17 ஆகஸ்ட், 2010

அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை

இலங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் அடங்கிய குழுவினரே இலங்கை வந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை இவர்கள் வழங்குகின்றனர். நேற்று முதல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்(சிறப்பு காணொளி)





பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனேடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் தீவிரவாதிகளல்லர்

"நாங்கள் தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறுகிறோம். மேலும் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகின்றோம்."

இரண்டாவதாக 'சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்' எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

"குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் வந்துள்ள நாம், முழுமையான அர்ப்பணிப்புடன் கனேடிய சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்."

இவையே மே மாதம் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப்பட்டு கனடாவின் மேற்குக் கடற்கரையில் கடந்தவாரம் வந்திறங்கிய 492 அகதிகளின் முதலாவது வாக்குமூலங்களாக வெளிவந்துள்ளன.

இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று நம்பப்படுகின்றது. மாநில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களைச் சந்தித்தவர்களின் தகவலின்படி, இவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் கர்ப்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 70 வயதைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்களும் உள்ளனர்.

இடையில் ஒருவர் மரணம்

37 வயதான ஆண் ஒருவர் சுகவீனமுற்று இடைவழியில் இறந்துள்ளார்.

அவர்களின் 59 மீட்டர் நீளமான சரக்குக் கப்பலின் தளத்தின் மேல் கொட்டகையிட்டு அதற்குக் கீழ் படுத்திருந்ததாகவும் ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தியதாகவும் தங்களுக்குள் லட்டு செய்து பரிமாறியதாகவும் மழைத்தண்ணீரில் தேநீர் செய்து அருந்தியதகாவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் குறிப்பிட்டனர்.

"என்னுடைய கணவரையும் மகனையும் விட்டுவிட்டு இந்த வேதனையை அனுபவித்துப் பயணம் செய்து, இலங்கையில் உள்ள நரக வாழ்வில் இருந்து தப்பி வந்தேன்" என அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் குறிப்பிட்டார்.

கனேடிய எல்லைச் சேவைகள் முகவம், வந்திறங்கியவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதோடு அவர்களில் முன்னாள் தமிழ்ப் புலிப் போராளிகள் உள்ளார்களா என்பதையும் உறுதிப்படுத்த முயல்கிறது.

பொதுநல பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ், கப்பலில் முன்னாள் போராளிகள் வந்திருக்கின்றனர் என நம்பப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பின் நிதி சேகரிப்பு நடவடிக்கையாகவே இந்த கப்பல் உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டிருந்ததாக நெஷனல் போஸ்ட் கடந்த கிழமை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் வந்திறங்கியவர்களின் கடிதங்களின்படி இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு துன்பகரமான நிலையே நீடிக்கின்றது. அரச படைகளுக்கு தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் நடந்த மிக நீண்ட போரில் இருந்து இலங்கை தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

"இலங்கை அரசு, நாட்டில் இனப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை" என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

"தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப்படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகின்றன" எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்காமல் பேசுவதில் பயனில்லை:ஐ.தே.க

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். இதில் நாம் உறுதியாகவுள்ளோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தொடர்வதா? இல்லாதொழிப்பதா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அரசாங்கம் ஒழிக்க இணங்காவிடின் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயன் எதுவும் இல்லை. இது குறித்து அடுத்த முறை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்டறிவோம். இதற்கமையவே பேச்சை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த போதே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியிலும், அதன் தலைவர் என்பதாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கும்போது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகவுள்ளது.

இவ்வாறு கலந்து கொள்வதால் பல்வேறு விமர்சனங்களுக்கும் எமது தலைவர் உள்ளாக நேரிடுகிறது.

ஜனாதிபதியுடனான கடந்த கால பேச்சுவார்த்தைகளின் போது நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படவேண்டுமென்ற ஐ.தே.க வின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஐ.தே.க.வுடன் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

இதன் மூலம் காணப்படும் பெறுபேறுகளுக்கு அமையவே தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் விதத்திலான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே. க ஆதரவு வழங்கும்.அடுத்த முறை ஜனாதிபதியை எமது தலைவர் சந்திக்கும் போது நிறைவேற்று அதிகார முறைமை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு கேட்கப்படும்.

அதற்கமையவே அரசுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்வதா கைவிடுவதா என்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும். ஒன்றுபட்டு போராட தயார் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலை ஜனநாயக மீறல்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார பயணம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த ஐ.தே.கட்சி தயாராகவே உள்ளது.இதற்கு யார் தலைமை தாங்குகிறார்கள். அரசியல் ரீதியில் லாபம் கிடைக்குமா என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்தமாட்டோம்.
மேலும் இங்கே தொடர்க...

