26 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் மேலும் ஒரு கிளை


undefined



இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மாவட்டத்தில் மீள் குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்கிறது





மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதோடு அவர்களுக்கான தொழில்துறை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கடற் தொழில் உதவிப் பணிப்பாளர் சந்திர சேகரப் பிள்ளை பவாநிதி தெரிவித்தார்.

இந்நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்;ட அரிப்பு, சவேரியார் புரம், சிலாபத்துறை, கூலாங்குளம், கொக்குப்படையான், கொண்டச்சி குளம் ஆகிய 6 கிராமங்களிலும் 693 குடும்பங்களும், மாருதை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மோட்டை, விடத்தல் தீவு, கந்தாலன் பிட்டி, இலுப்பக் கடவை, அந்தோனியார் புரம், 3ஆம் பிட்டி, தேவன் பிட்டி ஆகிய 7 மீனவர் கிராமங்களிலும் 878 குடும்பங்கள் மீள்; குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடற்தொழில் நீரியல்வள அமைச்சினால் கடற்தொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது





ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது நுகேகொடையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 4 பேரும் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். நாம் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். இது எமது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எண்ணெய்க் கசிவு: 17 ஆயிரம் பேர் வேலையிழப்பு




அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் பல மைல் தொலைவுக்கு எண்ணெய் படலம் காணப்படுவதால் மீன் பிடிப்பு மற்றும் அது தொடர்பான பணிகள் மற்றும் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவால், ஏற்பட்டுள்ள சூற்றுச்சுழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் பலகோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தீ விபத்தில் எண்ணெய் எடுக்க பயன்படுத்திய இயந்திரம் கடலில் மூழ்கியது. பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 11 ஊழியர்களும் பலியாயினர். கடந்த ஏப்ரல் 20-ல் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அன்று முதல் இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் கடலில் எண்ணெய் கலந்து வந்தது. இப்போது சிறிதளவு எண்ணெய்க் கசிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எண்ணெய்க் கசிவால் அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் செத்து மிதந்தன. படகுகளும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது பாதிக்கப்பட்ட கடல்பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி






கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வார இறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார்.CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார்.

சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது.

உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் புகலிடம் வழங்குவது சட்ட விரோத குடியேற்றத்திற்கு வழி:இலங்கை




சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் சிறு படகுகளில் பொருட்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கு இலங்கை ஆழ்கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வியட்னாமிய நகரான ஹனோயில் நடைபெற்ற 17ஆவது தென்கிழக்காசிய நாடுகள் சங்க பிராந்திய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதி அமைச்சர் குணவர்த்தன, ஆட்கள் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுவதையும் மக்களின் ஒழுங்கீனமான பிரயாணங்களையும் கட்டுப்படுத்த இச்செயல்கள் ஆரம்பிக்கப்படும் நாடுகளும் இடைத்தங்கல் நாடுகளும் இத்தகையோர் சென்றடையும் நாடுகளும் ஒளிவுமறைவற்ற கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரைப்பை கண்காணித்தல் ஆகியன மட்டும் சட்டவிரோத ஆட்கடத்தலையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த போதாது என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத இயக்கங்கள் எல்லைகளுக்கிடையிலான தொடர்புகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் இலகுவில் பயன்படுத்த வழி சமைப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் பிரதி அமைச்சர் முக்கியமாக எடுத்துக் கூறினார்.

எனவே, சட்டவிரோத புலம்பெயர் குழுக்களினாலும் அனுதாபிகளினாலும் நிதியளித்தல் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகளுக்கிடையிலான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

கூட்டு நடவடிக்கை இல்லாமல் எந்தவொரு நாடோ பிராந்தியமோ இத்தகைய அச்சுறுத்தல்களிலும் இவற்றுடன் தொடர்புள்ள சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட முடியாது என்று அவர் கூறினார்.

நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை அனுசரித்து நடத்தல், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தேசிய அடையாளம் ஆகியவற்றை பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ள வேண்டியதன் அவசியதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழு விசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை




ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பான விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழு, இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று அமெரிக்காவில் செயலாற்றும் இலங்கை உயர் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் அமெரிக்காவையும் தென்னாபிரிக்காவையும் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை கொண்ட மேற்படி ஐக்கியநாடுகள் குழு, செயலாளர் நாயகத்தினால் சம்பிரதாய முறைப்படி நியமிக்கப்பட்ட பின்னர் நியூயோர்க்கில் இன்னமும் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என்றும் பிலஸ்தாப ராஜதந்திரி கூறினார்.

எவ்வாறாயினும், குழு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா கோராதிருப்பது ஒருபுறமிருக்க, ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இவர்களுக்கு விசா கோரி விண்ணப்பித்தாலும் விசா வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குழுவின் செயற்பாடு பற்றி தெரிவித்த போது, தம்மால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒரு விசாரணைக்குழு அல்லவென்றும் கடந்த மே மாதம் 23ஆம் திகதி ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்øக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையின் குறிக்கோள்களை முன்னெடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.

குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் ஏற்கெனவே பிபிசிக்கு கருத்து தெரிவித்த போது, தமக்கும் தமது இரு சகாக்களுக்கும் விசா வழங்குவதில்லை என்ற இலங்கையின் தீர்மானம் துரதிஷ்டவசமானதே என்று குறிப்பட்டுள்ளார். இலங்கையில் நிவவும் உண்மை நிலையை கண்டறிவதற்கு இது தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனு உயர்நீதிமன்றில் புதனன்று விசாரணை





பொலிஸ்மா அதிபர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று குற்றம் சாட்டி பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர்.ஜெயவர்தன உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தன சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவுக்கு ஊடாக தாக்கல் செய்த மேற்படி மனுவில், தாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை முடியும் வரை தம்மை கட்டாய லீவில் அனுப்புவது என்ற தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 25ஆம் திகதி தமக்கு இடைக்கால ஆறுதலை வழங்கியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி வேண்டுமென்றே தெரிந்து கொண்டும் விருப்பத்துடனும், தாம் நீதிமன்ற உத்தரவின்படி கடமையை செய்ய வசதியாக தமது உத்தியோகபூர்வ சீருடைகளையும் வாகனத்தையும் தமக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க தவறிவிட்டார் என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்மூலம் பொலிஸ்மா அதிபர் தொடர்ச்சியாக வேண்டுமென்றே நீதிசேவை நடைமுறைகளை தடைப்படுத்தி இடைக்கால தடை உத்தரவை செயல்படாமல் செய்துள்ளார் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் நடத்தை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துவத்தை அலட்சியப்படுத்தவதாகவும் சிறுமைப்படுத்தவதாகவும் உள்ளது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியதன் மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் மனுதாரர் முறைப்பாடு செய்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மனுதாரரை கட்டாய லீவில் அனுப்புவது என்று பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் பேரில் தமக்கிடப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதென நீதிமன்றம் மே மாதம் 25ஆம் திகதி அறிவித்திருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிப்பு நடந்தேறுவதை உறுதிப்படுத்துவதில் தாம் வெற்றிகண்ட போதிலும் பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியே தாம் கட்டாய லீவில் அனுப்பப்பட்டதாகவும் மனுதாரர் அவரது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பி.ரி.ஐ. பக்டீரியாவை உடன் இறக்குமதி செய்துமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்





நாட்டு மக்களின் உயிரோடு விளையாடும் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான பி.ரி.ஐ. பக்டீரியாவை உடனடியாகக் கொள்வனவு செய்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

நோய் அறிகுறிக்கான இரத்தப் பரிசோதனைகளை

நடத்துவதற்கான அவசரப் பிரிவுகளை அனைத்து வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ரோசி சேனாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

டெங்குக் காய்ச்சலால் இதுவரையில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயினால் பாதிக்கப்பட்டுமுள்ளனர்.

ஆனால் அரசாங்கம் மக்களை உயிராபத்திலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது.

மக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசுவதாலேயே டெங்கு நுளம்புகள் பரவுகின்றன என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டுகிறார். அத்தோடு மக்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. இன்று கொழும்பு மாநகர சபை செயலிழந்துள்ளது. பல்வேறு நகர சபைகள் பிரதேச சபைகள் மக்களுக்கு குப்பைகளை கொட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.

மக்களுக்கு வசதிகளை வழங்காது மாறாக அவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. எமது நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக டெங்கு நுளம்புகளை ஒழிக்க முடியாதுள்ளது. பி.ரி.ஐ. பக்டீரியாவை கொள்வனவு செய்து ஹெலிகொப்டர் மூலம் விசுறுவதன் மூலம் இதனை ஒழிக்க முடியும். இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. செயலில் எதனையும் செய்யவில்லை. இந்த பக்டீரியாவை கொள்வனவு செய்வதற்கு ரூபா 18 கோடி செலவாகுமென்றும் அந்தளவு பணமில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஐஃபா நிகழ்ச்சியை 100 கோடி ரூபா செலவழித்து அரசாங்கத்தால் நடத்த முடியுமென்றால் நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு 18 கோடி ரூபாவை ஏன் அரசாங்கத்தால் செலவழிக்க முடியாது. முழு நாட்டையும் காவு கொண்டுள்ள டெங்குக் காய்ச்சலை கண்டறிவது தொடர்பாக நடத்தப்படும் இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் நான்கு நாளைக்கு பிறகே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றன. இதற்குள் நோயாளி இறந்து விடுகிறார். டெங்குக் காய்ச்சல் 5 வயது தொடக்கம் 11 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கே அதிகமாகப் பரவுகிறது. பதுளையில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந் நோயை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்வதற்கு அரசாங்க வைத்தியசாøலகளிலும் அவசர பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை தெளிவுபடுத்தும் விளம்பரங்களை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும்.

மக்களை தெளிவுபடுத்தும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட வேண்டும். நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி விசேட செயலணியை அமைக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். இத்தாலியில் வாழும் எமது நாட்டவர்கள் ஜூலை மாதம் விடுமுறையை கழிப்பதற்கு இலங்கைக்கு வருவது வழக்கம். ஆனால் இம்முறை டெங்கு தொற்று பீதி காரணமாக அவர்களது வருகை பாரியளவில் குறைந்துள்ளது.

அத்தோடு உல்லாசப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. மக்களின் உயிர்களைப் பறிப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையும் பின்னடையச் செய்யும் டெங்கு நுளம்புகளை ஒழிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

போலி சாரதி அனுமதிப் பத்திரம் பயன்படுத்தியவர் மன்னாரில் கைது





மன்னாரில் போலி சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்து வாகனங்களை செலுத்திய நபரொருவர் இன்று மாலை வீதி சேவை போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

30 வயதுடைய மேற்படி நபரின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை பொலிஸார் பரிசோதனை செய்தவேளை போலி அனுபத்திரம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் நாளை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி பி.ஐ தில்ருக் பெரேரா தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...