25 அக்டோபர், 2009

ஓமந்தை ரயில்நிலையத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்க நடவடிக்கை-
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பிலான எதுவித உறவுகளுமில்லையென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பிலான எதுவித உறவுகளுமில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு சபையில் அரசியல் ரீதியிலான உதவிகள் செய்தமை தொடர்பில் சீனாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மிகவும் விசேடமான இந்த உறவு மேலும் வளர்ச்சிடையக் கூடியதென அவர் கூறியுள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் பொருட்டு இந்தியா நிகரற்ற உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவின் ஓமந்தை ரயில்நிலையம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை தாண்டிக்குளம் வரையிலான ரயில் நிலையங்களுக்கு சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், ஓமந்தை ரயில் நிலையம் சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. நாட்டில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் இல்லாத அங்கவீனமுற்றவர்களுக்கான விசீட் நிலையமொன்றும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கே தொடர்க...
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்த பயன்படும் படகு மட்டக்களப்பில்
புல்மோட்டையில் தங்கியுள்ள குடாநாட்டு மக்களை அனுப்பிவைக்க நடவடிக்கை-

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து திருமலை, புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். புல்மோட்டையிலிருந்து அழைத்துச் செல்லப்படுபவர்கள் வவுனியா ஆண்டியாப் புளியங்குளம் முஸ்லிம் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். முதலாவதாக தீவகத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் புல்மோட்டையிலிருந்து இன்று வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு நாளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து புல்மோட்டையில் தங்கியுள்ள யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேச மக்களும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500பேர் புல்மோட்டை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதுமீட்கப்பட்டதாக தகவல்-

மட்டக்களப்பு பெரியகல்லாறு காளிகோவிலுக்கு அருகாமையில் இருந்து மீட்கப்பட்ட படகு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படகு நேற்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலீசார் இப்படகை மீட்டுள்ளனர். சுமார் 50பேர்வரை பயணிக்கக்கூடிய இந்தப்படகில் 30நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகை நேற்றுமாலை 4.30அளவில் பொலீசார் கரைக்குக் கொண்டுவந்துள்ளதுடன், படகிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த பிரதேசத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்காகவே படகு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்திருக்கலாமென பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
புலிகளுடன் தொடர்புடைய இருவர் கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரால் கைது-
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் புலி உறுப்பினர் கைது-

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ்மா அதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர் புலிகளின் மருத்துவப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் என அக்கரைப்பற்று பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 21வயதுடைய குறித்த புலி உறுப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து டைமர்கள் 03, டெட்டுனேற்றர் 01 மற்றும் சீ4 ரக வெடிபொருள் 870கிறாம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் 26வயதுடைய இளைஞர்கள் எனவும், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
நாடு திரும்ப மறுத்த இலங்கை பெண்ணால் பரபரப்பு

சென்னை: கோர்ட் உத்தரவுப்படி, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க அழைத்து வரப்பட்ட இளம் பெண் ஒருவர், நாடு திரும்ப மறுத்து, ஆவணங்களை கிழித்து ஆர்பாட்டம் செய்தார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்தவர் நிஷாராணி (25). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துபாய் சென்ற இவர், சமீபத்தில் போலி இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஐதராபாத் வந்தார். இது குறித்து நடந்த வழக்கில், நிஷாராணியை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிஷாராணிக்கு தற்காலிக விசா மற்றும் ஆவணங்கள் ஆந்திர போலீசாரால் தயார் செய்யப்பட்டன. பின், அவரை நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப்படும் ஜெட்லைட் விமானம் மூலம் அனுப்பி வைக்க ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் அழைத்து வந்தனர்.

ஜெட் லைட் விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், அந்த விமானத்தில் ஏறுவதற்காக நிஷாராணி காத்திருந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்த தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை நிஷாராணி கிழித்து எறிந்தார். "இலங்கையில் யாரும் இல்லை. நான் அங்கு போகமாட்டேன்' என்று கூச்சலிட்டார். இந்த தகவல் அறிந்த ஜெட் லைட் விமான பைலட், நிஷாராணியை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டார்.

கோர்ட் உத்தரவை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில், நிஷாராணியின் இந்த செய்கையினால் அதிர்ச்சியடைந்த ஆந்திர போலீசார், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் அழைத்து வந்தனர். அங்கு, நிஷாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிஷாராணிக்கு மீண்டும் ஒரு தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது என்றும், அதன்பின் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்றும் முடிவாகியது. சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு முனையத்தில் நடந்த இந்த சம்பவத்தால், நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது
மேலும் இங்கே தொடர்க...
அம்பாறையில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு உதவிய மாணவரும் கைது



மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த யாமினி எனப்படும் இந்திரராஜா பவரீட்டா (வயது 26) என்ற விடுதலைப் புலி உறுப்பினரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் தென். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டு மாணவன் ரி.வினோதரன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பிலுவிலைச் சேர்ந்த குறித்த மாணவனிடம் கடந்த ஏப்ரில் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளின் ஒருவரான நகுலன் குறித்த பெண் விடுதலைப் புலி உறுப்பினரை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி ஒப்படைத்ததாகவும்.

இதனையடுத்து ஆலையடிவேம்பில் இப்பெண் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக இக்கைது தொடர்பாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதி பெற்று அவசர கால சட்ட விதிகளின் கீழ் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...
முகாம்களில் மக்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலை வருத்தமளிக்கிறது-நீல் பூனே


இலங்கையின் மனிதாபிமான தேவைகள் பொருட்டான, உதவி வழங்குனர்களின் பொறுப்புக்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனே தெரிவித்துள்ளார்.

மனிதாபிமனத் தேவைகள் தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு நன்கொடையளர்களிடமிருந்து கிடைத்த பிரதிபலிப்பு சிறப்பாக இருந்தது.ஆனால் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலைமை குறித்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முகாம்கள் தொடர்ந்தும் சுதந்திரமற்று மூடப்பட்டுள்ள நிலையிலேயே இருக்கின்றமை வருத்தமளிப்பதாக இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்படாமை மற்றும் பெருந்தொகையானவர்கள் விடுவிக்கப்படாமை போன்ற காரணங்களால், பெரும்பாலான உதவி வழங்குனர்கள் அடுத்து 3 அல்லது நான்கு மாதங்களுக்கான உதவிகள் குறித்து சிந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உதவி வழங்குனர்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் செயற்திட்டங்களின் ஊடாக மனிதாபிமான பொறுப்புகளுக்கு உதவி வழங்குவது, மனிதாபிமான விளைத்திட்டத்தின் ஊடாக 2009ம் ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.

பாரிய எண்ணிக்கையாக மக்கள் இடம்பெயர்ந்த காலக்கட்டத்தில் தேவையாக இருந்த 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் உதவி வழங்குனர்கள் பொறுப்புடன் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதானமாக உணவு, தங்குமிடம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களுக்காக பல்வேறு நிதியிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் ஒக்டோபர் 23ம் திகதி வரையான காலப்பகுதியில் மனிதாபிமான விளைதிட்டத்தின் கோரிக்கைக்கு அமைய 150.092.037 டொலர்கள் அல்லது 57 சதவீதமான நிதி பாதுகாக்கப்பட்டுள்ளது.

7,194,828 டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் மொத்த மனிதாபிமான நிதி 209,758,256 டொலர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது 2010 ஆண்டுக்கான மனிதாபிமான நிகழ்சித்திட்டங்கள் தொடர்பில் முகவர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் குடியமர்த்தல் திட்டங்களுக்காகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
ரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்று மட்டக்களப்பில் மீட்பு



சட்ட விரோத ஆட்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன் பிடி வள்ளமொன்று நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு கடலோரம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வள்ளத்தில் பயணம் செய்ததாகக் கருதப்படும் 30 முதல் 40 பேர் வரை வள்ளத்தை விட்டு இறங்கி தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர்வாசிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வள்ளத்தில்"நீர்கொழும்பு" என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் வள்ளம் சோதனையிடப்பட்ட போது மருந்துப் பொருட்கள் ,தண்ணீர்ப் போத்தல்கள் ,பிஸ்கட்கள் மற்றும் சில உணவுப் பொருட்களுடன் எரிபொருட்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் பொலிஸாரினால் விசேட தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இது வரை எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.குறித்த வள்ளத்தில் வெளிநாடொன்றிற்கு சட்ட விரோத குடியேற்றத்திற்காக சென்றிருக்கலாம் என சந்தேகிகப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
ராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை
இராணுவ அதிகாரிகள்


அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்பு:பெற்றோலிய கூட்டுத்தாபனம்


பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களுடனான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுத்து விநியோக நடவடிக்கைகளை இன்று மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தொரதெனிய தெரிவிக்கையில்," பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று முன் தினம் முதல் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் டீசலுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை. அத்துடன் சில நிலையங்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றொல்ல நியோகிக்கப்படுகின்றது." எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
சமளங்குளத்தைச்சேர்ந்த திரு.திருநாவுக்கரசு கிருபாகரன்
(தோற்றம்
12.02.1978.. மறைவு-24.10.2009) மரணமானார்


kirubakarankrans22.gif

வவுனியா சமளங்குளத்தைச் சேர்ந்த திரு.திருநாவுக்கரசு கிருபாகரன் (தோற்றம்-12.02.1978.. மறைவு-24.10.2009) மரணமானார் என்பதை அவரது குடும்பத்தினர் சார்பாக புதியபாதை இணையம் ஆழ்ந்த துயரத்துடன் அனைவருக்கும் அறியத் தருகின்றது. இவர் திரு.திருமதி திருநாவுக்கரசு பாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும், ஈச்சங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை கிருபாவின் அன்புக் கணவரும், தருணியின் (01வயது மகள்) பாசமிகு தந்தையும், அமரர் சிவகுரு, திருமதி சி.சித்திரம் ஆகியோரின் மருமகனுமாவார். மற்றும் சுபாஜினி, சீலகுமார் (சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமதி. சீ.வாசுகி, திரு.க.சிவநேசன் (பவன் -புளொட் மத்தியகுழு உறுப்பினர்) ஆகியோரின் மைத்துனரும், கிதுர்சன், பொன்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், நிருபா, பிரணவன், சச்சுதன் ஆகியோரும் அன்பு மாமனும், பரமானந்தம், சோமசுந்தரம், சிவசுப்பிரமணியம், நமசிவாயம், கண்ணன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன், அன்னாருக்கு அதிரடி இணையம் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளையும் செலுத்திக் கொள்ளுகின்றோம். இறுதிக் கிரியைகள் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...
சுய தொழிலில் ஈடுபட மலையக இளைஞர் யுவதிகளுக்குக் கடன் : அமைச்சர் ஆறுமுகன்











மலையகத்தில் தொழிலற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 78 பேருக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவி வழங்கும் வைபவம் ஒன்று நேற்று 23 ஆம் திகதி ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.

சௌயமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் நவசக்தி திட்டத்தின் மூலம் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படும் இந்தக் கடனுதவி வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரஜா சக்தி நிலையங்களின் ஊடாக இனங்கண்ட 78 பேருக்கு மாடு, கோழி வளர்ப்பு, விவசாயம், வியாபாரம், வேல்டிங், தையல் போன்ற சுய தொழில்களை மேற்கொள்ளவே இந்தக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

"இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அமைச்சின் அனுசரணையுடன் இவ்வருடம் ஜனவரி மாதம் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 78 இளைஞர்களுக்கு சுயத்தொழிலுக்கான கடனுதவிகளை வழங்கினோம். அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் 69 பேருக்கு இவ்வாறான கடனுதவிகளை வழங்கினோம்.

தற்போது மூன்றாம் கட்டமாக 36 லட்சம் ரூபாவை நுவரெலியா, அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கியுள்ளோம்.

எனது அமைச்சுக்கும் மக்கள் வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் மூலமாகவே இந்தக் கடன் வழங்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் சுய தொழிற்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனை நன்கு புரிந்து கொண்டு சுய தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கூட்டாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது இந்தத் தொழிற்துறையை மேலும் முன்னேற்ற முடியும்.

சுய தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்தத் தொழிலில் உரிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மலையக இளைஞர் யுவதிகளுக்குத் தொடர்ந்து எனது அமைச்சின் ஊடாக சுய தொழில் வாய்ப்புக்கள் மேலும் பெற்றுக் கொடுக்கப்படும்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...