21 நவம்பர், 2009

சுவீஸில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாடு-

சுவீஸில் நடைபெற்று வரும் இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் இறுதிநாள் இன்றாகும். சுவிஸின் பிறவுன் பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு இன்றுடன் மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்படுவதாக கூறப்படுகின்றது. இக்கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், , தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செயலர் ஹசன்அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றியுள்ளனர்.

78 இலங்கை அகதிகளும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவரென தகவல்-

இந்தோனேசியாவிலுள்ள ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து வெளியேறிய 78இலங்கை அகதிகளும் இன்னும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ரியூ தீவிலுள்ள டக்வின்டினா முகாமில் குறித்த 78 இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களுக்கு ஐ.நா சபையின் அகதிகள் பேரவை அகதி அந்தஸ்து வழங்காதவிடத்து அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசிய செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் தமது நாடு அகதிகள் தஞ்சம்பெறும் நாடாக இருப்பதை தாம் விரும்பவில்லையெனவும், எனவே அகதிகள் ஒரு மாற்றுக் குடியேற்ற நடவடிக்கையினை தீர்மானிக்க வேண்டுமென்றும் இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஓசியானிக் கப்பலில் இருந்த 78அகதிகளும் மனிதாபிமான அடிப்படையிலேயே இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் பரிசீலித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப15.00மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்


புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் தமது சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படுவர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக நடமாடக் கூடிய வகையில் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியேற்றப்படுவர்" என்றார்.

அகதிகளுக்கு முக்கியத்துவமிக்கதொரு விசேட அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிற்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது
மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்- ஜெனரல் சரத் பொன்சேகா

தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தாய் நாட்டுக்கு எதிராக நிலவிவந்த 30 வருட கால பயங்கரவாத்தை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்தினர் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகளாவர். உண்மையான தொழில்சார் இராணுவ வீரர்களாக யுத்தத்தை எதிர்கொண்டதன் விளைவாகவே பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த கம்பீரதன்மையை தொடர்ந்து இராணுவத்துக்குள் தக்கவைத்து கொண்டிருக்க வேண்டும். எந்தவொருவரும் இராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. யுத்தத்தை வெற்றிகொண்டு தாய்நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை சிலர் தூற்றுவதற்கு முற்படுகின்றபோதிலும் யுத்த வெற்றியின் உண்மையான பங்காளர்கள் தாமே என்பதை இராணுவ வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து விலகிக்கொண்டதன் காரணமாகவே 30 வருட கால பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளை, வீரர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் என்னால் முடியாது போயுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக சேவையாற்றிய மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு கவலையடைகிறேன். எனது 40 வருட கால சேவையின் நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை காரணத்தால் இந்தக் கடிதம் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றக்கிடைத்த காரணியாக அமைந்துள்ளது.

எனது உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்புக்குக்கு 100 வீரர்களையாவது பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாத அதேவேளை, தற்போது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 60 பாதுகாப்பு வீரர்களையும் 3 வாகனங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றதையடுத்து உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளது. தற்போது வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்வதற்கும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச்செயற்படவேண்டுமென்றால்




இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச் செயற்படவேண்டுமென்றால், முதலில் எங்களை நாங்களே ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மனம் ஈடுபடுகின்ற மாயங்களின் பயனாய் அது தன்மீதும், பிறர் மீதும் திணிக்கப் படுபவற்றையும் அவற்றின் விளைவுகளையும் குறிக்கும் ஒரு தன்மை. இதைத்தான் 'தன் ஏமாற்று' என்பார்கள்.
குறிப்பாக இப்போது உள்ள நெருக்கடி நிலையில் ஒவ்வொருவரும் தன்னை ஏமாற்றிக் கொள்வது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்வது என்றால்அதை வெறும் சொல்லளவில் பின் தொடர்ந்து பார்க்காமல் உள்நாட்டமாக, அடிப்படையாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். நாங்கள் எல்லோரும் மிக எளிதில் வார்த்தைகளுக்கும் எதிர் வார்த்தைகளுக்கும் திருப்திப் படுபவர்களாக இருக்கின்றோம்இதுதான் எங்கள் எல்லோரினதும் நடைமுறையாக உள்ளது.