கனடா வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது : அரசாங்கம்

இலங்கையில் இருந்து 'சன் சீ' கப்பல் மூலம் கனடாவுக்கு வந்துள்ள 490 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என இலங்கை அரசாங்கம் கனடாவிடம் கோரியுள்ளது. இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கனடாவுக்கு வந்த கப்பலில் தலைவராக செயற்பட்ட வினோத் என்பவர் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட தலைவர் என்பதுடன் ஆயுதக் கடத்தல்களுடன் தொடர்புபட்டவர் என சித்திராங்கனி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை சன் கீ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையாளர்களால் அழைத்து வரப்பட்ட அகதிகள் என கனடா தெரிவித்துள்ளது. எல்லை பாதுகாப்பு அலுவலக அதிகாரி ரொப் ஜோன்ஸ்டனின் தகவல்படி இவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கூடாரங்களுக்கு பயன்படுத்தப்படும் துணிகளைக் கொண்டு கப்பல் விஸ்தரிக்கப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களை ஏற்றி வரும் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டிருந்தது.

அதே நேரம் கப்பலில் பயணித்தோரின் சுகாதார பணிகள் தொடர்பில் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு பகுதியிலும் ஆண்கள் வேறு பகுதிகளிலும் இருந்தே கப்பலில் பயணித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கப்பலில் வந்த இலங்கை அகதிகள் அப்பாவிகளாக தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அகதிகளில் 350 ஆண்களும் 50 பெண்கள் மற்றும் 50 சிறுவர்களும் இருந்துள்ளதாகவும் ரொப் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சென்றுள்ள 490 அகதிகள் தொடர்பில் கனடாவில் எழுந்துள்ள எதிர்ப்பு அலைகளை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள கனடாவில் உள்ள சிங்கள அமைப்புகள் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழ் அகதிகள் வருகையை எதிர்த்து பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள மக்கள் தமக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வருவதாக அந்த மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

முன்னர் 2000 பேர் வருவதாக கூறப்பட்ட போதும் பின்னர் 490 அகதிகள் தமது மாநிலத்திற்கு வருவதை கேள்வியுற்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பை அவர்கள் வெளியிட்டதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கனடாவில் இயங்கும் பிரண்ட்ஸ் ஒப் கனடா (கனடாவின் நண்பர்கள்) என்ற சிங்கள அமைப்பின் அறிக்கை ஒன்றில், இலங்கை அகதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அதில் இலங்கையில் தற்போது போர் நிறைவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர்களுக்கு கனடா, அகதி அந்தஸ்தை வழங்கக்கூடாது என அந்த அமைப்பு கோரியுள்ளது. ஆட்கடத்தல் நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலங்கை அகதிகள் கனடாவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்த இலங்கை தமிழ் அகதிகளுக்கு அரசியல் அந்தஸ்து வழங்குவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என குறித்த சிங்கள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகள் குறித்து கனேடிய அரசுமீது லிபரல் கட்சி குற்றச்சாட்டு

கனடா வந்த சேர்ந்த இலங்கை அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கேல் இனகடீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சன் சீ கப்பல் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு கனடாவை வந்து சேர மூன்று மாதங்கள் பிடித்தன. இந்த நாட்களில் கப்பல் கனடாவை நோக்கியே வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் கனடா ஏன் இந்த விடயத்தைத் தீவிரமாக ஆலோசனைக்கு எடுக்கவில்லை என மைக்கல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அகதிகள் கனடாவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், அவர்களைத் தனித்தனியே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் விசாரணைகளின் போது இலங்கையின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மைக்கேல் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்றப்பட்ட சுமார் எண்ணாயிரம் போராளிகள் கனடாவில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலகொட்டின் தகவலை ஆதாரம் காட்டி இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் குடிவரவு சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. இதனை புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கொலகொட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கனடாவுக்கு வந்துள்ள இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது, புலிகளுக்கு புகலிடம் வழங்குவதற்கு சமமானதாகும் என கொலகொட் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள்






மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் மானிய அடிப்படையில் 80, இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் ஆர். லூசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த உழவு இயந்திரங்கள் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

செலுத்தப்பட வேண்டிய இரண்டரை இலட்சம் ரூபாவையும் தவணை அடிப்படையில் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சன் கப்பலில் இளைஞர் ஒருவர் கடந்த 28ம் திகதி மரணம்



கனடாவுக்கு சென்ற கப்பலில் இருந்த தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற் பயணத்தின் போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28ம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரி யாமல் உள்ளது.

சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பலில் 350 ஆண்களும் 50 பெண்களும் 50 சிறார்களும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தாய்வான் கப்பல் சிப்பந்தி மாயம்


கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தாய்வான் நாட்டு கப்பலில் பணிபுரிந்த சிப்பந்தி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

இந்தக் கப்பல் கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதோடு 10 ஆம் திகதி முதல் இந்தோனேஷிய நாட்டு சிப்பந்தியை காணவில்லை என கொழும்பு துறைமுக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

22 வயதுடைய செப்ரியான்ட் முஜேன்டோ என்பவரே காணாமல் போன சிப்பந்தி என பொலிஸார் கூறினர். துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்பாடு


மலேசியாவில் வைத்து கைப்பற்றப்பட்ட புலிகளின் ‘பிரின்சஸ் கிரிஸ்ரினா’ கப்பல் திருத்தப்பட்டு தென்பகுதி கடல் கண்காணிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கடற்படை தலைமையகம் கூறியது.

புலிகளுக்குச் சொந்தமான மேற்படி கப்பல் கடந்த வருடம் மலேசியாவில் வைத்து பிடிபட்டது. இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தக் கப்பல் தற்பொழுது காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தென் பிராந்திய கடற்படை தலைமையகத்தினால் திருத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் தற்பொழுது கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தென் பிராந்திய கடற்படை கட்டளையிடும் தளபதி கொமடோர் ஆர். டி. பெரேரா தெரிவித்தார்.

மேற்படி கப்பலை துறைமுக பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்தவாரம் பார்வையிட்டார். மேற்படி கப்பலில் 3 ஆயிரம் தொன் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியும் எனவும் எதிர் காலத்தில் இதனை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பெரேரா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கில் மாட்டு வண்டிச் சவாரி


யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கில் மாட்டு வண்டிச் சவாரிக்கென விளையாட்டுத் திடல் ஒன்று சம்பிரதாயபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக சவாரிப்
போட்டியும் இடம்பெற்றது
மேலும் இங்கே தொடர்க...

பெற்றோரின் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில்


பெற்றோரில் இருவரையும் இழந்த அல்லது தாயையோ தந்தையையோ இழந்த மற்றும் பெற்றோரின் பராமரிப்பு அற்ற 1200 சிறுவர்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்தும் அடையாளங் காணப்பட்ட இந்த சிறார்களை வடமாகாணத்தின் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான நான்கு சிறுவர் இல்லங்க ளுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் செம்டெம்பர் முதல்வாரம் தொடக்கம் இந்த 1200 சிறார்களும் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை வடக்கு, மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலமே 1200 சிறுவர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

12 வயதுக்குட்பட்ட 1200 சிறுவர்களே இந்த கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை அரசாங்க த்தின் செலவில் பராமரிக்கும் பொருட்டு தேவையான நிதியை வடமாகாண சபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானிததள்ள தாக ஆளுநர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

புலிகளால் சேதப்படுத்தப்பட்ட கிளிநொச்சி நகர மத்தியிலுள்ள நீர் தாங்கி


புலிகளால் சேதப்படுத்தப்பட்ட கிளிநொச்சி நகர மத்தியிலுள்ள நீர்த் தாங்கியைப் பொருத்தமான இடத்திற்கு இடமாற்றி அமைக்குமாறு இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. நீர் வழங்கல், வடிகாலமைப்பு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கேட்டுள்ளார். இதேவேளை கிளிநொச்சிக்கு கடந்த வாரம் விஜயம் செய்த எம்.பி. நாமல் ராஜபக்ஷ அதிகாரிகள் சகிதம் சேதப்படுத்தப்பட்டுள்ள நீர்த் தாங்கியைப் பார்வையி ட்டார்
மேலும் இங்கே தொடர்க...

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு இலங்கை - இந்தியா இன்று ஒப்பந்தம்






மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக அமைச்சு கூறியது. இந்நிகழ்வு போக்குவரத்து அமைச்சில் நடைபெறவுள்ளது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையி லான ரயில் பாதை புலிகளினால் தகர்க்க ப்பட்டதையடுத்து ரயில் சேவைகள் 1990 ஜூன் மாதத்தில் இடை நிறுத்தப்பட்டது.

ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளன. மதவாச்சியில் இருந்து மடு வரை யான 43 கிலோ மீட்டர் தூர பாதை முதல் கட்டமாகவும் மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை இரண்டாம் கட்டமாகவும் நிர்மாணிக்கப் படும். இதன்போது 5 பிரதான ரயில் நிலையங்களும், 5 உப ரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மாதோட்டம், திருக்கேதீஸ்வரம், நேரியகுளம் உட்பட ஐந்து இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்ப ட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பாக இந்திய பொறியியலாளர் குழு கடந்த நாட்களில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்ப தற்காக புலிகளினால் எடுத்துச்செல்லப்ப ட்டன.

இதனால் புதிதாக ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதேவேளை ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையும் மீளமைக்கப்பட உள்ளது. வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதை நிறைவடையும் நிலையில் உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...