31 அக்டோபர், 2010

இலங்கை தமிழர்கள் தாய்லாந்தில் கைது


பாங்காக்: தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் புலிகள் உடனான உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்த நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லா பகுதியில், போலீஸ் அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைத் தமிழர்கள் 114 பேர் பிடிபட்டனர். அவர்களில் சிலரிடம், முறையான பயண ஆவணங்கள் இருந்ததால் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் போக, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். விசா காலத்திற்குப் பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா சென்ற விமானங்களில் வெடிபொருட்கள் ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி: நாடு முழுவதும் உஷார்


வாஷிங்டன்: ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருட்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று முன்தினம் பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: இந்த இரண்டு பார்சல்களுமே ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. சிகாகோவில் உள்ள யூத வழிபாட்டு மையங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களை அடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சரக்கு விமானங்களை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உட்பட, மற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிபொருள் பார்சலை அனுப்பிய நபர் யார் என்பதை விசாரிக்கும் பணியில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அல் - குவைதா அமைப்புக்கு இந்த சதித் திட்டத்தில் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, அமெரிக்கா சென்ற பயணிகள் விமானத்தில் இதேபோல் வெடிபொருட்கள் வைத்திருந்தது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆபத்து தவிர்க்கப்பட்டது. அந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு, இந்த சம்பவங்களிலும் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,"வெடி பொருட்களை அனுப்பி வைத்தது, பயங்கரவாதிகள் தான் என, நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. யூத வழிபாட்டு மையங்களை தகர்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இது போன்ற ஆபத்துகளில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்திய பயணத்துக்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி ஜான் பிரென்னன் கூறியதாவது: வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால், அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்திய பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிபர், ஒரு நாட்டுக்கு பயணம் செய்கிறார் என்றால், அது தொடர்பான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்தான், பயணம் இறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிந்து விட்டன. இவ்வாறு ஜான் பிரென்னன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை சேர்ந்த 61 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தாய்லாந்தின் தென் மாகாணத்தில் உள் சொங்ஹாலா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின் போது 114 பேர் .கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தமது வீசா காலவதியான நிலையில் இபர்கள் கைது செய்யப்பட்டதாக சொங்காலா பிராந்திய குடிவரவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைவர் புட்திபோங் குசிக்குள் இதனை தெரிவித்துள்ளார்.

கைது அனைவரும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு சட்ட விரோதமாக தப்பி செல்வதற்கு முயற்சித்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதத்தில் மட்டும் தாய்லாந்து அதிகாரிகளினால் இப்பாரு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 128 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது

இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதன்போது அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்றத்துக்கான இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயலகள் தொடர்பான விசாரணை குறித்த பேச்சுகள் உள்ளனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அவர், இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான திறமைகள் விசேட பொறுப்புடமையாக மாறியுள்ளது என்னறார்.

இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை,ஒபாமாவின் மனித உரிமைகள் குறித்த விடயங்களில் ஏமாற்றமடைந்திருந்தாலும் தனது நிர்வாகத்தின் சிரேஷ்ட வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை கொழும்புக்கு அனுப்பி இலங்கையர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கும் ஆதரவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா வாழ் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் ஒபாமாவின் அடுத்த இருவருட கால பதவிக் காலத்தில் நெருங்கிய கவனம் செலுத்தப்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக உணர்கின்றனர் என பி.ஆர் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் தமது பக்கம் கவனம் செலுத்தாத காரணத்தால் இனியும் அத்தகைய உதவிகளை குடியரசுக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில்,

இவ்வருடம் அமெரிக்க தமிழர்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஒபாமா நிர்வாகத்தை ஆதரிப்பதற்கு காரணம் உண்டு. இலங்கையில் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு அது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஒபாமா நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்கள் சமீபத்தில் இலங்கை சென்று இலங்கை வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் பிரதேசங்களுக்கும் அவர்கள் சென்று குடிமக்களுடனும் தமிழ் தலைவர்களுடனும் உரையாடியுள்ளனர். இலங்கையை நோக்கி அமெரிக்காவின் கண்கள் திருப்பப்பட்டுள்ளதற்கான சாட்சியமாக ஒபாமாவின் நிர்வாகம் முனைப்புடன் நடந்து கொண்டுள்ளதால் நாம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டுச் சக்திகளின் விசாரணைகளை ஏற்கமாட்டோம்: அமைச்சர் பீரிஸ்

வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதக்ஷிகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டாது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது. அதேவேளை, இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது எனவும் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் இராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது., இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.

பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்பு நோக்குவது பொருத்தமாகாது.

நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது.சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது. பொருளாதார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதியளவு தெளிவுபடுத்தப்படவில்லை எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் தெரிவித்தள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிலக்கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் குறைவு விழிப்புணர்வு திட்டங்களால் நன்மை ஐ.நாஅறிக்கை

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிலக் கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகார இணைப்பகம் தெரிவித்துள்ளது.

ர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அபாய விழிப்புணர்வுத் திட்டங்களால் இழப்புகளைக் குறைக்க முடிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மாதாந்தம் 172 பேர் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்போடியாவில் 65 பேர் மாதாந்தம் நிலக் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் கடந்த 12 மாதங்களில் சராசரியாக மூவரே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடிகளால் 18 சிறுவர் உட்பட 38 பேர் கடந்த 12 மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.

கண்ணிவெடி அபாயம் தொடர்பில் இலங்கையின் வட பகுதி மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80 வீதமானவர்கள் கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். ஆஸ்பத்திரி இரத்த வங்கிக்கு படையினரே பெருமளவு பங்களிப்பு மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

படையினர் வெறுமனே சண் டையிடுபவர்களாக மட்டும் இல்லாது நாட்டின் சமூக பொரு ளாதார செயல்பாடுகளிலும் ஈடு பட்டுள்ளார்கள். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தின் பெரும் பகுதித் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் படையினர் இருந்து வருகின்றார்கள்.

மேற்கண்டவாறு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நகரத்தில் அமைந் துள்ள பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஆதார வைத்தியசாலை களுக்கு படுக்கைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய படைகளின் கட்டளைத் தளபதி;

அவுஸ்திரேலியாவில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிதியம் என்னுடன் கொழும்பில் வைத்து கதைத்தபோது குறிப்பிட்டார்கள் நாங்கள் கொழும்பில் பல்வேறு செயல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இந்த வகையில் யாழ். மாவட்டத்திற்கும் மருத்துவ துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் அது சம்பந்தமான அறிக்கைகளை தரும்படி கேட்டு இருந்தார்கள்.

நான் யாழ். மாவட்ட பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது அவர் இதன் தேவைகளை எனக்கு தந்ததன் அடிப்படையில் இன்று இந்த தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தாக உள்ளது.

படையினரைப் பொறுத்த வரையில் பல்வேறு சமூகத்தேவைகளையும் நிறைவு செய்வதில் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இந்த வகையில் மீள் குடியேற்றம் இடம் பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கிணறுகளை துப்புரவு செய்தும் பாடசாலைகளில் இடி பாடுகளை அகற்றியும் கட்டடங்களை நிர்மாணித்தும் செயல்பட்டு வருகின்றார்கள்.

மக்களின் அடிப்படைத் தேவையான வீடுகளைக் கூட தம்மாலான வசதிக்கு ஏற்ப கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணித்துக் கொடுத்தும் வருகின்றார்கள். நான் 1980 ஆம் ஆண்டு படையில் இணைந்து 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் திற்கு வந்தேன். அன்று இருந்த யாழ்ப்பாணத்தையும் இன்று இருக்கும் யாழ்ப்பாணத்தையும் மீள் நினைவுபடுத்தி பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் கட்ட ளைத் தளபதியாக இன்று இருக்கும் நிலை யில் என்னாலான உதவிகளை செய்ய முயற்சிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திரசிகிச்சை படுக்கைகளும் 15 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திர சிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன.

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திர சிகிச்சைப் படுக்கைகள் வழங்கப்பட்டதுடன் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ் வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பயிற்சி தாதிய அலுவலர்கள் உட்பட மற்றும் படைகளின் கட்டளைத்தளபதிகள் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்
மேலும் இங்கே தொடர்க...

மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம் பற்றி ஆராய மூவர் குழு


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ள கைதிகளின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்ரர் யாபா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

மரண தண்டனை 2002 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டதிலிருந்து பெருமளவு கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக அமைச்சர் குணசேகர நேற்று முன்தினம் இந்தக் குழுவை நியமித்ததாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோகர் எம். எஸ். சதீஸ்குமார் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, வழக்குகள் தொடரப் படாமலும், எதுவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலும், சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட் டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென சட்டத்தரணிகள் பத்து பேர் கொண்ட குழுவொன்றை அமைச்சர் குணசேகர நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுமென்றும் சதீஸ்குமார் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த சீனப் பிரதமரை சந்தித்து பேச ஏற்பாடு

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ‘எக்ஸ்போ 2010’ இல் கலந்துகொள்ள சீனா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனப் பிரதமர் வென்ஜியாவோ வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன் னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் பற்றி யும், இருதரப்பு உறவுகள் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படு மென ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் நேற்று முன்தினம் சீனாவுக்குப் பயணமாகியிருந்தார்.

நாளைய தினம் நாடு திரும்ப முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாள ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

72 தென்பகுதி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் வரவேற்பு முக்கிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற 72 தென்பகுதி மாணவர் களுக்கு சிரேஷ்ட மாணவர்களால் வரவேற் பளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான தென் பகுதி மாணவர்கள் யாழ். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியிருப்பதாக யாழ். சிறுவர் விவகார சிரேஷ்ட இணைப்பாளர் மேஜர் லால் நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் சிறந்த வரவேற்பளித்துள்ளனர். பகிடிவதைக்கு இவர்கள் உட்படுத்தப்படவில்லை.

விஞ்ஞான பீடம், சட்டபீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், வர்த்தக மற்றும் நிதிப்பீடம் என அனைத்துப் பீடங்களுக்கும் தென்பகுதியிலிருந்து மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். சட்டபீட சிரேஷ்ட மாணவர்கள் தென்பகுதி புதிய மாணவர்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

முஸ்லிம்களையும் உள்ளடக்கிய 72 தென்பகுதி மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை மேற்கில் நாளை மீள்குடியேற்றம்; எஞ்சிய பகுதிகளில் மிதிவெடி அகற்றல் துரிதம்


முல்லைத்தீவு மேற்கு மற்றும் மடவாழ சிங்கன்குளம் பிரிவுகளில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் நாளை திங்கட்கிழமை மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்துமாறும், கமத்தொழில் காணிகளை விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு உட னடியாக பெற்றுக்கொடுக்குமாறும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, சிவநகர், மந்துவில், மல்லிகைத்தீவு, ஆனந்த புரம் போன்ற ஆறு கிராம சேவகர் பிரிவுகளிளும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் இப்பகுதிகளிலும் மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

எனினும், இப்பகுதியிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் அறிவித்திருப் பதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டி யிருந்தன. இது உண்மைக்கு புறம்பானது என முல்லைத்தீவு அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி விவசாயிகள் தமக்கு விவசாய நடவடிக்கைக்காக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். ஏக்கருக்கு தலா 4000 ரூபா வீதம் அவர் களுக்கு உதவித் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முரளிதரன் உறுதியளித்தார்.

விவசாயிகளின் விளை நிலங்கள் கால்நடைகளினால் அழிக்கப்படுவதாலும், வேலி அமைக்கத் தேவையான உபகர ணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் விவசாயிகள் பிரதியமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்தனர்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்க வும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்ததுடன், மேலும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் எஞ்சியுள்ள 21,000 பேரையும் விரைவாக மீளக்குடியமர்த்து வதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறும் பிரதியமைச்சர் முரளிதரன் அதிகாரிகளுக்கு பணித்தார்.

வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமம் மற்றும் கிளிநொச்சி பகுதிக்கும் பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொரிய மொழி எழுத்துமூலப் பரீட்சை: மோசடியில் ஈடுபட முயன்ற சிலர் மண்டபத்திலிருந்து வெளியேற்றம்


தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் கொரிய மொழி எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் மோசடி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கொழும்பில் 13 இடங்களில் 493 மண்டபங்களில் கொரிய மொழி எழுத்துப் பரீட்சைகள் நேற்று நடைபெற்றன. இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெறுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எட்டாவது தடவையாகவும் நடத்தும் இந்தப் பரீட்சைக்கு முதல் முறையாக 700 பொலிஸாரின் உதவி பெறப் பட்டுள்ளது. செலியூலர் தொலைபேசிகள் ஊடாக குறுந்தகவல்கள் அனுப்பி பரீட்சை எழுதுவதற்கு உதவி செய்வதாக சில குழுவினர் சிம்கார்ட்டுகளையும் சுமார் 25,000 ரூபா முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக பரீட்சை மண்டபத்துக்குள் செலியூலர் தொலை பேசிகளைக் கொண்டு வரவேண்டாம் என ஏற்கனவே பணியகம் அறிவித்திருந்தது. இதனை முறியடிப் பதற்காகவே 700 பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டது.

சகல பரீட்சை நிலையங்களிலும் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடு பட்டதன் காரணமாக உள்ளாடைகளுக் குள்ளும், முதுகிலும், காலணிகளுக் குள்ளும் கையடக்கத் தொலைபேசிகள், காகிதத் துண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்கப் படவில்லை. மிகவும் பாதுகாப்பாக பரீட்சை மண்டபத்தினுள் சகலரும் பரீட்சைக்குத் தோற்றும் விதத்தில் பரீட்சையை திறம்பட நடத்தியுள்ளதன் மூலம் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரித்து வழங்கும் வாய்ப்பு இருக்கிறது என தென் கொரிய மனிதவள மேம்பாட்டுப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ஸ்டெஜுன்க் இல் சுங்க் தெரிவித்தார்.

குளறுபடிகள், மோசடிகள் இன்றி சகலரும் பங்குபற்றக் கூடிய விதத்தில் பரீட்சையை ஒழுங்கு செய்த பணியகத்துக்கும் தென் கொரிய தூதரகத்துக்கும், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக பொலிஸாருக்கும் பரீட்சார்த்திகள் நன்றிகளை தெரிவித்தனர்.

இன்றும் கொரிய மொழி எழுத்து மூலப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழகங்களில்;: சட்டத்துக்கு மாறாக செயற்பட்டால் கடும் நடவடிக்கை

பல்கலைக்கழக விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வெளியாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்களின் விடுதி கடந்த இரண்டு வருடங்களாக ஆண் மாணவர்களால் பலவந்தமாகப் பயன் படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி. மாணவர் களின் தலையீட்டைத் தொடர்ந்து பல் கலைக்கழக நிர்வாகமும் விடுதியை ஆண் மாணவர்களுக்கு வழங்கிவிட்டது. அவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி. வெளி மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது.

அவ்வாறு அனுப்பப் பட்ட வெளி மாணவர்க ளில் சிலர் பல்கலைக் கழகத்தை முடித்து வெளியேறியவர்கள், சிலர் பல்கலைக்கழகத் துக்குத் தகுதி பெறாதவர்கள் இவர்களாலேயே பல்கலைக்கழகம் நெறிப்படுத்தப்பட்டது. இந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு நீக்கிவிட்டோம். தற்பொழுது பல்கலைக் கழகம் 90 வீதம் சரியான முறையில் செயற்படுகிறது.

இதுவரை காலமும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப் படுகின்ற போது, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. இனிமேல் அவ்வாறில்லை சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படும் மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் உயர் கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்துவோம்.

தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடித்துவிடக்கூடாதென அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

30 அக்டோபர், 2010

போலி ஆவணங்களுடன் இலங்கை செல்ல முயன்றவர் சென்னையில் கைது

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை செல்ல முயன்றவர் மற்றும் அவருக்கு உதவிய முகவர் ஆகியோரை சென்னை பொலிசார் கைது செய்தனர். இவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சிவிதரன்(29). கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் சென்னைக்கு வந்தார். விசா காலம் முடிந்தும், அவர் சென்னையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் இலங்கை செல்ல சென்னை விமானம் நிலையம் சென்றார்.

அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்த போது, காலக்கெடு முடிந்து, 'ஓவர் ஸ்டே' முறையில் சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், அவரிடம் விசாரித்ததில் சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற முகவர் தான் போலி ஆவணங்கள் தயார் செய்து இலங்கை செல்ல உதவினார் எனக் கூறினார்.

இதையடுத்து, வழியனுப்ப விமான நிலையத்தில் காத்திருந்த ஜெயக்குமாரை, விமான நிலையப் பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கு புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹிட்லரின் ஆட்சியையே இலங்கை அரசு இன்று கடைப்பிடிக்கின்றது : மங்கள

சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு லட்சம் பேரைத் திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"1933ஆம் ஆண்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் ஹிட்லர் அரச அதிகாரங்களைக் கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதிபதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதியோடு அதற்கு இரண்டு மாதம் பூர்த்தியாகின்றது. அன்றும் நாடளாவிய ரீதியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவுகூருவதுடன் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேகாவை மீட்டெடுப்போம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டன் - டுபாய் விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பிரித்தானியா மற்றும் டுபாய் விமான நிலையங்களில் நேற்று வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு சரக்கு விமானங்களிலேயே இவ்வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யேமன் நாட்டிலிருந்தே இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.

அமெரிக்க சிக்காகோ நகருக்குச் செல்லும் இவ்விரு விமானங்களும் பிரித்தானியா மற்றும் டுபாயிலும் தரை இறங்கியுள்ளன.

பிரித்தானிய புலனாய்வு சேவையான எம்.ஐ6 இற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவை இரண்டும் அச்சிடும் உபகரணத்தில் (பிரிண்டர்) உபயோகிக்கப்படும் ' பிரிண்டர் காட்ரிஜ் ' இல் வைத்து பொதி செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவிலுள்ள யூத மத வழிபாட்டுத்தலங்களை குறி வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அல்-கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தேர்தல்: ஆட்சேப மனு நிராகரிப்பு


2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்யுமாறு கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

மேற்படி மனு பிரதம நீதியரசர் அசோக த சில்வா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிராணி ஏ. பண்டாரநாயக்க, கே. ஸ்ரீபவன், பி.ஏ. தயாரத்ன, எஸ்.ஐ. இமாம் ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் நஷ்டஈடு எதுவும் இன்றி மனுவை நிராகரிப்பதாக அறிவித்தது.

29 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை பிரதம நீதியரசர் அசோக த சில்வா திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஐந்து பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மனுதாரர் முன்வைத்துள்ள நிவாரணங்கள் சட்டபூர்வமற்றவை. அவற்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது. மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவில்லை.

தேர்தல் மனுவொன்று பூர்த்தி செய்ய வேண்டிய சட்ட தேவைகளை இந்த மனு நிறைவு செய்யவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை ஆகிய பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

தனக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவு வாக்குகள் கிடைக்காமல் போனதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. மனுதாரர் குறிப்பிடுவது போல தேர்தலில் முறைகேடு நடைபெற்றால் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்.

ஆனால் தேர்தலை ரத்து செய்யுமாறு மனுதாரர் கோரவில்லை. கோராத நிவாரணமொன்றை நீதிமன்றத்தினால் வழங்க முடியாது எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜனாதிபதி அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டிருந்தார்.

ஆனால் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினருடன் கூட்டம் நடத்த முடியும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டதாக கூறப்பட்ட போதும் தனக்கு ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களின் அல்லது கட்சிகளின் பெயர்களை முன்வைக்க

அவர் தவறிவிட்டதாகவும் அதில் கூறப் பட்டது. இதனடிப்படையில் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஜனாதிபதித் தேர்தல் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஐ.ம.சு. முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி யீட்டினார். சரத் பொன்சேகா 40.15 வீத வாக்குகளையும் பெற்றார்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முறை கேடாக நடைபெற்றதாக கூறி சரத் பொன் சேகா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் ஜனாதிபதி வேட்பாளர் களான மஹிந்த ராஜபக்ஷ, போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் ஆணையாளர், சரத் கோங்கஹகே, ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக், சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இர ண்டாவது தடவையாகவும் நியமிக்கப் படுவதை ரத்துச் செய்து தன்னை முறை யாகத் தெரிவான ஜனாதிபதி என அறி விக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இந்த மனு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடங்களான பிரதி வாதிகள் பூர்வாங்க ஆட்சேபனை முன் வைத்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக கடந்த திங்கட் கிழமை எழுத்து மூல ஆட்சேபனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ். விஜேசிங்க ஆட்சேபனையை முன்வைத்தார்.

சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனு சட்டவிரோதமானது எனவும் இதனை விசாரணைக்கு எடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்குமாறும் ஜனாதிபதியின் ஆட்சேபனையில் குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முறைகேடானது என்று மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ள போதும் லஞ்சம் பெறல், அச்சுறுத்தல், போன்றவற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

தேர்தல் ஆணையாளர் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் பிரசாத் டெப் ஆஜரானதோடு ஏனைய பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். எல். குணசேகர ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் சில்வா காமினி மாரப்பன ஆகியோர் ஆஜரானார்கள்
மேலும் இங்கே தொடர்க...

கொரிய மொழிப் பரீட்சை இன்று; குறுந்தகவல் மூலம் மோசடி முயற்சி ஒரு சிம்காட்டின் விலை ரூ. 25,000க்கு மேல்

தென்கொரிய வேலைவாய்ப்புக்காக இன்றும் நாளையும் நடத்தப்படும் எழுத்து மூலமான பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு இரகசியமாக குறுந்தகவல் அனுப்புவதற்காக 25,000 ரூபாவுக்கும் அதிக தொகையில் பெருந்தொகையான சிம்கார்ட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இம்முறை சுமார் 700 பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இன்றும் நாளையும் கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் 493 பரீட்சை மண்டபங்களில் 29,300 பேர் கொரிய பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

493 மண்டபங்களிலும் 493 பொலிஸார் கடமையில் ஈடுபடுவர். உள்நுழைவாயிலில் 15 பேர் வீதம் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். பரீட்சை மண்டபத்துக்குள் செல்லும் பரீட்சார்த்தி முழுமையான சோதனைக்குட்படுத்தப்படுவார். கையடக்க தொலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.

காலை 8.30 மணி முதல் 11.45 மணிவரை நடைபெறும் இப்பரீட்சையின் போது கடமையிலீடுபட்டிருக்கும் பொலிஸாரும் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸாரும் காலை 7.30க்கே

பரீட்சை நிலையங்களுக்கு கட மைக்கு வருவர். பரீட்சையின் போது மோசடி யிலீடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாருக்கு பணியகம் பரிசுகளையும் வழங்கும் என பணியகத்தின் தலைவர் தெரி வித்தார்.

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப் புக்காக ஆட்களை அனுப்பும் நாடு களில் 2004 ஆம் ஆண்டு இலங்கை 13 ஆவது இடத்தில் இருந்தது.

இப்போது மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த இடத்திலிருந்து முதலாவது இட த்தை அடைவதே எமது இலக்கு.

மோசடியற்ற விதத்தில் வேலை வாய்ப் புக்காக ஆட்களை அனுப் பும் போது, எமக்கு முதல் இட த்தை வெகுவிரைவில் எட்ட முடி யும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஷானாவின் கருணை மனு விவகாரம்: சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய் திருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிகரட்,மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் சிகரட் மற்றும் மதுபானங்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள் ளன. அதன்படி விற்பனை செய்யப் படுகின்ற அனைத்து வகை சாராயத் தினதும் விலைகள் அதிகரிக்கப்பட் டுள்ளன.

சாராயத்தின் விலைகள் 15 முதல் 20 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஒரு போத்தல் பியரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அனைத்து வகை யான சிகரட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட்டின் விலைகள் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு; ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்


ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் யானைப் பாதுகாப்புக்கு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நேற்று மு.ப. 11.00 மணியளவில் அஷ்ரப் நகரில் யானை வேலி அமைக்கப்படும் இடத்தில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான அஷ்ரப் நகர் மக்கள் கலந்து கொண்டனர். எனி னும், பொலிஸ் பாதுகாப்புடன் யானை வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஹைகோப் ஆயுத ஊழல்: இரண்டாவது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஹைகோப் நிறுவன ஆயுத ஊழல் வழக்கில் 2வது பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் ஹை கோப் நிறுவ னத்தின் ஊடாக ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக கூறி சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டாம் பிரதிவாதியாகிய ஹைகோப் நிறுவன பணிப்பாளர் வெலிங்டன் டீ ஹோட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

தமது குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாகிய தனுன இன்னும் தலைமறைவாகியுள்ளார். சரத் பொன்சேகா இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர சரத் பொன்சேகாவின் உதவியாளராக செயற்பட்ட சேனக சில்வாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சேனக டி சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்.

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப் புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர்.

இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதி ர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி-

தமிழர்களின் வரலாற்று சான்றுடைய திருகோணமலையின் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தினை பௌத்த பிரதேசமாக காட்டும் முனைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன்படி தனது தாயாரின் ஈமக்கிரியைக்காக இராவணனால் உருவான கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் புதிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணிக்கவென நிலம் ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தில் சிறிய பௌத்த விகாரையொன்று தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதேசசபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்டக்கூடாது என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. தற்போது பிரதேச சபையிடமிருந்தே கன்னியா பறிபோய் விட்டது. திருகோணமலை அரசஅதிபர் கன்னியாவுக்கு விஜயம் செய்து அங்கு பணிபுரியும் பிரதேச சபை ஊழியர்களின் சேவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதுடன், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கன்னியா சம்பந்தமான வரலாற்றைக் கூறும் விளம்பர பலகையையும் அகற்றி தனது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியானது பிரதேசசபைக்கு சொந்தமானது அல்ல. அது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது. பிரதேச சபையினர் உண்மைக்கு புறம்பான வரலாறு எழுதிய பதாதைகளை அங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இதனால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதில் எழுதியிருந்த வரலாறு உண்மைக்கு புறம்பானதல்ல. அதில் கன்னியா வெந்நீர் ஊற்று இராவணனால் என்ன காரணத்துக்காக உருவாக்கப்பட்டது என்றே தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

29 அக்டோபர், 2010

சொல்ஹெய்ம் புலிகளின் நண்பர்:சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி

போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசும் நோர்வே இவ்வாறு செயற்படுவதா? போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நேர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. சிங்கள தமிழ் மக்களின் எண்ணங்களை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புலிகளின் நண்பராகவே செயற்பட்டார். புலிகள் தவறு செய்கின்றனர் என்பதனை பவர் என்பவர் உணர்ந்தார். ஆனால் எரிக் சொல்ஹெய்ம் அவ்வாறு இல்லை. எத்தியோப்பியா இஸ்ரேல் விடயங்களில் நோர்வே புறந்தள்ளப்பட்டது. நேபாளத்துக்கு அனுமதிக்கப்படவுமில்லை. ஆனால் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மட்டத்தில் நோர்வேயுடன் தொடர்புகள் பேணப்படுவதாக தெரிகின்றது.

அரச சேவை சுயாதீனமாதாக இயங்கவேண்டும். அரச ஊழியர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். அந்த வகையில் 18 ஆவது திருத்தச் சட்டம் சிறந்தது. காரணம் அனைத்து விடயங்களும் இறுதியாக ஜனாதிபதியிடம் செல்கின்றது. எனவே மக்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை நோக்கி விரல் நீட்டும் நிலைமை வரலாம். அதாவது அவர் பொறுப்புள்ளவராக இருக்கின்றார். இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படையினர் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டு நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். அவர்களின் பிள்ளைகள் பற்றியாவது சிந்திக்கவேண்டும். புலிகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நட்டஈடுகள் அவசியமாகும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இருவேறுபட்ட கொள்கைகளை ஐ.நா. சபை கடைப்பிடிக்கின்றது:கெஹெலிய

ஐக்கிய நாடுகள் சபையானது பிரிட்டன் மற்றும் எமது நாடு தொடர்பில் இரு வேறுபட்ட கொள்கைகளை கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.எமது நாட்டின் நற்பெயரை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் வழங்க வேண்டிய தேவை இல்லையென்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி எமது நாட்டுக்கு எதிராக காட்சிகளை ஒளிபரப்பியது. இது பொய்யானது என்றும் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் உண்மைத் தன்மையை நிரூபிக்க முடியாமல் போனது. அக் கட்சிகளுக்கு எதிராக அன்று நாம் சவால் விடுத்ததன் காரணமாகவே எமக்கு எதிராக தொடர்ந்து காண்பிக்கப்படவிருந்த இவ்வாறான காட்சிகளை சனல் 4 கைவிட்டது. இதன் மூலம் எமக்கு எதிரான பொய்ப் பிரசாரம் முறியடிக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிலையான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. நேர்மை, உண்மைத் தன்மை எம்மிடம் உள்ளது. எனவே வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு பணம் கொடுத்து நாட்டின் நற்பெயரை பாதுகாக்க அவசியம் இல்லை. அதேவேளை நாட்டின் நற்பெயருக்கு எதிராக வெளிநாடுகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். ஒரு சிறு குழுவினர் பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் மாணவர்களை இரையாக்க இடமளிக்க முடியாது.

மாணவர்கள் தாக்கப்பட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம். அம் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம். அமைச்சரொருவர் இத் தாக்குதலை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நிராகரிக்கின்றேன். ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாகாது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அடாவடித்தனங்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.

ஐ.நா.வின் இரட்டை வேடம்

பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட செய்திகள் தொடர்பில் மௌனம் காக்கும் ஐ.நா. சபை எமது நாடு தொடர்பில் வேறு கொள்கையை கடைபிடிக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான இரட்டை வேடம் ஏன் என்பது புரியவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில்!



விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த அடுத்தகட்ட விசாரணை டில்லியில் நடைபெறும் என்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்த விசாரணையை பயங்கரவாத மேற்படி நீதிமன்றம் நடத்தி வருகிறது. சென்னையில் நேற்று நடந்த இந்த விசாரணையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசுத் தரப்பில், சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கும்பகோணம் டிஎஸ்பி இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சென்னை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப், திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் ஆஜராயினர்.

அவர்களை வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம், வைகோ,

"சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10(ஏ) (1)இன் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்தீர்களா?"

சந்திரசேகரன்,

"எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை"

நீதிபதி,

“விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கிறதா, அழிக்கப்பட்டு விட்டதா?" என்று கேட்டார்.

அதற்கு வைகோ,

"அவர்களை எக்காலத்திலும் முற்றிலும் அழிக்க முடியாது, அவர்களின் லட்சியத்தை அவர்கள் வெல்வார்கள். இந்தியாவில் அவர்களின் அமைப்பு இல்லை." என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் முதலாந்திகதி புதுடில்லியில் நடைபெறும் என்று தெரிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவநேசன் என்பவர், தமது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனநாயக விரும்பிகளுக்கு ஐ.தே.க. அழைப்பு

ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் என அனைத்தும் இன்றைய அரசாங்கத்தினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தி அச்சமில்லா சூழலையும் மக்களை வாழ வைக்கின்ற நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கென ஆரம்பித்துள்ள எமது பயணத்தில் ஜனநாயக விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என சகலரும் இன மத கட்சி பேதமின்றி இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டைப் பாதுகாப்பதற்கும் அதேநேரம் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமத்துக்கான பயணம் நாளை சனிக்கிழமை ஹொரணையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பியுமான கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கான பலமும் தைரியமும் கிராமங்களிலேயே தங்கியுள்ளது. எனவே எமது முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஜே. ஆர். ஜயவர்த்தனவின் போதனைக்கமைய கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கே செல்ல வேண்டும். அதனையே நாம் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்.

இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் எமது இந்த செயற்றிட்டம் மிகவும் சவால் மிக்கதாகவே இருக்கின்றது. எமக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான ஏதுக்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் அதுபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அரசாங்கத்திடமிருந்து எத்தகைய அச்சுறுத்தல்கள், இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் நாம் பின்னிற்கப் போவதில்லை.

சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் அவர் இந்நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்டவர். எனவே இந்நாட்டை மீட்ட இராணுவ வீரர் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றது. இன்று அவரது நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே சரத் பொன்சேகா விடயத்தில் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கின்ற சகல தரப்பினரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

இன்று பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திராணியற்ற அரசாங்கம் குண்டர்களைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. விலைவாசி அதிகரிப்பு, வருமானமின்மை மற்றும் வாழ்க்கைச் சுமை ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அச்சமில்லாத சூழலில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்றது.