தன்னை ஏமாற்றிக் கொள்வதில் முக்கிய அங்கமாகத் திகழ்வது ஏதோ ஒன்று நடக்கும் என்ற நப்பாசைதான். எடுத்துக்காட்டிற்கு, போர்களுக்கான விளக்கம் போரை நிறுத்தவில்லை என்பது எம் அனைவருக்கும் புரியும். பல ஆய்வாளர்களும் அனுபவம் கொண்டவர்களும் போரைப்பற்றியும்அதன் காரணி பற்றியும் விளக்கம் தந்துள்ளார்கள். ஆனாலும் போர் ஏதோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதுவும் முன் எப்போதையும்விட கூடிய அழிவு சக்தியுடன் தொடர்கின்றது. உண்மையில் அக்கறை கொண்டவர்கள் இந்த வார்த்தை விளக்கத்தைத் தாண்டி அப்பாற் சென்று எங்களுக்குள்ளே அடிப்படையான மாற்றத்தை நாடவேண்டும்எங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் அடிப்படையில் மீட்கும் வழி அது ஒன்றுதான்.

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஏமாற்றுவது பற்றி அறிய முற்படும்போது மேலெழுந்தவாரியான விளக்கங்களிலிருந்தும் பதில்களிலிருந்தும் எம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை எமது சிந்தனையுடனும் செயலுடனும் கவனிக்க வேண்டும்.
பிறரை எப்படிப் நாங்கள் பார்க்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாளாந்தம் எப்படி செயற்படத் தொடங்குகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
தன்னை ஏமாற்றிக் கொள்வதன் அடிப்படையும் அதற்கான காரணமும் என்ன?
எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை எம்மில் எத்தனைபேர் புரிந்திருக்கின்றோம்?

எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை உணர்ந்தாற்றான் தன்னை ஏமாற்றிக் கொள்ளுதல் என்ன? அது எப்படி வருகிறது? என்பவை பற்றிச் சிந்திக்கலாம்.
தன்னை ஏமாற்றுதல் என்பது எங்களுக்கு ஒருவித உந்து சக்தியையும் ஆற்றலையும் செயற்திறனையும் அளித்து இதை மற்றையவர்கள் மீது திணிக்கவும் தூண்டுகிறது. ஆகவே தன்னை ஏமாற்றுதல் எம்மீது மட்டும் சுமத்தப்படுவதுடன் நில்லாது படிப்படியாக மற்றையவர்கள் மீதும் எம்மால் சுமத்தப் படுகிறது. இதுதான் ஒன்றன்மீது ஒன்று செயற்படும் தன் ஏமாற்று நடைமுறை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகவும் குறிக்கோள் உடனும் நேர்த்தியாகவும் சிந்திக்க வல்லவர்கள் என நினைத்துச் செய்கின்றோம். ஆனாலும் நடைமுறையில் இச்சிந்தனையால் நாமே நம்மிடம் ஏமாந்துள்ளோம் என்பதை உணருவதில்லை.

எம் சிந்தனை நடைமுறையில் எப்படி ஏமாந்திருக்கிறது என்றால், எங்களுடைய சிந்தனையே தேடுகின்ற அதாவது நியாயத்தைத் தேடுகின்ற ஒன்று. எங்கள் நடவடிக்கைகளை சரி என வழிப்படுத்துவது. மற்றையவர்களின் நடவடிக்கைகளில் பிழை பிடிப்பது. இப்படிப் பல எங்களுடைய சிந்தனை என்பது தன்னை ஏமாற்றிக் கொள்வதுதானே?
ஆதாவது ஒன்றை விரும்புகின்ற அந்தக் காரணத்தினாலேயே எளிதில் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையைக் கொண்டு வருகின்றோம், அல்லது தோற்றவிக்கின்றோம். இது எங்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்தானே.
ஓரு பிரச்சனையை எப்படி அறிகின்றோம், அதாவது என்ன உள் நோக்கத்தோடு, என்ன உந்துதலோடு, எந்த ஆசையோடு என்பதுதான் முக்கியம்.

