25 டிசம்பர், 2009

25.12.2009.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே-


பேரியல் அஸ்ரப்- முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பௌஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவியபோதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள்

- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் வந்தவண்ணமிருப்பதாக தேர்தல்கள் செயலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் கடந்த 23ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதேவேளை இடம்பெயர்ந்தவர்கள் தமது வாக்குகளை செலுத்துவதற்காக வாக்குச் சாவடிகளை ஸ்தாபிப்பது தொடர்பாக ஆராய தேர்தல்கள் செயலக அதிகாரிகள் சிலர் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பிரதேசங்களுக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை-

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தியமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மேம்பாலங்களை அமைக்கும் திட்டத்துடன் சேர்த்து மேலும் 200 இரும்புப் பாலங்களையும் அமைக்க நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பாலத்திற்கும் 800 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்தப் பாலங்களை அமைப்பதற்காக நெதர்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்பிவைப்பு-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தகுதிகாணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கிடையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்திலிருந்து 54ஆயிரத்து 935விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 12ம் 13ம் திகதிகளில் அரச சேவையாளர்கள் அஞ்சல்மூல வாக்குளை அளிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய விமானம் ஈரானுக்கே ஆயுதங்களை எடுத்து வந்ததாக தகவல்-


வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்ட விமானத்திலிருந்து தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் மேலும் 12நாட்களுக்கு தடுத்து வைக்கப்படவுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்தத் தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை ஏற்றிவந்த இந்த விமானம் தாய்லாந்தில் கைப்பற்றப்பட்டபோது அதிலுள்ள ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அந்த விமானம் ஈரானுக்கான ஆயுதங்களையே வடகொரியாவிலிருந்து எடுத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளுக்கு உதவிய சிங்கப்பூர் வர்த்தகர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்-

புலிகள் இயக்கத்திற்கு சொத்து ரீதியாகவும், ஆயுதக் கடத்தலிலும் ஒத்துழைப்பு வழங்கியதாக கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகரொருவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 49 வயதான பால்தேவ் நாயுடு என்கிற அவர் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு கடத்தப்பட்டுள்ள அவர் அமெரிக்காவில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரென்றும் தெரியவருகின்றது. புலிகளுக்கு நிதியிடல் உள்ளிட்ட சொத்து ரீதியான ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார். பால்தேவ் நாயுடு சிங்கப்பூர் ரிபோம் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
மலையகப் பெருந்தோட்டங்களில்
முகவர் தபால் நிலையங்கள்
உப தபாலகங்களாக மாற்றம்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முகவர் தபால்; நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லச்சாமி தெரிவித்தார்.

மலையகத் தோட்டங்களில் முகவர் தபால் நிலையங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 126 கட்டடங்கள் பல வருடங்களாகத் திறக்கப்படாமல் உள்ளன. எனவே, இவற்றை உப தபாலகங்களாக மாற்றியமைத்துத் திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் செல்லச்சாமி, தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
தகவல் ஈழமைந்தன்


இரு தசாப்தங்களின்பின் மீண்டும் இயங்கும்
கிளிநொச்சி மாவட்டச் செயலகம்


கிளிநொச்சி மாவட்டச் செயலகம் (கச்சேரி) கடந்த இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் முழுமையாக அரசாங்க சிவில் நிர்வாகத்தின் கீழ் தொழிற்படத் தொடங்கியுள்ளது.

யுத்தத்தின்போது சிதைவடைந்த கிளிநொச்சி மாவட்டச் செயலகம் புனரமைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி அரச அதிபர் உட்பட கச்சேரியில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இதுவரை வவுனியாவிலிருந்தே கடமைக்குச் சென்றுவந்தனர். தற்போது 50 உத்தியோகத்தர்களுடன் மாவட்டச் செயலகம் இயங்குவதாக அரச அதிபர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கீழ் ப+நகரி, கரைச்சி, பச்சிளைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல் ஈழமைந்தன்

வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கைக்கு நடவடிக்கை

வட பகுதியில் கைவிடப்பட்ட 1,83,074 ஏக்கர் காணியில் மீண்டும் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 64,894 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருவதோடு 2009ஃ2010 பெரும்போகத்தின்போது 18,689 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தார்.

பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்காக ஏற்கெனவே 39 ஆயிரம் புசல் விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர விவசாயம் செய்வதற்குத் தேவையான பசளை, நிவாரண விலையில் வழங்கப்பட்டுள்ளதாகவம் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழமைபோல விவசாயம் செய்வதற்காக டிரக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 550 நீர் இறைக்கும் இயந்திரங்கள், 105 டிரக்டர்கள், 210 சைக்கிள்கள், 30 மோட்டார் சைக்கிள்கள், 08 சிறியரக டிரக்டர்கள் என்பனவும் 260 கனரக இயந்திரங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ் மாவட்டத்தில் 24,028 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 23,480 எக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 17,389 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருகிறது. மோதல் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தவு மாவட்டங்களில் நெற்செய்கை முழுமையாகச் சேதமடைந்தது.

எதிர்வரும் தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கைவிடப்பட்ட 41,340 ஏக்கர் வலயத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 63,262 ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட உள்ளது. இதுதவிர யாழ் மாவட்டத்தில் 8,727 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 29,422 ஏக்கரிலும் புதிதாக பயிரிட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,100 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் பயிரிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல யாழ் மாவட்டத்தில் 2,669 ஏக்கரிலும் மன்னார் மாவட்டத்தில் 7,610 ஏக்கரிலும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சொந்த இடங்களில் குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.
தகவல் ஈழமைந்தன்

மேலும் இங்கே தொடர்க...

விண்ணுலகில் நின்று தேவன் இறங்கி வருகிறார்

http://d.mobilehomepages.de/c/d/B0DF13/857869/ssc5/home/091/marijean.mobilehomepages.de/albums/jesuskind.gif


விண்ணுலகில் நின்று தேவன் இறங்கி வருகிறார்நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் புதிய பாதை இனைய குழுவினரின் எல்லோரும் எல்லா வளமும் பெற்று தன்னை போல் பிறரையும் நேசித்து தாய் தந்தை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து எமக்காக இன்னொர்வர் விட்டு தரவேண்டும் என்று எண்ணாமல் அவருக்காக நாம் விட்டு கொடுத்து வாழவேண்டி எமது நத்தார் வாழ்த்துகள்
புதியபாதை
மேலும் இங்கே தொடர்க...



“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்


புதியபாதை
ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்


புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகஊடகங்;களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளதுஎன்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை
எடுத்து கூறுவோம்!

-புதியபாதை ஏற்பாட்டுகுழு

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771


தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன் மகள் தப்பினார்
சவுதி தூதரகத்தில் தஞ்சம் வீட்டு சிறையில் இருந்து பின்லேடன் மகள் தப்பினார்




கெய்ரோ : ஒசாமா பின்லேடனின் 17 வயது மகள் ஈரானின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பி விட்டார். அவளுக்கு டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் தஞ்சம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதையடுத்துஇ அந்த அமைப்பின் தலைவராக ஒசாமா பின்«லடனின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஆப்கனிலிருந்து வெளியேறி ஈரானில் நுழைய முற்பட்டனர். அப்போதுஇ அவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில்இ பின்லேடனின் மகள் இமான் மற்றும் 5 மகன்களும் அடங்குவர்.

இந்நிலையில்இ கடந்த சில தினங்களுக்கு முன்பு இமான்இ நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு வீரர்களை ஏமாற்றிவிட்டு வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து விட்டார். இவர் ஈரானின் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ÔÔஷாப்பிங் சென்றபோது இமான் தப்பிச் சென்றார். சவுதி தூதரகத்தின் உதவியுடன் ஈரானை விட்டு வெளியேறி இருக்கலாம். இப்போதுஇ சிரியாவில் உள்ள எங்கள் அம்மாவுடன் இமான் சேர்ந்திருப்பார்ÕÕ என பின்லேடன் மகன் ஓமர் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்க 20 ஆயிரம் தமிழ் அகதிகள் மனு



கொழும்பு,​​ டிச.22: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வாக்களிக்க 20 ஆயிரம் தமிழ் அகதிகள் மனு செய்துள்ளனர்.

​ ​ ​ இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ளது.​ இதில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபட்சவும் அவரை எதிர்த்து ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.

​ ​ ​ விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இதுவாகும்.​ இதனால் இந்தத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.​ ​

​ ​ ​ ​ இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக 15 லட்சம் தாற்காலிக அடையாள அட்டைகளை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.​

அதிபர் தேர்தலில் வாக்களிக்க உதவும் இந்த அடையாள அட்டை கோரி 20 ஆயிரம் தமிழ் அகதிகளும் விண்ணப்பித்துள்ளனர்.​ இவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போரின்போது புலம்பெயர்ந்தவர்களாவர்.​ ​ ​

​ ​ ​ புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வியாழக்கிழமைக்குள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.​

அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

​ ​ ​ புலம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் விண்ணப்பங்கள் அளிப்பதோடு,​​ அவற்றை நிரப்பித் தர உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கிராம நல மையங்களில் இதற்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புலம்பெயர்ந்த மக்களுக்கான நல்வாழ்வு சேவை அமைச்சர் ரிஸôத் பத்தியுதீன் தெரிவித்தார்.​

முகாம்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் குடியமர்த்தப்படுவர் என்றும் அவர் உறுதி அளித்தார்.