அந்த வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கிராமத்துக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மற்றும் நல்லாட்சி மலர வேண்டுமானால் ஜனநாயக விரும்பிகள் சகலரும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 343 ஆக உயர்வு






ஜகார்த்தா, அக். 28: இந்தோனேசியாவில் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 343 ஆக உயர்ந்தது.

மெந்தாவி தீவில் திங்கள்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் எழுந்து பலர் உயிரிழந்தனர். சாவு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இன்னும் 338 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியை அடுத்து பல கோடி மதிப்புள்ள எச்சரிக்கை கருவிகள் சுமத்ரா தீவுப் பகுதிகளில் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்காததால் கருவிகள் செயலிழந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 5 பேர் காயம்


வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் வியாழக்கிழமை காலை 8.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 5 பேர் காயமடைந்தனர்.

இது ரிக்டர் அளவுகோளில் 5.7 அலகுகளாக பதிவானது. பாகிஸ்தான் நாட்டின் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரியவந்துளளது.

பெஷாவர், மர்தான், நெüஷெரா, ஹரிப்பூர், ஸ்வாட், திர், பலகோட், மான்ஷெரா, அபோட்டா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும், தஜிகிஸ்தானுக்கும் இடையே 280 கிலோமீட்டர் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி; 52 குடும்பங்களே மிகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவியேற்பு; முன்னாள் பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப-குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் இரண்டாவது பதவி ஏற்பு வைபவ ஏற்பாடுகளை முன்னெ டுக்க முன்னாள் பிரதமர் அமைச் சர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள் ளது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன, சம்பிய ரணவக்க, பந்துல குணவர்தன, டளஸ் அலஹப் பெரும ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இது தவிர பல உபகுழுக்க ளும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமை ச்சர் டளஸ் அலஹப் பெரும கூறி னார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு


சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக அமைதியற்ற சூழல்; கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு


பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தினுள் விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எந்த ஆசிரியரும் தனது மாணவனால் தாக்கப்படுவதை அச்சுறுத்தப்படுவதை விரும்புவதில்லை. இதே போன்று எந்தப் பெற்றோரும் தனது பிள்ளைகள் இவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புவதில்லை.

பெற்றோர் இன்று கண்ணீர் விடுகின்றனர். குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களின் செயலினால் முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பும் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டாது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டமை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மாணவர் தாக்கப்பட்டாராயின் அது தொடர்பாக முறையிடலாம். அல்லது அதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் பின்பற்றலாம் என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோச னைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு (ழிழிஞிவி) அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

28 அக்டோபர், 2010

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றிவாளியா என சென்னை உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பு வழங்க உள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் 24 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌ந்த கொலை வழ‌க்‌கி‌‌ல் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு செ‌ன்னை ‌எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நட‌ந்து வ‌ந்தது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ஆஜராகாததா‌ல் தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளியாக ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.

ச‌மீப‌த்த‌ி‌ல் டெ‌ல்‌லி வ‌ந்த ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு‌ தொடர‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கின் ‌விசா‌ரணை‌ நட‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது இல‌‌ங்கை செ‌ன்று ‌வி‌ட்டா‌ர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா‌.

இ‌ந்‌நிலை‌யி‌ல்இ தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளி என அ‌றி‌வி‌த்ததை ‌‌நீ‌க்க‌க் கோ‌‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா மனு‌த் தா‌க்க‌‌ல் செ‌‌ய்தா‌ர்.

இ‌ந்த மனு‌ ‌மீதான ‌விசாரணை இ‌ன்று முடி‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து ‌தீ‌ர்‌ப்பை நவ‌ம்ப‌ர் 2ஆ‌ம் தே‌தி‌க்கு ‌நீ‌திப‌தி அ‌க்ப‌ல் அ‌லி த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளா‌ர்
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரங்கள் கையளிப்பு

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தலைமையாகக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக மன்னார் சுகவாழ்வு மன்றத்தினால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் இன்று காலை வழங்கிவைக்கப்பட்டது.

கிராம சேவையாளர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

சுகவாழ்வு மன்றத்தின் இயக்குனர் ஜீவன் அமரசிங்க தலைமையில், சுகவாழ்வு மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் டி.எஸ்.பல்பொல மற்றும் சுகவாழ்வு மன்ற அதிகாரி உமா ராஜலஷ்மி ஆகியோர் மாந்தை மேற்குப் பகுதிக்குச் சென்று வழங்கி வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரிகா குமாரதுங்க மீதான தற்கொலை தாக்குதல் :எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கில் பிரதான எதிரியான வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம். பி.டி. வராவெல இந்தத் தீர்ப்பினை நேற்று வழங்கினார்.

கொழும்பு நகரசபை மைதானத்தில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்க காயமடைந்ததுடன் 27 பேர் கொல்லப்பட்டும், மேலும் 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வருடங்களாக விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் போது எதிரி குற்றத்தினை ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் எதிரி மீது 28 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டணை விதிக்கப்பட்டது. சம்பவத்தின் போது தற்கொலை குண்டு தாக்குதலினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதி தேர்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அத்துடன் குண்டை வெடிக்கவைத்து பலரின் உயிரை காவு கொண்டமைக்காகவே இந்தத் தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கருத்துடன் பிரித்தானிய பிரதமர் உடன்படுகின்றாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தார்.

இலங்கையில் என்ன நடந்தது என்பதை அறிய எமக்கு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணைஅவசியம். செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அவை குறித்து நாம் பார்க்கிறோம்.ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் கூறியவை சரியா என்பதை உறுதி செய்ய ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை அங்கு அவசியம் என்றார் பிரிட்டிஷ் பிரதமர். இந்த விடயம் குறித்து பி.பி.சி.யிடம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவோண் மக்டொனால்ட்டிடம், இந்த விடயத்தில் பிரித்தானியா தான் அங்கம் வகிக்கும் .நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் முரணாக இருக்கும் நிலையில் அது சிரமம் என்று கூறினார்.

அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விசாரணையின் மூலம் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் அந்த விசாரணை பக்கச்சார்பற்ற வகையில் நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் சிவோண் மக்டொனால்ட் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சந்திரிகா கொலை முயற்சி : குற்றவாளிக்கு கடூழிய சிறை


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தின் போது மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற் றச்சாட்டுகளுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இலங்கேஸ்வரன் என்பவருக்கே 30 வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம்.பி.டி. வராவெள, வழங்கினார்.

சம்பவத்தின் போது தற்கொலைக் குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப் பட்டிருக்கும். இதனால் தேர்தல் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதி பதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

அத்துடன், கொலை முயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிலிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொள்ள செய்தமையைக் கொண்டே குற்றவாளிக்கு இந்த தண்ட னையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

2000 இரத்தினக் கற்களை வயிற்றில் கடத்திய இலங்கையர் சென்னையில் கைது

இரண்டாயிரம் நவரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கடத்திச் சென்ற இலங்கை நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமது சபீக் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை சோதனை செய்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு ஸ்கான் செய்யப்பட்டது. அதில் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து அவரிடம் இருந்து நவரத்தின கற்கள் மீற்கப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரம் நவரத்தின கற்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாக்கிட் தெரிவித்தார். நவரத்தின கற்களை கடத்தி வர தனக்கு இந்திய மதிப்பின்படி 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சிலர் கூறியதாக முகமது சபீக் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகமது சபீக் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என இந்திய செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மலசலக் குழியிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு


பிறந்து பத்து நாட்களேயான சிசு ஒன்று பாடசாலை புத்தகப் பையொன்றில் போட்டு மலசலக் குழியொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (27) காலையில் வெலிமட லந்தேகம பஹலகபில வெல என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்கு அருகாமையிலிருந்த மலசல குழியொன்றுக்குள் இருந்து இந்த ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை வேளை 5.30 மணியளவில் குழந்தையொன்றின் அழுகுரல் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்துள்ளது. அதனையடுத்து பிரதேசவாசிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு மலசலக்குழியொன்றுக்கு அருகாமையில் அந்த சத்தம் வந்துள்ளது. அதனையடுத்து தேடுதல் நடத்திய கிராம வாசிகள் மலசல குழியொன்றுக்குள் புத்தக பையொன்றை கண்டு எடுத்துள்ளனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாகவுள்ளது. வெலிமட பொலிஸார் குழந்தையின் தாயைத்தேடி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம் தொழிற்சாலைகள் அமைக்கும் இடங்களை பார்வையிடுவர்


வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக் கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

முதலீட்டாளர் குழுவினருடன், இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றாடல் திணைக்கள அதிகாரிகளும் இன்று வவுனியா செல்லவுள்ளனர். வவுனியா நகர், வவுனியா வடக்கு, செட்டிக்குளம் மற்றும் நெலுங்குளம் பகுதிகளுக்கே இந்த முதலீட்டாளர்கள் நேரில் சென்று காணிகளை அடையாளங் காணவுள்ளனர்.

