5 மே, 2011

ஸ்பெக்ட்ரம்: சிதம்பரத்தை விசாரிக்க பாஜக கோரிக்கை




இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வியாழனன்று பாஜக தலைவர் நிதின்கட்கரி மற்றும் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது, சிதம்பரம் தான் நிதியமைச்சராக இருந்தார். ராசா சொல்வதையெல்லாம் அவர் கேட்டுக்கொண்டார். அதனால், 2ஜி விவகாரம் தொடர்பாக சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தும்வரை விசாரணை முழுமையடையாது. இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று அப்போது சிதம்பரம் சொல்லியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் அப்படிப்பட்ட ஒரு பரிந்துரையை அளித்தார் என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் கரும்புள்ளி இருக்கிறது. அதை கண்டுபிடிக்க வேண்டும்,’’ என்றார் பாஜகவைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா.

யஷ்வந்த் சின்ஹாவின் இந்த புகார் தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை தனது கருத்துக்களை வெளியிடவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஒசாமா கொலை: முழு தகவல் தேவை" ஐநா






அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார்.

ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் - பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதே நேரம், ஆயுதமற்ற ஒருவரை கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் விசாரணை

இதேவேளை ஒசாமா பின் லாடன் தன் நாட்டிலிருந்ததை தனது உளவு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுவது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக மூத்த பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை இரவில் ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரை கொன்ற தாக்குதல் நடவடிக்கை குறித்து தமக்கு எவ்வித விவரமும் முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்று பாகிஸ்தானிய இராணுவத் தளபதிகள் கூறியுள்ளனர்.

ஒசாமா பின் லாடனின் மூன்று மனைவிகளை தற்போது தாம் தடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ள அவர்கள், அதில் ஒருவர் யெமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒசாமா பின் லாடனுடன் தான் அந்த வீட்டில் ஒரு அறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாழந்து வந்ததாக விசாரணையின் போது தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.

இந்த வீட்டில் மொத்தமாக 13 குழந்தைகள் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்கப் படையினரால்


பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

கொடுரமான நிலையில் இருக்கும் சடலத்தை அப்படியே அப்பட்டமாகக் காட்டும் இந்தப் புகைப்படங்கள் வன்செயல்களுக்குத் தூண்டலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தங்களுக்குள் விவாதித்ததாகவும், தங்களிடமுள்ள புகைப்படத்தில் இருப்பது ஒசாமா தான் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் டி என் ஏ மாதிரியின் சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஒசாமா பின் லாடனை கொன்றுவிட்டோம் என்பதில் தங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்றும் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் தலையில் சுடப்பட்ட ஒருவரது சடலத்தின் கொடூரமான காட்சியை அப்பட்டமாகக் காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என்பது ஒரு முக்கியமனா பிரச்சினை என்று கூறியுள்ள ஒபாமா, அதனை யாராவது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டால், அதனால் வன்செயல்கள் தூண்டப்படலாம் என்பதனையும் தாங்கள் கருத்தில் கொண்டதால் தான் அந்த புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பின்லாடனின் அல்கயீதா அமைப்பினரால், செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த போது நியூயார்க் நகரின் மேயராக இருந்த ரூடி ஜூயூலானி அவர்கள் அதிபர் ஒபாமாவின் கருத்துடன் முரண்படுகின்றார்.

என்றோ ஒருநாள் இந்த புகைப்படங்கள் எப்படியாவது வெளிவரத்தான் செய்யும் என்று கூறியுள்ள அவர் அப்படிப்பட்ட நிலையில் அவற்றை இப்போதே வெளியிடுவதுதான் சரி என்றும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அதன் தீவிரம் குறைந்து போகும் என்றும், இவற்றை வெளியிடுவதன்மூலம் பின் லாடனின் அடையாளத்தை உறுதிப்படுத்த நினைக்கும் ஆட்களையாவது திருப்திப்படுத்த முடியும் என்றும் ரூடி ஜூயூலானி கருத்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக இது ஆபத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட கால அளவில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசை மாற்றுவதாக கூறிய அறிக்கைகள் ஆதாரமற்றவை ரொபட் ஓ பிளேக் கூறுகிறார் பின்லேடனும், பிரபாகரனும் உலகில் மிகப் பெரிய பயங்கரவாதிகள்






இலங்கையில் அரசாங்க மாற்றமொன்றை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புகிறதென்று வெளிவந்துள்ள அறிக்கைகள் ஆதாரமற்றவையென்று இங்கு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் திட்டவட்டமாக அறிவித்துள் ளார். ஒசாமா பின்லேடன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரே உலகிலிருந்த மிகக் கொடிய பயங்கரவாத தலைவர்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்வதற்கு தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பினால் தான் தன்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கக்கூடியதாக இருந்ததாக தெரிவித்த ரொபட் ஓ பிளேக், தாம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி அங்கத்தவர்களையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக கூறினார்.

தமக்கு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு முதல் தடவையாக நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பை இந்த இலங்கை விஜயம் பெற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த அவர், கிளிநொச்சியில் அமெரிக்காவின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை தாம் நேரில் சென்று பார்த்ததாகவும், இவ்விரு மாவட்டங்களும் தாம் இலங்கையின் தூதுவராக இருந்த போது எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டில் இருந்ததென்றும் அவர் ஞாபகப்படுத்தினார்.

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 4,000 நீர் இறைக்கும் இயந்திரங்களை அன்பளிப்புச் செய்த நிகழ்விலும் தாம் கலந்து கொண்டதாகவும் இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் அங்குள்ள 17,000 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயத்தை வாழ்வாதாரமாக மேற்கொள்வதற்கு பேருதவியாக அமையுமென்று கூறினார்.

இங்கு தாம் இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் நடத்திய உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலம் இலங்கையுடன் பங்காளியாக இணைந்து இலங்கையின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறதென்றும் உறுதியளித்ததாக அவர் கூறினார்.

எனவே, அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் இன்றிருக்கும் அரசாங்கத்தை மாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றது என்ற அறிக்கை ஆதாரமற்றது என்று மறுப்புத் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் அழிவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் தமது அரசாங்கம் உதவி செய்யும் என்று தெரிவித்த அவர், மக்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி சமாதானமான ஐக்கிய ஜனநாயக இலங்கையை வலுவடையச் செய்வதற்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.

ரொபட் ஒ பிளேக் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் யதார்த்தபூர்வமான முன்னேற்றத்தை நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறதென்று பாராட்டுத் தெரிவித்து, இந்த முன்னேற்றத்தை நிலைத்திருக்க செய்ய வேண்டுமென்று கூறினார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இப்போது ஒரு பிரதான பணியை ஏற்படுத்துவதற்கு சிறந்த பணியை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்த அவர், இந்த ஆணைக்குழுவின் முன் இலங்கையர் பெரும்பான்மையானோர் சகல பிரதேசங்களில் இருந்தும், இனங்களின் பின்னணியில் இருந்தும் சாட்சியமளித்துருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

இந்த ஆணைக்குழு அநீதியை தனிப்பட்டவர்கள் பகிரங்கப்படுத்தி, தங்களுக்கு யுத்த காலத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரங்களையும், இழப்புகளையும் எடுத்துரைப்பதற்கு சிறந்த மேடையாக அமைந்ததென்று தெரிவித்தார். இந்த யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான சிறந்த சிபாரிசுகளை செய்யுமென்று ரொபட் ஓ பிளேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் பேரில் பெரும்பான்மையானோர் அவர்கள் பல மாதங்களாக தங்கியிருந்த முகாம்களில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், இன்னும் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் 2011ம் ஆண்டு முடிவடைவதற்குள் மீள் குடியேற்றப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படுமென்று தெரிவித்தார்.

ரொபட் ஓ பிளேக் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவம் பல சர்வதேச தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் அமைப்புகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்று ஏற்கனவே ஐந்து மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவை உடைய பிரதேசத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியை வெற்றிகரமாக இலங்கையின் வடமாகாணத்தில் நிறைவேற்றியிருக்கிறதென்று கூறினார். முல்லைத்தீவு பிரதேசத்தில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி விரைவில் முடிவடைந்தவுடன் இன்னும் முகாம்களில் தங்கியிருக்கும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்த முடியுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

முல்லைத்தீவுக்கு சென்றிருந்த தாம், அமெரிக்க அரசாங்கம் அன்பளிப்பு செய்த பல்லாயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட மீனவர்களையும், மீனவப் பெண்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததென்றும், இதன் மூலம் வடக்கிலுள்ள மேலும் பலருக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குமென்றும் கூறினார்.

