நிலையம் அவ் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பூகம்பம் ஏற்பட்டால் அதனால் ஜப்பானில் அணு மின் சக்தி உலை களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட லாம், என்று ஜப்பான் அரசை சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணம் கூறுகிறது.

ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அணு மின் சக்தி உலைகள் அனை த்தும் ரிக்டர் 7.0 புள்ளிகளுக்கும் குறைவான பூகம்பத்தை மட்டுமே தாங்கும் உறுதி கொண்டவை. அதற்கும் அதிகமான அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டால் அதனால் கடும் பாதிப்பு ஏற்படும், என்று 2008 ம் ஆண்டிலேயே சர்வதேச அணு சக்தி முகாமை நிலையம் எச்சரித்த தாகவும் குறிப்பிடப் பட்டிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிக் கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டு ள்ளது.

ஜி 8 நாடுகளின் அணு உலை பாதுகாப்பு குறித்து குழு 2008 ம் ஆண்டு டோக்கியோவில் நடத்திய கூட்டத்தில், ஜப்பான் கடைபிடித்து வரும் அணு மின் உலை பாதுகாப்பு நெறிமுறைகள் பழமையானவை என்று சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு கருத்து தெரிவி த்ததாகவும் அந்த ஆவணத்தில் கூற ப்பட்டுள்ளது.

சர்வதேச அணு சக்தி முகா மைத்துவ அமைப்பு பூகம்பம் தொடர்பான அணு ஆயுத உலை களின் பாதுகாப்பு குறித்த வழி காட்டு நெறிமுறைகளை கடந்த 35 ஆண்டுகளில் 3 முறை திருத்தி மேம்படுத்தியுள்ளது, என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

10 வகை உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் குறையும் வர்த்தக அமைச்சு





சிங்கள- தமிழ் புது வருட பண்டிகை காலத்தில் 10 வகை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 30 சதவீதத்தால் குறைவடையும் என்று வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, கோதுமை மா, கடலை, பயறு, நெத்தலி, ரின் மீன், அரிசி உள்ளிட்ட உணவு வகைகள் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

35 ஆயிரம் மெட்ரிக் தொன் உள்ளூர் கிழங்கு ஊவா பரணகம, வெலிமடை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கும் தற்போது சந்தையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். அதேவேளை 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியும் சந்தையில் விநியோகிக்கப் பட்டுள்ளது.

இது மட்டுமன்றி இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வந்து சேரவுள்ள நிலையில் உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளன.

204 ரூபாவுக்கு விற்கப்பட்ட டின் மீன் 174 ரூபாவுக்கும், ஒரு கிலோ 97 ரூபாவுக்கு விற்கப்பட்ட சீனி 90 ரூபாவுக்கும், ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் 70 ரூபாவுக்கும் ஒரு கிலோ 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 60 ரூபாவுக்கும் ஒரு கிலோ 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட பயறு 216 ரூபாவிற்கும், ஒரு கிலோ 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட பருப்பு 139 ரூபாவுக்கும், முட்டை ஒன்று 12 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்திருப்பதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வெற்றிலை ஏற்படுத்திய சர்ச்சை




மெல்லுவதற்காக கையில் வைத்திருந்த வெற்றிலையை கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் மல்லுக்கு நின்ற சம்பவம் ஒன்று ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஐ. ம. சு. மு வின் கட்சி முகவராக செயற்பட்ட நபர் ஒருவர் பொழுது போக்குக்கு மெல்லுவதற்காக ஒரு சில வெற்றிலைகளை கையில் வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட பிறகட்சிகளின் முகவர்களும் ஆதரவாளர்களும் ஐ. ம. சு. மு. வின் தேர்தல் சின்னமான வெற்றிலையை வாக்களிப்பு நிலையத்தில் கட்சி முகவர் ஒருவர் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் இது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது போலமையும் எனவும் குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிட்ட ஐ. ம. சு. மு. தேர்தல் முகவருடன் வீண் வம்புக்குச் சென்றனர்.

எனினும், பொறுமையான பதிலளித்த ஐ. ம. சு. மு. முகவர், மெல்லுவதற்காகவே வெற்றிலையை தான் கையில் வைத்திருந்ததாக கூறியதுடன் பிற கட்சிக்காரர்களுடனான வீண் விவாதங்களை தவிர்ப்பதற்காக உடனடியாகவே அவ் வெற்றிலைகளை மென்று விழுங்கிவிட்டார்.

அதன்பின் பிறகட்சிக்காரர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பிரஸ்தாப தேர்தல் முகவர்; வாக்களிப்பு நிலையங்களில் கதிரையுட்பட்ட பல்வேறு பொருட்கள் பாவனையில் உள்ளன.

அவை கூட ஏதே ஒரு கட்சியின் தேர்தல் சின்னமாக இருப்பதால் அவற்றையும் உடனடியாக வாக்களிப்பு நிலையங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் இதே தோரணையில் பிறகட்சி ஆதரவாளர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும் நியாயமற்றது என்று நிரூபித்துக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நகர் விக்டோரியா வீதி திறப்பு இறுதி வீதி தடையும் நீங்கியது

யாழ். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா வீதி நேற்று முதல் பொதுமக்கள் பாவனைக் காக திறந்துவிடப் பட்டுள்ளது. யாழ். நகரின் மையத்தில் யாழ். போதனா வைத்திய சாலையின் பின்புற மாக உள்ள மேற்படி வீதி மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு வீதி, பருத்தித்துறை வீதி ஆகியவற்றை இணைக்கும் பிரதானமான குறுக்கு வீதி ஆகும்.

கடந்த 15 ஆண்டுகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த இவ்வீதி நேற்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.

இந்த வீதித் திறப்புடன் யாழ். நகரில் இருந்த இறுதி வீதித்தடைகளும் அகற்றப்பட்டு பாதுகாப்பு வலய வீதித் தடைகள் எதுவுமற்ற நகரமாக யாழ். நகரம் உருவாகியுள்ளது.

இந்த வீதித் திறப்பு நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கதுருசிங்க யாழ். நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ். நகரின் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கவனத்தில் கொண்டு இவ்வீதி பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஐ.ம.சு.மு. முன்னணியில் எஞ்சியிருந்த ஆசனங்களையும் இழந்தது ஜே.வி.பி


234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுத லான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

நடந்த தேர்தலின் முதலாவது உத்தி யோகபூர்வ முடிவு நேற்று இரவு 10.40 அளவில் வெளியாகியது.

இதன்படி, மாத்தறை மாவட்டம் வெலிகம நகர சபையின் முடிவுகள் முதலில் வெளியாகின. இதில் ஐ. ம. சு. மு. 7,246 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ. தே. க. 3,622 வாக் குக ளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றது.

ஜே. வி. பிக்கு 164 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. வெலிகம நகர சபையில் 2006 இல் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ஜே. வி. பி. இந்தத் தேர்தலில் ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதே நகர சபையில் போட்டி யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மட்டுமே பெற்றது.

அடுத்து குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய நகர சபையை ஐ. தே. க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. 1745 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அதேநேரம் ஐ. ம. சு. மு. 1370 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங் களை தக்கவைத்துக் கொண்டுள் ளது.

கண்டி மாவட்டம், வத்தேகம நகர நகரசபை மீண்டும் ஐ. ம. சு. மு. வசமாகியுள்ளது. ஐ. ம. சு. மு. 2177 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தே.க. மூன்று ஆசனங்களை பெற்றது. அதே நேரம் சுயேச்சைக் குழுவொ ன்று 479 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டம், கிரிந்த புகுல்வெல்ல பிரதேச சபையை ஐ. ம. சு. மு. கைப்பற்றியுள்ளது. 8,276 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங் களை ஐ. ம. சு. மு. பெற்றுள்ளது. 2006 உடன் ஒப்பிடும் போது மேலதிகமாக ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது (ஐ. ம. சு. மு). ஏற்க னவே இருந்த ஒரு ஆசனத்தையும் ஜே- வி. பி. இழந்துள்ளது. 319 வாக்குகளை மாத்திரமே அது பெற் றுள்ளது.

பதுளை மாவட்டம், ஹப்புத் தளை நகர சபையையும் ஐ. ம. சு. முன்னணியே கைப்பற்றியுள்ளது. 1205 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஐ. தே. க. 703 வாக்கு களைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்த சபையில் 07 ஆசனங்களுடன் இருந்த ஐ. ம. சு. மு. ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. ஐ. தே. கட்சிக்கு ஒரு ஆசனம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

நேற்று நள்ளிரவு வரை வெளி யான முடிவுகளின்படி ஐ. ம. சு. முன்னணியே கூடுதலான ஆசனங்க ளைப் பெற்றிருந்தது.

