7 டிசம்பர், 2010

விக்ரமபாகு கருணாரத்ன மீது விமான நிலையத்தில் தாக்குதல்

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இன்று பிற்பகல் விமான நிலையத்தில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் வருகைக்காக காத்திருந்த சுமார் 40 பேர் இவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர் பாதுகாப்பாக வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் இன்று கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ஞே இன்று பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி பாலியல்வல்லுறவிற்கு ஈடுபடுத்தினார் என்ற குற்றஞ்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இக்குற்றஞ்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நேரப்படி இவர் இன்று காலை 9.30 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்றிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இவர் வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜூலியன், இது தன்னை முடக்குவதற்கான சதியெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

லக்ஸர் இ-தொய்பாவின் இலங்கை முயற்சிகள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்

இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் எற்படுத்துவதற்கு லக்ஸர் இ-தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்ட லக்ஸர் இ-தொய்பா அங்கத்தவர்களின் உதவியுடன் தென்னிந்தியாவில் இரு அணிகளை நிலைப்படுத்துவதற்கு லக்ஸர் தலைவர்களில் ஒருவரான ஷபீக் கபா கடுமையாக முயற்சி செய்ததாக அக்கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்சாரசபை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மின்பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டப்பணம் மூலம் 12.5 மில்லியன் ரூபாய் மின்சாரசபைக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சாரசபைக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறான மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை திடீர்சோதனைப் பிரிவின், 1987 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா


இலங்கையில் முகாம்களில் இன்னும் 17 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

''இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது எழுதிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தேன். முகாம்களில் தங்கியுள்ள 17 ஆயிரம் பேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களை மறுகுடியமர்த்தவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா போதுமான நிதியுதவி அளித்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

வடபகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ஆயிரம் வீடுகள் கட்டும் பணியையும் ஆரம்பித்து வைத்தேன். அத்துடன் வடபகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 500 டிரக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.

இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழர்கள் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் முறையான பேச்சு வார்த்தையை துவக்கும்படி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளேன்.

மீன்பிடிக்கும் உரிமை தொடர்பாக, 2008ம் ஆண்டு இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்தினேன்" என கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தோட்டப் பெண்களின் தாய்ப்பாலில் விஷம்- ஆய்வில் தகவல்

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் படி ஊவா மாகாண ஹல்துமுல்ல பிரதேசத்திலுள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் கொடிய விஷங்களில் ஒன்றான ‘பெறகொட்' இரசாயனம் கலந்திருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை சுற்றாடல் மற்றும் மண்ணியல் ஆய்வாளரான கலாநிதி பி.ஐ.யாப்பா தெரிவித்தார்.

சர்வதேச இரசாயன பீடைகொள்ளி எதிர்ப்பு தினம் தொடர்பாக கண்டி அனிவத்தையிலுள்ள ‘கெண்டியன் ரிக் ரீட்' சுற்றுலா விடுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆராய்ச்சி அதிகாரியும், பேராதனைப் பல்கலைக்கழக விவசாய கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளருமான கலாநிதி யாப்பா மேலும் தெரிவிக்கையில்,

‘பெறகொட்' என்ற இரசாயனப் பதார்த்தம் கொடிய நஞ்சாகும். இதனை உட்கொண்டால் மரணமே இறுதி விளைவு. அதனைத் தயாரிக்கும் நாடுகளே அதன் பாவனைக்குத் தடைவிதித்துள்ளது. பிரபல தயரரிப்பு நிறுவனமான ‘சின்ஜென்டா’ நிறுவனத்தின் தலைமையகம் சுவீஸ் நாட்டில் உள்ளது. அங்கு ‘பெறகொட்' பீடைகொள்ளி பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

1964ன் பின் இலங்கையில் இரசாயனக் களைகொள்ளிகள், பீடைகொள்ளிகள், இரசாயனப் பசளை, இரசாயனக் கிருமிநாசினிகள் என்பன பாவனைக்கு வந்தன. இதன் விளைவாக இரசாயனங்கள் மிகக் குறைந்த அளவில் தொடர்ச்சியாக எமது உடம்பில் சேகரிக்கப்பட்டு புற்று நோய், சிறுநீரக நோய், பாக்கின்சன் என்ற நரம்பு நோய், கண் வியாதி, தோல்வியாதி போன்ற பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. வருடம் தோறும் 5ஆயிரம் பேர் ‘பெறகொட்' இரசாயனம் உணவில் சேர்வதன் காரணமாக இறக்கின்றனர்.