சுற்றாடல் மற்றும் வனவள திணைக்களங் களின் அறிக்கை பெறப்பட்டவுடன் சில வாரங்களில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்க மேற்படி முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழ். கிளிநொச்சி பகுதிகளிலும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

25 கிலோ கஞ்சா கலந்த பாபுல் ஆட்டுப்பட்டித் தெருவில் கண்டுபிடிப்பு


25 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த பாபுல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கஞ்சா கலந்த புகையிலை என்பன கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இது அண்மைக் காலத்தில் பிடிபட்ட அதிகூடுதலான பாபுல் தொகையாகும்.

ஆட்டுப்பட்டித் தெருவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கஞ்சா கலந்த பாபுல் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களி டமிருந்து கிடைத்த தகவலின்படி ஆட்டிப்பட்டித் தெருவில் உள்ள இரு களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த பாபுல், பாபுல் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தருவிக் கப்பட்ட 20 இலட்சம் பெறுமதி யான கஞ்சா கலந்து புகையிலை, பல்வேறு போதை ஏற்படுத்தும் பொருட்கள் என்பனவும் மீட்கப் பட்டதாக பொலிஸார் கூறினர்

சந்தேக நபர்கள் நேற்று மாளி காகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் சுனாமி, எரிமலை வெடிப்பு 180 பலி: 500க்கு மேல் மாயம்


இந்தோனேசியாவின் ஜாவாத் தீவுகளில் ஏற்பட்ட சுனாமித் தாக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களால் 180 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் 500 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதித் தீவான மெத்தாவியில் திங்கட்கிழமை 7.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தில் 10 கிராமங்கள் முற் றாகச் சேதமடைந்துள்ளதுடன் 154 பேர் கொல்லப்பட்டனர். 10 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அதே நேரம் ஜாவாத் தீவுகளிலுள்ள மெராப்பி எரி மலை தீக் குழம்பை கக்கியதில் அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுனாமித் தாக்கத்துக்குள்ளான பகுதிக் கடல் கொந் தளிப்புடன் காணப்படுவதால் நேற்றைய தினமே மீட்புப் பணியாளர்கள் விமானங்கள் மூலமும் ஹெலிகொப்டர்கள் மூலம் அப் பகுதியைச் சென்றடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களும், மருந்துப் பொருள்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடு கள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந் தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. உணவுத் தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அரு கில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

27 அக்டோபர், 2010

தமிழக மீனவர்மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர்களை மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்கியதோடு, வலைகளையும் வெட்டி வீசியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த மீனவர்களுக்கான கூட்டத்தில், கடற்படை கமாண்டர் அகர்வால், "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள்" என உறுதியளித்தார்.

இதனிடையே மண்டபம் பகுதியிலிருந்து 200க்கும் அதிகமான விசைப் படகுகள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று, நேற்று கரை திரும்பின. இதில் சில படகுகளில் சென்றவர்கள், கச்சத்தீவுப் பகுதியில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், படகை சுற்றி வளைத்து, மீனவர்களை தாக்கினர். ஆல்பர்ட் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கென்னடி, பெரியதுரை என்பவரது விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்.

மீனவர்கள் கூறுகையில்,

"ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர், "இப்பகுதிக்கு ஏன் வந்தீர்கள்?" எனக் கேட்டுத் தாக்கினர்.

பிற படகிலிருந்த வலைகளையும் அவர்கள் வெட்டி எறிந்தனர்'' என்றனர்.

தமிழக மீனவர்களைத் தாம் தாக்கவில்லை என இலங்கைக் கடற்படை ஒருபுறம் கூறி வந்தாலும், மறுபுறம் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் இலங்கை 91ஆவது இடத்தில்

உலகில் ஊழல் குறைந்த 178 நாடுகளில் இலங்கைக்கு 91ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள பேர்லினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'ட்ரான்ஸ்பரன்ஸி' இன்டர்நெஷனல் அமைப்பு நடத்திய ஆய்வின் படி புள்ளிகள் வழங்கி இப்பட்டியலை வெளியிட்டுள்ளதாக அவ்வமைப்பின் இலங்கைப் கிளைத் தலைவர் ஜே.சீ.வெலியமுன தெரிவித்துள்ளார். அதன் வருடாந்த அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா 87ஆவது இடத்திலும் பாகிஸ்தான், மாலைத்தீவு என்பன 143ஆவது இடத்திலும் பூட்டான் 36ஆவது இடத்திலும் உள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் பூட்டான் ஊழல் குறைந்த நாடாக உள்ளது.

கடந்த வருடம் இலங்கை 3.1 புள்ளியைப் பெற்று 97ஆவது இடத்தில் இருந்தது. இம்முறை 3.2 புள்ளியைப் பெற்ற போதும் முன்தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் தினமும் 250க்கு மேற்பட்டோர் பக்கவாதத்தால் உயிரிழப்பு : டாக்டர் மஹிபால

இலங்கையில் தினமும் 250 மேற்பட்டோர் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாகவும் தினமும் 55 பேர் இதனால் பீடிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பாலித்த மஹிபால தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் திகதி உலக பக்கவாத தினமாகும். இதனை முன்னிட்டு இன்று 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மஹிபால இக்கருத்தை தெரிவித்தார்.

மேலும் மூளைக்கான இரத்த விநியோகத்தில் தடை ஏற்படுவதன் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக மூளையின் பாதிக்கப்பட்ட பகுதி செயற்படமுடியாமல் போவதுடன் உடம்பின் எலும்புகளையும் செயலிழக்கச்செய்யும். புரிந்து கொள்ள, பேச, பார்க்க முடியாமல் போதல் ஆகியவையும் ஏற்படும்.

உலகில் அதிக மரணத்தினை ஏற்படுத்தும் முன்னணி காரணியாக பக்கவாதம் உள்ளதாகவும் மாரடைப்பே அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோயாக தற்போது விளங்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கமைய உலகில் 69 நிமிடங்களுக்கொருவர் பக்கவாத நோயில் இறப்பதாகவும் வருடாந்தம் இத்தொகை 5.7 மில்லியனாக உள்ளதெனவும் டாக்டர் லங்கா ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

நோயாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியுமெனவும் இதற்கென கொழும்பு வைத்தியசாலையில் சிறப்புப் பிரிவு உள்ளதாகவும் நரம்பியல் டாக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார்.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தவிர்த்தல், புகைத்தலை தவிர்த்தல், நீரிழிவைக் கட்டுப்படுத்தல், உடல் நிறையைக் கட்டுப்படுத்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை மூலம் இதனைத் தடுக்கமுடியும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகாரத்துக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி ஒரு இலட்சம் பேரை திரட்டி கொழும்பில் போராட்டம்

சர்வாதிகாரிகளின் சூதாட்ட பூமியாக இலங்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு படுமோசமான அட க்குமுறைகள் மேலோங்கிய ஜனநாயக விரோத ஆட்சி தற்போதைய நடை முறையிலுள்ளது. எனவே எதிர்காலச் சந்ததியினருக்காக நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது என்று சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் பேரணி தெரிவித்துள்ளது. காலத்தை வீணடிக்காது சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் பேதமின்றி செயற்பட முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று ஒரு இலட்சம் பேரை தலைநகருக்கு அழைத்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து போராட்டங்களை கைவிடப் போவதில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க கட்டிடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறுகையில்,

17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் உத்தேச திருத்தத்தில் 18ஆவது திருத்தங்களின் ஊடாக சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்து விட்டது. எனவே நாட்டை சர்வாதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா நாட்டில் என்றுமே இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக ஜனநாயக ரீதியில் சுவரொட்டிகள் கூட ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டினால் சூழல் மாசடைவதாகவும் அரசாங்கத்தின் சுவரொட்டிகளுக்கு சூழல் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் மண்டியிடப் போவதில்லை. கூடுதலான சிறைக் கூடங்களையும் புலனாய்வு பிரிவுகளையும் அமைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதனை நோக்கி பயணிக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

மங்களசமரவீர எம்.பி

இங்கு உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. கூறுகையில்,

ஜனநாயகத்தின் மரண வீடு கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றது. 18ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டது. பொது மக்களை ஏமாற்றி தலைகளின் எண்ணிக்கையினை பாராளுமன்றத்தில் அதிகரித்துக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசாங்க பயணத்தை உடன் நிறுத்த வேண்டும்.