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் 55 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

17 மார்ச், 2011

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை






தேமுதிக தலைவர் விஜயகாந்த்
எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அக்கட்சி போட்டியிட்டு வென்ற சில இடங்களிலும் போட்டியிட விரும்பும் வேறு பல இடங்களிலும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகக் குறை கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதே காரணங்களுக்காக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தது.

கூட்டணியில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தான் போட்டியிட விரும்பிய 21 தொகுதிகளுக்கு ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓர் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோருக்கும் அதே போன்ற சிக்கல் இருக்கிறது.

இந்நிலையில் வியாழனன்று காலை தேமுதிக அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோர் சென்று விஜயகாந்துடன் அஇஅதிமுக பட்டியல் குறித்து விவாதித்தனர்.

வளாகத்தின் வெளியே தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவை கண்டித்து முழக்கமிட்டனர். ஏதோ ஒரு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. மூன்றாவது அணி உருவாகக்கூடும் எனப் பரபரப்பு எழுந்தது. ஆனால் தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த விஜயகாந்த் எதுவாக இருந்தாலும் நாளை வெள்ளியன்றுதான் செய்தியாளர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தங்கள் லட்சியம் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டார். மூன்றாவது அணியா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அஇஅதிமுகவை தீவிரமாக ஆதரித்தும் இடங்கள் எதுவும் ஒதுக்கப்படாத மதிமுகவும் நேற்றைய அஇஅதிமுக பட்டியல் குறித்து மௌனம் காக்கிறது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி பெரும் சிக்கலில் மூழ்கியிருப்பதாகவும், அதனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு கூட்டணித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவிற்கு இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

மூன்றாவது அணிகான வாய்ப்பு மிகக் குறைவு, அப்படி ஒன்று உருவானால் அது திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக்கொள்ளவே கட்சிகள் முயலும் என்கின்றனர் நோக்கர்கள்.


மேலும் இங்கே தொடர்க...

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள்

உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.

அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.

அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன.

அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.

1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு


இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும்.

இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2. எருமை உருவ கொறிணி



கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும்.

உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை



உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர்.

இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்





தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை.

இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5. மனிதனை விட பெரிய கடல் தேள்


மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்



அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும் இங்கே தொடர்க...

காலி அஹங்கமவில் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் பலி


காலி அஹங்கம பிரதேசத்தில் இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை இராணுவத்தினர் நிறுத்துமாறு பணிக்கப்பட்ட வேளையில் அதை பொருட்படுத்தாது மீறிச் சென்றுள்ளனர். இதனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானைத் தொடர்ந்து கனடாவிலும் நிலநடுக்கம்

கனடாவின் ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களில் அந்நாட்டு நேரப்படி 1.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 செக்கன்கள் வரை இந்நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 4.3 ஆக அளவிடப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, சிலியிலும் இதே போன்ற நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன
மேலும் இங்கே தொடர்க...

உயர் கல்விக்குத் 62 சதவீதமானோர் தகுதிபெற்றுள்ளனர்: பரீட்சை ஆணையாளர்


2010 ஆம் ஆண்டு ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறையாக 62 சதவீதமானோர் உயர்தரக் கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெலவத்தையில் உள்ள பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு 3இலட்சத்து 10ஆயிரத்து 642 பாடசாலைப் பரீட்சார்த்திகள் தோற்றினர். அவர்களில் 1இலட்சத்து 82ஆயிரத்து 630 பேர் உயர் தரம் கற்கத் தகைமை பெற்றுள்ளனர்.

பாடசாலை மதிப்பீட்டுப் பரீட்சைகள் மூலம் 12ஆயிரத்து 482 பேர் உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளனர். ஆகவே இம்முறை மொத்தம் 1இலட்சத்து 95ஆயிரத்து 112 பேர் உயர்கல்விக்குத் தகைமை பெற்றுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் சகாக்களுக்கு நேபாளம் அரசியல் தஞ்சம் வழங்க மறுப்பு


முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாக்களுக்கு நேபாளத்தில் அரசியல் புகலிடம் வழங்குவதற்கு நேபாளம் மறுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடைய அரசியல் புகலிட கோரிக்கைக்கு நேபாள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறியுள்ளது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பழிவாங்கப்படக் கூடுமென்ற அச்சத்தில் நேபாளத்திற்கு வந்த அரசியல் தஞ்சம் கோரிய இவர்கள் கைது செய்யப்படலாமென கத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புதையல் தோண்டிய நபர் கைது


விகாரையொன்றில் புதையல் தோண்ட முயற்சி செய்த மந்திரவாதியொருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மந்திரவாதி மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது நீதிபதி ஒரு இலட்ச ரூபாவினை அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

மொனராகலையின் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இந்த மந்திரவாதி, புதையல் தோண்ட முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அயலவர்கள் இது குறித்து மொனராகலைப் பொலிஸாருக்கு தகவல்களை அடுத்தே பொலிஸார் குறிப்பிட்ட மந்திரவாதியைக் கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரலகங்விலவில் கிரனைட் தாக்குதல்



அரலகங்வில பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று அதிகாலை கிரனைட் வீச்சு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல்

புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பை அடுத்து அணுக்கதிர்வீச்சு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.புகுஷிமா அணுமின் நிலையத்தின் இரண்டாவது நான்காவது ஆகிய இரு உலைகளில் செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டது.

அதேவேளை நான்காவது உலையில் தீ பிடித்ததுடன் எங்கும் ஐதரசன் புகை வெளியேறத்தொடங்கியது.கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஏற்பட்டுவரும் அணு உலை வெடிப்புக்களால் கதிர்வீச்சு அபாயமும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் நவாடோ கானும் கவலை வெளியிட்டிருந்தார்.

""பாதிக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது.இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.இதனால் பெரும் அபாயம் உள்ளது'' என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜப்பானிய அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காற்றில் பரவி தற்பொழுது ரஷ்யா, ஜப்பான் எல்லையில் இருக்கும் விளாடி வஸ்தக் நகரிலும் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து ரஷ்ய இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது.அத்துடன் சீனா ஏற்கனவே ஜப்பானுக்கான தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தின் அளவு 6 ரிச்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்பானிய மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.நான்காம் எண் அணு உலையில் ஏற்பட்ட தீயை அடுத்து டோக்கியோ நகருக்குள்ளும் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுமக்கள் சிலர் தலைநகர் டோக்கியோவிலிருந்தும் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நான்காம் எண் அணு உலையில் இருந்த யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள் உருகி வெப்பம் வெளியேறி இருக்கலாம் எனவும் இதுவே அதிக கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டோக்கியோ மின்சக்தி நிபுணர்கள் கருத்து வெளியிடுகையில்;ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி போரிக் அமிலத்தை அணு உலையில் ஊற்றி அதன் வெப்பத்தை தணிக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு, சுனாமியை அடுத்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவி வருகின்றது.அத்துடன் அணு உலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் எந்தளவுக்கு நேர்ந்துள்ளது என்று குறிப்பாக கூறமுடியாது என கூறியுள்ள நிபுணர்கள் அதில் துவாரங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது உருகி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

அணு உலைகளிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வெளியேறியுள்ளனர்.

இதேவேளை 3 ஆம் எண் அணு உலையில் இருந்து புகை மேலெழுந்து வருவதாகவும் கடந்த இரு தினங்களில் இரண்டாவது தடவையாக நான்காம் அணு உலை வெடித்து தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இப்பகுதியில் நான்கு தடவைகள் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிச்டர் என்று கூறப்பட்ட போதும் அது 9 ரிச்டர் என தற்பொழுது கூறப்படுகிறது.இதனிடையே கதிர்வீச்சு தொடர்பில் ஜப்பான் முறையான தகவல்களை வெளியிடவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நேற்று புதன்கிழமை ஜப்பானிய அமைச்சரவை செயலர் யூக்சியோ எடோனோ கருத்து வெளியிடுகையில்; புகுஷிமா அணு உலைப்பகுதியில்கடமையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்தும் வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 50 ஊழியர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.அதேவேளை தற்பொழுது அணுக் கதிர்வீச்சு அளவு குறைந்து வருவதாகவும் எடோனோ மேலும் தெரிவித்தார். இதேவேளை கியூடோ செய்திச்சேவை தகவலின்படி அணு உலைகள் கொதித்துக் கொண்டிருப்பதால் மேலும் கதிர்வீச்சு அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணு உலைகள் வெடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடல் நீரையும் போரிக் அமிலத்தையும் ஹெலிகொப்டரிலிருந்து ஊற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

234 உள்ஃராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் 3036 உறுப்பினர்கள் தெரிவு: 29,108 பேர் போட்டி 7,396 நிலையங்களில் வாக்களிப்பு





வாக்களிப்புகாலையிலேயே வாக்களியுங்கள்

234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள் எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் கடமைகளில் 50 ஆயிரம் பொலிஸாரும் 20 ஆயிரம் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று காலை முதல் தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றனர்.