‘பெறகொட்' மண்ணுடன் சேர்ந்தால் அது அழியமாட்டாது. மண்ணின் அகத்துறுஞ்சும் தன்மை, வடிதிறன் என்பன குறைகின்றது. இதனால் மண் பாதிப்படைகிறது.

எதிர்காலத்தில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் மூன்று வருட இடைவெளியில் இதன் பாவனையை முற்றாக ஒழிப்பதாகக் கூறிய போதும் புதுப் பெயர்களில் அவை விதைந்துரைக்கப்பட்டு திறந்த சந்தைக்கு வந்துள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லெப்டொப் தருவதாகக்கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்

லெப்டொப் வாங்கித் தருவதாககூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கராஜ் சொந்தக்காரர் சிறுமியொருவருக்கு லெப்டொப் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நபர் இதுபோன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி பல சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்


கண்டி மின்சாரசபை கட்டிடத்தின் கூரை மீதேறிப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர் பீச்சுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டன. இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை உடன் நிரந்தர சேவையில் இணைக்கும் படி கோரிக்கை விடுத்து இலங்கை மின்சார சபையின் கண்டி பிரதான காரியாலய கூரை மீது ஊழியர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இரவு 7.30 மணி அளவில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர் விசுறுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இலங்கை மின்சார சபையின் மத்திய மாகாணம் முழுதும் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் சேவை செய்யும் ஊழியர்கள் சுமார் 400 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இரவு 7.00 மணி அளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தை கை விடுமாறு வேண்டிய போதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததன் காரணத்தால் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி உரையாற்றாமை பிரிட்டனுக்கே அவமானம்: அமைச்சர் கெஹெலிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அமெரிக்காவில் ஆரம்பித்தது இன்று வரையிலும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அந்த காலத்தில் சர்வதேசம் செய்ததை கரு எம்.பி. இன்று செய்கின்றார் என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.

ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரையாற்றாமை எங்களுக்கு அல்ல ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருப்பதாக கூறப்படும் பிரித்தானியாவுக்கு அவமானம், வெட்கமாகும் என்று அவர் சொன்னார்.

பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு சென்றிருந்த வேளையில் "வெள்ளைக் கொடி' தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இன்று வரையிலும் யுத்தக் குற்றச் சாட்டு நகர்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது 47 பேரைக் காப்பாற்றி நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. அது நடந்ததா? என்பது பிரச்சினையாகும்.

ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருக்கின்ற நாட்டில் பிரச்சினையில்லை, சந்தேகமும் இல்லை என்பதனால் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றார். அவர் அங்கு உரையாற்றாமை எங்களுக்கு அவமானமோ வெட்கமோ இல்லை.

புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்துள்ள போதிலும் பிரித்தானியாவில் புலிக்கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் யாருக்கு அவமானம் எங்களுக்கா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை தூண்டும் வெள்ளைக்காரர்கள்: எஸ்.பி.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு "வெள்ளைக்காரர்கள்' புலம்பெயர் தமிழர்களை தூண்டிவிடுகின்றனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார். இளம் சமூகம் இணையும் போது மொழிப்பிரச்சினை மரணித்துவிடுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இளம் சமூகம் மற்றும் மாணவர்களுக்கான உலக மாநாட்டுக்காக இலங்கையர்களை தயார்படுத்தும் முகமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு "சாலிகா' மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தவிருந்த உரை தடுக்கப்பட்டமையானது ஏகாதிபத்தியவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்ற செய்தியை எமக்கு வெளிப்படுத்தியுள்ளது. 4இலச்சத்து 50ஆயிரத்துக்கும் மேலதிகமாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் லண்டன் மாநகரில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வெறும் 450 பேரே கலந்து கொண்டிருந்தனர். இவ் விஜயத்தின் போது நானும் ஜனாதிபதியுடன் சென்றிருந்தேன். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு முகத்தை மூடும் விதத்தில் தொப்பியுடனும் பெரிய மூக்குக் கண்ணாடியுடனும் நேரடியாக சென்று பார்வையிட்டேன்.

