11 செப்டம்பர், 2010

தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் 7ஆவது அமர்வு இன்று : சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 7 ஆவது தடவையாக இன்றைய தினம் பிற்பகல் 4.00 மணியளவில் கொழும்பு தமிழீழ விடுதலைக் கழகத்தில் கூடுகிறது.

இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளருமான எம்.கே சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு விரைந்த தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை என்பன குறித்தும் மேற்படி அரங்கத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், போர் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

கிளி. சாந்தபுரத்தில் மக்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் வித்தியாலய இடைத்தங்கல் முகாமிலிருந்தவர்கள் நேற்று மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி முகாமில் 281 குடும்பங்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்கி இருந்தனர். யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

மிதிவெடிகள், மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சாந்தபுரம் தற்போது பாதுகாப்பான பகுதியாக இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வட., கிழ. அபிவிருத்திக்கு மூன்றாண்டுத் திட்டம் : கெஹெலிய

வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக மூன்றாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது யுத்தம் முடிவுற்றதையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

வடக்கின் வசந்தம், கிழக்கின் எழுச்சி போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக செயற்படுத்தப்படவுள்ள இம்மூன்றாண்டு திட்டம், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்காகக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார்-கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் இன்னும் ஐந்து மாதங்களில் நாடுமுழுவதும் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகபெரும இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சரத் மீதான விசாரணை : 6 நாட்கள் தொடர்ந்து நடத்த முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ச்சியாக 6 நாட்கள் நடத்துவதற்கு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விசாரணைகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ‘கிராம எழுச்சித் திட்டம்’ விஸ்தரிப்பு






இத்திட்டம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கிராம மற்றும் சிறு நகர அபிவிருத்திக்கான மேற்படி திட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கு மொத்தம் 86 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச அபிவிருத்தி அமைப்பும் 34 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கமும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமூக பங்களிப்புமாக அமைகின்றன.

சர்வதேச அபிவிருத்தி அமைப்புடன் இது தொடர் பான கடன் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவு ள்ளது. இதேவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மற்றொரு யோசனையின் பேரில் காலி மத்திய பஸ் நிலையத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசதிகளை மேம்படுத்துவதற்கு 278 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த மற்றொரு யோசனையின் பேரில் பேராதனை பூங்காவில் பார்வையாளர்களு க்கான வசதிகளை மேம்படுத்தவும் அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

படை வீரர் சீருடை

நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு (இராணுவம், கடற் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு மற்றும் தேசிய மாணவர் படை) தேவைப்படும் துணி வகைகள் எதிர்காலத்தில் உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். அதற்காக 1686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான உள்ளூர் துணி வகைகளை ஒதுக்கீடு செய்யும் கமிட்டியின் மூலம் தேசிய துணிகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து அவை பெறப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

20 முதல் 22ம் திகதி வரை நடைபெறும் ஐ.நா. உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை






ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்புரையாற்றவு ள்ளதுடன், மிலேனிய அபிவிருத்தி இலக் குகள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் 65வது பொதுச் சபை அமர்வுகள் எதிர்வரும் 14ம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து 20ம் திகதி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர்களின் பொது விவாதங்களுக்கான அமர்வுகள் செப்டெம்பர் 23ம் திகதி ஆரம்பமாகும்.

இம்முறை உச்சி மாநாட்டில் மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட நாடுகளின் மீளமைப்பு மற்றும் வலுப் படுத்தல், பாதுகாப்பு சபை மறுசீராக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர் பில் ஆராயப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி; மூவர் படுகாயம்

கல்முனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். அதிகாலை ஒரு மணியளவில் கல்முனைக்குடி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகாமை யில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாளிகைக்காட்டிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள் ளார்.

மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ. எம். ஹனீபா நியாஸ் (வயது 18) என்ப வரே கொல்லப்பட்டவராவார். காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நான்கு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுமுன் அமைச்சர் ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கி ஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர் வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லி ணக்கம் பற்றிய ஆணைக் குழு முன் னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

கொழும்பு ஏழு ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் திங்கட்கிழமை பிற் பகல் 1.30 இற்கு அமைச்சர் தொண்டமான் சாட்சியமளிப்பார்.