​ ​ ​ இதுவரை அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக 25 ஆயிரம் முஸ்லிம்கள் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.​ ஏற்கெனவே கிராமசேவை மையங்கள் மூலம் அடையாள அட்டை விநியோகிக்கும் பணியை அடுத்தவாரம் தொடங்க உள்ளதாக அவர் கூறினார்.​

15 லட்சம் பேருக்கு தாற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே தேர்தலுக்கு முன்பாக 1.5 லட்சம் பேருக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இறங்கும்போது இரு துண்டாக உடைந்தது அமெரிக்க விமானம்



வாஷிங்டன், ​​ டிச.23:​ அமெரிக்காவில் இருந்து 154 பேருடன் வந்த விமானம்,​​ ஜமைக்கா நாட்டு விமான நிலையத்தில் இறங்கி ஓடுகையில் இரு துண்டுகளாய் உடைந்தன.

​ எனினும் இந்த பெரிய விபத்தில் இருந்து 154 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.​ ஆனால் 40 பயணிகள் காயமடைந்தனர்.

​ அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 148 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மியாமியில் இருந்து ஜமைக்காவுக்கு வந்தது.​ ​

இந்நிலையில் கிங்ஸ்டோன் விமான நிலையத்தில் இறங்கி ஓடுபாதையில் வேகமாக ஓட ஆரம்பித்த சற்று நேரத்தில் விமானம் இரு துண்டுகளாக உடைந்தன.​ இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அலறினர்.​ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் திகைத்துப் போயினர்.

​ இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கிங்ஸ்டோன் விமான நிலைய அதிகாரிகளும்,​​ பிற நாடுகளுக்கு செல்லக் காத்திருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

​ தகவல் அறிந்ததும் விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து விமானத்துக்குள் நிலைகுலைந்து கிடந்த அனைவரையும் மீட்டனர்.​ காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

​ பயணிகள் யாரும் பலமாகக் காயமடைந்தனரா,​​ அவர்களது நிலைமை ஆகியவை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை.

காரணம் தெரியவில்லை:​ இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சரிவரத் தெரியவில்லை.​ விபத்துக்கான காரணத்தை அறிவதற்கு ​ தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.​ விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் சரிவரத் தெரியாத நிலையில் அதுகுறித்து எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
பிடிபட்ட புலிகளுக்கு இலங்கையில் உளவியல் சிகிச்சை


வவுனியா:மாஜி விடுதலைப் புலி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான பாதிப்பை போக்குவதற்கு, அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இலங்கை ராணுவ அதிகாரி தம்மிகா வீரசிங்கே கூறியதாவது:விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, ஏராளமான தமிழர்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்தவர்கள், பொதுமக்களுடன் முகாமில் கலந்து வசித்து வந்தனர். அவர்களை ராணுவத்தினர், அடையாளம் கண்டு, கைது செய்தனர். அதில், 12 ஆயிரம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பில் இருந்தது தொடர்பான மனரீதியான பாதிப்பில் இருந்து, இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உளவியல் நிபுணர்களை கொண்டு, இவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு வீரசிங்கே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...
“புதியபாதை சுந்தரம்” 28வது நினைவு தினம்



புதியபாதை
ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்


புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்;களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்”
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி

ஊடகத்துறையை காப்போம்! உண்மையை
எடுத்து கூறுவோம்!

-புதியபாதை ஏற்பாட்டுகுழு

மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771
மேலும் இங்கே தொடர்க...

24.12.2009.
யாருக்கு ஆதரவளிப்பது, தமிழ்க்கூட்டமைப்பின் தீர்மானம் ஜனவரி 04ம் திகதியே



யாருக்கு ஆதரவளிப்பது, தமிழ்க்கூட்டமைப்பின் தீர்மானம் ஜனவரி 04ம் திகதியே வெளியாகும் ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதான இரண்டு கட்சிகளினதும் வேட்பாளர்களை மீண்டுமொரு தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 04ம் திகதி தமது தீர்மானம் வெளியிடப்படுமென தமிழ்க் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாஜினும்
சுயாதீனமாக போட்டியிடும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை எனவும், தேர்தல்களை பகிஷ்கரிப்பதில்லை எனவும் தமிழ்க் கூட்டமைப்பினரால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய மராக் துறைமுகத்தில் உள்ள கப்பலிலுள்ள இலங்கையர் ஒருவர் நோயினால் மரணம்-