அதன்போது அங்கிருந்த புலம் பெயர் தமிழர்களுக்கு தேநீரையும், கொக்காகோலாவையும் வெள்ளைக்கார துரைமாரும் அம்மணிகளும் பரிமாறுவதை நான் கண்ணுற்றேன். எம்மைப் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தையும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மையை ஏற்படுத்தவும் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இச் சம்பவத்திலிருந்து தெளிவாகியுள்ளது. எனவே ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிராக நாமனைவரும் ஒன்று திரள வேண்டும்.

தென் ஆபிரிக்கா பிரிட்டோரியா நகரில் இம் முறை இடம்பெறும் இம் மாநாட்டிற்கு 150 இலங்கையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்து பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். எமது நாட்டின் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அங்கு நடத்தப்படவுள்ளன.

இளம் சமூகம் இணையும் போது மொழிப் பிரச்சினை மரணித்துவிடும். அதன்போது இளைஞர்களுக்கும், மகளிருக்கும் ஏற்ற விதத்தில் மொழியை ஒழுங்குபடுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதன்போது இனத்துவேஷம் வர்ண பேதங்கள் தலைதூக்காது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியை கெளரவித்து கூடுதலானோருக்கு ஹஜ் வாய்ப்பு அலவி மெளலானா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு தசாப்தங்களுக்கு கூடுதலாக பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தன்னிகரற்ற தேசத் தலைவராக இருப்பதனால் அவர் மீது அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் பெரு மதிப்பை வைத்திருக் கின்றன. அதனால் தான் இந்தத் தடைவை புனித ஹஜ் கடமைகளில் ஈடுபடச் செல்வதற்கு கூடுதலான அளவு சுமார் 5800 இலங்கையர் செல்வதற்கு சவூதி அரசாங்கம் அனுமதி அளித்தது என்று மேல் மாகாண ஆளுநரும், ஹஜ் குழு தலைவருமான அலவி மெளலானா தெரிவித்தார்.

எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் கெளரவிக்க தயங்கினாலும் அவருக்கு இஸ்லாமிய உலகில் பெருமதிப்பும், ஆதரவும் இருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் பிரயாண முகவர்களுக்கு சலுகைகளுக்கு பதில் புனித ஹஜ் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கு சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து குறைந்த செலவில் மக்காவுக்கு சென்று திரும்புவதற்கு உறுதுணை புரியுமாறு ஹஜ் கமிட்டி அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாக மேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மக்காவுக்கு ஹஜ்ஜா ஜிகளை அனுப்பி வைக்கும், நடைமுறையில் மோசடிகள் செய்வதற்கு எவ்வித இடமும் இல்லை. இந்த விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் தண்டனை அடுத்தாண்டு புனித ஹஜ் யாத்திரை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கிடைக்குமென்று அலவி மெளலானா கூறினார்.

