30 மே, 2010

யாழ்ப்பாணத்தில் தும்பு, பதனீர் வெல்லம் தொழிற்சாலைகள் திறந்து வைப்பு

யாழ். குடாநாட்டினுள் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தும்பு மற்றும் பதநீர் வெல்லம் உற்பத்தித் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இந்த தொழிற் சாலைகளை திறந்து வைத்தனர். அன்றைய தினமே உற்பத்திகளும் ஆரம்பமாகின.

அத்துடன் வேலணை மேற்கு பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய விற்பனை நிலையமொன்றும் திறந்து வைக்கப்பட்டது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்கவிக்கும் முகமாக இந்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையத்தை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திறந்து வைத்தனர்.

பனம் வெல்லம், புழுக்கொடியல், பனை ஓலையால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக் களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வேலணை கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தும்பு உற்பத்தி நிலையத்தின் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பனைசார் தொழில்களையும் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட் டுள்ளது. இவர்கள் தொழிற்பேட்டைக்கான மின்பிறப்பாக்கியை இயக்கி வைத்ததுடன் தொழில் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர்.

அச்சுவேலியில் தும்புப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையின் தொழிற்சாலை அலுவலகமும்

தொழிற்பேட்டையையும் அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோ ரால் திறந்துவைக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதியுதவியின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்த தொழிற்சாலை யில் 40 பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் முதற்கட்ட மாக பணியில் ஈடு படுத்தப்படவுள் ளதாகவும் பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அச்சு வேலி பனை தென்னை வள அபி விருத்தி கூட்டுறவுச் சங்க பொது முகா மையாளர் செல்வராசா தெரிவித்தார்.

சுன்னாகத்தில் அமையப் பெற்றுள்ள பதனீர் வெல்ல உற்பத்தி நிலையத் தையும் அமைச்சரும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திர சிறியும் திறந்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக