10 ஜூலை, 2010

அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவை கலைக்குமாறு கோரிக்கை வைத்து சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவரை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரில் வந்து, நீர் அருந்த செய்ததை அடுத்து அவரது போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பௌத்தாலோக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதால் பௌத்தாலோக மாவத்தை முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியில் வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் வீதியை இடைமறித்து அமர்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்


பிரேசில் நாகாதலியை கொன்ற கால்பந்து வீரர்    உடலை நாய்க்கு போட்டார்ட்டின் பிரபல கால்பந்து வீரர் புரூனோ பெர்னான்டஸ் டிசோசா. இவர் அங்குள்ள பிளமஸ்கோ கால்பந்து கிளப்பில் கோல்கீப்பராக இருந்தார். திருமணமான இவர் எலிசா சாமுடியோ (25) என்ற பெண்ணை காதலித்தார். அவருடன் மறைமுகமாக குடும்பம் நடத்தினார். அதன் விளைவாக சாமுடியோ கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றார்.

அக்குழந்தைக்கு புரூனோ பெர்னாண்டஸ்தான் தந்தை என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் புரூனோ குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எலிசா சாமுடியோ திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரை புரூனோ தான் கொலை செய்திருப்பார் என போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் அவரை தான் கொலை செய்யவில்லை என புரூனோ மறுத்து வந்தார்.

இந்த நிலையில் போலீசார் புரூனோவின் மனைவி டயானா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது உறவினர் ஒருவர் புரூனோதான் எலிசா சாமுடியோவை கொலை செய்தார் என்று தெரிவித்தார்.

மேலும் கொலையை மறைக்க அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு உணவாக போட்டார் என்றும், அதிர்ச்சியுடன் கூறினார். இதைத்தொடர்ந்து புரூனோவை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிளமெங்கோ கால்பந்து கிளப்பில் இருந்து புரூனோ “சஸ்பெண்டு” செய்யப்பட்டுள்ளார். இந்த கிளப்பில் இவர் 2006-ம் ஆண்டு முதல் கோல்கீப்பராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் பிளமெங்கோ அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

வருகிற 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை இவர் இழக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உலகில் முதன் முறையாக வாலிபருக்குமுழு முகமாற்று ஆபரேசன்; பிரான்ஸ்




விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நிலையில் உள்ள வர்களுக்கு முகமாற்று ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது. முகத்தில் சிதைந்த பாகங்கள் மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் மறு சீரமைக்கப்படுகிறது. ஆனால், முகம் முழுவதையும் மாற்றும் வகையில் முழு முகமாற்று ஆபரேசனை பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட்லான் டியரி செய்து சாதனை படைத்துள்ளார்.

மரபணு கோலா நினால் முகத்தில் பாதிப்பு ஏற்பட்ட 35 வயது வாலிபர் ஒருவர் டாக்டர் லாரண்ட் லான்டியரிடம் சிகிச்சைக்காக வந்தார். முகம் முழுவதும் அகோரமாக இருந்த அவரை டாக்டர் லாரண்ட் குழுவினர் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள எளுன்ரி மாண்போர் ஆஸ்பத்திரியில் வைத்து முகமாற்று ஆபரேசன் செய்தனர்.

இதற்கு முன்பு நாயினால் கடித்து குதறப்பட்ட ஒரு பெண்ணின் மூக்கு, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளை இக்குழுவினர் முகமாற்று ஆபரேசன் செய்துள்ளனர்.

ஆனால் தற்போது கண் இமை, கண்ணீர் நாளம் போன்றவற்றிலும் ஆபரேசன் நடத்தப்பட்டது. இதற்கு முன்பு யாரும் இது போன்ற ஆபரேசன் செய்தது இல்லை. இது தான் உலகிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட முழு முக ஆபரேசன் ஆகும்.

இந்த ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சுமார் 12 மணி நேரம் ஆனது. இது டாக்டர் லாரண்ட்லாண்டி நடத்தப்பட்ட 12-வது முகமாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
மேலும் இங்கே தொடர்க...

விமல் உண்ணாவிரதம் : அரசின் முக்கிய புள்ளிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமச்சந்திர ஆகியோர் இன்று முற்பகல் வருகை தந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

விமல் வீரவன்ச ஒரு முட்டாள் : ஜயலத்

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச ஒரு முட்டாள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்படலாம். இதனால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப்பேசும் மக்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

விமல் வீரவன்சவுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

அசாதாரண நிலையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை : அரசிடம் பான் கீ மூன் கோரிக்கை

ஐநா அலுவலகதுக்கு முன்னால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஐநா செயலாளர்நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இலங்கை ஐநா அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்றுவரும் அமைதியற்ற நிலைமையை நீக்குமாறும் இயல்பு நிலையைத் தோற்றுவிக்குமாறும் அரசை பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐநா நியமித்துள்ள குழுவானது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவே அன்றி இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைக்கல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது கருத்தை ஏற்று இலங்கை அரசு செயற்படும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆர்ப்பாட்டங்கள்: மேற்குலகம் கண்டனம்

பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது

ஆர்ப்பாட்டத்தில் பான் கீ மூன் கொடும்பாவி எரிகிறது
இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நார்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை கெடுக்கும் செயல்" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்துக்கு செல்லும் வழிகளில் தடைகளை ஏற்படுத்துவதும், ஐ.நா. பணியாளர்களை துன்புறுத்துவதும், மிரட்டுவதும், சர்வதேச நடைமுறைகளை மீறும் செயல்.

மேற்குலக நாடுகள்

ஐ.நா. மன்றத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசை தாங்கள் கோருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலுவலகம் மூடல்

இதனிடையே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் ஒன்றான வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

தவிர இலங்கையிலுள்ள தனது வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே அவர்களையும் ஆலோசனைகளுக்கான ஐ.நா.வின் தலைமைச் செயலர் நியூயார்க் அழைத்துள்ளார்.

விமல் வீரவன்சவின் போராட்டத்தை ஒட்டியே ஐக்கிய நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கான பிராந்திய அலுவலகம் மூடப்படுவதாக வெளியான செய்தியை கொழும்பிலுள்ள ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகம் மறுத்துள்ளது.

இலங்கையின் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து வரும் அந்நாட்டுக்கான யு.என்.டி.பி அலுவலகம் மூடப்படவில்லை என்றும், ஆசிய பசபிக் பகுதிகளுக்கான பகுதிகளை கவனித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகமே மூடப்படுகிறது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

'ராஜினாமா செய்யத் தயார்'


அமைச்சர் வீரவன்ச தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யவும் அவர் முன்வந்துள்ளார்.

ஆனால் அவரது பதவி விலகலை ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்கள் பொலிஸில் பதிய உத்தரவு

தமிழர் முன்னர் பதிவு செய்யப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்(ஆவணப்படம்)


தமிழர் முன்னர் பதிவு செய்யப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்(ஆவணப்படம்)
இலங்கையின் தலைநகர் கொழும்பின் சில பகுதிகளில் தமிழர்கள் மீண்டும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது நடைமுறையில் இருந்த இந்த பதிவுமுறை மீண்டும் அமலுக்கு வந்திருப்பது குறித்து அங்கிருக்ககின்ற பலர் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். பலர் பெரும் பீதியும் குழப்பமும் அடைந்ததாகவும் கொழும்புச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாண சபை உறுப்பினரான குமரகுருபரன் அவர்களும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

ஏற்கனவே சிவில் நிர்வாகத்திடம் அங்குள்ள மக்கள் குறித்த பதிவுகள் இருக்கும் போது பிறிதாக பொலிஸ் பதிவு ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் குமரகுருபரன்.

ஆனால் இது ஒன்றும் புதிய விதி அல்ல என்றும் ஏற்கனவே இருக்கும் பொலிஸ் பிரமாணங்களின் அடிப்படையிலேயே தாம் இதனை செய்வதாகவும் பொலிஸ் தரப்புப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி கூறுகிறார்.

அத்துடன் இது அனைவருக்குமானது அல்ல என்றும் புதிதாக வருபவர்களே பதியப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும் இதற்காக நீதிபதியின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் தமக்கில்லை என்றும் அதற்கமைய அடையாளங்காணப்பட்ட சில இடங்களில் மாத்திரம் தாம் இந்த நடைமுறையை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அவசரகாலச் சட்டம் தற்போது அமலில் உள்ளதால், பொலிஸ் பிரமாணம் அமலில் அற்ற நிலையை அடைந்துள்ளதாக கூறும் குமரகுருபரன் தற்போதுள்ள அவசரகாலச் சட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைக்கு தாம் தயாராகி வருவதாகவும் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா சொற்பொழிவுக்கு தடையை விலக்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்





நித்யானந்தாவை பிணையத்தில் விடுவிக்கும்போது விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தளர்த்தியது. இதில், அவரது சொற்பொழிவுக்கான தடை விலக்கப்பட்டதால், வரும் 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவாற்ற உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், அண்மையில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா பி்ன்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது.

இதையடுத்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக, ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரில் உள்ள பிதாதி ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார். இதில், பக்தர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

:

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி ஜூலை 12-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய தாக்குதல்களை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ முனைப்புடன் செயல்படவில்லை.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவை கலைக்க வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி வரும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் அத்தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

PLOTE 21வது வீரமக்கள் தினம்-கனடா



விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவுகூரும் “வீரமக்கள் தினத்தில்” எமது அஞ்சலிகளை செலுத்திட அனைவரும் ஒன்று கூடுவோம்.ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

இடம்: 2723 St.Clair Ave East, East York,Canada ,M4B 1M8
காலம்: July.17.2010
நேரம்:மாலை 5-9(சனிக்கிழமை)
தொடர்புகட்கு: 416-613 2771
மின்னஞ்சல்:dplf_canada@plote.org

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா
Democratic People’s Liberation Front –(DPLF)






























































































































மேலும் இங்கே தொடர்க...

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை




ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பான எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் கிடையாது. இந்தக் குழுவின் செயற் பாட்டுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவோ விசாரணைக்காக இலங்கை வரவோ இட மளிக்கமாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது என பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட ஊடகவிய லாளர் மாநாடு நடை பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள் விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி விசாரணை செய்ய முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்நாட்டில் இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கையில் சர்வதேச குழுவொன்று தேவையில்லை. இவ்வாறு குழுவொன்று அமைக்கத் தேவையில்லை யென சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் கூறியுள்ளன.

ஜனாதிபதி நியமித்துள்ள குழுவிற்கு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை வெளியாக முன் சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கத் தேவையில்லை. எமது விசாரணையில் குறைபாடுகள் இருந்தால் ஐ.நா. குழுவை நியமித்திருக்கலாம். உலகின் பல நாடுகள் யுத்தத்திற்கு

முடிவு காணமுடியாத நிலையில் இலங்கை வெற்றிகரமாக யுத்தத்திற்கு முடிவு கட்டியது. இதனை தாங்க முடியாத சில நாடுகள் இலங்கை தொடர்பில் இரட்டை வேடமிட்டு வருகின்றன. புலிகளுக்கு ஆதரவான சில சக்திகளின் அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் குழுவொன்றை நியமித்தார்.

ஒரு வருடத்திற்கு முன் இலங்கை தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஐ.நா. முயன்றது. அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை தோற்கடித்தோம். சரத் பொன்சேகாவின் ‘வெள்ளைக் கொடி’ கதையினால் மீண்டும் இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. எனவே விசாரணை நடத்தத் தேவையில்லை என அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படவில்லை. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடலுக்காகவே ஐ.நாவுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். ஐ. நா. நடவடிக்கைகள் வழமைபோல சுமுகமாக இடம்பெறுகின்றன. ஜனநாயக வட்டத்திற்குள் எவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. தமது கட்சி நிலைப்பாட்டின் படியே விமல் வீரவங்ச உண்ணாவிரதம் இருக்கிறார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. பிரதிநிதியை நியுயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கை




அரசாங்கம் கவலை; பிராந்திய அலுவலகமே மூடப்பட்டதென்கிறார் ஜீ.எல்



ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலக விவகாரத்தில் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவசரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னேயை கலந்துரையாட லுக்காக நியூயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கையாகு மென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பான் கீ மூனின் இந்த நடவடிக்கையை யிட்டு அரசாங்கம் கவலையடைவதாகவும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போது பேராசிரியர் தெரிவித்தார்.

ஐ. நா. சபையின் கொழும்பு அலுவலகப் பணிகள் இடை நிறுத்தப்பட்டு வதிவிடப் பிரதிநிதி திருப்பி அழைக்கப் பட்டதாக வெளியான செய் திகளை நிராகரித்த பேராசிரியர் பீரிஸ், நீல் பூஹ்னே கலந் துரையாடலுக்காகவே அழைக் கப்பட்டுள்ளதாகவும் அது வழமையான செயற்பாடென்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு அலுவலகத்திற்குப் பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியிருக்கிறது என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், ஐ.நா. கொழும்பு அலுவலகத்திற்கு எந்தத் தீங்கோ, ஆபத்தோ, அச்சுறுத்தலோ ஏற்படாது என்று அரசாங்கம் நியூ யோர்க்கிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஐ. நா. அலுவலகப் பணிகள் மீண்டும் தொடரும். இது ஓரிரண்டு மணித்தியா லத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினையன்று. எவ்வாறெனினும், இந்த வார இறுதிக்குள் அரசாங்கம் முடிவொன்றை எடுக்கும்” என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று எட்டப்படுமென்றும் சொன்னார்.
மேலும் இங்கே தொடர்க...

விமல் வீரவன்ச இராஜஙீனாமா: ஜனாதிபதி ஏற்பதற்கு மறுப்பு



தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, வீடமைப்பு நிர்மாணப் பொறியியல் துறை அமைச்சுப் பதவியை நேற்று இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகவும் ஆனால் ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் எம்.பியும் கட்சியின் அரசியல் பீட உறுப்பினருமான ஜயந்த சமரவீர கூறினார்.



விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஐ. நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு தொடர்பில் அரசாங்கம் நேற்று தனது நிலைப்பாட்டை வெளியிட்டது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய சிரேஷ்ட அமைச்சர்கள்; மேற்படி நிபுணத்துவ குழுவை கலைப்பது குறித்து ஐ. நா. மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளது. அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ், மைத்ரிபால சிரிசேன ஆகியோர் இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றினர்.

ஐ. நா.வுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவைப் பேணி வருகிறதெனவும் சகல பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பேணுவதற்கு உச்ச அளவில் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை நடுநிலையாக

பேணி வருவதாகவும் அதன் காரணமாகவே அணிசேரா மாநாடு இலங்கையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறினார்.

சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகள் இந்த விசேட குழுவை ரத்துச் செய்யுமாறு ஐ. நா. செயலாளரை கோரியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜயந்த சமரவீர; அமைச்சர் விமல் வீரசன்ச தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தையும் ஊடகங்களுக்கு விளக்கினார்.

அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையில் இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படலாம் என்பதாலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவைக் கட்டுக்கோப்பை பாதுகாப்பதும் இதன் நோக்கமாகுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நாடுகளின் தூதரகங்களுடன் தமது கட்சி பேச்சு நடத்தி வருவதாகத் தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் புவாட் முஸம்மில் இங்கு கூறினார்.

இதன்படி, நேற்று (09) ரஷ்ய தூதரகத்திற்கு மனுவொன்றை கையளித்ததாகவும் ரஷ்யா தலையிட்டு நிபுணத்துவ குழுவை வாபஸ் பெறச் செய்யுமாறும் தமது கட்சி கோரியதாக அவர் கூறினார். இது குறித்து தமது நாட்டுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரஷ்ய தூதரகம் உறுதியளித்தது. இன்று சீனா மற்றும் இந்திய தூதரகங்களுடன் பேச உள்ளதாகவும் முஸம்மில் குறிப்பிட்டார்.

சாகுவரை உண்ணாவிரதம் தொடர்கிறது....

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. அவர் கடந்த 34 மணித்தியாலங்களாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருவதனால் அவரது உடல் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் புவாட் முஸம்மில் தெரிவித்தார்.

ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலம்

தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, ஐ. நா. அலுவலகத்திற்கு முன்னால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை தொடருகின்ற நிலையில், நேற்று அவரது கட்சியினர் ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு நியமனம் தொடர்பில் ரஷ்யா இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தும், மேலும் ஆதரவை கோரியும் கொழும்பு ப்ளோவர் வீதியில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி தேசிய சுதந்திர முன்னணியினர் பேரணியை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘ரஷ்யாவுக்கு நன்றி’ என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...