இலங்கை அரசாங்கம் பல்வேறு இடங்களில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்திய பிரதேசங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், இதனால் யுத்ததத்னால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி வாழ்வாதாரங்களை ஆரம்பிப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கத் தலைவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் பல சந்தர்ப்பங்களில் உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றது என்று தெரிவித்த அவர், மே மாதம் 12ம்திகதி இவ்விரு தரப்பினர்கள் மீண்டும் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு பாரிய இணக்கப்பாட்டு உடன்பாட்டை ஏற்படுத்தி யுத்தத்தினால் அனைத்து இலங்கையருக்கும் ஏற்பட்ட வடுக்களை சுகமாக்கி அனைவரும் சம உரிமையுடன் எதிர்காலத்தை நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமான ஒரு சூழ்நிலை உருவாகுமென்றும் அவர் கூறினார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பேன் என்று தமக்கு தெரிவித்த கருத்து குறித்து தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இதன் மூலம் ஐ.நா. செயலாளர் நாயகத்துடனும் அவரது குழுவினருடனும் நல்லுறவை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள் ளதை தாம் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.நாவின் அறிக்கை ஒரு நிலையான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்தை வலியுறுத்தி அதன் மூலம் வளம்மிக்க வினநாயக சுதந்திரத்தையுடைய ஐக்கிய இலங்கையொன்றை ஏற்படுத்த முடியுமென்று வலியுறுத்துகிறதென்றும், எனவே, இது விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்குமிடையில் நல்ல உறவுகள் நிலைத்திருப்பது அவசியமென்று கூறினார்.

இறுதியாக உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தோல்வியடையச் செய்து அமெரிக்கா அடைந்த வெற்றி குறித்து தமக்கு தெரிவித்த நல்லாசிகளை தாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த பயங்கரவாதியின் மறைவு சமாதானமான பாதுகாப்பான சுயகெளரவத்தையுடைய வாழ்க்கையை மேற்கொள்வதில் விருப்பமுடைய அனைத்து மக்களுக்கும் கிடைத்த ஒரு பெரு வெற்றியென்றும் கூறினார். இந்த பயங்கரவாதியின் மறைவு இறுதியில் உலகை நாம் வாழும் ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றுமென்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலி உறுப்பினர்கள்;


வெளிநாட்டு தூதுவர்கள், ஐ. நா பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு செயலர் விளக்கமளிப்பு


புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு அமைச்சு ஊடாக முன்னெடுத்து வரும் புனர்வாழ்வு செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள்,ஐ.நா. பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டிஷ், அவுஸ்திரேலியா, கனடா உட்பட 30 நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களும், ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், உலக உணவு தாபனம் உட்பட இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு புனர்வாழ் திணைக்களம் வழங்கிவரும் முழுமையான வசதிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் விளக்க மளித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முறை அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான விபரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இங்கு விவரித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நிர்வாக சேவை : சித்தியடையாத தமிழ் மொழிமூல அதிகாரிகளுக்கு விசேட பரீட்சை






இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான பரீட்சையில் சித்தியடையாத வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் அதிகாரிகளுக்கு விசேட பரீட்சை நடத்தப்படவிருக்கிறது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உறுதியளித்துள்ளார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கான பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது பிரஜைகள் முன்னணித் தலைவர் ஜே. ஸ்ரீரங்கா எம். பி. கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த உறுதிமொழியை வழகியிருக்கிறார்.

கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் தெரிவுக்கான பரீட்சையில் தமிழ் பரீட்சார்த்திகள் எவரும் சித்தியடையவில்லை. இதனாலேயே தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும் இங்கு கூறப்பட்டது.