முஸம்மில் போன்ற சில எதிர்க் கட்சி யினர் ஹஜ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கமிஷன் அடித்துக் கொள்ளை இலாபம் திரட்டுகிறார்கள் என்றும் எங்கள் மீது போலியான அபாண்ட குற்றச்சாட்டுக்களை அரசியல் இலாபம் தேடும் எண்ணத்துடன் சுமத்துகிறார்கள். இந்த போலி கற்றச் சாட்டுக்களை கேட்கும் போது எங்களுக்கு உண்மையிலேயே மன வேதனை ஏற்படு கின்றதென்று மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான; தான் 55 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வருகிறேன். அரசியல காரணங்களுக்காக நான் எதிர்க் கட்சியினரால் அடித்துக் துன்புறுத்தப்பட்டு காயப்பட்டும் இருக்கிறேன். ஆனால் இன்று என் மீதும் எனது ஹஜ் கமிட்டி அங்கத்தவர்கள் மீதும் அரசியல் காரணங்களுக்காக சுமத்தப்பட்டி ருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்மை யிலேயே எனக்கு மன வேதனை அளிக் கிறது என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்களான பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீத், எம்.எச். எம். அஷ்ரப், தற்போதைய சிரேஷ்ட அமைச்சர ஏ.எச்.எம். பெளசி, ஐ.ஏ. காதர் போன்ற தலைவர்களின் பாதையில் இன்று நாம் ஹஜ் கடமையின் ஊடாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்து வருகிறேன். இதைப் பார்த்து பொறாமைக்காரர்கள் இத்தகைய போலிக் குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத் தினாலும் மக்கள் இந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கத்தோலிக்க மக்கள் வேண்டி நின்ற சமாதானம் நாட்டில் நிலை நாட்டப்பட்டுள்ளது

முழு ஆசியாவுக்கும் உரிய கர்தினல் பதவி எமக்கு கிடைத்துள்ளது - ஜனாதிபதி

இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களுக்கு இதுவொரு பொற்காலம். ஏனெனில் ஒருபுறம் கத்தோலிக்க மக்களின் வழிகாட்டியான இயேசுநாதரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிவரும் காலம், மறுபுறம் மூன்று தசாப்தங்களாக கத்தோலிக்க மக்கள் வேண்டிநின்ற சமாதானம் நாட்டிலே நிலைநாட்டப்பட்டுள்ளமை. இவற்றுடன் முழு ஆசியாவிற்கும் வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு கர்தினல் பதவி எமது நாட்டின் கத்தோலிக்க மக்களுக்குக் கிடைத்துள்ளமை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (06) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கர்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; இந்நாட்டின் கத்தோலிக்க மக்களுக்குக் கிடைத்த மகத்தான ஆசீர்வாதமாக இது காணப்படுவ துடன் எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகவும் விளங்குகின்றது என்றும் கூறினார். எமது மெல்கம் ரஞ்ஜித் அதிமேற்றிராணியாருக்கு கர்தினல் பதவி கிடைப்பதற்கு அன்னாரின் அர்ப்பணிப்பும் சேவையுமே காரணமாக அமைந்துள்ளது. மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சிறுபராயத்திலிருந்தே சமய ரீதியான பாதையை தேர்ந்தெடுத்த ஒருவர்.

அவர் சமயக் கல்வியை தொடரும்போது அதன் மகத்துவத்தை படிப்படியாக புரிந்துகொண்டுள்ளார்.

கர்தினலின் வாழ்க்கையிலே நாம் பல நற்பண்புகளை காணுகின்றோம். நீங்கள் எங்கிருந்தாலும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்த ஒருவர் அன்று நீங்கள் வத்தளை பமுனுகம மிஷனிற்குப் பொறுப்பான இரண்டாவது ஆயராக நீர்கொழும்பு களப்பிற்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்துவந்த கப்புகம்கொட, தும்கல்பிட்டிய மீனவ மக்களுக்கு ஆற்றிய பணியானது மகத்தானது.

