இல
ங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் அடங்கிய குழுவினரே இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை இவர்கள் வழங்குகின்றனர். நேற்று முதல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
ங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் அடங்கிய குழுவினரே இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை இவர்கள் வழங்குகின்றனர். நேற்று முதல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
றைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதில் நாம் உறுதியாகவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தொடர்வதா? இல்லாதொழிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார்.
யில் இருந்து 'சன் சீ' கப்பல் மூலம் கனடாவுக்கு வந்துள்ள 490 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் கனடாவிடம் கோரியுள்ளது. இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கனடாவுக்கு வந்த கப்பலில் தலைவராக செயற்பட்ட வினோத் என்பவர் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர் என்பதுடன் ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்புபட்டவர் என சித்திராங்கனி சுட்டிக்காட்டியுள்ளார்.
த சேர்ந்த இலங்கை அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


