31 மே, 2010

கிளிநொச்சியில் சடலங்கள் மீட்பு : இன்று மீண்டும் தேடுதல்

கிளிநொச்சி கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலங்களைப் பார்வையிட்டு, மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படிகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் 5 அல்லது 6 மாத காலத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக