15 நவம்பர், 2010

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு




பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன. இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய பரிந்துரையை ஆணைக்குழு முன்வைக்கும் : சி.ஆர்.டி. சில்வா

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை அமர்வுகளின் போது பொது மக்கள் வெளியிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான பரிந்துரையை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுதீர்வு காண்பது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறையில் நடைபெற்ற போது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் அமர்வு இடம்பெற்றது. இதில் பொது மக்கள் பலர் சாட்சியமளித்தனர். இந்நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

உங்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். இன்று (நேற்று) அமர்வுகளின் இறுதிநாளாகும். இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்களிடம் எடுத்துக் கூறினர். எமது உணர்வுகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியவாறான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாங்கள் அவற்றை மதிப்பிட்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்போம். 30 வருட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அவசியம்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே: தயா மாஸ்டர்

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு சாட்சியமளித்த தயா மாஸ்டர் மேலும் கூறியதாவது :

நான் ஒரு காலத்தில் புலிகளின் ஊடகத்துறையில் இணைப்பாளராகச் செயற்பட்டேன். புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் கீழே இந்த ஊடகப் பிரிவு வருகின்றது. புலிகள் அமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அந்த அமைப்பை விட்டு நான் வெளியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். காரணம் பேச்சுவார்த்தைகளை முறிப்பதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் மக்களின் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது என நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தேன்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது எண்ணிலடங்காத மக்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு மத்தியிலும் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர். எனது குடும்பமும் நானும் பல தடவைகள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்டு வந்தோம். 2009 ஜனவரியில் போர் எங்கு நடைபெறும் என்ற வரையறை இல்லாமலிருந்தது. அதன் பரிமாணம் விரிவடைந்தது. மக்கள் அங்கலாய்த்தவர்களாகக் காணப்பட்டனர். உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

ஒவ்வொருவரும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தமையே உண்மை நிலைமையாகும். அந்தக் காலகட்டங்கள் வாழ்வில் மறக்கமுடியாதவை. தப்புவதற்கு முயற்சித்த பல்லாயிரக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அந்தச் சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறேன்.

எப்படியோ போன உயிர்களைத் திருப்பிப்பெற முடியாது. ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தோம்.ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

யாழில் இடம்பெற்ற தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம்: சுனில் ஹந்துன்நெத்தி

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சற்று முன்னர் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கச் சென்ற வேளையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சீருடை அணிந்தோரே எம்மைத் தாக்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் தாண்டி எம்மை தாக்கியுள்ளனர்" என்றார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஜே.வி.பி தலைமையகத்திலும் பிற்பகல் 4 மணியளவில் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

‘முகத்தில் துணியை போட்டு விழுத்தி கதறக் கதற கம்பி ஏற்றினர்’ குவைத்தில் பாதிக்கப்பட்ட லட்சுமி

மூன்று மாதங்களாகச் சம்பளம் எதும் வழங்காமல் வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் ஒருநாள் திடீரெனத் தாக்கி கையில் சிறு கம்பிகளை ஏற்றியதாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் மீனாட்சி லட்சுமி தெரிவித்தார்.

மூன்று மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தக் கவலையில் நான் தனியாக அழுது கொண்டிருந்த போது அங்குவந்த வீட்டு உரி மையாளர் முகத்தில் துணியொன்றைப் போட்டு கீழே வீழ்த்தினார். அதன் பின்னர் அங்கு வந்த அவரின் மனைவி கையில் வைத்திருந்த சிறு கம்பிகளை ஏற்றினார்.

கதறி அழ அழ கம்பி ஏற்பட் டது” எனத் துக்கத்துடன் கூறினார் லட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர்; அந்த வீட்டிலிருந்து வெளியேறி 3 மாதங்கள் குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் தங்கியிருந்ததாகக் கூறினார்.

அங்கிருந்து வீட்டைத் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை யென்றும் தெரிவித்தார். பின்னர் நவம்பர் 11ம் திகதி இலங்கை திரும்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் லட்சுமி கூறினார். இவருடைய இடது கையிலிருந்து 8 சிறிய கம்பிகளும் காலிலிருந்து ஒரு கம்பியும் வெளியேற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி






முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளு நர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப் பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் (ரினிஞிரிஜி) ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல் லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்பட வுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

துணுக்காய் பிரதேச சபைக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு கோடி 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணுக்காய்

11 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பிரதேச சபை அலுவலகமும், 16 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கடைத் தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மாந்தை கிழக்கு

5.5 மில்லியன் ரூபா செலவில் பாண்டியன் குளம் பிரதேச சபை அலுவலகமும், 6.5 மில்லியன் ரூபா செலவில் பொன்னகர் கிராமிய சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கரைத்துறைப்பற்று (மரிடைன்பற்று)

14 மில்லியன் ரூபா செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அலுவலகமும், 2 மில்லியன் ரூபா செலவில் செம்மாலை பிரதேச சபை உப அலுவலகமும் 2 மில்லியன் ரூபா செலவில் கொக்கிளாய் பிரதேச சபை உப அலுவலகமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

புதுக்குடியிருப்பு

ஆறு மில்லியன் ரூபா செலவில் ஒட்டுச் சுட்டானில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப அலுவலகமும், முத்தையன் கட்டு சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டுத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத்துக்கு நிழல்: தேசிய மரநடுகைத் திட்டம் 11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை மு.ப 10.07 மணிக்கு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையொட்டிய பல தேசிய நிகழ்வுகள் இன்று தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம் பெற இருக்கின்றன.

அர சாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவுள்ளது. 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவுள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இக் கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர் பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவும் அனுபவிக்கவும் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...