அதேபோன்றுதான் களுத்துறை, இரத்தினபுரி பிரதேசங்களில் பணியாற்றும்போதும் நீங்கள் கத்தோலிக்க மக்களுக்கு மாத்திரம் சேவையாற்றியவரல்ல, அனைத்துச் சமூகத்தினரதும் விடிவிற்காக பாடுபட்டவர். குடிசைகளில் வாழும் மக்கள் குடிசைகளிலேயே வாழ வேண்டும் என்று நீங்கள் நினைத்தில்லை. அவர்களையும் மாடி வீடுகளில் வாழ வைப்பதற்காக உழைத்த மாமனிதர். சுனாமி வந்தபோது நீங்கள் பணியாற்றிய விதம்பற்றி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வாழ்க்கையை கட்டியெழுப்ப எதுவித பேதமுமின்றி செயற்பட்டமை தொடர்பாக அந்த மக்கள் இன்றும்கூட மிகுந்த பக்தியுடன் நினைவுகூர்கின்றனர்.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நீங்கள் வலக்கை செய்யும் கொடையை இடக்கை தெரியாதவாறு செயற்பட்டவர், அதுமட்டுமல்ல கர்தினல் இந்நாட்டின் குழந்தைகளுக்கு ஆற்றிய மகத்தான பணியினை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

எமது சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மனிதர்களின் பெரும் செல்வம் குழந்தைச் செல்வம் என்று. அதேபோன்றுதான் இயேசுநாதர் குறிப்பிடுகின்றார். எனக்காக ஒரு குழந்தையை அரவணைத்துக் கொண்டவர் என்னை அரவணைத்தவர் போன்றவராவார் என்று. இதன் பிரகாரம் தர்மதூத்த சிறுவர் சங்கத்தை அமைத்து நீங்கள் செயற்பட்டீர்கள்.

அது மாத்திரமல்ல “செத் சரண” செயற்திட்டத்தை ஆரம்பித்து இன, மத, ஜாதி பேதமின்றி சேவையாற்றி வந்துள்ழர்கள். இலங்கையில் மாத்திரமல்ல பல உலக நாடுகளிலும் நீங்கள் தர்மப் பிரசாரம் மேற்கொண்டுள்ழர்கள் அதேபோன்று இந்தோனேசியா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் வத்திக்கானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டு பாரிய பணியாற்றியுள்ழர்கள். மேலும், அனைத்து இன மக்களுடனும் நெருக்கமாக, சினேகபூர்வமாக செயற்பட்டுள்ழர்கள்.

இன்று இந்த நாட்டிலே ஒரு புறமாக கிழக்கிலிருந்தும் கடலோரமாக மட்டக்களப்பில் இருந்தும் இந்து பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செய்கின்றனர்.

மறுபுறமாக தேவேந்திரமுனையில் இருந்து கத்தோலிக்க மக்கள் மன்னார் மடுவிற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். அதற்கிடையே யாழ்ப்பாணம் சென்று பெளத்தர்கள் நாகதீப விகாரையில் வழிபடுகின்றனர்.

நாடு முழுவதிலும் இவ்வாறு சமய வழிபாடுகளிற்காக மக்கள் யாத்திரை செய்வதன் மூலம் தெளிவாவது சமய ரீதியான சகவாழ்வாகும்.

அன்று மடு தேவாலயத்தை அண்டி பயங்கரவாதிகள் அமைத்திருந்த பதுங்குழிகளை அழித்த அதே வேகத்தில் பயங்கரவாதிகளினால் அப்பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஐ.தே.கவுக்கு எதிராக மக்கள் சகலரும் கிளர்ந்தெழ வேண்டும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் அறைகூவல்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இலங்கையை யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ. தே. க. தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறியது. வெளிநாடுகளில் இயங்கும் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டை அவமானப்படுத்தும் இந்த பாரிய காட்டிக்கொடுப்புக்கு எதிராக முழு நாட்டு மக்களும் கிளர்ந்தெழ வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்; இலங்கையை யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இதன் மூலம் அவரினதும் ஐ.தே.க. வினதும் உண்மையான சுயரூபம் அம்பலமாகி யுள்ளது. திட்டமிட்டு தேவையான காலகட்டத்திலே கரு ஜயசூரிய இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற புலி ஆதரவாளர்கள் தடையாக இருந்தனர். இதற்கு ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர் தனவும் ஒத்துழைத்தார். மேற்படி சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களிலே கரு ஜயசூரிய இந்த யுத்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதற்கு ஐ.தே. க. தேவையான பின்னணியை ஏற்படுத்த முயல்கிறது. கரு ஜயசூரியவின் கருத்து மிகவும் பாரதூரமானது. ஐ.தே.க. வின் நிலைப்பாட்டையே அவர் கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கூறப் பட்ட இந்த கருத்தை நாம் வன்மை யாக கண்டிக்கிறோம். யுத்தகால சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டை அவமதிக்காது அங்கு சென்று சாட்சியமளிக்குமாறு கரு ஜயசூரியவை கோருகிறோம் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,

