2 ஆகஸ்ட், 2010

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


நாகையில் நடந்த மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகையில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலர் செய்யது முபாரக் தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறுபான்மையின சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைப்படி முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.முஸ்லிம் சமுதாயத்திற்கு தமிழக அரசால் தற்போது வழங்கப்படும், 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதல்ல. கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை சிங்கள அரசு கொன்று குவிப்பதை கண்டிப்பதுடன் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவை துவக்கப்பட வேண்டும். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 54 டாக்டர்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் 16 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் டாலர் உதவி :அமெரிக்கா







பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கா அந்நாட்டிற்கு 10 மில்லியன் டாலர் வழங்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு 1300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மீட்பு பணியில் ஈடுபட ஹெலிகாப்டர், படகுகள், மொபைல்போன்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றம் உணவு பொருட்கள் ஆகியவை விரைந்து வழங்கப்படும் என்றும், பாகிஸ்தான் மக்கள் அமெரிக்காவின் நண்பர்கள் என்றும் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கும், சொத்துகளை இழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், பாகிஸ்தான் அரசுடன் அங்குள்ள அமெரிக்க தூதரகம் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னிப்பு கேட்க முடியாது : டேவிட் கேம்ரூன்



இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்திய பயணத்தின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரித்தால் அந்நாடு சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பாகிஸ்தானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

சர்தாரியின் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஐ.எஸ்.ஐ. தலைவர் இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார். மேலும்டேவிட் கேம்ரூன் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து நாட்டுதூதரை வரவழைத்துவிளக்கம் கேட்டது. இந்நிலையில் டேவிட் கேம்ரூன் தனது கருத்தில் உள்ளதாகவும் தனது கருத்தை வாபஸ் பெற மாட்டார் என்றும் இங்கிலாந்து நாட்டு பிரதமர் அலுவலக அதிகாரி கூறியுள்ளார். அவர் டேவிட் கேம்ரூனின் கருத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களையே கூறியதாகவும் அந்நாட்டு அரசை அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவமயமாகும் வடக்கு: சாடுகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

நலன்புரி நிலையங்களில் உள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்துவதில் அரசு தாமதமேற்படுத்துகின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரனும் , எம்.ஏ.சுமந்திரனும் மேற்படி தெரிவித்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் அங்கு கூறுகையில்,

“மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பெருமளவிலான நிலங்களில் இராணுத்தினரை குடியமர்த்தியுள்ளனர். முல்லைதீவில் உள்ள இராணுவ முகாம் முன்னர் 3 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்டது. தற்போது 30 ஏக்கராக இது விஸ்தீரணமடைந்துள்ளது.

வடக்கில் இராணுவத்தினரை நிரந்தரமாக வைக்கப்போவதாகவும் அவர்களது குடும்பங்களையும் அங்கு குடியமர்த்தி அவர்களுக்கான விவசாய நிலங்களையும் காணிகளையும் வழங்கப்போவதாக இராணுவத் தளபதி கண்டியில் மகாநாயக்க தேரரிடம் கூறியுள்ளார்.

வடக்கில் கடமைபுரியும் இராணுவத்தினரையும் அவர்களது குடும்பத்தினரையும் குடியமர்த்துவது வடக்கில் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் முஸ்லிம் மக்களது காணிகள் பறிபோகின்றது. இவையனைத்தும் அரசாங்கத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடைபெறுகிறது.

திருமுருகண்டி, சாந்தபுரம், பொன்னகர், இந்துபுரம் போன்ற கிராமங்களி'ல் மக்கள் மீள் குடியேறமுடியாமல் பாதுகாப்பு அமைச்சு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. அப்பாவி மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். இதில் அரசு காலதாமதம் ஏற்படுத்திவருகின்றது என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிப்போராளிகள் 1,350 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்



கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் உள்ள முன்னாள் புலிப் போராளிகள் 1,350 பேருக்கு எதிராக அரசு விரைவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னர் இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது மிகக் கொடூரமான குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

முன்னாள் புலிப் போராளிகளில் 650 பேர் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் 700 பேர் காலியில் உள்ள பூஸா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிராமங்களுக்கு தாக்குதல் நடத்தல், பொது இடங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொது மக்களை கொல்லல், பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கொல்;லல் போன்ற இவ்வாறான கொடூரமான குற்றங்களில் ஈடுபட்;டமை நிரூபணமாகியுள்ளமையினால் இவர்களுக்கு எதிராக வழக்கத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேலும் தாக்குதல் நடத்துவதற்கு தகவல்களை சேகரித்து வழங்கியவர்கள், ஆயுதங்களை கொள்வனவு செய்தவர்கள், இராணுவத்திற்கு எதிராக யுத்தம் புரிந்தவர்கள் ஆகியோரும் முன்னாள் புலிப்போராளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோரில் உள்ளடங்குகின்றனர்” என அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நவீனமயமாகிறது சீன ராணுவம்




சீன ராணுவம் நவீன மயமாக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியான் குவாங்லீ தெரிவித்தார்.

÷உலகின் மிகப்பெரிய ராணுவமான சீன ராணுவத்தின் 83-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராணுவத்தை நவீனப்படுத்துவதோடு, சைபர் போர் மற்றும் பிராந்திய அளவிலான சண்டைகளை திறம்பட எதிர்கொள்வது எனவும் விழாவில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

÷சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியான் குவாங்லீ விழாவில் பங்கேற்று பேசியதாவது:

÷சீன ராணுவம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில்தான் ராணுவத்துக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு ராணுவம் தயாராக உள்ளது.

÷நாட்டின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதி ராணுவம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தைவான், திபெத் ஆகியவை சீனாவுடன் இணைந்த பகுதிகள் என்பதால் இதில் சீனா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவுடன் முக்கிய விஷயங்களை சீன ராணுவம் பகிர்ந்து வருகிறது.

÷ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதோடு, ராணுவத்துக்காக ஏராளமான கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. பிராந்திய அளவிலான சண்டைகளை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின் பலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

÷பயங்கரவாத மிரட்டல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 20-ம் நூற்றாண்டின் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள சைபர் போருக்கு சீன ராணுவம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சைபர் மிரட்டல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக புதிதாக சைபர் படை ஒன்றையும் சீனா உருவாக்கியுள்ளது.

சீன அரசு பாதுகாப்புத் துறைக்கு இந்தாண்டு 7.5 சதவீதம் நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு 14.9 சதவீதம் நிதியை ஒதுக்கியது. இது இந்தியாவைப் போல் இரண்டு மடங்கு அதிக அதிகம் ஆகும் என சீன ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

÷கடந்த 10 ஆண்டுகளில் சீன ராணுவம் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ராணுவத்தில் 2.3 மில்லியன் வீரர்களும், கப்பல் படையில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேரும், விமானப் படையில் 4 லட்சம் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வுப்பணிகளைப் பார்வையிட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாரம் வருகை

இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதிமக்களுக்கான புனர்வாழ்வுப்பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாரம் இலங்கை வரவுள்ளார்.

இலங்கைவரும்அவர் பலாலி விமானத்தளம் ,காங்கேசன்துறை துறை முகம் ஆகியவற்றின் சீரமைப்பு பணிகள் தொடர்பில் நேரில் சென்று ஆய்வுநடத்துவார்.என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம்நேற்று கோபாலபுரத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் குருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அவரைநேரில் சந்தித்ததுடன் மேற்படி இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பிலும் எடுத்துக்கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாடிய பி. சிதம்பரம் , இலங்தைத்தமிழர்களின் புனர்வாழ்வுப்பணிகள் தொடர்பில் முதல்வருடன் உரையாடியதாகவும் , இவற்றைப் பார்வையிடும் பொருட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாரம் இலங்கை செல்லவுள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி அண்øமயில் இந்தியப் பிரதமர் மன்÷ காகன் சிங்குக்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் வடபகுதி மக்களின் மீள் நிர்மானப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறியும் வகையில்,இந்திய சிறப்புதூதுவர் ஓருவரை அனுப்பி வைக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இணக்கம் தெரிவித்திருந்ததுடன் விரைவில் அனுப்பிவைக்கப்படுவார் என்றும் உறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இலங்கை வரவுள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் கைதிகளின் பெற்றோர் இன்று வாசுவுடன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் இன்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே கைதிகளின் பெற்றோர்கள் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யை சந்திக்கவுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட பலருக்கும் அவர்கள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...