வாக்குப் பெட்டிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்கள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.

தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் சுமார் 500 வீதித் தடைகள் இடப்பட்டுள்ளதோடு மோசடி இடம்பெறலாமென சந்தேகிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏதும் வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலைய வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கோரியுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த சுமார் 9 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக விசேட இ. போ. ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மற்றும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள இவர்கள் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளரின் பணிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு முதலாவது பெறுபேறு இரவு 11.00 மணியளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண போட்டிகள் காரணமாக 335 உள்ளூராட்சி சபைகளில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

3059 பேருக்கு ‘9A’ 1,95,112 பேர் A/L கற்க தகுதி


2010 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 195,112 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இத் தொகையை சென்ற வருட பரீட்சார்த்திகளோடு ஒப்பிடும் போது 10.28 சத வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர்.

சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில பிரதேசங்களில் மாணவர்கள் அதிகாலையில் சென்று பாடசாலைகளில் ஆர்வத்துடன் கல்வி பயின்றதை காணக் கூடியதாக இருந்தது.

கஷ்டப் பிரதேசங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிகாலையில் அழைத்துச் சென்று மாலை 6 மணிக்கு பாடசாலையை விட்டு அழைத்து வந்த நிலைமையும் காணப்பட்டது. இதன் மூலமே இவ்வருடம் சிறந்த பெறுபேற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வழமையாக நாங்கள் வெளியிடும் பரீட்சை பெறுபேறுகளை 3 வார காலத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளோம். இதற்கு உதவியாக பரீட்சை திணைக்களம் உட்பட பலரும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கின்றபோது இம்முறை 3059 மாணவர்கள் சகல பாடங்களிலும் “ஏ” தர சித்திகளை பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 61.61 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 59.80 சதவீதமானோரும், ஆங்கில பாடத்தில் 41.41 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே பெளத்த சமயத்தில் 81 வீதமானோரும், இந்து சமயத்தில் 90.2 சதவீத மானோரும் இஸ்லாம் பாடத்தில் 91.65 சதவீதமானோரும் இம்முறை சித்தியடைந்துள்ளனர்.

முதன் மொழிப் பாடங்களான சிங்களத்தில் 82.89 சதவீதமானோரும், தமிழ் மொழியில் 80.65 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தமாக 310,642 மாணவர்கள் தோற்றினர். இவர்களில் 14,961 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை.

பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியாகும். விண்ணப்பதாரிகள் அதற்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி பரீட்சைகள் ஆணையாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு ஜயவர்த்தனபுரயிலுள்ள பாடசாலைகள் இன்று நேரடியாக சென்று பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை, ஏனைய 8000 பாடசாலைகளுக்கும் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

இந்திய விசா விண்ணப்ப படிவம் இணையத்தில்




இந்திய உயர் ஸ்தானிகராலயம், இம்மாதம் 25ம் திகதி முதல் இந்தியாவுக்குச் செல்வதற்கான விசா விண்ணப்ப ஒழுங்குகள் இணையத் (on line) தொடர்பு மூலம் நடைபெறுமென்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

இத்திகதியின் பின்னர் விண்ணப்பதாரர்கள் என்ற இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய முறையான விசா வழங்கும் சேவையை இந்திய விசா விண்ணப்ப நிலையம் www.indiavisaonline.gov.in/visa (VFS Global) கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம்

மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டை ஆகியன மூலம் பெற்றுக் கொள்வதை இலகுவாக்கும் நோக்கத்தைக் கொண்டது.

இப்புதிய நடைமுறையானது விண்ணப்பதாரர்கள் தங்கள் வீடு, கந்தோர் மற்றும் கணனி நிலையங்கள் போன்ற இடங்களிலிருந்து நேரடியாகவே விண்ணப்பிக்க வழிவகுக்கும்.