இதற்கு பாரிய எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி போராட வேண்டும். மிக விரைவில் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நிதியுதவி குறைவடைந்துள்ளமையால் நிவாரண உணவு விநியோகம் பாதிப்பு

உலக உணவுத் திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவி குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நிதி உதவி பாதிப்பினால் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50 வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது.

இதனால் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.உலக உணவுத் திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற போஷாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என்றும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் உறவினர் நண்பர்களுடன் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கின்றது. அந்த மக்கள் மத்தியில் உணவுத் திட்டத்தினக்ஷில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இது தெரியவந்திருக்கின்றது. இந்த சிக்கல்களை சமாளிப்பதற்காகத் தமது தங்க ஆபரணங்களை விற்பது போன்ற பல்வேறு உபாயங்களை அவர்கள் கையாண்டு வருவதாகவும் உலக உணவுத் திட்டம் தனது ஆய்வின் அடிப்படையில் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற 25 ஆயிரம் பேருக்கும் உறவினர் நண்பர்களது வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மீள் குடியேறியுள்ள குடும்பங்களுக்குமான நிவரண உணவுப் பொருட்களையும் வடக்கு கிழக்கு மகாணங்களில் உள்ள 3 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிமார் மற்றும் கைக் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் உரிய போசாக்கு உணவுப் பொருட்களையும் உலக உணவுத் திட்டமே வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி:ஐ.தே.க

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவன ஊழியர்கள் 2000 பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிழையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிர்வாக சீர்குலைவினால் ரெலிகொம் நிறுவன வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

டெலிகொம் நிறுவனம் 8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக் கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கியது. ஆனால் இன்று இவ் வருமானம் 1.4 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. அன்று இதன் 35 சதவிகித பங்குகளை ஜப்பானிய நிறுவனமான என்.ரி.ரி. கொள்வனவு செய்திருந்ததோடு அவர்கள் நியமித்த நிர்வாக அதிகாரிகளுக்கு அவர்களே சம்பளத்தையும் வழங்கினார்கள்.

இவ் பங்குகள் இன்று மலேஷியாவின் ஜீ.பி.எச்., மெக்ஸீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு சேவை விஸ்தரிப்புச் செய்வதற்காக கிறேட்யங் என்ற வெளிநாட்டவர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருடமொன்றுக்கு இவ் அதிகாரிக்கு இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை மெக்ஸீஸ் நிறுவனம் வழங்கவில்லை. டெலிகொம் நிறுவனமே வழங்குகிறது. இந்த நிர்வாக அதிகாரி சக உத்தியோகத்தர்களுடனோ நிர்வாக சபையினருடனோ கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.

ஏசியன் டெலிகொம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளால் டெலிகொம் நிறுவனம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் குழறுபடிகள் இடம்பெற்றுள்ளது. டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்காக ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு பிரிட்டிஷ் டெலிகொம் நிறுவனத்தை நியமித்துள்ளனர்.

இதற்காக 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. டெலிகொம் நிறுவனத்தில் மேலதிகமாகவுள்ள 2000 ஊழியர்களை வெளியேற்றினால் லாபமீட்ட முடியுமென அந் நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ளது. இப் பரிந்துரையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் ஊழியர்கள் தொழில் இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். நிறுவனத்தின் வீழ்ச்சியை ஈடு செய்வதற்காக 2 ரூபா நிலையான வரி அறவிடப்படுகிறது.

நாட்டிலுள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்குகிறது. டெலிகொம் இவ்வாறான போட்டிச் சந்தையில் எதனையும் செய்யாமல் இருக்கின்றது.எனவே தேசிய தொலைத் தொடர்பு சேவையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சீனாவின் அதிவேக ரயில் நேற்று அறிமுகம் உலகின் அதிவேக ரயிலை சீனா நேற்று அறிமுகம் செய்தது.



இதஏ 380 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலானது இதற்கு முன்னைய அதிவேக ரயிலான இதஏ2 ரயிலின் வேகத்தினை முறியடித்துள்ளது.

சீனாவின் இருமுக்கிய வர்த்தக நகரங்களான ஷங்காய் மற்றும் ஹாங்சூ நகரங்களையே மேற்படி அதிகவேக ரயில் சேவை இணைக்கின்றது.

இவ்விரு நகரங்களுக்குமிடையிலான சுமார் 200 கிலோமீற்றர் தூரத்தினை இவ் ரயிலானது 45 நிமிடங்களில் அடைகின்றது.

இதன் சராசரி வேகம் மணித்தியாலத்திற்கு 350 கிலோ மீற்றர்களாகும்.

இதன் உச்ச வேகம் மணித்தியாலத்திற்கு 420 கிலோ மீற்றர்களாகும். எனினும் இதன் உச்ச வேகத்தில் இது பயணிக்காதெனவும் சராசரி வேகத்திலேயே பயணிக்குமெனவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது முற்றுமுழுதாக சீனாவின் தயாரிப்பாகும்.

எனினும் சீனாவானது மணித்தியாலத்திற்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய ரயிலினை உருவாக்க உத்தேசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை; இரு வாரங்களில் 7098 பேர் கைது 7927 கிலோ போதைப்பொருள் மீட்பு






நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹெரோயின், கஞ்சா, பாபுல், போதை தரும் லேகியங்கள் மற்றும் அபின் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட் களையே பொலிஸார் கைப்பற்றியு ள்ளனர்.

ஆயிரக்கணக்கான பொலிஸார் அடங்கிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் விசேட பொலிஸ் தேடுதல் பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கஞ்சாவுடன் தொடர்புடைய 4413 சம்பவங்கள், ஹெரோயி னுடன் தொடர்புடைய 1858 சம்பவங்கள், பாபுலுடன் தொடர்புடைய 305 சம்பவங்கள், போதை தரும் லேகியங்களுடன் தொடர்புடைய 413 சம்பவங்கள், அபினுடன் தொடர்புடைய 3 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு

அமைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் வழிகாட்டலின் கீழ் விசேட நடவடிக்கை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இந்த நடவடிக்கைகள் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களம் இதற்கான விசேட வேலைத் திட்டங்களை தீட்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டிலுள்ள 12 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் வழிகாட்டலில் 36 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு எதுவித பாரபட்சமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்


சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அகூஸணுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அகூஸணுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக் கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்ட லின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதே சத்திற்கு வந்து உங்களது கஷ்டங்க ளையும் குறைகளையும் கேட்டறி கின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவ ட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்க ளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பவளப்பாறைகளை முறையாக பேண இலங்கை அரசு நடவடிக்கை ஜப்பான் கூட்டத்தில் அஸ்வர் எம்.பி.

இலங்கையில் பவளப் பாறைகளை முறையாக பேணு வதற்கு உகந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பவளப்பாறைகள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைபற்றி ஆராயும் கூட்டம் ஜப்பானின் நாகோயா நகரில் உள்ள நாகோயா மேரியட் அஸோஸியா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்திரமான மீன்பிடி கைத்தொழி லையும், நீர்வள முகாமைத்துவத்தையும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பவளப் பாறை முகாமைத்துவமும் இதில் அடங்குகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான மஹி ந்த சிந்தனை என்ற தனது கொள்கை பிரகடனத்தில் ஸ்திரமான பவளப் பாறை மற்றும் நாளைய கடல் வாழ் முகாமைத்துவம் தொடர்பான வழிமுறைகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள தாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ் வர் விளக்கிக் கூறினார்.

அந்தத் தேர்தலில் ஜனாதிபதி 60 சதவீத அமோக வாக்குகளுடன் வெற்றியீட்டினார். இதில் பெரும் பாலான வாக்குகள் கரையோர மக்களிடம் இருந்து கிடைத்தவையா கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னர் மீன்பிடித்துறை அமைச்ச ராக இருந்தபோது கடல்சார் பல் கலைக்கழகமொன்றை ஸ்தாபித்தது பற்றியும் பல்கலைக்கழக மட்டத்தில் கடல் நிபுணத்துவ பட்டப் படிப் பினை வழங்கும் ஒரேநாடு இல ங்கை என்பது பற்றியும் பாராளு மன்ற உறுப்பினர் அஸ்வர் அங்கு குறிப்பிட்டார்.

பவளப்பாறை முக்கோண செயற் பாடு மற்றும் கடலில் பாதுகாக் கப்பட்ட பிரதேசங்கள் ஆகியவை தொடர்பாக எதிர்காலத்தில் இடம் பெறும் சர்வதேச கருத்தரங்குகளில் இலங்கையை சேர்த்துக்கொள்வது முக்கியமானது என்பதை அவர் இக் கூட்டத்தில் வலியுறுத்திக்கூறினார்.

அத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட உலகளாவிய சட்டமன்ற உறுப் பினர்களுக்கு மஹிந்த சிந்தனை கொள் கைப் பிரகடனத்தின் ஆங்கில பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு; 300 பேர் இன்று பயணம்



இஸ்ரேலில் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ள முதலாவது இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது.

இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார்.

பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

முதற் தடவையாகவே இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாத வர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பின்தங்கிய கிராமங்களுக்கு துரித மின் வழங்கும் விசேட திட்டம்



பின்தங்கிய கிராமங்களுக்கு துரிதமாக மின்சார வசதி செய்து கொடுக்கவென விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள சகலருக்கும் மின்வசதி செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் வெளிநாடுகளின் கடனுதவிகளுடன் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தின் படி 2012 ல் சகலருக்கும் மின்சார வசதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ‘கிராம சக்தி’ திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

மின் கம்பங்கள் மூலம் மின்சார வசதி அளிக்க முடியாத சிறிய கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு தகுந்த வழி வகைகளினூடாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி, சிறு மின் திட்டங்கள், காற்று மூலமான மின் திட்டம், எரிவாயு தொழில்நுட்பம் போன்ற முறைகளினூடாக இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு ள்ளதோடு வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண அடிப்படையில் மின்சார இணைப்பு வழங்கவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியது
மேலும் இங்கே தொடர்க...

மத்தல விமான நிலைய பணிகள் துரிதம்: 2012 இல் முதல் விமானம் தரையிறக்கம்; 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி


மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார்.

மத்தல சர்வதேச விமான நிலைய பணிகள் குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்ற பிரதிஅமைச்சர் மேலும் கூறியதாவது, விமான நிலையப் பணிகள் எதிர்பார்த்ததை விட துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையப் பணிகள் இரட்டிப் பாகியுள்ளன. இந்த நிலையில் மத்தல விமான நிலைய பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு 6 வழிகளை கொண்ட அதிவேகப் பாதை நிர்மா ணிக்கப்படுகிறது. சுற்றுச் சுழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விமான நிலையம் அமைக்கப்படுவதோடு யானைகள் மற்றும் விலங்குகளை வேறு இடங்களுக்கு அனுப்பாமல் இப்பகுதியி லேயே வசதிகள் அளிக்கவும் திட்ட மிட்டுள்ளோம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் விமான நிலையமும் துறைமுகமும் அமைக்கப்படுகி ன்றன. இவை குறித்து விமர்சித்து எதிர்க் கட்சிகளுக்கு இங்கு வந்து உண்மை நிலையை நேரில் பார்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். தேவையானவர் களுக்கு துறைமுகத்தில் இறங்கிக் குளிக்கவோ நீந்தவோ முடியும் என்றார். விமான மற்றும் விமான நிலைய சேவை நிறுவனத் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய கூறியதாவது;

ஓடுபாதையின் 65 வீதமான பணிகள் 2011 நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும். 10 விமானங்கள் நிறுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. 5000 கொள்கலன்களுக்கு வசதி அளிக்கக் கூடியதாக களஞ்சிய வசதிகள் செய்யப்பட உள்ளதோடு 300 வாகனங்கள் நிறுத்த தரிப்பிட வசதி அளிக்கப்படும்.

விமான நிலையம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் 1500 பேர் நேரடி தொழில் வாய்ப்பு பெற உள்ளதோடு 50 ஆயிரம் பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பு பெறுவர். நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படும் இந்த விமான நிலையத்தின் மூலம் தினமும் 3200 பயணிகள் பயனடைவர். வருடத்துக்கு 10 இலட்சம் விமானப் பயணிகள் இதனை பயன்படுத்துவர். அமைச்சின் செயலாளர் ரஞ்சித் த சில்வா இதனூடாக பல நாட்டு விமான ங்கள் இதனைப் பயன்படுத்த உள்ளதோடு புதிதாக விமானங்களைக் கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நமீதாவைக் கடத்திய ரசிகர்

நமீதாவைக் கடத்திய ரசிகர் கைது தமிழ் பட உலகில், கவர்ச்சியின் உச்சமாகப் பார்க்கப்படுபவர் நடிகை நமீதா. ஜவுளிக்கடை திறப்பு, டிவி நிகழ்ச்சிகள், பொதுவிழாக்களிலும் அதிகமாகப் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நமீதாவுக்கு அழைப்பு வந்தது.

அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய, மேனேஜர் ஜானும் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.

அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, கரூர் நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்ல வந்திருப்பதாக நமீதாவிடம் கூறினார்.

அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினர். உடனே காரை படு வேகத்தில் கிளப்பினார் அந்த இளைஞர்.

நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர், இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரைப் பின்தொடர்ந்தார்.

இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு 'செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து விழா குழுவினர் கரூரிலிருந்து ஏராளமான கார்களில் நமீதாவை 'மீட்க' திருச்சிக்கு விரைந்தார்கள்.

நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கி, டிரைவரைப் பிடித்தனர். உடனே நமீதா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தார். உடனடியாக போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.

பிதா மகன் ஸ்டைலில்...

பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியைச் சேர்ந்தவர்.

நமீதா மீது அவருக்கு மிகவும் ஆசையாம். அதனால்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிதாமகன் ஸ்டைலில் கடத்திச் சென்று கொஞ்ச நேரம் உடன் இருந்துவிட்டு அனுப்ப முயன்றாராம்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

26 அக்டோபர், 2010

குவாம் தீவுகளில் பிரமாண்ட இராணுவத்தளம் : அமெரிக்கா நிர்மாணம்

ஐக்கிய அமெரிக்கா, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவுகளில் சுமார் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மிகப் பிரமாண்ட இராணுவ தளமொன்றினை அமைத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தளமானது ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பு , அணுச்சக்தி விமான தாங்கிகளுக்கான கப்பற்துறை உட்பட அதிநவீன கட்டமைப்புக்களை உள்ளடக்கவுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் இராணுவத் தளமொன்றுக்காக மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய முதலீடு இதுவாகும்.

அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் கடற்படை கட்டுமானங்களுக்கென செலவிடப்படவுள்ள மிகப்பெரிய தொகையும் இதுவாகும்.

எனினும் இந்நடவடிக்கை தமது சாதாரண வாழ்வினை பாதிக்கும் என குவாம் தீவு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இராணுவ வளர்ச்சிக்குச் சவால்விடும் வகையில் இது அமையவுள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்நடவடிக்கை பசுபிக் பெருங்கடல் பகுதியில் பதற்ற நிலையை மேலும் அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
மேலும் இங்கே தொடர்க...

ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி மன்னரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணான ரிஸானாவுக்கான தண்டனை தொடர்பில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடித மூலம் கோரியுள்ளார்.

இக்கடிதத்தை இன்று காலை சவூதி அரேபிய மன்னருக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்ணாக சவூதி சென்றார் மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக். இவர் தனது எஜமானரின் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் போது, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

குழந்தையை ரிஸானா கொலை செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த, சவூதியிலுள்ள தவாமி மேல் நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதனை ரியாத் உயர்நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...