தேடுகின்ற நாங்கள் ஒவ்வொருவரும் இந்த ஏமாற்று வேலையை எங்கள் மீது திணித்துக் கொள்ளுகின்றோம். இதை நாங்களே செய்கின்றோம், வேறு யாரும் இதைத் திணிக்க முடியாது. நாங்களே எங்களுக்குள் செய்கின்றோம்.
நாங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக ஏமாற்றுதலைத் தோற்றுவித்து பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றோம்; இதுதான் நடைமுறை. நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏதோ ஒரு விதத்தில் குறை கூறுகின்றோம். ஒவ்வொருவரும் மற்றையவர்களுடன் போட்டி போடுகின்றோம். இந்த மொத்த விளையாட்டுப் பந்தயம் எங்கள் எல்லோருக்கம் தெரியும்; இது ஒரு அசாதாரண தன் ஏமாற்று நடைமுறை.

நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்வரை ஒற்றுமை இருக்க முடியாது. இதனாற்றான் ஒற்றுமை என்றால் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
மேலும் எங்களுக்கு எப்படி ஒத்துழைப்பது என்பது புரியாது. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் நாங்கள் தோற்றுவித்த ஒரு முடிவிற்காக சேர்ந்து செயற்பட முயல்கின்றோம் என்பதுதான்.
இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் அல்லது பல குழுக்கள் மத்தியில் சிந்தனை ஏற்படுத்திய பொதுவான குறிக்கோள் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இருவரும் எந்த ஒன்றாகவும் ஆகவேண்டும் என்ற குறிக்கோளும் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இதை உணர்வதுதான் எங்கள் ஒவ்வொருவருக்கம் உரிய தேடலாகும்.
மேலும் நீங்களும் நாங்களும் ஏதோ ஒன்றாக விரும்பினால் பின்னர் நம்பிக்கைகளும் மற்றையவைகளும் அவசியமாகின்றது. அதாவது நாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை. இலக்குத் தேவைப் படுகின்றது.
ஆனால் உண்மையாக ஒத்துழைப்பு ஏற்பட வேண்டுமானால் எங்களிடத்தில் எந்தவிதத் தன் ஏமாற்றும் இல்லாமல் அறிவு பொய்த் தோற்றம் ஆகிய தடைகளும் இல்லாமல் முன் அனுபவக் கருத்துக்களும் இல்லாமல் இருந்தாற்றான் உண்மையான ஒத்துழைப்பு ஏற்படும்.

ஆதே நேரத்தில் நீங்களும் நாங்களும் சிந்தித்து செயல்படுத்தி திட்டமிட்டு விளைவையும் பயனையும் தீர்மானித்து ஒன்றாகக் கூடி உழைத்தோமானால் அதில் உள்ள நடைமுறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆதாவது அந்த நடைமுறை எங்களுடைய சிந்தனைகளும் அறிவாற்றல் படைத்த மனங்களும் சந்திக்கின்றது என்பது தெளிவு. ஆனால் உணர்ச்சிபூர்வமாக மொத்த உள்ளமைப்பும் அதை எதிர்க்கின்றது. இதுதான் தன்னை ஏமாற்றுதலைக் கொண்டு வருகின்றது. இதுதான் எங்களுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குகின்றது. இது எங்கள் அன்றாட நடைமுறையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏப்படி என்றால் நீங்களும் நாங்களும் அறிவுபூர்வமாக ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய இணங்குகின்றோம். ஆனால் உள் மனதின் ஆழ்நிலையில் நீங்களும் நாங்களும் முரண்படுகிறோம். எங்களுடைய திருப்திக்கு ஏற்றபடி நாங்கள் ஒரு பயனை வேண்டுகின்றோம். நாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றோம். எங்களுடைய தலைமைத்துவத்தை முன் எடுக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து உழைப்பதாகச் சொன்னாலும் இதுதான் மன ஆழத்தின் நிலைமை?