இணையத்தளத்தில் பூரணப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களைப் படியிறக்கம் செய்து (2.5 கீ 2.5 அங்குலம் வெள்ளை நிறப் பின்னணியுடனான) இரண்டு புகைப்படங்களை இணைத்து விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுக் கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களுடன் இந்திய விசா விண்ணப்ப நிலையம் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் மற்றும் இந்திய உதவித் தூதரகம் அம்பாந்தோட்டையிலும் கையளிக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு சூசூசூ.கீஷடுஷச்ங்ச்ஙிஸச்.ச்ஙுகி என்ற இணையத் தளத்தைப் பார்வையிடவும்.

விசாக்களை விரைவாக வழங்குவதை உறுதிப்படுத்துவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அர்ப்பணிப்புடனுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தொகுதி ஒதுக்கீடு: வைகோவை கைவிட்டார் ஜெயலலிதா ம.தி.மு.க திண்டாட்டம்




தமிழக சட்ட சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. ஓரங்கட்டப்பட்டுள்ளமை ஜெயலலிதா- வைகோ அரசியல் உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ம.தி.மு.க.வுக்கு 16 ஆசனங்களையாவது ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ம.தி.மு.க.வுக்கு 8 ஆசனங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என அறிவித்திருப்பது வைகோவுக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்ற இறுதி முடிவை எடுப்பதற்காக ம.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் நாளை மறுநாள் 19ம் திகதி வைகோ தலைமையில் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ளனர். ம.தி.மு.க. கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து சென்ற போதும் இறுதி வரை ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த தம்மை அவர் ஏமாற்றிவிட்டார் எனவும்,

இதற்கு காரணம் விஜயகாந்த் - ஜெயலலிதாவுக்கிடையான புதிய கூட்டணி எனவும் ம.தி.மு.கவினர் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தமக்கு 35 தொகுதிகளை வழங்குமாறு முதலில் ம.தி.மு.க. கோரியிருந்தது. எனினும் கடந்த தேர்தலில் 35 தொகுதிகளை வழங்கிய போதும் அதில் 8 தொகுதிகளிலேயே ம.தி.மு.க. வெற்றிபெற்றது என்பதை காரணம் காட்டிய ஜெயலலிதா அக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இதனையடுத்து தமக்கு 25 தொகுதிகளையாவது வழங்குமாறு வைகோ இறங்கி வந்தார். அதனையும் ஜெயலலிதா ஏற்க மறுத்த நிலையில் குறைந்த பட்சம் 18 ஆசனங்களையாவது வழங்குமாறு கோரினார் வைகோ.

இருப்பினும் ம.தி.மு.க.வை நம்பி 18 தொகுதிகளை வழங்க முடியாது என்று கூறி 10 ஆசனங்களை மட்டுமே தரமுடியும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆசனங்களின் தொகை 10 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்து கொண்ட விஜயகாந்தின் தே.மு.தி.கவுக்கு ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கியுள்ளமை ம.தி.மு.க. வினரை மேலும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா இல்லை பிரிந்து செல்வதா என்பது குறித்து முடிவு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை வைகோ நாளை மறுநாள் கூட்டுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான்: கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம் புகுஷிமா பகுதியில் தொடர்ந்து பதற்றம்




ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்காக 50 தொழில் நுட்பவியலாளர் களை அங்கு அனுப்ப ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 750 பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது அணு உலையில் இருந்து தொடர்ந்தும் புகை கக்கி வருவதாக வும் அதன் உட் புறத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அணுமின் நிலையத்தை பராமரிக்கும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 5 மற்றும் 6 ஆவது அணு உலைகளிலும் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக அமெரிக்க இராணுவமும் உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து மக்கள் தொடர்ந்தும் பீதியில் உள்ளனர். கதிர்வீச்சு புகுஷிமாவில் இருந்து 240 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோ வரை எட்ட ஆரம்பித்துள்ளது. 4 ஆம் பிரிவில் தீ ஏற்பட்ட பின்னர் கதிர்வீச்சு காற்றில் கலப்பது அதிகரித்துள்ளது.

இதனால் டோக்கியோ நகரில் 18 பேரிடம் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.

எனினும், கதிர்வீச்சு அபாயப் பகுதியாக இருக்கும் புகுஷிமாவை அண்டிய 20 கிலோ மீற்றர் தூரப் பகுதி மேலும் அதிகரிக்கப்படாது என ஜப்பான் அரசு நேற்று அறிவித்தது. இந்த பகுதியில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு அப்பால் 20 இல் இருந்து 30 மீற்றருக்குள் 140,000 பேர் அளவில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று பிந்திக் கிடைத்த தகவலின்படி சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 4, 255 ஆக அதிகரித்திருந்தது. அத்துடன் இதுவரை 8, 194 பேரளவில் காணாமல் போயுள்ளதோடு 2, 282 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கறிவேப்பிலையின் மகத்துவம்




உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும் போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஈரல் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது.

கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது தொடர்பாக பெலியத்தையில் அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையில் பணியாற்றும் வஜிர பி. எஸ். செனவிரட்ன வைத்தியர் கருத்து தெரிவிக்கையில்:- கறிவேப்பிலையில் 18 வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சமையலுக்கு பயன்படுத்தும் போது மிகவும் வாசனையாகவும் காணப்படும்.

கறிவேப்பில்லை சமிபாட்டுப் பிரச்சினை, மலச்சிக்கல். வாயு தொல்லை போன்றவற்றுக்கும் சிறந்த மருந்ததாகக் காணப்படுகிறது.

கறிவேப்பிலை வாரத்திற்கு இரண்டு முறை சம்பல் செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும் போது வாழ்நாளில் சுகதேகியாக வாழ முடியுமென வைத்தியர் செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனசெவன வீடமைப்பு திட்டம் நாட்டின் பாரிய அபிவிருத்தி முன்னெடுப்பு








‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டமாக அமைந்திருப்பதாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்றுத் தெரிவித்தார்.

நிர்மாண, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு, பொது வசதிகள் துறை அமைச்சின் ‘ஜனசெவன’ பத்திரிகையின் வெளியீட்டு வைபவம் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது. அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்நிகழ்வில் உரையாற்றும்போதே லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ‘ஜனசெவன பத்திரிகை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவுடன் இணைப்பாக 18ம் திகதி முதல் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரவிருக்கின்றது.

இந்நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘ஜனசெவன’ தேசிய வீடமைப்புத் திட்டம் ஒருபாரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டத்தைச் சரியான முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செயல்திற னும் தூர நோக்கும் மிக அவ சியம். இதற்கேற்ப இப்பாரிய அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச சிறந்த முறையில் முன்னெடுக்கின்றார். இது மிகவும் சிறந்த பணியாகும். இந்த நல்ல பணிக்கு எமது பங்களிப்பை அளிப்பதை எமது பொறுப்பாகக் கருதுகின்றோம்.

‘ஜனசெவன’ பத்திரிகை தினமின பத்திரிகையுடன் இணைப்பாக மக்களைச் சென்றடையும்போது ஜனசெவன திட்டம் குறித்து தகவல்களும், விபரங்களும் மக்களைச் சென்றடையும்.

இந்த நாட்டில் சமூக, கலாசார, அரசியல், மேம்பாட்டுக்கு எமது நிறுவனம் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது. அந்த வகையில் ‘ஜன செவன’ பத்திரிகை எமது பத்திரிகையுடன் இணைப்பாகச் செல்லுவதைப் பெருமையாகக் கருதுகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரட்ன செனரத் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டைத் துரிதமாக கட்டியெழுப்புவதற்கு நடவடி க்கை எடுத்து வருகின்றார். அதனால் செயல் திறன் மிக்க வர்களை அவர் அமைச்சராக நியமித்துள்ளார். அவர்களில் அமைச்சர் விமல்வீரவன்ச சிறந்த ஆக்கபூர்வமான அமைச்சராவார். இவருக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள பொறுப்புக்களை அவர் சிறந்த முறையில் மேற்கொள் ளுகின்றார்.

எமது நிறுவனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவிலாளருமான பந்துல பத்மகுமாரவின் தலைமையின் கீழ் எமது வெளியீடுகள் அனைத்தும் சிறந்த முறையில் தரமானவையாக வெளிவருகின் றன. அவர் சிரேஷ்ட ஊடகவியலாளராக இருப்பதால் இதற்கு சிறந்த வழிகாட்டலை அவர் வழங்கி வருகின்றார்.

வீடு மக்களுக்கு முக்கியமான தேவையாகும். அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஜனசெவன பத்திரிகை பெரிதும் உதவும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பானிலிருந்து இலங்கையரை அழைத்துவர விசேட ஏற்பாடு







இரு விமானங்கள் அவசரமாக அனுப்பிவைப்பு

ஜப்பானிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இரு ஸ்ரீலங்கன் விமானங்கள் நேற்று ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதாக சிவில் விமானச் சேவை அமைச்சு தெரிவித்தது.