ஐ.தே.க. வுக்கும் புலி ஆதரவாளர் களுக்கு மிடையில் கூட்டு செயற்பாடுகள் இடம் பெறுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது. சர்வதேச மட்டத்தில் நாட்டை அவமதிக்க ஐ.தே.க. முயல்கிறது. தேசப் பற்றுள்ளவர்கள் யார், தேசத் துரோகிகள் யார் என இனங்கண்டு செயற்பட வேண்டிய காலம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. கரு ஜயசூரியவின் கூற்றை நாம் வன்மை யாகக் கண்டிக்கிறோம் என்றார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உரையாற்றுகையில்,

சரத் பொன்சேகா தான் முதன் முதலில் யுத்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அன்று முதல் பல்வேறு தரப்பினரும் இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டை சுமத்த முய ன்றனர். ஆனால் புலிகளின் பங்காளியாகி யாவது ஆட்சி பீடமேற ஐ.தே.க. முயற்சி செய்கிறது.

பயங்கரவாதிகளின் அழுத்தத்திற்கு தலைசாய்த்து ஜனாதிபதியின் உரையை பிரித்தானியா ரத்துச் செய்தது. ஐந்து நட்சத்திர ஜனநாயகம் குறித்து பேசும் நாட்டில் நடத்த இந்த சம்பவத்தின் மூலம் எந்த நாட்டுக்கு அவமதிப்பு ஏற் பட்டது என்பது தெளிவுறுகிறது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறுகையில்,

மனிதாபிமான நடவடிக்கையின் போது ஐ.தே.க. அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இன்று இலங்கைக்கு எதிரான சர்வதேச சதிகளுக்கு கரு ஜயசூரிய பங்களித்துள்ளார். எனவே, அவர் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

இங்கு அமைச்சர் விமல் வீரவன்ச கூறியதாவது,

யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசுடன் இணைந்து கரு ஜயசூரிய இன்று அரசின் மீது யுத்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யுத்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என புலி களும் சில வெளிநாடுகளுமே கோரி வந்தன. தற்பொழுது ஐ.தே.க. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது மிகப் பெரிய காட்டிக் கொடுப்பாகும். இவரின் கருத்து மூலம் புலிகளின் குரல் மேலும் பலமடை யும். யுத்தக் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்து மேலும் உறுதியடையும். எனவே, இதற்கு எதிராக சகலரும் எழுச்சி பெறுவோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஜனவரியில் விவாதிக்க அரசாங்கம் தீர்மானம்



நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தேசத்துரோக கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எம்.பிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விரை வில் இந்த பிரேரணை சபா நாயகரிடம் கையளிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் விவாதிக்க எடுக்கப்பட உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டிடத்தின் குழு அறை ஒன்றில் நடைபெற்றது. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை விசாரணைக்குட் படுத்த வேண்டும் என கருஜயசூரிய எம்.பி. கூறியுள்ள கருத்து தொடர் பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த இந்த ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமை ச்சர் விமல் வீரவன்ச, கரு ஜயசூரிய வுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஜனாதிபதியையும் படை வீரர்களையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண் டனை வழங்கவே ஐ.தே.க. இவ் வாறு குற்றச்சாட்டு தெரிவித்துள் ளது.

தேசிய உடையணிந்து தேசத்து ரோக செயலில் ஈடுபட்டு வரும் கரு ஜயசூரியவின் முக மூடியை நாட்டு க்கு வெளிப் படுத்துவோம் என்றார்.

மேற்படி பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு விவாதத்திற்கு காலம் ஒதுக்க ப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...