ஏற்கனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மூல பரீட்சார்த்திகளுக்கு விசேடமாக பரீட்சைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளுக்கு விசேடமான பரீட்சை நடத்தி நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜே. ஸ்ரீரங்கா அமைச்சரிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தமிழ் மொழிமூலம் பரீட்சார்த்திகளுக்கு வினாத்தாள்கள் விசேடமாக தயாரிக்கப்பட்டு மீண்டும் பரீட்சைகள் நடாத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மாத்தறை, மாவரல்லயில் இனந்தெரியாதோர் சூடு: 6 பஸ் வண்டிகள் பலத்த சேதம்






மாத்தறை மாவரல்ல பகுதியில் நேற்று அதிகாலையில் இனந் தெரி யாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு பஸ் வண்டி களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மாத்தறை - மித்தெனிய, மாத்தறை - கம்புறுபிடிய ஆகிய வீதிகளில் போக்குவரத்துச் செய்யும் பஸ் வண்டிகளுக்கே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது.

பஸ் வண்டி உரிமையாளரின் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஏழு பஸ் வண்டிகளில் ஆறு பஸ் வண்டிகளுக்கே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ரீ. 56 துப்பாக்கிகளுக்கு பயன் படுத்தும் ரவைகளை ஒத்த பன்னிரண்டு துப்பாக்கி ரவைகள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க இது சம்பந்தமான விசாரணைகளை செய்ய பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் கொடிய பயங்கரவாதி பிரபாகரன் என்கிறார் அமைச்சர் டலஸ்


உலகின் பயங்கரவாத தலைவர்களின் பட்டியலில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் முதல் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாகவே சமீபத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் உளவுப் படையினால் படுகொலை செய்யப்பட்ட ஒஸாமா பின்லேடன் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை யுத்த முனையில் சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவமும் அரசாங்கமும் மனித உரிமைகளை மீறி யுத்த குற்றத்தை இழைத்திருப்பதாக தருஸ்மன் அறிக்கை திட்டவட்டமாக கூறுகின்றது.

அதே நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் நிராயுதபாணியாக இருந்த பின்லேடனை அமெரிக்க உளவுப் படையினர் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறலும் அல்ல, யுத்தக் குற்றச்சாட்டும் அல்லவென்ற நிலைப்பாட்டில் ஐ.நா. உயர் அதிகாரிகள் இருப்பதனால் தான் இதுபற்றி மெளனம் சாதித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களில் ஒன்றை தாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். நாம் விசாரணைகளை மேலெழுந்தவாரியாக மேற்கொண்டு போதியளவு ஆதாரங்கள் இல்லாத நிலையிலேயே இந்த அறிக்கையை தயாரித்ததாக தருஸ்மன் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து இந்த தருஸ்மன் அறிக்கை அதிகாரமற்ற ஒரு அறிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானை தனிமைப்படுத்தி பயங்கரவாதிகளை பலப்படுத்தாதீர்

சர்வதேசத்திடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்

பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தாது அனைத்து நாடுகளும் உதவ வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியை பாரிஸில் சந்தித்த கிலானி இந்த வேண்டுகோளை விடுத்தார். ஒஸாமா பின்லேடன் கொலை செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் மிக மோசமான தாக்குதல்களை நடத்த அல்கைதா தலிபான் அமைப்புகள் தயாராகின்றன. இந்தப் பயங்கர பழிவாங்கும் தாக்குதலை கூட்டாக இணைந்தே முறியடிக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பது பாகிஸ்தானின் தோள்களில் மட்டும் சுமத்தப்படக் கூடாது. தேவையற்ற சந்தேகங்களைக் கொண்டு நேச அணியிலிருந்து அமெரிக்காவோ, ஐரோப்பாவோ விலகிச் செல்வது பயங்கரவாதிகளை பலப்படுத்தி விடும்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதன் மூலம் எமது மண்ணில் பயங்கரவாதிகளை சுதந்திர புருஷர்களாக மாற்றிவிடாதீர்கள். எனவே எஞ்சியுள்ள அல்-கைதா பயங்கரவாதிகளையும், தலிபான் தீவிரவாதிகளையும் ஒளித்துக் கட்டவும் இவர்களின் மோசமான தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தானை பாதுகாக்கவும் நேட்டோ முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒஸாமா பின்லேடனை பாகிஸ்தான் அரசாங்கமே இவ்வளவு காலமும் அடைக்கலம் கொடுத்த பாதுகாத்து வந்ததாக அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பை மீறி ஒஸாமா பின்லேடன் எவ்வாறு அபோடாபாத் வந்தார் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளதால் இஸ்லாபாத் வாஷிடன் உறவுகள் மோசமடைந்து செல்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...