இந்தோனேசிய மராக் துறைமுகத்தில் தரித்துநிற்கும் சட்டவிரோத இலங்கைக் குடியேற்றவாசிகளை ஏற்றிய கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு 11.30அளவில் மரணமடைந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மரணித்தவர் 29வயதுடைய ஜேக்கப் கிறிஸ்டியன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 11 வாரங்களாக இந்தப் படகில் உள்ளவர்கள் அப்பகுதியில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நோய்வாய்ப்பட்டிருந்தவர் தொடர்பில் கப்பலில் உள்ளவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் உரிய வைத்திய சிகிச்சைகளுக்கு கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தமையே இந்த மரணத்திற்கு காரணமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மையினர் ஜீவமரணப் போராட்டமாக கருத வேண்டும்-ரவூப் ஹக்கீம்-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை சிறுபான்மையின மக்கள் ஜீவமரணப் போராட்டமாக கருதிச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியகுழு உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை மக்கள் மாத்திரமன்றி நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களும் ஆட்சிமாற்றம் தேவையென்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த தீர்மானம் தேர்தலுக்கு ரெண்டே நாளைக்கு முன் எடுக்கப்படும்-தமிழ்க் கூட்டமைப்பு-

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித்தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி எடுக்கப்படும் என தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தியுள்ள போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதான இரண்டு கட்சிகளினதும் வேட்பாளர்களை மீண்டுமொரு தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாவெறினும், சுயாதீனமாக போட்டியிடும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை எனவும், தேர்தல்களை பகிஷ்கரிப்பதில்லை எனவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு எதிராக இன்றுபிற்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான பலர்; கலந்து கொண்டதுடன், பேரணியாகவும் சென்று ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டதில் மேல்மாகாண ஆளுனரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலான மற்றும் மேல் மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பதுளையிலும் இன்று ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.


நீண்டகால, குறுகியகால சிறைத்தண்டனை கைதிகளை வேறுபடுத்த தீர்மானம்-

நீண்டகால மற்றும் குறுகியகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை வேறுபடுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. நீண்டகால தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலைக்கும், குறுகியகால சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் டீ..ஆர்.சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இக்கைதிகளை அநுராதபுரம், வடரெக, பல்லேகல, கல்தென்ன ஆகிய திறந்தவெளி சிறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் இடநெருக்கடியை ஓரளவேனும் குறைக்க முடியும். நாட்டின் சகல சிறைகளிலும் தண்டனை அனுபவித்து வருகிற மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 28ஆயிரம்பேர் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு நாளொன்றுக்கான உணவுக்கு சுமார் 240ரூபா செலவிடப்படுகிறது. இதேவேளை யாழ்ப்பாணத்திலும் சிறைச்சாலையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியமேற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளிடையே சிறைக்கூடமொன்று நடத்தப்பட்டு வருகின்றது என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கின் ஏழு மாவட்டங்களில் 34 ஆயிரம் கண்ணிவெடிகள் வெடிபொருட்கள், மீட்பு

வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர்மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர்நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களைஅகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரதெரிவித்தார். (450,402,744)

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்புமற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து படையினர் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்து ள்ளதாகஅவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டத்தின் தற்போதைய நிலையை நேரில்பார்ப்பற்கு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில்கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் அங்குஅழைத்துச் செல்லப்பட்டது.

பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள், நிவாரணக் கிராமங்களில்தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள்மற்றும் துரித மீள்குடியேற்றத்திற்காக படையினர் மற்றும் ஏனையஅமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைஊடகவியலாளர் குழுவினர் காண முடிந்தது.

பரிய தம்பனை, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களில்எப்.எஸ்.டி.யினால் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைகாண முடிந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரு க்கு கருத்துதெரிவித்த பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,

மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைஅரசாங்கத்தின் வேண்கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டுநிபுணத்துவ அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

2002ம் ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரத்து 336 கண்ணிவெடிகள் மற்றும்வெடிபொருட்களை இராணுவத்தின் மீட்டெடுத்துள்ளனர். 17,323 கண்ணிவெடிகள், 19 யுத்த தாங்கி ஒழிப்பு கண்ணிகள் 16,994 வெடிபொருட்கள் இவற்றில் அடங்கும்என்றார்.