மேலும் மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் பிரதிநிதி ஆகியோரு க்கும் அன்றைய தினம் சாட்சியமளி க்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.கவின் 25 எம்.பிக்கள் கட்சித் தலைமைக்கு காலக்கெடு உட்பூசலை தீர்க்காவிட்டால் தனித்து செயற்படுவதாக அறிவிப்பு


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் தான் உட்பட 25 ஐ. தே. க. எம்.பிக்களும் பாராளுமன்றத்தினுள் தனித்து செயற்படப் போவதாக தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். இதற் கென ஐ. தே. கட்சித் தலைமைக்கு ஒரு வாரம் காலக்கெடு வழங்கியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னடைந்து போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை பலம் வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக கட்டியெழு ப்புவதே தனது நோக்கம் என்றும் இதற்கென கட்சி உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனது முயற்சி எமது கட்சியை கட்டியெழுப்புவதே தவிர ஆளும் தரப்பில் சென்று அமர்வதல்ல எனவும் கூறினார்.

உங்களுடன் இவ்வாறு இணைந்து கொண்டுள்ள ஐ. தே. க. உறுப்பி னர்கள் யார் யார் என கூற முடி யுமா? என கேட்டபோது.

இல்லை எவருடைய பெயரையும் கூறமுடியாது. எனினும், நாம் எமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றத்தில் ஒருமித்து செயற்படுவோம். தனியாக எமது குழு அமரும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்கென புதிய திட்டம் மஹரைச் சிறைச்சாலை பெருநாள் வைபவத்தில் அமைச்சர் டியூ






“மஹிந்த சிந்தனை”யின் பேரில் சிறைக்கைதிகள் விடயமாக புதிய சிந்தனையுடன் நாம் செயற்படுகிறோம்.

ஜனாதிபதி, சிறைச்சாலைகள் தொடர்பாக தனியான அமைச்சை உருவாக்கி இவ்விடயத்துக்குப் புதுவடிவம் கொடுத்துள்ளார்.

சிறைக்கைதிகளின் புனர்வாழ்வுக்கு மட்டுமன்றி, அவர்களின் குடும்பங்களின் நலன்களுக்கு உதவும் புதிய திட்டம் குறித்தும் நாம் ஆராய்ந்துள்ளோம்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நேற்று (10/9) இவ்வாறு தெரிவித்தார்.

மஹரைச் சிறைச்சாலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “ஈதுல் – பித்ர்” வைபவத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்.

சிறைச்சாலைகள் பழிவாங்கும் இடங்கள் அல்ல. தண்டனை வழங்கும் இடங்களும் அல்ல. சட்டம் காரணமாக கைதிகள் சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் சிறைச்சாலைகளை மாற்றி புதிய செயற்பாடுகளை நாம் அறிமுகம் செய்கிறோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் பேசுகையில், “மஹிந்த சிந்தனை”யில் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வு பற்றி அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தில் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முஸ்லிம் அல்லாத அமைச்சரான டியூ குணசேகரவே சிறைச்சலைக்கு விஜயம் செய்து இருப்பது வரலாற்றில் முதல் தடதீவாகும்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் ஆறு தசாப்தங்களாக இச் சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகளுக்காக ரமழான் ஏற்பாடுகளைச் செய்வது பாராட்டத்தக்கது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் பேசுகையில், முஸ்லிம் கைதிகளின் மார்க்க விடயங்களில் முஸ்லிம் லீக் ரமழான் காலத்தில் மேற்கொண்டு வரும் சேவைகள் பாராட்டத்தக்கது.