சுனாமி அனர்த்தம் காரணமாக ஜப்பானில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர் உள்ளதோடு அவர்களில் நாடு திரும்ப விருப்பமானவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க விசேட விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜப்பானிலுள்ள இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று நாடு திரும்புவர் என சிவில் விமானச் சேவை அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

16 மார்ச், 2011

வான் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அமெரிக்காவிடம் உதவி கோரிய இலங்கை: விக்கி லீக்ஸ் தகவல்



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது வான் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை புலிகளின் விமானங்கள் தாக்கியதை இந்தியா வழங்கிய ராடர்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதையடுத்து அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 மார்ச் 30ஆம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை அழைத்த பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்காலத்தில் எல். ரி. ரி. ஈ. யின் வான் தாக்குதல்களுக்கு எதிராக எவ்வாறு வான் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என ஆராய்வதற்காக அமெரிக்க இராணுவ குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய சில நாட்களில் இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதலால் இந்தியாவினால் கடனாக வழங்கப்பட்ட இரு எம்.ஐ. 17 ஹெலிகள் உட்பட பல ஹெலிகள் சேதமடைந்திருந்தன. அவ்வேளையில் புலிகளின் விமானங்களை இந்திய ராடர்கள் கண்டறிய தவறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் அதை மறுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் ராடர்கள் புலிகளின் வான் அச்சுறுத்தலை தடுக்க போதுமானவை அல்ல என அமெரிக்கத் தூதுவரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக 2007 ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட இரகசிய கேபிள் குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

செங்கலடி- பதுளை வீதிக்கு இடையிலான கறுத்தப்பாலம் கீழிறங்கியுள்ளது


செங்கலடி பதுளை வீதிக்கிடையிலான கறுத்தப்பாலம் 2அடிக்கு கீழிறங்கியுள்ளது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அண்மையில் இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள தூண் ஒன்று கீழ் இறங்கியதால் இப் பாலமும் கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








மேலும் இங்கே தொடர்க...

அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்




பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

















இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட்

பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.



அட்லாண்டிஸ்கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம்.



ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை


234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (17) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க 2009 ஜூன் மாத வாக்காளர் பட்டிய லின் பிரகாரம் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

23 மாவட்டங்க ளில் 324 உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 7 ஆயிரத்து 402 நிலையங்களில் இவர்கள் நாளை வாக்களிக்க வுள்ளனர். சுதந்திரமும் நியாயமுமான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, நாளை (17) நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வித பயமும் சந்தேகமும் இன்றி வாக்காளர்கள் தமக்கு உரிய வாக்க ளிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கு மாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடி யும்.

எனினும் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பாதுகாப்புக்கென பொலிஸ், முப்படையினர் மற்றும் விசேட பொலிஸ் படையணி ஆகியோர் உள்ளடக்கிய 75 ஆயிரம் பேர்கொண்ட படையணி ஈடுபடுத்தப் படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக கலகமடக்கும் வீதித்தடை படையினர் ஆகியோரும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் பணிகளுக்கென 80 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

உதவி தெரிவத்தாட்சி அதிகாரி பிரதம வாக்கெண்ணும் அதிகாரி ஆகியோர் நேற்று (15) மாலையே தமக்கு உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் உள்ளூராட்சி மன்றத்துக்கான வாக்களிப்பை பின் போடுவதற்கு கட்சி செயலாளர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறும். இங்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையாளர் குறிப்பிட் டுள்ளார். 67 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள நடவடிக்கை





இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவை இலங்கைக்கு அதிகம் சார்பானதாகவே உள்ளதாக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலாவது கூட்டம் 27 ஆம் திகதி புதுடில்லியில் நடக்க உள்ளதோடு இரண்டாவது கூட்டம் கொழும்பில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு மட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளி த்துள்ளன.

எமது பிரச்சினையை இந்திய அரசு உணர்வு பூர்வ மாகவே கவனிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் செய்மதி படங்களை இந்திய அரசுக்கு வழங்கியுள்ளோம்.

இலங்கைக் கடலில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். இந்திய தூதுவரை நான் நேரில் சந்தித்து பேசினேன். 27 ஆம் திகதி உயர் மட்ட குழுவொன்று இந்தியா செல்கிறது.

இரு நாடுகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான எமது தரப்பு நகல் வரைவு தயாரிக்கப்பட்டு விட்டது இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முடிவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...