சுவிஸர்லாந்தை தளமாகக் கொண்ட (பெடரே ஷன் சுவிஸ் டீமைனில்) எப்.எஸ்.டி. என்ற அமைப்பு பெரிய தம்பணை, பெரிய பண்டிவிரிச்சான் பகுதிகளில்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப் பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப்பரப்பிலிருந்து பெருந்தொகையாக கண்ணிவெடிகளையும் பல்வேறுவெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக எப்.எஸ்.டி.அமைப்பின்பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு தெரிவித்தார்.

அடர்ந்த காடுகளும், பாலடைந்த பிரதேசங்களாகும். இருப்பதால் பல்வேறு நவீனஇயந்திரங்கள், உத்திகள் இதற்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும்குறிப்பிட்டார். கண்ணிவெடி அகற்றும் இராணுவ படைப்பிரிவின் பொறுப்பாளர்கேர்ணல் பிரசந்த விமலசிறி உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.



'பொன்சேகாவின் பொறுப்பற்ற கூற்றுக்கு அரசே பதிலளிக்கும் நிலை'

சரத் பொன்சேகா படை வீரர்கள் தொடர்பாக பொறுப்பற்ற கூற்றை கூறினாலும்அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கே ஏற்பட்டுள்ளது. எனவே, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் உரிய பதில் கொடுக்கப்படும்என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அது தவறாக கூறப்பட்டவை என்று பொன்சேகா கூறினாலும். நா. சபை இது தொடர்பில் அரசிடமே விளக்கம்கோரியுள்ளது. எனவே, தகுந்த ஆதாரங்களுடன் உரிய பதில்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும்தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குவிளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்கதகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்றுஇடம்பெற்றது. அமைச்சர் யாப்பா இங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் கூற்றில்நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், ஒரே கூற்று தொடர்பாக மூன்றுசந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான வெவ்வேறு கருத்துக்களைகூறியுள்ளார்.

நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு அரசாங்கம் பாராளுமன்ற அமர்வில் விளக்கம்கோரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் சென்ற சமயம்ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இதன் மூலம், இதன் பின்னணிஎன்னவென்பது தெளிவாக தெரிகின்றது.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக இதுபோன்ற கீழ் தரமான செயற்பாடுகளைசெய்யவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறான செயலைஅரசாங்கம் ஒருபோதும் செய்யப்போவ தில்லை என்றும் அமைச்சர்திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை சி. என். என். பி.பி.சி, தமிழ் நெட், இன்டசிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள்முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில்இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொன்சேகாவேபதில் கூறவேண் டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தான் அவ்வாறு கூறவில்லை என்று பொன்சேகா இதுவரைக் கூறவில்லை. தான்கூறிய கருத்துக்கள் தவறாக கூறப்பட்டுள்ளது என்றே கூறியுள்ளார்.

அதே சமயம், இராணுவத் தளபதி பதவியிலிருந்து தான் விலகியமைக்கானகாரணத்தை அவர் மூன்று ஊடகங் களில் ஒன்றுக் கொன்று முரணானவிதங்களிலேயே கூறியுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சரத்பொன்சேகாவின் ஒழுக்கம் தொடர்பாக அமைச்சர் இந்த மாநாட்டின்போதுகேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்த பொன்சேகாவை அமெரிக்காஅழைத்தபோது இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஜே. வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொன்சேகா கேட்டார் என்று ரின்வின் கூட்டம்ஒன்றில் கூறியதை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

ரில்வியின் அந்த கூற்றுக்கு பொன்சேகா எந்தவித மறுப்பையும் விடுக்கவில்லை. பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற பதவிலிருக்கும் ஒருவர் மூன்றாம்நபரிடம் இது தொடர்பில் கேட்க முடியும் என்றும். இதுவா பொன்சேகாவின்ஒழுக்கம் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.



புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோம்

நமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோ மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சமாதானத்தின் இளவரசரான இயேசு நாதரின் பிறந்த நாளை முழு உலகமும் பேருவகையுடன் கொண்டாடும் இவ்வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலை விட்டும் நீங்கிய ஒரு நாட்டில் இவ்வருட நத்தார் பண்டிகையை கொண்டாடக் கிடைத்தமை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகின்றது.

நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் அன்பு, கருணை, கொடை என்பதாகும், இது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை அம்சமான அன்பு பற்றிய போதனையை தன்னுடன் கொண்டுவந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று சேர்க்கின்றது.

மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களின் சிதைந்துபோன வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, எமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்து ணர்வு, சகிப்புத்தன்மை என்ற புதிய பாலங்களைக் கட்டியெழுப்பும் இந்த அன்பையும் கருணையையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்.

பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.

நத்தார் பண்டிகையின் நாதஒலி நல் உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை பரப்புகின்றது.



மேலும் இங்கே தொடர்க...