நல்ல பிரஜைகளாக நீங்கள் சமூகத்துக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

மஹரைச் சிறைச்சாலையில் 90 முஸ்லிம் கைதிகள் இம்முறை நோன்பு நோற்றனர். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர். சில்வா, மஹரைச் சிறைச்சாலை சுப்பிரின்டன்ட் லக்ஷ்மன் அபேகுணவர்த்தனா, உதவிச் சுப்பிரின்டன்ட் ரீ. டபிள்யூ. சந்திரசிறி, பிரதம சேமநல அதிகாரி ஜே. எச். குலதுங்க அமைச்சின் செயலாளர் திஸாநாயக்கா, மேலதிகச் செயலாளர் கொடிப்பிலி, முஸ்லிம் லீக் இணைச் செயலாளர்கள் பவ்ஸணுல் காலித், இஸ்மத் கவுஸ், பொருளாளர் எம். ஆர். எம். இல்யாஸ், சேமநல அதிகாரி துவான் மஃமூர் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

மக்பூல் மவ்லானா முஸ்லிம் கைதிகளுக்கான ரமழான் பெருநாள் தொழுகையை நடத்தினார். முஸ்லிம் லீக்கின் ஏற்பாட்டில் கைதிகளுக்கு பகல் உணவும் வழங்கப்பட்டது.

அமைச்சர் டியூ குணசேகர அஸ்வர் எம். பி. யின் அழைப்பின் பேரில் மஹரைச் சிறைச்சாலை வளவில் உள்ள மஸ்ஜிதுக்கும் விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் உதவியுடன் பெருந்தோட்ட கிராமம் மத்திய, ஊவா மாகாணங்களில் முதற்கட்ட செயற்பாடு

மலையகத் தோட்டப் புறங்களில் உள்ள ‘லயன்’ குடியிருப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்து தனித்தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வீடுகளைக் கொண்ட கிராமத்தைத் தனியாகவும் தொழில்புரியும் தோட்டத்தைத் தனியாகவும் அடையாளப்படுத்துவதற்கு திட்டமிட்டுச் செயற்படுத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக இந்தியா ஆறாயிரம் வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளது. இதில் முதன் முதலாக ஊவா மற்றும் மத்திய மாகாண தோட்டங்களில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்று பிரதியமைச்சர் சிவலிங்கம் குறிப்பிட்டார்.

தற்பொழுது தொழிலாளர் குடியிருப்புகளும் தோட்டமும் ஒன்றாகவே உள்ளன. இதனால், அவர்களின் வாழ்விடமும் தோட்டம் என்றே அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் அந்த நிலையை மாற்றி வாழ்விடம் அமையும் கிராமத்தை வேறாகவும் தேயிலை, இறப்பர் தோட்டங்களை வேறாகவும் அழைக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

‘நான் இந்தத் தோட்டத்தில் வாழ்கிறேன் என்பதை இல்லாமற் செய்து நான் இந்தக் கிராமத்திலிருந்து அந்தத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகிறேன் என்று சொல்லும் நிலையை உருவாக்குவோம்’ என்று கூறிய அமைச்சர் தோட்டங்கள் ஆங்கிலப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் 90% தமிழ்ப் பெயர்கள் உண்டென்றும் அந்தத் தமிழ்ப் பெயர்களில் தொழிலாளர்களின் கிராமங்கள் அழைக்கப்படுமென்றும் விளக்கினார்.

வாழமலை, சமுத்திரவள்ளி, சமரவள்ளி, தெய்வானை, மண்வெட்டி, லெட்சுமி, கல்மதுரை, பூப்பனை என்று பல்வேறு தமிழ்ப் பெயர்களில் தோட்டங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தத் தமிழ்ப் பெயர்களைக் கிராமங்களுக்குச் சூட்டுவதோடு தோட்டங்களை ஆங்கிலப் பெயரில் அழைக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம் உதாரணமாக கல்மதுரை கிராமத்திலிருந்து ஸ்ரோனிகிளிப் தோட்டத்திற்குத் தொழிலுக்குச் செல்கிறேன் என்ற நிலையைத் தோற்றுவிப்போம் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மலையகத் தோட்டப் புற மக்களின் வாழக்கை முறையை முற்றாக மாற்றியமைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்குமென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...