ஆனாலும் நாங்கள் இருவரும்தான் அந்தத் திட்டத்தைத் தோற்றுவித்தவர்கள். ஒருவரை ஒருவர் எதிர்க்கின்ற நேரம் வெளிப்புறத்தில் அத்திட்டத்தை ஒத்துக்கொண்ட போதிலும்கூட நாம் எதிர்க்கவே செய்கின்றோம்; இதுதான் எங்கள் எல்லோருடைய நடைமுறையும்கூட. ஏன் எல்லா உலகத் தலைவர்களினதும் நடைமுறையுங்கூட; இதுதான் தன் ஏமாற்று நிலை.
எடுத்துக்காட்டாக எல்லா மதங்களும்; சகோதரத்துவம், ஒரே கடவுள், ஒற்றுமை என்று எல்லாம் பேசுகின்றன. ஆனால் அந்த அந்த மதக்காரர்கள் அவரவர் நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். அதே வேளை கொள்கையாகவும் அறிவாற்றலாகவும் இது இப்படித்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறோம். உள்நிலையில் நாம் ஒருத்தருக்கு ஒருவர் எதிரியாக உள்ளோம்.

இப்படித்தான் நாங்கள், நீங்கள் ஏன் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும், உள் நடைமுறை எங்களுக்குள் இப்படித்தான் இருக்கின்றது.
ஆகவே இந்தத் தடைகளை அதாவது தன் ஏமாற்ற வேலையாக உள்ள ஒருவித மன ஆற்றலை கொடுக்கக் கூடிய இந்தத் தடைகளை உடைக்காவிட்டால் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒத்துழைப்பே இருக்க முடியாது. இதை நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்திக்க வேண்டும்.
ஓரு கூட்டத்தோடு ஒரு குறிப்பிட்ட கருத்தோடு ஒரு கொள்கையோடு ஒன்றுபடுத்திக் கொள்வது இருக்கும்வரை ஒத்துழைப்பை ஒருபோதும் எங்களால் கொண்டு வர முடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் முட்கம்பிக்குள் உள்ள மக்களின் பிரச்சைனைகளைத் தீர்ப்பதற்கும் உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கம் கூட ஒன்றாகத் தீர்மானிக்க முடியவில்லை. பிரச்சனையைத் தீர்க்கும் கொள்கை பற்றித்தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது முட்கம்பிக்கள் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்ற நினைக்கின்றோம். ஆனாலும் எப்படிக் காப்பாற்றவது என்ற கொள்கை பற்றித்தான் அதிகம் கவலைப் படுகின்றோம..

மக்களின் பட்டினிப் பிரச்சனைக்குள்ள முக்கியத்துவத்தை விட அதை எப்படித் தீர்ப்பது என்பதுதான் எல்லோருக்கும் கூடிய கவலை அளிக்கிறது. இது ஒரு அப்பட்டமான தன் ஏமாற்றுச் செயல் என்பதை நாங்கள் உணர வேண்டும்.
மேலும் சில கடந்த கால, கடந்து வந்த பாதைகளில் இருந்து சில நபர்பற்றி சில குழு பற்றி பல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றோம். அந்த அனுபவத்தோடு ஒட்டிக்கொண்டும் இருக்கின்றோம், ஆனால் அனுபவம் பெற்றதின் மொத்த நடைமுறையினுள்ளும் சென்று பார்ப்பதில்லை. என்னில் அனுபவம் பெற்றேன், அது போதும், அதை நாங்கள் இறுகப் பற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதன்மூலம் அந்த அனுபவங்களைக் கொண்டு எங்களையே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். இதனாற்றான் புதிய தளத்தில் புதிய பிரச்சனையைப் புதிதாகப் பார்க்க முடியவில்லை. அப்படியாயின் எப்படி ஒன்றாக வேலை செய்வது?

நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவித நம்பிக்கையோடும் கடந்த கால அனுபவங்களோடும், ஒரு பொது வேலைத் திட்டத்திற்காக ஒன்று படுத்திக் கொண்டுள்ளோம். இதனால் எங்களுடைய மனம் இதற்குள் கட்டுப்பட்டு இருப்பதால் பிரச்சனையின் ஆழத்திற்கு போய்ப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றோம். இதனால் நாங்கள் மீண்டும் தனியே ஒதுங்கி நம்முடைய குறிப்பிட்டவர்கள் நம்பிக்கைகள் அனுபவங்கள் ஆகியவற்றில் இருக்க விரும்புகின்றோம். அதாவது எங்களையே நாங்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்தித்து இந்த தன்னை ஏமாற்றும் செயலிலிருந்து விடுபட்டு பழைய அனுபவங்கள், முடிவுகள், கருத்துக்களை விட்டு விட்டு ஒரு பொதுவான பிரச்சனையை ஒட்டிய ஓட்டத்திற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏனெனில் பிரச்சனை எப்பொழுதும் புதியது. ஆகவே எல்லோரும் பிரச்சனையை ஒட்டிய தொடர்ந்த ஓட்டம் ஓடவேண்டிய கால கட்டம். இனியும் தன் ஏமாற்று வேலையிலிருந்து விடுபட்டு எங்கள் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சனை ஒன்றுதான் அதை ஒட்டி தொடர்ந்தும் ஓட்டம் ஒன்றின் மூலம் ஒன்றாக நாங்கள் எல்லோரும் வேலை செய்வோம்.

நன்றி
ஞானம்
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களை ஜனவரிக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டம்

வடக்கு மக்கள் குறித்து பசில் இன்று முக்கிய அறிவிப்பு


வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுள் பெரும்பான்மையானோரை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்திவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்னமும் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் மட்டுமே மீளக்குடியமர்த் தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வவுனியாவில் தற்போது 1, 27, 495 பேர் மட்டுமே மீளக் குடியமர காத்திருப்பதாகக் கூறினார். கடந்த வாரம் 132, 748 பேர் அங்கு இரு ந்ததாகவும் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இன்று ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய வட பகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துப் பேசுவதுடன், வடக்கு மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பொ ன்றைச் செய்வாரென்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

வடபகுதி மக்கள் இது வரை பெற்றிராத விடய ங்கள் தொடர்பாக இந்த அறிவிப்பு வெளி யாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

‘வவுனியாவிலிருந்து மேலும் 5000 பேர் மீளக்குடியமர ஆயத்தமாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2034 பேரும், மன்னாரில் 970 பேரும், திருகோணமலையில் 2762 பேரும் மீளக்குடியமரவும் காத்துள்ளனர். வைத்தியசாலைகளில் 3067 பேர் உள்ளனர். அரசாங்கத்தின் ஐந்தாம் கட்ட மீள்குடியேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாராட்டியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் அறிவிப்புடன் சர்வதேசத்திற்கும் மேலும் தெளிவாக நாம் எமது நிலையை எடுத்துரைக்க முடியும். மீள்குடியேற்றம் தாமதமாகுவதாகக் கூறியவர்கள் இன்று பாராட்டுவது நாட்டுக்குக் கெளரவமாகும். நாளை அல்லது மறுதினம் மீள்குடியேற்றம் 50% ஐயும் தாண்டிவிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில், இடர்முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.



மேலும் இங்கே தொடர்க...