30 மே, 2010

கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள்


கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக